01/08/2026
கி.பி. 1483-ஆம் ஆண்டில் “ஜமீன்தார்” என்ற சொல் நடைமுறையில் இல்லை. கி.பி. 1800-களில், பிற்காலப் பாண்டியர் வழியில் வந்த வம்சத்தினர் ஜமீன்தார் என்ற நிலையில் சிற்றரசுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்தனர். சொக்கம்பட்டி - வடகரை ஆதிக்கம் எனும் இந்த பாண்டிய வம்சத்தை சேர்ந்த மூன்றாம் பட்டம் "காளத்தியப் பாண்டியன்" என்பவர் தென்காசியைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த பிற்காலப் பாண்டியர்கள் வாழ்ந்த சமகாலத்திலேயே "பாண்டியன்" என கல்வெட்டுகளில் வரும் இவர் யார் ?
இவர், பிற்கால சொக்கம்பட்டி ஜமீன் வம்சத்தின் நேரடி முன்னோர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். மேலும், தென்காசி பாண்டியரின் உறவினரும் சிற்றரசுகளில் சொக்கம்பட்டி முதன்மையானதாக விளங்கியதாலும், இவர் சொக்கம்பட்டி ஜமீன் வம்சத்தின் மூன்றாம் பட்டத்து அரசர் என்று கல்வெட்டின் விளக்கத்தில் குறிப்பிடப்படுகிறார். ஆனால், கி.பி. 1483-ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டில் “ஜமீன்தார்” என்ற சொல் எங்கும் குறிப்பிடப்படவில்லை. பாண்டியன் என்றே குறிப்பிடப்படுகிறார்.
குறிப்பு - திருகுற்றாலத் தலவரலாறு