Pradyumna Groups

Pradyumna Groups அனைத்து விதமான ஆன்லைன் சேவைகளும் செய்து தரப்படும்.

அன்பால் ஒளிரும் இதயம்,மகிழ்ச்சியால் நிரம்பிய மனம்,கவலைகள் பட்டாசு போல வெடித்து சிதற,அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்த...
19/10/2025

அன்பால் ஒளிரும் இதயம்,
மகிழ்ச்சியால் நிரம்பிய மனம்,
கவலைகள் பட்டாசு போல வெடித்து சிதற,
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!





17/10/2025

*இனி ஆளே வரத் தேவையில்லை* *ஆனாலும் ரிஜிஸ்டரேசன் நடக்கும்* *எப்படி? பத்திரப்பதிவு துறையில்* *புது மாற்றம் வரப் போகிறது*

தமிழக பத்திரப்பதிவுத் துறையில் மிகப் பெரும் புரட்சியாக நிலம், வீடு உள்ளிட்டவற்றை பத்திரப்பதிவு செய்யும் போது, நேர விரயம் உள்ளிட்டவற்றை தவிர்க்கும் வகையில், "ஆளில்லா பதிவு" (Presenceless Registration) முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதன் மூலம், பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமலேயே ஆன்லைன் மூலம் பதிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் நிலம், வீடு உள்ளிட்ட சொத்துக்களை வாங்கும் போது, பத்திரப் பதிவுத் துறை மூலம் பதிவு செய்யப்படுகிறது.

மேலும் ஏற்கனவே இருக்கும் வீடுகள் நிலங்கள் உள்ளிட்ட அசையா சொத்துக்களும் பத்திரப் பதிவுத் துறை மூலம் ஒரு நபரிடம் இருந்து மற்றொருவருக்கு மாற்றப்படுகிறது.

பின்னர் அது வருவாய் துறை சார்ந்த ஆவணங்களில் பதியப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாகவே தமிழகத்தில், ஆவணப் பதிவு மோசடி, போலி ஆவணம், ஆள்மாறாட்டம் உள்ளிட்ட நடவடிக்கைகளால் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது.

பத்திரப்பதிவு முறை இதை அடுத்து போலி ஆவணப் பதிவு உள்ளிட்டவற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் பத்திரப் பதிவின் போது அசல் உரிமை மூல ஆவணத்தை தாக்கல் செய்யும் சட்ட மசோதா தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.

இதேபோல், பத்திரப்பதிவுத் துறையில் பெரிய மாற்றமாக தமிழகத்தில் சொத்துக்களை வாங்குவதிலும் விற்பதிலும் உள்ள சிக்கல்களை குறைத்து, பதிவு துறையில் ஒரு மாபெரும் மாற்றத்தை கொண்டு வர "ஆளில்லா பதிவு" (Presenceless Registration) முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதன் மூலம், சொத்து வாங்குபவர்களும் விற்பவர்களும், குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் மனைகள் தொடர்பான முதலாவது விற்பனையில், சார்பதிவாளர் அலுவலகங்களை நேரில் சென்று அணுகாமலேயே ஆன்லைன் மூலம் பதிவு செய்ய முடியும்.

ஆளில்லா பதிவு இதுவரை வாங்குபவர், விற்பவர் மற்றும் சாட்சிகள் நேரில் வந்து கைரேகை வைத்து, புகைப்படம் எடுத்து, ஆவணங்களில் கையெழுத்திடுவது கட்டாயமாக இருந்தது.

ஆனால் புதிய முறையில், ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பு, கைரேகை மற்றும் கருவிழி ஸ்கேனிங் போன்ற உயர் தொழில்நுட்ப பாதுகாப்பு அம்சங்கள் பயன்படுத்தப்படும்.

பில்டர்கள் மற்றும் டெவலப்பர்கள், அரசு வழங்கும் பிரத்யேக மென்பொருள் மூலமாக வாங்குபவரின் விவரங்கள் மற்றும் ஆவணங்களை பதிவேற்றம் செய்வார்கள்.

சார்பதிவாளர், ஆன்லைனில் விண்ணப்பத்தை சரிபார்த்து, பதிவுக்கு ஒப்புதல் அளிப்பார்.

தமிழ்நாடு டிஜிட்டல் இந்த முறையின் மூலம், 582 சார்பதிவாளர் அலுவலகங்களில் ஏற்படும் மக்கள் நெரிசல் குறையும், பொதுமக்கள் நேரத்தையும் பயணச் செலவையும் மிச்சப்படுத்தலாம்.

இடைத்தரகர்களின் தலையீடு குறைந்து, வெளிப்படையான நிர்வாகம் உருவாகும் என்பது இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.

முதற்கட்டமாக, இந்த வசதி விருப்பத்தின் பேரிலேயே வழங்கப்பட்டு, பின்னர் படிப்படியாக கட்டாயமாக்கப்படும்.

மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் வெற்றிகரமாக செயல்பட்ட முறைகளை தமிழக அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

சொத்து பதிவுசெய்யும் திட்டம்
இதற்கு முன்பு, அடமான பத்திரங்கள் (MOD), இரசீது பத்திரங்கள் மற்றும் குறுகிய கால குத்தகை ஒப்பந்தங்கள் போன்றவற்றில் ஆளில்லா பதிவு முறையை அறிமுகப்படுத்தியிருந்தனர், ஆனால் அது கட்டாயமில்லாததால் தற்போது சுமார் 30,000 பத்திரங்கள் மட்டுமே ஆன்லைனில் பதிவு செய்யப்படுகின்றன.

இத்திட்டத்தின் மூலம் பல நன்மைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

இது, ஆண்டுக்கு சுமார் 36 லட்சம் ஆவணங்கள் பதிவாகும் அளவில், தமிழகத்தில் மிகப்பெரிய டிஜிட்டல் மாற்றமாக அமையும்.

பொதுமக்களுக்கு இது நேரம், பணம், மற்றும் சிரமங்களை மிச்சப்படுத்தும் ஒரு புதிய வசதியாக இருக்கும்.

சொத்து பதிவு ஆனால், பாதுகாப்பு தொடர்பான சில கவலைகளும் உள்ளன.

மாநிலத்தில் போலி ஆவணங்கள் மூலம் சொத்து அபகரிப்பு, மோசடி பதிவுகள் அதிகரித்து வரும் நிலையில், நேரடி சரிபார்ப்பு இல்லாமல் ஆன்லைனில் பதிவு செய்வது கூடுதல் மோசடிகளுக்கு வழிவகுக்கும் அபாயம் உள்ளது.

இருப்பினும், கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் சரிபார்ப்புகள் இதை தடுக்க உதவும் என அதிகாரிகள் நம்புகின்றனர்.

மொத்தத்தில், "ஆளில்லா பதிவு" முறை, தமிழகத்தில் சொத்து பதிவு முறையை முன்னணி டிஜிட்டல் மாற்றமாக மாற்றும் திட்டமாக இருக்கிறது.

இது பொதுமக்களுக்கு பெரும் வசதியை அளிக்கும் மட்டுமல்ல, அலுவலக நடைமுறைகளில் நேரத்தைச் சேமித்து, அரசு நிர்வாகத்தை வெளிப்படையாகவும் விரைவாகவும் மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.






Police Verification Certificate Apply
07/10/2025

Police Verification Certificate Apply










07/10/2025

பத்திர பதிவு அலுவலகத்தில் (Sub Registrar Office) பயன்படுத்தப்படும் தடங்கள் மனு
விளக்கம்

இது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் “Obstruction Petition” அல்ல,
ஆனால் ஒரு நிலம் அல்லது சொத்துக்கான பதிவு தற்காலிகமாக தடுக்க பதிவு அலுவலகத்தில் அளிக்கப்படும் தடங்கள் மனு (protest Petition) ஆகும்.

இதைப் பொதுவாக “தடங்கள் மனு” / “protest Petition” / “Objection Petition” என்று அழைக்கிறார்கள்.

தடங்கள் மனு

பத்திர பதிவு அலுவலகத்தில் ஒருவர் ஒரு சொத்துக்கு சம்பந்தப்பட்ட பதிவு நடைபெறாமல் இருக்க கோரி அளிக்கும் எழுத்து மனுவே “தடங்கள் மனு” எனப்படுகிறது.

அதாவது:

இந்த நிலம் குறித்து வழக்கு நடக்கிறது / சொத்து உரிமை சர்ச்சை நிலையில் உள்ளது / போலி ஆவணம் தயாராகிறது”என்பதுபோன்ற காரணங்களால், அந்த நிலம் தொடர்பான ஆவணங்களை பதிவு செய்யாமல் இருக்க வேண்டி மனு அளிக்கப்படுகிறது.

சட்ட அடிப்படை

இந்த நடைமுறை Registration Act, 1908-ன் கீழ் நேரடியாக குறிப்பிடப்படவில்லை,
ஆனால் Tamil Nadu Registration Department Circulars மூலம் அனுமதிக்கப்பட்டது.

Inspector General of Registration Circular No. 67/2011

Circular No. 10/2015, Circular No. 4/2022
அதாவது,

District Registrar (Administration) அல்லது Sub-Registrar ஒருவர்
தகுந்த ஆதாரங்கள் இருந்தால் “Tadangal Note” அல்லது “Stop Registration Note” என்ற வகையில்
குறிப்பைச் சேர்க்கலாம்.

தடங்கள் மனு கொடுக்கும் நிலைகள்

1. நிலம் தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் போது

2. போலி ஆவணம் தயாராகும் சந்தேகம் ஏற்பட்டால்

3. மைனர் (Minor) சொத்து விற்பனை செய்யப்பட முயற்சித்தால்

4. குடும்பப் பிரிவு இல்லாமல் ஒருவர் தனியாக விற்றால்

5. மரபுரிமை உரிமை பற்றிய சர்ச்சை இருந்தால்

தடங்கள் மனு கொடுக்கும் நடைமுறை

மனு தயார் செய்தல்

மனு சமர்ப்பிக்கும் நடைமுறை

மனுவில் சேர்க்க வேண்டிய விவரங்கள்:
விவரம் விளக்கம்

மனுதாரர் பெயர், முகவரி உங்கள் முழு விவரம்

சொத்து விவரம் Survey No, Village, Taluk, District

மனுவுக்கான காரணம் வழக்கு, சர்ச்சை, போலி ஆவணம்

ஆதார ஆவணங்கள் Court Copy, Patta, Sale Deed, Aadhar copy
மனுதாரர் கையொப்பம் Self attested

மனு தருவதற்கான காரணம் (உதா: வழக்கு, தடை உத்தரவு, உரிமை சர்ச்சை)

ஆதார ஆவணங்கள் (உதா: patta, court copy, family tree)

மனு சமர்ப்பிக்கும் இடம்

சம்பந்தப்பட்ட Sub Registrar Office-இல்
அந்த நிலம் பதிவு செய்யப்படும் பகுதியில் மனு கொடுக்க வேண்டும்.

ஒரு copy-ஐ District Registrar (Administration) கும் அனுப்புவது சிறப்பு

பதிவு அலுவலக நடவடிக்கை

மனுவை பெற்ற பின், Sub Registrar ஒரு "Tadangal Note" பதிவு சிஸ்டத்தில் சேர்ப்பார்.

அந்த Survey Number / Document Number-க்கு “Objection Note” சேர்க்கப்படும்.

இதனால் அந்த நிலத்துக்கான புது ஆவணம் பதிவு செய்ய முடியாது,
District Registrar அனுமதி இல்லாமல்.

தடங்கள் மனுவை கொடுத்தால் அது நிலையான தடையில்லை — தற்காலிகமானது.

District Registrar விசாரணை செய்து, போதுமான ஆதாரம் இல்லாவிட்டால்
அந்த “protest petition” நீக்கலாம்.

உண்மையான உரிமை சர்ச்சை இருந்தால் நீதிமன்ற இடைக்கால தடை (Injunction Order) பெறுவது சிறந்தது.

தடங்கள் குறிப்பு (Tadangal Note) சேர்க்கப்பட்ட பின்

சிஸ்டத்தில் Survey Number அடிப்படையில் “Stop Registration Note” தோன்றும்

அதே சொத்துக்கான எந்தவொரு Sale Deed / Settlement / Gift deed ஆகியவையும் பதிவு செய்ய முடியாது

District Registrar அனுமதி பெறாமால் அந்த பதிவு நடக்காது

தடங்கள் நீக்கம் (Removal of Tadangal)

யாராவது தவறான தகவல் அடிப்படையில் தடங்கள் மனு கொடுத்திருந்தால்:

1. உரிமையாளர் District Registrar (Admin)-க்கு “Removal Petition” அளிக்கலாம்

2. இரு தரப்பும் அழைக்கப்பட்டு விசாரணை நடக்கும்

3. உண்மை ஆதாரத்துடன் உரிமை உறுதி ஆனால்
→ Tadangal Note நீக்கப்படும்

4. அதற்கான ஆணை பதிவு அலுவலகத்தில் சேர்க்கப்படும்

தவறான தடங்கள் மனு கொடுத்தால் என்ன ஆகும்?

தவறான/தீங்கிழைக்கும் நோக்கத்தில் மனு கொடுத்தால்
அது Misuse of Process எனக் கருதப்படும்

மனுதாரருக்கு Section 182, 211 IPC அடிப்படையில்
பொய்மனு / Malicious Complaint வழக்கு போடலாம்

District Registrar மனுவை கருப்பு பட்டியல் (Black List)-இல் சேர்க்கலாம்

முடிவு (conclusion)

அம்சம் விவரம்

நோக்கம் போலி பதிவு தடுக்கல் / சொத்து சர்ச்சை அறிவித்தல்
மனு அளிக்கும் இடம் Sub Registrar / District Registrar (Admin)
முடிவு “Tadangal Note” சேர்க்கப்படும்
செல்லுபடியாகும் காலம் விசாரணை முடியும் வரை அல்லது நீதிமன்ற உத்தரவு வரும் வரை
நீக்கம் District Registrar விசாரணை மூலம்







07/10/2025

பத்திரப்பதிவுத்துறை இணையதளத்தில் வில்லங்கச் சான்று எடுக்கும் வசதி தேதி குறிப்பிடப்படாமல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது....வில்லங்கச் சான்று தேவைப்படுவோர் பொறுமை காக்கவும்…..

06/10/2025

தற்போது தமிழக அரசு RTE அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆகையால் தற்போது பள்ளியில் பயிலும் மாணவர்கள் மட்டும் RTE-க்கு விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் பயிலும் பள்ளிகளிலே EMIS மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்....

NO ONLINE APPLICATION
அரட்டை சேனல் லிங்க்
https://chat.arattai.in/channel/l43545f313238373731343533363433343531303730305f353739353834312d50437c3031303131353032363034373137353935343835343333363630








Pரதியும்னா குரூப்ஸ்
05/10/2025

Pரதியும்னா குரூப்ஸ்







புதிய பான் கார்டு விண்ணப்பித்தல்,பழைய கார்டு திருத்தம்,தொலைந்த பான் கார்டு பெற்றுதருதல் போன்ற சேவைகள்அரட்டை சேனல் லிங்க்...
05/10/2025

புதிய பான் கார்டு விண்ணப்பித்தல்,
பழைய கார்டு திருத்தம்,
தொலைந்த பான் கார்டு பெற்றுதருதல் போன்ற சேவைகள்

அரட்டை சேனல் லிங்க்
https://chat.arattai.in/channel/l43545f313238373731343533363433343531303730305f353739353834312d50437c3031303131353032363034373137353935343835343333363630







பத்திர பதிவு கட்டணம் உயர்வா!! இல்லை #தேர்தல் நிதியா!!*நன்றி நீதி வெல்லும்*
05/10/2025

பத்திர பதிவு கட்டணம் உயர்வா!! இல்லை
#தேர்தல் நிதியா!!
*நன்றி நீதி வெல்லும்*










05/10/2025

📢 *RTE 2025 – முக்கிய அறிவிப்பு!*

🏫 *தனியார் பள்ளிகளில்*
🎓 *25% மாணவர் சேர்க்கை இட ஒதுக்கீடு (RTE ACT)*

📣 *இப்போதே CERTIFICATE எல்லாம் அப்ளை பண்ணி ரெடி பண்ணி வச்சுட்டா கடைசி நேரத்துல அவசரமா அலைய தேவையில்லிங்கோ..!* 👩‍🏫👨‍🎓

🧾 *நம்ம ஆபீஸ்க்கு வந்து தேவையான CERTIFICATE எல்லாம் ரெடி பண்ணி வச்சுக்கோங்க..!*

📋 *RTE விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:*
✅ சாதி சான்று
✅ வருமான சான்று
✅ இருப்பிடச் சான்று
✅ பிறப்பு சான்று
✅ மாணவனின் புகைப்படம்
✅ ஆதார் அட்டை (தாய் & தந்தையின் ஆதார்)
✅ ரேஷன் கார்டு (ஸ்மார்ட் கார்டு)

📅 *RTE 2025 விண்ணப்பங்கள் அக்டோபர் 06, 2025 முதல் தொடங்கும்!*

⚠️ *முக்கியம்:*
💻 ஆன்லைன் விண்ணப்பம் *பள்ளிகளில் மட்டும்* செய்யலாம்.
❌ *E-Sevai Centres-ல் RTE விண்ணப்பம் இல்லை.*
👨‍👩‍👧‍👦 பெற்றோர் தங்கள் குழந்தை படிக்கும் பள்ளியிலேயே RTE விண்ணப்பம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

📞 *மேலும் விவரங்களுக்கு:*
👨‍💼 *பிரதியும்னா குரூப்ஸ்*
📞 *8056948564*

🟢 *உங்கள் குழந்தையின் எதிர்காலத்துக்காக இன்றே தயார் ஆகுங்கள்!*

பிரதியும்னா குரூப்ஸின் அதிகார பூர்வமான *Arattai* சேனல் லிங்க் கீழே உள்ளது இணைந்து கொள்ளவும்

https://chat.arattai.in/channel/l43545f313238373731343533363433343531303730305f353739353834312d50437c3031303131353032363034373137353935343835343333363630




05/10/2025




05/10/2025



Address

Pradyumna Groups
Harur
635305

Opening Hours

Monday 9am - 8pm
Tuesday 9am - 8pm
Wednesday 9am - 8pm
Thursday 9am - 8pm
Friday 9am - 8pm
Saturday 9am - 8pm
Sunday 9am - 8pm

Telephone

+918056948564

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pradyumna Groups posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pradyumna Groups:

Share