Kuwait Tamil Pasanga

Kuwait Tamil Pasanga We are covering Gulf news and updates from Bahrain, Kuwait, Oman, Qatar, Saudi Arabia and the United Arab Emirates

ஒமானில் பேருந்து விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி மற்றும் 14 பேர் வரையில் பலத்த காயமடைந்தனர்:
02/07/2025

ஒமானில் பேருந்து விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி மற்றும் 14 பேர் வரையில் பலத்த காயமடைந்தனர்:

ஒமானில் பேருந்து விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்

குவைத்தில் மிகப்பெரிய மோசடி கும்பல் ஒன்று சிக்கியுள்ளதாக உள்துறை செய்தி வெளியிட்டுள்ளது:குவைத்தை மையமாக கொண்டு ஐரோப்பிய ...
02/07/2025

குவைத்தில் மிகப்பெரிய மோசடி கும்பல் ஒன்று சிக்கியுள்ளதாக உள்துறை செய்தி வெளியிட்டுள்ளது:

குவைத்தை மையமாக கொண்டு ஐரோப்பிய நாடுகளுக்கான விசா விண்ணப்பதாரர்களை குறிவைத்து மோசடியாக ஆவணங்களை தயாரித்து வழங்கி வந்த கும்பலைக் கைது செய்ததாக குவைத்தின் உள்துறை அமைச்சகம் இன்று(01/07/25) செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. வெளியுறவு அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து நடத்தப்பட்ட விசாரணையில் தொழில்களை மாற்றுதல், ஆவணங்களில் உள்ள தகவல்களை திருத்துதல், பணி அனுமதிகள், வங்கிகள் தொடர்பான அறிக்கைகள் மற்றும் பல ஐரோப்பிய தூதரகங்களால் நிர்ணயிக்கப்பட்ட விசாவுக்கு தேவையான ஆவணங்களை தயார் செய்தல் ஆகியவைகளை இந்த கும்பல் செய்து வந்துள்ளது.

இதற்கு மூளையான ஊடகக் கணக்கை இயக்கி வந்த ஒரு எகிப்தியரின் ஈடுபாடு ஆரம்பத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. இதை தொடர்ந்து இந்த கும்பலுக்காக குவைத்தில் ஊழியர்களாக செயல்பட்டு வந்த சில நாடுக‌ளை சேர்ந்த நபர்களை கைது செய்தனர். இவர்களிடமிருந்து போலியான ஆவணங்கள், அவை தயார் செய்த பயன்படுத்திய நவீன உபகரணங்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வழங்க தயார் நிலையில் இருந்த பல ஆவணங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் குவைத் அரசு செய்தி நிறுவனம் இதை இன்று செய்தியாக வெளியிட்டுள்ளது.

குவைத்தில் மோசடி நபர்களால் பாதிக்கப்பட்ட நபர்கள் உங்களை ஏமாற்றிய நபர் தொடர்பான தெளிவான விபரங்களை Comment யில் பதிவு செய்யவும். இது புதிதாக மற்றவர்கள் ஏமாறாமல் இருக்க உதவியாக இருக்கும்.

குவைத்தை விட்டு மைனர் குழந்தைகள் வெளியேற அப்பாவின் அனுமதி கடிதம் கண்டிப்பாக தேவை(சட்டம் வெளிநாட்டினருக்கும் பொருந்தும்)க...
01/07/2025

குவைத்தை விட்டு மைனர் குழந்தைகள் வெளியேற அப்பாவின் அனுமதி கடிதம் கண்டிப்பாக தேவை(சட்டம் வெளிநாட்டினருக்கும் பொருந்தும்)

குவைத்தில் வசிக்கின்ற மைனர் குழந்தைகள் வெளிநாடு(குவைத்தை விட்டு வெளியேற) செல்வதற்கு தந்தையின் அனுமதி தேவை என்ற சட்டத்தை கடுமையாக்கியுள்ளது. குழந்தைகளின் பராமரிப்பு உரிமைகள் தொடர்பான திருமண மோதல்களைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பயணத்தின் போது குழந்தை தனது சொந்த தாயுடன் இருந்தாலும் கூட தந்தை உடன் பயணிக்கவில்லை என்றால் பயணத்திற்காக அனுமதியுடன் முறையான ஆவணம் கைவசம் இல்லாவிட்டால் பயணம் ரத்து செய்யப்படும். இந்த முடிவு வெளிநாட்டினருக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

குவைத் சட்டத்தின்படி, குழந்தையின் தந்தை சட்டப்பூர்வமான பாதுகாவலர் அல்லது விசா ஸ்பான்சராக அங்கீகரிக்கப்படுகிறார். புதிய சட்டத்தின்படி, பயணத்தின் போது, ​​குழந்தை அல்லது குழந்தையுடன் வருபவர்கள் தந்தையால் கையொப்பமிடப்பட்ட ஆட்சேபனையில்லாச் சான்றிதழை வைத்திருக்க வேண்டும். சட்டவிரோத குழந்தை கடத்தல் மற்றும் சர்வதேச பராமரிப்பு தகராறுகளைத் தடுக்கும் நோக்கில் புதிய சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. தடையில்லாச் சான்றிதழைப் பெற, தந்தை தூதரகம், அருகிலுள்ள குடியிருப்பு அனுமதி விவகார அலுவலகம், பாஸ்போர்ட் அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்று, தேவையான படிவங்களை நிரப்பி, கையொப்பமிட்டு, சமர்ப்பிக்க வேண்டும்.

இப்படி கையொப்பமிடப்பட்டு பெறப்பட்ட அனுமதி பத்திரத்தை பயணத்திற்குச் செல்லும்போது விமான நிலையத்திலும் சமர்ப்பிக்க வேண்டும். விவாகரத்தைத் தொடர்ந்து குழந்தைக் காவல் தொடர்பான தகராறுகளைத் தீர்க்கவும், பெற்றோர் குவைத்துக்கு வெளியே வசிக்கும்போது ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்கவும், குழந்தை கடத்தலைத் தடுக்கவும், பயணத் திட்டங்கள் குறித்து பெற்றோர் இருவரும் அறிந்திருப்பதை உறுதி செய்யவும் இந்தச் சட்டம் உதவும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தந்தை உடன் இல்லை அல்லது ஒத்துழைக்கவில்லை என்றால், தாய் தனிப்பட்ட நிலை மூலம் நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கலாம், இதையடுத்து நீதிமன்றம் குழந்தையை பயணம் செய்ய அனுமதிக்கும் நீதித்துறை உத்தரவை பிறப்பிக்கும் என்று சட்டம் விளக்குகிறது. தந்தை உடன் பயணிக்கவில்லை என்றால் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும், இல்லை என்றால் விமான நிலையம் வரையில் சென்று மீண்டும் வீட்டிற்க்கே திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

குவைத்தில் ஆசிரியரை கற்பழித்த பள்ளி காவலாளிக்கு இன்று மரணதண்டனை விதிக்கப்பட்டது:குவைத் குற்றவியல் நீதிமன்றம் இன்று(30/06...
01/07/2025

குவைத்தில் ஆசிரியரை கற்பழித்த பள்ளி காவலாளிக்கு இன்று மரணதண்டனை விதிக்கப்பட்டது:

குவைத் குற்றவியல் நீதிமன்றம் இன்று(30/06/25) திங்கட்கிழமை பள்ளி அலுவலகத்தில் வைத்து வெளிநாட்டு ஆசிரியையினை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக எகிப்திய நாட்டவரான பள்ளி காவலாளிக்கு மரண தண்டனை விதித்துள்ளது. வேலைக்கு வந்த ஆசிரியையினை தவிர வேறு யாரும் இல்லை என்பதை உறுதி செய்த பிறகு குற்றம் சாட்டப்பட்டவர் அலுவலகத்திற்குள் நுழைந்து பாலியல் வன்கொடுமை செய்தார்.

மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் அலுவலகத்திற்குள் நுழைந்து கதவை உள்ளே இருந்து பூட்டிய சிசிடிவி காட்சிகள் உட்பட, குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான அனைத்து ஆதாரங்களையும் அரசு தரப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இறுதி விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவர் அமைதியாக இருந்தார். இதையடுத்து விசாரணைக்குப் பிறகு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவருக்கு இன்று மரண தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்மணி எந்த நாட்டவர் உள்ளிட்ட கூடுதல் விபரங்களை நீதிமன்றம் வெளியிடவில்லை.

ஊரில் என்றால் பாதிக்கப்பட்ட பெண்மணியின் புகைப்படத்தை எப்படியாவது தேடி கண்டுபிடித்து நீதி வாங்கித் தருகிறோம் என்ற பெயரில் தங்களுடைய செய்தி நிறுவனத்தின் ரேட்டிங்கை ஏற்ற பொது வெளியில் போட்டு குடும்பத்தை அசிங்கப்படுத்துவது மற்றும் எந்த கூச்சமும் இல்லாம‌ல் குற்றவாளி அடுத்த சில மாதங்களிலேயே வெளியே வந்து சர்வசாதாரணமாக ஊரில் உலா வருவான் என்பது குறிப்பிடதக்கது.

30/06/2025
குவைத்தில் உண்மையான கோடை ஜூலை 3-ஆம் தேதி தொடங்குகிறது:குவைத்தில் உண்மையான கோடைக்காலம் ஜூலை 3-ஆம் தேதி தொடங்கும். இது 13 ...
29/06/2025

குவைத்தில் உண்மையான கோடை ஜூலை 3-ஆம் தேதி தொடங்குகிறது:

குவைத்தில் உண்மையான கோடைக்காலம் ஜூலை 3-ஆம் தேதி தொடங்கும். இது 13 நாட்கள் நீடிக்கும் இந்த நாட்களில் வானிலை வளிமண்டல வெப்பநிலையில் தற்போதைய வெப்பத்தை விட குறிப்பிடத்தக்க அதிகரிப்பை ஏற்படுத்தும் என்று அல்-உஜைரி அறிவியல் ஆய்வு மையம் இன்று(29/06/25) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இந்த நாட்களில் நாடு கடுமையான வறட்சி மற்றும் வெப்பக்காற்றை அனுபவிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. சூரிய மற்றும் சந்திர நாட்காட்டிகளில் இந்தப் பருவம் "அல்-ஹக்கா" என்று அழைக்கப்படுகிறது என்றும் அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.

குவைத்தில் இந்த நிறுவனத்தின் PowerBank-ஐ  பயன்படுத்தும் நபரா நீங்கள் உடனே இதே மாற்றுங்கள்:குவைத்தின் வர்த்தகம் மற்றும் த...
29/06/2025

குவைத்தில் இந்த நிறுவனத்தின் PowerBank-ஐ பயன்படுத்தும் நபரா நீங்கள் உடனே இதே மாற்றுங்கள்:

குவைத்தின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் இன்று(29/06/25) சற்றுமுன் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில் Anker நிறுவனத்தின் பின்வரும் மாடல்கள் Power Bank-ஐ வாங்கியுள்ள நபரா நீங்கள்.....???

A1681
Zolo Power Bank (20K, 30W, Built-In USB-C and Lightning Cable)

A1689
Zolo Power Bank (20K, 30W, Built-In USB-C Cable)

A1257
Power Bank (10K, 22.5W)

A1647

Power Bank (20,000mAh, 22.5W, Built-In USB-C Cable)

A1652

MagGo Power Bank (10,000mAh, 7.5W)

அப்படியென்றால் கடந்த செப்டம்பர் 2023 முதல் பிப்ரவரி 2025 க்கு இடையில் தயாரிக்கப்பட்டு வெளிவந்த Anker பவர் பேங்க் மாடல்களான A1257, A1681, A1689, A1647 மற்றும் A1652 ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்ட ஒரு குறிப்பிட்ட Batch
லித்தியம்-அயன் பவர் பேட்டரிகள் புகையுதல் , உருகுதல் மற்றும் உயர்ந்த வெப்ப அளவுகளில் பற்றி எரியகூடிய அறிகுறிகளைக் காட்டக்கூடும் என்பதை Anker நிறுவனம் அறிந்துள்ளது.

குறிப்பிட்ட காலகட்டத்தில் மேற்கூறிய எந்தவொரு பொருளையும் வாங்கிய நுகர்வோர்(பயனர்) நீங்களானால் பொருள் வாங்கப்பட்ட சில்லறை விற்பனையாளரை, அசல் ரசீதுடன் தொடர்பு கொண்டு, அதை சம மதிப்புள்ள மற்றொரு தயாரிப்புக்கு மாற்றவோ அல்லது முழு பணத்தைத் திரும்பப் பெறவோ தயவுசெய்து கேட்டுக்கொள்கிறோம் என்று அறிவித்துள்ளது.

கூடுதல் விபரங்களுக்கு
Seventh dimension for general trading company
Website: www.anker-mea.com/product-recall
Tel: 1889991

இதே அறிவிப்பை சவுதியும் கடந்த தினம் வெளியிட்டுள்ளது. எனவே சவுதியில் உள்ளவர்களும் இதை மாற்றுங்கள் ஒமான்,கத்தார்,அமீரகம் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பது தெரியவில்லை விசாரித்து பாருங்கள்.

மற்ற வளைகுடா நாடுகளில் இந்த நிறுவனத்தின் PowerBank ஐ பயன்படுத்தும் நபர்கள் Comment பண்ணுங்கள்.

குவைத்||😄 சோனமுத்தா போச்சா 3,828 பாட்டில்....குவைத்தின் Mahboula பகுதியில் குப்பை மேட்டில் 4 வாகனங்களில் 3,828 பாட்டில்க...
28/06/2025

குவைத்||😄 சோனமுத்தா போச்சா 3,828 பாட்டில்....

குவைத்தின் Mahboula பகுதியில் குப்பை மேட்டில் 4 வாகனங்களில் 3,828 பாட்டில்கள் கள்ளச்சாராயத்தை மறைத்து வைத்திருந்ததற்காக நேபாள நாட்டவர் ஒருவர் இன்று(27/06/25) வெள்ளிகிழமை கைது செய்யப்பட்டதாக தினசரி நாளிதழ் சற்றுமுன் செய்தி வெளியிட்டுள்ளது. இன்று வெள்ளிகிழமை வார விடுமுறையாக இதை ஆடர் செய்திருந்த எத்தனை பேரின் குடி கெட்டதொ பாவம் தான்....😭

குவைத்தில் வெயிலில் சுருண்டு விழுந்த 18 வயது இந்திய இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்:குவைத்தில் சிகிச்சையில் இருந்த...
27/06/2025

குவைத்தில் வெயிலில் சுருண்டு விழுந்த 18 வயது இந்திய இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்:

குவைத்தில் சிகிச்சையில் இருந்த இந்தியா கேரளா மாநிலத்தை சேர்ந்த இளைஞர் மரணமடைந்தார். பானுதாஸ்(மறைந்த) மற்றும் துளசி தம்பதிகளின் மகன் பிருத்வி(18) என்ற இளைஞனே உயிரிழந்தார். கடந்த புதன்கிழமை வெயிலில் நடந்து செல்லும்போது மயங்கி விழுந்து ஆபத்தான நிலையில் அதான் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று(26/06/25) வியாழக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரை வெப்ப அலை தாக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மருத்துவ மற்றும் தடயவியல் அறிக்கை கிடைத்த பின்னரே இது தொடர்பான உறுதிப்படுத்தல் கிடைக்கும்.

குவைத்தில் நன்கு அறியப்பட்ட தமிழரான சமூக செயற்பாட்டாளர் இருளப்பன் மரணமடைந்தார்:குவைத்திலுள்ள உலகளாவிய தமிழர்கள் நலச்சங்க...
24/06/2025

குவைத்தில் நன்கு அறியப்பட்ட தமிழரான சமூக செயற்பாட்டாளர் இருளப்பன் மரணமடைந்தார்:

குவைத்திலுள்ள உலகளாவிய தமிழர்கள் நலச்சங்கம்(UTNS) அமைப்பின் குவைத் மண்டலத்தின் பொறுப்பாளரரும், சமூக ஆர்வலருமான இருளப்பன் அவர்கள் உடல் நலக்குறைவால் நேற்று(23/09/25) திங்கட்கிழமை குவைத் ஜாப்ரியா மருத்துவமனையில் வைத்து மரணமடைந்தார்.

மேலும் குவைத்திலுள்ள சில தமிழ் அமைப்புகளிலும் இணைந்து செயல்பட்டும் வந்த சிறந்த குணமுடைய நபர் ஆவார்.

தற்காலிகமாக மூடப்பட்ட குவைத் வான்வெளியை மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளதாக சற்றுமுன் அதிகாரிகள் அறிவித்தனர்.குவைத் விமா...
23/06/2025

தற்காலிகமாக மூடப்பட்ட குவைத் வான்வெளியை மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளதாக சற்றுமுன் அதிகாரிகள் அறிவித்தனர்.

குவைத் விமானப் போக்குவரத்து அதிகாரிகள், வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட குவைத் வான்வெளியை மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்தனர். நாட்டின் அனைத்து தொடர்புடைய அனைத்து பிரிவுகளின் அதிகாரிகளுடனும் ஒருங்கிணைப்பு மற்றும் பிராந்திய மற்றும் சர்வதேச நிறுவனங்களுடனான தொடர்ச்சியான ஒத்துழைப்பின் அடிப்படையில் நாட்டின் வான்வெளி பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது.

குவைத்தின் சர்வதேச விமான நிலையத்திற்கு வருகின்ற மற்றும் புறப்படுகின்ற விமானப் போக்குவரத்தை இயல்பாக்க முடிவு செய்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். குவைத் வான்வெளி வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக இன்று திங்கள்கிழமை மாலையில் தற்காலிகமாக மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து குவைத் வான்வெளியை மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளதாக புதிய அறிவிப்பை அதிகாரிகள் சற்றுமுன் வெளியிட்டுள்ளனர்.

அதேபோல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமான சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளதாக துபாய் விமான நிலைய அதிகாரிகள் இன்று திங்கட்கிழமை சற்றுமுன் தெரிவித்தன, ஆனால் சில விமானங்கள் இன்னும் தாமதங்கள் அல்லது ரத்து செய்யப்படலாம் என்று எச்சரித்தன. பயணிகள் தங்கள் விமான நிறுவனங்களுடன் சமீபத்திய புதுப்பிப்புகளைச் சரிபார்த்து, பயணத்திற்கு கூடுதல் நேரத்தை அனுமதிக்குமாறு விமான நிலைய இயக்குநர் அறிவுறுத்தினார்.

23/06/2025

#சற்றுமுன்|| 😭குவைத் வான்வெளி மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளது.

குவைத் வான்வெளி மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளாதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக குவைத் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதேபோல் கத்தார், அமீரகம் பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளும் தங்களுடைய வான்வெளியை மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளாத அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இன்று மற்றும் அடுத்த நாட்களில் தாயகம் செல்ல திட்டமிடப்பட்ட அனைவரும் தங்கள் விமான பயணச்சீட்டு பெற்ற ஏஜென்சிகளிடம் விபரங்களை தெளிவாக அறிந்த பிறகு மட்டுமே விமான நிலையம் செல்லுங்கள். குவைத் மற்றும் மற்ற வ‌ளைகுடா நாடுகளில் வசிக்கின்ற அனைவரும் அரசு வெளியிடும் அறிவிப்புகளை பின்பற்றுங்கள். பாதுகாப்பாக இருங்கள், வெளியே செல்ல வேண்டாம்.

பதிவு நேரம் Kuwait Time 09:00 PM
DATE: 23/06/25

Address

Kanyakumari
Nagercoil

Opening Hours

Monday 6:05am - 11:55pm
Tuesday 6:05am - 11:55pm
Wednesday 6:05am - 11:55pm
Thursday 6:05am - 11:55pm
Friday 6:05am - 11:55pm
Saturday 6:05am - 11:55pm
Sunday 6:05am - 11:55pm

Alerts

Be the first to know and let us send you an email when Kuwait Tamil Pasanga posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kuwait Tamil Pasanga:

Share