NSPMediaPalani

NSPMediaPalani Freelancer Service

01/04/2025
அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரியின் 59ஆவது ஆண்டு விழா 29.03.2025 காலை 11.00 மணிக்கு கல்லூரி வழிபாட்...
01/04/2025

அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரியின் 59ஆவது ஆண்டு விழா 29.03.2025 காலை 11.00 மணிக்கு கல்லூரி வழிபாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் (பொ) முனைவர் மு.ஆனந்தி வரவேற்புரை மற்றும் கல்லூரியின் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்து தலைமை உரையாற்றினார். அறங்காவலர் குழு உறுப்பினர் க.தனசேகர் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக இந்திய அரசின் வருமான வரித்துறை ஆணையர் திரு வி. நந்தகுமார் ஐ ஆர் எஸ் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் பணி நிறைவு பெற்ற நான்கு பேராசிரியர்களுக்கு நிர்வாகம் சார்பாக பாராட்டு தெரிவித்து கௌரவிக்கப்பட்டனர். பின்னர் பல்கலைக்கழக அளவில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் பல்வேறு அறக்கட்டளை சார்பாக பரிசுகளும் பண முடிப்புகளும் வழங்கப்பட்டன. புது தில்லி மற்றும் சென்னையில் நடைபெற்ற குடியரசுத் தின விழா அணிவகுப்பில் கலந்து கொண்ட தேசிய மாணவர் படை மாணவர்களுக்கும் சர்வதேச அளவிலான சதுரங்க போட்டியில் பரிசு பெற்ற மாணவருக்கும் சிறப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் துணை ஆணையர் ரெ.சா. வெங்கடேஷ் மற்றும் அறங்காவலர்கள் திரு சு. பாலசுப்பிரமணி,திருமதி சி. அன்னபூரணி மற்றும் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்தியப் பண்பாட்டுத் துறை தலைவர் பேராசிரியர் முனைவர் சி.ஸ்ரீ ராஜா நன்றியுரையாற்ற விழா இனிதே நிறைவடைந்தது. ஆண்டு விழாவிற்கான நிகழ்ச்சி ஏற்பாட்டினை இந்தியப் பண்பாட்டுத் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

13/03/2025

பழனி மாரியம்மன் திருக்கோயில் திருவிழா ரத ஊர்வலம்

Address

Palani
624601

Website

Alerts

Be the first to know and let us send you an email when NSPMediaPalani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share