Jeyankondar

Jeyankondar A Tamil-speaking Indian, legal luminary and an archivist exploring history and anthropology on an Epicurean odyssey.

I’m a Tamil-speaking Indian with an insatiable curiosity for law, history, and culture. A legal luminary by profession and an archivist by passion, I find joy in tracing the intricate threads of history, anthropology, and human experience. My journey is as much about scholarly pursuits as it is about savoring life’s finer pleasures—whether through literature, food, or meaningful conversations. Roo

ted in tradition yet always exploring, I believe life is best lived as an Epicurean odyssey, blending knowledge, passion, and purpose.

13/04/2025

திருநெல்வேலியில் ஒருவருக்கு மாநில தலைவர் பதவி கொடுத்தால் போதுமா ! அதன் மூலம் பாஜக தென்மாவட்ட சாதி கணக்கு எதுவும் வைத்திருந்தால் அது நிச்சயம் வேலைக்கு ஆகாது. எடப்பாடி-அதிமுக மீதுள்ள வெறுப்பும் கோவமும் தெற்கே துளியும் குறையவில்லை என்பதால் மீண்டும் திமுகவுக்கு தான் சாதகமாக அமையும். பாஜக அடுத்தடுத்து என்ன வியூகங்கள் வைத்துள்ளது என்பதை பொறுத்து தான் திமுகவின் வெற்றி எளிதாக இருக்குமா ? அல்லது கடுமையான போட்டியில் வெற்றி பெறுமா ! என்பது நமக்கு தெரியும். எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு இது வாழ்வா ! சாவா ! போராட்டம் தான். காங்கிரஸ் போல வாழ்ந்து கெட்ட கட்சியாக தான் அதிமுக இனிமே வலம் வரும்.

13/04/2025

மரியாதைக்குரிய பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் நெல்லை தமிழில் நகைச்சுவயாக, சகஜமாக பேசும்போது ரசிக்கும் படி இருக்கிறது. மேடையிலும் இவ்வாறே பேசினால் தமிழக மக்களிடம் எளிதாக சென்றடைய, தமிழர்கள் மனதுக்கு நெருக்கமாக இருக்க உதவும். பழைய பாணியில் அதிமுக அரசியல் பாசறையில் பயின்ற மேடை பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது.

21/03/2025

A deeply rooted misconception exists in the minds of many North Indians. They strongly believe that India needs one common language for unity. Their usual argument is — “Why should that common language be a foreign language like English?” and “Why can’t Hindi be that common language?” This line of reasoning is often repeated without understanding the broader picture. What they fail to realize is that Indian languages, including Hindi, have predominantly evolved as literary or cultural languages and have not developed to the same extent as English in fields like science, technology, or global communication. For them, Hindi may seem more important than English. But for us, our mother tongue holds greater value than Hindi, and English is more essential than Hindi when it comes to practical needs and global opportunities.

எந்தவொரு நீதிமன்ற உத்தரவு அல்லது தீர்ப்புகளையும் நமது ஊடகங்கள் ஒரு வரி செய்தியில் மக்களுக்கு எளிதாக புரிய வைத்துவிட முடி...
20/03/2025

எந்தவொரு நீதிமன்ற உத்தரவு அல்லது தீர்ப்புகளையும் நமது ஊடகங்கள் ஒரு வரி செய்தியில் மக்களுக்கு எளிதாக புரிய வைத்துவிட முடியாது. நாம் அந்த ஒரு வரி செய்தியை வாசித்து உடனே உணர்ச்சி வசப்பட்டு நமது கருத்துக்களை பகிர்வதும் முறையல்ல. நமது ஊடகங்களும் செய்தி வாசிப்பவர்களை உணர்ச்சி வசப்பட வைக்க வேண்டும் என ஒரு யுக்தியாக தான் செய்கிறது. அப்போது தானே வாசகர்களை ஈர்க்க முடியும். செய்திகளை சுருக்கமாகவும் சர்ச்சையாகும் விதத்திலும் தலைப்புகள் கொடுத்து நம்மை ஈர்க்கிறது.

உண்மையில் நடந்த சம்பவம் என்ன ? ஏற்கனவே அறிமுகமும், முன்பகையும், வேறொரு வழக்கும் கொண்ட இருவேறு குடும்பங்களுக்குள் ஏற்பட்ட தகராறு இது. சம்பவம் நடந்தது 2021. மஹாதேவன் என்பவரது மனைவி ஆஷாதேவி, குழந்தைகளுக்கான பாலியல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனு ஒன்றை 2022 ஜனவரி 12 அன்று தாக்கல் செய்தார்.

2021 நவம்பர் 10 அன்று, மாலை 5 மணியளவில், தாயும் மகளும் சாலையில் நடந்து சென்ற போது, அந்த வழியாக வந்த பவன், ஆகாஷ் இருவரும். சாலை மிகவும் மோசமாக சேறும் சகதியுமாக இருப்பதால சிறுமியை மட்டும் தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக கூற, ஆஷாதேவி ஒப்புக் கொள்கிறார். ஆனால், பவன் மற்றும் ஆகாஷ், ஒரு பாலம் அருகே வாகனத்தை நிறுத்தி, சிறுமியின் மார்பகங்களை தொட்டதாகவும், ஆகாஷ் சிறுமியை கீழே இழுக்க முயன்று சிறுமியின் ஆடை கயிற்றை அவிழ்க்க முயன்றதாக தெரிகிறது. அப்போது அந்த வழியாக சென்ற இருவர் சத்தம் கேட்டு வந்தனர். டிராக்டர் ஓட்டிக்கொண்டிருந்த சதீஷ் மற்றும் புரே என்ற இருநபர்கள் வந்து தலையிட, குற்றவாளிகள் நாட்டுப்பட்டாக்கியுடன் மிரட்டி தப்பித்து சென்றதகா தெரிகிறது. பின்னர் ஆஷாதேவி பவனின் தந்தை அஷோக்கை அவரது வீட்டிற்கு சென்று இது குறித்து கேட்டபோது, அவர் ஆஷாதேவி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. போலீசில் தரப்பில் புகார் பதிவு செய்ய மறுத்ததால், ரெண்டும் மாதம் கழித்து ஆஷாதேவி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் என தெரிகிறது. இதில் பாலியல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இருவர் பவன் மற்றும் ஆகாஷ். மேலும் ஆஷாதேவி பவனின் தந்தை அஷோக்கிடம் முறையிட்ட போது அவரும் மிரட்டியதால் அவரது பெயரும் சேர்த்தே புகார் மனு கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் வழக்கு பதிவானது.

இந்த மனுவை பெற்ற போக்சோ சிறப்பு நீதிமன்றம் , ஆஷாதேவி மற்றும் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியாளர் சதீஷின் வாக்குமூலங்களை பதிவு செய்தது. 2023 ஜூன் 23 அன்று, ஆகாஷ் மற்றும் பவன் மீது சம்மன் அனுப்பியது, அதில் பவன் மற்றும் ஆகாஷ் மீது பாலியல் வழக்கும், அஷோக் மீது அவமரியாதை செய்ததாகவும், வன்முறையை தூண்டும் விதமாக கடிந்து பேசியதாகவும், மிரட்டியதாகவும் வழக்கு பதிவானது. இதை எதிர்த்து குற்றவாளிகள் உயர் நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்தனர்.

மனுவை விசாரித்த பிறகு இந்த வழக்கில் நீதிபதி சொல்வது என்ன ? சம்மன் திருத்தி எழுதும் போது கற்பழிப்பு முயற்சி என குறிப்பட வேண்டாம். ஏற்கனவே அறிமுகமும் முன்பகையும் கொண்ட இரு வேறு குடும்ப தகராறு இது. பவன் ஆகாஷ் இருவரும் அந்த குழந்தையிடம் அத்து மீறியது உண்மை. அந்த 11 வயது குழந்தையின் மார்பகங்களை தொட்டதும் கட்டாயப்படுத்தி தூக்கி சென்ற போத ஆடை கிழியும் அளவுக்கு பிடித்து இழுத்ததும் தான் இதில் நடந்த பாலியல் குற்றாமாகும். இதை பாலியல் குற்றங்களில் கற்பழிப்பு முயற்சி (attempt to r**e) என பதிவு செய்ய கூடாது. பாலியல் குற்றங்களில் "மானபங்கம் செய்யும் முயற்சி" (Outraging modesty) என சம்மன் திருத்தி எழுதப்பட வேண்டும் மாவட்ட நீதிமன்றத்திற்கு உயர்நீதமன்ற நீதிபதி ராம் மனோஹர் நாராயண மிஸ்ரா அறிவுறுத்தி ஆணை பிறப்பித்து இருக்கிறார்.

இதை மேலோட்டமாக நாம் ஒரு வரி செய்தியாக வாசித்து பார்த்தால், குழந்தையின் மார்பகங்களை தொட்டதும், ஆடையை கிழித்ததும் கற்பழிக்க நடந்த முயற்சியல்ல என குழந்தையை பாலியல் ரீதியாக தொட்ட அயோக்கியர்களுக்கு சாதகமாக நீதிபதி தவறாக தீர்ப்பளித்து இருக்கிறார் என தவறாக புரிந்து கொள்ளும் அளவுக்கு தான் இந்த ஒரு வரி செய்தி இருக்கிறது. அதனால் அதிகம் விமர்சிக்கப்படுகிறது.

5 ஆண்டுகளில் 1095 பேர் வன்கொடுமையால் பாதிப்பு. நம் சமூகத்தில் சாதிய வன்கொடுமை துடைத்து எறியப்பட வேண்டிய கழிவு. ஆனால் இதி...
18/03/2025

5 ஆண்டுகளில் 1095 பேர் வன்கொடுமையால் பாதிப்பு. நம் சமூகத்தில் சாதிய வன்கொடுமை துடைத்து எறியப்பட வேண்டிய கழிவு. ஆனால் இதில் எத்தனை வழக்குகள் பழிவாங்கும் நோக்கத்துடன் பதிவு செய்யப்பட்டதோ ! அந்த ஆண்டவனுக்கு தான் வெளிச்சம். குற்றவாளி சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்தாலும் ஒரு நிரபராதி செய்யாத குற்றத்திற்காக தவறுதலாக தண்டிக்கப்பட கூடாது.

17/03/2025

ஜாதி, தீண்டாமைக்கு எதிராகவே நம் தமிழ் நாட்டில் வெள்ளையர்களின் கிறிஸ்தவ மதம் வளர்ந்தது என சொல்லப்படுவதில் துளி அளவுகூட உண்மை இல்லை. இங்கு ஜாதி, தீண்டாமையை பயன்படுத்திக் கொண்டு மிஷனரிகள் மதத்தை வளர்த்தனர் என்பதே உண்மை. ஹிந்து மதத்தில் பிறப்பின் அடிப்படையில் ஜாதி, தீண்டாமை என சொல்லி வாதம் செய்பவர்கள் உண்டு. அதுபோலவே அங்கும் பிறப்பின் அடிப்படையில் நிறவெறி வேற்றுமை, தீண்டாமை இருந்தது. அடிமை கறுப்பர்கள் தங்கள் எஜமானர்களை எவ்வாறு போற்றி மதிக்க வேண்டும் என பைபிள் வசனங்களை சொல்லி ஏமாற்றியவர்கள் தான் வெள்ளையர்கள். அங்கெல்லாம் கறுப்பர்கள் மதம் மாறி தான் தீண்டாமை ஒழிந்ததா? இல்லை. நிறவெறி, தீண்டாமை காலப்போக்கில் ஒளிந்து கொண்டது. இங்கு மிஷனரிகள் மதம் வளர்த்ததால் ஜாதி ஒழிந்ததா? இல்லை. கிறிஸ்தவ மதத்திலும் ஜாதி செழிப்பாக வளர்ந்து கொண்டிருக்கிறது. மதம் மாறிய பிறகு தன் ஜாதியை ஒளித்து, ஜாதியை ஒழிக்க வேண்டும் என நடிப்பார்கள். வெள்ளையர்கள் தான் நமக்கு கல்வி, சுகாதாரம், நாகரிகம் கற்றுக் கொடுத்தது என்பார்கள். அது, உலக உருண்டையை விட பெரிய உருட்டு.

It is often claimed that Christianity spread in Tamil Nadu as a response to caste and untouchability, but there isn’t even an ounce of truth in that. The reality is, missionaries exploited caste and untouchability to spread their religion here. There are those who argue that Hinduism promotes caste and untouchability based on birth. But similarly, even in Christianity, there existed racial discrimination and untouchability based on birth. The whites used Bible verses to deceive Black slaves, teaching them how to obediently serve their masters. Did untouchability vanish there just because Black people converted to another religion? No! Racial discrimination and untouchability merely went underground over time. Did caste vanish here because missionaries spread Christianity? No! Caste continues to thrive here as well. After conversion, they claim to have eradicated caste and call for caste abolition. In reality, they’ve just hidden caste under a different name. They say the whites brought us education, healthcare, and civilization. That claim is a bigger lie than the size of the globe itself !

15/03/2025
13/03/2025

ஆபாசமாக பேசியே பழகி போனவர்கள் திமுகக்காரர்கள். இவர்கள் தமிழை, தமிழர்களை பேசாத பேச்சா ! திருமதி இந்திரா காந்தி, செல்வி ஜெயலலிதா அம்மாவை பேசாத பேச்சா ! இப்போது வடஇந்தியர்களை குறிப்பிட்டு பிரிவினை பேசி தங்கள் வன்மத்தை காட்டி இருக்கிறார்கள் போல. இது UNESCO பெயரில் போலியாக விருது கொடுத்து நீங்கள் மக்களை ஏமாற்றிய காலம் இல்லை என்பதை திமுகவினர் உணர வேண்டும். உங்கள் பேச்சுக்கள் இந்திய அளவில் பரவும். உங்கள் தாடிக்கார தந்தை வழியில் நீங்கள் அநாகரிகமாக பேசுவது எங்களுக்கு பழகிவிட்டது, ஆனால உங்களை போன்றவர்களால் நாகரீகமும் பண்பாடும் கற்றறிந்த, "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என கணியன் பூங்குன்றனார் வழியில் வாழும் உண்மையான தமிழர்களுக்கு தான் தேசிய அளவில் அவப்பெயர் உருவாகும்.

13/03/2025

அந்த பய சீக்கிரம் உடம்ப தேத்தி வீட்டுக்கு போட்டும். சாமிய வேண்டிப்போம். இந்த விளம்பரம் தேடுற கூத்தாடிக, துண்டு துக்கடா சமூகநீதி போராளி லெட்டர் பேடுகள் எல்லாம் அவன் வீட்டுக்கு போய் அவன்கூட ஃபோட்டோ எடுக்க, ஈவ்டீசிங் செஞ்சவன போராளி ஆக்க தயாரா இருங்கடே... அந்த ஒரு கோடி, அரசு வேலை, மேற்படிப்புக்கான செலவு... அதெல்லாம் கேக்கனும் ஞாபகம் இருக்கட்டும்.

11 வயதில் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகி தப்பித்து இருக்கிறேன். அது ஒரு கத்தோலிக்க கிறித்தவ திருச்சபை நிர்வாகத்துக்கு உட்பட...
12/03/2025

11 வயதில் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகி தப்பித்து இருக்கிறேன். அது ஒரு கத்தோலிக்க கிறித்தவ திருச்சபை நிர்வாகத்துக்கு உட்பட்ட ஆங்கில வழி தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி. எனக்கு பாலியல் சீண்டல் கொடுக்க முயன்றவர் எனது ஆசிரியர் அல்ல. அந்த நிர்வாகத்தில் பயிற்சி எடுத்துவந்த மதபோதகர். கத்தோலிக்க திருச்சபை போதகர்களை பொதுவாக ஃபாதர் என்பார்கள். ஃபாதராக பைபிள் கல்லூரியில் பயிற்சி எடுப்பவர்களை ப்ரதர் என்பார்கள். அப்படி ஒரு ப்ரதர் செய்த வேலை தான் அது. நேற்றைய தினம் POCSO வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள் 23 பேரை ஒழுங்கீன நடவடிக்கை எனும் பெயரில் வழக்குகள் நிலுவையில் இருக்கும் போதே பணி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்து இருக்கிறார் பள்ளி கல்வி துறை மந்திரி அன்பில் மகேஷ். பாதிக்கப்பட்டவனாக இதை வரவேற்கிறேன். ஆனால் சட்டம் தெரிந்தவனாக ஏற்க முடியவில்லை. சட்ட ரீதியாக ஒரு குற்றத்திற்கு ஒரு முறை தானே தண்டனை அனுபவிக்க வேண்டும். ஒரு வேளை வழக்கின் தீர்ப்பு இவர்களில் சிலரை குற்றமற்றவர் என கூறினால் ? செய்யாத தவறுக்கு பணி நீக்கம் செய்யப்பட்டது போல இருக்குமே. வழக்கு நிலுவையில் இருக்கும் போது இந்த நடவடிக்கை சரியா ! தவறா ! பள்ளிகளில் பாலியல் குற்றங்களை தவிர்க்க என்ன மாதிரியான நடவடிக்கைகள் தேவை. விவாதிப்போம்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் குற்றச்செயல் புரிந்தவர்களுக்கு தண்டனையும் வழங்க நீதிமன்றம் இருக்கு. சட்டம் தன் கடமையை ச...
12/03/2025

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் குற்றச்செயல் புரிந்தவர்களுக்கு தண்டனையும் வழங்க நீதிமன்றம் இருக்கு. சட்டம் தன் கடமையை செய்யும். ஆனால் மக்கள் மன்றத்தில் ஒரு சம்பவத்தை எடுத்து கூற வேண்டிய நம் ஊடகங்கள் இது போன்ற சம்பவங்களில் எப்போதுமே பாதிக்கப்பட்டவரின் சாதியை வைத்து தான் செய்தியை வாசிப்பவர்களுக்கு பாதிக்கப்பட்டவர் மீது இரக்கம் வரும் விதமாக கொடுக்க வேண்டும் என தீர்மானிக்கும் போல. தங்கையை ஈவ்டீசிங் செய்ததாகவும், கபடி விளையாட்டில் மோதல் காரணமாகவும் என் ரெண்டு விதமான காரணங்கள் இந்த சம்பவத்தில் சொல்லப்படுகிறது. ஊடக தர்மத்தின் படி பாதிக்கப்பட்டவர் தலித் என்றால், கபடி விளையாட்டில் சாதி மோதல், விளையாட்டில் சாதி தீண்டாமை, கபடி விளையாட்டில் கூட வாய்ப்பு மறுக்கப்படுகிறது. வாய்ப்புகளை தேடி கதவை முட்டி மோதி திறக்க வேண்டிய நிலையில் வாழும் அப்பாவி "தலித் சிறுவன்" என்பது போல பொது மக்கள் பேசும் விதமாக செய்திகள் வெளியிட வேண்டும். அதுவே பாதிக்கப்பட்டவர் தலித் அல்லாத இடைநிலை சாதியாக இருந்து கொலை முயற்சி செய்தவர்கள் சாதி தலித்தாக இருந்தால், “தங்கையின் மானம் காக்க ஈவ்டீசிங் செய்த சிறுவனை கொலை செய்ய முயன்ற சகோதரர்கள்” என வீரர்கள் வரிசையில் வந்திருப்பார்கள் கொலை செய்ய முயன்ற குற்றவாளிகள். செய்தியை வாசிக்கும் மக்களும் “பின்ன யாரா இருந்தா என்ன? நம்ம வீட்டு பொம்பள பிள்ளைய சீண்டுனா நாம சும்மா இருப்போமா?” என பேசுவது போல வேறு விதமாக வெளி வந்திருக்கும் இதே செய்தி. இந்த ஈவ்டீசிங் விவகாரம் ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டு என சில ஊடகங்கள் பதிவு செய்கிறது. ஏற்கனவே கபடி விளையாட்டில் இவர்களுக்குள் முன்பகை இருந்ததாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலை செய்ய துணிந்த எந்த ஆம்பளையும் தன்னால் முடிந்தவரை தன் வீட்டு பெண்களை எந்த வழக்கிலும் சேர்க்க விரும்ப மாட்டான். அதையும் மீறி இந்த ஈவ்டீசிங் விவகாரம் வெளியே வருகிறது.

Address

Mullana

Alerts

Be the first to know and let us send you an email when Jeyankondar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jeyankondar:

Share