Kuwait Tamil Pasanga

Kuwait Tamil Pasanga We are covering Gulf news and updates from Bahrain, Kuwait, Oman, Qatar, Saudi Arabia and the United Arab Emirates

23/08/2025

அபுதாபியின் "31-வது செஸ் திருவிழாவில்" சாம்பியன் பட்டத்தை தட்டிய குவைத் வாழ் தமிழக மாணவனுக்கு பாராட்டுகள் குவிகிறது:

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைநக‌ர் அபுதாபியில் நடந்த 31வது அபுதாபி சதுரங்க திருவிழா ஜூனியர் கிளாசிக்கல் போட்டிகள் ஆகஸ்ட் 15 முதல் ஆகஸ்ட் 21 வரை நடத்தப்பட்டன, ஜூனியர் பிரிவில் உலகம் முழுவதும் 80 நாடுகளைச் சேர்ந்த 315 சிறந்த சதுரங்க சாம்பியன் வீரர்கள் கலந்து கொண்டனர்.

இதில் குவைத்தில் வசிக்கின்ற இந்தியா, தமிழகம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த ரஞ்சித்குமார் , சாந்தி தம்பதிகளின் மகனான சிறுவன் மித்திலேஷ் ஜூனியர் பிரிவில் மூன்றாவது முறையாகப் பங்கேற்றுள்ளார். முன்னதாக 2023 ஆம் ஆண்டு 12-வயதுக்குட்பட்டோர் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும், கடந்த ஆண்டு 2024 ஆம் ஆண்டு 12-வயதுக்குட்பட்டோர் பிரிவில் தங்கப்பதக்கத்தையும் வென்றார்.

இந்நிலையில் 2025 ஆம் ஆண்டிற்கான போட்டியில் கலந்து கொண்ட மித்திலேஷ் 9 இல் 8 மதிப்பெண்களுடன் போட்டியை முடித்தார், போட்டி முழுவதும் தோற்காமல் இருந்தார். இதன் விளைவாக ஜூனியர் சாம்பியனாக மித்திலேஷ் அறிவிக்கப்பட்டார். கூடுதலாக, இந்த போட்டியில் இருந்து அவர் 66.4 FIDE ELO புள்ளிகளைப் பெற்றார். மாணவன் மித்திலேஷ் Fahaheel கல்ப் இந்தியப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு பயின்று வருகின்றார்.

இதன் விளைவாக, அவர் உலக அரங்கில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியதுடன், ஜூனியர் சாம்பியனாகவும் அறிவிக்கப்பட்டார். இதை தவிர மித்திலேஷ் ஏராளமான தேசிய மற்றும் சர்வதேச சதுரங்கப் போட்டிகளில் பங்கேற்று, பல தங்கப்பதக்கங்களையும் கோப்பைகளையும் வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

23/08/2025

குவைத்தில் வீட்டு வேலை செய்கின்ற பிலிப்பைன்ஸ் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது:

பிலிப்பைன்ஸ் நாட்டு தொழிலாளர் துறை அமைச்சகம் இன்று(22/08/25) மாலையில் வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட புதிய தொழிலாளர் ஒப்பந்த அறிவிப்பில் வீட்டு வேலை செய்பவர்களுக்கான குறைந்தபட்ச மாத ஊதியத்தை $400 இலிருந்து $500 ஆக(சுமார் 150 குவைத் தினார்) உயர்த்தியுள்ளது. உலகெங்கிலும், குறிப்பாக வளைகுடா நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பிலிப்பைன்ஸ் தொழிலாளர்களுக்கான தேவை அதிகரித்து வருவதே இந்த முடிவின் பின்னணியில் உள்ள முக்கிய காரணம் என்று அமைச்சகம் விளக்கியுள்ளது.

பிலிப்பைன்ஸ் தொழிலாளர்களுடனான தொடர்பு எளிமையாக அமைவது, அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் அவர்கள் வழங்கும் சிறந்த பராமரிப்பு, அவர்களின் நல்ல கல்வி நிலை மற்றும் குவைத் சமூகத்தின் பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகள் பற்றிய அவர்களின் அறிவு ஆகியவற்றால் தேவை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வீட்டு வேலை துறையில் நிபுணரான பாஸ்ஸாம் அல் ஷம்மாரி கூறினார். பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட பிற காரணிகளும் சம்பள உயர்வுக்குப் பின்னால் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இது தவிர அந்த அறிவிப்பில் இலவச வருடாந்திர மருத்துவ பரிசோதனைகளை வழங்குதல், ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன் கட்டாயமாக "உங்கள் முதலாளியை பற்றி
அறிந்து கொள்ள" வீடியோ அழைப்பு மூலம் ஒருவருக்கு ஒருவர் அறிந்து கொள்ள கட்டாயப்படுத்துதல், வேலை செய்கின்ற இடத்தில் தொழிலாளியின் நிலை குறித்து அறிய டிஜிட்டல் நலன்புரி கண்காணிப்பை செயல்படுத்துதல் மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களை வழங்குதல் ஆகியவை அடங்கும். எனவே ஆட்சேர்ப்பு நிறுவனங்கள் இனிமுதல் கடுமையான தரநிலைகளை எதிர்கொள்ளும், இணக்கமான நிறுவனங்கள் மட்டுமே அனுமதிப்பட்டியலில் சேர்க்கப்படும். இந்த ஆரம்ப சீர்திருத்தங்களுக்கு 60 நாள் மாற்றம் காலம் பொருந்தும்.

22/08/2025

குவைத்திலும் குழந்தைகளிடம் வன்முறையைத் தூண்டும் ரோப்லாக்ஸ் விளையாட்டு தடைசெய்யப்பட்டது:

குவைத்தில் ரோப்லாக்ஸ் விளையாட்டைத் தடை செய்ததாக தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணையம்(CITRA) நேற்று(21/08/25) வியாழக்கிழமை இரவு வெளியிட்டுள்ள செய்தியில் அறிவித்துள்ளது. இந்த விளையாட்டு குழந்தைகளில் வன்முறையைத் தூண்டுவதாகவும், ஒழுக்கமான வாழ்வியல் முறைக்கு இணங்காத உள்ளடக்கத்தைக் கொண்டிருப்பதாகவும் பெற்றோர்கள், பொதுமக்கள் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளிடமிருந்து வந்த பரவலான புகார்களுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ரோப்லாக்ஸில் இரத்தக்களரி காட்சிகள், சமூக விரோத நடத்தை மற்றும் குழந்தைகளுக்குப் பொருந்தாத உள்ளடக்கம் இருப்பதாக பொதுமக்கள் தங்கள் புகார்களில் சுட்டிக்காட்டினர். கத்தார் மற்றும் ஒமான் போன்ற வளைகுடா நாடுகளிலும், சீனா, துருக்கி, ஜோர்டான் மற்றும் வட கொரியாவிலும் ரோப்லாக்ஸ் தடை செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, இந்த நாடுகளிலும் இந்த விளையாட்டு தடை செய்யப்பட்டது. கடந்த தினம் ரோப்லாக்ஸ் விளையாட்டை தடை செய்ய CITRA வுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டதாக குவைத்தின் தினசரி செய்தித்தாள்கள் பல செய்தி வெளியிட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

பெற்றோர்கள் இந்த விளையாட்டு Application ஆனது Playstore மற்றும் Appstoreயில் வருகிறதா என்பதை check பண்ணுங்க🙏

குவைத் வாழ் தமிழ் மாணவன் சாதனை
22/08/2025

குவைத் வாழ் தமிழ் மாணவன் சாதனை

அபுதாபியின் "31-வது செஸ் திருவிழாவில்" சாம்பியன் பட்டத்தை தட்டிய குவைத் வாழ் தமிழக மாணவனுக்கு பாராட்டுகள் குவிகிறது:

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைநக‌ர் அபுதாபியில் நடந்த 31வது அபுதாபி சதுரங்க திருவிழா ஜூனியர் கிளாசிக்கல் போட்டிகள் ஆகஸ்ட் 15 முதல் ஆகஸ்ட் 21 வரை நடத்தப்பட்டன, ஜூனியர் பிரிவில் உலகம் முழுவதும் 80 நாடுகளைச் சேர்ந்த 315 சிறந்த சதுரங்க சாம்பியன் வீரர்கள் கலந்து கொண்டனர்.

இதில் குவைத்தில் வசிக்கின்ற இந்தியா, தமிழகம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த ரஞ்சித்குமார் , சாந்தி தம்பதிகளின் மகனான சிறுவன் மித்திலேஷ் ஜூனியர் பிரிவில் மூன்றாவது முறையாகப் பங்கேற்றுள்ளார். முன்னதாக 2023 ஆம் ஆண்டு 12-வயதுக்குட்பட்டோர் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும், கடந்த ஆண்டு 2024 ஆம் ஆண்டு 12-வயதுக்குட்பட்டோர் பிரிவில் தங்கப்பதக்கத்தையும் வென்றார்.

இந்நிலையில் 2025 ஆம் ஆண்டிற்கான போட்டியில் கலந்து கொண்ட மித்திலேஷ் 9 இல் 8 மதிப்பெண்களுடன் போட்டியை முடித்தார், போட்டி முழுவதும் தோற்காமல் இருந்தார். இதன் விளைவாக ஜூனியர் சாம்பியனாக மித்திலேஷ் அறிவிக்கப்பட்டார். கூடுதலாக, இந்த போட்டியில் இருந்து அவர் 66.4 FIDE ELO புள்ளிகளைப் பெற்றார். மாணவன் மித்திலேஷ் Fahaheel கல்ப் இந்தியப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு பயின்று வருகின்றார்.

இதன் விளைவாக, அவர் உலக அரங்கில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியதுடன், ஜூனியர் சாம்பியனாகவும் அறிவிக்கப்பட்டார். இதை தவிர மித்திலேஷ் ஏராளமான தேசிய மற்றும் சர்வதேச சதுரங்கப் போட்டிகளில் பங்கேற்று, பல தங்கப்பதக்கங்களையும் கோப்பைகளையும் வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

22/08/2025

|| குவைத்தில் விசிட் விசாவில் வருபவர்களுக்கு இலவச சுகாதார சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டதாக அறிவிப்பு:

குவைத் அரசு மருத்துவமனைகள், சிறப்பு மையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் விசிட் விசாக்கள் மற்றும் தற்காலிக விசாக்களில் வருபவர்களுக்கான சுகாதார சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது. இந்த முடிவு தொடர்பான சுகாதார அமைச்சர் டாக்டர் அகமது அப்துல் வஹாப் அல்-அவதி பிறப்பித்தார்.

இதன்படி, இந்த வகைகளைச் சேர்ந்தவர்களுக்கு அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசுக்குச் சொந்தமான சுகாதார மையங்களில் சிகிச்சை அல்லது பிற சுகாதார சேவைகள் அனுமதிக்கப்படாது. நாட்டில் சுகாதாரப் பராமரிப்பு வளங்களின் தரத்தை கண்டிப்பாக செயல்படுத்துவதன் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சுகாதார மையங்களின் செயல்பாட்டை நெறிப்படுத்துதல், சேவை முறையை பகுத்தறிவு செய்தல் மற்றும் தகுதியுள்ளவர்களுக்கு மட்டும் சேவைகளை வழங்குதல் என்ற வரம்பிடுதல் ஆகியவை இந்த முடிவின் பின்னணியில் உள்ள நோக்கங்கள் என்றும் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இன்று(21/08/25) சற்றுமுன் தெரிவித்துள்ளது. இந்த மாதம் முதல் நாட்டின் விசிட் விசா விதிமுறைகளில் தாராளமயமாக்கப்பட்ட பின்னர் இந்த புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

"என்னடா இதுவர எந்த பூதமும் கிளம்பலியே நல்லா தானே போயிட்டு இருக்கு அப்படின்னு நினைச்சேன் அதுக்குள்ள வந்திருச்சு. இதில் இருந்து என்ன தெரியுது விசிட் விசாவில் வந்தால் பத்திரமாக இருந்து ஊருக்கு திரும்பி போகணும்"

21/08/2025

குவைத்தில் கள்ளச்சாராய உயிரிழப்பு நடந்தும் திருந்தாத வெளிநாட்டினர்;மதுபான குவியல்கள் மீண்டும் கைப்பற்றப்பட்டன:

குவைத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட கள்ளச்சாராய மரணங்களை பார்த்தும் கற்றுக்கொள்ளாத வெளிநாட்டினர். ஜிலீப் அல் ஷுவைக்கில் போலீசார் நடத்திய பாதுகாப்பு சோதனையின் போது இரண்டு வாகனங்களில் இருந்து ஏராளமான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஓட்டுநர்கள் போலீசாரை கண்டதும் தங்கள் வாகனங்களை விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

அங்குள்ள மாணவர்கள் படிக்கின்ற பள்ளி வளாகத்தில் வாகனம் நிறுத்துமிடத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நான்கு சக்கர வாகனம் நிறுத்தப்பட்டிருப்பதை போலீஸ் ரோந்துப் அதிகாரிகள் கவனித்தனர். போலீசார் அருகில் வந்தபோது, ​​ஓட்டுநர் அருகிலுள்ள வீடுகள் நிறைந்த பகுதிக்குள் ஓடி தப்பித்து கொண்டார். அதைத் தொடர்ந்து போலீஸ் நடத்திய சோதனையில் வாகனத்தில் 109 வெளிநாட்டு மதுபான பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து
பொது போக்குவரத்துத் துறையின் விசாரணையில் காரின் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேற்கு அப்துல்லா அல்-முபாரக்கில் நடந்த இரண்டாவது சம்பவத்தில், போலீஸ் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவருடைய சந்தேகத்திற்கிடமான காரை நிறுத்தினார். ஆசியா நாட்டை சேர்ந்த ஓட்டுநர் வாகனத்தை கைவிட்டு தப்பி ஓடிவிட்டார். அதை தொடர்ந்து நடத்திய சோதனையில் வாகனத்தில் 47 பாட்டில்கள் கள்ளச்சாராய குவியல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன. இந்த வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, இதனுடைய உரிமையாளரும் அடையாளம் காணப்பட்டுள்ளார். இரண்டு வழக்குகளிலும் சந்தேக நபர்களைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

21/08/2025
21/08/2025

குமரி இளைஞர் துபாய் சிறையில் மீட்டுத்தர மாவட்ட ஆட்சியரிடம் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்:

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கோடிமுனை பகுதியை சேர்ந்த அருள்ரீகன்(43) என்ற வாலிபர் துபாயில் சுற்றுலா பயண வழிகாட்டியாக பணிபுரிந்து வந்த நிலையில் ரஷ்யா நாட்டு நபர் துபாய் துறைமுகத்தில் நின்ற படகை கடத்திச் சென்றதற்கு, அருள்ரீகன் உடந்தையாக செயல்பட்டதாக பொய்யாக குற்றச்சாட்டி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார் என்று மனைவி தெரிவித்தார்.

இதையடுத்து தனது கணவரை மீட்டுத் தரக்கோரி இன்று நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட ஆட்சியரிடம் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் கண்ணீர் மல்க புகார் அளித்தனர். அந்த மனுவில் மத்திய, மாநில அரசுகள் தவறு செய்யாத தனது கணவரை மீட்டு தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

21/08/2025

இவருடைய உணர்வுப்பூர்வமான நீதிமன்ற வழக்கு விசாரனை வீடியோவை யாரெல்லாம் பார்த்துள்ளீர்கள்:

கணையப் புற்றுநோயுடன் நீண்ட கால துணிச்சலான போராட்டத்திற்குப் பிறகு, நீதிபதி ஃபிராங்க் காப்ரியோ தனது 88-வது வயதில் காலமானார் என்று அவருடைய மகன் சற்றுமுன் அதிகாரப்பூர்வ பக்கத்தில் தெரிவித்தார்.

இரக்கம், பணிவு மற்றும் சாதாரண மக்களின் நன்மை மீது அசைக்க முடியாத உறுதிப்பாடு ஆகியவற்றால் உலகம் முழுவதும் பிரியமான நீதிபதி காப்ரியோ, நீதிமன்ற அறையில் தனது பணியின் மூலம் கோடிக்கனக்கான மக்களின் மனதை தொட்டார், மேலும் மனிதநேயத்தின் முன்மாதிரியின் மூலம் இன்னும் அதிகமாக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

அவரது அரவணைப்பு, நகைச்சுவை மற்றும் கருணை அவரை அறியும் அல்லது அவரது வார்த்தைகளைக் கேட்கும் பாக்கியம் பெற்ற அனைவருக்கும் நீதி கிடைக்கும் என்று நம்பிக்கையை ஏற்படுத்திய சிறந்த நீதிபதியாக திகழ்ந்தார்

20/08/2025

குவைத்தில் புறா மற்றும் பூனைக்கு உணவு அளிப்பவர்கள் இனிமுதல் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள் 500 தினார் வரையில் அபராதம் விதிக்கப்படும்:

குவைத்தில் பொது இடங்களில் உணவு கழிவுகளை வீசுபவர்களுக்கு எதிராக நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது. புறா உள்ளிட்ட பறவைகள் மற்றும் பூனைகளுக்கு உணவளிப்பதன் ஒரு பகுதியாக பொது இடங்களில் நாட்டில் வசிக்கின்ற வெளிநாட்டினர் மற்றும் குடிமக்கள் உணவை வீசும் வீடியோக்கள் சமூக ஊடக தளங்களில் பரவி வருகின்றன. மேலும்
பல இடங்கள் உணவு பொருட்கள் வீசுவதால் அசுத்தமாகி துர்நாற்றமும் வீசம் நிலை ஏற்படுவதாக புகார்கள் பரவலான சூழலில்தான் சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறை இந்த விதிமீறல் தொடர்பாக மக்களின் புரிதலுக்காக இன்று ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது.

மக்கள் குப்பை மற்றும் உணவு கழிவுகளை கொட்ட நாட்டின் முக்கிய பகுதிகளில் நியமிக்கப்பட்ட கொள்கலன்களைத் தவிர பொது இடங்களில் எந்த வகையான கழிவுகளையும் வீசுவது சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குற்றமாகும் எனவும், சட்டத்தை மீறுபவர்களுக்கு 500 தினார் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். நாட்டின் அனைத்து குடிமக்களும் மற்றும் வெளிநாட்டினரும் சுற்றுச்சூழல் சட்டங்களை மீறுவதைத் தவிர்க்கவும், பொது சுகாதாரம், சமூகத்தின் ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் தயாராக இருக்குமாறு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அதிகாரிகள் அழைப்பு விடுத்தனர்.

Address

Kanyakumari
Nagercoil

Opening Hours

Monday 6:05am - 11:55pm
Tuesday 6:05am - 11:55pm
Wednesday 6:05am - 11:55pm
Thursday 6:05am - 11:55pm
Friday 6:05am - 11:55pm
Saturday 6:05am - 11:55pm
Sunday 6:05am - 11:55pm

Alerts

Be the first to know and let us send you an email when Kuwait Tamil Pasanga posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kuwait Tamil Pasanga:

Share