Kuwait Tamil Pasanga

Kuwait Tamil Pasanga We are covering Gulf news and updates from Bahrain, Kuwait, Oman, Qatar, Saudi Arabia and the United Arab Emirates

குவைத்திலிருந்து விடுமுறைக்கு தாயகம் சென்ற இந்திய இளைஞர்(26) விபத்தில் உயிரிழந்தார்:குவைத்தில் உள்ள அலி அல்கானிம் & சன்ஸ...
04/08/2026

குவைத்திலிருந்து விடுமுறைக்கு தாயகம் சென்ற இந்திய இளைஞர்(26) விபத்தில் உயிரிழந்தார்:

குவைத்தில் உள்ள அலி அல்கானிம் & சன்ஸ் ஆட்டோமொபைல் நிறுவனத்தின் உதிரிபாகங்கள் பிரிவில் இரண்டு ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த கேரளாவை சேர்ந்த லிஜு(26) இரண்டு வாரங்களுக்கு முன்பு விடுப்பில் சொந்த ஊருக்குச் சென்றிருந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணியளவில் கொல்லத்திலிருந்து குண்டாரா நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் எதிர்திசையில் வந்த லிஜுவின் பைக்கின் மீது கட்டுபாட்டை இழந்து பயங்கரமாக மோதியது.

கொய்க்கல் பாலக்கடவு சந்திப்பு அருகே கொல்லம்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்ததில் படுகாயமடைந்த லிஜு, கொல்லத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், ஆனால் சிகிச்சை பலனளிக்காத நிலையில் பரிதாபமாக நேற்று உயிரிழந்தார். சஜி மற்றும் லாலி தம்பதிகளின் மகனான லிஜுவுக்கு லிஜா என்ற சகோதரி உள்ளார். இவருடைய மரண செய்தி குவைத்திலுள்ள அவருடன் வேலை செய்கின்ற நண்பர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

குவைத் நீதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொது நிபுணர்கள் துறையில் இனி வெளிநாட்டினர் யாருக்கும் வேலை இல்லை:குவைத் நீதி அமை...
03/08/2026

குவைத் நீதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொது நிபுணர்கள் துறையில் இனி வெளிநாட்டினர் யாருக்கும் வேலை இல்லை:

குவைத் நீதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொது நிபுணர்கள் துறையில் இனி வெளிநாட்டினர் யாருக்கும் வேலை இல்லை. அத்துறை 100% தேசியமயமாக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் ஒரு விரிவான மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, பொறியியல் நிபுணர்கள், கணக்காளர்கள் மற்றும் சட்ட சம்பந்தப்பட்ட வேலைக்கான ஆராய்ச்சியாளர்கள் உட்பட அனைத்துப் பதவிகளிலிருந்தும் வெளிநாட்டு ஊழியர்களை அமைச்சகம் முற்றிலுமாக நீக்கிவிட்டு, அவர்களுக்குப் பதிலாக தேசிய நிபுணர்களை(குவைத்திகளை) நியமித்துள்ளது.

மே மாதம் நீதித்துறை அமைச்சரும் ஆலோசகருமான நாசர் அல்-சுமைத் அறிவித்த மேம்பாட்டுத் திட்டத்தின் முதல் கட்டமே இந்த முழுமையான தேசியமயமாக்கல் என்று தற்காலிக பொறுப்பு துறைத்தலைவர் டாக்டர் ஃபவாஸ் பௌதி கூறினார். ஆகஸ்ட் முதல் வாரத்திற்குள் வெளிநாட்டு ஊழியர்களின் சேவை நிறுத்தப்படும் என்று நீதி அமைச்சர் மே 9 அன்று அறிவித்திருந்தார்.

தற்போதைய இந்த நடவடிக்கை அதன் தொடர்ச்சியாகும் எனவும், மேம்பாட்டுத் திட்டத்தின் அடுத்த கட்டத்தில் பதவிகளின் பணிச்சுமையைத் திறமையாகப் பகிர்ந்துகொள்வது, சிறந்த தொழில்நுட்ப அறிக்கைகளை விரைவாக வழங்குவது மற்றும் துறையின் சேவைகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்குவது ஆகியவை அடங்கும்.

குவைத் தினாருக்கு இணையான இன்றைய பணப்பரிமாற்ற மதிப்புகள்:
03/08/2026

குவைத் தினாருக்கு இணையான இன்றைய பணப்பரிமாற்ற மதிப்புகள்:

குவைத்தில் விற்பனையாகும் கேரட் வாரியான 1 கிராம் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்:
03/08/2026

குவைத்தில் விற்பனையாகும் கேரட் வாரியான 1 கிராம் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்:

குவைத்தின் ஜலீப் பகுதிகளி்ல் அதிகாரியாக நடித்து வெளிநாட்டினரை ஏமாற்றி வந்தவர் கைதாகியுள்ளான்:குவைத் குற்றப் புலனாய்வுத் ...
03/08/2026

குவைத்தின் ஜலீப் பகுதிகளி்ல் அதிகாரியாக நடித்து வெளிநாட்டினரை ஏமாற்றி வந்தவர் கைதாகியுள்ளான்:

குவைத் குற்றப் புலனாய்வுத் துறை, ஜலீப் அல் ஷுயூக் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரி போல் நடித்து வெளிநாட்டினரைக் கொள்ளையடித்து வந்த ஒரு பிதுணி(குவைத் வசிக்கும் மக்கள் தான் ஆனால் குடியுரிமை இருக்காது) இனத்தவரைக் கைது செய்துள்ளது. அல் ராய் பகுதியில் உள்ள ஒரு முக்கிய வணிக வளாகத்தில் அவர் கைது செய்யப்பட்டார். இதன் மூலம், ஃபர்வானியா மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் அவன் செய்துள்ள சுமார் பத்து கொள்ளைச் சம்பவங்களை விசாரணையில் வெளிப்படுத்தியுள்ளான்.

மேலும் கைது செய்யப்பட்ட பிறகு நடத்தப்பட்ட விசாரணையில்,அவனிடமிருந்து கைப்பற்றப்பட்ட வாகனமும் இதே முறையில் கொள்ளையடிக்கப்பட்டவை என்பதும் தெரியவந்துள்ளது. தனக்கு பயன்படுத்த போதைப்பொருள் வாங்க பண தேவைக்காக அவர் வெளிநாட்டினரைக் குறிவைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஃபர்வானியா மாகாணத்தில் பாதிக்கப்பட்ட பலரிடமிருந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் இந்த விசாரணை தொடங்கப்பட்டது. இந்தப் புகார்களில் மூன்று ஜலீப் அல் ஷுயூக் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டன. குற்றவாளி குவைத் குடிமகன் மாதிரியான உடையில் பாதிக்கப்பட்டவர்களை அணுகி, தன்னை குற்றப் புலனாய்வுத் துறையின் அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். பின்னர், பாதிக்கப்பட்டவர்களிடம் அவர்களின் அதிகாரப்பூர்வ ஆவணங்கள் மற்றும் பணப்பைகளை ஒப்படைக்குமாறு கேட்டு, பணம் உட்பட அவர்களின் உடைமைகளை எடுத்துக்கொண்டு, அவற்றை மீண்டும் பெற்றுக்கொள்ள காவல் நிலையத்திற்கு வருமாறு கூறிவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தான்.

மேலும் இப்படி பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து கிடைத்த புகார்களை ஆய்வு செய்த போது, ​​கைத்தான் மற்றும் ஃபர்வானியா பகுதிகளில் மேலும் ஏழு ஒத்த வழக்குகள் கண்டறியப்பட்டன. குற்றவாளி பயன்படுத்தி வந்த வாகனத்தைக் கண்டுபிடிப்பதற்காக ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. அந்த வாகனம் ஒரு முக்கிய வணிக வளாகத்தை அடைந்துவிட்டதாகத் தகவல் கிடைத்ததும், காவல்துறையினர் பொறி வைத்து, அந்த வாகனத்தையும் குற்றவாளியும் கைது செய்தனர்.

விசாரணையின் போது, ​​குற்றம் சாட்டப்பட்டவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். பின்னர், புகார்தாரர்கள் முன்னிலையில் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர் அடையாளம் காணப்பட்டார். குற்றவாளி மீது எடுக்கப்பட வேண்டிய கூடுதல் சட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணைக்காக அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம் அவரை ஒப்படைத்து உள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

குவைத் மீது ஈராக் படையெடுத்து இன்று 36 ஆண்டுகள் ஆகிறது:
02/08/2026

குவைத் மீது ஈராக் படையெடுத்து இன்று 36 ஆண்டுகள் ஆகிறது:

குவைத்தில் விசிட் விசா வேலை விசாவாக மாற்ற 150 தினார் புதிய உத்தரவு அரசிதழில் வெளியிட்டு நடைமுறையில் வந்துள்ளது:குவைத்திற...
02/08/2026

குவைத்தில் விசிட் விசா வேலை விசாவாக மாற்ற 150 தினார் புதிய உத்தரவு அரசிதழில் வெளியிட்டு நடைமுறையில் வந்துள்ளது:

குவைத்திற்கான விசிட் விசா குடியிருப்பு அனுமதி/பணி விசாவாக(இகாமா) மாற்றுவதற்கு இனி 150 குவைத் தினார் கட்டணம் வசூலிக்கப்படும். வெளிநாட்டினருக்கான குடியிருப்புச் சட்டத்தைத் திருத்தியதன் மூலம் குவைத் அரசாங்கம் இந்தப் புதிய முடிவைச் செயல்படுத்தியுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் 2026-ஆம் ஆண்டுக்கான அமைச்சக ஆணை எண்:1091 ஆனது இ‌ன்றைய(02/08/26) அதிகாரப்பூர்வ அரசிதழான “குவைத் அல்-யோம்மில்” பிரசுரிக்கப்பட்டதன் மூலம் உத்தரவு நடைமுறையில் வந்துள்ளது.

மேலும் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2025-ஆம் ஆண்டுக்கான அமைச்சக ஆணை எண் 2249-இன் சில விதிகளைத் திருத்தி உத்தரவு வெளியாகியுள்ளது. இந்தப் புதிய திருத்தத்தின்படி, நிர்வாக ஒழுங்குமுறை சட்டத்தின் 39-வது பிரிவின் ஒன்பதாவது பத்தியில்,புதிதாக நான்காவது துணைப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி, 16-வது பிரிவின் கீழ் விசிட் விசா வழக்கமான குடியிருப்பு அனுமதியாக மாற்றும் சேவைக்கு 150 தினார் கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.

இதற்கிடையில், வீட்டுப் பணியாளர்கள் மற்றும் அதே பிரிவை(Airticle-20) சேர்ந்தவர்களுக்கு இந்தக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை Airticle-20 பிரிவின் விதிகளுக்கு இணங்க என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்தப் புதிய முடிவை உடனடியாகச் செயல்படுத்துமாறு அனைத்துத் தொடர்புடைய துறைகளுக்கும் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. சட்டத் திருத்தம், அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து(இன்று முதல்) அமலுக்கு வந்துள்ளது.

குவைத்தின் ஜலீப் அல்-ஷுயூக் பகுதியில் நடைபெற்ற சோதனையில் இதுவரை 1253 பேர் கைதாகியுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது:குவை...
01/08/2026

குவைத்தின் ஜலீப் அல்-ஷுயூக் பகுதியில் நடைபெற்ற சோதனையில் இதுவரை 1253 பேர் கைதாகியுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது:

குவைத் காவல்துறை மற்றும் பிற துறைகளை சேர்ந்த அதிகாரிகள் ஒருங்கிணைப்பில் ஜலீப் அல்-ஷுயூக் பகுதியில் நடைபெற்று வரும் விரிவான பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பாதுகாப்பு காரணங்களுக்காகவும், குடியிருப்பு மற்றும் தொழிலாளர் சட்டங்களை மீறியதற்காகவும் தேடப்பட்டு வந்த 1,253 நபர்களை கைது செய்ததாக உள்துறை அமைச்சகம் இன்று(01/08/26) சற்றுமுன் அறிவித்துள்ளது. முதல் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் ஃபஹத் யூசுஃப் சவுத் அல்-சபாவின் வழிகாட்டுதலின் கீழும், சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுடன் ஒருங்கிணைந்தும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இந்த சோதனையில் திருமணத்திற்குப் புறம்பாகப் பிறந்த 36 குழந்தைகள் கண்டறியப்பட்டு, அவர்கள் தங்கள் தாய்மார்களுடன் கூடுதல் நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்தது. குவைத் நகராட்சி 777 விதிமீறல்களை பதிவு செய்தன, அத்துடன் கைவிடப்பட்ட 27 வாகனங்களை கைப்பற்றியது. மேலும் கைவிடப்பட்ட பிற 64 வாகனங்களில் எச்சரிக்கை ஸ்டிக்கர்களை ஒட்டியதுடன் தூய்மைப் பணிகளும் மேற்கொண்டு வருகின்றன.

அதேபோல் சட்டவிரோதமான 1200 குடியிருப்புகளின் மின் இணைப்பைத் துண்டித்தன, இதன் விளைவாக, மின்சாரம், நீர் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் ஃபர்வானியா மாகாணத்தில் மின்சாரப் பயன்பாட்டை 60 சதவீதம் குறைத்துள்ளது. பொதுப்பணி அமைச்சகம் 1,432 பாழடைந்த வீடுகளை அடையாளம் கண்டது, 20 சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகளை நிறுத்தியது மற்றும் அப்பகுதி தெருக்களில் ஏற்பட்ட 60 கழிவுநீர் பெருக்கெடுப்புகளுக்கு
தீர்வும் கண்டுள்ளது. வர்த்தகம் மற்றும் தொழில்த்துறை அமைச்சகம் 256 விதிமீறல் அறிக்கைகளையும் 10 மூடல் உத்தரவுகளையும் பிறப்பித்தது. சுகாதார அமைச்சகம் 784 நபர்களுக்கு சிகிச்சை அளித்தது மற்றும் 61 பேரை மருத்துவமனைக்கு அனுப்பியது. குவைத் தீயணைப்புப்படை 188 மூடல் உத்தரவுகளை பிறப்பித்தது.

அதேபோல் சுற்றுச்சூழல் பொது ஆணையம் 90 விதிமீறல் அறிக்கைகளை வழங்கியது. அவற்றை அரசுத் தரப்பு வழக்கறிஞருக்குப் பரிந்துரைத்து, அதே நேரத்தில் விதிமீறல்களைக் கண்காணிக்க ஆய்வுப் பணிகளையும் தொடர்ந்து செய்து வருகின்றன. உணவு மற்றும் ஊட்டச்சத்துக்கான பொது ஆணையம் 315 விதிமீறல்களை பதிவு செய்து, உணவுப் பொருட்கள் அழிக்கப்பட்டதற்காக 9 அறிக்கைகளையும் பிறப்பித்ததுடன், விதிமீறி செயல்பட்ட 12 நிறுவனங்களை மூட உத்தரவுகளையும் வழங்கியது. மனிதவளத்திற்கான பொது ஆணையம் 376 நபர்களிடம் கள ஆய்வுகளை நடத்தியது, குடியிருப்பு அனுமதிகள் தொடர்பான 129 வழக்குகளைக் கண்டறிந்தது, மேலும் வெளிநாட்டுத் தொழிலாளரில் 110 பேர் அவர்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து நாடுகடத்தல் மையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டன.

01/08/2026

குவைத் வான் பாதுகாப்புப் படைகள் தற்போது ஈரானால் ஏவப்பட்ட ட்ரோன், ஏவுகணை தாக்குதல்களை எதிர்கொண்டு வருகின்றன
01/08/26✔️ 09:25AM✔️

31/07/2026

குவைத் மீது இன்றும் வான்வழித் தாக்குதல் முயற்சியை ஈரான் மேற்கொண்டதாக பாதுகாப்பு அமைச்சகம் சற்றுமுன் அறிவிப்பு விரிவாக Commentயில்

Address

Kanyakumari
Nagercoil

Alerts

Be the first to know and let us send you an email when Kuwait Tamil Pasanga posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kuwait Tamil Pasanga:

Shortcuts

Share