15/04/2022
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தந்தை எனப் போற்றப்படும் டாக்டர் அம்பேத்கரின் 131-வது பிறந்தநாள் இந்தியா முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் மத்திய சமூக நீதி துறை அமைச்சர் வீரேந்திர குமார், ``காங்கிரஸ், ஓட்டு அரசியலுக்காக அம்பேத்கரை ஒரு பட்டியலின தலைவராக உருவகப்படுத்தி, அவரின் பெயரைப் பயன்படுத்தியது" என காங்கிரஸைக் கடுமையாகச் சாடியுள்ளார். அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு, செய்தியாளர்களிடம் பேசிய வீரேந்திர குமார், ``ஓட்டு அரசியலுக்காகக், அம்பேத்கரின் பெயரை எடுக்கும் வேலையை காங்கிரஸ் செய்தது. அம்பேத்கருக்கு மரியாதை அளிக்கும் வகையில் எந்தவித நடவடிக்கையையும் காங்கிரஸ் எடுக்கவில்லை....
http://tamil.mrpupil.in/?p=16039