Thiruvengadu-திருவெண்காடு

Thiruvengadu-திருவெண்காடு Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Thiruvengadu-திருவெண்காடு, Digital creator, Thiruvengadu, Sirkazhi.
(1)

Thiruvengadu (also spelled Thiruvenkadu), Sirkazhi Taluk,Mayiladuthurai District, PIN 609114
இறைவர்: சுவேதாரண்யேஸ்வரர், இறைவி: பிரம்ம வித்யாம்பிகை, தனிச்சிறப்பு: அகோர மூர்த்தி, புதன். சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவராலும் பாடப்பெற்றுள்ளது.

திருவெண்காடு அருள்மிகு ஶ்ரீ பிரம்மவித்யாம்பிகை சமேத ஶ்ரீ சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் முன்னிட்டு ...
04/07/2025

திருவெண்காடு அருள்மிகு ஶ்ரீ பிரம்மவித்யாம்பிகை சமேத ஶ்ரீ சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் முன்னிட்டு இன்று முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது

*சிவபெருமான் மனித உருவில் அருள்பாலிக்கும் ஒரே ஸ்தலம்*🌹சிவபெருமானை இதுவரை லிங்க வடிவில் மட்டுமே தரிசித்திருப்போம். ஆனால்,...
04/07/2025

*சிவபெருமான் மனித உருவில் அருள்பாலிக்கும் ஒரே ஸ்தலம்*🌹

சிவபெருமானை இதுவரை லிங்க வடிவில் மட்டுமே தரிசித்திருப்போம். ஆனால், சிவபெருமானை இந்த கோவிலில் மனித வடிவில் தரிசிக்க முடியும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? சிவபெருமான் மனித உருவில் அருள்பாலிக்கும் ஒரே ஸ்தலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் திருவெண்காட்டில் இருக்கும் சுவேதாரண்யேசுவரர் திருக்கோவில்.

காசியில் விஷ்ணு பாதம் உள்ளதுப்போல இக்கோவிலில் ருத்ர பாதம் இருக்கிறது. இக்கோவில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் 274 தேவார பாடல் பெற்ற தலங்களில் இது 11 ஆவது தேவாரத்தலமாகும்.

பகிரபடும் பகிர்வுகள் பிறர் அறிந்துக் கொள்வதற்காக தவிர பிறர் பிரதி உரிமையை மீறும் எண்ணம் இல்லை..அசல் பதிவேற்றியவருக்கு நன்றி.

சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஒன்றான அகோர முகத்தில் இருந்து தோன்றிய அகோரமூர்த்தி தான் இக்கோவிலில் மனித உருவில் அருள்பாலிக்கிறார். சிவபெருமான் அகோரமூர்த்தியாக காட்சித் தருவதற்கு பின் ஒரு வரலாறு இருக்கிறது.

ஜலந்திரன் மகனான மருத்துவன் ஒரு அசுரன் ஆவான். இவன் சிவபெருமானை நோக்கி தவம் புரிந்து அவரிடம் இருந்து சூலாயுதத்தை பெற்றான். ஆனால், அந்த சூலாயுதத்தைக் கொண்டு தேவர்களை துன்புறுத்த தொடங்கினான்.

இதை அறிந்த சிவபெருமான் கோவம் கொண்டு நந்தியை அனுப்பி வைத்தார். ஆனால், மருத்துவாசுரன் நந்தி மீது சூலாயுதத்தை ஏவ அது நந்தியின் உடலில் ஒன்பது இடங்களில் துளையிட்டது. இதை பார்த்த சிவபெருமான் பயங்கர கோவம் கொண்டு அகோரமூர்த்தி வடிவம் எடுத்து அந்த அசுரனை அழித்தார் என்பது வரலாறு.

இன்றைக்கும் இந்த கோவிலில் இருக்கும் நந்தியின் உடலில் ஒன்பது இடங்களில் துளையிருப்பதை காண முடியும். இக்கோவில் பல யுகங்களை கடந்து நீடித்து நிலைத்திருக்கும் பழமையான கோவிலாகும். இக்கோவிலை பற்றிய குறிப்புகள் ராமாயணத்திலும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோவில் நவகிரகங்களில் ஒன்றான புதன் பகவானுக்கு உரிய ஸ்தலமாகும். இக்கோவிலில் வழிப்படுவதன் மூலம் பூர்வஜென்ம பாவம் நீங்கும், குழந்தைப்பேறு, வேலைவாய்ப்பு, தொழில் விருத்திக் கிட்டும். எனவே, இக்கோவிலுக்கு வாழ்வில் ஒருமுறையாவது சென்று வழிப்பட்டுவிட்டு வருவது நன்மைத் தரும்.🌹

I've just reached 7K followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗...
03/07/2025

I've just reached 7K followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉

03/07/2025
யாகசாலை பூஜை துவக்கத்தை முன்னிட்டு மணிகர்ணிகையில் இருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டது
03/07/2025

யாகசாலை பூஜை துவக்கத்தை முன்னிட்டு மணிகர்ணிகையில் இருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டது

 #திருவெண்காடு  அருள்மிகு ஶ்ரீ பிரம்மவித்யாம்பிகை சமேத ஶ்ரீ சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உ...
03/07/2025

#திருவெண்காடு அருள்மிகு ஶ்ரீ பிரம்மவித்யாம்பிகை சமேத ஶ்ரீ சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் இன்று யாகசாலை பூஜை துவக்கத்தை முன்னிட்டு மணிகர்ணிகை தீர்த்தத்தில் இருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டது.

புகைப்படங்கள் -

*திருக்கடையூர் அபிராமி அம்மன் கோவிலின் ஹோமங்கள் அவற்றின் பலன்கள்!*அறுபதாம் கல்யாணம் என்ற உடனே நம் எல்லோர் மனதிலும் முதலி...
03/07/2025

*திருக்கடையூர் அபிராமி அம்மன் கோவிலின் ஹோமங்கள் அவற்றின் பலன்கள்!*

அறுபதாம் கல்யாணம் என்ற உடனே நம் எல்லோர் மனதிலும் முதலில் நினைவுக்கு வருவது திருக்கடையூர்தான். சரபோஜி மன்னர் ஆட்சிக் காலத்தில் பக்தர் ஒருவருக்காக அபிராமி அம்பாள் தை அமாவாசையை முழு பௌர்ணமியாக்கி அபிராமி அந்தாதி அருளச் செய்த தலம். இங்கிருக்கும் அமிர்தகடேஸ்வரர் லிங்கத்தில் எமன் வீசிய பாசக் கயிற்றின் தடத்தை இன்றும் சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்யும்போது பார்க்க முடியும். இத்தகைய சிறப்பு வாய்ந்த திருக்கடையூர் அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் சுவாமி கோவில் நடைபெறும் ஹோமங்கள் மிக சிறப்பு வாய்ந்தவை அவற்றை தெரிந்து பற்றி

உக்ரரத சாந்தி பூஜைகள்.

59 முடிந்து 60 வயது ஆரம்பம்.

ஒரு மனிதனுக்கு சராசரி ஆயுள் 120 ஆகும். இதில் பாதிவயதான 60 வயதில்தான் பல்வேறு கண்டங்கள் வந்து ஒரு மனிதனுடைய ஆயுளை குறைக்கும் என்பதால் அந்த கண்டங்களிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டி இக்கோயிலுக்கு வந்து உக்ரரத சாந்தி செய்து தங்களுடைய ஆயுளை நீண்ட காலங்களுக்கு தொடர செய்வார்கள்.

சஷ்டியப் பூர்த்தி:

60 வயது முடிந்து 61 வது வயது முதல் நாளில் திருமணம். அதாவது குடும்பங்கள் எல்லாம் சேர்ந்து செய்யக் கூடியவை. தாய், தந்தையருடைய திருமணங்களை பிள்ளைகள் பார்த்து இருக்கமாட்டார்கள், அவர்களுடைய மகள், மகன்கள் சேர்ந்து பெற்றோர்களுக்கு இந்த 60- வது திருமணம் செய்துவைப்பார்கள். இதனால் சகல செல்வங்களும் கிடைக்கக்கூடிய பலன்கள் உண்டாகும்.

பீமரத சாந்தி : 69 முடிந்து 70 வயது ஆரம்பம். விஜயரத சாந்தி : 75 வயது.

ஆரோக்கியம், திடமான உடல் கட்டமைப்பு, பீமனை போல் ஆயுள் பெற்று ஆரோக்கியமாக வாழவேண்டும் என்பதால் இந்த பீமரத சாந்தி செய்யப்படுகிறது.

சதாபிஷேகம் : 80 வயது ஆரம்பம்85 வயது முடிய.

இந்த திருமணம் பேரன்கள், பேத்திகள், கொள்ளுபேரன்கள், கொள்ளுபேத்திகள். சேர்ந்து 80 வது வயதில் சதாபிஷேகம் (திருமணம்) செய்து வைக்கப்படுகிறது. இது குடும்ப விருத்திக்கு செய்யப்படுகிறது.

ஒரு ருத்ரஹோமம் செய்த பலன் 10 ஆயிரம் அஸ்வமேத யாக பலனை கொடுக்கும். வியாதி நிவர்த்தியாகும். ஜீவனம் மேலோங்கும், சிந்தனை வளரும், மனச்சாந்தி உண்டாகும். நல்ல வாக்கும் சாதுர்யமும், ஆயுள் விருத்தியும், குழந்தை செல்வமும் உண்டாகும்.
ஜென்ம நட்சத்திர ஹோமம்:

இது ஒவ்வொரு மனிதர்களும் அன்றைய தினத்தில் எந்த நட்சத்திரத்தில் பிறக்கிறார்களோ அதுவே அவர்களுடைய ஜென்ம நட்சத்திரம் ஆகும். பிறந்த நட்சத்திரத்தை தெரிந்துக்கொண்டு அன்றைய நாளில் பூஜைகள் செய்வதால் நன்மை உண்டாகும்.
ஜென்ம நட்சத்திர ஹோமம்:

இது ஒவ்வொரு மனிதர்களும் அன்றைய தினத்தில் எந்த நட்சத்திரத்தில் பிறக்கிறார்களோ அதுவே அவர்களுடைய ஜென்ம நட்சத்திரம் ஆகும். பிறந்த நட்சத்திரத்தை தெரிந்துக்கொண்டு அன்றைய நாளில் பூஜைகள் செய்வதால் நன்மை உண்டாகும்.

ஆயுள் ஹோமம்: ஒரு வயது முதல் 100 வயது வரை.

ஆயுள் விருத்திக்கு செய்யப்படும் பூஜைக்கு ஆயுள் ஹோமம் என்று பெயர்.

கனகா அபிஷேகம் 90 வயதில் செய்யப்படுகிறது.

பூர்ணா அபிஷேகம் 100 வயதில் செய்யப்படுகிறது.

ஆயிரம் பிறை கண்டவர்கள்:

ஒரு பெரியவர் 80 வயதை கடந்துவிட்டால், அவர் பூரண வாழ்வு வாழ்ந்தாக கருதுகிறோம். அதாவது அவர் ஆயிரம் பிறை கண்டவர் என்று கூறி அவரை வணங்குகிறோம். இத்தகைய சிறப்புப் பெற்றவர்கள் இத்தலத்துக்கு வந்து சதாபிஷேகம் செய்து கொள்கிறார்கள். 80 வயது கடந்தவர்கள் வணங்கத் தக்கவர்கள் என்று பரமாத்மா கண்ணபிரான் கூறியுள்ளார்.

இக்கோவில் மயிலாடுதுறையில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் திருக்கடையூரில் அமைந்துள்ளது.

Address

Thiruvengadu
Sirkazhi
609114

Opening Hours

Monday 6am - 1pm
4pm - 8:30pm
Tuesday 6am - 1pm
4pm - 8:30pm
Wednesday 6am - 1pm
4pm - 8:30pm
Thursday 6am - 1pm
4pm - 8:30pm
Friday 6am - 1pm
4pm - 8:30pm
Saturday 6am - 1pm
4pm - 8:30pm
Sunday 6am - 1pm
4pm - 8:30pm

Website

https://www.google.com/maps/d/viewer?mid=1M_MZlm-s5HIpTPr2pcwBoFXIFqlHJD8&ll=11.01398

Alerts

Be the first to know and let us send you an email when Thiruvengadu-திருவெண்காடு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Thiruvengadu-திருவெண்காடு:

Share