Nagercoil நாகர்கோவில்

Nagercoil நாகர்கோவில் நல்லதையே பகிர்வோம்/ உண்மையை பகிர்வோம்/ ஒற்றுமையாய் இணைவோம்!! Nagercoil-Kanyakumari நாகர்கோவில்- கன்னியாகுமரி
(5)

தொண்ணூறுகளில் ரூபாய் பத்துக்கு ஐந்து கலர் கோழி குஞ்சுகள், இன்று உங்கள் ஊரில் கலர் கோழி குஞ்சுகள் என்ன விலை?
31/07/2024

தொண்ணூறுகளில் ரூபாய் பத்துக்கு ஐந்து கலர் கோழி குஞ்சுகள், இன்று உங்கள் ஊரில் கலர் கோழி குஞ்சுகள் என்ன விலை?

புகைப்படம் எடுத்துவிட்டு இவர் அருகாமையில் வந்ததும் என்னமா போர் தண்ணீயா? நல்லாயிருக்குமா மா? என்று பேச்சு கொடுத்து இடைமறி...
31/07/2024

புகைப்படம் எடுத்துவிட்டு இவர் அருகாமையில் வந்ததும் என்னமா போர் தண்ணீயா? நல்லாயிருக்குமா மா? என்று பேச்சு கொடுத்து இடைமறித்தேன்

நல்லா இருக்குமா? குடிச்சி பாருயா, பதநீர் மாதிரி ருசிக்கும் இந்தா குடிச்சிபாரு என்று ஒரு குட்டி குடத்தை முகத்தெதிரே நீட்டினார்

சரி கொடுங்கமா தாகமா தான் இருக்கு" என்று குடத்தை வாங்கி கடகடவென குடிக்க ஆரம்பித்ததும் குடம் ஒரு நிமிடத்தில் காலியானது

அந்நீரில் நீரின் குளிர்ச்சி கூடுதல், நீரின் மணம் கூடுதல், நீரின் சுவை கூடுதல்

அன்று சிறு வயதில் மாந்தோப்பு கிணற்றில் குடித்த அதே நீரின் சுவையை நினைத்து மனம் பின்னோடியது

சட்டையெல்லாம் வழிந்தோடிய நீரை துடைத்தபடியே முனிசிபாலிடி தண்ணீலா குடிக்க மாட்டிங்களாமா? என்றதும்

அதெல்லா குடிக்க மாட்ட ஐயா, அது அந்த முக்குக்கு போனா புடிச்சிட்டு வரலா ஆனா எனக்கு போர் தண்ணீ தான் பிடிக்கும்யா, முனிசிபாலிடி தண்ணீல மருந்து வாட வரும், நா சின்ன புள்ளையில இருந்து போர் தண்ணீ தான் குடிக்குறயா, பழகிடுச்சு, போர் தண்ணீ குடிக்கறதால ஒன்னும் வராது ஐயா, சுத்தமான பூமிதாய் நீர், உடம்புக்கு ஒன்னும் பண்ணாது, ரெண்டு வாய் குடிச்சாலும் தண்ணீ குடிச்ச மாதிரி இருக்கும், பசியே எடுக்காது, குடிச்ச தண்ணீ உடம்புல தண்ணீ ஒட்டும் ஐயா என்றார்

கொஞ்சம் இருங்கமா என்று அவரை இடைமறித்து பையின் இருபக்கத்தில் சொருகி வைத்திருந்த இரு காலி தண்ணீர் பாட்டில்களை எடுத்து ஓடிச்சென்று அருகிலிருந்த மோட்டர் சுவிட்சை போட்டு அதில் நிறைந்தொழுகும் வரை நீர் பிடித்து குப்பிகளால் இறுக்க மூடிக்கொண்டு நிமிரும் போது

எதுவும் பேசாமல் என்னை பார்த்து சிரித்தபடி நின்றுக் கொண்டிருந்தார்

அந்த சிரிப்பின் அர்த்தம் என்ன என்பதை நான் கையில் வைத்திருந்த இரு கார்ப்பரேட் தண்ணீர் பாட்டில்கள் மொழிபெயர்த்தது

என்னமா சிரிக்குறீங்க? புரியுதுமா, நானும் கிராமாத்தான் தான் மா, நானும் கினத்து தண்ணீ குடிச்சி வளர்ந்தவன் தான், ஆனா என்ன பன்றது வேகமான காலம், எல்லா மாறிப்போச்சு மா என்றதும்

சிரித்தார்!

நம்ம ஊர் தண்ணீய ஒரு தடவ குடிச்சிட்டா போதும் அவ்வளவு தான் அது அவங்கள விடாது, இங்கண்ணு இல்ல எங்க போனாலும் சரி முடிஞ்ச அளவு போர் தண்ணீ குடிங்க ஐயா, இல்லணா அத காய்ச்சி குடிங்க, ஒரு நோய் வராது, எனக்கு 82 வயசு எனக்கு நினைவு தெரிஞ்ச காலத்துலயிருந்த இந்த தண்ணீய தான் குடிக்குற, ஒரு நோய் வந்ததில்ல, புள்ளகுட்டிகளுக்கும் கொடுங்க, பூமிதாய் கொடுக்கற இரத்தம் உடம்புக்கு ஒரு துரோகம் வராது, இந்த தண்ணீல மட்டும் தான் ஒரு கலப்படமும் பண்ண முடியாது, நம்பி குடிக்கலாம், சரி நிக்க முடியல வரட்டுமா ஐயா பாத்து போயிட்டுவா ஐயா என்று என்னை தொட்டு ஆசிர்வதித்துவிட்டு அத்தேவதை தள்ளாடியபடி நடந்து சென்று தெருவின் இடம் பக்கம் திரும்பி எனது கண்களிருந்து முழுவதுமாய் மறைந்தது

செய்வதறியாமல் இரு நிமிடங்கள் அங்கு நின்றுவிட்டு நானும் அங்கிருந்து நகர்ந்தேன்

மீண்டும் அவ்வழி போகும் போதெல்லாம் அச்சுவையான நீரை பருகுவதுண்டு

அதன் பிறகு நகரங்களிலும் தேடிப்பிடித்து போர் நீரை பருகுவதுண்டு

ஆனால் அங்கே அந்த தேவதை அளித்த அந்த நீரின் சுவையையும் தன்மையும் நகரின் எந்த நீராலும் கொடுக்க முடியவில்லை

காரணம் அக்கிராமத்திலிருந்த மண்வளமும், மனிதமனமும்

"நீர் இன்று ஒரு பெரும் உலக வியாபாரமானது"

கிணற்று நீர், ஓடை நீர், ஊற்று நீர், சுனை நீர் என்று உட்கொண்டு நூறாண்டுகள் காலம் நோய்யின்றி வாழ்ந்த காட்டிய நமது சித்தர் நாட்டில்

நீங்கள் கையில் வைத்திருக்கும் எங்கள் நிறுவன நீர் பாட்டில் தான் இச்சமூகத்தில் உங்கள் தகுதியையும், ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கும் என்கிறான்

இன்றைய கார்ப்பரேட்.

கேரளா   வயநாடு" வயநாட்டில் கோர தாண்டவமாடிய நிலச்சரிவு.. இருக்குமிடம் தெரியாமல் போன வீடுகள்.. " மலை குவியல் போல் உள்ள மரங...
31/07/2024

கேரளா வயநாடு

" வயநாட்டில் கோர தாண்டவமாடிய நிலச்சரிவு.. இருக்குமிடம் தெரியாமல் போன வீடுகள்.. " மலை குவியல் போல் உள்ள மரங்கள்.. 70க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.. மீட்புப்பணியில் திவிரமாக இறங்கியுள்ள கேரள அரசு..

| | | | |

#ஆழ்ந்த_இரங்கல்கள்....

31/07/2024
வாங்கிய நான்கில் ஒன்று காக்கைக்கு, ஒன்று பூனைக்கு, ஒன்று நோவுக்கு, எஞ்சிய ஒன்று வளர்ந்ததும் விருந்தாடிக்கு.வீட்டில் அடம்...
30/07/2024

வாங்கிய நான்கில் ஒன்று காக்கைக்கு, ஒன்று பூனைக்கு, ஒன்று நோவுக்கு, எஞ்சிய ஒன்று வளர்ந்ததும் விருந்தாடிக்கு.

வீட்டில் அடம்பிடித்து வாங்கி வளர்த்த அனுபவங்கள் தங்களுக்கு உண்டா?

அனைத்து பருவகால பழங்களையும் முதலில் ருசிப்பவர்.
30/07/2024

அனைத்து பருவகால பழங்களையும் முதலில் ருசிப்பவர்.

28/07/2024

Morning vibes Kanyakumari

திருமணமாகப் போகும் தன் மகளுக்கு தாய் கூறும் அறிவுரைகள்....உன் விருப்பம் போலவே உனக்கொரு வரன் வந்திருக்கிறதை கண்டு அப்பாவு...
26/07/2024

திருமணமாகப் போகும் தன் மகளுக்கு தாய் கூறும் அறிவுரைகள்....

உன் விருப்பம் போலவே உனக்கொரு வரன் வந்திருக்கிறதை கண்டு அப்பாவும் நானும் மிகவும் மகிழ்ச்சியுற்றோம். வெகுவிரைவில் உன் திருமணத்தை காண ஆவலாக உள்ளோம். நீ பக்குவப்பட்டிருப்பாய் என தெரிந்தும் சில குறிப்புகளை சொல்கிறேன். மனதில் வைத்துக்கொள்.

• வருடம் முழுவதும் மீனை எதிர் பார்க்காதே. சோற்றில் சாமபாரை பார்த்ததும் என்னிடம் சண்டையிடுவது போல் சண்டையிடாதே. இனியாவது தட்டில் வைக்கும் அத்தனையையும் சாப்பிட கற்றுக்கொள்.

• 25 வருட உணவு சுவையில் பெரும் மாற்றம் வரும். அது சரி, நீ காபியே அடுத்தவர் வீட்டில் குடிக்க மாட்டாய் சுவை மாறும் என்று. என் அன்பு மகளே, எல்லா சுவையும் சுவையே என்று ஏற்றுக்கொள்.

• இது வரை நீ ஓடி ஆடிய வீதி போன்று இருக்குமா? இதுவரை நீ பழகிய மனிதர்கள் போன்று இருப்பார்களா? புது மனிதர்கள் என்று அச்சம் கொள்ளாதே. அன்பு அகில உலகத்திற்கும் பொதுவானது தானே? அவர்களும் மனிதர்கள் தானே? அன்புடன் எவரையும் எதிர்கொள்.அன்பினால் உலகையே ஆளலாம் ஒரு குடும்பத்தை ஆண்டுவிட முடியாதா உன்னால் ?

• அடிக்கடி எனக்கு போன் செய்து உன் புகுந்தகத்தில் நடப்பதை என்னுடன் பகிர்ந்துகொள்ளாதே. அது உன் கணவனுக்கு சலிப்பை தரும். புகுந்தகத்தில் நடப்பதை பிறந்தகத்திற்குள் கொண்டு வராதே.

• உனக்காக ஒட்டு மொத்த குடும்பமும் அனுசரிக்க வேண்டும் என்பதை விட அவர்களுக்காக நீ ஒருத்தி அனுசரித்து செல்லலாம். தவறில்லை.

• எவரையும் இவர் இப்படி தான் என்று நீயாகவே நியாயம் தீர்த்துவிடாதே . எல்லோரும் சந்தர்ப்பவாதிகளே. கொஞ்சம் பொறுத்திருந்து வேடிக்கை பார். ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு நல்ல மனிதம் இருக்கும். அதை அவர்களிடம் புகழ்ந்து பேசு. பிறகென்ன நீ புகுந்தகத்திலும் ராஜாத்தி தான்.

• குடும்பத்திற்குள் சென்ற உடனே குடும்பத்தின் அத்தனை பொறுப்புகளையும் உன்னிடம் கொடுத்து விடுவார்கள் என்று எண்ணாதே. உன் மாமனார் மாமியார் கணக்கில் ஒரு குழந்தை பெற்று, பள்ளி அனுப்பும் வரையில் நீ ஒன்றும் அறியாத பெண் தான். காலம் மாறும். குடும்ப தலைவியாக நீயும், குழந்தைகளாக உன் மாமனார் மாமியும் மாறுவார்கள் அதுவரை பொறுத்திரு.

• உன் விருப்பங்களனைத்தையும் நாங்கள் ஏற்றுக்கொண்டது போலவே அவர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஏங்காதே. ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் ஆதங்கம் கொள்ளாதே. காலை காபிக்கு பதில் அங்கு டீ தான் என்றால் ஏற்றுக்கொள். உன்னால் முடியும் அத்தனை வலிமையையும் உனக்குள் இருக்கிறது.

• தங்கை மீது உன் கணவனுக்கு பாசம் அதிகம் என்றால் ஆதங்கம் கொள்ளாதே. அன்புக்கு அணை கட்டாதே. அது அப்படியே இருக்கட்டும். நாளை உன் மகனும் உன் மகள் மீது அதே அன்பை செலுத்துவான். அன்னையாக நீ மகிழ்வாய் அதை காணும்போது.

• எதை செய்தாலும் உன் கணவனிடமேனும் தெரியப்படுத்திவிடு. ஒளிவு மறைவின்றி வாழ்வது தான் திருமண பந்தத்தின் அஸ்திவாரமே.

• ஆடம்பரத்தை குறைத்து சேமிப்பை பெருக்கு.

• வீணாக இனி எதையும் தூக்கி போடாதே. வீணானதென்று இங்கு ஒன்றும் இல்லை. பொருட்களை பத்திரப்படுத்த கற்றுக்கொள்.

• இது தான் எனக்கு பிடித்த கலர் இது எனக்கு தான் வேண்டும் என்று உன் பிறந்தவர்களிடம் மல்லுக்கட்டுவது போல் அங்கும் மல்லுக்கட்ட நினைக்காதே. இனி நீயும் விட்டுக்கொடுக்க பழகிக்கொள்.

• உன் நண்பர்களை நாங்கள் ஏற்றுக்கொண்டது போல உன் புகுந்தகத்திலும் ஏற்றுக்கொள்ளவார்கள் என கனவு காணாதே. உன் நண்பர்கள் நீ சம்பாதித்த சொத்து அதை பாதுகாக்க வேண்டியது உன் பொறுப்பு.

• அரக்க பறக்க ஓடும் ஓட்டத்தில் பட்டனை தைத்துக் கொடு என்று பாட்டியையும் வேலை வாங்குவாயே அதை நிறுத்திவிடு உன் வேலைகளை பிறர் உதவியின்றி செய்ய கற்றுக்கொள்.

• பின்னாடியே வந்து ஊட்டிவிட்டு உன்னை கல்லூரிக்கு அனுப்ப இனியும் நீ குழந்தை அல்ல. உன்னை இனி நீதான் கவனித்துக்கொள்ள வேண்டும்.

• ரசத்தையும், சட்னியையும் கொதிக்க விட்டுவிடாதே. பருப்பை நன்கு வேக விடு. உன் அவசர Bachelor Room சமையலை புகுந்தகத்தில் காட்டிவிடாதே அன்பு மகளே.யூடியூப் பார்த்தேனும் நிதானமாக சமைக்கக் கற்றுக்கொள்.

• உன் அப்பாவை நீ இங்கேயே விட்டு விட்டு தான் செல்ல போகிறாய். எனவே இனி பொறுப்புணர்ந்து செயல்படு.

• படித்தவள் என்னும் கிரீடத்தை இறக்கி வைத்துவிட்டு காலடி எடுத்து வை. உன் 400 பக்க புத்தகமும் உன் மாமனார் மாமியாரின் 40 வருட அனுபவமும் ஒன்றல்ல.

• உன்னை அழகாக வைத்துக்கொள்வது போலவே உன் இருப்பிடத்தையும் வைத்துக்கொள்.

• வீட்டிற்கு வரும் உன் கணவனின் சகோதரிகளை வெறுமையாக ஒருபோதும் அனுப்பி விடாதே. பிறந்தகத்திலிருந்து ஏதேனும் கொண்டு செல்வது அவர்களுக்கு பெருமை மட்டும் இல்லை அது அளவுகடந்த மகிழ்ச்சியே.

• உறவினர் கண்டு ஓடி ஒளிந்துகொள்வதை இனியும் நீட்டிக்காதே. விருந்தினருக்கு வந்தனம் செய். அவர்களை அவமதிக்காதே.

• உதட்டோரம் ஒரு புன்னகையை எப்பொழுதும் உதிர்த்துக்கொண்டே இரு. அது தான் எங்கள் மகிழ்ச்சியே.

• உணவருந்தும் முன் வீட்டில் அனைவரும் உணவருந்தி விட்டார்களா? என கேட்டு உணவருந்து. மேசை முன் அனைவருக்காகவும் காத்திருக்கவும் பழகிக்கொள்.

• எதை சமைத்தாலும் வீட்டில் முதியவர்களுக்கு முதலில் கொடுத்து விடு.

• குடும்பம் என்ற அமைப்பு சமூகத்தில் இன்னும் இருப்பதற்கு காரணம் பெண்கள் நாமே. அதில் இனி நீயும் முக்கிய பங்கு என்பதை மறந்துவிடாதே. இதை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச்செல்.

• உன் கனவை யாருக்காகவும் கனவாகவே ஆக்கிவிடாதே. பறந்துகொண்டே இரு இன்னும் உயர உயர.

• மேற்சொன்ன அத்தனையும் கேட்பது எளிது தான். அத்தனையையும் எதிர் கொள்ளும் மன வலிமையை இறைவன் பெண்ணுக்குள் அதிகம் வைத்திருக்கிறான் என்பதற்கு இவ்வுலகம் சான்று கொடுக்கும். உனக்கு மனவலிமை அதிகம். பயப்படாதே........

Address

Nagercoil

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nagercoil நாகர்கோவில் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share