Dr Subbulakshmi sai

Dr Subbulakshmi sai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr Subbulakshmi sai, Digital creator, nidur, Mayiladuthurai.
(7)

வலிகளோடு போராடியது போதும். உங்கள் நோய்களிலிருந்து விடுதலை பெற்று மகிழ்ச்சியாக வாழ இறைவன் காட்டும் வழி அக்குபஞ்சர்& இயற்கை மருத்துவம் ஆதரவு அளிப்பவர்கள் பின்தொடருங்கள். உங்களுக்கு என் நன்றிகளும் அன்பும்💐Dr. subbulakshmi sai (RMP)

28/05/2026

எல்லாரும் எப்படி இருக்கீங்க... ❤️💐

மயிலாடுதுறை திரும்பியாச்சு சிலர் கால் செய்திருந்தீர்கள் அட்டென்ட் செய்ய முடியவில்லை இரண்டு மூன்று நாட்களாக ஊருக்கு போனதா...
28/05/2026

மயிலாடுதுறை திரும்பியாச்சு சிலர் கால் செய்திருந்தீர்கள் அட்டென்ட் செய்ய முடியவில்லை இரண்டு மூன்று நாட்களாக ஊருக்கு போனதால் அலைச்சல் பயணம் நாளை கண்டிப்பாக கால் செய்தவர்களுக்கு கால் செய்கிறேன்... 🙏💐

28/05/2026

தோல் நோய் வந்தா மருந்து மட்டும் வேலை செய்யாது இந்த வழிமுறைகளை அவசியம் கடைபிடிக்க வேண்டும்.

🥛 செம்பு பாத்திரத்தில் பால் குடிக்கலாமா?⚠️ பாரம்பரியம் எல்லாமே பாதுகாப்பானதா? — ஒரு அறிவியல் பார்வை!நம்மில் பலர் செம்பு ...
27/05/2026

🥛 செம்பு பாத்திரத்தில் பால் குடிக்கலாமா?

⚠️ பாரம்பரியம் எல்லாமே பாதுகாப்பானதா? — ஒரு அறிவியல் பார்வை!

நம்மில் பலர் செம்பு (Copper) பாத்திரத்தில் தண்ணீர் வைத்து குடிப்பது உடலுக்கு நல்லது என்று அறிந்திருக்கிறோம். ✅
ஆனால் அதே செம்பு பாத்திரத்தில் பால், தயிர், மோர் போன்றவற்றை வைத்துப் பயன்படுத்துவது உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடும்! 🚫

இதற்குப் பின்னால் இருக்கும் அறிவியல் காரணத்தை தெரிந்து கொள்வோம் 👇

🔬 என்ன நடக்கிறது? (What Happens Scientifically?)

1️⃣ வேதிவினை (Chemical Reaction)

பாலில் இயற்கையாகவே லாக்டிக் அமிலம் (Lactic Acid) மற்றும் பல தாதுக்கள் உள்ளன.
பால் நீண்ட நேரம் செம்பு பாத்திரத்தில் இருந்தாலோ, சற்று புளித்தாலோ, அதிலுள்ள அமிலங்கள் செம்புடன் வினைபுரியும்.

இதன் விளைவாக: ➡️ செம்பிலிருந்து அதிகமான Copper ions பாலில் கலக்க ஆரம்பிக்கும்.

2️⃣ நச்சுத்தன்மை (Copper Toxicity)

அளவுக்கு அதிகமான தாமிரத் துகள் உடலுக்குள் சென்றால் அது நச்சுத்தன்மையை உருவாக்கும்.

அதனால்: ❌ பால் தனது இயல்பை இழக்கலாம்
❌ செரிமான மண்டலம் பாதிக்கப்படலாம்
❌ உடலில் நச்சு தாக்கம் ஏற்படலாம்

3️⃣ ஊட்டச்சத்து பாதிப்பு

செம்பு, பாலில் உள்ள: 🥛 கால்சியம் (Calcium)
🥚 புரதம் (Protein)
போன்ற முக்கிய சத்துக்களுடன் வினைபுரிந்து, அதன் ஊட்டச்சத்து தரத்தையும் குறைக்கக்கூடும்.

🤢 ஏற்படக்கூடிய உடல்நல பாதிப்புகள்

⚠️ வயிற்று வலி
⚠️ வாந்தி மற்றும் குமட்டல்
⚠️ அஜீரணம் / செரிமான கோளாறு
⚠️ வயிற்றுப்போக்கு
⚠️ நீண்டகாலத்தில் கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பு

💡 பொதுமக்கள் கவனத்திற்கு

✅ செம்பு பாத்திரத்தை தண்ணீர் வைக்க மட்டும் பயன்படுத்துங்கள்.

🚫 கீழ்க்கண்டவற்றை செம்பு பாத்திரத்தில் வைக்க வேண்டாம்:

பால்

தயிர்

மோர்

எலுமிச்சைச் சாறு

தக்காளி சூப்

புளிப்புத் தன்மை கொண்ட உணவுகள்

🌿 பாரம்பரியம் நல்லது…

ஆனால் அறிவியலுடன் புரிந்து பின்பற்றுவது இன்னும் நல்லது!

சிறிய விழிப்புணர்வே பெரிய உடல்நல பிரச்சினைகளைத் தவிர்க்க உதவும். 🙏

ஆரோக்கியம் காப்போம்… விழிப்புணர்வை பகிர்வோம்!

27/05/2026

இன்று நான்காவது மனநிலைகளுக்கான விளக்கங்கள் அதன் தன்மைக்கான மலர் மருந்துகள்

4. தனிமை (Loneliness)

அமைதியை விரும்புவது, தனிமையில் இருக்க நினைப்பது, சில சமயங்களில் தன்னைவிட பிறரைத் தாழ்வாக நினைப்பது. இப்படி இருப்பவர்கள் #வாட்டர் வைலட்(water violet) எனும் மலர் மருந்தை எடுக்கும் பொழுது நல்ல மாற்றம் தெரியும்.

எல்லாவற்றையும் மிக வேகமாகச் செய்ய நினைப்பது, எந்த செயலையும் அல்லது எந்த சொற்களை பேசும் பொழுதும் பொறுமையின்றி இருப்பது இவர்களுக்கெல்லாம் #இம்பேஷன் (impatient)

எப்பொழுதும் யாரைப் பார்த்தாலும் தன் பிரச்சினைகளையே பிறரிடம் பேசிக்கொண்டிருப்பது, புலம்புவது கவலைப்பட்டுக் கொண்டே இருப்பது தன்னை பற்றியான கவலைகளை நோய்களை வறுமையைப் பற்றி பிறரிடம் பேசுவது.

இவர்கள் தனிமையை ஒருபோதும் விரும்ப மாட்டார்கள் தன்னை பற்றி யாரிடமாவது பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இவர்களுக்கான மலர் மருந்து #ஹீதர்( heather)

27/05/2026

சாதாரணமா குப்பையில் போடும் இந்த விதையில நிறைய மருத்துவ குணங்கள் இருக்கு.(புளியங்கொட்டை ) புளிய விதை மருத்துவ நலன்கள்:1. ...
27/05/2026

சாதாரணமா குப்பையில் போடும் இந்த விதையில நிறைய மருத்துவ குணங்கள் இருக்கு.

(புளியங்கொட்டை ) புளிய விதை மருத்துவ நலன்கள்:

1. *மூட்டு வலி, முழங்கால் வலி*: புளியம் விதையை வறுத்து பொடி செஞ்சு தினமும் 1 ஸ்பூன் தேனில் கலந்து சாப்பிட்டால் மூட்டு தேய்மானம், முழங்கால் வலி குறையும். இதுல இயற்கையான கொலாஜன் இருக்கு.

2. *சர்கரை நோய் கட்டுப்பாடு*: விதையில இருக்கும் பொருட்கள் ரத்துல சர்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். பொடியை தண்ணில கலந்து குடிக்கலாம்.

3. *வயிற்றுப்போக்கு, கடுப்பு*: புளியம் விதை பொடி செரிமானத்தை சீராக்கி வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும். வயிற்றுப் புண்ணுக்கும் நல்லது.

4. *தோல் பராமரிப்பு*: விதையை அரைச்சு பால் அல்லது தயிர்ல கலந்து முகத்துல பூசினா முகப்பரு, கரும்புள்ளி, சுருக்கம் குறையும். இது இயற்கையான ஸ்க்ரப் மாதிரி வேலை செய்யும்.

5. *முடி உதிர்வு*: புளியம் விதை பொடியை தேங்காய் எண்ணெய்ல காய்சி தலைக்கு தடவினா முடி உதிர்வு நின்று, முடி வளர்சி அதிகரிக்கும்.

6. *காயம் ஆற்றும்*: விதை பொடியை தண்ணில குழைச்சு புண், காயத்துல போட்டா சீக்கிரம் ஆறும்.

7. உடல் சூடு நீர் கோர்த்தல் என்று சொல்லும் யூரின் எரிச்சலாக போவது எல்லாவற்றையும் சரி செய்ய பச்சையாக கூட புளியங்கொட்டையை வாயில் போட்டு வைத்திருந்து நன்குமென்று சாப்பிடலாம் முடியாதவர்கள் வருத்தத்தை பயன்படுத்தலாம். அல்லது புளியங்கொட்டை பொடியை அரை டீஸ்பூன் மோரில் கலந்து குடிக்கலாம்.

*பயன்படுத்தும் முறை:*
புளியம் விதையை நன்கு கழுவி, வெயில்ல காய வைச்சு, சட்டில மொறுமொறுன்னு வறுத்து, மிக்ஸில பொடி செஞ்சு வெச்சுக்கோங்க. இதைத்தான் மருந்துக்கு பயன்படுத்துவாங்க.

*குறிப்பு: துவர்ப்பு சுவை உடையது அதனால் அனைவரும் சேர்த்துக் கொள்ளலாம் பச்சையாக எடுக்கும் பொழுது சிலருக்கு ஜீரணிக்கவும் கஷ்டம். நல்லா வறுத்து பயன்படுத்தனும். கர்பிணி பெண்கள், குழந்தைகள் மருத்துவர் ஆலோசனை இல்லாம எடுக்க வேண்டாம்.

#ஹெலவெத #மூலிகை #புளியவிதை
#புளியம்பழம்

கறிவேப்பிலைத் துவையலை 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்பாடு சீராகி, நாம் சுறுசுறுப்புடன் இருப்போம்.குறைந்தது ...
27/05/2026

கறிவேப்பிலைத் துவையலை 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்பாடு சீராகி, நாம் சுறுசுறுப்புடன் இருப்போம்.

குறைந்தது மாதம் இருமுறையாவது கைகளில் மருதாணி வைத்தால், மனம் தொடர்பான கோளாறுகள் நீங்கும். அதன் குளிர்ச்சி மூளைக்கு ஓய்வைத் தரும்.

வல்லாரை இலைகளை நெய்யில் வதக்கி சுடுசாதத்துடன் இரண்டு கவளம் சாப்பிட்டு வர வேண்டும். ஞாபக சக்தி அதிகரிக்கும். மூளையின் செயல் திறன் அபரிமிதமாக இருக்கும்.

தினசரி இரண்டு துண்டு தேங்காயை மென்று தின்பதால் மூளையில் எந்தப் புண்களும் வராது.

வசம்பு (Sweet Flag): நரம்பு மண்டலத்தைத் தூண்டி மூளைக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.

சங்கு புஷ்பம்: மூளையின் நரம்பு மண்டல வளர்ச்சியைத் தூண்டி, காக்காய் வலிப்பு மற்றும் நரம்பு தளர்ச்சி போன்ற நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.

நெல்லிக்காய்: இதில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஊட்டச்சத்துக்கள் மூளை ஆற்றலை ஊக்குவிப்பதோடு மன உற்சாகத்தையும் தருகின்றன.

ரோஸ்மேரி (Rosemary): இதன் நறுமணம் மற்றும் உட்பொருட்கள் நினைவகத் தக்கவைப்பை அதிகரிக்கவும், செல்களைச் சிதைவிலிருந்து பாதுகாக்கவும் உதவுகின்றன.

Good night my dear friends ❤️.. 👍
26/05/2026

Good night my dear friends ❤️.. 👍

26/05/2026

தற்போது சிதம்பரம் பரங்கிப்பேட்டையில்...

Address

Nidur
Mayiladuthurai
609203

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Subbulakshmi sai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share