Kottakuppam.in

Kottakuppam.in கோட்டக்குப்பம் மக்களின் இணையதுடிப்?

 #கோட்டகுப்பம் வரலாற்றில் கடந்த 10 ஆண்டுகளாக, வாரம் தோறும் நேர்த்தியாக இலவச மருத்துவ முகாம்களை நடத்தி, ஏழை எளிய மக்களுக்...
30/10/2024

#கோட்டகுப்பம் வரலாற்றில் கடந்த 10 ஆண்டுகளாக, வாரம் தோறும் நேர்த்தியாக இலவச மருத்துவ முகாம்களை நடத்தி, ஏழை எளிய மக்களுக்கு மருத்துவச் சேவைகளை இலவசமாக வழங்கி வரும் கிஸ்வா அமைப்பின் தன்னலமற்ற சேவைக்காக மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த மாபெரும் முயற்சியில், கிஸ்வா அமைப்பு ஏழை மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு மருந்துகள், மாத்திரைகள் மற்றும் பிற மருத்துவ உதவிகளை இலவசமாக வழங்கி, அவர்களின் நலனைப் பேணுவதில் உறுதியாக செயல்பட்டு வருகின்றது.

இந்த முயற்சியில், பிம்ஸ் மருத்துவமனை மிகப்பெரிய பங்காற்றி வருகிறது. சமூகத்தின் அடித்தட்டு மக்களை நேரடியாக தேடி சென்று, அவர்கள் தங்கியிருக்கும் இடங்களிலேயே மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு, அவர்களின் நலனுக்கு பணிந்து வருகின்ற பிம்ஸ் மருத்துவமனை குழுவின் செயற்பாடு உண்மையிலேயே வரவேற்கத்தக்கது. இந்நிகழ்ச்சிகளை சீராக நடத்துவதற்கு பிம்ஸ் மருத்துவமனை தொடர்ந்து மருத்துவ உபகரணங்கள், பரிசோதனைகள் மற்றும் தகுந்த மருத்துவ ஆலோசனைகளை வழங்கி வருவது மிகப்பெரிய சேவை.

மேலும், இந்த முகாம்களை சீராக ஒழுங்கமைப்பதில் சீரிய மனப்பான்மையுடன் ஒவ்வொரு வாரமும் தன் ஒரு நாள் வார விடுமுறையை அர்ப்பணித்தும், இடம் பொருள்களை சீராக ஏற்பாடு செய்தும் கடுமையாக உழைத்து வரும் நண்பர் அப்துல் ரவுப் அவர்களின் அரிய பணி நினைவிற்குரியது. கடந்த 10 ஆண்டுகளாக ஒவ்வொரு வாரமும் இவரது அர்ப்பணிப்பு இந்த முகாம்களை வெற்றிகரமாக நடத்த உதவியுள்ளது. இவருடைய சேவை உண்மையில் அளப்பரியது,

இத்தகைய பொதுநல முயற்சிக்கு இடமாக வழங்கி முழு ஆதரவையும் தந்து வந்த ஜாமியா மஸ்ஜித் நிர்வாகத்தினருக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றிகள். இந்த முகாம்களின் ஒவ்வொரு செலவிலும் தங்கள் நேரத்தையும் பொருளையும் தாராளமாக செலுத்தி உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவர்களின் ஆற்றலான பங்களிப்பு இல்லாமல், இந்த பொதுநல முயற்சிகள் சாத்தியமாகியிராது.

கோட்டகுப்பத்தில் கடந்த 10 ஆண்டுகளாக வாரம் தோறும் சிறப்பாக நடத்தப்பட்ட இலவச மருத்துவ முகாம்களின் நினைவாக, இந்த சாதனைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, மாபெரும் மருத்துவ முகாம் வரும் நவம்பர் 2 ஆம் தேதி கோட்டகுப்பம் ஷாதி மஹாலில் நடக்கவுள்ளது.

இந்த முக்கிய நாளில், பல துறைகளின் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று, பொதுமக்களுக்கு பரிசோதனைகள், ஆலோசனைகள் மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்படவுள்ளது.

இந்த விழாவிற்கும் தன்னலமற்ற சேவைக்காக பாடுபட்ட கிஸ்வா அமைப்பு, பிம்ஸ் மருத்துவமனை, மற்றும் நண்பர் அப்துல் ரவுப் ஆகியோரின் பங்களிப்பு நன்றி.

மக்கள் நலனுக்காக தங்களின் நேரம், அர்ப்பணிப்பு, மற்றும் உதவிகளை தாராளமாக அளித்த அனைத்து நல் இதயங்களுக்கும் நன்றி மற்றும் நல்வாழ்த்துகள்.

இந்த மருத்துவ முகாமில் பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொண்டு பயன்பெறவும்.

#கோட்டகுப்பம்_செய்திகள்

 #கோட்டக்குப்பம் பாவா மெடிக்கல் சென்டரில் அனைத்து மருந்துகளும் 16% முதல் 20% வரை தள்ளுபடி விற்பனையில் கிடைக்கும். வாங்கி...
19/01/2024

#கோட்டக்குப்பம் பாவா மெடிக்கல் சென்டரில் அனைத்து மருந்துகளும் 16% முதல் 20% வரை தள்ளுபடி விற்பனையில் கிடைக்கும்.

வாங்கி பயனடையுங்கள் ..

தொடர்பிற்கு : 8098188800

விலையில் சிறப்பு தள்ளுபடி மற்றும் பல சலுகைகளுடன் புதிய மருந்தகம் பாவா மெடிக்கல் சென்டர் விரைவில் கோட்டகுப்பதில்… #கோட்டக...
12/01/2024

விலையில் சிறப்பு தள்ளுபடி மற்றும் பல சலுகைகளுடன் புதிய மருந்தகம்

பாவா மெடிக்கல் சென்டர்
விரைவில் கோட்டகுப்பதில்…

#கோட்டக்குப்பம் #கோட்டக்குப்பம்_செய்திகள்

11/12/2023

#கோட்டக்குப்பம் நகராட்சி புதிய அலுவலகத்தை காட்டு அய்யனார் கோவில் இடத்தில் கட்ட அனுமதிக்கக் கூடாது -
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை.

#கோட்டக்குப்பம்_செய்திகள்

கோட்டகுப்பதில் மீண்டும் மீண்டும் பேட்ச் ஒர்க் .. #விழுப்புரம் மாவட்டம்  #கோட்டக்குப்பம் நகராட்சியில்  பல  மின் மாற்றியின...
29/10/2023

கோட்டகுப்பதில்
மீண்டும் மீண்டும்
பேட்ச் ஒர்க் ..

#விழுப்புரம் மாவட்டம் #கோட்டக்குப்பம் நகராட்சியில் பல மின் மாற்றியின் கம்பங்கள் சேதமடைந்து, விழும் நிலையில் இருந்தது வருகிறது. குறிப்பாக பழைய பட்டின பாதையில் ஒரு மின்மாற்றி குறித்து காவல் ஆய்வாளர் மின் கம்பத்தை மாற்ற வேண்டும் என மின் வாரியத்தில் புகார் அளித்திருந்தர்.

வழக்கம் போல் மின்சார வாரியம் நிரந்தர தீர்வுக்கு வழி ஏற்படுத்தாமல் வெறும் தற்காலிக பேட்ச் ஒர்க் செய்து மின் மாற்றி விழும் நிலையை இன்னும் சில மாதங்களுக்கு தள்ளி வைத்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு முன்பு இதே போல் பெரிய பள்ளிவாசல் அருகே விழும் நிலையில் இருந்த மின்மாற்றி கம்பத்தை தகர டின்னில் சிமெண்ட் கொட்டி பேட்ச் ஒர்க் செய்திருந்தனர். மூன்று வருடம் கழித்தும் அதன் கம்பத்தை இன்னும் புதிதாக மாற்ற வில்லை.

கோட்டக்குப்பம் மக்களை இன்னும் எத்துணை காலம் தான் ஏமாற்றும் இந்த மின்சார வாரியம் .

#கோட்டக்குப்பம்_செய்திகள்

 #கோட்டக்குப்பம் நகராட்சியில் அறிவிக்கப்படாத மின்தடை….கோட்டக்குப்பம்  நகராட்சிக்குட்பட்ட பகுதியில் கடந்த ஒரு வாரமாக அறிவ...
18/09/2023

#கோட்டக்குப்பம் நகராட்சியில்
அறிவிக்கப்படாத மின்தடை….

கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் கடந்த ஒரு வாரமாக அறிவிக்கப்படாத மின்தடை நிலவுவதால் பொதுமக்கள் சிரமத்தை சந்திக்கின்றனர்.

கோட்டக்குப்பம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக காலை, மாலை இரவு நேரங்களில் 10 தடவைக்கு மேல் மின்தடை ஏற்படுவது வாடிக்கையாகி உள்ளது.

இதனால் பள்ளி மாணவர்கள், குழந்தைகள், முதியவர்கள் சிரமத்தை சந்திக்கின்றனர். பல இடங்களில் குறைந்த மின்னழுத்தம் நிலவுகிறது.

இதை சீர்செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை விடுத்துள்ளனர். பலர் தொலைபேசி மூலமாகவும் நேரடியாக மின்சாரத்துறை அலுவலகத்திற்கு சென்று முறையிட்டு வருகின்றனர். இருப்பினும் மின்சாரத் துறை தரப்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் போதுமான அளவு இல்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்

எனவே கோட்டக்குப்பம் மின்வாரியத்தினர் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

#கோட்டக்குப்பம்_செய்திகள்

 #கோட்டக்குப்பம் சாலையில் மாடுகளை திரிய விட்டால் 5000 ஆயிரம் ரூபாய் அபராதம் கோட்டக்குப்பம் நகராட்சி ஆணையாளர்   எச்சரிக்க...
20/08/2023

#கோட்டக்குப்பம் சாலையில் மாடுகளை திரிய விட்டால் 5000 ஆயிரம் ரூபாய் அபராதம் கோட்டக்குப்பம் நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை…

#கோட்டக்குப்பம்_செய்திகள்

மணிப்பூரில் நடக்கும் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய பிஜேபி அரசை எதிர்த்து கோட்டகுப்பம் நகர காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்ப...
27/07/2023

மணிப்பூரில் நடக்கும் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய பிஜேபி அரசை எதிர்த்து கோட்டகுப்பம் நகர காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

https://kottakuppam.wordpress.com/2023/07/27/agitation-by-kottakuppam-congress-party/

#கோட்டக்குப்பம்_செய்திகள்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி அவர்களி ன் ஆணைக்கிணங்க விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் க....

புதுச்சேரி ராஜிவ்காந்தி மகளிர் மருத்துவமனையில்,  தமிழக பகுதிகளான  #கோட்டக்குப்பம், வானுார், மரக்காணம் உள்ளிட்ட ஊர்களை   ...
27/07/2023

புதுச்சேரி ராஜிவ்காந்தி மகளிர் மருத்துவமனையில், தமிழக பகுதிகளான #கோட்டக்குப்பம், வானுார், மரக்காணம் உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த கர்ப்பிணியருக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததைக் கண்டித்து, சாலை மறியல் …..

மேலதிக செய்திகளுக்கு ….

https://kottakuppam.wordpress.com/2023/07/27/refusal-to-provide-treatment-tamilnadu-pregnant-women/

#கோட்டக்குப்பம்_செய்திகள்

புதுச்சேரி ராஜிவ்காந்தி மகளிர் மருத்துவமனையில், தமிழகத்தைச் சேர்ந்த கர்ப்பிணியருக்கு சிகிச்சை அளிக்க மறுத்.....

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் ஈகைப் பெருநாள் தொழுகை சரியாக காலை 7:00 மணிக்கு ஈத்காவில் நடைபெறும் என அறிவிப்பு செய்யப்பட்ட...
29/06/2023

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் ஈகைப் பெருநாள் தொழுகை சரியாக காலை 7:00 மணிக்கு ஈத்காவில் நடைபெறும் என அறிவிப்பு செய்யப்பட்டு, ஜமாத்தார்கள் அனைவரும் இன்று காலை 6:15 மணிக்கு ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசல் அருகில் அல்லாஹு அக்பர் தக்பீர் முழங்கி ஆயிரக்கணக்கான ஜமாத்தார்கள் ஈத்கா மைதானம் நோக்கி சென்றனர்.

தொழுகைக்குப் பின்னர் உலக அமைதிக்காகவும், அனைவரின் நல்வாழ்வுக்காகவும், நலனுக்காகவும், சமுதாய ஒற்றுமைக்காகவும் துஆ(பிரார்த்தனை) செய்யப்பட்டது. பிறகு, ஒருவருக்கொருவர் தங்களின் பெருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர்.

#கோட்டக்குப்பம்_செய்திகள்

 #கோட்டகுப்பம் ரஹ்மத் நகர் மக்தப்  மதரஸாவில் ஆன்மீக அறிவியல் கண்காட்சி தொடக்கம். #கோட்டக்குப்பம்_செய்திகள்
26/05/2023

#கோட்டகுப்பம் ரஹ்மத் நகர் மக்தப் மதரஸாவில் ஆன்மீக அறிவியல் கண்காட்சி தொடக்கம்.

#கோட்டக்குப்பம்_செய்திகள்

09/05/2023

Address

Puducherri

Alerts

Be the first to know and let us send you an email when Kottakuppam.in posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kottakuppam.in:

Share