Puducherry Print & Television Journalist Association

Puducherry Print & Television Journalist Association Puducherry Print & Television Journalist Association

23/11/2025

புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களின் கேள்வியை எதிர்கொள்ள திராணியில்லாமல், கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள துணிவில்லாமல், ஒருமையில் கலைஞர் டிவி செய்தியாளரை Rajiv Mohan அறுவறுக்கத்தக்க வகையில் பேசியதோடு, குண்டர்களை ஏவி விட்டு கோழைத்தனமாக தாக்குதல் நடத்தியதை புதுச்சேரி அச்சு மற்றும் தொலைக்காட்சி பத்திரிகையாளர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறோம்.

ஒரு சார்பு செய்தியை மட்டும்தான் வெளியிட வேண்டும் என்பது  போல  புதிய தலைமுறை  தொலைக்காட்சி நிர்பந்திக்கப்படுவதும், இதன்கா...
07/10/2025

ஒரு சார்பு செய்தியை மட்டும்தான் வெளியிட வேண்டும் என்பது போல புதிய தலைமுறை தொலைக்காட்சி நிர்பந்திக்கப்படுவதும், இதன்காரணமாகவே அரசு கேபிள் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது அப்பட்டமான ஒடுக்குமுறையாகும், இது ஜனநாயகத்தின் குரல் வலையை நெறிப்பது போல இருக்கிறது.
அச்சமற்று, சுதந்திரமாக செயல்படவிடாமல் தடுக்கும் கருத்துரிமைக்கு எதிரானது. முன்னறிவிப்பின்றி ஒளிபரப்பை நிறுத்திய தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்துக்கு புதுச்சேரி அச்சு மற்றும் தொலைக்காட்சி பத்திரிகையாளர் சங்கம் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது.

16/02/2025

விகடன் இணையதளத்தை முடக்கம் செய்வது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது.

புதுச்சேரி அச்சு மற்றும் தொலைக்காட்சி பத்திரிகையாளர் சங்கம் கடும் கண்டனம்

பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான சந்திப்பு, அமெரிக்காவில் இருந்து இந்தியர்களை கைவிலங்கிட்டு வெளியேற்றியதை ஒன்றிணைத்து, கார்டூன் ஒன்றை தனது இணைய பக்கத்தில் வெளியிட்டிருந்தது.
அரசியல் நிகழ்வுகள், தேசத்தின் முக்கிய பிரச்சனைகளை எளியவர்களும் உணர்ந்து கொள்ளும் வகையில் கார்ட்டூன்கள் வெளியிடுவது, ஊடகத்துறையில் காலம், காலமாக இருந்து வருகிறது.

மக்களுக்கு பார்த்தவுடன் புரிந்து கொள்ளும் வகையில் இது போன்ற கருத்துப்படங்களை வெளியிடுவதை ஊடகங்கள் வாடிக்கையாக வைத்திருக்கிறது.
அந்த வகையிலே இந்த கருத்துப்படமும் வெளியாகியுள்ளது என்பதை ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் புரிந்து கொள்ள மறுப்பதோடு,
தங்களுக்கு எதிரானதாக கருதிக்கொள்கின்றனர்.
தமிழ்நாடு பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய சில மணி நேரங்களில், விகடன் இணையதளத்தை மத்திய சட்ட அமைச்சகம் முடக்கியுள்ளது.
இது ஜனநாயகத்துக்கும், கருத்து சுதந்திரத்துக்கு எதிரானதோடு, ஊடகங்கள் மீதான அடக்குமுறை என புதுச்சேரி அச்சு மற்றும் தொலைக்காட்சி பத்திரிகையாளர் சங்கம் கருதுவதோடு, கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.
உடனடியாக, விகடன் இணையதளத்தின் மீது மத்திய அரசு தொடுத்துள்ள இந்த கருத்து சுதந்திரத்துக்குப் எதிரான நடவடிக்கையை திரும்பப்பெற வேண்டும் என புதுச்சேரி அச்சு மற்றும் தொலைக்காட்சி பத்திரிகையாளர் சங்கம் வலியுறுத்துகிறது.

இப்படிக்கு

புதுச்சேரி அச்சு மற்றும் தொலைக்காட்சி பத்திரிகையாளர் சங்கம்.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு வரலாற்று சிறப்பு மிக்க வகையில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர் சுரேஷ், பொதுச்ச...
16/12/2024

சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு வரலாற்று சிறப்பு மிக்க வகையில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர் சுரேஷ், பொதுச்செயலாளர் ஆசிப், பொருளாளர் மணிகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு புதுச்சேரி அச்சு மற்றும் தொலைக்காட்சி பத்திரிகையாளர் சங்கம் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறது.

நன்றி: நமது முரசு...
02/10/2024

நன்றி: நமது முரசு...

நன்றி: மாலை பூமி..
02/10/2024

நன்றி: மாலை பூமி..

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த புதிய தலைமுறை  தொலைக்காட்சியின் செய்தியாளர் அப்துல் ரகுமானின் குடும்பத்திற்கு...
01/10/2024

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த புதிய தலைமுறை தொலைக்காட்சியின் செய்தியாளர் அப்துல் ரகுமானின் குடும்பத்திற்கு அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமியிடம் புதுச்சேரி அச்சு மற்றும் தொலைக்காட்சி பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. மேலும் கிடப்பில் உள்ள பத்திரிகையாளர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தை அரசு மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும், ஜிப்மர் மருத்துவமனையில் பத்திரிகையாளர்களுக்கு சிகிச்சையில் முன்னுரிமை அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.

25/09/2024
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் குடியரசு துணைத்தலைவர் பங்கேற்ற விழாவை செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களுக்கு பாஸ் வழங்...
28/01/2024

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் குடியரசு துணைத்தலைவர் பங்கேற்ற விழாவை செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களுக்கு பாஸ் வழங்கியும் உள்ளே அனுமதிக்காமல், ஒளிப்பதிவு சாதனத்தை பிடுங்கி காட்சிகளை அழித்த எஸ்எஸ்பி ஸ்வாதி சிங் மற்றும் காவல்துறையினரின் அராஜக செயலை கண்டித்து விழாவை புறக்கணித்து வெளியேறிய பத்திரிகையாளர்கள்.

காவல்துறையினரை வைத்து பத்திரிகையாளர்களை மிரட்டி, தாக்க முயன்ற எஸ்எஸ்பி ஸ்வாதி சிங்கின் செயலை வன்மையாக கண்டிக்கிறோம்.

*திருப்பூரில் நியூஸ் 7 செய்தியாளர் மீது கொலை வெறி தாக்குதல் சம்பவம் - புதுச்சேரி அச்சு மற்றும் தொலைக்காட்சி பத்திரிகையாள...
25/01/2024

*திருப்பூரில் நியூஸ் 7 செய்தியாளர் மீது கொலை வெறி தாக்குதல் சம்பவம் - புதுச்சேரி அச்சு மற்றும் தொலைக்காட்சி பத்திரிகையாளர்கள் சங்கம் கடும் கண்டனம்.*

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியின் செய்தியாளர் நேசபிரபு மீது மர்ம கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளது, செய்தியாளர் நேசப்பிரபு மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டதற்கு புதுச்சேரி அச்சு மற்றும் தொலைக்காட்சி பத்திரிகையாளர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது,

மேலும் மர்ம நபர்கள் சிலர் தன்னை நோட்டமிட்டு வருவதாகவும், விசாரித்து வருவதாகவும் தாக்கப்படுவதற்கு முன்பே காவல்துறைக்கு நேசப்பிரபு தகவலும் அளித்துள்ளார், தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என தெரிவித்தும் போலீசார் மெத்தனமாக நடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது, நேசபிரபு மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய நபர்கள் மீது தமிழ்நாடு அரசு பாரபட்சமற்ற முறையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், அனைத்து மட்டங்களிலும் நடைபெறும் அநீதியை துணிச்சலுடன் பதிவு செய்யும் பத்திரிகையாளர்கள் தாக்குதலுக்கு உள்ளாவது ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கும்,
எனவே திரு. நேசபிரபுவை தாக்கியவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம். பத்திரிகையாளர்களை சுதந்திரமாக செயல்படவிடாமல், வன்முறையால் அடக்கி விடலாம் என்று நினைக்கும் சமூக விரோதிகளால் இனி இது போன்ற ஒரு சம்பவம் நடைபெறாத வகையில் கடும் நடவடிக்கையாக இருக்க வேண்டும்.
இந்த சம்பவத்தில் மிகவும் அலட்சியமாக செயல்பட்ட காவலர்கள் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நேசபிரபுவின் முழு மருத்துவ செலவையும் தமிழக அரசே ஏற்க வேண்டும். எனவும் புதுச்சேரி அச்சு மற்றும் தொலைக்காட்சி பத்திரிகையாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.

இவண்,
புதுச்சேரி அச்சு மற்றும் தொலைக்காட்சி பத்திரிகையாளர்கள் சங்கம்.

Address

Pondicherry
605004

Website

Alerts

Be the first to know and let us send you an email when Puducherry Print & Television Journalist Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Puducherry Print & Television Journalist Association:

Shortcuts

Share