புதிய பார்வை - Puthiya Paarvai

  • Home
  • India
  • Melur
  • புதிய பார்வை - Puthiya Paarvai

புதிய பார்வை - Puthiya Paarvai Welcome to our Page🙏

ஆட்டநாயகனும் நானே.. தொடர்நாயகனும் நானே.. வாய்சவடால் நபர்களுக்கு பதிலடி கொடுத்த ரோஹித் இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீ...
26/10/2025

ஆட்டநாயகனும் நானே.. தொடர்நாயகனும் நானே.. வாய்சவடால் நபர்களுக்கு பதிலடி கொடுத்த ரோஹித்

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ரோஹித் சர்மா, டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு, ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து நீக்கம், ஃபார்ம் அவுட் எனப் பல்வேறு கடுமையான விமர்சனங்களுக்கு மத்தியில் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் பங்கேற்றார்.

அங்கு சிறப்பாக ரன் குவித்து, ரோஹித் சர்மா கதை முடிந்தது என சொன்னவர்களுக்கு தனது பேட்டால் பதிலடி கொடுத்துள்ளார்.

சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகச் சனிக்கிழமை நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில், கடைசி வரை நின்று, சதம் விளாசி இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இந்தப் போட்டியில் 125 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 121 ரன்கள் குவித்த ரோஹித் சர்மா, ஆட்ட நாயகன் விருதை வென்றதோடு, தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடியதற்காக தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருக்கு முன் இனி இந்திய ஒருநாள் அணியில் ரோஹித்துக்கு இடம் கிடைக்குமா? அணியில் இருந்து நீக்கப்படுவாரா? என ரோஹித் சர்மா மீது சந்தேகம் இருந்த நிலையில் தொடரின் முடிவில் தொடர் நாயகன் விருதை வென்று இருக்கிறார்.

ரோஹித் கிளாசிக் ஆட்டம்

சிட்னியில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 237 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு, ரோஹித் சர்மா முதுகெலும்பாக விளங்கினார். அவரது இந்த அற்புதமான இன்னிங்ஸின் மூலம், அவர் தனது 50வது சர்வதேச சதத்தைப் பதிவு செய்தார்.

இதில் 12 சதங்கள் டெஸ்டிலும், 33 சதங்கள் ஒருநாள் போட்டியிலும், 5 சதங்கள் டி20 போட்டியிலும் அடங்கும். இதன் மூலம், மூன்று விதமான கிரிக்கெட் வடிவங்களிலும் 5 அல்லது அதற்கு மேற்பட்ட சதங்களை அடித்த ஒரே வீரர் என்ற உலக சாதனையை அவர் படைத்துள்ளார்.

இது ஒருநாள் போட்டிகளில் அவரது 33வது சதமாகும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் அடிக்கும் 9வது சதம் இது. இதன் மூலம், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய வீரர்களில் அதிக சதம் அடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவர் சமன் செய்தார். மேலும், ஆஸ்திரேலிய மண்ணில் அந்நிய அணி வீரராக அவர் அடிக்கும் 6வது சதம் இதுவாகும். இதன் மூலம், 32 இன்னிங்ஸ்களில் 5 சதங்கள் அடித்திருந்த விராட் கோலியின் சாதனையை அவர் முறியடித்தார்.

தொடர் முழுவதும் ஆதிக்கம்

இந்தத் தொடரில் ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் உட்பட, மூன்று போட்டிகளில் 101 என்ற அபார சராசரியுடன் 202 ரன்கள் குவித்த ரோஹித்தின் ஆட்டம்காரணமாகவே அவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.

தனது ஆட்டம் குறித்துப் பேசிய ரோஹித் சர்மா, "ஆஸ்திரேலியாவில் இதுபோன்றுதான் சவால்கள் இருக்கும். இங்குள்ள பந்துவீச்சாளர்கள் தரமானவர்கள், அதனால் எளிதாக இருக்காது. களச்சூழலையும், ஆட்டத்தின் போக்கையும் புரிந்துகொண்டு சிறப்பாகச் செயல்பட வேண்டும். இந்தத் தொடரில் எப்படி விளையாட வேண்டும் என்பதில் நான் மனதளவில் நம்பிக்கையுடன் இருந்தேன். தொடரை வெல்ல முடியாவிட்டாலும், பல நேர்மறையான விஷயங்களுடன் திரும்புவோம்" என்றார்.

இளம் வீரர்களுக்கு வழிகாட்டுவது குறித்துப் பேசிய அவர், "சரியான செய்தியை இளம் வீரர்களிடம் கொண்டு சேர்ப்பது இப்போது எங்கள் வேலை. அவர்கள் மிகவும் திறமையானவர்கள். கிரிக்கெட்டின் அடிப்படைகளை நான் இன்னும் நம்புகிறேன். அதை இந்த வீரர்களுக்குக் கடத்த வேண்டும் என நான் நினைக்கிறேன்" என்றார்.

பெர்த்தில் 8 ரன்களிலும், அடிலெய்டில் 73 ரன்களிலும் ஆட்டமிழந்திருந்த ரோஹித், சிட்னியில் 13 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் சதமடித்து, அழுத்தத்தை எப்படி கையாள்வது என்பதை மீண்டும் நிரூபித்தார். விராட் கோலியுடன் (74* ரன்கள்) இணைந்து அவர் அமைத்த 168 ரன்கள் பார்ட்னர்ஷிப், இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தது.

ஆஸ்திரேலியாவில், குறிப்பாகச் சிட்னியில் விளையாடுவதை நான் விரும்புகிறேன். இது ஒரு சிறந்த மைதானம், சிறந்த ரசிகர்கள், அருமையான ஆடுகளம். நான் செய்வதை நான் விரும்புகிறேன். அதைத் தொடர்ந்து செய்வேன் என நம்புகிறேன்" என்று கூறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் ரோஹித். இந்தத் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் இழந்தாலும், ரோஹித் சர்மாவின் இந்த அபாரமான ஆட்டமும், எழுச்சியும் இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆறுதலையும், நம்பிக்கையையும் அளித்துள்ளது.

25/10/2025

சிட்னியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஓடிஐ போட்டியை இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது.

ரோஹித் சர்மா சதத்தையும் கோலி அரைசதத்தையும் அடித்து போட்டியை வென்று கொடுத்திருந்தனர். இந்நிலையில், போட்டி முடிந்த பிறகு இருவரும் கூட்டாக பேட்டி அளித்திருந்தனர்.

அதில் ரோஹித் பேசுகையில், 'ஆஸ்திரேலியாவுக்கு கிரிக்கெட் ஆட வருவது எப்போதுமே பிடிக்கும். குறிப்பாக இந்த சிட்னி மைதானம் பல பழைய நினைவுகளை கிளறிவிட்டது. 2008 லேயே இங்கே ஆடியிருக்கிறேன். நாங்கள் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு வருவோமா என தெரியாது. ஆனால், இங்கு ஆடிய ஒவ்வொரு தருணத்திலும் மகிழ்ந்திருக்கிறேன்.

எது நடந்தாலும் கடந்த 15 ஆண்டுகளில் கிரிக்கெட் ஆடுவதை மட்டுமே விரும்பியிருக்கிறோம். ஆஸ்திரேலியாவில் ஆடுவதை எப்போதும் விரும்பியிருக்கிறேன். தேங்க்யூ ஆஸ்திரேலியா!' என்றார்.

கோலி பேசுகையில், 'நீங்கள் எவ்வளவு காலம் கிரிக்கெட் ஆடியிருந்தாலும், இந்த ஆட்டம் உங்களுக்கு பல புதிய வழிகளை காட்டிக் கொண்டேதான் இருக்கும். இன்னும் சில நாட்களில் எனக்கு 37 வயதாகிவிடும். சேஸிங்தான் எப்போதுமே எனக்குள் இருக்கும் சிறந்த ஆட்டத்தை வெளிக்கொணர்கிறது என நினைக்கிறேன்.

ரோஹித்துடன் மேட்ச் வின்னிங் பார்ட்னர்ஷிப்பை அமைத்ததில் மகிழ்ச்சி. இப்போதைக்கு நாங்கள்தான் ரொம்பவே அனுபவமிக்க இணை என நினைக்கிறேன். நாங்கள் இளைஞர்களாக இருந்த போதே ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் போட்டியை வென்று கொடுக்கும் என்பதை உணர்ந்திருந்தோம்.

2013 இல் ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு வந்திருந்தார்கள். அந்தத் தொடரிலிருந்தே எங்கள் இருவருக்கும் அந்த புரிதல் உண்டானதென நினைக்கிறேன். ஆஸ்திரேலியாவுக்கு வருவது எப்போதுமே பிடிக்கும். இங்கே சிறப்பான ஆட்டங்களை ஆடியிருக்கிறோம். எப்போதுமே எங்களுக்கு ஆதரவளிக்க பெருந்திரளாக திரண்டு வருவார்கள். அதற்கு நன்றி.' என்றார்.

😱🧐
25/10/2025

😱🧐

IND vs AUS: கிழட்டு நாய்கள்.. விராட் கோலி, ரோகித் சர்மாவை தரம் தாழ்ந்து விமர்சித்த ரவி சாஸ்திரி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி எப்போதுமே வீரர்களை பாராட்டுகிறேன் என்ற பெயரில் தவறான எடுத்துக்காட்டுடன் பேசி சர்ச்சையில் சிக்கிக் கொள்வார் தோனியை ஒரு முறை பாராட்டுகிறேன் என்ற பெயரில் அவர் ஸ்டெம்பிங் செய்யும் வேகத்தை பிக்பாக்கெட் உடன் ஒப்பிட்டு சர்ச்சையில் சிக்கினார்.

தற்போது விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவை பாராட்டுகிறேன் என்ற பெயரில் அவர்களுக்கு முகத்திற்கு நேராகவே ஒரு தவறான வார்த்தையை பயன்படுத்தி இருப்பது சமூக வலைத்தளத்தின் அதிர்வல்களை ஏற்படுத்தி இருக்கிறது. மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அனைவரும் 237 ரன்கள் என்ற இலக்கை இந்தியா ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை 38.3 ஓவர்களில் எட்டியது.

இதில் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா 121 ரன்கள் எடுக்க விராட் கோலி 74 ரன்கள் எடுத்தார். இது குறித்து இரு வீரர்களையும் அழைத்து நேர்காணலில் ரவி சாஸ்திரி ஈடுபட்டார். அப்போது வயதான கிழட்டு நாய்கள் இரண்டுக்கும் இன்னும் துடிப்பு மட்டும் வாலில் போகவில்லையே? அது எப்படி என்று கேள்வி கேட்டார்.

ரவி சாஸ்திரியில் இந்த பேச்சு இது பாராட்டா இல்லை அவமதித்து பேசுகிறாரா என புரியாமல் ரோகித் சர்மா அதிர்ச்சி அடைந்தார். எனினும் ஒரு பொய் சிரிப்புடன் சமாளித்துக் கொண்ட ரோகித் சர்மா, ஆம் எங்களுடைய கிரிக்கெட்டை நாங்கள் மகிழ்ச்சியுடன் விளையாடுகின்றோம்.

அதைவிட மிகவும் முக்கியம் நாங்கள் எவ்வளவு பாராட்டுகளை பெற்றாலும், எவ்வளவு சாதித்தாலும் எப்போதெல்லாம் வாய்ப்புகள் நாட்டுக்காக விளையாட கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் ஒரு புதிய தொடக்கத்தை அணுகுவது போல் நாங்கள் ஒவ்வொரு போட்டியையும் விளையாடுவோம்.

அப்படித்தான் பெர்த் மைதானத்தில் முதல் ஒருநாள் போட்டியை அனுகினோம். கடந்த 15, 17 ஆண்டுகளாக நாங்கள் என்ன செய்தோம் என்பதை மறந்து விட்டு ஒரு புது வீரர் போல் இந்த தொடரை நாங்கள் அனுகினோம். இப்படித்தான் ஒவ்வொரு போட்டியையும் நாங்கள் அணுகவோம். விராட் கோலியும் அதேதான் செய்வார். எனினும் நாங்கள் இருவரும் இந்த மூன்று போட்டிகளையும் என்ஜாய் செய்தோம் என்று ரோகித் சர்மா கூறினார். ரவி சாஸ்திரியின் இந்த பேச்சு ரசிகர்களை கோபம் அடைய செய்திருக்கிறது. ரவி சாஸ்திரி போதையில் இவ்வாறு பேசுகிறாரா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

IND vs AUS: ரோகித் சர்மா மிரட்டலான சதம்.. விராட் கோலி மாஸ் கம்பேக்.. இந்திய அணி அபார வெற்றிஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்...
25/10/2025

IND vs AUS: ரோகித் சர்மா மிரட்டலான சதம்.. விராட் கோலி மாஸ் கம்பேக்.. இந்திய அணி அபார வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மா சதம் விளாசி அசத்திய நிலையில், விராட் கோலி அரை சதம் அடித்தார்.

மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஆஸ்திரேலியா அணி இரண்டுக்கும் பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில் ஆறுதல் வெற்றிக்காக இந்திய அணி இன்று களமிறங்கியது. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இருதரப்பு தொடரில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை ஒயிட் வாஷ் செய்தது கிடையாது.

முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் தேர்வு செய்தது. அந்த அணியின் மேட் ரீன்சா அபாரமாக விளையாடி அரை சதம் அடிக்க கேப்டன் மிச்சல் மார்ஸ் 41 ரன்கள் எடுத்தார். ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி பெரிய ஸ்கோர் அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஹர்ஷித் ரனா தன்னுடைய அபார பந்துவீச்சு மூலம் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கை சுக்குநூறாக உடைத்தார்.

வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அபாரமாக பந்து வீசி ஆஸ்திரேலியாவை கட்டுப்படுத்த அந்த அணி 46.4 ஓவரில் 236 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய பந்துவீச்சு தரப்பில் ஹர்ஷித் ரானா 4 விக்கெட் களையும், வாஷிங்டன் சுந்தர் இரண்டு விக்கெட்டுகளையும் மற்ற வீரர்கள் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனை அடுத்து 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியில் தொடக்கவீரர் ரோகித் சர்மா மற்றும் கேப்டன் கில் விளையாடினர்.24 ரன்களில் ஆட்டம் இழக்க ரோகித் சர்மாவுடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். கடந்த இரண்டு போட்டிகளாக விராட் கோலி டக்அவுட் ஆன நிலையில், இன்று அவர் ரன் அடிப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் எதிர்கொண்ட முதல் பந்திலே அவர் ரன் எடுத்து இன்று தனது மாஸ் கம்பேக்கை காட்டினார். மறுபுறம் ரோகித் சர்மா தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி பவுண்டரி, சிக்சர் என அடித்தார். ரோகித் சர்மா 63 பந்துகளில் அரை சதம் அடிக்க விராட் கோலி 56 பந்துகளில் அரைசதம் அடித்தார். ரோகித் தொடர்ந்து அதிரடி காட்ட 105 பந்துகளில் தன்னுடைய சதத்தை பூர்த்தி செய்தார்.

இருவரும் அதிரடி காட்ட 38.3 வது ஓவரிலேயே இந்திய அணி ஒரு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. ரோகித் சர்மா 125 பந்துகளில் 121 ரன்கள் அடித்தார். இதில் 13 பவுண்டரிகள் மூன்று சிக்சர்கள் அடங்கும்.விராட் கோலி 81 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார். இதில் 7 பவுண்டரிகள் அடங்கும்.

25/10/2025

விஜய் கேஸை விசாரித்த குஜராத் சிபிஐ தலை.. சீல் வைத்த பைலில் பறந்த ரிப்போர்ட்.. ஆட்டமே தலைகீழாகுது!

விஜய் கேஸை விசாரித்த குஜராத் சிபிஐ தலை.. சீல் வைத்த பைலில் பறந்த ரிப்போர்ட்.. ஆட்டமே தலைகீழாகுது!கரூரில் நடிகர் மற்றும் ...
25/10/2025

விஜய் கேஸை விசாரித்த குஜராத் சிபிஐ தலை.. சீல் வைத்த பைலில் பறந்த ரிப்போர்ட்.. ஆட்டமே தலைகீழாகுது!

கரூரில் நடிகர் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் (TVK) நிறுவனர் விஜய்யின் அரசியல் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணையை தீவிரமாக நடத்தி வருகிறது.

இந்த முதல் கட்ட விசாரணையின் அறிக்கையை சிபிஐ குழு வியாழக்கிழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

சீல் வைக்கப்பட்ட பைல் ஒன்றில் இந்த ரிப்போர்ட்டை சிபிஐ கோர்ட்டில் தாக்கல் செய்து உள்ளது. விரைவில் இந்த சீல் இடைப்பட்ட ரிப்போர்ட் முன்னாள் நீதிபதி ரஸ்தோகி மூலம் ஆய்வு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கரூர் வழக்கு - விஜய் சிபிஐ

கரூரில் நடைபெற்ற இந்த கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து, மாநிலம் அமைத்த சிறப்பு புலனாய்வு குழு (SIT), ஐஜிபி அஸ்ரா கார்க் தலைமையில் விசாரித்து வந்தது. இருப்பினும், அக்டோபர் 13 அன்று உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றியது.

இதையடுத்து, குஜராத்தைச் சேர்ந்த எஸ்பி பிரவீன் குமார் தலைமையிலான ஆறு பேர் கொண்ட சிபிஐ குழு, கூடுதல் எஸ்பி முகேஷ் குமார் மற்றும் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் ஆகியோருடன் கரூர் வந்து விசாரணையைத் தொடங்கியது. சிறப்பு புலனாய்வு குழு வழக்கு ஆவணங்களை சிபிஐ குழுவிடம் ஒப்படைத்த பிறகு இந்த விசாரணை ஆரம்பித்தது.

சிபிஐ குழு முதலில் வேலாயுதம்பாளையம் பகுதியில் சம்பவ இடம் மற்றும் பிற இடங்களை பார்வையிட்டது. தீபாவளி விடுமுறை காரணமாக சில நாட்கள் ஒத்திவைக்கப்பட்ட விசாரணை, அதிகாரிகள் புதன்கிழமை இரவு கரூர் திரும்பியதும் மீண்டும் தொடங்கியது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, ஏற்கனவே நியமிக்கப்பட்ட அதிகாரிகளுடன், எல்லைப் பாதுகாப்புப் படையின் ஐஜி சுமித் சரண் மற்றும் சிஆர்பிஎஃப் ஐபிஎஸ் அதிகாரி சோனல் மிஸ்ரா ஆகியோரும் இந்த குழுவில் இணைந்தனர்.

எட்டு நாட்கள் விசாரணை மேற்கொண்ட எஸ்பி பிரவீன் குமார் தலைமையிலான குழு, கரூர் ஜூடிஷியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் II மற்றும் மாஜிஸ்திரேட் எம். சார்லஸ் ஆல்பர்ட் முன்னிலையில் வியாழக்கிழமை காலை 11 மணியளவில் முதற்கட்ட அறிக்கையை தாக்கல் செய்தது.

"கட்டாய நடைமுறையின்படி நீதிமன்றத்தில் அறிக்கையை சமர்ப்பித்துள்ளோம், என குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்து உள்ளார்.

யார் இந்த முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி

முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி 1958ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் தேதி பிறந்தார். ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் புகழ்பெற்ற சிவில் வழக்கறிஞராக இருந்த அவரது தந்தை ஹரிஷ் சந்திர ரஸ்தோகியின் வழியில், 1982ஆம் ஆண்டு சட்டத்துறையில் தனது பயணத்தைத் தொடங்கினார்.

வழக்கறிஞராக, நீதிபதி ரஸ்தோகி பல சட்டப் பிரிவுகளில் பணியாற்றினார். அதே சமயம், அவர் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சேவைச் சட்டங்களில் முக்கிய கவனம் செலுத்தினார். 1990ஆம் ஆண்டு, ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் நிரந்தர வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட அவர், 2004ஆம் ஆண்டு வரை அப்பதவியில் நீடித்தார். 1999 முதல் 2000 வரை ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.

ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்ற பிறகு, 2013ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி முதல் 2016ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி வரை மாநில சட்ட சேவை ஆணையத்தின் நிர்வாகத் தலைவராகப் பணியாற்றினார். அவரது தலைமையின் கீழ், இந்த ஆணையம் தேசிய சட்ட சேவைகள் ஆணையத்திடமிருந்து மூன்று ஆண்டுகள் தொடர்ந்து தேசிய விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

முக்கிய தீர்ப்புகளை வழங்கிய சஞ்சய் ரஸ்தோகி

2014ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் நிர்வாக நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர், 2018ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி திரிபுரா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். இந்த பதவி உயர்வு வரை அவர் அப்பதவியில் நீடித்தார். முன்னதாக, 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி முதல் 2016ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி வரை ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் தற்காலிகத் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றினார்.

நீதிபதி அஜய் ரஸ்தோகி 2018ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். நீதிபதியாக பல முக்கிய தீர்ப்புகளை வழங்கி உள்ளார். பெண் நேவி ஊழியர்களுக்கு கட்டாய கமிஷன், ஐஏஎஸ் தேர்விற்கான வயது வரம்பை நீக்க முடியாது, அங்கன்வாடி ஊழியர்களுக்கு கிராஜுவிட்டி வழங்கலாம் என்பது உள்ளிட்ட பல முக்கிய தீர்ப்புகளை வழங்கியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

24/10/2025

நேத்து ஜெயிக்க வேண்டிய மேட்ச் தோற்க கம்பீர்தான் காரணம்.. இந்த மாற்றம் கட்டாயம் வேணும் - ஸ்ரீகாந்த் விமர்சனம்

இந்திய அணி நாளை ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் முக்கியமான ஒரு மாற்றத்தை செய்யவில்லை என்றால் ஜெயிக்க முடியாது என கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் விமர்சனம் செய்திருக்கிறார்.

இந்திய அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளை தோற்று தொடரை இழந்துவிட்டது. நிலையில் நாளை மூன்றாவது போட்டியில் சிட்னி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. எனவே இந்திய அணி தைரியமாக மாற்றங்களை செய்யலாம்.

இவர் கட்டாயம் ஆடணும்

இந்த நிலையில் கம்பீர் தொடர்ந்து எட்டு பேட்ஸ்மேன்கள் வேண்டும் என்பதால் குல்தீப் யாதவை வெளியில் வைத்து வருவது இந்திய அணிக்கு பிரச்சினையாக மாறி இருக்கிறது. அவர் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடியிருந்தால் தொடரையே வென்று இருக்கலாம் என்று அப்போதே விமர்சனங்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ஸ்ரீகாந்த் பேசும் பொழுது "குல்தீப் யாதவ் நிதீஷ்குமார் ரெட்டி இடத்தில் விளையாட வேண்டும். இல்லை எதற்காக வேறு யாரையாவது நீக்குவார்களா என்று தெரியாது. ஆனால் இதை செய்தாக வேண்டும். நிதீஷ் குமார் ரெட்டி திறமையற்ற பந்துவீச்சை வைத்துக் கொண்டு தாங்க முடியாது. அவர் சீக்கிரத்தில் நொறுங்கி விடுவார். இதே போல பேட்டிங்கிலும் அவர் சில பந்துகள் இருக்கும் போதே வருகிறார்"

ஜெயிக்க வேண்டிய போட்டி

"தேவைப்பட்டால் ஹர்ஷித் ராணாவை எட்டாவது இடத்தில் விளையாட வைக்கலாம். நேற்று அவர் பேட்டிங் செய்த விதம் எனக்கு பிடித்திருந்தது. எனவே இதை யோசித்து நிதீஷ் குமார் ரெட்டியை கழட்டி விடுங்கள். ஹர்ஷித் ராணா இரண்டு விக்கெட் எடுத்திருப்பதால் அவரை நீக்க முடியாது"

நேற்றைய போட்டியில் குல்தீப் யாதவ் விளையாடி இருந்தால் எளிதாக போட்டியை வென்றிருக்கலாம். ஆஸ்திரேலியர்களுக்கு சுழல் பந்துவீச்சை விளையாட எந்த க்ளுவும் இல்லை. நேற்று வெல்வதற்கு ஒரு அருமையான வாய்ப்பு இருந்தது. ஐந்து விக்கெட்டுகளை அவர்கள் இழந்த பொழுது தொடர்ந்து சுழல் பந்துவீச்சை பயன்படுத்தி இருந்தால் விஷயம் மாறி இருக்கும். குல்தீப் யாதவை விளையாடாததின் காரணம் எனக்கு புரியவில்லை" என்று கூறி இருக்கிறார்.

IND vs AUS: "இனி ஓய்வே எடுக்கக்கூடாது ஏன்னா".. விராட் கோலியின் குரு ரவி சாஸ்திரி எச்சரிக்கைஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருந...
24/10/2025

IND vs AUS: "இனி ஓய்வே எடுக்கக்கூடாது ஏன்னா".. விராட் கோலியின் குரு ரவி சாஸ்திரி எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் 'டக் அவுட்' ஆகி இருக்கும் விராட் கோலிக்கு, இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இளம் வீரர்களின் போட்டி அதிகரித்து வரும் நிலையில், கடந்த கால சாதனைகளை வைத்து அணியில் நீடிக்க முடியாது என்று அவர் காட்டமாகத் தெரிவித்துள்ளார். ஆடுகளத்திற்கு வெளியே விராட் கோலியின் குருவாக இருப்பவர் ரவி சாஸ்திரி என்பது குறிப்பிடத்தக்கது. அவரே இவ்வாறு கடுமையாக பேசி இருக்கிறார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்து, 'கிங்' என ரசிகர்களால் கொண்டாடப்படும் விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்வில் தற்போது ஒரு நெருக்கடியான காலகட்டம் உருவாகியுள்ளது. ஏழு மாத இடைவெளிக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்பியுள்ள அவர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தத் தொடரில் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளிலும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளார்.

பெர்த்தில் மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சிலும், அடிலெய்டில் சேவியர் பார்ட்லெட் பந்துவீச்சிலும் 'டக் அவுட்' ஆனார் கோலி. தனது 17 ஆண்டுகால நீண்ட ஒருநாள் கிரிக்கெட் வாழ்வில், அடுத்தடுத்த போட்டிகளில் டக் அவுட் ஆவது இதுவே முதல் முறையாகும். இந்தத் தொடர் சரிவு, 2027 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அவரது இடம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

களத்தில் இறங்கிய ரவி சாஸ்திரி

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும், கோலியுடன் நெருங்கிப் பணியாற்றியவருமான ரவி சாஸ்திரி, கோலியின் நிலை குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார். இந்தியாவின் இன்னிங்ஸ் முடிந்த பிறகு ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், "2027 உலகக் கோப்பை என்பது கோலிக்கு இன்னும் வெகு தொலைவில் இருக்கிறது. அவர் உடனடியாக தனது பார்மை மீட்டெடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

"வெள்ளைப் பந்து (ஒருநாள் மற்றும் டி20) கிரிக்கெட்டில், இந்திய அணியில் இடம்பிடிக்கக் கடுமையான போட்டி நிலவுகிறது. அந்தப் போட்டியை எதிர்கொள்ளும்போது, இந்திய அணியில் விராட் கோலியோ, ரோஹித் சர்மாவோ, வேறு யாராக இருந்தாலும், யாரும் ஓய்வெடுக்க முடியாது. மெத்தனமாக இருக்கவும் முடியாது" என்று அவர் கடுமையாக எச்சரித்தார்.

இளம் வீரர்களின் எழுச்சி

கடந்த சில மாதங்களில் இந்திய கிரிக்கெட் தலைமுறை மாற்றத்தைச் சந்தித்து வருகிறது. யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, அபிஷேக் சர்மா போன்ற இளம் அதிரடி வீரர்கள் ஒருநாள் அணியின் கதவைத் தட்டுகின்றனர். இதனால், கோலி போன்ற ஜாம்பவான்களுக்கும் இனி அணியில் இடம் உறுதி இல்லை என்பதை சாஸ்திரி சுட்டிக்காட்டியுள்ளார்.

கோலியின் ஆட்டமிழந்த விதம் குறித்தும் சாஸ்திரி பேசுகையில், "இன்றும் அவர் ஆட்டமிழந்துவிட்டார். அவரது கால்களின் நகர்வு சற்றுத் தயக்கத்துடன் இருந்தது. ஒருநாள் கிரிக்கெட்டில் அபாரமான சாதனை படைத்துள்ள அவர், இப்படி அடுத்தடுத்து இரண்டு டக் அவுட் ஆனது அவருக்கே பெரும் ஏமாற்றத்தை அளித்திருக்கும்" என்றார்.

கோலியின் உடற்தகுதி குறித்து எந்தக் கேள்வியும் இல்லை என்றாலும், 36 வயதாகும் அவர், அணியில் நீடிக்க வேண்டுமானால் தனது பேட் மூலம் பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். சனிக்கிழமை சிட்னியில் நடைபெறவுள்ள கடைசி ஒருநாள் போட்டி, விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்வில் ஒரு மிக முக்கியமான போட்டியாக அமைந்துள்ளது. அதில் அவர் தனது பார்மை மீட்டெடுத்து, விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா என்பதைப் பார்க்க வேண்டும்.

23/10/2025

ரோஹித் தலைமையில் ஒரு தோல்வியும் காணாத இந்திய அணி, சுப்மன் கில் கேப்டன் ஆனவுடன் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரை 0-2 என இழந்தது. தலைமை மாற்றம் ஏற்படுத்தும் தாக்கத்தை இது சுட்டிக்காட்டுகிறது. முழு விபரம் 👇👇👇

https://mamutime.com/ind-vs-aus-odi-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a/

IND vs AUS: "விடைபெறுகிறேன்".. கோலி செய்த செயல்.. உறைந்து நின்ற ரசிகர்கள்.. ஓய்வு அறிவிப்பா?விராட் கோலி ஆஸ்திரேலியாவில் ...
23/10/2025

IND vs AUS: "விடைபெறுகிறேன்".. கோலி செய்த செயல்.. உறைந்து நின்ற ரசிகர்கள்.. ஓய்வு அறிவிப்பா?

விராட் கோலி ஆஸ்திரேலியாவில் ஓய்வை அறிவிக்கப் போகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தனது ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் 'டக் அவுட்' ஆன விராட் கோலி, ஆட்டமிழந்து வெளியேறியபோது அடிலெய்டு மைதான ரசிகர்களை நோக்கி கையசைத்து விடைபெற்றது, அவரது ஓய்வு குறித்த ஊகங்களைத் தூண்டியுள்ளது.

இந்தச் செயல் சமூக வலைதளங்களில் கோலி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

அடிலெய்டு ஓவல் மைதானம் விராட் கோலியின் கோட்டை என்றே வர்ணிக்கப்படும். வெளிநாட்டு வீரர் ஒருவர், இந்த மைதானத்தில் அனைத்து விதமான போட்டிகளையும் சேர்த்து 975 ரன்கள் குவித்தவர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர் கோலி. இன்று அவர் பேட்டிங் செய்ய களமிறங்கியபோது ரசிகர்கள் கரவொலியுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் கோலி டக் அவுட் ஆகி இருந்ததால் இந்தப் போட்டியில் ரன் குவிப்பார் என எதிர்பார்த்தனர். ஆனால், வெறும் நான்கு பந்துகள் மட்டுமே நீடித்த அவரது ஆட்டம், ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

ஆஸ்திரேலியாவின் இளம் வேகப்பந்து வீச்சாளர் சேவியர் பார்ட்லெட் வீசிய பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் ரன் ஏதும் எடுக்காமல் அவர் ஆட்டமிழந்தார். அவர் பெவிலியன் திரும்பியபோது, ரசிகர்கள் மீண்டும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி அவருக்கு மரியாதை செலுத்தினர். அதற்குப் பதிலளிக்கும் விதமாக, கோலி தனது வலது கையை உயர்த்தி, அமைதியாக ரசிகர்களை நோக்கி கையசைத்தார்.

கையசைவின் அர்த்தம் என்ன?

கோலியின் இந்தச் செயல், இயல்பான ஒன்றுதானா அல்லது அதற்குள் ஆழ்ந்த அர்த்தம் உள்ளதா என்ற விவாதம் உடனடியாகப் பற்றிக்கொண்டது. "இதுதான் அடிலெய்டு மைதானத்தில் தனது கடைசி ஆட்டமாக இருக்குமோ? அதனால்தான் ரசிகர்களுக்கு விடை கொடுக்கிறாரா?" என சிலரும், "ஏற்கனவே டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்தும் விடைபெறும் முடிவை அவர் எடுத்துவிட்டாரா?" என்பது போன்ற கேள்விகளுடன் சிலரும் சமூக வலைதளங்களில் போன்ற ஹேஷ்டேக்குகளை பரப்பினர். கோலியின் தொடர் டக் அவுட்களை விட, அவரது இந்த கையசைவுதான் அதிகமாகப் பேசப்பட்டது.

தொடரும் மோசமான ஃபார்ம்

ஏழு மாத நீண்ட இடைவெளிக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்பியுள்ள விராட் கோலிக்கு இந்தத் தொடர் சோதனையாக அமைந்துள்ளது. பெர்த்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் டக் அவுட் ஆன அவர், இன்று அடிலெய்டிலும் உள்நோக்கி வந்த பந்தில் தனது விக்கெட்டைப் பறிகொடுத்துள்ளார்.

தனது வலுவான பகுதி என வர்ணிக்கப்படும் பேடில் வாங்கக்கூடிய பந்துகளில் கூட, அவரால் பந்தை சரியாகக் கணிக்க முடியாதது அவரது ஃபார்ம் குறித்த கவலையை அதிகரித்துள்ளது. கோலியின் இந்தச் செயல், ஒரு சாதாரண நிகழ்வா அல்லது ஒரு சகாப்தத்தின் முடிவிற்கான முன்னுரையா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், அவரது ரசிகர்களுக்கு இந்தச் சம்பவம் பெரும் கவலையையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்பது மட்டும் நிச்சயம்.

முஸ்லீம் என்பதால் சர்ஃபராஸ் கான் சேர்க்கப்படவில்லையா? கம்பீர், அகார்கருக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம்இந்திய அணிக்காக ஆறு ட...
22/10/2025

முஸ்லீம் என்பதால் சர்ஃபராஸ் கான் சேர்க்கப்படவில்லையா? கம்பீர், அகார்கருக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம்

இந்திய அணிக்காக ஆறு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள சர்பராஸ் கான், மொத்தமாக 371 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஒரு சதம், மூன்று அரை சதம் அடங்கும்.

இதில் ஒரு சதம், மூன்று அரை சதம் அடங்கும். இதுவரை 56 முதல் தர போட்டிகளில் விளையாடி உள்ள சர்பராஸ் கான் 4759 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் 16 சதம், 15 அரை சதம் அடங்கும். இதில் அவருடைய சராசரி 65 என்ற அளவில் இருக்கின்றது.

சர்பராஸ் கான் கடைசியாக 2024 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடினார். இதில் முதல் டெஸ்ட் போட்டியில் சர்பராஸ் கான் சதம் அடித்து அதன் பிறகு சொற்ப ரன்களில் அவர் ஆட்டம் இழந்தார். இந்த நிலையில் பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணியில் இருந்த சர்பராஸ் கான் அணியில் நடக்கும் விஷயத்தை பத்திரிகையாளர்களிடம் கூறியதாக தெரிவித்த கம்பீர் அவரை அணியை விட்டு நீக்கினார்.

இதனை அடுத்து எந்த ஒரு இந்திய அணிலும் சர்ஃபிராஸ் கான் சேர்க்கப்படவில்லை. இந்த நிலையில் தென்னாபிரிக்கா ஏ அணிக்கு எதிரான இரண்டு நான்கு நாள் பயிற்சி ஆட்டம் நடைபெறுகிறது. இதற்கான இந்திய அணியில் சர்பராஸ்கான் இடம்பெறவில்லை. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சமா முஹம்மத், சர்பராஸ்கான் ஏன் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை.

அதற்கு அவருடைய மதம் காரணமா? இந்த விவகாரத்தில் கம்பீர் எங்கு நிற்கிறார் என்று நம் அனைவருக்குமே தெரியும் என்று குறிப்பிட்டிருந்தார். சமா முஹம்மதின் இந்த கருத்து சமூக வலைத்தளத்தில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் அதுல் வாசன், காங்கிரஸ் கட்சியின் இந்த கருத்து மிகவும் வருத்தத்தை தருகிறது.

சர்பராஸ் கானுக்கு உரிய வாய்ப்பு தரப்படவில்லை என்பது உண்மைதான். ஆனால் காங்கிரஸ் கட்சியின் இந்த குற்றச்சாட்டை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்திய கிரிக்கெட்டில் அப்படி ஒரு சம்பவம் இதுவரை நடந்ததே கிடையாது. அசாருதீன் கேப்டனாக இருந்தபோது கூட மதம் தொடர்பான விமர்சனங்கள் இந்திய அணியில் ஒரு புகாராகவே வைக்கப்படும்.

ஆனால் சர்ஃபராஸ் கான் விவகாரத்தில் எந்த ஒரு மத தொடர்பான விஷயமும் காரணம் கிடையாது என்று கூறியுள்ளார்.

"ரோஹித் சர்மா ஜிம்பாப்வே போன்ற சின்ன அணிகளுக்கு எதிராக மட்டுமே சதம் அடிப்பார்; அவரை ஓய்வு பெறச் செய்யுங்கள்" என்று பாகிஸ...
22/10/2025

"ரோஹித் சர்மா ஜிம்பாப்வே போன்ற சின்ன அணிகளுக்கு எதிராக மட்டுமே சதம் அடிப்பார்; அவரை ஓய்வு பெறச் செய்யுங்கள்" என்று பாகிஸ்தான் வீரர் ஷாஹித் அப்ரிதி கடுமையாக விமர்சித்துள்ளார்.

முழு விபரம் 👇👇👇

https://mamutime.com/shahid-afridi-criticizes-rohit-sharma-%e0%ae%a8%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%af%88-%e0%ae%8a/

Address

Melur
625106

Alerts

Be the first to know and let us send you an email when புதிய பார்வை - Puthiya Paarvai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share