
19/09/2025
குவைத்தில் இந்தியர் பேட்மிண்டன் மைதானத்தில் மயங்கி விழுந்து இறந்தார்:
குவைத்தில் வேலை செய்து வந்த கேரளா நபர் பேட்மிண்டன் மைதானத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்தியா, கேரளா மாநிலம்,எர்ணாகுளம் மாவட்டம் பெரும்படப்பு பகுதியைச் சேர்ந்த ஜேக்கப்(வயது-43) என்பவர் பேட்மிண்டன் மைதானத்தில் விளையாடி கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
மரண காரணம் மாரடைப்பு என்று தெரியவந்துள்ளது. அவர் தனது குடும்பத்துடன் சால்மியாவில் வசித்து வந்தார். அவரது மனைவி பெயர் பார்வதி, குழந்தைகள் நாதன் மற்றும் நயனா ஆகியோர் என்பதாகும், சால்மியாவின் இந்தியன் எக்ஸலன்ஸ் பள்ளியில் படிக்கின்றனர்.
சட்ட நடவடிக்கைகள் முடித்து உடலை தாயகம் கொண்டு செல்ல தேவையான நடைமுறைகளை கேரளா சமூக சேவை அமைப்பான OICC குழு மேற்கொண்டு வருகிறது.
__________________
தீபாவளி வந்தாச்சு ஊரில் உள்ள உங்கள் குடும்பத்தினருக்கு தரமான பட்டாசுகளை குறைந்த விலையில் வாங்க சிவகாசி "ஸ்டார் வார்ஸ் கிராகஸ்"-யிடம் ஆடர் செய்யுங்கள். எந்த சேதமும் இன்றி 100 சதவீதம் திடமான பேக்கிங் மூலம் உங்கள் வீடுகளுக்கு மிக அருகிலுள்ள பார்சல் சர்வீஸ் நிறுவனத்துக்கே பாதுகாப்பாக அனுப்பி வைப்பார்கள். கூடுதல் விபரங்கள் பெற மற்றும் ஆடர் செய்ய Whatsapp +917397049087