Kaattaaru காட்டாறு

Kaattaaru காட்டாறு ஆரியப் பண்பாட்டு அழிப்புப் போரில் ...

தோழர் பெரியார் அறிமுகப்படுத்திய திராவிடர் பண்பாட்டை வாழ்வியலாகப் பின்பற்றுவோருடன் கைகோர்த்து - புதியவர்களுக்கு வழிகாட்டுவதே காட்டாறு.

ஜாதி, ஆணாதிக்கங்கள் தொடரும் வரை                                                  சமையலறை உடைப்புகளும் தொடரும்!பெண் விடுத...
01/05/2025

ஜாதி, ஆணாதிக்கங்கள் தொடரும் வரை சமையலறை உடைப்புகளும் தொடரும்!

பெண் விடுதலை, ஜாதி ஒழிப்பு ஆகிய நோக்கங்களை அடிப்படையாக வைத்து ஒன்றிய, மாநில அரசுகளுக்கும், மக்களுக்கும் 'திராவிடர் தளம்' பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளது. அந்தக் கோரிக்கைகள் குறித்து அரசு கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக 'சமையலறை உடைப்புப் போராட்ட'த்தை நடத்துவது என்றும் அறிவித்தது. அதற்காக கடந்த 2023 செப்டம்பர் முதல் 2025 மே 1 வரை பல வடிவங்களில் தொடர் பிரச்சாரங்களை நடத்தியது.

அந்தக் கோரிக்கைகளில் சில தமிழ்நாட்டு அரசின் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டு பட்ஜெட்களிலும் சில அறிவிப்புகள் வழியாகவும் செயலுக்கு வந்தன. அதாவது,

• விஸ்வகர்ம யோஜனா திட்டத்திற்கு எதிராக ‘கலைஞர் கைவினைத் திட்டம்.’
• பணிபுரியும் பெண்களுக்காக 17 சிப்காட் வளாகங்களில் ‘குழந்தைகள் காப்பகத் திட்டம்.’
• முதியோர்களைப் பராமரிக்க ‘அன்புச்சோலை’கள் திட்டம்.
• தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில், சென்னையில் இரண்டு ‘முதியோர் இல்லங்கள்.’
• உள்ளாட்சி அமைப்புகளின் வணிக வளாகங்களில் பட்டியல் ஜாதி மக்களுக்கும் உரிமை வழங்கும் ‘தாட்கோ வணிக வளாகத் திட்டம்.’
• பட்டியல் ஜாதி மக்கள் வாழும் பகுதிகளை காலனி என்று ஒதுக்குவதைத் தடுக்கும் அறிவிப்பு.

இவை அனைத்தும் திராவிடர் தளம் எழுப்பிய கோரிக்கைகள். எங்களைப் போல, மேலும் சில இயக்கங்களும் இந்தக் கோரிக்கைகளை எழுப்பியிருந்தன.

இருப்பினும், பாலின சமத்துவப் பார்வையில், முக்கியக் கோரிக்கையான ‘கலைஞர் பொதுச் சமையலறை’ போன்ற சில முக்கியக் கோரிக்கைகள் தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக, ‘பொதுச் சமையலறைகள் உருவாகட்டும்! வீட்டுக்கொரு சமையலறை எனும் முறை ஒழியட்டும்!’ எனும் முழக்கத்தை முன்வைத்து மே 1 ஆம் தேதி, திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக ‘சமையலறை உடைப்புப் போராட்டம்’ நடத்தத் திட்டமிடப்பட்டது.

பொது இடத்தில் சமையலறை போன்ற ஒரு வடிவத்தை உடைப்பது சட்டம் ஒழுங்கு சிக்கலாக மாறும் எனக்கூறி, சமையலறையை உடைப்பதற்கு அனுமதி மறுத்து, ஆர்ப்பாட்டத்திற்கு மட்டும் காவல்துறை அனுமதி வழங்கியது.

எனவே, தோழர்கள் அவரவர் வீடுகளில், அவரவர் பணத்தைக் கொண்டு அவரவரது எண்ணத்தின் அடிப்படையில் அடுப்பங்கரையை உருவாக்கினோம். அந்த வடிவத்தை, இன்று (01.05.2025) காலை அனைவரும் தங்களது வீடுகளில் உடைத்தெறிந்தனர். அதன் பிறகு திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு காலை 10 மணியளவில் நடந்த கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

திராவிடர் தளம் ஒருங்கிணைப்பாளர் சேவூர் தோழர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற, இந்த ஆர்ப்பாட்டத்தில், சமையலறைகளை உடைத்தெறிந்த பெருந்துறை பரிமளா, புவனா, அவிநாசி திவ்யா, பெதப்பம்பட்டி கவிதா, பல்லடம் தீபா, தாமரை, சுமதி, ரேவதி, கௌரி ஆகிய தோழர்கள் முன்னிலையில் நூற்றுக்கணக்கான தோழர்கள் பங்கேற்றனர்.

திராவிடர் கழக மாவட்டத் தலைவர் தோழர் யாழ்.ஆறுச்சாமி, தந்தை பெரியார் திராவிடர் கழக மாநிலப் பொறுப்பாளர் தோழர் இல.அங்கக்குமார், மாவட்டப் பொறுப்பாளர் அகிலன், மாஸ்கோ நகர் இரமேஷ், ஆதித்தமிழர் பேரவையின் துணைப் பொதுச்செயலாளர் தோழர் அர.விடுதலைச்செல்வன், தமிழ்ப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் இளவேனில், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் பொறுப்பாளர் தோழர் ஜெய்.அப்துல்லா, நவீன மனிதர்கள் அமைப்பின் தலைவர் தோழர் பாரதி சுப்பராயன், சாக்கிய அருந்ததியர் சங்கப் பொறுப்பாளர் தோழர் தம்பி, மற்றும் காட்டாறு வெளியீடு தோழர் அதி அசுரன் ஆகியோர் பங்கேற்றுக் கருத்துரை வழங்கினார்கள்.

திராவிடர் தளம் தோழர்கள் திருப்பூர் பாலு, சண்முகம், பல்லடம் நாராயணமூர்த்தி, வடிவேல், மணிகண்டன், பெருந்துறை செந்தில் ஆகிய தோழர்கள் உரிய ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

ஜாதி ஒழிப்பு, பெண் விடுதலை ஆகிய தளங்களில் திராவிட மாடல் அரசு ஒவ்வொரு சட்டமன்றத் தொடரிலும், ஒவ்வொரு முற்போக்குத் திட்டங்களை அறிவிக்கிறது. இன்னும் பலவற்றைச் சாதிக்கத் தயாராக உள்ளது. அந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான சமுதாயச் சூழலை உருவாக்குவதே, இன்றைய சமுதாய இயக்கங்களின் முக்கியக் கடமை. அதை திராவிடர் தளம் தொடர்ச்சியாகச் செய்து வருகிறது. அதன் ஒரு வடிவம் தான் இன்றைய ‘சமையல் உடைப்புப் போராட்டம்.’

ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு ஊர், ஒவ்வொரு ஊரிலும் சேரிகள், காலனிகள், ஊர் – சேரி எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு சமையலறை, ஒவ்வொரு சமையலறையிலும் மனைவி, மகள், சகோதரி போன்ற யாரோ ஒரு பெண் சமையலறை அடிமையாக இருப்பது என்ற இந்த சமுதாய அமைப்பு ஒழியும் வரை சமையலறை உடைப்புப் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடக்கும். இன்று ஒரு தொடக்கம்.

பல மாதங்களாக இந்தப் போராட்டத்தின் கோரிக்கைகளைத் தெருத் தெருவாகப் பரப்புரை செய்த தோழர்களின் உழைப்புக்கும், மக்களின் ஆதரவுக்கும், தோழமை அமைப்புகளின் ஆதரவுக்கும், திராவிடர் தளத்தின் நன்றி. பரப்புரைகளும், போராட்டங்களும் தொடரும்.

- திராவிடர் தளம்

#திராவிடர்தளம்

மனைவி - கணவன் இருவரும் வேலைக்குச் செல்வதற்கு வசதியாக அரசே குழந்தை வளர்ப்பு மய்யங்களை (Creche) உருவாக்கு!- என்ற சமையலறை உ...
07/02/2025

மனைவி - கணவன் இருவரும் வேலைக்குச் செல்வதற்கு வசதியாக அரசே குழந்தை வளர்ப்பு மய்யங்களை (Creche) உருவாக்கு!

- என்ற சமையலறை உடைப்பு போராட்ட கோரிக்கையை விளக்கும் வீடியோ 'O Pen Talkz' YouTube Channel இல் வெளியாகியுள்ளது.

வீடியோ இணைப்பு: https://youtu.be/Oy2dPSBW2oI?si=PyhecGInqn8usQFX

"பெரியாருக்கும், அம்பேத்கருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை" என்று உளறிக் கொண்டிருப்பவனுக்கு பதில் தரும் வாய்ப்பாக, இளைஞர்க...
25/01/2025

"பெரியாருக்கும், அம்பேத்கருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை" என்று உளறிக் கொண்டிருப்பவனுக்கு பதில் தரும் வாய்ப்பாக, இளைஞர்கள் ஒருங்கிணைக்கும் தலித் மற்றும் சிறுபான்மையினருக்கான அரசியல் விழிப்புணர்வு பயிற்சி வகுப்பில், காட்டாறு வெளியீடு தோழர் அதி அசுரன், "அம்பேத்கரும் பெரியாரும்: பொருத்தப்பாடு" எனும் தலைப்பில் உரையாற்றுகிறார்.

நாள்: 26.01.2025, காலை 10 மணி.
இடம்: திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகிலுள்ள வாழ்க வளமுடன் அரங்கம்.

#திராவிடர்தளம்

2026 தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பது என்பதை மட்டுமே கொள்கையாக வைத்துள்ள விஜய் இரசிகர் மன்றம் - 2026 தேர்தலில் திராவிட இயக்...
13/01/2025

2026 தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பது என்பதை மட்டுமே கொள்கையாக வைத்துள்ள விஜய் இரசிகர் மன்றம் - 2026 தேர்தலில் திராவிட இயக்க அரசியலையே அழிக்க வேண்டும் என்ற கனவோடு அலையும் தற்குறி சீமான் கூட்டம் - 2026 தேர்தலோடு திராவிடர் இயக்க, பெரியார் இயக்கக் கருத்துக்களின் அரசியல் பங்கேற்பை ஒழிக்கத் திட்டமிட்டுள்ள மோடிக் கும்பல் - இப்படி பலதிசைகளிலும் எதிர்ப்புகள் சூழ்ந்துள்ள நிலை.

இச்சூழலில், 2026 தேர்தல் கணக்குகளைத் தாண்டி, அடுத்த தலைமுறையிலும் சனாதனத்துக்கு எதிரான போருக்குத் தனது தோழர்களை கொள்கை ரீதியாகத் தயாரிக்கிறார் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.

முரசொலியில் பாசறைப் பக்கம், முத்தமிழறிஞர் பதிப்பகம், தொகுதி தோறும் நூலகங்கள் - நூல் அறிமுக விழாக்கள் - புதிய இளம் பேச்சாளர்கள் - கருத்தாளர்கள் - எழுத்தாளர்கள் என ஒரு திராவிடர் கொள்கைப்படை கட்டமைக்கப்படுகிறது. அந்தப் பணியில் நமது பல நண்பர்கள், தோழர்கள் கடமையாற்றுகிறார்கள்.

எனது பங்காக நானும் நேற்று (12.01.2025) மாலை மதுரை மத்தியத் தொகுதிக்குட்பட்ட S.S.காலனியில் உருவாக்கப்பட்டுள்ள நூலகத்தில் "உடன்பிறப்பே" எனும் நூலை அறிமுகப்படுத்திப் பேசினேன்.

தி.மு.க. இளைஞர் அணி - மாணவரணித் தோழர்கள் அனைவருக்கும் இந்நூலை ஒரு அரை நாள் வகுப்பாக, பயிலரங்கமாகவே நடத்த வேண்டும். அவ்வளவு செறிவான தகவல்கள். நீரை.மகேந்திரன், வினோத்குமார், விஷ்ணுராஜ், கௌதம் ஆகிய தோழர்களின் தொகுப்பாக வந்துள்ள இந்நூல் ஒரு பாசறைக் கருவியாகவே பயன்படும். பயன்படுத்த வேண்டும்.

- அதி அசுரன்

DMK Youth Wing Udhayanidhi Stalin DMKYW Madurai

ஒவ்வொரு அமைப்பும் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான புதிய மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்திக்கொண்டு தான் இருக்கிறோம். அதற்கா...
08/01/2025

ஒவ்வொரு அமைப்பும் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான புதிய மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்திக்கொண்டு தான் இருக்கிறோம். அதற்கான செலவுகளும் நமது உழைப்பும் உரிய பயனைத் தருகிறதா? அல்லது வெறும் சடங்காக அவை நடந்து முடிந்துகொண்டே இருக்கின்றனவா?

1. வகுப்புகள் மிக மிகக் குறைந்த செலவில் நடத்தப்பட வேண்டும். அதற்குரிய செலவுகளை பங்கேற்கும் மாணவர்கள் தான் கட்டணமாகத் தரவேண்டும். பயிற்சி நடத்துபவர் அந்தந்த மாவட்டத்திலேயே வசிப்பவராக இருக்க வேண்டும்.

2. பயிற்சி வகுப்புக்கு போஸ்டர், ஃப்ளக்ஸ், நோட்டீஸ், கொடி கட்டுதல் போன்ற சடங்குகள் எவையும் தேவை இல்லை. தலைவர்களின் வருகை, உள்ளூர் அரசியல் பிரலங்களின் வருகை, தொடக்க உரை, தலைமை உரை, மேடை, மைக் போன்ற வீண் செயல்களும் தேவை இல்லை.

3. வகுப்பு முடிந்த பிறகு அந்த Batch தொடர்ச்சியாகப் பின்தொடரப்பட வேண்டும். ஒரே குழுவுக்கு அடுத்தடுத்த தலைப்புகளில் சில நாட்கள் இடைவெளியில் தொடர்ச்சியாக வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.

4.ஒவ்வொரு குழுவிலும் Active ஆக இருக்கும் ஒரு சிலரை அடையாளம் கண்டு அவர்களைக் கூடுதலாகக் கொள்கைரீதியாகவும், களப்பணியாளர்களாகவும், புதியவர்களை ஈர்க்கும் அமைப்பாளராகவும் செழுமைப்படுத்த வேண்டும்.

5. வகுப்புகளை அறைகளில் பாடங்கள் போல நடத்திக் கொண்டிருக்காமல், அந்த Batch களப்பணிகளிலும் ஈடுபடுத்தப்பட வேண்டும். மக்களை நேரடியாகச் சந்தித்துப் பெரியாரியலைப் பேசுவது, பரப்புவது, சிறு சிறு நூல்களை விற்பனை செய்வது, நிதி திரட்டுவது போன்றவை வகுப்புகளின் கூடுதல் வடிவங்களாக இருக்க வேண்டும்.

இந்த அடிப்படையில் கடந்த ஜூலை 1 ல் வேலையைத் தொடங்கினோம். செலவுகள் மிக மிகக் குறைவு என்பதால், செலவுக்காக யாரையும் சார்ந்து இருக்க வேண்டியநிலை வரவில்லை. அதனால் வகுப்புகள் தொடர்ச்சியாக நடந்தன. ஒரே குழு தொடர்ச்சியாகப் பின் தொடரப்பட்டு,

வகுப்பறையில் மட்டுமல்ல, கடைவீதிகளில் பிரச்சாரம் செய்வது, போராட்டத்துக்கான நிதி திரட்டுவது, சிறு நூல்களை விற்பனை செய்வது என அனைத்துப் பணிகளிலும் புதியவர்கள் ஈடுபடுத்தப்பட்டார்கள். இறுதி வகுப்பில் மாணவர்களே வகுப்புகளையும் நடத்தினார்கள்.

உண்மையாகச் சொல்ல வேண்டுமானால், அவர்களுக்கு வகுப்பு நடத்திய எங்களைவிட மிக மிகச் சிறப்பாக, எளிமையாக நடத்தினார்கள்.

குடும்பம், திருமணம் என்ற முறைகள் அழிய வேண்டும், அவற்றுக்கு மாற்று என்ன?, பாலியல் வன்கொடுமைகளுக்குத் தீர்வு என்ன? என்பவை போன்ற கடினமான தலைப்புகளை இவ்வளவு எளிமையாக விளக்க முடியுமா? என நாங்கள் வியக்கும் வண்ணம் புதியவர்கள் செயலாற்றினார்கள்.

எங்கள் இலக்கு புதியவர்கள் 100. முதற்கட்டமாக 25 பேரைச் சிறந்த அடிப்படை உறுப்பினர்களாக உருவாக்கிவிட்டோம். உறுதியாக இன்னும் 75 தோழர்களை உருவாக்குவோம்.

இதுபோன்ற பயன்களை நாம் அனைவருமே பெறலாம். அதற்குச் செய்ய வேண்டியவை:

1. "புதியவர்களை அமைப்பாக்குவது என்பதை மட்டுமே கடமையாகக் கொண்ட மாநில அளவிலான ஒரு குழு" நமது அமைப்புகளில் இருக்க வேண்டும். பெரியாரிய அடிப்படைக் கருத்துக்களும், அவற்றை சமகால சமுதாயச் சூழலில் பொருத்திக்காட்டும் திறனும் பெற்றவர்களாக அவர்களைத் தயாரிக்க வேண்டும்.

2. அவர்கள் முழுநேரப் பணியாளர்களாக இருக்க வேண்டும். சம்பளம் வழங்கப்பட வேண்டும். ஒரு மாவட்டத்திற்குப் புதிதாக 100 தோழர்களை உருவாக்க வேண்டும் என்பதை அவர்களுக்கு இலக்காக வைக்க வேண்டும். அதிகப்பட்சம் 1 ஆண்டுகள் மட்டுமே அவர்களது பணிக்காலம். அதற்குள் அவர்களுக்கான Task ஐ முடித்து விட வேண்டும். அவர்களுக்கு சந்தா சேர்ப்பது, விழாக்களை நடத்துவது போன்ற வழக்கமான எந்த இயக்க வேலைகளையும் கொடுக்கக் கூடாது.

3. பெரியாரையோ, திராவிடர் இயக்கங்களையோ பற்றி எதுவும் தெரிந்திருக்காத இளைய சமுதாயத்திற்கு பெரியாரியலை அறிமுகப்படுத்தும் நோக்கத்தை மட்டுமே கொண்ட சிறு நூல்கள் (10 ரூபாய்க்குள்), துண்டறிக்கைகள் அச்சிடப்பட வேண்டும். அந்தத் தகவல்கள் 1 நிமிட வீடியோக்களாகவும் இருக்க வேண்டும்.

சுயமரியாதை இயக்க நூற்றாண்டில் ஒவ்வொரு மாவட்டமும் புதிதாக ஒரு 100 பேரைக்கூட உருவாக்கவில்லை என்றால், அதைவிட வரலாற்றுப்பிழை வேறு எதுவும் இருக்காது.

Kaattaaru குழுவில் இயங்கிய தோழர்களின் குழந்தைகளையும், புதிதாகச் சிலரையும் இணைத்தோம். 2024 ஜூலை Batch உருவானது. திராவிடர் தளம் எனும் அமைப்பில் இணைந்து பணியாற்ற, ஒரு அடிப்படைத் தகுதியாக "தொடக்க நிலை" என்ற அளவில் 10 நாள் வகுப்புகள் அவசியம் என நிர்ணயித்தோம். இந்த அடிப்படை உறுப்பினர்களுக்கான இறுதிப் பயிற்சி டிசம்பர் 30, 31 தேதிகளில் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நடந்தது.

- திராவிடர் தளம்

#குடிஅரசு100 #திராவிடர்தளம்

"காட்டாறு 2025 நாட்காட்டி" தயாராகிறது. "திருமணம் - குடும்பம் - ஜாதி முறைகள் ஒழியட்டும்" என்ற இலக்கை நோக்கிய பயணத்தைத் தொ...
08/01/2025

"காட்டாறு 2025 நாட்காட்டி" தயாராகிறது. "திருமணம் - குடும்பம் - ஜாதி முறைகள் ஒழியட்டும்" என்ற இலக்கை நோக்கிய பயணத்தைத் தொடங்கும் விதமாக மக்களிடையே சில கோரிக்கைகளைப் பரப்புகிறோம். பரப்புரையின் ஒரு வடிவமாக நாட்காட்டி வருகிறது.

தோழர் பெரியாரின், திராவிடர் பண்பாட்டுப் புரட்சி உருவாக காட்டாறு நாட்காட்டியை வாங்கிப் பிறருக்கும் வழங்குங்கள். சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும். நன்கொடை ரூ.100. தொடர்புக்கு: 9942119077 & www.periyarbooks.com

#திராவிடர்தளம் #சமையலறைஉடைப்புப்போராட்டம்

கணவன் - மனைவி இருவரும் வேலைக்குச் செல்ல வசதியாக, அரசே குழந்தை வளர்ப்பு Creche மய்யங்களை உருவாக்க வேண்டும்! - என்ற நமது க...
08/01/2025

கணவன் - மனைவி இருவரும் வேலைக்குச் செல்ல வசதியாக, அரசே குழந்தை வளர்ப்பு Creche மய்யங்களை உருவாக்க வேண்டும்! - என்ற நமது கோரிக்கை திராவிட மாடல் அரசின் திட்டமாக இன்று (19.12.2024) அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண் விடுதலை, ஜாதி ஒழிப்புத் தளங்களில் இது அடுத்தகட்டப் பாய்ச்சல் போன்ற திட்டமாகும். இதை இன்னும் கூடுதலாக சிப்காட்டில் மட்டுமல்லாமல், அனைத்துத் துறைகளிலும் விரிவுபடுத்த வேண்டும்.

இதே போல, எளிய மக்களுக்கான அரசின் முதியோர் இல்லங்கள், கலைஞர் பொதுச் சமையலறைகள் போன்ற திட்டங்களும் அறிவிப்புகளாக மலர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறோம்.

இவை நாம் சொல்லி நடந்தவை அல்ல. நாம் யோசிப்பதை நமது தி.மு.க.அரசு செய்தே காட்டிவிடுகிறது என்பதற்கான சான்றுகள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.

- திராவிடர் தளம்

M. K. Stalin Udhayanidhi Stalin TRB Rajaa Chief Minister of Tamil Nadu DIPR TN DMK - Dravida Munnetra Kazhagam

"ஜனங்கள் ஒவ்வொருவரும் தனிவீடு கட்டிக் கொள்வதும், வீட்டுக்குவீடு சமையலறை இருப்பதும் அனாவசியக் காரியமாகும். நான் ரஷ்யாவிற்...
08/01/2025

"ஜனங்கள் ஒவ்வொருவரும் தனிவீடு கட்டிக் கொள்வதும், வீட்டுக்குவீடு சமையலறை இருப்பதும் அனாவசியக் காரியமாகும். நான் ரஷ்யாவிற்குச் சென்றபோது, ஒரு பொது சமையல் கூடத்தை (Common Kitchen) என்னிடம் காட்டினார்கள். ஏறத்தாழ 26,000 பேர் உணவு அருந்துகிறார்கள். அதை மேற்பார்வையிட டாக்டர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். தேவையான எல்லாவகை உணவுகளையும். அங்கே தயாரிக்கிறார்கள். அதைப்போன்ற நிலை நமது நாட்டிலும் உருவாக வேண்டும்.

ஆளுக்கு ஆள் வீடு தேவை என்ற நிலைமையும், வீட்டுக்கு வீடு சமையலறை என்கின்ற நிலைமையும் ஒழிந்து தங்கும் உணவு விடுதிகள் ஏற்பட்டால்தான் வீண் அனாவசியமான தொல்லைகளை நாம் குறைத்துக் கொள்ள முடியும்.

இந்த விஷயத்தில் அரசாங்கம் போதிய கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். அரசாங்கமே அதுபோன்ற பொது சமையற்கூடங்களை நடத்த முன்வர வேண்டும்.

இந்த உணவு விடுதிகளின் மூலம் ஆயிரக்கணக்கான குடும்பங்களில் சமையலறை இல்லாமல் செய்ய வேண்டும். இதன் மூலம் குடும்பத் தொல்லைகளைக் குறைக்க முயற்சிக்க வேண்டும்.

என்னைப் பொறுத்தவரையில், என்னைப் பற்றி யார் என்ன நினைத்துக் கொண்டிருந்த போதிலும், எனது முடிவான இலட்சியம் அதாவது, எனது எண்ம் ஈடேறுமானால், அது உயரிய கூட்டு வாழ்க்கை முறையாகத்தான் இருக்கும்". – தோழர் பெரியார், “பெரியார் ஒரு வாழ்க்கைநெறி” நூல்

"பெண்கள் இனி சமையல் செய்யக் கூடாது. பின் எப்படி என்றால், ஹோட்டலுக்கு, ரெஸ்டாரென்ட்டுக்குப் போய் தங்கள் உணவை முடித்துக் கொள்ள வேண்டும். அப்படி ஆரம்பித்தால் நல்ல ரெஸ்டாரன்ட்டுகளும் ஏற்பட்டு விடும். வெளிநாடுகளில் எல்லாம் அப்படித்தான்! இன்னும் கொஞ்ச நாள் போனால், பொது உணவு விடுதிகளில் உண்ணும் முறை தான் இங்கு வரும். இதுதான் சுலபமானதாகும். - பெரியார், விடுதலை, 20.02.1968

"கலைஞர் பொதுச் சமையலறை - பொது உணவகம்" Kalaignar Cloud Kitchen என்ற திட்டத்தை திராவிட மாடல் அரசிடம் முன்வைப்பதன் நோக்கம், பெரியாரின் கனவை நனவாக்க வேண்டும் என்ற நோக்கில் தான்.

பெரியாரின் நெஞ்நில் தைத்த முள் கருவறை நுழைவு மட்டுமல்ல; சமையலறை உடைப்பும் தான்! தமிழ்நாட்டு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறோம்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சமையலறை உடைப்புப் போராட்ட விளக்கப் பரப்புரை, நிதி திரட்டல் 15.12.2024 / போராட்ட நாள் 10.03.2025 / கோரிக்கைகளை விளக்கும் துண்டறிக்கை கமெண்ட்டில்...

M. K. Stalin Udhayanidhi Stalin Chief Minister of Tamil Nadu DMK - Dravida Munnetra Kazhagam Kanimozhi Karunanidhi

#திராவிடர்தளம்

டிசம்பர் 24 ல் சமையலறை உடைப்புப் போராட்டம் - தீபாவளிப் புறக்கணிப்பு ஒன்றுகூடலில் முடிவு!அறிவுக்கும், மானத்திற்கும், பொரு...
08/11/2024

டிசம்பர் 24 ல் சமையலறை உடைப்புப் போராட்டம் - தீபாவளிப் புறக்கணிப்பு ஒன்றுகூடலில் முடிவு!

அறிவுக்கும், மானத்திற்கும், பொருளாதாரத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் எதிரான தீபாவளி நாளில் - தீபாவளிச் சூழலிலிருந்தே முற்றிலும் விடுதலை பெற்ற - இந்து மதப் பண்பாடுகளுக்கு எதிரான கருந்திணைத் தோழர்களின் ஒன்றுகூடல் நடைபெற்றது.

31.10.2024 அன்று திருப்பூர் அருகே நடைபெற்ற இந்த ஒன்றுகூடலில், நான் ஏன் தீபாவளியைக் கொண்டாடவில்லை? என்ற தலைப்பில் புதிய மாணவர்கள் தங்களது பார்வைகளை விளக்கிப் பேசினார்கள். திராவிடர் விருந்துக்குப் பிறகு திராவிடர் தளமாக இயங்கும் தோழர்களின் கலந்துரையாடல் நடைபெற்றது.

அதில், "ஜாதி முறையும், ஜாதியைக் காக்கும் குடும்ப முறையும் ஒழியட்டும்" என்ற இலக்கை அடிப்படையாகக் கொண்டு, சில கோரிக்கைகளை முன்னெடுத்து அனைத்துவகைப் பரப்புரைகளையும் தொடங்க முடிவு செய்யப்பட்டது. பரப்புரைகளின் இறுதியாக டிசம்பர் 24 ல் "சமையலறை உடைப்புப் போராட்டத்தை" நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

நாங்கள் முன்னெடுக்கும் ஜாதி ஒழிப்பு, ஆணாதிக்க ஒழிப்புக் கோரிக்கைகள் இலட்சக்கணக்கான மக்களிடம் சென்று சேரும்வரை இதே இலக்கை அடிப்படையாகக் கொண்டு தொடர் போராட்டங்களை நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. 2024 நவம்பர் 10 ஆம் தேதியிலிருந்து சுவரெழுத்து மற்றும் கடைவீதிப் பிரச்சாரங்கள் தொடங்குகின்றன.

#திராவிடர்தளம்

தீபாவளியைப் புறக்கணிப்போம்! பெரியார், அம்பேத்கர், காமராசர், மெக்காலே பிறந்த நாட்கள் - மே தினம், காதலர் தினம் - பிள்ளையார...
22/10/2024

தீபாவளியைப் புறக்கணிப்போம்!

பெரியார், அம்பேத்கர், காமராசர், மெக்காலே பிறந்த நாட்கள் - மே தினம், காதலர் தினம் - பிள்ளையார் உடைப்புப் போராட்ட நாள் (மே 27), அம்பேத்கர் பௌத்தம் ஏற்ற நாள் (அக்டோபர் 14), அரசியல் சட்ட எரிப்பு நாள் (நவம்பர் 26), பீமா கோரிகான் வெற்றி நாள் (ஜனவரி 1) போன்ற புதிய விழாக்களை உருவாக்குவோம்! கொண்டாடுவோம்!

https://youtu.be/roBvX2FZ0us?si=rw1EeidG7Mo2k7ZA

தீபாவளி: கொண்டாட்டத்திற்கா? கொடும் நோய்களுக்கா? II காட்டாறு

"உள் இட ஒதுக்கீட்டு உரிமை" நூல் வெளியீட்டு விழா!வெளியீட்டு விழாவிலேயே 1640 நூல்கள் விற்பனை ஆனது!ஆதித் தமிழர் பேரவை சார்ப...
27/09/2024

"உள் இட ஒதுக்கீட்டு உரிமை" நூல் வெளியீட்டு விழா!

வெளியீட்டு விழாவிலேயே 1640 நூல்கள் விற்பனை ஆனது!

ஆதித் தமிழர் பேரவை சார்பில், காட்டாறு வெளியீடான, "உள் இடஒதுக்கீட்டு உரிமை" நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. தோழர் நீலவேந்தன் அவர்களின் நினைவு நாளான 26.09.2024 மாலை 5 மணிக்கு, ஈரோடு, சூரம்பட்டி நால்ரோடு KG Grand இல் நிகழ்வு நடைபெற்றது.

ஆதித்தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் தோழர் கோவை இரவிக்குமார் அவர்கள் தலைமையில், நிறுவனர் தோழர் இரா.அதியமான் அவர்கள் நூலை வெளியிட்டார். புரட்சிகர இளைஞர் முன்னணியின் பொறுப்பாளர் தோழர் மலரவன், தமிழ்நாடு சாக்கிய அருந்ததியர் சங்கத் தலைவர், எழுத்தாளர் தோழர் மதிவண்ணன் ஆகியோர் மதிப்புரையாற்றினர்.

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் ஏற்புரை வழங்கினார். காட்டாறு வெளியீடு தோழர் அதி அசுரன், திராவிடர் தளம் தோழர் புவனா மற்றும் பல்வேறு அருந்ததியர் அமைப்புகளின் தலைவர்களும், பல முற்போக்கு அமைப்புகளின் பொறுப்பாளர்களும், தோழர்களும், திராவிடர் விடுதலைக் கழகம், திராவிடர் தளம் தோழர்களும் திரளாகப் பங்கேற்றனர்.

Athiyamaan கோவை ரவிக்குமார் திராவிடர் விடுதலைக் கழகம்

உள் இடஒதுக்கீட்டு உரிமை தொடர்பான பல கேள்விகளுக்கு விடையாக "உள் இடஒதுக்கீட்டு உரிமை" எனும் நூலைக் "காட்டாறு வெளியீடு" வெள...
18/09/2024

உள் இடஒதுக்கீட்டு உரிமை தொடர்பான பல கேள்விகளுக்கு விடையாக "உள் இடஒதுக்கீட்டு உரிமை" எனும் நூலைக் "காட்டாறு வெளியீடு" வெளியிடுகிறது. திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலித் கேமரா எனும் யூ ட்யூப் சேனலுக்கு வழங்கிய நேர்காணலும், காட்டாறு வெளியீட்டிற்காக இணைக்கப்பட்ட சில கூடுதல் செய்திகளும், தலித்முரசு ஆசிரியர் தோழர் புனித பாண்டியன் அவர்கள் தமிழ் இந்துவில் எழுதிய கட்டுரையும் சிறு நூலாகத் தொகுத்து வெளியிடப்படுகிறது. 40 பக்கங்கள், விலை ரூ.30/. செப்டம்பர் 27 ல் நூல் வெளியாகும்.

நூலில் இருந்து........
1. அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டை ஆதரிப்பது சரியா?
2. உள் ஒதுக்கீடு சரியானது என்று கூறும் உச்சநீதி மன்றத் தீர்ப்பு அம்பேத்கரின் நோக்கங்களுக்கு எதிரானதா?
3. உள் இடஒதுக்கீடு உரிமையை மாநிலங்கள் வழங்கலாமா? ஒன்றிய அரசுதான் வழங்க வேண்டுமா?
4. பெரியார் உள் இடஒதுக்கீட்டை ஆதரித்தாரா?
5. அம்பேத்கர் உள் இடஒதுக்கீட்டை ஆதரித்தாரா?
6. உச்சநீதிமன்றத் தீர்ப்பு, பட்டியல் ஜாதி மக்களைப்
பிரித்து வைக்கிறதா?
7. பட்டியல் ஜாதியினரின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் முடிவுகள் சரியானதா?
8. பின்னடைவுப் பணியிடங்கள் ஏராளமாக இருக்கும் நிலையில் உள் ஒதுக்கீடு நியாயமானதா?
9. கிரீமிலேயரை எதிர்க்க வேண்டாமா?
10. பட்டியல் ஜாதி மக்கள் உள் ஜாதிப் பிரிவினைகளை
ஒழித்து ஒன்றாக வாழ்கிறார்களா?

மேற்கண்ட கேள்விகளுக்கான பதில்கள் விரிவாக விளக்கப்பட்டிருக்கும் இந்நூலைப் படியுங்கள், பரப்புங்கள் - விலை ரூ 30 -
100 புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு ஒரு நூல் ரூ 20 க்கே வழங்கப்படும். நூலைப் பெற காட்டாறு வெளியீடு - 9942119077 - [email protected]
Online - PeriyarBooks.Com

Address

Palladam

Alerts

Be the first to know and let us send you an email when Kaattaaru காட்டாறு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kaattaaru காட்டாறு:

Share