Tinnevelly Chronicles

Tinnevelly Chronicles Stories of people, land, and sovereignty

கி.பி. 1483-ஆம் ஆண்டில் “ஜமீன்தார்” என்ற சொல் நடைமுறையில் இல்லை. கி.பி. 1800-களில், பிற்காலப் பாண்டியர் வழியில் வந்த வம்...
01/08/2026

கி.பி. 1483-ஆம் ஆண்டில் “ஜமீன்தார்” என்ற சொல் நடைமுறையில் இல்லை. கி.பி. 1800-களில், பிற்காலப் பாண்டியர் வழியில் வந்த வம்சத்தினர் ஜமீன்தார் என்ற நிலையில் சிற்றரசுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்தனர். சொக்கம்பட்டி - வடகரை ஆதிக்கம் எனும் இந்த பாண்டிய வம்சத்தை சேர்ந்த மூன்றாம் பட்டம் "காளத்தியப் பாண்டியன்" என்பவர் தென்காசியைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த பிற்காலப் பாண்டியர்கள் வாழ்ந்த சமகாலத்திலேயே "பாண்டியன்" என கல்வெட்டுகளில் வரும் இவர் யார் ?

இவர், பிற்கால சொக்கம்பட்டி ஜமீன் வம்சத்தின் நேரடி முன்னோர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். மேலும், தென்காசி பாண்டியரின் உறவினரும் சிற்றரசுகளில் சொக்கம்பட்டி முதன்மையானதாக விளங்கியதாலும், இவர் சொக்கம்பட்டி ஜமீன் வம்சத்தின் மூன்றாம் பட்டத்து அரசர் என்று கல்வெட்டின் விளக்கத்தில் குறிப்பிடப்படுகிறார். ஆனால், கி.பி. 1483-ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டில் “ஜமீன்தார்” என்ற சொல் எங்கும் குறிப்பிடப்படவில்லை. பாண்டியன் என்றே குறிப்பிடப்படுகிறார்.

குறிப்பு - திருகுற்றாலத் தலவரலாறு

எந்த ஒரு குறிப்பிட்ட இனத்தையும் மானுடவியல் ரீதியாக ஆய்வுக்கு உட்படுத்துவதற்கு சில அடிப்படை விதிகள் தவிர்க்க முடியாதவையாக...
29/07/2026

எந்த ஒரு குறிப்பிட்ட இனத்தையும் மானுடவியல் ரீதியாக ஆய்வுக்கு உட்படுத்துவதற்கு சில அடிப்படை விதிகள் தவிர்க்க முடியாதவையாக அறிஞர்களால் கருதப்படுகின்றன. அந்த அடிப்படை விதிகளின் அடிப்படையில், கொண்டையங்கோட்டை மறவர் இனத்தை மானுடவியல் ரீதியாக ஆய்வு செய்ய அறிஞர்கள் தேர்ந்தெடுத்த பகுதி அன்றைய ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டமே ஆகும். இந்த இனத்தின் தோற்றம், மரபு, பூர்வீகமாக வாழும் பகுதிகள், தனித்துவமான வாழ்வியல் கூறுகள், மொழி, உறவுமுறை மற்றும் குடும்ப அமைப்பு, கிளை மற்றும் கொத்து முறைகள், வாரிசுரிமை, அகமண முறை, திருமண விதிகள், உறவுத் தொடர்புகள், சமயம் மற்றும் நம்பிக்கைகள், தெய்வங்கள், சடங்குகள், வழிபாட்டு முறைகள், பண்பாடு, உணவு, உடை, விழாக்கள், பழக்கவழக்கங்கள், ஆயுதங்கள், உயிரியல், உடற்கூறு அம்சங்கள் மற்றும் உடல் அளவீடுகள் உள்ளிட்ட அனைத்தையும் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே Royal Anthropological Institute of Great Britain and Ireland நிறுவனம் விரிவாக மானுடவியல் ஆய்வுக்கு உட்படுத்திய போது பதிவு செய்யப்பட்ட திருநெல்வேலி பகுதியின் ஒரு கொத்து அதற்குள் மூன்று கிளைகள் எனும் முறை.

#கிளுவைநாடு

28/07/2026

கடவுள் முருகனை “முப்பாட்டன்” என சொல்வதில் கூட ஒருவிதத்தில் நியாயம் உள்ளது. முருகனின் உயர்ந்த வீரத்தை, நற்குணங்களை எடுத்துக்கூறி, அவற்றை வாழ்க்கையில் கற்றுக்கொள்ள ஒரு முன்னுதாரணமாகக் காட்ட முடியும். ஆனால், இந்த அயோக்கியன் இராவணனை “முப்பாட்டன்” என அரசியலுக்காக சிலர் பேசுவதை கடைந்தெடுத்த பைத்தியக்காரத்தனமாகத்தான் பார்க்க வேண்டும். ஒரு நொடி சிந்தித்துப் பார்த்தால், நமது இரத்த உறவில் தாய், தந்தை வழி நேரடி முன்னோர்களுக்குப் பெரும்பாலும் சிவன், முருகன், விஷ்ணு, பெருமாள், ராமன் போன்ற தெய்வங்களின் பெயர்கள்தான் இருக்கும். யாருக்காவது “ராவணன்” என்று பெயர் வைத்திருப்பார்களா? நமது பாண்டிய மன்னர்கள் “வரகுணராமன்”, “இலங்கையை எரித்த ரெண்டாம் ராமன்", “சுந்தர பெருமாள்”, “ஜடாவர்மன்”, “சிவனணைந்த பெருமாள்” போன்ற தெய்வப் பெயர்களைத் தங்கள் பெயர்களுடன் இணைத்துப் பெருமைப்படுத்தி அலங்கரித்து கொண்டனர். ஆனால், எங்கும் இராவணனைத் தூக்கிப் பிடித்ததாகத் தெரியவில்லை. இராமாயணத்துடன் தொடர்புடைய பெயர்களின் அடிப்படையில் கிளைகளாகப் பிரிந்து வாழ்ந்தது மறவர் இனமே. இராமேஸ்வரம் கோவிலைக் கட்டியெழுப்பி, இராமனின் பெயரை நாட்டுக்குச் சூட்டி, சேதுபாலத்தைக் காவல் காத்த மரபினர் என்ற பெருமையைத் தங்களுக்கே உரியதாகக் கூறிக் கொண்டதே மறவர் வரலாறு. ஆஞ்சநேயரைத் தமிழர்களின் “முப்பாட்டன்” என சொன்னால்கூட, அது ஒப்பீட்டளவில் பொருத்தமாக இருக்கும். ஆனால், இராவணனை “தமிழர்களின் முப்பாட்டன்” என்று கூறுவது ஒரு Political Narrative மட்டுமே. அதை நம்பி ஏமாறுவதால் அதிக பாதிப்பு தமிழர்களில் குறிப்பாக மறவர்களுக்கு தான்.

மதுரையில் சுல்தான்களின் ஆட்சிக் காலத்தில், சமய வேறுபாடு காரணமாகவும், பெண் கொடுக்கச் சம்மதமின்றியும் கொண்டையங்கோட்டை மறவர...
27/07/2026

மதுரையில் சுல்தான்களின் ஆட்சிக் காலத்தில், சமய வேறுபாடு காரணமாகவும், பெண் கொடுக்கச் சம்மதமின்றியும் கொண்டையங்கோட்டை மறவர்கள் தங்கள் பூர்வீகமான தெற்கே கிளுவை நாட்டிற்கே மீண்டும் வந்ததாக “வாள் எழுபது” பாடல் கூறுகிறது. பாண்டிய நாட்டில் “ஆப்பனூர்” என்பது மறவர்கள் வாழும் மிகவும் பழமையான பகுதியாக இருந்தாலும், திருநெல்வேலி கொண்டையங்கோட்டை மறவர்களின் பூர்வீகம் “ஆப்பநாடு” அல்ல. ஏற்கனவே அங்கு வாழ்ந்த மறவர்களுடன், கிளுவை நாட்டிலிருந்து சென்ற கொண்டையங்கோட்டை மறவர்களும் கலந்து வாழ்ந்து வருகிறார்கள் என்பதே உண்மை. மறவர்கள் எல்லோரும் “இராமநாதபுரத்திலிருந்து இடம்பெயர்ந்து திருநெல்வேலிக்கு வந்தோம்”என்பது துளியும் அடிப்படைச் சான்றுகள் ஏதுமின்றி, தவறான புரிதலால் பரவிய ஒரு கதை. அதை மாற்றியே தீர வேண்டும். இது காலத்தின் கட்டாயம். "ஆப்பாநாடு" சேதுபதி மன்னர்களின் ஆளுமையின் கீழ் இருந்த காரணத்தால், இராமநாதபுரம் பகுதியில் உள்ள கொண்டையங்கோட்டை மறவர்கள் தங்களை “ரவிகுல கொண்டையங்கோட்டை” என அடையாளப்படுத்திக் கொள்வது உண்டு.

ஆனால், அதுபோன்ற ஒரு பண்பாட்டு வழக்கம் திருநெல்வேலி பகுதியில் எங்களிடம் எப்போதுமே இல்லை. “பாண்டியன்” என்பது மட்டுமே எங்களுக்கான அடையாளம். மேலும், திருநெல்வேலி–தென்காசிப் பகுதிகளில் உள்ளது போன்று பங்குனி உத்திர குலதெய்வ சாஸ்தா வழிபாடு இராமநாதபுரம் பகுதியில் இல்லை என்பதையும் உற்றுநோக்க வேண்டும். “கிளுவை நாடு” என்பது தென்காசியைத் தலைமையிடமாகக் கொண்ட பிற்காலப் பாண்டிய நாட்டின் பெரும்பகுதியாகும். இது சில கேரளப் பகுதிகள், செங்கோட்டை, இன்றைய தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகியவற்றை உள்ளடக்கிய பெரும் நிலப்பரப்பைக் கொண்டிருந்தது என்பது மானுடவியல் அறிஞர் லூயிஸ் டுமாண்ட் அவர்களின் உறுதியான கருத்து. இந்த கருத்தை லூயிஸ் டுமாண்ட் "மறவர் சரித்திரம்" எனும் நூலில் கிளுவை நாடு என்பதற்கு கிழக்கு எனவும் கீழக்கரை எனவும் தவறாக பொருள் குறிப்பிடப்பட்டுள்ளதை மறுத்து எழுதுகிறார். எனவே இதுவே எங்களின் பூர்வீக நிலம் என்பதால், நிச்சயம் தென்பாண்டிச் சீமையின் “மறவர் சரித்திரம்” விரைவில் சான்றுகளின் அடிப்படையில் சரியாகத் திருத்தி எழுதப்பட வேண்டும்.

06/07/2026

Vāsudēvanallūr Fort (1767)

Before its siege by Colonel Donald Campbell, British accounts described Vāsudēvanallūr as one of the strongest earthen forts in the Tirunelveli country. Protected by dense forests, a fortified pettah, thorn hedges, and well-designed ramparts, it reportedly had no cannon, its strength lay in its earthworks and defenders. This is an AI-assisted historical reconstruction based strictly on the contemporary colonial description of the fort.

Source: Tinnevelly history written by Rev. Caldwel's lColonial-era account of Vāsudēvanallūr Fort and the 1767 campaign against Pūli Dēvar.

05/07/2026

திருவிதாங்கூர் சமஸ்தான மன்னருக்கு, திருநெல்வேலி பாண்டி படை பல போர்களில் துணைநின்றுள்ளனர். திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கும் கொச்சி அரசுக்கும் இடையே நடைபெற்ற ஒரு போரின் முடிவில் கொச்சி மன்னரின் தலையை வெட்டி திருவிதாங்கூர் மன்னருக்கு பரிசளித்தாக சில ஆங்கில குறிப்புகள் உள்ளன. அக்குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்ட விளக்க ஓவியம் இது.

05/07/2026

திருவிதாங்கூர் சமஸ்தான மன்னருக்கு, திருநெல்வேலி பாண்டி படை பல போர்களில் துணைநின்றுள்ளனர். திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கும் கொச்சி அரசுக்கும் இடையே நடைபெற்ற ஒரு போரில், திருவிதாங்கூர் படை முன்னேறிச் செல்ல தடையாக இருந்த ஒரு பெரிய முதலையை ஒரு மறவன் தனியொரு ஆளாக சண்டையிட்டு கொன்றதாக சில ஆங்கில குறிப்புகள் உள்ளன. அக்குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்ட விளக்க ஓவியம் இது.

The Hero Stones of Ilavelangal, now preserved in the Government Museum, Palayamkottai, commemorate Tinnevelly Kondayanko...
24/06/2026

The Hero Stones of Ilavelangal, now preserved in the Government Museum, Palayamkottai, commemorate Tinnevelly Kondayankottai Maravar warriors who fought under Tirunelvelipperumal (Vettumperumal) in a battle against Vengalaraja in A.D. 1547. These inscriptions record the names of individual warriors and describe several of them as "Kudiraikuthippattan" heroes who died after bringing down enemy cavalry horses. One of the warriors commemorated is Sellapperumal Ramakutti, son of Arasunilainindra Pandya Devar, a significant inscriptional detail that directly connects the Kondayankottai Maravar lineage of Tirunelveli with the Pandya royal house. The Jesuit historian Georg Schurhammer later identified Tirunelvelipperumal with Maravarman Sundara Perumal, the Pandya ruler of Kayathar, making the Ilavelangal hero stones one of the most important surviving records of the final phase of Pandya military history and the relationship between the Pandyas and their Maravar warrior elites.

Tinnevelly Chronicles

In my view, the great Puli Devar’s objective in uniting the Western Poligars was not merely to defend individual forts b...
20/06/2026

In my view, the great Puli Devar’s objective in uniting the Western Poligars was not merely to defend individual forts but to challenge the Arcot Nawab’s authority at its centre. Caldwell records that the immediate objective of the confederacy was to capture Madurai itself. To me, this suggests an attempt to reclaim the political sovereignty once exercised from the ancient Pandyan capital and restore it.

Address

Mullana

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tinnevelly Chronicles posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tinnevelly Chronicles:

Shortcuts

Share