ஐயா நம்மாழ்வார் இயற்கை விழிப்புணர்வு

  • Home
  • India
  • Parangipettai
  • ஐயா நம்மாழ்வார் இயற்கை விழிப்புணர்வு

ஐயா நம்மாழ்வார் இயற்கை  விழிப்புணர்வு நேய்யற்ற வாழ்வே குறையற்ற செல்வம் ��

🍌 வாழைப் பழம் வாங்கும் போது கவனிக்க வேண்டிய ஒரு சின்ன டிப்ஸ்! 🍌சமீபத்தில் மார்க்கெட்டில் வாழைப் பழம் வாங்கிக் கொண்டிருந்...
15/09/2025

🍌 வாழைப் பழம் வாங்கும் போது கவனிக்க வேண்டிய ஒரு சின்ன டிப்ஸ்! 🍌

சமீபத்தில் மார்க்கெட்டில் வாழைப் பழம் வாங்கிக் கொண்டிருந்தபோது, பக்கத்தில் ஒருவர் சொன்னார்:
👉 “இது இயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட வாழை. தாரை அறுத்து வாங்குங்க. 10, 20 ரூபாய் கூடுதலானாலும் பரவாயில்லை.”

ஆர்வமாக கேட்டேன்: “அப்படிச் சொல்றது எப்படி உங்களுக்கு தெரியும்?”

அவர் சொல்லியது 👇
✔️ இயற்கையாக பழுக்க வைக்கப்பட்டிருந்தால் பழம் மட்டும் மஞ்சளாக இருக்கும்.
✔️ ரசாயனப் பொருள் (கால்சியம் கார்பைடு/எதிலீன் பவுடர்) கொண்டு பழுக்க வைக்கப்பட்டிருந்தால், பழத்தோடு காம்பும் முழுக்க மஞ்சளாகி இருக்கும்.

அதற்காகவே அவர் “தாரை” காட்டினார். அப்படித் தான் வேறுபாடு தெரியும்!

🍌 இனி நீங்களும் வாழைப் பழம் வாங்கும்போது இதை கவனத்தில் கொள்ளுங்கள். சிறு விஷயம் தான்… ஆனா உடல்நலத்திற்கு பெரிய பாதுகாப்பு!

விழிப்புணர்வு பதிவு....

....?
02/09/2025

....?

26/08/2025
இந்த உலகம், நீ எப்போது கீழே விழுவாய் என்று பார்த்துக்கொண்டு இருக்கும். நீ ஏறுவதை எல்லாம் ரசிக்காது.பணம் இருந்தால் தான் ந...
24/08/2025

இந்த உலகம், நீ எப்போது கீழே விழுவாய் என்று பார்த்துக்கொண்டு இருக்கும்.
நீ ஏறுவதை எல்லாம் ரசிக்காது.

பணம் இருந்தால் தான் நீ உறவினர். இல்லை என்றால் உறவு - இல்லார்.

வாழ்க்கையில் எந்த ஒரு உயர்வுக்கு நீ போனாலும் உன்னை மட்டம் தட்ட கீழ் இருக்கும் நபர்கள் குறைத்துக்கொண்டு தான் இருப்பார்கள்.

பணத்திற்கு சாதி மதம் எல்லாம் இல்லை. பணம் இல்லையேல் சாதி மதம் எல்லாம் பார்க்கப்படும்.

கடைசி வரை உன்கூட இருக்கப்போகும் உறவு நீ மட்டுமே. உன் மேல் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பு செலுத்தப்போவது உன் பெற்றோர் மட்டுமே.

நாம் முன்னேறுவதை பார்த்து பொறாமை படும் கூட்டமே இங்கு ஜாஸ்தி. அந்த பொறாமை அவர்களை என்னென்னமோ வேலைகள் செய்ய தூண்டும்.

பல நேரங்களில் நம் முதுகில் குத்துவது நாம் நேசிக்கும் உறவுகளே. இது புரிய நாள் ஆகும்.

நாம் இருக்கும் போதும், இறக்கும் போதும் நம் பின்னால் பேசுபவர்கள் இருந்து கொண்டே தான் இருக்கப்போகிறார்கள்.

இங்கு பாதி பேர் கடவுளை தரிசிப்பதற்கு காரணமே, அவர்களின் புலம்பலை கேட்க ஆள் இல்லாத காரணத்தால் தான்.....☺️

அடி ஆத்தி இதுதானா அந்த அர்த்தம்... 👇      குந்தாணி என்றால் என்ன?        இன்றைய தலைமுறையினருக்கு குந்தாணி என்பது ஓர் வசவு...
24/08/2025

அடி ஆத்தி இதுதானா அந்த அர்த்தம்... 👇

குந்தாணி என்றால் என்ன?

இன்றைய தலைமுறையினருக்கு குந்தாணி என்பது ஓர் வசவுச் சொல்லாக மட்டுமே தெரியும்! ஆனால்…

குந்தாணி - என்றால் வாய் அகன்ற பாத்திரம், பெருவுரல், குண்டா, நெல் சிதறாமல் இருக்க விளிம்புடன் உள்ள உரல், பருமனான நபர்… என அகராதிகள் கூறுகின்றன.

உலக்கை கொண்டு உரலை குத்தும் (இடிக்கும்) பொழுது தவச (தானிய) மணிகள் வெளியே சிதறாமல் பாதுகாக்கும் வாயகன்ற - புடைப்பான அமைப்புக்கு குந்தாணி என்று பெயர்!

குத்துதல் = உலக்கையாற் கூலத்தைத் துவைத்து, இடித்து நொறுக்குதல்.

மேல்பகுதியில் வாய் அகன்றும் கீழ்பகுதியில் உரலுடன் பொருந்துமாறு ஒடுங்கி - புடைப்பான வளையம் போன்ற வடிவத்தில் உரலைச் சுற்றி ஒரு தடுப்பைப் போல பயன்படுகிறது - குந்தாணி.

முற்காலத்தில் உரல்கள், குந்தாணி ஆகியவை கருங்கற்களால் செய்யப்பட்டது.

உலக்கைகள் மரத்தால் செய்யப்பட்டு இரு முனைகளிலும் பித்தளை அல்லது இரும்பு பூண் போடப்பட்டிருக்கும். (உலக்கைப் பூண் என்பது மரத்துக்கு போடப்படும் இரும்புக் கவசம்) .

பிற்காலத்தில் வேம்பு, பாலை போன்ற மரத்தில் செய்யப்பட்ட உரல்களும் வழக்கில் இருந்தன.

உரல், உலக்கை, குந்தாணி மூன்றும் ஒரே தொகுப்பைச் சேர்ந்த கருவிகள்.

துக்கடா :

இடை சுருங்கி இருக்கவேண்டிய பெண்டியர் இடை பெருத்திருந்தால் - 'குதிர் போல இருக்கிறாள், குந்தாணி போல் இருக்கிறாள்' ... என்று உவமைச் சுட்டால் சொல்வது வழக்காம்.

இது ஒரு நையாண்டி

படித்ததில் ரசித்தது 🙏🙏🙏

வாழ்க்கை  தத்துவம்... 🙏
24/08/2025

வாழ்க்கை தத்துவம்... 🙏

Address

Parangipettai

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஐயா நம்மாழ்வார் இயற்கை விழிப்புணர்வு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share