05/11/2025
ராமநாதபுரம் மாவட்டம் 110/33-11 கேவி திருவாடானை மற்றும் ஏர்வாடி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நவம்பர் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதன் காரணமாக அன்று காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை பல்வேறு இடங்களில் மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
ஆதலால், பொதுமக்கள் தங்களுக்கு மின்தேவை இருப்பின் மாற்று ஏற்பாடு செய்து கொள்ளும்படியும், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் அளிக்காமல் உரிய ஒத்துழைப்பு தரும்படியும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மின்தடை செய்யப்படும் இடங்கள் :
சி.கே.மங்கலம், பாண்டுகுடி, நகரிக்கத்தான், வெள்ளையபுரம், மங்கலகுடி, அஞ்சு கோட்டை, குஞ்சங்குளம், வாணியேந்தல், கோடனுர், எட்டு குடி, மல்லனூர், ஆண்டாஊரணி, ஓரியூர், சிறுகம்பையூர், அரசூர், T.நாகனி, ஓரிக்கோட்டை, செவ்வாய்பேட்டை, புளியால், செலுகை, கல்லூர், திருவிடைமதியூர், பதனக்குடி ஆகிய திருவாடானை சுற்றுவட்டாரப் பகுதிகள். ஏர்வாடி தர்கா, அடஞ்சேரி, புல்லந்தை, இதம்பாடல், பனையடியேந்தல், நல்லிருக்கை, ஆலங்குளம் ஆகிய ஏர்வாடியைச் சுற்றியுள்ள பகுதிகள்.