Puducherry Print & Television Journalist Association

Puducherry Print & Television Journalist Association Puducherry Print & Television Journalist Association

16/02/2025

விகடன் இணையதளத்தை முடக்கம் செய்வது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது.

புதுச்சேரி அச்சு மற்றும் தொலைக்காட்சி பத்திரிகையாளர் சங்கம் கடும் கண்டனம்

பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான சந்திப்பு, அமெரிக்காவில் இருந்து இந்தியர்களை கைவிலங்கிட்டு வெளியேற்றியதை ஒன்றிணைத்து, கார்டூன் ஒன்றை தனது இணைய பக்கத்தில் வெளியிட்டிருந்தது.
அரசியல் நிகழ்வுகள், தேசத்தின் முக்கிய பிரச்சனைகளை எளியவர்களும் உணர்ந்து கொள்ளும் வகையில் கார்ட்டூன்கள் வெளியிடுவது, ஊடகத்துறையில் காலம், காலமாக இருந்து வருகிறது.

மக்களுக்கு பார்த்தவுடன் புரிந்து கொள்ளும் வகையில் இது போன்ற கருத்துப்படங்களை வெளியிடுவதை ஊடகங்கள் வாடிக்கையாக வைத்திருக்கிறது.
அந்த வகையிலே இந்த கருத்துப்படமும் வெளியாகியுள்ளது என்பதை ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் புரிந்து கொள்ள மறுப்பதோடு,
தங்களுக்கு எதிரானதாக கருதிக்கொள்கின்றனர்.
தமிழ்நாடு பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய சில மணி நேரங்களில், விகடன் இணையதளத்தை மத்திய சட்ட அமைச்சகம் முடக்கியுள்ளது.
இது ஜனநாயகத்துக்கும், கருத்து சுதந்திரத்துக்கு எதிரானதோடு, ஊடகங்கள் மீதான அடக்குமுறை என புதுச்சேரி அச்சு மற்றும் தொலைக்காட்சி பத்திரிகையாளர் சங்கம் கருதுவதோடு, கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.
உடனடியாக, விகடன் இணையதளத்தின் மீது மத்திய அரசு தொடுத்துள்ள இந்த கருத்து சுதந்திரத்துக்குப் எதிரான நடவடிக்கையை திரும்பப்பெற வேண்டும் என புதுச்சேரி அச்சு மற்றும் தொலைக்காட்சி பத்திரிகையாளர் சங்கம் வலியுறுத்துகிறது.

இப்படிக்கு

புதுச்சேரி அச்சு மற்றும் தொலைக்காட்சி பத்திரிகையாளர் சங்கம்.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு வரலாற்று சிறப்பு மிக்க வகையில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர் சுரேஷ், பொதுச்ச...
16/12/2024

சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு வரலாற்று சிறப்பு மிக்க வகையில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர் சுரேஷ், பொதுச்செயலாளர் ஆசிப், பொருளாளர் மணிகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு புதுச்சேரி அச்சு மற்றும் தொலைக்காட்சி பத்திரிகையாளர் சங்கம் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறது.

நன்றி: நமது முரசு...
02/10/2024

நன்றி: நமது முரசு...

நன்றி: மாலை பூமி..
02/10/2024

நன்றி: மாலை பூமி..

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த புதிய தலைமுறை  தொலைக்காட்சியின் செய்தியாளர் அப்துல் ரகுமானின் குடும்பத்திற்கு...
01/10/2024

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த புதிய தலைமுறை தொலைக்காட்சியின் செய்தியாளர் அப்துல் ரகுமானின் குடும்பத்திற்கு அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமியிடம் புதுச்சேரி அச்சு மற்றும் தொலைக்காட்சி பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. மேலும் கிடப்பில் உள்ள பத்திரிகையாளர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தை அரசு மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும், ஜிப்மர் மருத்துவமனையில் பத்திரிகையாளர்களுக்கு சிகிச்சையில் முன்னுரிமை அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.

25/09/2024
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் குடியரசு துணைத்தலைவர் பங்கேற்ற விழாவை செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களுக்கு பாஸ் வழங்...
28/01/2024

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் குடியரசு துணைத்தலைவர் பங்கேற்ற விழாவை செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களுக்கு பாஸ் வழங்கியும் உள்ளே அனுமதிக்காமல், ஒளிப்பதிவு சாதனத்தை பிடுங்கி காட்சிகளை அழித்த எஸ்எஸ்பி ஸ்வாதி சிங் மற்றும் காவல்துறையினரின் அராஜக செயலை கண்டித்து விழாவை புறக்கணித்து வெளியேறிய பத்திரிகையாளர்கள்.

காவல்துறையினரை வைத்து பத்திரிகையாளர்களை மிரட்டி, தாக்க முயன்ற எஸ்எஸ்பி ஸ்வாதி சிங்கின் செயலை வன்மையாக கண்டிக்கிறோம்.

*திருப்பூரில் நியூஸ் 7 செய்தியாளர் மீது கொலை வெறி தாக்குதல் சம்பவம் - புதுச்சேரி அச்சு மற்றும் தொலைக்காட்சி பத்திரிகையாள...
25/01/2024

*திருப்பூரில் நியூஸ் 7 செய்தியாளர் மீது கொலை வெறி தாக்குதல் சம்பவம் - புதுச்சேரி அச்சு மற்றும் தொலைக்காட்சி பத்திரிகையாளர்கள் சங்கம் கடும் கண்டனம்.*

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியின் செய்தியாளர் நேசபிரபு மீது மர்ம கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளது, செய்தியாளர் நேசப்பிரபு மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டதற்கு புதுச்சேரி அச்சு மற்றும் தொலைக்காட்சி பத்திரிகையாளர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது,

மேலும் மர்ம நபர்கள் சிலர் தன்னை நோட்டமிட்டு வருவதாகவும், விசாரித்து வருவதாகவும் தாக்கப்படுவதற்கு முன்பே காவல்துறைக்கு நேசப்பிரபு தகவலும் அளித்துள்ளார், தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என தெரிவித்தும் போலீசார் மெத்தனமாக நடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது, நேசபிரபு மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய நபர்கள் மீது தமிழ்நாடு அரசு பாரபட்சமற்ற முறையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், அனைத்து மட்டங்களிலும் நடைபெறும் அநீதியை துணிச்சலுடன் பதிவு செய்யும் பத்திரிகையாளர்கள் தாக்குதலுக்கு உள்ளாவது ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கும்,
எனவே திரு. நேசபிரபுவை தாக்கியவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம். பத்திரிகையாளர்களை சுதந்திரமாக செயல்படவிடாமல், வன்முறையால் அடக்கி விடலாம் என்று நினைக்கும் சமூக விரோதிகளால் இனி இது போன்ற ஒரு சம்பவம் நடைபெறாத வகையில் கடும் நடவடிக்கையாக இருக்க வேண்டும்.
இந்த சம்பவத்தில் மிகவும் அலட்சியமாக செயல்பட்ட காவலர்கள் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நேசபிரபுவின் முழு மருத்துவ செலவையும் தமிழக அரசே ஏற்க வேண்டும். எனவும் புதுச்சேரி அச்சு மற்றும் தொலைக்காட்சி பத்திரிகையாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.

இவண்,
புதுச்சேரி அச்சு மற்றும் தொலைக்காட்சி பத்திரிகையாளர்கள் சங்கம்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
31/12/2023

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

புதுச்சேரியில் பத்திரிகையாளர் தின விழாவை நடத்தக்கோரி புதுச்சேரி அச்சு மற்றும் தொலைக்காட்சி பத்திரிகையாளர்கள் சங்கம் சார்...
23/08/2023

புதுச்சேரியில் பத்திரிகையாளர் தின விழாவை நடத்தக்கோரி புதுச்சேரி அச்சு மற்றும் தொலைக்காட்சி பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குனரிடம் மனு அளிக்கப்பட்டது.

புதுச்சேரியில் ஆண்டுதோறும் நவம்பர் 16ம் தேதி தேசிய பத்திரிகையாளர் தின விழா அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் பத்திரிகையாளர் தின விழா நடத்தப்படவில்லை, இது பத்திரிக்கையாளர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நிறுத்தப்பட்ட பத்திரிகையாளர்கள் தின விழாவை மீண்டும் கொண்டாட கோரியும், முடங்கி கிடக்கும் பத்திரிகையாளர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தகோரியும் புதுச்சேரி அச்சு மற்றும் தொலைக்காட்சி பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் தலைவர் ஆர்.கே.ராஜா செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குனர் தமிழ்ச்செல்வனை நேரில் சந்தித்து மனு அளித்தார், மேலும் கொரோனாவால் பதிக்கப்பட்டு உயிரிழந்த பத்திரிகையாளர்களுக்கு 10 லட்சம் வழங்க நடவடிக்கை எடுத்ததற்கு இயக்குனருக்கு சங்கம் சார்பில் நன்றியும் தெரிவிக்கப்பட்டது.

சந்திப்பின் போது சங்க செயலாளர் ஸ்ரீதர், மாலை முரசு செய்தியாளர் தனராசு, நியூஸ்7 தமிழ் செய்தியாளர் ராஜகுமார், ஜெயா டிவி செய்தியாளர் பிளிப் சித்தார்த் ஆகியோர் உடன் இருந்தனர்.

கொரோனாவில் உயிரிழந்த 3 பத்திரிகையாளர்களின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரண உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுத்த கவர்னர...
22/08/2023

கொரோனாவில் உயிரிழந்த 3 பத்திரிகையாளர்களின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரண உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுத்த கவர்னர், முதல்வர் ஆகியோருக்கு புதுச்சேரி அச்சு மற்றும் தொலைக்காட்சி பத்திரிகையாளர் சங்கம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது.

கொரோனா கோரத்தாண்டவத்தின், போது தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றிய பத்திரிகையாளர்கள் பணியை அங்கீகரிக்கும் வகையில் புதுச்சேரி அரசு முன்கள பணியாளர்களாக அங்கீகரித்தது.
அதுமட்டுமில்லாமல் தடுப்பூசி போடுவதிலும் பத்திரிகையாளர்களுக்கு முன்னுரிமை அளித்த கவர்னர், முதல்வருக்கு சங்கம் தனது நன்றியை தெரிவித்திருந்தது.
இது போன்ற சூழலில் பேரிடரின் போது களத்தில் இறங்கி பணியாற்றிய பத்திரிகையாளர்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் பாலிமர் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் பரத், மக்கள் தொலைக்காட்சி நிருபர் ரமேஷ், தினமலர் நாளிதழை சேர்ந்த போட்டோகிராபர் வெங்கட் ஆகியோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்தனர்.
இதனையடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 3 பத்திரிகையாளர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை சங்கத்தின் துவக்க விழாவில் பங்கேற்ற முதல்வர், கவர்னர் ஆகியோரிடம் முதல் கோரிக்கையாக வைத்திருந்தோம். தொடர்ந்து முதல்வர் சட்டமன்றத்தில் இதற்கான அறிவிப்பினையும் வெளியிட்டார்.
ஆனால் இதற்கான கோப்புகள் பலமுறை அதிகாரிகளால் பந்தாடப்பட்டது. ஆனாலும் கவர்னர், முதல்வர் ஆகியோர் தொடர்ந்து அந்த கோப்புகளுக்கு உரிய பரிந்துரைகளை செய்து நடவடிக்கை எடுத்தனர். பல போராட்டங்களுக்கு இடையே 2 ஆண்டுகளுக்கு பின்னர், ரூ. 10 லட்சம் நிவாரண உதவித்தொகையை, வழங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.
பத்திரிகையாளர்களின் கோரிக்கையை தாயுள்ளத்தோடு பரிசீலித்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்த கவர்னர், முதல்வர், சபாநாயகர், எம்எல்ஏக்கள் மற்றும் செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குனர் மற்றும் அதிகாரிகள் ஆகியோருக்கு புதுச்சேரி அச்சு மற்றும் தொலைக்காட்சி பத்திரிகையாளர் சங்கம் தனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

ஆர்.கே .ராஜா
( தலைவர்)
புதுச்சேரி அச்சு மற்றும் தொலைக்காட்சி பத்திரிகையாளர் சங்கம்.

Address

Pondicherry
605004

Website

Alerts

Be the first to know and let us send you an email when Puducherry Print & Television Journalist Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Puducherry Print & Television Journalist Association:

Share