ஐயா நம்மாழ்வார் இயற்கை விழிப்புணர்வு

  • Home
  • India
  • Parangipettai
  • ஐயா நம்மாழ்வார் இயற்கை விழிப்புணர்வு

ஐயா நம்மாழ்வார் இயற்கை  விழிப்புணர்வு நேய்யற்ற வாழ்வே குறையற்ற செல்வம் ��

😭😭😭  கண்ணீர் அஞ்சலி 😭😭😭  -------------------------------------------------------------------      ஏழைகளின் மருத்துவர் என...
07/06/2025

😭😭😭 கண்ணீர் அஞ்சலி 😭😭😭
-------------------------------------------------------------------

ஏழைகளின் மருத்துவர் என்று போற்றப்பட்ட பத்து ரூபாய் டாக்டர் ரத்தினம் பிள்ளை(96) வயது மூப்பு காரணமாக இன்று காலை காலமானார்.

இவருக்கு இராஜலட்சுமி.என்ற மனைவியும், ஒரு மகன், மூன்று மகள்கள் உள்ளனர். கடந்த 1929ஆம் ஆண்டு பிறந்த ரத்தினம் பிள்ளை, 1959ஆம் ஆண்டு மருத்துவராக தனது பணியை துவங்கினார். அப்போது 2 ரூபாய்க்கு மருத்துவம்‌ பார்த்து இறுதி வரை 10 ரூபாய் வரை மட்டுமே கட்டணம் வாங்கினார்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகரில் பத்து ரூபாயில் ஏழைகளுக்கு வைத்தியம் பார்த்து வந்த பத்து ரூபாய் டாக்டர் என பலதரப்பட்ட மக்களாலும் போற்றப்பட்ட டாக்டர் ரத்தினம் பிள்ளை வயது முப்பு காரணமாக இயற்கை எய்தினார். இவர், டாக்டர் டி.கே. சுவாமிநாதனின் தந்தையாவார். மனித நேய பண்பாளர் என்று பலராலும் அழைக்கப்படுபவர்.

டாக்டர் ரத்தினம் பிள்ளை 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மருத்துவ வசதி இல்லாத அக்காலங்களில் எவ்வளவு பெரிய நோயாக இருந்தாலும் குறைந்த செலவில் அதனை சரி செய்து விடக் கூடிய திறமை வாய்ந்த மருத்துவராக இருந்து வந்தார்.

மேலும், இவர் எப்படிப்பட்ட சிக்கலான பிரசவமாக இருந்தாலும் ஆபரேஷன் செய்யாமல் மகப்பேறு மருத்துவம் பார்த்து ஏராளமான கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் செய்து மிகச்சிறந்த பெயரை இப்பகுதி மக்களிடையே பெற்றார்.

தொடர்ந்து இப்பகுதியில் ஏழை மக்களுக்கு பத்து ரூபாய் கட்டணம் மட்டுமே பெற்றுக் கொண்டு மருத்துவம் செய்து வந்த இவரை இப்பகுதி மக்கள் போற்றி வந்தனர்.

இந்தியா, சீனா போர் நடந்தபோது இந்திய அரசு போர் தளவாடங்கள் வாங்குவதற்கு போதுமான நிதி இல்லை. எனவே மக்கள் தங்களிடம் உள்ள பணம், நகை போன்றவற்றை அரசுக்கு கொடுத்து உதவுங்கள், 5 வருடம் கழித்து அவற்றைத் திருப்பி தந்துவிடுவதாக கூறிக் கேட்டுள்ளது. அப்போது தன் மகள்களின் திருமணத்துக்காக சேமித்து வைத்திருந்த 83 பவுன் தங்க நகையை மருத்துவர் ரத்தினம் பிள்ளை மத்திய அரசிடம் கொடுத்து, மீண்டும் மத்திய அரசு நகையை திரும்பி வழங்கியிருக்கிறது.

கொரோனா நேரத்தில் தனது கட்டடத்தில் இருந்த கடைகளுக்கு 3 மாத வாடகையை வியாபாரிகளிடம் வாங்காமல் மனித நேயத்துடன் நடந்துகொண்டார்.

இவரின் சமூக சேவையைப் பாராட்டி பல்வேறு சமூக நல அமைப்புகள் இவருக்கு மனிதநேய மருத்துவர் என்ற விருதுகளை வழங்கி கௌரவித்தனர். இந்த நிலையில் வயது மூப்பு காரணமாக டாக்டர் ரத்தினம் பிள்ளை இன்று இயற்கை எய்தினார் என்ற தகவல் கேட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஏழைகளின் மருத்துவராக இருந்து, 65,000க்கும் மேற்பட்ட சுகப் பிரசவம் பார்த்த அவரது ஏராளமானோர் உடலுக்கு பலதரப்பட்ட மக்கள், உள்ளூர் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

அவரது இறுதி ஊர்வலம் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் சீனிவாசபுரத்தில் உள்ள அவரது இல்லத்திலிருந்து தொடங்கி, நல்லடக்கம் நடைபெறவிருப்பதாகவும் குடும்பத்தினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நில அளவுகள் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்... 👍
21/05/2025

நில அளவுகள் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்... 👍

17/05/2025
பெற்றோர்கள் கவனிக்கவேண்டிய  செய்தி  பாதிக்கபடுவது மாணவர்களே... 😔
16/05/2025

பெற்றோர்கள் கவனிக்கவேண்டிய செய்தி பாதிக்கபடுவது மாணவர்களே... 😔

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகளின் சீட்டில் தமிழ் இல்லை..====தமிழ் வளர்ச்சித் துறை இவற்றில் எல்லாம்...
10/05/2025

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகளின் சீட்டில்
தமிழ் இல்லை..
====
தமிழ் வளர்ச்சித் துறை
இவற்றில் எல்லாம் கவனம் செலுத்தித் தொடர்புடைய அந்தந்தத் துறையினர் தமிழில் பதிவு செய்கிற படி நடைமுறைப்படுத்த வேண்டும்..
====
தமிழ் எழுத்தில் உள்ள..
மோட்டார் வாகன விதிகளுக்குட்பட்டது
என்பதைக்கூட
'உந்து வண்டிகளின் நெறிமுறைகளுக்குட்பட்டது'
என்று தமிழ்ப்படுத்தி வெளியிட வேண்டும்
====
இந்திய நடுவண் அரசு
சமசுகிருதத்தில் பெயர் சூட்டித்
தமிழை மறைக்கிற, இருட்டடிப்புச் செய்துவருகிற சூழலில்..
தமிழ்நாட்டு அரசு அலுவலர்கள் பிறமொழிகள் கலந்து தமிழைச் சிதைக்கலாமா?
====
தமிழ்நாட்டு அரசு அலுவல் பதிவுகளில் தமிழ் சரியான வகையில் பயன்பாட்டில் இல்லை என்றால்..
தமிழ் வளர்ச்சித் துறையின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவிக்குமானால்..
தமிழ் வளர்ச்சித் துறை உள்ளிட்ட தமிழுக்கான இயக்ககங்கள் பொறுப்போடு இயங்கத் தொடங்கும்..

பகிரவும்...

30/04/2025
25/04/2025
24/04/2025
15/04/2025

லஞ்சம் தவிர் நெஞ்சை நிமிர்... 👍

 #கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம், வீராணம் பகுதி வாழைக்கொல்லை கிராமம்  இரா.கலைச்செல்வன் அவர்களின் மகள்..க.கதிர் செல்வி ...
11/04/2025

#கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம், வீராணம் பகுதி வாழைக்
கொல்லை கிராமம் இரா.கலைச்
செல்வன் அவர்களின் மகள்..க.கதிர் செல்வி TNPSC GROUP -1 தேர்வில்(DEPUTY COLLECTOR ) மாநிலத்தில் முதல் இடத்தில் வெற்றி பெற்றுள்ளார்..அவர்கள் பணி மென்மேலும் சிறக்கட்டும்..நல்
வாழ்த்துக்கள்..👏👏👏👏🌹🌹🌹🌹🙏

Address

Parangipettai

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஐயா நம்மாழ்வார் இயற்கை விழிப்புணர்வு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share