Nagercoil Central

Nagercoil Central Nagercoil Central is a Community Fully Focused on Social Servicing and Entertaining People.

நேற்றைய வைரல் கண்டெண்ட் இதுதான்..நடிகர் மம்முட்டி, காரைக்குடியில் இருந்து மதுரை செல்லும் வழியில் கூகுள் மேப் திசை மாற்றி...
16/08/2026

நேற்றைய வைரல் கண்டெண்ட் இதுதான்..

நடிகர் மம்முட்டி, காரைக்குடியில் இருந்து மதுரை செல்லும் வழியில் கூகுள் மேப் திசை மாற்றி அலைக்கழிக்கவிட்ட நிலையில், படத்தில் இருக்கும் இந்த நபர், தன்னுடைய டூவீலரில் கிட்டத்தட்ட பத்து கிலோ மீட்டருக்கு வழிகாட்டியாக இருந்து, மதுரை பிரதான சாலையில் அனுப்பி வைத்துவிட்டு வந்தாராம்.

அவரின் இந்த உதவியில் நெகிழ்ந்த மம்முட்டி, "நம்ம ஃப்ரெண்ட்" என தோளில் கைப்போட்டு ஃபோட்டோ எடுத்துக்கொண்டிருக்கிறார். இதில் விசேஷம் என்னவெனில் , உதவிய அந்த நபர் போட்டோ பற்றி யோசிக்காத நிலையில் மம்முட்டியே இனிஷியேட் செய்திருக்கிறார்.. அதுமட்டும் இல்லாமல், இந்த நபர் காருக்கு முன்னால் தனது பைக்கில் வழிகாட்டியாக சென்றதை காரில் இருந்தபடியே வீடியோவாகவும் பதிவு செய்து, மம்முட்டி தரப்பின் வழியாகத்தான் அது இந்த நபருக்கு அனுப்பப்பட்டு சோசியல் மீடியாவிலும் வெளியானது.

மம்முட்டி இதனை வைத்து விளம்பரம் தேடிக்கொள்ளும் ஆள் இல்லை, அவருக்கு அப்படியான அவசியமும் இல்லை. இன்றைக்கும் அவர் சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்தில் இருப்பவர்தான்.. எனினும் இதை அவர் செய்ய காரணம் நன்றி உணர்ச்சி. உதவியதற்கு பணமாக கொடுத்து சிறுமை படுத்திவிடாமல், தனது அன்பினை இப்படியாக அவர் வெளிப்படுத்தி, அந்த நபருக்கு ஒரு மறக்க முடியாத அனுபவமாக மாற்றிக் கொடுத்தது பாராட்டுக்குரியதாகப் பார்க்கிறேன்.

இப்படியான மனிதர்களை ஊர் பக்கம் காண முடியும்.. மம்முட்டி என்று பிரபலங்களுக்குதான் இப்படி வழி சொல்லுவார்கள் என்றில்லை.. வழி தெரியாமல் தடுமாறி நிற்கும் யாருக்கும் இப்படி கூடவே வந்து வீடு வரைக்கும் கொண்டு வந்து விடுகிற ஆட்கள் உண்டு. அதை மகிழ்வாகவும் செய்வார்கள்.. இப்படியான தருணங்களில்தான் மனிதம் மீது பெரு நம்பிக்கை துளிர்க்கும்.

இந்த குறிப்பிட்ட சம்பவத்தில் .. காருக்குள் இருந்து இந்த நபரை வீடியோ எடுத்தபோது, நட்பின் சிறப்பை வெளிப்படுத்தும் தளபதி படத்தின் 'காட்டுக்குயிலு மனசுக்குள்ள' பாடலின் 'பந்தம் என்ன சொந்தம் என்ன' வரியினை மம்முட்டி முணுமுணுத்தபடி அமர்ந்திருப்பது, அவர் என்ன மாதிரி ஓர் உணர்வு நிலையில் இந்த மனிதரை பார்த்து நெகிழ்து போயிருக்கிறார் என்பதனைக் காட்டும் விதமாக டச்சிங்காகவும் இருந்தது.

16/08/2026

திருடர்களிடம் இருந்து காப்பாற்றும் நாய் – நம்பிக்கையான காவலன்!

கன்னியாகுமரிக்குள் நடக்கும் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள. நமது TELEGRAM மற்றும் WHATSAPP சேனல் இணைந்து கொள்ளுங்கள்

WhatsApp Channel: https://whatsapp.com/channel/0029Vb60TGwEVccGFYPmr63G
Telegram Channel: https://telegram.me/nagercoilcentral
page: https://www.facebook.com/NagercoilCentral

ரயில் நிலைய குடிநீரில் E.coli! அதிர்ச்சி தகவல்- 8 ரயில் நிலையங்களின் Water Cooler குடிநீரில் E.coli பாக்டீரியா கண்டறியப்...
16/08/2026

ரயில் நிலைய குடிநீரில் E.coli! அதிர்ச்சி தகவல்

- 8 ரயில் நிலையங்களின் Water Cooler குடிநீரில் E.coli பாக்டீரியா கண்டறியப்பட்டது:

- கோவை, பாலக்காடு ஜங்ஷன், ஹைதராபாத், CSMT, பிவாண்டி ரோடு, கல்யாண், லோனாவலா, மதுர்.

- 105 நிலையங்களில் பிளாட்பார்ம் குடிநீர் குழாய் மாதிரிகளில் E.coli உள்ளிட்ட Total Coliform பாக்டீரியாக்கள் கண்டறியப்பட்டன.

- 59 நிலையங்களில் குடிநீருக்கான பாக்டீரியா பரிசோதனையே மேற்கொள்ளப்படவில்லை; சில இடங்களில் குளோரின் அளவும் சரியான அளவில் இல்லை.

E.coli கலந்த தண்ணீர் குடித்தால்?

- வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, வாந்தி, காய்சல், நீரிழப்பு ஏற்படலாம்.

- இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் (CAG) அறிக்கை

கன்னியாகுமரிக்குள் நடக்கும் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள. நமது TELEGRAM மற்றும் WHATSAPP சேனல் இணைந்து கொள்ளுங்கள்

WhatsApp Channel: https://whatsapp.com/channel/0029Vb60TGwEVccGFYPmr63G
Telegram Channel: https://telegram.me/nagercoilcentral
page: https://www.facebook.com/NagercoilCentral

தமிழகத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் e-KYC அவகாசம்.e-KYC என்றால் என்ன?.e-KYC (Electronic Know Your Customer) என்பது, அரசின...
16/08/2026

தமிழகத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் e-KYC அவகாசம்.
e-KYC என்றால் என்ன?.

e-KYC (Electronic Know Your Customer) என்பது, அரசின் ஆதார் / அடையாள விவரங்களை ஆன்லைனில் சரிபார்க்கும் இணைய வழி முறை ஆகும்.
வாடிக்கையாளரின் உண்மையான விவரங்கள் பதிவாகும்.மானியத் தொகை சரியான வாடிக்கையாளருக்கு செல்வதை உறுதி செய்யும்.
போலி கணக்குகள், தவறான பயன்பாடுகளை தடுக்க உதவும்.
சேவை மேலும் வெளிப்படையாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும்.

கன்னியாகுமரிக்குள் நடக்கும் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள. நமது TELEGRAM மற்றும் WHATSAPP சேனல் இணைந்து கொள்ளுங்கள்

WhatsApp Channel: https://whatsapp.com/channel/0029Vb60TGwEVccGFYPmr63G
Telegram Channel: https://telegram.me/nagercoilcentral
page: https://www.facebook.com/NagercoilCentral

16/08/2026

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் கடந்த 100 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வாவுபலி பொருட்காட்சி முதல் முறையாக பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 101 வது பொருட்காட்சி நடத்தப்பட்டு வந்த நிலையில் குழந்தைகளுக்கான ராட்டினத்தில் விபத்து ஏற்பட்டு 5 பேர் காயம் அடைந்த நிலையில் பொருட்காட்சி சீல் வைக்கப்பட்டு உள்ளது. குழித்துறை நகராட்சி மற்றும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் நடத்தப்பட்டு வந்த பொருட்காட்சி தற்போது ரவுடிகளின் கட்டுப்பாட்டில் நடத்தப்பட்டு வருகிறது. பொருட்காட்சியின் உள்ளே செல்ல 10 ரூபாய் கட்டணம்,ஆனால் வாகனங்களை நிறுத்த 200 ரூபாய் கட்டணம் கட்டாயப்படுத்தி வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதற்கு உடந்தையாக அதிகாரிகளும் இருந்து வருகின்றனர். வரும் காலங்களில் அரசே இந்த பொருட்காட்சியை நடத்த கோரிக்கை எழுந்துள்ளது.

கன்னியாகுமரிக்குள் நடக்கும் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள. நமது TELEGRAM மற்றும் WHATSAPP சேனல் இணைந்து கொள்ளுங்கள்

WhatsApp Channel: https://whatsapp.com/channel/0029Vb60TGwEVccGFYPmr63G
Telegram Channel: https://telegram.me/nagercoilcentral
page: https://www.facebook.com/NagercoilCentral

Address

Nagercoil

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nagercoil Central posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share