03/06/2026
குவைத் விமான நிலையம் மீதான ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்த இந்தியர் விபரங்கள் வெளியாகியுள்ளது;
குவைத் விமான நிலையத்தின் முனையம் 1 மீதான ஈரான் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என உள்துறை செய்தி வெளியிட்டிருந்த நிலையில் உயிரிழந்தவர் இந்தியர் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மன்சூர் அகமது ரஹ்மான்(55) என்ற விபரங்கள் வெளியாகியுள்ளன.
அவர் தனது சொந்த ஊருக்குச் செல்வதற்காக இன்றைய தினம் விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அவர் இன்று குவைத்திலிருந்து பஹ்ரைன் வழியாக மும்பைக்குச் செல்லும் Gulf Airways விமானம் GF 214-ன் பயணி ஆவார். முனையம் 1-ல் பயணப் பதிவு நடைமுறைகளை முடித்துக் கொண்டிருந்தபோது, எமனாக ஏவுகணைச் சிதறல்கள் அவர் மீது தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.
இன்று அதிகாலை முதல் குவைத் மீது இடைவெளி வி்ட்டு ஈரான் மூன்று பயங்கரமான தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் இதுவரை ஒருவர்( மன்சூர் அகமது ரஹ்மான்) உயிரிழந்துள்ளதாகவும், 63 பேர் காயமடைந்துள்ளதாகவும், 7 பேருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் காயமடைந்தவர்களில் 7 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், ஈரான் தாக்குதலில் இந்தியர் உயிரிழந்த விபரம் வெளியான நிலையில் குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளது.
Credit Arab Tamil Daily