03/09/2026
🚨 3 நாட்களாக சாலையில் சாய்ந்து கிடக்கும் மரம் – அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
அரக்கோணம் ரயில் நிலையம் செல்லும் வழியில், ஓம் சக்தி கோவில் அருகாமையில் பெரிய மரம் ஒன்று சாய்ந்து சாலையில் கிடக்கிறது.
இந்த மரம் சாய்ந்து மூன்று நாட்கள் ஆகியும், இதுவரை அகற்றப்படாமல் இருப்பதால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறும், பாதுகாப்பு சிக்கலும் ஏற்படும் நிலை உள்ளது.
எனவே, நகராட்சி நிர்வாகம் மற்றும் ரயில்வே துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சாய்ந்து கிடக்கும் மரத்தை அகற்றி, பொதுமக்கள் சிரமமின்றி பயன்படுத்தும் வகையில் அந்த இடத்தை சீரமைத்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
🙏 சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.