Kuwait Tamil Pasanga

Kuwait Tamil Pasanga We are covering Gulf news and updates from Bahrain, Kuwait, Oman, Qatar, Saudi Arabia and the United Arab Emirates

19/09/2025

குவைத்தில் இந்தியர் பேட்மிண்டன் மைதானத்தில் மயங்கி விழுந்து இறந்தார்:

குவைத்தில் வேலை செய்து வந்த கேரளா நபர் பேட்மிண்டன் மைதானத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்தியா, கேரளா மாநிலம்,எர்ணாகுளம் மாவட்டம் பெரும்படப்பு பகுதியைச் சேர்ந்த ஜேக்கப்(வயது-43) என்பவர் பேட்மிண்டன் மைதானத்தில் விளையாடி கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

மரண காரணம் மாரடைப்பு என்று தெரியவந்துள்ளது. அவர் தனது குடும்பத்துடன் சால்மியாவில் வசித்து வந்தார். அவரது மனைவி பெயர் பார்வதி, குழந்தைகள் நாதன் மற்றும் நயனா ஆகியோர் என்பதாகும், சால்மியாவின் இந்தியன் எக்ஸலன்ஸ் பள்ளியில் படிக்கின்றனர்.

சட்ட நடவடிக்கைகள் முடித்து உடலை தாயகம் கொண்டு செல்ல தேவையான நடைமுறைகளை கேரளா சமூக சேவை அமைப்பான OICC குழு மேற்கொண்டு வருகிறது.

__________________
தீபாவளி வந்தாச்சு ஊரில் உள்ள உங்கள் குடும்பத்தினருக்கு தரமான பட்டாசுகளை குறைந்த விலையில் வாங்க சிவகாசி "ஸ்டார் வார்ஸ் கிராகஸ்"-யிடம் ஆடர் செய்யுங்கள். எந்த சேதமும் இன்றி 100 சதவீதம் திடமான பேக்கிங் மூலம் உங்கள் வீடுகளுக்கு மிக அருகிலுள்ள பார்சல் சர்வீஸ் நிறுவனத்துக்கே பாதுகாப்பாக அனுப்பி வைப்பார்கள். கூடுதல் விபரங்கள் பெற மற்றும் ஆடர் செய்ய Whatsapp +917397049087

19/09/2025

பிரபலமான ஹைப்பர் மார்க்கெட் நிறுவனம் குவைத்தில் தங்களுடைய சேவையை முற்றிலுமாக நிறுத்தியது:

பிரான்ஸை தலைமையிடமாக கொண்ட மிகப்பெரிய சில்லறை வணிக நிறுவனம் கேரிஃபோர் ஆகும். உலக அளவில் பிரபலமான முன்னணி ஹைப்பர் மார்க்கெட் நிறுவனமான கேரிஃபோர் 1995 ஆம் ஆண்டு அமீரகத்தை தளமாகக் கொண்ட Majid Al Futtaim உடனான உரிம ஒப்பந்தத்தின் மூலம் வளைகுடாவில் நுழைந்தன மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் ஒரு டஜன் நாடுகளில் 390 க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களைக் கொண்டிருந்தது.

இந்நிலையில் 16/09/25 முதல் குவைத்தில் தனது செயல்பாடுகளை முற்றிலுமாக நிறுவனம் மூடியுள்ளது. நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் நீண்டகால ஆதரவு மற்றும் நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்துள்ளது. இந்த செய்தியை வ‌ளைகுடா முன்னனி செய்தித்தாள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது. குவைத்தில் இனி கேரிஃபோர் விற்பனை நிலையங்கள் இருக்காது என்று நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சமீப காலங்களில் ஓமான், ஜோர்டான் மற்றும் பஹ்ரைன் போன்ற நாடுகளிலும் கேரிஃபோர் தனது செயல்பாடுகளை மூடியுள்ளது. விரைவில் அமீரகத்திலும் இதன் செயல்பாடு நிறுத்தப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதற்கு மாறாக MAF தங்களுடைய சொந்த சில்லறை விற்பனை நிலையமான "ஹைப்பர்மேக்ஸாக" இதை மாற்றியுள்ளது.

19/09/2025

குவைத் வீட்டுப் பணியாளர் விசா வழங்கும் முன்னர் வேலைக்காக வருகின்ற நபருடைய முழு விவரத்தையும் முதலாளி அறியும் வசதி அறிமுகம்:

குவைத்தில் வீட்டுப் பணியாளர்களை பணியமர்த்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய சஹால் செயலியில் ஒரு புதிய சேவை(Option) தொடங்கப்பட்டுள்ளது. இந்த புதிய வசதியை பயன்படுத்தி பணியாளரை பணியமர்த்துவதற்கு முன்பு, தொழிலாளியின் முழுமையான தகவல்களை முதலாளி அல்லது ஆட்சேர்ப்பு நிறுவனம் சரிபார்க்க உதவும்.

இந்த புதிய வசதியின் வழியாக கடந்த காலத்தில்(இதற்கு முன்னர்) பணியாளருக்கு வழங்கப்பட்ட விசாவின் விவரங்களை முதலாளி(Sponsor) அறிந்து கொள்ள முடியும். குவைத்தில் நுழைய தடை செய்யப்பட்ட அல்லது பிற காரணங்களால் விசா நிராகரிக்கப்பட்டு அல்லது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நபர்கள் விசா பெறுவதற்காக விண்ணப்பங்களுடன் மீண்டும் வருவதையும், தொடந்து அவை நிராகரிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகளையும் இதன் மூலம் தடுக்க உதவும் என்று உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதற்கிடையே இந்த புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து வேலைக்காக வருகின்ற தொழிலாளியும் தன்னுடைய முதலாளி குறித்த தகவல்களைத் தேடுவதற்கான ஒரு அமைப்பையும் சஹால் செயலியில் ஏற்படுத்த வேண்டும் என்று பலரும் கருத்துகளை பதிவு செய்து வருகி்ன்றனர். அதேபோல் கடந்த தினம் வீட்டு வேலை தொழிலாளர் சம்பள உயர்வு தொடர்பாக சில ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் தவறானவை என்பதை மனிதவள பொது ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது. இன்றுவரை, இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட துறையின் அரசு அதிகாரிகளால் எந்த அதிகாரப்பூர்வ முடிவும் வெளியிடப்படவில்லை என்று ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.

தீபாவளி வந்தாச்சு ஊரில் உள்ள உங்கள் குடும்பத்தினருக்கு தரமான பட்டாசுகளை குறைந்த விலையில் வாங்க சிவகாசி "ஸ்டார் வார்ஸ் கிராகஸ்"-யிடம் ஆடர் செய்யுங்கள். எந்த சேதமும் இன்றி 100 சதவீதம் திடமான பேக்கிங் மூலம் உங்கள் வீடுகளுக்கு மிக அருகிலுள்ள பார்சல் சர்வீஸ் நிறுவனத்துக்கே பாதுகாப்பாக அனுப்பி வைப்பார்கள். கூடுதல் விபரங்கள் பெற மற்றும் ஆடர் செய்ய Whatsapp +917397049087

குவைத் தினாரின் இன்றைய பணப்பரிமாற்ற(Exchange) மதிப்புகள்: இந்திய ரூபாய் = 288.01காலை 06:30 நிலவரப்படி           #الكويت
19/09/2025

குவைத் தினாரின் இன்றைய பணப்பரிமாற்ற(Exchange) மதிப்புகள்:

இந்திய ரூபாய் = 288.01

காலை 06:30 நிலவரப்படி



#الكويت

18/09/2025

குவைத் அரசு சார்பில் பயான் அரண்மனையில் இந்திய தூதரை வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது:

குவைத்துக்கான இந்திய தூதராக இருந்த டாக்டர்.ஆதர்ஷ் ஸ்வைகாவை, அமீரி திவான் விவகாரத்துறை அமைச்சர் ஷேக் ஹமாத் அல்-ஜாபர் அல்-சபா வழியனுப்பினார். முன்னதாக பயான் அரண்மனையில் தூதரை அமைச்சர் வரவேற்றார்.

குவைத்துக்கான இந்திய தூதராக அவரை நியமித்த பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் ஆற்றிய சேவைகளையும், இரு நட்பு நாடுகளுக்கும் மற்றும் இருநாட்டு மக்களுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்த அவர் ஆற்றிய பங்களிப்பையும் அமைச்சர் பாராட்டினார். தூதரின் எதிர்கால சேவைகளை தொடர்ந்தும் சிறப்பாக செய்ய அவர் வாழ்த்து தெரிவித்தார்.

மத்திய வெளியுறவு அமைச்சகத்தால். கடந்த வாரம் கென்யாவிற்கான ஹைய் கமிஷனராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குவைத்துக்கான இந்திய தூதரான டாக்டர் ஆதர்ஷ் ஸ்வைகா குவைத்தை விட்டு வெளியேறுகிறார். இவருக்கு பதிலாக குவைத்திற்கான புதிய இந்திய தூதராக திருமதி.பரமிதா திரிபாதி நியமிக்கப்பட்டார். குவைத் வரலாற்றில் இந்தியாவுக்கான தூதராக பெண்மணி ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். அவர் விரைவில் பொறுப்பேற்று கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குவைத் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் கேரட் வாரியாக பார்ப்போம்:          #الكويتية
17/09/2025

குவைத் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் கேரட் வாரியாக பார்ப்போம்:




#الكويتية

குவைத் தினாரின் இன்றைய Exchange மதிப்புகள்:            #الكويت
17/09/2025

குவைத் தினாரின் இன்றைய Exchange மதிப்புகள்:



#الكويت

17/09/2025

குவைத்தில் லாரி மோதி தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் தப்பியோடிய ஓட்டுநரை அதிகாரிகள் கைது செய்தனர்:

குவைத்தின் ஜஹ்ரா கவர்னரேட் புலனாய்வுத்துறையின் உதவியுடன் குற்றவியல் பாதுகாப்பு விவகாரத்துறை, விபத்தை ஏற்படுத்தி தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடைய ஓட்டுநரை அதிகாரிகள் விரைவாகக் கண்டறிந்து கைது செய்தனர்.

ஒரு வாகனம் தொழிலாளி ஒருவர் மீது
மோதிய பிறகு, சம்பவ இடத்திலிருந்து ஓட்டுநர் தப்பி ஓடியதால், விபத்தில் சிக்கிய நபர் உயிரிழந்ததை அடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக Al-Qasr காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. புலனாய்வுத்துறை அதிகாரிகள் விபத்து தொடர்பான CCTV கண்காணிப்பு காட்சிகளை கைப்பற்றினர். அதில் ஒரு மினி லாரியின் காட்சியும் , ஓட்டுனரின் காட்சிகளும் பதிவாகியிருந்தன. இதையடுத்து போக்குவரத்து துறையின் உதவியுடன் மற்ற பல கேமராக்களைப் பயன்படுத்தி, விபத்தை ஏற்படுத்திய வாகனத்தைக் கண்டுபிடித்ததுடன், ஆப்கானி்ஸ்தான் நாட்டை சேர்ந்தவர் ஓட்டுநர் என்பதையும் அடையாளம் கண்டனர்.

குற்றவாளி Al-Firdous பகுதியில் வாகனத்தை மறைத்து வைத்திருந்தார், ஆனால் காவல்துறையினர் பதுங்கியிருந்த இடத்திலிருந்து ஓட்டுநரை கைது செய்தனர். விசாரணையில் தற்செயலாக விபத்தை ஏற்படுத்தியதாகவும், சட்டரீதியான விளைவுகள் குறித்த பயம் காரணமாக தப்பி ஓடியதாகவும் அவர் ஒப்புக்கொண்டார். ஓட்டுநர் இப்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து கூடுதல் சட்ட நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் பரிந்துரைக்கப்படுவார். விபத்தின் CCTV காட்சி First Comment யில் இணைக்கப்பட்டுள்ளது.

__________________________

குவைத் மற்றும் வளைகுடா செய்திகள் அனைத்தையும் தவறாமல் உடனுக்குடன் பெற Whatsapp Channel Link முதல் Comment-யில் இணைக்கப்பட்டுள்ளது.Click செய்து இணையலாம்.

எங்களை அனைத்து சமூக வலைத்தள பக்கத்திலும் arabtamildaily என்ற பெயரை search செய்து Follow செய்யலாம்🤝

17/09/2025
குவைத்தில் கடந்த 2-நாட்களாக மாறாமல் இருந்த தங்கவிலையில் இன்று  மீண்டும் உயர்வு ஏற்பட்டுள்ளது:Today(16/09/25) Gold Price ...
16/09/2025

குவைத்தில் கடந்த 2-நாட்களாக மாறாமல் இருந்த தங்கவிலையில் இன்று மீண்டும் உயர்வு ஏற்பட்டுள்ளது:

Today(16/09/25) Gold Price in Kuwait🇰🇼



Today(16/09/25) Kuwait 🇰🇼 Exchange Rate✔️இந்திய ரூபாய்க்கு நிகரான குவைத் தினார் மதிப்பு நேற்று 288.01 இருந்த நிலையில் இன...
16/09/2025

Today(16/09/25) Kuwait 🇰🇼 Exchange Rate✔️

இந்திய ரூபாய்க்கு நிகரான குவைத் தினார் மதிப்பு நேற்று 288.01 இருந்த நிலையில் இன்று 1 ரூபாய் இறங்கியுள்ளது.


குவைத் சாலைகள் இன்று ஸ்தம்பித்தன;ஓட்டுநர்கள் நீண்ட நேரம் சிக்னலில் சிக்கிக் கொண்டனர்:குவைத்தில் நேற்று முதல் வகுப்பு மட்...
16/09/2025

குவைத் சாலைகள் இன்று ஸ்தம்பித்தன;ஓட்டுநர்கள் நீண்ட நேரம் சிக்னலில் சிக்கிக் கொண்டனர்:

குவைத்தில் நேற்று முதல் வகுப்பு மட்டும் திறக்கப்பட்ட நிலையில் சாலையில் பெரிய அளவிலான போக்குவரத்து நெரிசல் ஏற்படவில்லை. ஆனால் இன்று(16/09/25) செவ்வாய்க்கிழமை முக்கிய சாலைகள் ஸ்தம்பித்தன.

ஏனெனில் அரசு பள்ளிகள், அரபு தனியார் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் புதிய கல்வியாண்டு இன்று தொடங்கினர். ஓட்டுநர்கள் நீண்ட நேரம் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்த காட்சிகளை பார்க்க முடிந்தது. இந்த கோடையிலும் போக்குவரத்து காவலர்கள் தங்களுடைய பணிகளை சற்றும் தளராமல் சிறப்பாக செய்த காட்சிகளை பல இடங்களில் பார்க்க முடிந்தன. இதற்கிடையே நாளை(17/09/25) புதன்கிழமை மழலையர் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட உள்ளது குறிப்படத்தக்கது

குவைத்திலுள்ள வீட்டு ஓட்டுநரான நண்பர்கள் உங்களுடைய முதல் நாள் அனுபவத்தை Comment பண்ணுங்க

Address

Kanyakumari
Nagercoil

Opening Hours

Monday 6:05am - 11:55pm
Tuesday 6:05am - 11:55pm
Wednesday 6:05am - 11:55pm
Thursday 6:05am - 11:55pm
Friday 6:05am - 11:55pm
Saturday 6:05am - 11:55pm
Sunday 6:05am - 11:55pm

Alerts

Be the first to know and let us send you an email when Kuwait Tamil Pasanga posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kuwait Tamil Pasanga:

Share