Hindu Munnani

Hindu Munnani Hindu Munnani is the organization started by Veerath Thuravi Shri. Ramagopalan to protect and develop the HINDUISM and the Hindu people.
(1304)

Hindu Munnani is a religious and cultural organization based in the Indian state of Tamil Nadu which was formed to defend the Hinduism and protect Hindu religious monuments.

 #இராம_பெரியகருப்பன்  #தமிழண்ணல் 1. ஆகஸ்ட் 12, 1928 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை என்ற ஊரில் பிறந்தவர். பள்ளத்த...
12/08/2025

#இராம_பெரியகருப்பன் #தமிழண்ணல்

1. ஆகஸ்ட் 12, 1928 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை என்ற ஊரில் பிறந்தவர். பள்ளத்தூர், ஏ.ஆர்.சி. உயர்நிலைப்பள்ளியிலும், மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ் கல்லூரியிலும் கல்வி கற்றார்.

2. 1948-ல் திருவையாறு அரசர் கல்லூரியிலும் பயின்று தமிழ் வித்துவான் பட்டம் பெற்றார். சிறந்த தமிழறிஞர்.

3. மதுரை தியாகராசர் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றிய காலத்தில் சங்க இலக்கிய மரபுகள் என்னும் பொருளில் ஆய்வு செய்து 1969-ல் முனைவர் பட்டம் பெற்றார். 13 ஆண்டுகள் காரைக்குடியில் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.

4. இவரது முயற்சியையும், கடின உழைப்பையும், சங்க இலக்கியத்தில் இருந்த ஈடுபாட்டையும் பாராட்டி, மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த மு. வரதராசனார், பல்கலைக்கழகத்தில் பணியளித்ததோடு இரண்டே ஆண்டுகளில் இணைப்பேராசிரியராகப் பதவி உயர்வும் அளித்தார்.

5. மதுரை காமராசர் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், வெங்கடேசுவரா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், கோழிக்கோடு பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டக்குழு உறுப்பினராகப் பணிபுரிந்தர்.

#சான்றோர்தினம் #இந்துமுன்னணி

 ீலகண்டசாஸ்திரி   1. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைக்குறிச்சி என்ற ஊரில் ஆகஸ்ட் 12, 1892 ஆம் ஆண்டு பிறந்தார். கல...
11/08/2025

ீலகண்டசாஸ்திரி

1. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைக்குறிச்சி என்ற ஊரில் ஆகஸ்ட் 12, 1892 ஆம் ஆண்டு பிறந்தார். கல்லிடைக்குறிச்சி அய்யா நீலகண்ட சாஸ்திரி என்பது இவரது முழுப் பெயர்.

2. வாரணாசியில் உள்ள இந்து பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பேராசிரியராக 5 ஆண்டுகள் பணியாற்றினார். ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டே இந்தியாவின் வரலாறு குறித்து விரிவான ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். சோழர்கள் குறித்து இவர் எழுதிய நூல் மிகவும் பிரசித்தம். இதில் 16-ம் நூற்றாண்டு முதல் சோழர்களின் வரலாறு, ஆட்சி நிர்வாகம் குறித்த விரிவான ஆராய்ச்சிகள் இடம்பெற்றுள்ளன.

3. ‘ஏஜ் ஆஃப் நந்தாஸ் அன்ட் மயூராஸ்’, ‘தி பாண்டியன் கிங்டம் பிரம் எர்லியஸ்ட் டைம்ஸ் டு தி சிக்ஸ்டீன்த் செஞ்சுரி’, ‘சவுத் இந்தியன் இன்புளுயன்ஸ் இன் தி பார் ஈஸ்ட்’, ‘ஹிஸ்ட்ரி ஆஃப் ஸ்ரீ விஜயா’, ‘காம்பிரெஹென்சிவ் ஹிஸ்ட்ரி ஆஃப் இந்தியா’, ‘தி கல்சர் அன்ட் ஹிஸ்ட்ரி ஆஃப் தமிழ்ஸ்’, ‘சங்கம் லிட்ரேச்சர்’ உள்ளிட்ட ஏராளமான வரலாற்று ஆராய்ச்சி நூல்களைப் படைத்துள்ளார்.

4. தென்னிந்திய வரலாறு, அதன் பிரச்சினைகள், அவர்களது சமூக வாழ்வு குறித்த கால வரிசையிலான குறிப்புகள், தென்னிந்தியாவின் தமிழர் ராஜ்ஜியம், விஜய நகர வரலாறு, அதன் எழுச்சி, வீழ்ச்சி, தூரக் கிழக்கு நாடுகளிலும் பரவிய தென்னிந்தியரின் தாக்கங்கள் என விரிவான ஆராய்ச்சிகள் மேற்கொண்டு பல நூல்களைப் படைத்தார்.

5. இவருக்குப் பின் வந்த பல வரலாற்று அறிஞர்களுக்கு இவரது நூல்களும் கட்டுரைகளும் சிறந்த வழிகாட்டுதல்களாக அமைந்தன.
6. 1957-ல் இவருக்கு பத்மபூஷண் விருது அளிக்கப்பட்டது. தென்னிந்திய வரலாற்றாய்வாளர்களில் குறிப்பிடத் தக்கவரான கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி 1975-ம் ஆண்டு தமது 83-வது வயதில் மறைந்தார்.

#சான்றோர்தினம் #இந்துமுன்னணி

 #இராம_அரங்கநாதன்    1. நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த வேதாந்தபுரம் கிராமத்தில் ஆகஸ்ட் 12, 1892 ஆம் ஆண்டு பிறந்தார். 2. எ...
11/08/2025

#இராம_அரங்கநாதன்

1. நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த வேதாந்தபுரம் கிராமத்தில் ஆகஸ்ட் 12, 1892 ஆம் ஆண்டு பிறந்தார்.

2. எஸ்.எம்.இந்து உயர்நிலைப் பள்ளியில் மெட்ரிகுலேஷன் படித்து, சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் கணிதத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றார். ஆசிரியர் பயிற்சியில் பட்டம் பெற்று, மங்களூர், கோயம்புத்தூர், சென்னை பல்கலைக்கழகங்களில் கணிதம், இயற்பியல் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

3. சென்னை பல்கலைக்கழக நூலகராக 1924-ல் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, லண்டன் சென்று, அங்குள்ள சிறந்த நூலகரான டபிள்யூ.சி.பி.சேயர்ஸிடம், நூல்களை வகைப்படுத்தும் கோட்பாட்டை அறிந்தார்.

4. நாடு திரும்பியதும், பல்கலைக்கழக நூலகத்தை மறுசீரமைக்கத் தொடங்கினார். விரைவில் இந்த நூலகம் அறிவுசார் பிரிவினரைக் கவர்ந்தது. அவர்களை ஒன்றிணைத்து, சென்னை நூலகச் சங்கத்தை நிறுவினார். இது நூலக இயக்கத்தின் சின்னமாக மாறியது. அதன் அமைப்பு செயலாளராக 1928 முதல் 1945 வரை செயல்பட்டார்.

5. இவரது பணிக்கு மனைவியும் உறுதுணையாக இருந்தார். ஸ்கூல் ஆஃப் லைப்ரரி சயின்ஸ் அமைப்பைத் தொடங்கினார். ஏறக்குறைய 15 ஆண்டுகள் இதன் இயக்குநராகப் பணியாற்றினார். தன் சேமிப்பு முழுவதையும் இதற்காக வழங்கினார்.

6. நூலகத் துறையில் 21 ஆண்டுகளுக்கு மேல் தீவிரமாக செயல்பட்டு பல புரட்சிகளை ஏற்படுத்தியவர், 1945-ல் ஓய்வுபெற்றார். பின்னர், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் நூலக அமைப்பை மேம்படுத்துவதற்காக வந்த அழைப்பை ஏற்று, அங்கு சென்றார். 2 ஆண்டுகள் கடுமையாக உழைத்து, தனி ஒருவராக அங்கிருந்த ஒரு லட்சம் நூல்களை வகைப்படுத்தினார்.

7. நூலக அறிவியல் பட்டயப் படிப்பை அறிமுகம் செய்து, தானே கற்பித்தார்.

8. இந்திய நூலகச் சங்கத் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆவணங்கள் பதிவு ஆராய்ச்சி மையம், இந்திய புள்ளியியல் நிறுவனம் ஆகிய அமைப்புகளை நிறுவினார். டெல்லி, பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகங்கள் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கின. பத்மஸ்ரீ விருதும் பெற்றார்.

9. நூலக அறிவியல், ஆவணப்படுத்துதல், தகவல் அறிவியல் துறைகளின் தந்தை என போற்றப்படும் எஸ்.ஆர்.ரங்கநாதன் 80-வது வயதில் (1972) மறைந்தார்.

#சான்றோர்தினம் #இந்துமுன்னணி

நெல்லை மாவட்டம், மானூர் ஒன்றிய மேல இலந்தகுளம் பகுதியில், தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட இடத்தில் ஆக்...
11/08/2025

நெல்லை மாவட்டம், மானூர் ஒன்றிய மேல இலந்தகுளம் பகுதியில், தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட இடத்தில் ஆக்கிரமித்து கிறிஸ்தவ சர்ச் கட்டுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரிடம் இந்து முன்னணி மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது...

#நெல்லை #மேலஇலந்தகுளம் #மனு #இந்துமுன்னணி

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் ஒன்றியம் இந்து அன்னையர் முன்னணி சார்பில், படுக்கப்பத்து ராமர் கோவில் முன்பு ராணுவ வ...
11/08/2025

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் ஒன்றியம் இந்து அன்னையர் முன்னணி சார்பில், படுக்கப்பத்து ராமர் கோவில் முன்பு ராணுவ வீரர்களின் நலன் வேண்டி, 207 திருவிளக்கு பூஜை நடைபெற்றது...

#தூத்துக்குடி #சாத்தான்குளம் #திருவிளக்குபூஜை #இந்துமுன்னணி #இந்துஅன்னையர்முன்னணி

திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் நகரம் வடக்கு. டாக்டர் அம்பேத்கர் நகரில் ஆடி மாதம் அம்மனுக்கு மஞ்சள் நீர் அபிஷேகம் இந்து...
11/08/2025

திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் நகரம் வடக்கு. டாக்டர் அம்பேத்கர் நகரில் ஆடி மாதம் அம்மனுக்கு மஞ்சள் நீர் அபிஷேகம் இந்து முன்னணி கிளை கமிட்டி சார்பாக நடைபெற்றது..

மாநில பொதுச் செயலாளர், சி. பரமேஸ்வரன் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் மற்றும் மாவட்ட, நகர பொறுப்பாளர் கிளைப் பொறுப்பாளர்கள், ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டு இறுதியாக உறுதிமொழி எடுக்கப்பட்டது..

#திருவள்ளூர் #அம்பத்தூர் #மஞ்சள்நீர்அபிஷேகம் #இந்துமுன்னணி #இந்துஅன்னையர்முன்னணி

புதுச்சேரி, காலாப்பட்டு - வள்ளலார் நகர் குடியிருப்பு பகுதியில் செல்லியம்மன் கோவில் எதிரில், மத மோதல்களை உருவாக்கும் வகைய...
11/08/2025

புதுச்சேரி, காலாப்பட்டு - வள்ளலார் நகர் குடியிருப்பு பகுதியில் செல்லியம்மன் கோவில் எதிரில், மத மோதல்களை உருவாக்கும் வகையில், கிறிஸ்துவ சர்ச் கட்டுவதற்கு அனுமதி அளித்த மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து இந்துமுன்னணி மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் காலாப்பட்டு யூகோ வங்கி அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..

#புதுச்சேரி #கண்டனஆர்ப்பாட்டம் #இந்துமுன்னணி

மத்திய சென்னை மாவட்டம், வில்லிவாக்கம் பகுதியில், இந்து அன்னையர் முன்னணி சார்பில், மஞ்சள் நீர்அபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்ற...
11/08/2025

மத்திய சென்னை மாவட்டம், வில்லிவாக்கம் பகுதியில், இந்து அன்னையர் முன்னணி சார்பில், மஞ்சள் நீர்அபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது..

#சென்னை #வில்லிவாக்கம் #மஞ்சள்நீர்அபிஷேகம் #இந்துமுன்னணி #இந்துஅன்னையர்முன்னணி

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியம், அமணக்கண்தோண்டி கிராமத்தில் வடக்கு தெரு மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை சி...
11/08/2025

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியம், அமணக்கண்தோண்டி கிராமத்தில் வடக்கு தெரு மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது..

#அரியலூர் #ஜெயங்கொண்டம் #திருவிளக்குபூஜை #இந்துமுன்னணி #இந்துஅன்னையர்முன்னணி

நீலகிரி மாவட்டம, குன்னூர் இந்து அன்னையர் முன்னணி சார்பில் அம்மனுக்கு மஞ்சள் நீர் அபிஷேகம்  நிகழ்ச்சி நடைபெற்றது.. சிறப்ப...
11/08/2025

நீலகிரி மாவட்டம, குன்னூர் இந்து அன்னையர் முன்னணி சார்பில் அம்மனுக்கு மஞ்சள் நீர் அபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது..

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் வேலுச்சாமி அவர்கள் கலந்துகொண்டு கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட தாய்மார்கள் கலந்து கொண்டனர்..

#நீலகிரி #குன்னூர் #மஞ்சள்நீர்அபிஷேகம் #இந்துமுன்னணி #இந்துஅன்னையர்முன்னணி

இந்து மதத்தை வாய்க்கு வந்த படி அவதூறாக, அநாகரிகமாக வெறுப்புணர்வுடன் பேசுபவர்கள் மீது, எந்த நடவடிக்கையும் இந்த அரசு எடுக்...
11/08/2025

இந்து மதத்தை வாய்க்கு வந்த படி அவதூறாக, அநாகரிகமாக வெறுப்புணர்வுடன் பேசுபவர்கள் மீது, எந்த நடவடிக்கையும் இந்த அரசு எடுக்கவில்லை.

மாறாக இந்து மதத்தை இழிவாக பேசுபவர்களை தட்டிக் கேட்கும் பொழுது மட்டும் ஒருதலைப்பட்சமாக இரும்பு கரம் கொண்டு அடக்க நினைக்கிறது அரசு‌. இத்தகைய இந்து விரோத மனப்பான்மையை காவல்துறையும் தமிழக அரசும் மாற்றிக்கொள்ள வேண்டும் - மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் அறிக்கை..






https://hindumunnani.org/read-news.php?news=1833

தொடந்து இந்து தர்மத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்துவரும், நடிகர் ரவிச்சந்திரனுக்கு இந்துமுன்னணி என்றும் துணை நிற்கும்..    ...
11/08/2025

தொடந்து இந்து தர்மத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்துவரும்,
நடிகர் ரவிச்சந்திரனுக்கு இந்துமுன்னணி என்றும் துணை நிற்கும்..

Address

59, Ayya Mudali Street
Pudupet-Panruti
600002

Alerts

Be the first to know and let us send you an email when Hindu Munnani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hindu Munnani:

Share

Category