16/12/2025
முன் வரலாற்றுக் காலத் தமிழ்நாடு
முன்வரலாற்றுக்காலத் தமிழ்நாட்டில் வாழ்ந்த மக்கள் பற்றியும் அவர்கள் பேசிய மொழி பற்றியும் அறிவதற்கு இலக்கியமும் குகைக் கல்வெட்டுக்களும் பானை ஓட்டுக் கீறல்களும் தகவல் தந்து உதவுகின்றன. இவற்றின் தரவுகளை வைத்து நோக்குமிடத்து. அக்காலத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்த மக்கள் பல்வகைப்பட்ட சமூகக் குழுக்களையும் இனக்குழுக்களையும் குடிகளையும் சேர்ந் தோராய் அங்கும் இங்கும் பரவிக் காணப்படுகின்றனர். எனினும், இவற்றை எல்லாம் மேவி ஒன்றிணைக்கும் முக்கிய பண்பாட்டம்சம் ஒன்று காணப்படுகின்றது. அதுதான் தமிழ் மொழி, எல்லா மக்கள் குழுக்களையும் இணைக்க உதவும் இன்னொரு அம்சமாக ஓரளவுக்குப் புவியியலும் காணப்படுகின்றது. அதாவது, தமிழ்பேசும் மக்கள் வாழும் இடமாகக் காணப்படும் நிலப்பகுதி -தமிழகம் எனப் பெயர்பெறும் பிரதேசம். இம் மக்களை ஒன்றிணைக்கும் ஒற்றுமைப்பட்ட அரசியல் அமைப்பு எதுவும் இல்லை. வேறு பல இடங்களில் கூறப்படுவது போல், இங்கு வாழும் மக்கள் ஒரு குடியின் வழித்தோன்றல்கள் என்று கூறும் தோற்ற வரலாற்றுக் கதை (Origin Myth) எதுவும் இல்லை. எல்லோரையும் வழிபாட்டின் மூலம் இணைக்க உதவும் மதம் எதுவும் இல்லை. ஆகவே, மக்களை ஒரு குழுவாக இணைப்பதற்கு உதவக்கூடிய முக்கியமான அம்சமாக மொழி காணப்படுகின்றது.
இக் காலத்து இலக்கியத்தில் பல குழுக்களின் பெயர்கள் கிடைக்கின்றன. இவர்கள் தமிழ்மொழியைப் பேசுவோர் என்ற முறையில் இவர்களுக்கு ஒரு பொது அடையாளம் இருந்தது. எனினும், 'தமிழன்' அல்லது 'தமிழர்' என்ற இனக்குழுப் பெயர் ஓரிடத்திலும் இல்லை. ஆனாலும், மேலாதிக்கம் பெற்ற ஒரு குழுவாகத் 'தமிழர்' என்ற இனக்குழு இருந்தது என்று கருத முடியும். தமிழர்எளினும் அயலார் வரலாற்று மூலங்களில் காணப்படுகின்றது. என்ற பெயர் இக்கால இலக்கியத்திலோ கல்வெட்டிலோ இல்லை தொல்கால உரில் பல இடங்களில் இதை ஒத்த நிலை காணப்பட் டது. அதாவது, ஓர் இடத்தில் வாழும் மக்கள் பொதுப் பண்புகளைக் கொண்ட ஓர் இனக்குழுவினர் என்பதை அயலார் கண்டு அக் தழுவினருக்குப் பெயர் ஒன்றை வழங்குவது பல நாடுகளின் வரலாற்றில் இடம்பெறுகின்றது. எடுத்துக்காட்டாக, தொல்காலத்து ஜெர்மானிய மக்கள் தங்களுக்கு 'ஜெர்மன்' என்ற பொதுப் பெயரைக் கொடுக்கவில்லை, அவர்கள் பெருந்தொகையான பழங்குடிக் குழுக்களாகப் பிரிந்து, ஒவ்வொரு பிரிவினரும் சாக்ஸன் (Saxon). ஆங்கிள் (Angles), பிராங்க் (Franks) போன்ற பெயர்களால் தங்களை அடையாளம் கண்டுகொண்டனர். அயலாரே அவர்களைப் பொதுப் பண்புகள் உடைய ஓர் இனக்குழுவினராகக் கருதி 'ஜெர்மன்" என்ற பொதுப் பெயரை அவர்களுக்குக் கொடுத்தனர். தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில், இங்கு வாழ்ந்த மக்களை ஓர் இனக்குழுவினராகச், கண்டு அயலாராகிய ஆந்திரத்து மக்களும் இலங்கையின் ஆதிச் சிங்கள் (ஹௌ) மக்களும் வடநாட்டுப் பிராகிருதமொழி பேசுவோரும் 'தமிழர்' (தமிள/தமெட) என்று அவர்களை அழைத்தனர். இக் காலத் தமிழ் இலக்கியத்தில் 'தமிழ்' என்ற பெயர் மொழிக்கும் மக்களுக்கும் பயன்படுத்தப்பட்டதாகவே தெரிகின்றது.
முன்- இரும்புக் காலம் நீண்டகால விளைவுகளை உண்டு பண்ணும் பெரு மாற்றங்கள் ஏற்பட்ட காலம் (இந் நூலின் அறிமுக உரையைப் பார்க்கவும்). இவை தமிழ்நாட்டில் மேலாதிக்கம் பெற்ற ஓர் இனக்குழுவும் மேலாதிக்கம் உள்ள ஒரு மொழியும் உருவாகுவதற்கு வழிவகுத்தன. பல்வேறு இடங்களில் பரந்திருந்த சிறு சிறு இனக்குழுக்களும் பழங்குடிகளும் மேலோங்கிநின்ற பூர்வீகத் தமிழ் இனக்குழுவின் செல்வாக்குக்கு இலக்காகித் தங்கள் தனித்துவ அடையாளங்களை இழக்கத் தொடங்கின. தமிழ் அல்லாத பிற மொழிகளைப் பேசிய இனக்குழுக்கள் தமிழைத் தம் மொழியாகப் பேசத் தொடங்கின. இத்தகைய முக்கிய மாற்றம் முன்வரலாற்றுக் காலத்தில் நடைபெற்றது எனக் கொள்ளலாம்.முன் இரும்புக் காலத்துக்கு முற்பட்ட காலகட்டத்தில் தமிழ்நாடு எங்கிலும் பல்வேறு மொழிகளைப் பேசும் குழுக்கள் பல இருந்தன எனக் கருதலாம். (இந்நிலையே வரலாற்றுக்கு முற்பட்ட காலத்துச் சமூகங்களில் பொதுவாகக் காணப்பட்டது )"இவ்வாறு பேசப்பட்ட மொழிகளுள் சில திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம். இவற்றுள் ஒன்றாகவே மலையாளத்தின் முன்னோடி மொழி இருந்திருக்கும். சில மொழிகள் ஆஸ்திரோ-ஆசிய மொழிக் குடும்பத்தின் கிளைக் குடும்பமாகிய முண்டா மொழிப் பிரிவைச் சேர்ந்தவையாக இருக்ககலாம். இன்றும் இந்தியாவின் சில பாகங்களில் இப்பிரிவைச் சேர்ந்த மொழிகள் அழிந்துபோகாது பேசப்பட்டு வருகின்றன. இவற்றைவிட மேலும் பல மொழிகள் பேசப்பட்டன என்பதில் ஐயமில்லை. மேலாதிக்கம் பெற்ற மொழியாகத் தமிழ் எழுச்சி பெறப் பிறமொழிகள் படிப்படியாக வழக்கொழியத் தொடங்கின. அவற்றைப் பேசியோர் தமிழ்மொழியைத் தம் மொழியாகப் பேசத் தொடங்கினர். இப்போக்கு, அதாவது தாய்மொழி மாற்றம் படிப்படியாக நடைபெறுவது, முன் இரும்புக் காலத்திலிருந்து முன் வரலாற்றுக் காலத்திலும் நடைபெற்றுக்கொண்டிருந்தது. இலக்கிய மூலங்களில் காணப்படும் சில குறிப்புகள் இதனைப் பிரதிபலிக்கின்றது எனலாம். 'செந்தமிழ் நிலம்' எனச் செம்மையான தமிழ் பேசப்படும் பிரதேசத்தை வர்ணிப்பதையும் செந்தமிழிலிருந்து வேறுபட்ட தமிழைக் கொடுந்தமிழ் என்று வர்ணிப்பதையும் பன்னிரண்டு நிலங்களில் செந்தமிழ் பேசப்படவில்லை என்று கருதப்பட்டதையும் இலக்கியத்தில் காணலாம். செந்தமிழ் நிலம் என்பது ஆதித் தமிழ் இனக்குழு வாழ்ந்த இடம் என்று விளக்கம் கொடுக்கலாம். கொடுந்தமிழ் பேசப்பட்ட நிலங்கள் தமிழ் அல்லாத மொழிகளைப் பேசிய இனக்குழுக்கள் தம் மொழிகளைப் படிப்படியாக இழந்து தமிழைத் தாய்மொழியாகப் பேசிய இடங்கள் என்றும் விளக்கம் கொடுக்கலாம். இந்த நிலங்களுக்கு அப்பால் 'மொழிபெயர் தேயம்'. அதாவது பிற மொழிகள் பேசப்பட்ட பிரதேசம், காணப்பட்டது. மொழி தொடர்பான இவ்வளர்ச்சி முன் இரும்புக் காலத்தில் ஏற்பட்ட ஒரு முக்கிய வளர்ச்சி எனலாம்.
மொழிகளைக் காட்டிலும் கூடிய ஆதிக்கம் பெற்ற மொழியாகத் தமிழ் இதன் பின் முன்வரலாற்றுக் காலம் தொடங்கியபோது ஏனைய எழுச்சிபெற்றிருந்தது இலக்கியம் படைக்கும் தகைமை உடைய பேசிய இனக்குழுவும் ஏனைய இனக்குழுக்களைக் காட்டிலும் மொழியாகவும் அது வளர்ச்சியடைந்திருந்தது, இம்மொழியைப் கூடுதலான ஆதிக்கம் பெற்ற இனக்குழுவாகக் காணப்பட்டது எனலாம். இக்கட்டத்தில் இவர்கள் வாழ்ந்த நிலப்பகுதியாகிய இந்தியாவின் தூர தென் பிரதேசம் 'தமிழ்நாடு' 'தமிழகம்' என்ற பெயர்களைப் பெற்றது. அயலாரும் இங்கு வாழ்ந்தோரை 'தமிள', 'தமெட' என்ற பிராகிருதப் பெயர்களால் குறிப்பிட்டனர். இவர்கள் வாழ்ந்த இடத்தை 'தமிளரட்ட' (தமிழ்நாடு) என அழைத்தனர்.' இந்தியத் தீபகற் பத்தின் தென்பகுதியில் தெளிவாக அடையாளங்காணப்பட்ட ஒரு நிலப்பகுதியாகத் தமிழ்நாடு காணப்பட்டது. இதனைப் புலவர்கள் தமிழகம் என்றும் தமிழ்நிலம் என்றும் பெயரிட்டு வர்ணிப்பதையும் இதன் எல்லைகளைத் தெளிவாகக் குறிப்பிடுவதையும் இதுவே 'தமிழ்கூறு நல்லுலகம் என அடையாளம் காண்பதையும் முன் வரலாற்று இலக்கியத்தில் பார்க்கமுடிகின்றது.
இனக்குழுக்கள்
முன்வரலாற்றுக் காலம் தொடங்கியபோது தமிழ்நாடு முழுவதும் ஒரு சீரான பண்பாடு உடைய இடமாகவோ ஓர் இனக்குழு மட்டும் வாழ்ந்த இடமாகவோ காணப்படவில்லை எனலாம். பல்வேறு பண்பாட்டுக் குழுக்கள் அங்கு வாழ்ந்தன. ஆனால் அக் குழுக்கள் அனைத்தையும் ஒன்றிணைக்கும் சக்தியாகத் தமிழ்மொழி எழுச்சி பெற்றிருந்தது.
வரலாறு தொடங்கிய கட்டத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்த மக்கள் யார்? இவர்கள் முன் இரும்புக் காலத்தில் அங்கு வாழ்ந்த மக்களின் வழித்தோன்றல்கள். புதியவர்களாக வடக்கிலிருந்து வணிகர்களும் மதகுருமாரும் வேறு சிலரும் தமிழ்நாட்டுக்கு வரத்தொடங்கியிருந்தனர். ஆனால் பெருந்தொகையாக எவரும் புலம்பெயர்ந்து வரவில்லை. படையெடுப்புக்களோ மக்களைத் திடீரெனப் புலம்பெயர வைக்கும் நிகழ்ச்சிகளோ நடக்கவில்லை
நாட்டில் ஒரு பல்லின சமூகம் காணப்பட்டது. அதற்குள் புதிய சிறு குழுக்கள் வந்து சேர்ந்தன.
இலக்கியச் சான்று கொண்டு நாட்டில் இருந்த பல்வேறு குழுக்களின் பெயர்களையும் அவற்றைப் பற்றிய சில தகவல்களையும் பெற முடிகின்றது. இவற்றுள் தனியான இனக்குழுக்களாக இருந்தவற்றை இலகுவில் அடையாளங்காண முடியாது. சில பழங்குடிகளாகவும் (Tribes) வேறு சில குடி அல்லது குலம் (Clans) என்ற வகையைச் சேர்ந்தவையாகவும் காணப்படுகின்றன எனலாம். ஒரு சில வெளியே இருந்து வந்த குழுக்கள் ஒன்று மேலாதிக்கம் பெற்ற குழுவாக இருந்தது.
இலக்கியத்தில் பல தடவை குறிப்பிடப்பட்டு முக்கியத்துவம் பெறும் ஒரு குழு வேளிர் குழு ஆகும். வேளிர் பலர் குறுநிலத் தலைவர்களாகப் பல பாடல்களில் சிறப்புப் பெறுகின்றனர் இப் பாடல்களின் காலத்திலும் தங்கள் முதாதையர் பற்றிய மரபுகளை வேளிர் குடியைச் சேர்ந்தோர் பேணி வந்தனர் எனத் தோன்றுகிறது. புறநானூற்றுப் பாடல் ஒன்றில் இருங்கோவேள் என்ற குறுநில மன்னனைப் போற்றுமிடத்து, 'துவரை யாண்டு நாற்பத்தொன்பது வழிமுறை வந்த வேளிருள் வேள' எனப் புலவர் புகழ்ந்துள்ளார். இக் கூற்றினை வைத்து, வேளிர் என்போர் வடக்கே துவாரகை நகரத்திலிருந்து பல தலைமுறைகளுக்கு முன்பே தமிழ்நாட்டுக்கு இடம்பெயர்ந்த யாதவர்கள் எனக் கூறப்படுகின்றது. 'பானை ஓட்டுக் கீறல் ஒன்றும் இதற்குச் சான்றாகக் காட்டப்பட்டுள்ளது. வேளிர் குடியின் ஒரு பிரிவினர் இலங்கைக்கும் புலம்பெயர்ந்தனர் என்றும் அங்குள்ள பிராமிக் குகைக் கல்வெட்டுக்களில் யாதவர்-வேளிர் தொடர்பு பற்றிய சான்று கிடைக்கிறது என்றும் ஒரு கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது
பல பாணர் பாடல்களில் குறிப்பிடப்படும் இன்னொரு குழுவினர் கோசர் இவர்கள் குறுநிலத் தலைவர்களுடைய படைகளில் சேர்ந்து போர்புரிவோராகக் காணப்படுகின்றனர். இவர்கள் நடத்திய போர்கள் பெரும்பாலும் தமிழ்நாட்டின் வடமேற்கு எல்லையில் நடைபெற்றன. இவர்கள் தமிழ்நாட்டுக்கு வெளியே இருந்து புலம்பெயர்ந்து வந்த ஒரு குழுவினர் என்பது கிருஷ்ணசுவாமி ஐயங்காருடைய கருத்தாகும்.
பரதவர் என்ற குழுவினர் தென் தமிழ்நாட்டின் சுரையோரப் பகுதிகளிலும் அப்பால் இலங்கையிலும் வாழ்ந்தனர். அக்காலகட் டத்தில் பல குழுக்கள் தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் பரந்து காணப்பட்டனர் என்பது கவனிக்கத்தக்கது, இவர்கள் பெரும்பாலும் கடல்சார்ந்த தொழில்களில் ஈடுபட்டிருந்தனர். சிறப்பாக இவர்கள் கடல்கடந்த வணிகம், முத்துக் குளிப்பு மற்றும் மீன்பிடி ஆகிய முயற்சி கள் தொடர்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர். தமிழ்ப் பாடல்களில் வரும் குறிப்புகளைப் பார்க்கும்போது இவர்கள் ஒரு தனியான குழுவினர் என்பதில் ஐயமில்லை. இவர்களைப் பற்றிச் சம்பகலக்ஷ்மி இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார்: 'முன்னர் சந்தோஷமான, கிராமியப் பண்புடைய சாதாரண மக்களாகச் சித்திரிக்கப்பட்ட கரையோரப் பரதவர் பின்னர் பரவலாக வணிகம் செய்து தங்கள் பொருளாதார நிலையை உயர்த்திக்கொண்டனர். இதனால் முன்னைவிடச் சிறந்த வாழ்க்கை அவர்களுக்குக் கிட்டியது. கடல் வணிகம் இவர்களுக்கு முக்கிய தொழிலாகியது. இவர்கள் வருணனை வழிபட்டனர் சங்கு இவர்கள் வழிபாட்டில் ஒரு தனிச் சிறப்புப் பெற்றது." இவர் களுடைய தலைவர்கள் சில சந்தர்ப்பங்களில் பாண்டியர்க்கு எதிர்ப்புத் தெரிவித்தனர் என்றும் தோன்றுகிறது.
முன்வரலாற்றுக் காலம் தொடங்கியபோது முழுமையாகத் தமிழ் இளக்குழுவில் இணைந்து காணப்பட்ட ஒரு பழைய இனக்குழுவினர் நாகர் ஆவர். இக்கட்டத்திலும் இவர்களுள் சிலர் தங்கள் வேறான அடையாளத்தை முற்றாக இழக்கவில்லை எனலாம். பரதவரைப் போன்று இவர்களும் இலங்கையில் ஒரு முக்கிய இனக்குழுவினராகக் காணப்பட்டனர். இலங்கையின் பாளி நூல்களில் இவர்களைப் பற்றிய தகவல்கள் பேணப்பட்டுள்ளன. சுதர்ஷன் செனெவிரத்ன நாகர்கள் பற்றித் தெரிவித்துள்ள கருத்து இதுவாகும்: 'இந்தியாவின் கிழக்குக் கரையோரத்திலும் இலங்கையிலும் நாகர்கள் கரையோர நிலப்பகுதிகள், கடல் பிரயாணம், பெருங்கடல் வளங்கள் (எடுத்துக் காட்டாக முத்துக்கள்). மற்றும் உள்நாட்டு வளங்கள் (எடுத்துக் காட்டாக இரத்தினங்கள்) தொடர்பாகக் குறிப்பிடப்படுகின்றனர். இலங்கையின் பிராமிக் கல்வெட்டுக்களின் சான்றினையும் இலக்கிய மரபுகளையும் சேர்த்துப் பார்க்கும்போது தெற்கில் உற்பத்தியானவிலைமதிப்புள்ள பொருட்களை நாகர் கிழக்குக் கரையோரமாக அமைந்திருந்த பண்டமாற்று மையங்களுக்கு எடுத்துச்சென்றதை அறியலாம்." தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் பேணப்பட்டுள்ள பௌத்த மரபுக் கதைகளில் இவர்கள் தனியான ஓர் இனக்குழுவாகஅடையாளங்காணப்பட்டனர் என்பது வெளிப்படுகின்றது. இவர்கள் தமிழ் அல்லாத வேறொரு மொழியைப் பேசினர் என்பது தமிழ்நாட்டுப் பௌத்த மரபுக் கதைகள் மூலம் தெரியவருகின்றது இது பற்றிய ஓர் அரிய குறிப்பு மணிமேகலையில் உள்ளது. பாணர் பாடல்களில் பல நாகர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர். இவர்களுள் சிலர் தமிழ்ப் புலவர்களாகக் காணப்படுகின்றனர். தமிழ் இனக்குழுவுடன் இவர்கள் இணைந்திருந்தனர் என்பதை இது காட்டுகின்றது. குகைக் கல்வெட் டுக்களிலும் பல நாகர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.ஒரு குகைக் கல்வெட்டில் நாகபேரூர் என்ற இடப்பெயரும் காணப்படுகின்றது. நாகர்களை நினைவுபடுத்தும் இடப்பெயர்கள் சில இன்றும் தமிழ் நாட்டில் வழக்கில் இருப்பது கவனிக்கத்தக்கது (நாகர்கோயில். நாகபட்டினம் ). இலங்கையில் யாழ்ப்பாணம் உட்பட்ட வடக்குப் பகுதி தொல்காலத்தில் நாகதீவு/ நாகநாடு எனப்பட்டது.
இலக்கியத்தில் சான்று இல்லாவிட்டாலும் கல்வெட்டுக்களின் மூலம் ஈழவர் என்ற ஓர் இனக்குழு பற்றி அறியக்கூடியதாய் உள்ளது. திருப்பரங்குன்றத்திலுள்ள ஒரு குகைக் கல்வெட்டில் 'இழ குடும்பிகன் ஒருவன் தானம் வழங்குவோனாகக் காணப்படுகின்றான். 'இழ' என்பது 'ஈழ' எனப் படிக்கப்பட வேண்டும் என்று கூறும் ஐராவதம் மகாதேவன் அவர்கள் இக் குடும்பிகன் ஈழவர்களுள் ஒருவன் எனவும் கூறியுள்ளார்." ஈழவரைப் பற்றிய தரவுகள் பிற்பட்ட காலத்துத் தமிழ்க் கல்வெட்டுக்கள் பலவற்றில் கிடைக்கின்றன. ஒன்பதாம் நூற்றாண்டில் மூன்றாம் நந்திவர்மனுடைய வேலூர்ப்பாளையத்துச் செப்பேடுகளிலும் கேரளத்து ஸ்தானு ரவியின் செப்பேடுகளிலும், பின்னர் சோழர் கல்வெட்டுக்களிலும் ஈழவர் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன." ஈழவர் என்போர் ஒரு தனிச் சமூகக் குழுவாகத் தற்காலம் வரை கேரளத்திலும் தமிழ்நாட்டிலும் காணப்படுவதுடன் இவர்கள் தொல்காலத்தில் இலங்கையிலிருந்து (ஈழம் ஸ்ரீ இலங்கை) வந்தவர்கள் என்ற மரபுக் கதைகளையும் பேணி வந்துள்ளனர்.'பாணர் பாடல்களில் தமிழ்நாட்டில்வாழ்ந்தபெருந்தொகையான குழுக்களைப் பற்றி அறிகின்றோம். இவற்றுள் பல முன்னொரு மழவர், எயினர். ஓரி, மறவர் போன்றோர் இத்தகைய குழுவினர் தாலத்தில் தனி இனக்குழுக்களாக இருந்தவை என்று கொள்ளமுடியும். எனலாம். இவர்களைவிட, தலைமைத்துவம் அனுபவித்த பல ஒவ்வொரு குடியும் ஒவ்வொரு முதாதையரின் வழித்தோன்றல்களைக் குடிகளும் ஆங்காங்கே அதிகாரம் செலுத்திக்கொண்டிருந்தன கொண்ட குழுவாக விளங்கியது எனலாம். அதியமான், தொண்டை மான், சேரமான், மலையமான், வெளிமான் ஆகிய பெயர்களுடன் காணப்படுவோர் இத்தகைய குடிகளைச் சேர்ந்தோர் ஆவர்.
இவர்களை விடத் தமிழ்நாட்டுக்குப் புதிதாக வந்த பல குழுக்களும் இருந்தன. இவர்களைப் புலம்பெயர் மாக்கள், வம்ப மாக்கள் மற்றும் மிலேச்சர் போன்ற பொதுப் பெயர்களால் வர்ணித்த பெரும்பாலோர் வடுகர் (வடக்கிலிருந்து வந்தவர்கள்) என்ற பொதுப் னர் வடக்கே இருந்து பலவகைப்பட்டோர் வந்திருந்தனர். இவர்களுள் பெயரைப் பெற்றனர் சிலர் ஆரியர் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றனர் பிற்காலத்தில் வடுகர் என்ற பெயர் ஆந்திரத்திலிருந்து வந்தோரைக் குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டது.
வெளியிலிருந்து வந்து உயர்குழாத்தினருடைய கவனத்தை ஈர்த்த ஒரு குழுவினர் யவனர் ஆவர். சிறிய குழுவினராக இருந்தாலும் உயர்குழாத்தினரைப் பொறுத்த மட்டில் முக்கியத்துவம் பெற்றோராய்க் காணப்பட்டனர். இவர்களைப் பொதுவாகக் கிரேக்க-ரோமர் என அடையாளம் கண்டாலும், யவனர் என வர்ணிக்கப்பட்டோர் மேற்கில் இருந்து வந்தோர் அனைவருமே எனத் தோன்றுகிறது. கிரேக்க-ரோமர் மட்டுமல்லாது மேற்காசியரும் (யூதர்கள்) வட ஆபிரிக்கரும் (எகிப் தியர்) யவனர் என அழைக்கப்பட்டனர். பெரும்பாலான யவனர்கள் வணிகர்களாக வந்து காவிரிப்பூம்பட்டினம், அரிக்கமேடு மற்றும் முசிறி போன்ற முக்கிய துறைகளில் தங்கியிருந்தனர். ரோமருடைய மதுபானத்தையும் பொற்காசுகளையும் பெரிதும் விரும்பிப்பெற்ற தமிழ்நாட்டு ஆட்சியாளரும் பிற உயர்குழாத்தினரும் யவனர் நாடு களிலிருந்து கைவினைஞர்களையும் மெய்க்காப்பாளர்களையும்போராளிகளையும் வருவித்தனர் என்றுருதமுடியும் " யவனப் போராளிகள் வட இந்திய மன்னர்களுடைய படைகளிலும் இருந்தனர்.
இவ்வாறாக முன்வரலாற்றுக் காலத்துத் தமிழ்நாட்டில் பல்வகைப் இப்பிரதேசத்தை ஓர் இனக்குழு வாழ்ந்த இடமாகவே கருதினர் பட்ட குழுக்களும் குடிகளும் இருந்தபோதிலும் வெளியுலகத்தினர் எனலாம். அவ்வாறே, தமிழர் வாழும் இடம் என்ற பொருளைக் கொடுக்கும் பெயராகத் தமிழகம் என்ற பெயர் இக்காலப் பாடல்களில் வருகின்றது. வடநாட்டார் இந்நிலப்பகுதியைப் பிராகிருதத்தில் தமிளரட்ட (தமிழ்நாடு) என்றனர்.
முன்வரலாற்றுக் காலத்தில் தமிழ்நாடு முழுவதிலும் பல்வகைப் பட்ட சமூகக் குழுக்கள் இருந்தாலும், அதன் பெரும்பாகத்தில் ஓர் இனக்குழுவின் ஆதிக்கம் மேலோங்கி ஏனைய குழுக்களைத் தனக்குள் சேர்த்துக்கொள்ளும் போக்குத் தொடங்கியிருந்தது. இப்போக் குக்கு உதவியது அரசியல் ஒற்றுமை அல்ல: நாடு முழுவதையும் ஒன்றிணைக்கும் அரசியல் அமைப்பு அப்பொழுது இருக்கவில்லை. இதற்கு உதவியது சமய ஒற்றுமையும் அல்ல: நாடு முழுவதிலும் ஓர் ஒழுங்குபெற்ற சமயம் அப்பொழுது பரவியிருந்தது என்று கூறுவதற்கில்லை. இப்போக்குக்குத் துணைபுரிந்தது மொழி ஆகும்; தமிழ் மொழி பல்வேறு குழுக்களை ஒன்றிணைக்கத் தொடங்கியிருந்தது. தமிழல்லாத மொழிகளையும் தமிழின் உறவுமொழிகளையும் பேசியோர் படிப்படியாகத் தம் மொழிகளைக் கைவிட்டுத் தமிழைத் தாய்மொழியாகப் பேசத்தொடங்கினர்.
மேலாதிக்கம்பெற்ற இனக்குழு
மேலாதிக்கம்பெற்ற தமிழ் இனக்குழுவைச் சேர்ந்த ஒருவனைத் 'தமிழன்' என்றோ அல்லது பலரைத் 'தமிழர்' என்றோ இக் காலத்துப் பாடல்கள் குறிப்பிடாவிட்டாலும், தமிழ் என்ற சொல் இனத்தையும் மொழியையும் நாட்டையும் சுட்டி நிற்கும் சொல்லாகப் பயன்பட்டது. தமிழகம் என்பது தமிழ் மொழியின் அகம் என்றல்லாது தமிழ் மக்களின் அகம் என்றே விளங்கிக்கொள்ள வேண்டும். தமிழ் என்ற பெயரை மக்களைக் குறிக்கும் சொல்லாகக்கொண்டே பிராகிருதத்தில் தமிள என்ற சொல் பெறப்பட்டுள்ளது.
தமிழ் மொழி
இப்பொழுது தமிழில் கிடைக்கும் மிகப் பழைய இலக்கியமாகிய பாணர் பாடல்கள் இயற்றப்பட்ட காலத்துக்குப் பல நூற்றாண்டு களுக்கு முன்பே தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் ஒரு தனி மொழியாக வளர்ச்சிபெற்றுவிட்டது எனத் தோன்றுகிறது. இப் பாடல்கள் தோன்றிய காலத்தில் இன்றைய தமிழ்நாட்டையும் கேரளத்தையும் உள்ளடக்கிய பிரதேசத்தில் பழந்தமிழ் பரவலாகப் பேசப்பட்டது என்பது தெளிவு எனினும் எல்லா இடங்களிலும் ஒரு சீரான மொழி பேசப்பட்டது என்று கூறமுடியாது
முன்வரலாற்றுக் காலத்தில் தமிழ்நாட்டில் மொழி தொடர்பாகக் காணப்பட்ட நிலையை அறிந்து கொள்வதற்குப் போதிய சான்றுகள் இல்லை. மொழியைப் பற்றி அறிவதற்கு எழுத்து ஆதாரங்கள் தேவை. குகைக் கல்வெட்டுக்கள் எழுத்து ஆதாரங்களாகக் கிடைத்தபோதிலும் அவை நாடு முழுவதிலும் பரவிக் காணப்படுகின்றன என்று சொல்ல முடியாது. பெரும்பாலானவை (70%) மதுரையைச் சுற்றியுள்ள பிரதேசத்தில் (பழைய பாண்டிய நாட்டில்) காணப்படுகின்றன. கேரளத்தில் (பழைய சேர நாட்டின் பெரும்பகுதியில்) எட்கல் என்ற ஓர் இடத்தில் மட்டுமே குகைக் கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. கிழக்கே காவிரி வளம்படுத்திய நிலப்பகுதியில் (பழைய சோழ நாட்டில்) ஒரு கல்வெட்டு மட்டுமே இதுவரை கண்டறியப்பட் டுள்ளது. வடக்கே பழைய தொண்டைநாட்டில் நான்கு கல்வெட் டுக்கள் காணப்படுகின்றன.'' இவற்றை வைத்துத் தமிழ்நாட்டில் இருந்த மொழி வேறுபாடுகளைப் பற்றி அதிகம் அறியமுடியாது. தோகைநூல்கள் உயர்ந்த இலக்கிய மொழியில் இயற்றப்பட்டு இருப்பதால் நாட்டில் பொதுமக்கள் பேசிய மொழி பற்றி அறிய அவற்றைச் சான்றாகக் கொள்ளமுடியாது.
எனினும், தொகைநூல்களுக்குப் பின்னர் வரும் இலக்கிய மூலங்களில் பேணப்பட்டுள்ள மரபுச் செய்திகள் மொழி பற்றிய ஆய்வுக்கு உதவுகின்றன. எல்லாச் சமூகங்களிலும் புலவர்கள் பழைய நிகழ்ச்சிகளைப் பற்றிய மரபுச் செய்திகளைப் பேணிப் பிற்சந்த தியாருக்கு உதவுவதில் முக்கிய பங்காற்றியுள்ளனர். அவ்வாறே தமிழ் இலக்கியத்திலும் வரலாற்று ஆய்வுக்கு உதவக்கூடிய மரபுச் செய்திகள்
புலவர்களால் சேர்க்கப்பட்டுள்ளன எடுத்துக்காட்டாக, தொல்காலத் தில் தமிழ்நாட்டுக் கரையில் ஏற்பட்ட கடல்கோள், பாண்டியர் நகராகிய மதுரை (தென் மதுரை) அழிந்தமை மற்றும் புலவர்களுடைய சங்கம் ஒன்று இருந்தமை போன்ற செய்திகள் புலவர்களால் பேணப்பட்டுக் கிடைக்கும் தகவல்கள். தமிழ்மொழியின் வரலாற்றை ஆய்வுசெய்வோர்க்கு உதவும் வகையில் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் சில செய்திகள் இலக்கியத்தில் பேணப்பட்டுள்ளன. தமிழ் செம்மையாகத் தமிழ்நாடு முழுவதிலும் பேசப்படவில்லை. செம்மையாகத் தமிழ் பேசப்பட்ட இடம் செந்தமிழ்நிலம். இது வெளிப்படையாகக் கூறப்பட்ட செய்தி. இந்த நிலத்துக்கு அப்பால் கொடுந்தமிழ் பேசப்பட்டது; அப்படிப் பன்னிரு நிலங்களில் வேறுபட்ட பல சொற்களையுடைய (திசைச் சொற்கள்) மொழி பேசப்பட்டது. இதுவும் வெளிப்படையாகக் கிடைக்கும் செய்தி. சில உரைநூல்களில் செந்தமிழ்நிலம் எது என்பது விளக்கப்பட்டுள்ளது. இவ் விளக்கங்களை வைத்துச் செந்தமிழ்நிலம் என்பது மதுரையை மையமாகக் கொண்ட, பாண்டியர் ஆட்சிக்கு உட்பட்ட நிலப்பகுதி எனக் காணலாம்." இன்னொரு மரபுச் செய்தியின்படி, பாண்டிய மன்னர் தங்கள் அவையில் புலவர்களை ஆதரித்துச் சங்கம் அமைத்துத் தமிழை வளர்த்தனர் என்றும் அறிகின்றோம்." தமிழ்மொழிக்கும் பாண்டியர் குடிக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருந்தமை மறைமுகமாக வெளிப்படுகின்றது.
இதுவரை கூறப்பட்டவற்றின் அடைப்படையில் ஒரு கருத்தை முன்வைக்கலாம். முன்வரலாற்றுக் காலத்தில் தமிழ்நாடு முழுவதிலும் ஒருமொழி பேசும் ஓர் இனக்குழு மட்டுமே இருந்தது என்று கூறமுடியாது. தமிழ் இனக்குழுவின் ஆதித் தாயகமாகப் பாண்டியர் அதிகாரம் செலுத்திய தென் தமிழ்நாடு விளங்கியது. பாண்டிய மன்னருடைய ஆதரவும் அரச அவை மொழியாகப் பெற்ற அந்தஸ்தும் தமிழ்மொழிக்கு மேலாதிக்கத்தைக் கொடுத்தன. தமிழ்மொழி வளர்ச்சி பெற்று இலக்கிய மொழியாக உயர்வு பெற்றதும் வளர்ச்சியுறாதிருந்த ஏனைய மொழிகள் படிப்படியாக வழக்கொழியத் தொடங்கின.
(அப்படி வழக்கொழிந்து போகாது இன்று வரை தப்பி இருக்கும் ஒரு மொழி நீலகிரியில் வாழும் தொதவர்களுடைய மொழி ஆகும்.)
பிற வளர்ச்சிபெற்ற மொழிகளின் வரலாற்றை நோக்கினால் இதனை விளங்கிக்கொள்ளலாம். எடுத்துக்காட்டாகப் பிரெஞ்சு மொழியின் வரலாற்றைப் பார்க்கலாம். இற்றைக்கு 2000 ஆண்டு களுக்கு முன் இன்றைய பிரான்ஸ் நாட்டை ரோமருடைய படைகள் கைப்பற்றி அதனை ரோமப் பேரரசின் ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவந்தன. அப்பொழுது அங்கு பல்வேறு இனக்குழுக்கள் வாழ்ந்தன. பல மொழிகள் பேசப்பட்டன. பெரும்பாலான மொழிகள் கெல்டிக் (Celtic) குடும்பத்தைச் சேர்ந்தவை. ரோமர் அங்கு தம் மொழியாகிய லத்தீன் மொழியை நிர்வாகத்துக்கும் பிற தேவைகளுக்கும் பயன்படுத்தினர். இதன் விளைவாக லத்தீன் வழியாக வந்த பல பிரதேச மொழிகள் அங்கு தோன்றி முன்னர் பேசப்பட்ட மொழிகளை அழித்தன. காலப்போக்கில் தலைநகராகிய பாரிஸில் பேசப்பட்ட பிரதேச மொழியே பிரெஞ்சு மொழியாகி, நாடெங்கிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேசிய மொழியாகியது. ரொன்ஸில் வலுவுடைய ஓர் இனக்குழுவாக விளங்கிய ஜெர்மானியக் குழுவாகிய பிராங்க் (Franks) குழுவினர்கூடத் தங்கள் ஜெர்மானிய மொழியைக் கைவிட்டுப் பிரெஞ்சு மொழியைத் தாய்மொழியாக ஏற்றுக்கொண்டனர்.
பாண்டியருடைய நிலத்தில் தமிழ் எழுச்சிபெற்று இலக்கியப் படைப்புகளுக்கு உகந்த ஊடகமாக வளம் பெற்றமை பாணர் பாடல்கள் இயற்றப்படுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன் நடைபெற்றது எனக் கொள்ளலாம். பாண்டியர் குடியே தமிழ்நாட்டில் எழுச்சிபெற்ற மிகப் பழைய ஆளுங்குடி எனத் தோன்றுகிறது. பாண்டியர் எனப் பின்னர் தெரிய வரும் பெயர் பழைமையைக் குறிக்கும் 'பண்டு' என்ற சொல்லுடன் தொடர்புடையதாக இருக்கலாம். தமிழ்நாடு பற்றிச் சில பழைமையான தகவல்களைப் பேணியுள்ள இலங்கைப் பௌத்த பாளி நூல்களில் (தீபவம்ஸ, மஹாவம்ஸ போன்றவை) பாண்டியரைக் குறிக்கும் பெயராகப் 'பண்டு' என்ற பெயரே எப்பொழுதும் பயன்படுத்தப்பட்டுள்ளது."இது ஒரு கவனிக்கத்தக்க விஷயம் ஆகும். தொல்காலத்தில் வெளியுலக வணிகர் முத்தையும் சங்கையும் தேடித் தமிழ்நாட்டுத் தென்கரைக்கு வந்தபோது அங்கு அதிகாரம் பெற்றிருந்த பாண்டியரின் முன்னோர்கள் இவ் வணிகத்தால் பயனடைந்து, மதிரை (மதில் சூழ்ந்த இடம்) என்ற நகரை அமைத்துத் தங்கள் வலுவைப் பெருக்கிக்கொண்டன என்றும்
இவர்கள் வளர்ச்சியுடன் தமிழ்மொழியும் வளர்ச்சிபெறத் தொடங்கி ஏனைய தென்னாட்டு மொழிகளைவிட முன்னேற்றமடைந்தது என்றும் ஒரு கருத்தை முன்வைக்கலாம்.
இருந்தாலும், தமிழ்நாட்டில் மேலாதிக்கமுடைய மொழியாக அது தமிழ்மொழியின் முன்னேற்றத்துக்கான காரணம் எதுவாக எழுச்சிபெற்றபின் இன்றைய கேரளம் தவிர்ந்த ஏனைய பிரதே சங்களில் எல்லாக் குழுக்களையும் ஒன்றிணைக்கும் சக்தியாகியது. தமிழ்நாட்டுக்கு வெளியே இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் பிராகிருதத்தின் தாக்கத்தால் பல பழைய மொழிகள் அழிந்து கொண்டிருந்த வேளையில் தமிழ்நாட்டில் செந்தமிழைப் பேணுவதற்கு இலக்கண நூல்கள் எழுதப்பட்டன. தமிழ்நாடு தவிர்ந்த இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் இலங்கையிலும் பிராகிருதத்தில் கல்வெட் டுக்கள் பொறிக்கப்படத் தமிழ்நாட்டில் தமிழில் கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டன.
இவ்வாறாக முன்வரலாற்றுக் காலத்தில் தமிழ் ஒரு சிறப்பிடம் பெறத் தொடங்குவதைக் காணலாம். இக்கட்டத்தில் மொழிக்குத் தெய்வத்தன்மை எதுவும் கொடுக்கப்பட்டதற்குச் சான்று இல்லை. காலப்போக்கில் மொழியானது தமிழ்த்தாய் என்ற நிலைக்கு உயர்த்தப்படுவதையும் தமிழ் அணங்கு என ஒரு தெய்வமாக மாறுவதையும் காணலாம். பாண்டியருடனும் மதுரையுடனும் தமிழ் கொண்டிருந்த தனிப்பட்ட உறவு மேலும் வலுப்படுத்தப்பட்டுச் சைவ மதத்துடனும் தமிழ் இணைக்கப்படுவதைக் காணலாம்.
முன்வரலாற்றுக் காலத்தில் தமிழ்நாடு முழுவதையும் ஒன்றுபடுத்தும் அரசியல் அமைப்பு எதுவும் இல்லாவிட்டாலும் ஒரு பொதுப் பண்பாடு முழு நிலத்தையும் இணைக்க உதவியது. இப்பண்பாட்டு ஒற்றுமையை வளர்ப்பதற்குப் பாணர்கள் முக்கிய பங்களிப்புச் செய்தனர். பல்வேறு குழுக்களின் குறுகிய எல்லைகளைத் தாண்டி அங்கும் இங்குமாகப் புரவலரை நாடிச் சென்ற பாணர் பல்வேறு இடங்களை இணைப்போராய் இருந்தனர். நாட்டில் காணப்பட்ட பொதுப் பண்பாட்டை அவர்களே தெளிவாகக் கண்டனர். அவர்கள் கண்ணுக்குத் தமிழ்நாடு 'பொதுமை சுட்டிய மூவர் உலகம்' ஆகக் காணப்பட்டது." மூவேந்தர் தமிழ்நாட்டை ஒற்றுமைப்படுத்தும் மன்னர் ('தமிழ் கெழு மூவர்') 'இதனை ஏற்றுக்கொள்ளாத ஒரு பாண்டியனைத் 'தண்டமிழ் பொதுவெனப் பொறாஅன்' (தமிழ்நாடு மூவர்க்கும் பொது எனக் கூறுவதைப் பொறுக்கமாட்டாதவன்) என்று குற்றம் சொல்லவும் அவர்கள் தயங்கவில்லை." அடிப்படையான சில பண்பாட்டு அம்சங்களும் தமிழ்மொழியும் நாட்டுக்கு இந்த அடையாள அம்சங்களாக முன்வரலாற்றுக் காலத்தில் எழத் ஒற்றுமையைக் கொடுத்தன.
இவ்வாறாக முன்வரலாற்றுக் காலம் தமிழ்நாட்டில் முக்கியமான பல மாற்றங்கள் ஏற்பட்ட காலமாகும். இந்நூலின் அறிமுக உரையில் கூறியதுபோலப் பல துறைகளிலே வெளி இடங்களுடன் நடைபெற்ற வணிகம். நகராக்கம், விவசாயம் மற்றும் அரசியல் அமைப்பு போன்ற துறைகளில் முக்கியமான வளர்ச்சி ஏற்பட்டது. பல்வகைப்பட்ட சமூகக்குழுக்கள் தமிழ்பேசும் இனக்குழுவினுள் கலந்து தத்தம் தனி அடையாளங்களை இழக்கத்தொடங்கிய காலம். இவற்றின் விளைவாக ஒரு பெரும் தமிழ்பேசும் இனக்குழு எழுச்சிபெறத் தொடங்கியது.
Order on whatsapp.wa.me/919786068908
Price -350