Ooty queen of hills group

Ooty queen of hills group Truth has a Supreme power that comes out like Nature that can never be underestimated.
(2)

*நீலகிரி மாவட்டம் உதகை(RTO)  வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நான் உயிர் காவலன் உறுதிமொழி எடுக்கப்பட்டது.*நீலகிரி மாவட்ட...
09/10/2025

*நீலகிரி மாவட்டம் உதகை(RTO) வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நான் உயிர் காவலன் உறுதிமொழி எடுக்கப்பட்டது.*

நீலகிரி மாவட்டம் உதகை எனது நகரம். அதில் நான் பெருமை கொள்கிறேன்.
சாலையில் அனைவரும் பாதுகாப்பாக இருந்தால், சாலைகள் அனைவருக்கும் பாதுகாப்பாக இருக்கும் என நான் நம்புகிறேன்.
நான் வாகனத்தை இயக்கும் பொழுது தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிவேன், இருக்கை பட்டை (சீட் பெல்ட்) அணிவேன், அலைபேசி (மொபைல் போன்) பயன்படுத்த மாட்டேன். சாலை விதிகளைப் பின்பற்றுவேன்.
நான் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட மாட்டேன்
சாலையில் செல்லும் ஒவ்வொரு உயிரையும் என்னுடையதாக மதிப்பேன்.
சாலைப் பாதுகாப்பு எனது உரிமை மற்றும் எனது கடமை என்பதை நான் அறிவேன்.
எனது நகரத்தை விபத்தில்லா நகரமாக மாற்ற என்னால் இயன்ற அனைத்தையும் செய்வேன்.நான் உயிர் காவலனாக இருப்பேன் என்று உறுதியளிக்கிறேன்🪶🌿

09/10/2025

கரடி 🙄கரடி😻
📢உதகை மேரிஸ் ஹில் ரெக்ஸ் ஸ்கூல் அருகில்
சென் மேரிஸ் சர்ச் சாலையில் நேற்று இரவு சுத்தி பார்க்க வந்த கரடியார்.
வனத்துறையினர் கூண்டு வைத்து கரடியை பிடித்து காட்டில் விட வேண்டும் என்று அப்போது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்🪶🌿

The Nilgiris District PoliceNight Rounds on 08.10.2025நீலகிரி மாவட்டத்தில் இன்று (08.10.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக...
08/10/2025

The Nilgiris District Police

Night Rounds on 08.10.2025

நீலகிரி மாவட்டத்தில் இன்று (08.10.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம்.

உங்கள் பாதுகாப்பு.! எங்கள் சேவை..!

08/10/2025

Just... உதகை லோயர் பஜார் சாலையில் குடிபோதையில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்தவர் நான்கு சக்கர வாகனம் மற்றும் இரு சக்கர வாகனம் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது தகவல் கிடைத்தவுடன் நகர மன்ற தலைவர் மற்றும் அப்பகுதி நகரமன்ற உறுப்பினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார் உடனடியாக காவல்துறையினர் வந்து போக்குவரத்தை சீரமைத்து குடிபோதையில் வாகனத்தை ஓட்டிய வரை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அந்த சாலையில் அடிக்கடி இது போன்ற விபத்துக்கள் ஏற்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது 🪶🌿

07/10/2025
07/10/2025
07/10/2025

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா வாகன ஓட்டியாக முதன் முறையாக கங்கா என்ற பெண் அறிமுகமாகியுள்ளார்
இதுவரையிலும் பல பெண்கள் ஆட்டோ ஓட்டி வருகின்றனர் ஆனால் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா வாகனமான நான்கு சக்கர வாகனம் ஓட்டும் முதல் பெண்மணி என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார் இன்று சேரிங்கிராஸ் பகுதியில் இவரை உதகை நகர‌ காவல் துறை‌ துணை கண்காளிப்பாளர் அவர்களுடன் உதகை நகர‌ போக்குவரத்து துணை ஆய்வாளர் ஆகியோர்‌ கங்காவிற்கு நேரில் வாழ்த்துக்களை தெரிவித்தனர் இதன் மூலம் நீலகிரி மாவட்டத்தில் அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னிற்கின்றனர் என்பது சிறப்பிற்குரியதாக அமைந்துள்ளது🪶🌿

உதகை அருகே சரக்கு வாகனம் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.நீலகிரி மாவட்டம், உதகையை அடுத்த ...
07/10/2025

உதகை அருகே சரக்கு வாகனம் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.
நீலகிரி மாவட்டம், உதகையை அடுத்த எடக்காடு காந்தி கண்டி பகுதியைச் சோ்ந்தவா் பால்ராஜ் . இவா் அந்தப் பகுதியில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறாா். இவரது மகன்கள் ஸ்ரீசாந்த் (16), கிருத்திக் (15). இதில் ஸ்ரீசாந்த் கோவையில் உள்ள பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
கிருத்திக் எடக்காடு பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறாா். இந்நிலையில் காலாண்டு விடுமுறை முடிந்து திங்கள்கிழமை பள்ளிகள் தொடங்கியதால் கோவைக்கு செல்ல திட்டமிட்ட ஸ்ரீசாந்த், அதற்கு முன்னதாக எடக்காடு பள்ளியில் தம்பியை விடுவதற்காக உறவினா் ஒருவரிடம் இருசக்கர வாகனத்தை வாங்கிக் கொண்டு தம்பியை பள்ளியில் விட்டுவிட்டு காந்திகண்டிக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்து அவரது வாகனம், எதிரே வந்த சரக்கு வாகனத்தின் மீது மோதியது. மோதிய வேகத்தில் இருசக்கர வாகனம் இரண்டாக உடைந்தது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஸ்ரீசாந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலின்பேரில் மஞ்சூா் காவல் ஆய்வாளா் நிா்மலா, உதவி ஆய்வாளா் பாலசிங்கம் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று உடலை மீட்டு உதகை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா். இந்த விபத்து குறித்து மஞ்சூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்."🪶🌿

The Nilgiris District PoliceNight Rounds on 06.10.2025நீலகிரி மாவட்டத்தில் இன்று (06.10.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக...
06/10/2025

The Nilgiris District Police

Night Rounds on 06.10.2025

நீலகிரி மாவட்டத்தில் இன்று (06.10.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம்.

உங்கள் பாதுகாப்பு.! எங்கள் சேவை..!

*உதகமண்டலம் நகராட்சி நிர்வாகம் குறிப்பாக சுகாதாரத்துறை கவனத்திற்கு*இவங்களுக்கெல்லாம் அபராதம் போட மாட்டீங்களா சார் ?நீலகி...
06/10/2025

*உதகமண்டலம் நகராட்சி நிர்வாகம் குறிப்பாக சுகாதாரத்துறை கவனத்திற்கு*
இவங்களுக்கெல்லாம் அபராதம் போட மாட்டீங்களா சார் ?
நீலகிரி மாவட்டம் ஊட்டி சேரிங் கிராஸ் காம்ப்ளக்ஸ் வளாகத்தில் பல வருடங்களாக தேங்கி நிற்கும் நீர் கருப்பு மற்றும் பச்சை நிறமாக வண்ணமயமாக மாறிக் கொண்டிருக்கும் அவல நிலை. சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வந்து செல்லும் சாலையில் இதுபோன்ற அவல நிலை வருந்தக்கூடிய விஷயமாக இருக்கின்றது அது மட்டுமல்லாமல் அங்கு கடை வைத்திருப்பவர்கள் மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் சகித்துக் கொண்டு வாழ்கின்றார்கள் மேலும் நோய் பருவம் அபாயத்தில் அனைவரும் இருக்கிறார்கள். சம்பந்தப்பட்டவர்கள் இதை கண்டு கொள்ளாததால் நகராட்சி நிர்வாகம் இதை தன் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு சம்பந்தப்பட்டவர்களை கடுமையாக எச்சரிக்க வேண்டும் . மேலும் அபராதங்கள் போட்டால் அவர்களுக்கு சீரமைத்து தர வேண்டும் என்று மனம் வரும் . இந்த விஷயத்தில் உடனடியாக நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சீரமைத்து கொடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் 🪶🌿

05/10/2025

05-10 - 25 Evening Found a dog near ooty Hill bunk if someone know about the owner of the Dog plz contact :
80722 07644🪶🌿

05/10/2025

உதகையில் துவங்கியது மழை🌧🪶🌿

Address

Ooty
643001

Telephone

+919600458388

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ooty queen of hills group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share