Salem Smart City

Salem Smart City Just Now Tamil Nadu

25 ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை : அரசாணை வெளியீடு           #பள்ளி  #கல்லூரி  #விடுமுறை   https://www.dinamala...
23/10/2022

25 ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை : அரசாணை வெளியீடு
#பள்ளி #கல்லூரி #விடுமுறை

https://www.dinamalar.com/latest_main.asp

போன தீபாவளி நாளில்போய் வருகிறேன் என்றான்..!எங்கே என்று கேட்டேன்.டாஸ்மாக்கிற்குத்தான் என்றான்.நிறைமாதக் கற்பினியாய் இருக்...
23/10/2022

போன தீபாவளி நாளில்
போய் வருகிறேன் என்றான்..!
எங்கே என்று கேட்டேன்.
டாஸ்மாக்கிற்குத்தான் என்றான்.
நிறைமாதக்
கற்பினியாய் இருக்கிறேன்
நினைத்துப்பார் என்றேன்..!
இன்றுதான் கடைசி
இனிக் குடிக்கவே மாட்டேன்
இருப்பதைக் கொடு என்றான்.
இப்படி எத்தனையோமுறை
சொல்லிவிட்டாய்
என்னிடம் எதுவும் இல்லை
போ என்றேன்..!
பொய் சொல்லாதே
போனால் வரமாட்டேன் என்றான்.
போய்த் தொலை என்றேன்,
புள்ளைமீது சத்தியம்
இன்னைக்கோட கடைசி
இனிக் குடிக்கவே மாட்டேன் என்றான்.
மடியில் இருந்ததை
மறைக்காமல் எடுத்து
கைநிறைய கொடுத்தனுப்பினேன்.
கடைசி என்கிறானே
குடித்துத் தொலையட்டும்
இனியாவது இந்தச் சனியனை
விட்டுத்தொலைக்கட்டும் என்று
விரும்பித்தான் அனுப்பிவைத்தேன்..!
நல்ல நாளும் அதுவுமாய்
நரகாசூரனைக்
கொன்றுவிடப் போராடியதில்
போதை தலைக்கேறி
போய்ச்சேர்ந்தான்
என்று தூக்கி வந்தார்கள்,.!?
அழுதென்ன புறண்டென்ன
ஆண்பிள்ளை பிறந்தால்
அப்போதே
கொன்று விடுவதென
தீர்மானித்திருந்தேன்..!
பெண்ணாய் பிறந்ததால்
விட்டு வைத்திருக்கிறேன்.
பிற சிரமங்கள் நிறைய உண்டு,
பெண்ணுக்கு
இல்லாத கொடுமையா
இந்த நாட்டில்,,?
இருந்தாலும்
போதைப் பேயடித்துப்
போய்ச் சேர்ந்தான் என்ற
பெரும் பழி வராது பாருங்கள்,,!?

நண்பர்களுக்கும் குழுவில் இருக்கும் உறுப்பினர்களுக்கும் அன்பார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🌹🙏
23/10/2022

நண்பர்களுக்கும் குழுவில் இருக்கும் உறுப்பினர்களுக்கும் அன்பார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🌹🙏

அம்மா, அப்பா ஆகிவிட்டோம் : இரட்டை ஆண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் நயன்தாரா - விக்னேஷ் சிவன்
09/10/2022

அம்மா, அப்பா ஆகிவிட்டோம் : இரட்டை ஆண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் நயன்தாரா - விக்னேஷ் சிவன்

சேலம் அய்யந்திருமாளிகை ஸ்ரீ மாரியம்மனுக்கு நவராத்திரி 8ம் நாள் சிறப்பு அலங்காரம்
03/10/2022

சேலம் அய்யந்திருமாளிகை ஸ்ரீ மாரியம்மனுக்கு நவராத்திரி 8ம் நாள் சிறப்பு அலங்காரம்

03/10/2022

சரஸ்வதி பூஜை மற்றும் விஜய தசமி நல்வாழ்த்துகள்! 🙏🏻☀வழிபாட்டு  #சுப  #நேரங்கள் விவரம்:-சுபகிருது வருடம் புரட்டாசி மாதம் 17...
03/10/2022

சரஸ்வதி பூஜை மற்றும் விஜய தசமி நல்வாழ்த்துகள்! 🙏🏻☀
வழிபாட்டு #சுப #நேரங்கள் விவரம்:-

சுபகிருது வருடம் புரட்டாசி மாதம் 17 ஆம் நாள்
4-10-2022 செவ்வாய் கிழமை
சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை வழிபாடு செய்ய உகந்த சுப நேரங்கள் விவரம்:-

காலை 10.30 முதல் 11.00 மணி
வரை,

பகல் 12.00 முதல் 1.00 மணி
வரை,

மாலை 4.30 முதல் 6.00 மணி
வரை,

இரவு 7.00 முதல் 8.00 மணி
வரை,

குறிப்பு:- காலை 10.30 மணி முதல் பகல் 1.00 மணி வரை தொடர்ந்து 2.30 மணி நேரமும் நல்ல நேரம், வழிபட உகந்த உத்தம நேரம் ஆகும் .

அமுதகும்ப மலர்க் கரத்தாள் மகாலட்சுமி அருள்நோக்கின் ஆயுதபூஜை நல்வாழ்த்துக்கள் .

புரட்டாசி 18 ம் நாள் 5-10-2022 புதன்கிழமை விஜயதசமி திருநாள் சுப நேரங்கள் :-

காலை 9.00 முதல் 10.00 மணி
வரை,

பகல் 1.30 முதல் 3.00 மணி
வரை,

மாலை 4.00 முதல் 5.00 மணி
வரை,

இரவு 7.00 முதல் 10.00 மணி
வரை,

குறிப்பு:- காலை 9.00 முதல் பகல் 12.00 மணி வரை வழிபாடு செய்ய உகந்த உத்தம நேரமாகும் .

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் மேய உணர்விக்கும் நமது அன்னை சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள் .

ஆதியாய் அந்தத்தின் அந்தமாய் பல்லுயிர்க்கும் அருள் கூட்டும் சத்தியாம் விஜயதசமி நல்வாழ்த்துக்கள் .

| |

அதிகாலையில் எழுவது மிகவும் சிறப்பான செயல்.அதிகாலையில் உடலும், சிந்தனைகளும் உற்சாகமாக இருக்கும்.Five AM Club என்று ஒன்று ...
03/10/2022

அதிகாலையில் எழுவது
மிகவும் சிறப்பான செயல்.

அதிகாலையில் உடலும்,
சிந்தனைகளும் உற்சாகமாக இருக்கும்.

Five AM Club என்று ஒன்று உண்டு.
அதில் மானசீகமாக இணைந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு நீங்களே
மனதளவில் ஒரு instruction.

நாளை முதல் அதிகாலை 5 மணிக்கு எழுந்திருப்பேன் என்று நமக்குள்ளேயே
ஒரு சங்கற்பம்.

அதிகாலையில் சுமார்
ஒரு மணி நேரம் உங்கள் நேரம்.

யாரும் குறுக்கிட மாட்டார்கள்.

உடற்பயிற்சி ,தியானம், நற்சிந்தனைகள் என்று வழக்கப்படுத்தி கொள்ளுங்கள்.

ஒரு மாதம் கழித்து பார்த்தால் உங்கள் வாழ்வியல் முன்னேற்றத்தை பார்த்து
நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

இந்த 5 மணி Clubல் இணைய முதல் நாள் இரவே நம்மை தயார் செய்து கொள்ளுங்கள்.

இரவு உணவு உண்டவுடன் சிறு குறு நடை

தூங்கப் போவதற்கு முன் Relaxஆக ஒரு சாய்வு நாற்காலியில் பத்து நிமிடம் உட்காருங்கள்.

கண்களை மென்மையாக மூடி உடலை தளர்த்தி கொள்ளுங்கள்.

சில நிமிடங்கள் ஆழ்ந்து சுவாசியுங்கள். பிரபஞ்ச சக்தி சுவாசத்தின் வழியே உங்கள் உடல் முழுவதும் பரவி உங்களை உடல் நலத்தில், சிந்தனையில் மேன்மையுற செய்கிறது என்று உறுதியாக நம்புங்கள்.

நான் புத்துணர்ச்சியோடும், விழிப்போடும், ஆர்வத்தோடும் காலையில் விரும்பிய நேரத்தில் ( 5 மணிக்கு) எழுவேன் என்று உங்களுக்குள் குறைந்தது 20 முறையாவது சொல்லி கொள்ளுங்கள்.

அதிகாலையில் எழுவதால் நம் வாழ்வு எப்படி எல்லாம் சிறக்கும், அன்றைய நாளை அழகாக திட்டமிடலாம், செய்யும் செயல்களை நாள் முழுவதும் சிறப்பாக செய்யலாம் என்பது போல positive thoughts நேர்மறை எண்ணங்களை பரவ விடுங்கள்.

இது ஒரு நல்ல Auto suggestion.

ஆழ் மனதில் Sub conscious Mindல்
நன்றாக பதிந்து விடும்.

உங்களை சிறப்பாக வழிநடத்தும்.

நாளை முதல் அதிகாலை 5 மணிக்கு
நம் நாளை தொடங்குவோம்.

அதிகாலை 5 மணிக்கு எழுந்தவுடன் நினைத்து கொள்ளுங்கள் :

மனோகர் உங்களுடன் காற்றின் வழியே கை குலுக்கி உங்களை 5 AM Clubக்கு உங்களை வரவேற்கிறார் என்று.

முயற்சித்து பார்க்கலாம்
பழக்கப்படுத்தி கொள்ளலாம்.
வாழ்வை இனிமையாக்கி கொள்ளலாம்.

நல்ல மாற்றங்களை வாழ்வில்
வசப்படுத்தி கொள்ளலாம்.

அதிகாலை நேர இயற்கையின்
மாற்றங்களை ரசிக்கலாம்.

சூரிய உதயம், வான மகளின் சதிராட்டங்கள், பறவைகளின் இனிய உற்சாக குரல்கள்.
நல்ல Ozone காற்று. நம்முள் மூழ்கி முத்தெடுக்க அருமையான தருணம்.

Welcome to 5 AM club 👍


மண்ணைப் பிளந்துவிதைமுளைக்ககாத்திருப்புதேவை!கருவை சுமந்துசேயைப் பெற்றெடுக்கதாயின் காத்திருப்புதேவை!கரு கொண்ட மேகம்குளிர்வ...
03/10/2022

மண்ணைப் பிளந்து
விதை
முளைக்க
காத்திருப்பு
தேவை!

கருவை சுமந்து
சேயைப் பெற்றெடுக்க
தாயின் காத்திருப்பு
தேவை!

கரு கொண்ட மேகம்
குளிர்வித்து மழை
பொழிய காத்திருப்பு
தேவை!

கற்பனையை கனவு
கண்டு உரு கொடுக்க
காத்திருப்பு
தேவை!

படித்துவிட்டு பணியில்
சேர பதிவு செய்து
காத்திருப்பு
தேவை!

முயற்சியுடன் பயிற்சி
செய்து வெற்றி பெற
பொறுமையுடன்
காத்திருப்பு
தேவை!

காசு வாங்கி ஓட்டளித்து
தோற்றுப் போன
மக்கள் அடுத்த
தேர்தல் வரை
காத்திருப்பு
தேவை!

காதலியை கைப்பிடிக்க
காலம் கனியும்வரை
காத்திருக்கும்
தேவை!

காலங்கள் மாறும்
காட்சிகளும் மாறும்
காத்திருப்போம்
கடைசி வரை!

இப்படிக்கு உங்கள் : உதயகுமார் 🌹🌹

03/10/2022
நாளை ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை தொடர்ந்து விஜயதசமி விழா கொண்டாடப்பட உள்ளது. உழைத்துக் கொடுத்த உற்பத்தி பொருள்களுக்கும், உற்ப...
03/10/2022

நாளை ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை தொடர்ந்து விஜயதசமி விழா கொண்டாடப்பட உள்ளது. உழைத்துக் கொடுத்த உற்பத்தி பொருள்களுக்கும், உற்பத்தி செய்யும் இயந்திரங்களுக்கும், கல்விக்கண் திறந்த சரஸ்வதிக்கும் சிறப்பு பூஜைகள் செய்து வழிபடும் நாளை ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையாக கொண்டாடப்பட உள்ளது.

இதனையொட்டி நாளை கொண்டாடப்பட உள்ள பூஜைக்காக பூஜை பொருட்கள் விற்பனை களை கட்டியது.கடைவீதியில் பூக்கள் விலை உச்சத்தை தொட்டாலும் விலையை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் அதிகளவிலான பூக்களை வாங்கிச் சென்றனர்.

மேலும் கடை வீதியில் வாழைமரம் விற்பனை சூடு பிடித்தது. சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் பொரிகடலை விற்பனை களைகட்டியது. செவ்வாய் பேட்டையில் உள்ள கடைகளில் பொரிகடலை இனிப்பு கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் செவ்வாய்பேட்டை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காவல்துறையினர் ஆங்காங்கே போக்குவரத்தை சீர் செய்தனர்.

நாளை நடைபெறும் பூஜைக்காக ஒட்டுமொத்த மக்களும் சேலம் கடை வீதியில் திரண்டதால் எங்கு பார்த்தாலும் மனித தலைகளாக காட்சி அளித்தது. பார்ப்பதற்கு திருவிழா கோலமாக ஆக இருந்தது என்றால் அது மிகை அல்ல.

ஒரு நாய் அதை வளர்க்கும்பெண்ணுக்கு மிகவும் விசுவாசமாக இருக்கிறது, அவள் தன் குழந்தையை அதனுடன்விட்டுவிட்டு பல வேளைகளில் வெள...
03/10/2022

ஒரு நாய் அதை வளர்க்கும்
பெண்ணுக்கு மிகவும்
விசுவாசமாக இருக்கிறது,
அவள் தன் குழந்தையை
அதனுடன்
விட்டுவிட்டு பல வேளைகளில்
வெளியில் செல்கிறாள்.

நாயுடன் உறங்கும்
குழந்தையை
அவள் எப்போதும்
கண்டு கொள்வதில்லை.
அவளும் நாயை நம்பினால்
ஆனால்,

ஒரு நாள் மிகவும் சோகமான
சம்பவம்
ஒன்று நடந்தது.

வழக்கம் போல் அந்த பெண்
இந்த விசுவாசமான நாயை வீட்டில்
குழந்தையுடன் விட்டு விட்டு
கடைக்கு சென்றார்.

அவள் திரும்பி வந்தபோது, ​​
ஒரு பயமுறுத்தும் காட்சியைக்
கண்டாள்,
அது அவளுக்கு ஒரு
முழுமையான
குழப்பமாக இருந்தது.

குழந்தை தன் தொட்டிலில்
இல்லை அதன் சூப்பி
போத்தல் அதை உடைந்து
அதை
சுற்றியிருந்த துணி துண்டு,
துண்டாக
கிடந்தது மேலும்
படுக்கையறை முழுவதும்
இரத்தம் படிந்திருந்தது.

அதிர்ச்சியடைந்த பெண்,
பயந்து தனது குழந்தையைத்
தேடிக் கொண்டிருந்தார்.

திடீரென்று, அந்த விசுவாசமான
நாயை
கண்டாள் அது தன் சுவையான
உணவை முடித்தது போல் இரத்தம்
தோய்ந்த
தன் வாயை நக்குவதைக்
கண்டாள்.

நாய் தனது குழந்தையை
சாப்பிட்டதை
பெண் உறுதி செய்து கொண்டாள்.

அதிகம் யோசிக்காமல் தன்
குழந்தையை ருசித்த நாயை
கட்டையால் அடித்தாள்
நாய் செத்து மடிந்தது.

பின்னர் அவர் தனது
குழந்தையின்
உடலின் பாகங்களைத் தேடினாள்.

அப்போது கட்டிலின் கீழ்
ஒரு மூலையில் குழந்தை
படுத்துக்கொண்டு
வேடிக்கை பார்த்தவாறு
இருந்ததையும்
அதன் மறு புறம் பாம்பு
ஒன்று
கிழிந்த நிலையில் கிடந்ததையும்
அந்த பெண் கண்டார்.

அங்கு பாம்புக்கும் நாய்க்கும்
கடும் சண்டை
கொடூரமான பாம்பிடம்
இருந்து குழந்தையை
காப்பாற்ற நாய் போராடியதையும்
அவள் அதை புரிய நேரமாகியது.

ஏனென்றால் அவள்
தனக்கு வந்த கோபத்தாலும்,
நிதானமற்ற
தன்மையாலும்
விசுவாசமான நாயைக்
கொன்றாள்.

இனி அவள் கண்ணீர்
விடுவதை அந்த விசுவாசமான
நாய் அறியப்போவதில்லை.

அது போல் உண்மையை
சரிவர அறியாமல் எத்தனை
முறை கடுமையான
வார்த்தைகளால்
மற்றவரை தூற்றுகின்றனர் மற்றும்
அவர்களைப் பற்றி
பொய்களைப் பரப்புகின்றனர்.

வீண் பழி சுமத்தி அடுத்தவரிடம்
காட்டிக்கொடுக்கின்றனர்.

"சூழ்நிலையை அணுகுவதற்கு
எப்பொழுதும் பொறுமையாக
இருப்பதே சிறந்தது.”

மேலும் தீர விசாரிக்காது
சில விடயங்களை அவசரப்பட்டு
நம்புதலும் கூடாது.

நன்றி.💐

படித்ததில் பிடித்தது

Address

Salem

Website

Alerts

Be the first to know and let us send you an email when Salem Smart City posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share