Kuwait Tamil Pasanga

Kuwait Tamil Pasanga We are covering Gulf news and updates from Bahrain, Kuwait, Oman, Qatar, Saudi Arabia and the United Arab Emirates

குவைத் விமான நிலையம் மீதான ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்த இந்தியர் விபரங்கள் வெளியாகியுள்ளது;குவைத் விமான நிலையத்தின் முனை...
03/06/2026

குவைத் விமான நிலையம் மீதான ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்த இந்தியர் விபரங்கள் வெளியாகியுள்ளது;

குவைத் விமான நிலையத்தின் முனையம் 1 மீதான ஈரான் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என உள்துறை செய்தி வெளியிட்டிருந்த நிலையில் உயிரிழந்தவர் இந்தியர் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மன்சூர் அகமது ரஹ்மான்(55) என்ற விபரங்கள் வெளியாகியுள்ளன.

அவர் தனது சொந்த ஊருக்குச் செல்வதற்காக இன்றைய தினம் விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அவர் இன்று குவைத்திலிருந்து பஹ்ரைன் வழியாக மும்பைக்குச் செல்லும் Gulf Airways விமானம் GF 214-ன் பயணி ஆவார். முனையம் 1-ல் பயணப் பதிவு நடைமுறைகளை முடித்துக் கொண்டிருந்தபோது, எமனாக​​ ஏவுகணைச் சிதறல்கள் அவர் மீது தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.

இன்று அதிகாலை முதல் குவைத் மீது இடைவெளி வி்ட்டு ஈரான் மூன்று பயங்கரமான தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் இதுவரை ஒருவர்( மன்சூர் அகமது ரஹ்மான்) உயிரிழந்துள்ளதாகவும், 63 பேர் காயமடைந்துள்ளதாகவும், 7 பேருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் காயமடைந்தவர்களில் 7 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், ஈரான் தாக்குதலில் இந்தியர் உயிரிழந்த விபரம் வெளியான நிலையில் குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளது.

Credit Arab Tamil Daily

குவைத் மீதான  ஈரானின் ட்ரோன் தாக்குதலில் சேதமடைந்த முனையம் 1-ஐ பிரதம‌ர் சற்றுமுன் பார்வையிட்டார்:ஈரான் நடத்திய ட்ரோன் தா...
03/06/2026

குவைத் மீதான ஈரானின் ட்ரோன் தாக்குதலில் சேதமடைந்த முனையம் 1-ஐ பிரதம‌ர் சற்றுமுன் பார்வையிட்டார்:

ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதல்களை தொடர்ந்து, குவைத் சர்வதேச விமான நிலையத்தின் முதல் முனையத்திற்கு(Terminal 1) வந்த பிரதமர் ஷேக் அகமது அல்-அப்துல்லா ஆய்வு பணிகளை மேற்கொண்டார். அவருடன் சிவில் விமானப் போக்குவரத்து பொது ஆணையத்தின் தலைவர் ஷேக் ஹமூத் அல்-முபாரக் அவர்களும் வருகை தந்தார்.

இந்த ஆய்வின் போது, ​​இச்சம்பவத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் தொடர்பான விவரங்கள் குறித்தும், விமான நிலையத்தின் பல்வேறு கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட குறிப்பிடத்தக்க பொருள் சேதங்கள் குறித்தும், அத்துடன் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட தொழில்நுட்ப மதிப்பீடுகள் குறித்தும் அதிகாரிகள் பிரதமருக்கு விளக்கமளித்தனர்.

மேலும், முனையத்தின் மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்குத் தேவையான அனைத்து நடைமுறைகளையும் உடனடியாகச் செயல்படுத்தி, கூடிய விரைவில் முனையத்தை மீண்டும் முழுமையாகச் செயல்பாட்டிற்குத் தயார்படுத்த வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். தாக்குதலுக்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட துரிதமான மீட்பு நடவடிக்கைகளை அவர் வெகுவாக பாராட்டினார்

03/06/2026

|| குவைத் விமான நிலையம் மீதான ஈரான் வான்வழித் தாக்குதல் ஒருவர் உயிரிழப்பு பலர் படுகாயமடைந்தனர்
-வெளியுறவு அமைச்சகம்.

03/06/2026

இன்றைய குவைத் விமான நிலையம் மீதான ஈரான் தாக்குதல் காட்சிகள் 😭😭

BreakingNews|| குவைத் விமான நிலையத்தின் ஒரு பகுதி தாக்குதலில் பலத்த சேதமடைந்துள்ளதன்புகைப்படங்கள் 😭😭பாதிப்புகள் அதிகம் எ...
03/06/2026

BreakingNews|| குவைத் விமான நிலையத்தின் ஒரு பகுதி தாக்குதலில் பலத்த சேதமடைந்துள்ளதன்
புகைப்படங்கள் 😭😭

பாதிப்புகள் அதிகம் என்ற துயரமான தகவல்களும் வெளிவருகின்றன.... அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருப்போம்....

Credit Arab Tamil Daily

  || குவைத் எயர்வேஸ் பாதுகாப்பு கருதி மறு அறிவிப்பு வரும்வரை அனைத்து சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக அறிவி...
03/06/2026

|| குவைத் எயர்வேஸ் பாதுகாப்பு கருதி மறு அறிவிப்பு வரும்வரை அனைத்து சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது:

குவைத்தில் இன்று(03/06/26) புதன்கிழமை காலை முதல் நிலவும் அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு, மறு அறிவிப்பு வரும் வரை தனது அனைத்து சேவைகளையும் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக குவைத் ஏர்வேஸ் அறிவித்துள்ளது.

விமானப் பயண நேரங்களை மாற்றியமைத்த பிறகு, பயணிகளை நேரடியாகத் தொடர்புகொண்டு புதிய பயண நேரங்களைத் தெரிவிப்போம் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைக் கவனமாகக் கடைப்பிடிக்குமாறும், சமீபத்திய தகவல்களுக்கு குவைத் ஏர்வேஸ் இணையதளம் மற்றும் பிற அதிகாரப்பூர்வ சமூக தளங்களைப் பின்பற்றுமாறும் அதிகாரிகள் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

இன்று அதிகாலையில் விமான நிலையத்தின் இந்திய விமானங்கள் உட்பட சர்வதேச விமானங்கள் வந்து செல்கின்ற முக்கியமான முனையம்-1 மீது ஆளில்லா விமானம்(ட்ரோன்) மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தத் தாக்குதலில் விமான நிலையத்தின் பல மின்னனு வசதிகள் கடுமையாக சேதமடைந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் இதனால் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில் குவைத் எயர்வேஸ் இந்த புதிய அறிவிப்பை சற்றுமுன் வெளியிட்டுள்ளது.

Credit Arab Tamil Daily

  || குவைத் விமான சேவை ட்ரோன் தாக்குதலை தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன:குவைத் சர்வதேச விமான நிலையத்தின் மீது இ...
03/06/2026

|| குவைத் விமான சேவை ட்ரோன் தாக்குதலை தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன:

குவைத் சர்வதேச விமான நிலையத்தின் மீது இன்று(03/06/26) அதிகாலையில் நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்று சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.

இன்று அதிகாலையில் விமான நிலையத்தின் இந்திய விமானங்கள் உட்பட சர்வதேச விமானங்கள் வந்து செல்கின்ற முக்கியமான முனையம்-1 மீது ஆளில்லா விமானம்(ட்ரோன்) மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்mடது. இந்தத் தாக்குதலில் விமான நிலையத்தின் பல மின்னனு வசதிகள் கடுமையாக சேதமடைந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மறு அறிவிப்பு வரும் வரை விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், சேவைகள் மற்ற விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்படும் என்றும் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் கூறியதாக குவைத்தின் தினசரி பத்திரிகைகள் மற்றும் செய்தி ஊடகங்கள் சற்றுமுன் செய்தி வெளியிட்டுள்ளன.

Arab Tamil Daily

குவைத்தை குறிவைத்து அதிகாலை முதல் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன:குவைத் மீது இன்று(03/06/26) அதிகாலை முதல் ட...
03/06/2026

குவைத்தை குறிவைத்து அதிகாலை முதல் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன:

குவைத் மீது இன்று(03/06/26) அதிகாலை முதல் ட்ரோன் தாக்குதல் நடத்த முயற்சி நடந்துள்ளதாகவும், வான் பாதுகாப்பு அமைப்புகளைப் பயன்படுத்தி அது தடுக்கப்பட்டு வருவதாகவும் குவைத் இராணுவத் தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் அபாய எச்சரிக்கை சைரன் ஒலித்து வருகிறது. தற்போது கேட்கப்படும் எந்தவொரு வெடிப்புச் சத்தமும், தாக்குதல்களைத் தடுக்கும் வான் பாதுகாப்பு அமைப்புகளின் ஒரு பகுதியே என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாட்டின் தெற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். அமெரிக்க-ஈரான் போர்நிறுத்த அறிவிப்புக்குப் பிறகு, ஒரு வாரத்தில் குவைத் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்படுவது இது மூன்றாவது முறையாகும். இந்த தாக்குதல் உட்பட முந்தைய தாக்குதல்களையும் ஈரான் நடத்தியதாக குவைத் மீண்டும் மீண்டும் கூறி வருகின்றன.

Credit Arab Tamil Daily

01/06/2026

குவைத்தில் நாளை காலை 8 முதல் 12 மணிவரை வெடிப்பு சத்தம் கேட்கும் மக்கள் பயப்பட தேவையில்லை காரணம் இதுதான் விரிவாக Comment-யில்

01/06/2026

குவைத் ஏர்வேஸின் சென்னை-குவைத் விமானம் தாக்குதல் நடவடிக்கைக்கு மத்தியில் இன்று பத்திரமாக தரையிறங்கிய ரேடார் காட்சிகள்:

குவைத் ஏர்வேஸ் சென்னை விமானம் இன்று(01/06/26) அதிகாலையில் குவைத் நாட்டின் வான்வெளியில் நுழைந்து, தாக்குதல் காரணமாக குவைத் வான்வெளியில் இருந்து வெளியேறி, வான்வெளியில் ஸ்டாண்ட்பை முறையில் வைக்கப்பட்டு....

ஏவுகணை எதிர்ப்பு மற்றும் நடவடிக்கை முடிவுக்குப் பிறகு பத்திரமாக தரையிறக்கிய ரேடார் பதிவுகள் வெளியாகியுள்ளன.

Address

Kanyakumari
Nagercoil

Alerts

Be the first to know and let us send you an email when Kuwait Tamil Pasanga posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kuwait Tamil Pasanga:

Share