Jeyankondar

Jeyankondar An archivist pursuing International Law, deeply exploring law, history and anthropology. Passionate about conservative insights, research, and archival truth.

sharing informed perspectives with clarity, context and depth. I’m a Tamil-speaking Indian who loves law, history, and the stories that shape our world. A lawyer by profession and a history enthusiast at heart, I’m rooted in tradition yet always curious. I enjoy good books, great food, and meaningful conversations—and try to live with depth, curiosity, and purpose.

எனது அருமை சகோதரர், மூத்த வழக்கறிஞர் Thangapandian Muthumari அவர்களின் பதிவை அடிப்படையாக கொண்டு இன்றைய தினமலர் நாளிதழில்...
10/12/2025

எனது அருமை சகோதரர், மூத்த வழக்கறிஞர் Thangapandian Muthumari அவர்களின் பதிவை அடிப்படையாக கொண்டு இன்றைய தினமலர் நாளிதழில் வெளிவந்துள்ள கட்டுரை.

 திருப்பரங்குன்றம் தீபத் தூண் விவகாரத்தில் அது அளவைக் கல் என்று சொல்வோரின் அறிவுக்கு சில விசயங்களை முன் வைக்க விரும்புகி...
09/12/2025



திருப்பரங்குன்றம் தீபத் தூண் விவகாரத்தில் அது அளவைக் கல் என்று சொல்வோரின் அறிவுக்கு சில விசயங்களை முன் வைக்க விரும்புகிறேன்..

பெரும்பாலும் இந்த புகைப்படம் வேறு யாரிடமும் இருக்க வாய்ப்பு இல்லை. இந்த புகைப்படம் தீபத் தூண் விவகாரத்தில் மனுதாரரின் வழக்கறிஞ சகோதரர் திரு. அருண் சுவாமிநாதன் அவர்களே எடுத்த புகைப்படம். தீபத் தூணின் உச்சி பகுதி.

இது அளவைக் கல் என்று சொல்வோர் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், நாம் அனைவரும் நினைப்பது போல இது ஒற்றைக் கல்லினால் ஆன தூண் இல்லை.

INTER LOCK தொழில் நுட்பத்தில் அந்தக் காலத்திலேயே உருவாக்கப் பட்ட தூணாக தெரிகிறது. அதாவது தீபத் தூண் என்றால் (தற்போது உள்ள தூண் சப்பட்டையாக உள்ள காரணத்தினால்) இந்த தூணில் எப்படி தீபம் ஏற்றுவார்கள் என்று ஏளனம் செய்கிறார்கள்.

உண்மை என்னவாக இருக்குமெனில் இந்த உச்சிக்கு மேலே ஒரு கொப்பறை இருந்திருக்க வேண்டும். அந்தக் கொப்பறையை இந்தப் பகுதியில் இணைக்கும் போது உச்சியில் லாக் ஆகி நிற்கும் வகையிலான அமைப்பு. பிற்காலத்தில் அது அகற்றப் பட்டிருக்க வேண்டும். அதன் எச்சம் தான் தற்போதைய மிச்சத் தூண்.

நில அளவை கல் என்றால் கோவில் தூண்களில் இருப்பது போன்று சிற்ப வேலைப்பாடுகள் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. சிதிலம் அடைந்த இந்தத் தூணில் சிற்ப வேலைப்பாடுகள் எச்சமாக இருப்பது காண முடிகிறது.

மேலும் மிக முக்கியமான ஆதாரமாக இது அளவைக் கல் என்போர் முன் வைக்கும் ஆதாரம் என்னவெனில், GTS அளவை குறிப்பேடுகளில் திருப்பரங்குன்றம் மலையை GTS ஸ்டேசன் என்று குறிக்கப் பட்டுள்ளது குறிக்கப் பட்டுள்ளது என்றே குதிக்கிறார்கள்.

தெளிவாக சொல்கிறேன். திருப்பரங்குன்றம் மலையும் ஒரு அளவைப் புள்ளியாக இருந்து அளவீடு செய்யப்பட்டிருக்கிறது. உண்மைதான் ஆனால் இந்த தீபத் தூண் தான் அந்த அளவைக் கல் என்று சொல்வது அபத்தம். ஏனெனில் GTS அளவைக் கற்கள் உருவத்தில் எப்படி இருக்கும் என்பதை கடந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தேன். GTS அளவைக் கற்கள் அனைத்தும் ஒரே FONT பயன்படுத்தப் பட்டு, அந்த கல் அமைந்துள்ள ரேகை எண்கள் குறிக்கப்பட்டு விபரங்களைத் தாங்கிய கற்களாக உள்ளன.

ஆனால் தீபத் தூண் என்பது பார்த்த மாத்திரத்தில் தீபத் தூணாக தெரியும் வகையிலேயே அமைக்கப் பட்டுள்ளன.

GTS அளவை குறிப்புகளை தவிர இந்த தூண் அளவைக் கல் என்பதை உறுதிப் படுத்த வருவாய்த்துறை ஆவணங்களில் எதுவுமே இல்லை என்பது தான் யதார்த்தம்.

உதாரணமாக திருப்பரங்குன்றம் மலையில் தர்ஹா இருப்பதை GTS அளவை ஆவணங்களும் உறுதிப் படுத்துகின்றன. கீழே கோயில் இருப்பதையும் அதே ஆவணம் உறுதிப் படுத்துகிறது. இந்த தூண் அளவைக் கல் என்றால் இதே தகவல் வருவாய் துறை ஆவணங்களிலும் காணப்பட வேண்டும் தானே?

வருவாய்த்துறை ஆவணங்களில் தர்ஹா குறிக்கப் படுகிறது. கோயில் குறிக்கப் படுகிறது. ஆனால் அளவைக் கல் குறிக்கப் படவில்லையே ஏன்?

வருவாய் துறை ஆவணங்களில் இந்த தூண் அளவைக் கல்லாக காட்டப்பட்டு இருந்தால் அரசுக்கு இவ்வளவு சிரமம் தேவையில்லை. இது அளவைக் கல் என்று ஆணித் தரமாக உறுதி செய்து விட்டு போயிருப்பார்கள். ஆனால் அரசு அந்த விஷயத்தில் அமைதி காக்கிறது என்றால் என்னவெனில் இது அளவைக் கல் என்று ஒரு விபரம் இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசின் ஆவணங்களில் இல்லை என்று பொருள்.

இது தொடர்பாக இன்னுமொரு ஆதாரத்துடன் அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

- Thangapandian Muthumari

 திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூண் விவகாரம் தான்  சமூக வலைதளம் முழுவதும் பேசு பொருளாக உள்ளது. உண்மையில் சமூக வலைத...
08/12/2025



திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூண் விவகாரம் தான் சமூக வலைதளம் முழுவதும் பேசு பொருளாக உள்ளது.

உண்மையில் சமூக வலைதள பதிவுகளுக்கு நேரமே இல்லை என்ற போதிலும் இதை எழுத வேண்டிய சமூக பொறுப்பாக கருதுகிறேன். ஏனெனில் அந்த அளவுக்கு பொய்யான விசயங்களை தமிழ்நாடு அரசு கட்டமைக்க முயற்சி செய்கிறது. ஆதலால் இந்தப் பதிவு.

திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமாக ஏற்றும் உச்சிப்பிள்ளையார் கோவில் முன்பாக உள்ள தூணில் அல்லாமல் மலையின் உச்சியில் உள்ள பாரம்பரியமிக்க தீபத் தூணில் இந்த ஆண்டு தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையிலும் மாவட்ட நிர்வாகமும் கோவில் நிர்வாகமும் உயர்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற மறுக்கிறது.

ஒரு உயர் நீதிமன்ற உத்தரவினை மாநில அரசே மதிக்காமல் இருப்பதை இங்கு தான் பார்க்க முடிகிறது. ஒரு அரசே நீதிமன்ற உத்தரவை மதிக்காவிட்டால் சாமானியர்களின் நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை எதிர்காலத்தில் எந்த அளவுக்கு கேள்விக்குறியாக வாய்ப்புள்ளது என்பதற்கு இந்த விவகாரம் ஒரு தவறான முன்னுதாரணம் ஆக வாய்ப்பு அதிகம்.

சரி விஷயத்திற்கு வருவோம் உயர்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற மறுப்பதற்கு கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் சொல்லப்படும் காரணம் என்னவெனில், அது தீபத் துணை இல்லை . நில அளவை கல் என்பதாகும்.

நில அளவைக் கல் என்று பேசுவோர் சொல்லும் அந்த அளவையானது மகா முக்கோணவியல் அளவீடு (GREAT TRIGONAMATRIC SURVEY) முறை ஆகும். அந்த அளவீட்டில் பயன்படுத்தப் பட்ட அளவைக் கல்லின் எச்சம் தான் திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் உள்ள கல். அது தீபத் தூண் இல்லை என்பது கோவில் நிர்வாகத்தின் முன் வைப்பு.

எங்கோ, எவரோ, எழுதியதை, பேசியதை வைத்து அது அளவைக் கல் தான், தீபத் தூண் இல்லை என்று பேசுவோர் எவருமே GTS அளவைக் கல்லின் எச்சமாக மிச்சமிருக்கும் கல் தூணை கண்ணில் கானாதவர் என்றே அர்த்தம்.

முக்கோணவியல் அளவிட்டு முறையில் அளவீடு செய்யப்பட்ட அளவைக் கல்களின் எச்சம் தமிழ்நாட்டில் சென்னையை தவிர வேறு எங்குமே இல்லை என்பது அளவியல் துறையின் தகவல்.

திருப்பரங்குன்றம் மலையானது முக்கோணவியல் அறிவியலில் அளவீடு செய்யப்பட்ட ஒரு புள்ளி என்ற போதிலும் அந்த அளவீட்டில் பயன்படுத்தப் பட்ட அளவைக் கல்தான் மலை உச்சியில் இருக்கும் கல் என்பது சுத்தத் திராவிடத் தனமான பேச்சு.

உண்மையில் சென்னையில் இருந்து தான் மேற்படி அளவீட்டு முறையில் இந்தியாவின் நிலப்பகுதி முழுவதும் அளவீடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் செயின்ட் தாமஸ் மவுண்ட் மலையிலும், மற்றும் பெங்களூர் பகுதியை சுற்றி சில இடங்களிலும் மட்டுமே GTS அளவை யில் பயன்படுத்தப் பட்ட கற்களின் எச்சங்கள் இன்னும் சில உள்ளன.

பதிவில் செய்யப்பட்டுள்ள படங்கள்தான் மேற்படி GTS நில அளவை கற்கள். இந்த கற்களும் திருப்பரங்குன்றம் மலையில் தீபத்துவம் என கோரிக்கை வைக்கப் பட்டுள்ள தீபத் தூணும் ஒன்றா? திருப்பரங்குன்றம் மலையின் தீபத்துவம் படம் முதல் கமெண்டில் உள்ளது. ஒப்பீடு செய்து கொள்ளவும்.

உண்மையான GTS அளவைக் கல்லில் ஒரே FONT உடன் GTS என்ற குறியீடும், அந்த கல்லைப் பற்றிய விபரக் குறிப்பும் காணப்படுகிறது. ஆனால் திருப்பரங்குன்றம் தீபத் தூணில் ஏதாவது தென்படுகிறதா?

திருப்பரங்குன்றம் மலையின் தீபத் தூணைப் போன்று வேறு எங்காவது இதே அமைப்பில் GTS அளவைக் கல்லைக் காட்டுங்கள் பார்க்கலாம்.

இது பற்றிய விபரத்துடன், திருப்பரங்குன்றம் தீபத் தூண் விவகாரத்தின் முழு வரலாறை விரைவில் ஒரு வீடியோவாக வெளியிட முயற்சி செய்கிறேன்.

Thangapandian Muthumari

08/12/2025

In a world where hustle culture has pushed young Indians to the brink, Supriya Sule’s Right to Disconnect Bill, 2025 is a breath of fresh air. For the first time, a law recognises that mental health matters as much as productivity. The Bill protects employees from being penalised for ignoring after-hours calls and messages, ensures overtime pay when they do respond, and even proposes digital-detox centres to curb burnout. At a time when long work hours are glorified, this move brings much-needed balance, compassion and dignity into India’s work culture. A progressive step towards healthier, happier workplaces.

The Tamil Renaissance is a powerful and insightful work that speaks directly to anyone who cares about Tamil identity, h...
01/12/2025

The Tamil Renaissance is a powerful and insightful work that speaks directly to anyone who cares about Tamil identity, history, and our collective future. Hari Chinnathambiar’s analysis is both accessible and profound, weaving together themes of sovereignty, demographic strength, cultural continuity, and global Tamil resilience with clarity and conviction.

The book reminds us that the Tamil spirit is not lost—only waiting to be reawakened. It calls on young Tamils to rediscover their civilizational confidence and rise with purpose in a rapidly changing world. With its blend of historical depth and contemporary relevance, it offers genuine inspiration and direction.

A compelling read that every Tamil youth should embrace—a roadmap for those who believe in the resurgence of a strong, self-assured Tamil future.

— Vijay Pandiadevar

The Tamil Renaissance is a powerful examination of a civilisation that has survived invasions, political upheavals, displacement, and deliberate erasure—yet continues to rise across the world with resilience and dignity. This book brings together history, geopolitics, economics, culture, and mode....

30/11/2025

சில வருடங்களுக்கு முன்பு RedPix யூட்யூப் சேனலில் பேசிய திருமுருகன் காந்தி, புலித்தேவரிடம் பெரிய படைகள் இல்லை; “சுமார் 2500 சதுரடி வீடும் 50 அடியாட்களும் இருந்தாலே பெரிய விஷயம்” என்பது போலப் பேசியிருந்தார். எல்லாம் தெரிந்தது போலப் பேசுவது எளிது. அவரது வரலாற்ற வாசிப்பு அறிவு எந்த அளவு இருக்கும் என்பதற்கு கீழே உள்ள வரலாற்று குறிப்புகளை வாசித்தாலே உங்களுக்கு புரிந்துவிடும். புலித்தேவர் மாமன்னரா? 1756–56 காலகட்டத்தில் திருநெல்வேலி மேற்கு பாளையங்களையும் மதுரைக்கு வடக்கிருந்த பாளையங்களையும் ஒன்றிணைத்து, ஆற்காடு நவாப் மற்றும் ஆங்கிலேயர்களுக்கு எதிரான ஒரு பெரிய கூட்டணியை அமைத்தார். அந்த கூட்டணிக்கு தேவரே தலைமையேற்றபோது, அவருடைய கட்டளைக்குக் கீழ் சுமார் 25,000 படைவீரர்கள் இருந்தனர். இந்த படையினைக் கொண்டு, ஆற்காடு நவாபின் தளபதி அப்துல் ரஹீமைக் களத்தில் வீழ்த்தி, ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டையைக் கைப்பற்றினார். அது மட்டும் அல்ல, நவாப் மற்றும் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிரான போரில், மைசூர் படைகளை கூட்டணியில் சேர்த்துக்கொள்ள தூது அனுப்பியதோடு, 5,00,000 ரூபாய் வழங்கத் தயார் என அறிவித்திருந்தார். அன்றைய அந்த ஐந்து இலட்ச ரூபாயின் இன்றைய மதிப்பு, ChatGPT கணக்கீட்டின்படி, சுமார் 500 கோடி ஆகும். இது “ஜாதி பெருமை” அல்ல. மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் எங்கள் முன்னோர்கள் இழந்தது என்ன? எத்தனை உயிர்கள்? என்பதை திருமுருகன் காந்தி போன்றவர்கள் உணர்ந்து பேசவேண்டும்.

— வெற்றிவேல் வீரவேல்

கச்சதீவு விவகாரத்தில் அன்றைய காங்கிரஸ் அரசு செய்த தவறு என்ன ? இந்த தீவை இந்திய அரசு இலங்கையிடம் ஒப்படைக்கவோ, விற்பனை செய...
10/11/2025

கச்சதீவு விவகாரத்தில் அன்றைய காங்கிரஸ் அரசு செய்த தவறு என்ன ? இந்த தீவை இந்திய அரசு இலங்கையிடம் ஒப்படைக்கவோ, விற்பனை செய்யவோ, அன்பளிப்பாகவோ கொடுக்கவில்லை. எந்தவித அடிப்படை ஆவணங்களும் இல்லாத நிலையிலும் இலங்கை அரசு கச்சதீவை அவர்களது எல்லைக்குட்பட்டது என (Soverignty) உரிமை கோரி வந்தது.

இந்த விவகாரம் இந்திய பாராளுமன்ற சபையில் உறுப்பினர்களுடன் விவாதித்து ஒப்புதல் வழியாகவும் நிறைவேற்றப்படவில்லை. காரணம் அன்றைய காங்கிரஸ் அரசு கச்சதீவை இந்தியாவின் எல்லைக்குட்பட்ட பகுதியாகவே கருதவில்லையாம். ஆனால் இந்த தீவு இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களின் எல்லைக்குட்பட்ட வருவாய் கிராமம் என்பதை உறுதி செய்ய நம்மிடம் ஏராளமான ஆவணங்கள் இருந்தும் அவற்றை ஆய்வு செய்ய கூட நேரமில்லாமல் இந்திய பாராளுமன்ற ஒப்புதலே தேவை இல்லாதவாறு இலங்கை கோரிய உரிமையை இந்தியா அங்கீகரித்து 1974ல் Indo-Sri Lankan Maritime Boundary Agreement என ஒப்பந்தம் செய்து கொண்ட போது அந்த ஒப்பந்தத்தின் படி தமிழக மீனவர்கள் அந்த தீவை பயன்படுத்தி கொள்ளவும், அங்குள்ள St.Antony தேவாலயத்தில் நம் மக்கள் வழிபாடு செய்து கொள்ளவும் இந்தியர்களுக்கு உரிமை வேண்டுமென முடிவு செய்யப்பட்டது. ஆனால் 1976ல் Indo-Sri Lankan Maritime Boundary Agreement திருத்தம் செய்யப்பட்டு அதன் படியே நமக்கு வரலாற்று ரீதியாக இருந்த உரிமைகள் அனைத்தும் பறிபோனது இன்றைய மீனவர்கள் பிரச்சனைக்கும் அதுவே காரணமாக அமைந்தது. அதன் பிறகே தமிழக மீனவர்களை Trespassers என குற்றம் சுமத்தி இலங்கை கடற்படை நம் தமிழக மீனவர்களை கைது செய்தனர், படகுகளை கைப்பற்றினர், தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். இந்த ஒப்பந்தம் செய்துகொள்ள தமிழக அரசையும், தமிழக மீனவர்களின் கருத்துகளையும் கேட்கபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஐநா சபையில் பதிவு செய்யப்பட்ட இந்த ஒப்பந்தம் இந்தியா இலங்கை அரசுகள் இடையே விவாதிக்கப்பட்டு முடிவானது அதிகார்பூர்வமாக இந்திய இலங்கை நாடுகளுக்கிடையே UN treatyயாக வெளியானது இன்றளவும் அமலில் உள்ளது.

இந்தியா இந்த ஒப்பந்தத்தை தனிப்பட்ட முறையில் ரத்து செய்ய முடியாது. இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி மட்டுமே மறுபரிசீலனை அல்லது மறுநடைமுறை செய்ய முடியும். இந்த ஒப்பந்தம் தொடர்பாக கச்சதீவில் நம் மக்கள் இழந்த உரிமைகளை மீட்க இதுவரை முன்னாள் முதல்வர்களான கருணாநிதி, ஜெயலலிதா, பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை போன்றோர்ககளால் உச்சநீதிமன்றம் வழியாக அழுத்தம் கொடுக்கப்பட்டு வழக்குகள் உச்சநீதி மன்றத்தில் பல வருடங்களாக நிலுவையில் தான் உள்ளது. இதை தவிர வேறு வழிகள் இந்தியாவுக்கு இருந்தாலும் அதை செய்வதற்கு இதுவரை தயாராக இல்லை.

குறிப்பாக அண்ணன் சீமான் சொல்வது போல அவர் தமிழக முதல்வரானால் நெய்தல் படையை அமைப்பேன் கச்சதீவை இரவோடு இரவாக ஆக்கிரமிப்பு செய்தாவது மீட்பேன் என பேசுவதெல்லாம் வேடிக்கையின் உச்சம். அவ்வாறு செய்வது சாத்தியமே இல்லை. ஒரு கற்பனைக்கு செய்தார் என்றாலும் இந்தியா இலங்கை நாடுகளிடையே போரை தூண்டியதற்காக குற்றவாளியாக முழு பொறுப்பையும் அவரே ஏற்க வேண்டியதிருக்கும். மேலும் இதை காரணம் சொல்லி மாநில அரசை கலைத்து ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசுக்கு அதிகாரமும் உள்ளது. இதுவரை நாம் தமிழர் கட்சி சார்பாக கச்சதீவை மீட்க சட்ட ரீதியான நடவடிக்கைகள் எதுவும் இல்லை என்பது தான் உண்மை.

அட அதெல்லாம் விடுங்க முதலில், ஆயுதம் தாங்கிய ஒரு படையை அமைக்க ஒரு மாநில அரசுக்கு இந்தியாவில் அதிகாரமே இல்லை என்பது கூட தெரியாத அளவுக்கு மலிவான அரசியல் தலைவராக இருக்கிறாரா ? அல்லது அவரது பேச்சுக்களை நம்பும் மக்களை உணர்ச்சி வசப்பட செய்து கைதட்டு பெறுகிறாரா ! அந்த ஆண்டவனுக்கு தான் தெரியும்.

04/11/2025

வடசென்னை என்றாலே கொச்சையான தமிழும், போதைப்பொருள் கடத்தல் ரவுடிகளின் கூடாரமாகத் தவறாகக் காட்டக்கூடாதுன்னு சொல்ல தெரிஞ்ச புரட்சி பேசுற லூசு பயலுக்களுக்கு, தென்மாவட்டத்தை ஒட்டுமொத்தமாகத் தவறாகச் சித்தரிக்கக்கூடாதுன்னு சொல்ல வாய் வராது.

கதைகளம் சென்னையாக இருந்தாலும், காதலுக்கு எதிரியாக சாதி பார்க்கும் அப்பாவாக ஒரு கதாபாத்திரம் தேவையா? உடனே சென்னையில் வசித்து வரும் தென்மாவட்டத்தை சேர்ந்த குடும்பத்தினரைப் போலத்தான் பெரும்பாலும் தமிழ் சினிமா இயக்குனர்கள் படமெடுக்குறாங்க. அதற்கென இவங்க பெரிதாக மெனக்கெடுவதில்லை ஒரு சில குறியீடுகள் போதும் — கிடா மீசை கிழவனுங்க, பாம்படம் தொங்கட்டம் அணியும் கிழவிகள். மேலும் அங்குள்ள வாழ்வியலை, சாதாரண பழக்கவழக்கங்களை, பண்பாடு, கலாச்சாரங்களை, ஏன் கிராமத்து சாமி பெயர்களைக் கூட ஏளனம் செய்யும் விதமாக நகைச்சுவை காட்சிகள் மூலம் தாழ்வு மனப்பான்மையை விதைக்க நினைக்கிற இவர்களின் தவறான சிந்தனை நமக்கு வெளிப்படையாகவே தெரிகிறது.

ஏதோ! நீங்கெல்லாம் சாதியே பார்க்காத யோக்கிய மயிரா சென்னையில் வாழ்ந்துட்டிருக்காங்க போல! அம்புட்டு நல்லவங்களா டா நீங்க எல்லாம்? நிச்சயமா இல்ல. சென்னையிலும் நடக்கும் உங்க சாதி ஒழிப்பு “காதோல்” திருமணங்களை விட அதிகமாக, ஹிந்துக்கள் அவனவன் சாதியில்தான் திருமணம் செய்றாங்க. கிறிஸ்தவர்களும் அவன் மதத்தில்தான் செய்றாங்க; இல்லனா அவர்கள் மதத்திற்கு மாறச் சொல்லி திருமணம் செய்றாங்க. இசுலாமியர்கள் — அவங்க “ஊதவே வேணாம்.”

பின்ன எதுக்கு ? எப்ப பாரு இந்த சினிமாக்கார பயலுக, மேற்கத்திய கலாச்சாரத்தை முற்றிலும் ஏற்க விரும்பாத, பழமை மாறாத, குறிப்பா ஆன்மீகத்திற்கு எதிரான உங்க அவுசாரிதனத்தை புரட்சின்னு நம்பாத எங்களை “சாதி வெறியனா” முத்திரை குத்தப் பாக்குறீங்க? கொலையில் முடிந்த ரெண்டு குடும்பம் சம்பந்தப்பட்ட சில காதல் விவகாரம் மட்டும் தான் உங்களுக்கெல்லாம் தெரியுது. ஆனா சுயநலமில்லாத, சாதி பேதம் இல்லாத நண்பர்களாக பழகுற ஆரோக்கியமான சூழல் தான் தெக்க எப்பவுமே இருந்திருக்கு.

சென்னை வாசிகள் வேலை செய்யுற இடத்துல கூட, எவ்ளோ நாசூக்காக உங்க சாதி பாசத்தை காட்டுவீங்கனு, எங்களுக்கு தெரியும் உங்க மனசாட்சிக்கும் தெரியும். உங்க கூறுகெட்ட லாஜிக்குப் படி, ஒரு கொலையில் பாதிக்கப்பட்டவர் தலித் சமுதாயமாக இருந்தால் மட்டுமே அது ஆணவக்கொலை; அதுவே கொலை செய்தவர் தலித்தாக இருந்தால் அது வெறும் கொலை. அரசியல், தொழில் ரீதியான கொலையோ அல்லது சாதி ரீதியான பழிக்கு பழி வாங்கும் கொலையோ — எல்லா கொலையும் ஆணவத்தின் வெளிப்பாடுதான் டா வெண்ணைங்களா! நீங்க பேசுற பெரியாரிய புரட்சிய Experiment'a செய்ய உங்க வீட்டு பொம்பளைங்களையே அனுமதிக்க முடியாத நீங்க, எடுக்குற புரட்சி படத்துல என்னத்தான் டா சொல்ல வரீங்க? பெத்த அப்பனுக்கு தெரியாம, புருசன் இருக்கும் போதே காதலனுடன் பெத்துக்கிட்ட ஒரு குழந்தைய — அதாவது illegitimate child-a — குறைந்தபட்ச மானம், ரோஷம், கோவம் கூட இல்லாம, அந்த அப்பங்காரன் தன்னோட வாரிசா ஏத்துக்கனுமாம், திருந்தனுமாம். என்ன கண்றாவி புரட்சிடா இது! “Baadu” என்கிற மெட்ராஸ் பாஷை வார்த்தைக்கு இனிமேல் “Dude” என ஆங்கிலத்தில் அர்த்தம் கொள்ளலாம்.

திலகர் படத்துல நம்ம போஸ் பாண்டி' ய விட வில்லன் வயசுல மூத்தவர் ஆனா அவர போஸ் வா'ல போ'ல னு திருநெல்வேலி slang'ல பேசுற மாதிர...
04/11/2025

திலகர் படத்துல நம்ம போஸ் பாண்டி' ய விட வில்லன் வயசுல மூத்தவர் ஆனா அவர போஸ் வா'ல போ'ல னு திருநெல்வேலி slang'ல பேசுற மாதிரி வசனம் எழுதுனவன் யாருனு மட்டும் சொல்லுங்க Compromise'a போயிடலாம்.

Address

Mullana

Alerts

Be the first to know and let us send you an email when Jeyankondar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jeyankondar:

Share