Dr Subbulakshmi sai

Dr Subbulakshmi sai மனதையும் உடலையும் வலிமை படுத்துங்கள் நல்ல சிந்தனைகளும் நல்ல செயல்களும் மனதையும் உடலையும் ஆரோக்கியப்படுத்தும். Drsubbulakshmisai Acupuncture Rmp. Thank you
(4)

Mayiladuthurai.

உங்கள் உடல் நலனுக்காக எனக்குத் தெரிந்த தகவல்களை உங்களுடன் பரிமாறிக் கொள்கிறேன்.

தலைவலி எங்கு வருகிறது என்பதை வைத்தே காரணத்தை கண்டுபிடிக்கலாம் தெரியுமா?எல்லா தலைவலியும் ஒன்றல்ல. வலி வரும் இடத்தை வைத்து...
28/08/2026

தலைவலி எங்கு வருகிறது என்பதை வைத்தே காரணத்தை கண்டுபிடிக்கலாம் தெரியுமா?

எல்லா தலைவலியும் ஒன்றல்ல. வலி வரும் இடத்தை வைத்து உடல் நமக்கு ஏதோ சொல்ல முயற்சிக்கிறது.

1. நெற்றி மற்றும் முன் தலை வலி:
• காரணம்: கண் அழுத்தம் (Eye Strain), தூக்கமின்மை, நீண்ட நேரம் போன் / கம்ப்யூட்டர் பார்ப்பது.
• சைனஸ் பிரச்சனை இருந்தாலும் முன் தலை கனமாக வலிக்கும்.

2. தலைக்கு பின்புறம் மற்றும் கழுத்து பகுதி வலி:
• காரணம்: இது 90% STRESS தலைவலி. அதிக மன அழுத்தம், தவறான தூங்கும் முறை, நீண்ட நேரம் குனிந்து வேலை செய்வது, கழுத்து எலும்பு இறுக்கம்.

3. தலை முழுவதும் இறுக்கமாக, கனமாக வலிப்பது:
• காரணம்: Dehydration - நீர்ச்சத்து குறைபாடு. தண்ணீர் குறைவாக குடிப்பது, அதிக டீ / காபி, வெயிலில் அலைவது. மூளைக்கு போதுமான தண்ணீர் இல்லாத போது இப்படி வலிக்கும்.

4. ஒரு பக்கம் மட்டும் துடிப்பது போல் வலி:
• காரணம்: Migraine - ஒற்றை தலைவலி. வெளிச்சம், சத்தம் பிடிக்காது, குமட்டல் வரும். தூக்கம் கெடுவது, பட்டினி கிடப்பது இதை தூண்டும்.

உடனடியாக என்ன செய்யலாம்?
• தினமும் 2.5 - 3 லிட்டர் தண்ணீர் குடியுங்கள். • ஒரே இடத்தில் 30 நிமிடத்திற்கு மேல் குனிந்து இருக்காதீர்கள். • தூக்கத்தை சரி செய்யுங்கள் - 6-7 மணி நேரம் அவசியம். •

தலைவலி மாத்திரையை மட்டும் தேடாமல், காரணத்தை சரி செய்யுங்கள்.
அக்குபஞ்சர் மற்றும் ஹோமியோபதியில் தலைவலிக்கான வேர்க் காரணத்தை சரி செய்து நிரந்தர தீர்வு காண முடியும்.

உங்களுக்கு அடிக்கடி எங்கு தலை வலிக்கிறது? கமெண்டில் சொல்லுங்கள்.

நல்ல எண்ணம் நல்ல செயல் நம் வாழ்க்கை உயர்த்தும் 👍🌹💐 வியாழக்கிழமை மாலை வணக்கம் குரு வாழ்க குருவே துணை??🙏👍       நேபாலத்தில...
27/08/2026

நல்ல எண்ணம் நல்ல செயல் நம் வாழ்க்கை உயர்த்தும் 👍🌹💐

வியாழக்கிழமை மாலை வணக்கம் குரு வாழ்க குருவே துணை??🙏👍

நேபாலத்தில் நடந்த வெள்ளப்பெருக்கால் இயற்கை பேரிடருக்காக இன்று மயிலாடுதுறை படித்துறை விஸ்வநாதன் சன்னிதியில் வராகி அம்மனுக்கு பௌர்ணமி பூஜை உடன் சிறப்பு பூஜை நடைபெற்றது... 🙏💐

ഹൃദയം നിറഞ്ഞ ഓണാശംസകൾHridayam Niranja Onashamsakalஇதயம் நிறைந்த ஓணம் நல்வாழ்த்துக்கள்💐❤️
26/08/2026

ഹൃദയം നിറഞ്ഞ ഓണാശംസകൾ

Hridayam Niranja Onashamsakal

இதயம் நிறைந்த ஓணம் நல்வாழ்த்துக்கள்💐❤️

26/08/2026

சர்க்கரை - உடல் பிரச்சனை அல்ல, மனதின் பிரதிபலிப்பு!

சர்க்கரை இருக்குன்னு சொன்ன உடனே நம் மனம் என்ன நினைக்கும்?
"இனி இனிப்பு சாப்பிடக்கூடாது, இனி வாழ்க்கையில் சந்தோஷமே இல்லை" என்று!

ஒரு உதாரணத்திற்கு சர்க்கரை சாப்பிடுவதைப் பற்றி குறிப்பிட்டு இருக்கிறேன் ஆனால் இங்கு இந்த மனம் எந்த விஷயத்தை செய்தால் சந்தோஷப்படுமோ அந்த விஷயம் நம்ம வாழ்க்கையில கிடைக்கல நம்ம சந்தோஷத்தை இழந்துட்டோமே என்று எப்ப நினைக்குதோ அப்பவே இந்த சக்கரை வியாதி நுழைய ஆரம்பிக்குது.

இந்த ஒரு எண்ணம் தான் உங்களை Depression-க்குள் தள்ளுகிறது.

அக்குபஞ்சரில் இதை நாங்கள் எப்படி பார்க்கிறோம் தெரியுமா?

1. மனம் பாதித்தால், முதலில் பாதிப்பது வயிறு தான். மன அழுத்தம் வந்தால் செரிமானம் உடனே கெட்டுப்போகும்.

2. அக்குபஞ்சரில் வயிறு (Stomach) மற்றும் மண்ணீரல் (Spleen) தான் செரிமானத்திற்கும், சர்க்கரை கட்டுப்பாட்டிற்கும் அடிப்படை.

3. நீங்கள் பயப்படும் போது, கவலைப்படும் போது, இந்த மண்ணீரலின் சக்தி (Spleen Qi) பலவீனமாகிறது.

4. மண்ணீரல் பலவீனமானால், அது கூடவே இருக்கும் கணையத்தையும் (Pancreas) பலவீனப்படுத்துகிறது.

5. கணையம் பலவீனமானால் தான் இன்சுலின் சுரப்பு குறைந்து, சர்க்கரை ரத்தத்தில் தேங்குகிறது.

6. ஆக, ஆரம்பம் உடலில் இல்லை, மனதில் இருந்து தான் ஆரம்பிக்கிறது!
தீர்வு என்ன?

மாத்திரையை மட்டும் சாப்பிட்டா போதாது...
மனதை அமைதிப்படுத்துங்கள். அக்குபஞ்சர் மூலம் மன அழுத்த புள்ளிகளையும், செரிமான புள்ளிகளையும் சரி செய்யும் போது, கணையம் தானாகவே சுறுசுறுப்பாகும். மனம் சந்தோஷமானால், சர்க்கரை தானாகவே கட்டுக்குள் வரும்.

குறிப்பு: சர்க்கரை நோய்க்கு நிறைய பதிவு போட்டு இருக்கேன் வீடியோ பதிவு போஸ்ட் எல்லாம் போட்டுட்டேன் உணவு முறைகள் எல்லாம் சொல்லி இருக்கேன் முடிஞ்ச வரைக்கும் அதை ஃபாலோ பண்ணுங்க.

சர்க்கரை நோய் வந்துடுச்சுன்னு கவலைப்படாதீங்க அது இன்னும் நோய்கள் அத புரிஞ்சுகிட்டு சரி செய்வீங்கன்னா முழுவதும் சர்க்கரை நோயிலிருந்து வெளி வரலாம்.

ஒரு நல்ல மருத்துவரின் ஆலோசனையும் சிகிச்சையும் உங்களின் மன மற்றும் உடல் கட்டுப்பாடுகளும் உங்கள் நோய்க்கு முழுமையான தீர்வு தரும்.

நன்றி வாழ்க வளமுடன் 🙏 வாழ்க வையகம்🌹💐

_Drsubbulakshmisai - Mayiladuthurai

25/08/2026

அரிப்பு உண்டாகிறது என்ற உடனே அது இரவில் அதிகமாகிறதா? பகலில் அதிகமாக இருக்கிறதா? இதை கவனிக்க வேண்டும் ஒரு சிறு குறிப்பு இது...

இரவில் மட்டும் அரிப்பு என்றால் பெரும்பாலும் வறட்சி அல்லது பகல் முழுவதும் வியர்வை தங்கியதால் வருவது.

படுக்கப் போகும் முன்பு சுத்தமான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் திரிபலா பொடி கலக்கி அதில் அரிப்பு உள்ள பகுதிகளை கழுவி விட்டு நன்கு சுத்தமாக துடைத்து மூன்று சொட்டு தேங்காய் எண்ணெய் கையில் தடவி அந்த இடத்தில் தடவிக் கொள்ளலாம் இதிலும் அரிப்பு நிற்கவில்லை என்றால் கண்டிப்பாக மருத்துவரை பார்க்க வேண்டும்.

பகலில் அதிகம் என்றால் உள்ளாடை, சோப்பு, வேலை செய்யும் போது வியர்வை காரணமாக இருக்கலாம்.
சில உணவுகளுக்கு பிறகு கூடுகிறது என்றால் உடல் சூடு / அலர்ஜி என்று அர்த்தம்.

உடல் சூடு என்றால் சூட்டை குறைக்க வேண்டும் எண்ணெய் குளியல் வாரத்திற்கு ஒரு நாள் சீயக்காய் போட்டு குளிப்பது அவசியம்.

வெளிப்பூச்சி மருந்துகள் மட்டும் ஒருபோதும் அரிப்பை குணமாக்காது சாதாரணமான இன்ஃபெக்சன் என்றால் மட்டும் சரியாகும் ஆனால் இது தொடர்ந்து இருந்தால் நாடி பார்த்து உள்ளுக்குள் என்ன பிரச்சனை அதன் ஆணிவேர் எது என்று கண்டுபிடித்து அதை சரி செய்யும் போது தான் முற்றிலும் குணமாகும்.

உடலின் கழிவுகள் ரத்தத்தில் தேங்கும் கிருமிகள் கழிவுகள் கூட இந்த அரிப்பை ஏற்படுத்தும்.

அதனால் தொடர்ந்து அரிப்பு இருந்தால் மருத்துவரின் ஆலோசனை சிகிச்சை அவசியம்.

உடம்ப ஆரோக்கியமாக பார்த்துக்க எளிமையான யோக பயிற்சி நடைப்பயிற்சி இது எல்லாம் செய்துக்கிட்டு இயற்கையாக உணவுப் பொருட்கள் தி...
25/08/2026

உடம்ப ஆரோக்கியமாக பார்த்துக்க எளிமையான யோக பயிற்சி நடைப்பயிற்சி இது எல்லாம் செய்துக்கிட்டு இயற்கையாக உணவுப் பொருட்கள் தினமும் காலையில காபி டீ இதையெல்லாம் தவிர்த்துவிட்டு மூலிகை தேநீராக பயன்படுத்துங்கள் அதுவும் உங்க உடலுக்கு எந்த தேநீர் பயன்படுத்தனும்னு தெரிஞ்சுகிட்டு அதை பயன்படுத்துங்க.

அதுபோல இயற்கையான உணவுகளை சாப்பிடுங்க முடிஞ்ச வரைக்கும் அரிசி சாதத்தை ஏதாவது ஒரு வேலை மட்டும் வச்சுட்டு மற்ற வேலைகளை சிறுதானியங்கள் பாரம்பரிய அரிசிகளால் மூலிகைகள் சேர்த்து காய்கறிகள் சேர்த்து சமைச்சு சாப்பிடுங்க இதுபோல சாப்பிட்டோம்னா இன்னைக்கு நம்ம மருத்துவமனை நோக்கி நோய்க்கும் ஓட வேண்டிய அவசியம் இருக்காது.

உங்க எல்லாருக்கும் ஒரு மகிழ்ச்சியான விஷயம் கூடிய விரைவில் உங்களுக்கான மூலிகை தேநீர் பொடிகள் சிறுதானிய மற்றும் பாரம்பரிய அரிசி கஞ்சி பொடிகள் லட்டு பொடிகள் இப்படி இயற்கையான சுத்தமான தரமான பொருட்களை உங்ககிட்ட நான் கொண்டு வந்து சேர்க்கலாமென ஒரு முடிவு எடுத்து இருக்கேன்.

ஏன்னா எல்லாரும் இத சாப்பிடுங்க அதை சாப்பிடுங்க நான் சொல்லும் பொழுது நீங்க சொல்ற ஒரே வார்த்தை தினமும் இது கிடைக்காது இதை செய்யறதுக்கு எனக்கு டைம் இல்ல நீங்களே ப்ரிப்பேர் பண்ணி அனுப்புங்க அப்படின்னு இதை ஒரு சிலரிடம் கொண்டு போய் சேர்க்கும் போது ரொம்ப சந்தோஷம் உங்களுக்கு . இதை சாப்பிட்ட பிறகு நான் நல்லா இருக்கேன் அப்படின்னு.
பலரும் சொல்றப்போ நம்ம மனசுல ஒரு சந்தோஷம் இதை ஏன் உங்க எல்லாருக்கும் நான் கொண்டு சேர்க்கக்கூடாது...?

உங்களுக்கு Ready to eat தயாரிக்க நேரம் இல்ல நான் தயாரிச்சு உங்களுக்கு கொடுத்துடறேன் நீங்க பயன்படுத்துங்க சாப்பிடுங்க ஆரோக்கியமா இருங்க ரொம்ப தரமாகவும் சுத்தமாகவும் எந்த பொருளோடு எந்த பொருளை சேர்த்து பயன்படுத்தணும் எந்த நோய்க்கு இதை சாப்பிடலாம் என்கிற ஒரு சின்ன ஆலோசனைகளோட ஒரு லேபிளோட நான் உங்களுக்கு அந்த பொருட்களை தந்தால் நீங்களும் ஈசியா வாங்கி சாப்பிட போறீங்க குறிப்பா உங்க ஊர்ல உள்ள ஷாப்பிலேயே கிடைக்கிற மாதிரியும் ஏற்பாடு பண்ணிடுவேன்.

எல்லாருக்கும் சந்தோஷமா நீங்க ஆரோக்கியமாவும் சந்தோஷமாவும் இருக்க என்னுடைய வாழ்த்துக்கள் நீங்க ஆரோக்கியமா இருந்தா எனக்கு எப்பவும் சந்தோஷம் தான்.... ❤️💐

கண்டிப்பா எல்லோரும் ஒத்துழைப்பு கொடுப்பீங்கன்னு நம்புறேன் நன்றி. 🙏💐

நம்ம உடம்பு தான் நமக்கு முதல் சொத்து!நம்ம உடம்பு அவ்வளவு முக்கியம். அதுக்கு தினமும் கொஞ்சம் உடற்பயிற்சி, சரியான உணவு முற...
24/08/2026

நம்ம உடம்பு தான் நமக்கு முதல் சொத்து!

நம்ம உடம்பு அவ்வளவு முக்கியம். அதுக்கு தினமும் கொஞ்சம் உடற்பயிற்சி, சரியான உணவு முறைகளை கொடுத்து சரியா பாத்துக்கிட்டோம்னா, இந்த உடம்பை ஆரோக்கியமா வச்சுக்கலாம். மனசையும் அமைதியா வச்சுக்கலாம்.

ஒரு நோயாளி கிட்ட போய் கேட்டு பாருங்க, ஒரு உயிரோட வேல்யூ என்ன? உடம்போட வேல்யூ என்னன்னு? அவர் சொல்வார்.

ஒருநாள் ICU வாசல்ல நின்னு பார்த்தாலே போதும், அதை நாம புரிஞ்சுக்க முடியும். மருத்துவமனைக்கு போய்தான் அதை அனுபவிக்கணும்னு இல்ல, அங்க இன்னொருத்தர் படுற கஷ்டத்தை பார்த்தாலே நாம புரிஞ்சுக்கலாம்.

அதனால வாழ்க்கையை வெறுக்காதீங்க. உடம்பை கவனமா பாத்துக்கோங்க! 🙏

திருவாரூர் தியாகராஜ சுவாமி தரிசனம் தற்பொழுது சிறப்பாக... எல்லோரும் எல்லாமும் பெற்று நிறைவாக வாழ இறைவன் அருள் கிடைக்கட்டு...
23/08/2026

திருவாரூர் தியாகராஜ சுவாமி தரிசனம் தற்பொழுது சிறப்பாக...
எல்லோரும் எல்லாமும் பெற்று நிறைவாக வாழ இறைவன் அருள் கிடைக்கட்டும்.. 🙏💐

விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள் என்ற பழமொழி உங்களுக்கு தெரிந்திருக்கும் அல்லவா... ஆம் ஒரு சிகிச்சை எடுக்கும் பொழுது ...
23/08/2026

விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள் என்ற பழமொழி உங்களுக்கு தெரிந்திருக்கும் அல்லவா...

ஆம் ஒரு சிகிச்சை எடுக்கும் பொழுது உண்மையான குணம் என்பது நம் உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் மாற்றம் வர வேண்டும் மனதளவில் ஒரு நிம்மதி உடல் அளவில் வலிகள் நம் தொந்தரவுகள் குறைதல், தூக்கத்தில் மாற்றம் என்பதெல்லாம் நல்ல சிகிச்சை நல்ல மருந்துகளின் அறிகுறி.

நல்ல சிகிச்சை மற்றும் மருந்து என்பது கனிவான அணுகுமுறை, நம்பிக்கை தரும் வார்த்தைகள் உண்மையான வழிகாட்டுதல்கள் இவை அனைத்தும் சேர்ந்துதான் முழுமையான மருத்துவம்.

சரியான மருத்துவமனையும் சரியான மருந்தையும் எடுத்தால் நிச்சயமாக நோயிலிருந்து விடுதலை பெறலாம் வலியில் இருந்து வெளிவரலாம்.

வெளியூரில் இருக்கும் நபர்கள் கூட நம்மிடம் சரியான ஆலோசனை பெற்று நமது வலி நிவாரண தைரியங்கள் கிடைத்து நலமுடன் வாழ்கிறார்கள் என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி . நன்றி வாழ்க வளமுடன்.

வணக்கம் தினமும் அதிகம் பேர் உங்கள் ரிப்போர்ட் மற்றும் ஆலோசனைகளை கேட்டு வருகிறீர்கள் அதனால் யாருக்குமே சரியான பதில் அனுப்...
22/08/2026

வணக்கம் தினமும் அதிகம் பேர் உங்கள் ரிப்போர்ட் மற்றும் ஆலோசனைகளை கேட்டு வருகிறீர்கள் அதனால் யாருக்குமே சரியான பதில் அனுப்ப முடிவதில்லை.

இனி ஒரு வரைமுறைக்குட்படுத்தி இதை நான் செய்யலாம் என்று இருக்கிறேன் அதற்கு நீங்கள் தான் ஒத்துழைப்பு தர வேண்டும். நன்றி🙏 Dr. Subbulakshmi Sai 💚

இலவசமாக நாம் செய்து வருவது உங்கள் நலனுக்காக அது எனது மனதின் திருப்திக்காக 15 வருடங்களாக இதை செய்து கொண்டு வருகிறேன் ஆனால் இன்று நிறைய ரிப்போர்ட் பார்த்து உங்களுக்கான நேரத்தை ஒதுக்கி நான் இதை செய்து வரும் பொழுது அதற்கான சிறு மதிப்பீடு இருந்தால் தான் நல்லது காலம் என்னுடைய வேலை இதை நான் உங்களுக்கு நேரம் ஒதுக்கி செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கிறது ஏதோ பார்த்தோம் ஏதோ சொன்னோம் என்று இருப்பதில்லை உங்கள் முழுமையான ரிப்போர்ட் பார்த்து உங்களிடம் பேசி உங்களிடம் கேட்டு தகவல்கள் பெற்று அதற்கு நான் ஒரு ஆலோசனை கூறி என்னுடைய நேரத்தையும் உங்களுக்காக செலவிடுகிறேன் அல்லவா அப்படி இருக்கும் பொழுது அதற்கான ஒரு மதிப்பு இருந்தால்தான் இந்த மருத்துவத்திற்கும் அது மதிப்பாக இருக்கும் என்பதை புரிந்து கொண்டு இனி என்னிடம் ஆலோசனை கேட்க வருபவர்கள் கண்டிப்பாக ஆலோசனை கட்டணத்துடன் முழுமையான ஆலோசனை பெற்று அதற்கான தீர்வையும் பெற்று ஆரோக்கியமாக வாழுங்கள்.

Consultation: Rs. 200 (30 நிமிடம் Detailed) 🌿 Acupuncture Therapy: Rs. 300 / Sitting 🌸 Malar Marunthu / Flower Remedy: medicine cost& consultation fees ⏰ நேரம்: காலை 10-12 | மாலை 4-6📍 Appointment மட்டும் தான் Booking பண்ண உங்க பெயர், வயது, பிரச்சனை WhatsApp voice message (WhatsApp number : 9080259087) அனுப்புங்க. Online consultation உண்டு. வெளியூரில் உள்ள நபர்களுக்கு ஆன்லைன் மூலம் கன்சல்டிங் செய்து உங்கள் நோய்க்கான அக்குபஞ்சர் புள்ளிகள் வீடியோவாக அனுப்பப்படும். உங்கள் ரிப்போர்ட் இருந்தால் அதை whatsappபில் அனுப்பிவிட்டு கீழே உங்கள் குரல் பதிவினை பதிவு செய்யுங்கள்...

உங்கள் நோய்களுக்கான/ வலிகளுக்கான இயற்கை தீர்வு காத்திருக்கிறது 🌿
- Dr. Subbulakshmi Sai.
Mayiladuthurai

Address

Nidur
Mayiladuthurai
609203

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Subbulakshmi sai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share