News4 Tamil

News4 Tamil Welcome to Official page of News4 Tamil. Our page provides true facts for Online Tamil News

Welcome to Official page of News4 Tamil.We are providing latest updates from State and National level Current Events,Cinema,Sports and Business with true facts

தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் கடிதம்: ஆதரவு நிர்வாகிகள் பட்டியல், ஆவணங்கள் தாக்கல்ராமதாஸ் – அன்புமணி இடையே மோதல்கள் நாளுக...
09/07/2025

தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் கடிதம்: ஆதரவு நிர்வாகிகள் பட்டியல், ஆவணங்கள் தாக்கல்

ராமதாஸ் – அன்புமணி இடையே மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது ராமதாஸ், கட்சியின் அதிகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தை நாடியுள்ள நிலையில், ராமதாஸ் பா.ம.க தலைவர் இல்லை என்று ராமதாஸ் அறிவித்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சி (PMK) நிறுவனர் எஸ். ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே தலைமைப் பொறுப்புக்கான போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. மே 29 அன்று தனது மகன் அன்புமணி ராமதாஸின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, தான் மீண்டும் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் கடிதம் அனுப்பியுள்ளார். ஆனால், அன்புமணி தான் இன்னமும் பா.ம.க. தலைவராகத் தொடர்வதாக உறுதியாகக் கூறி வருகிறார்.

இது குறித்து கட்சி வட்டாரங்களின் தகவல்படி, ராமதாஸின் இந்த கடிதம் ஜூன் 30 அன்று தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அன்புமணி ராமதாஸின் செயல்பாட்டுத் திறனின்மையே அவரை செயல் தலைவராக்கி, தான் மீண்டும் தலைமைப் பொறுப்பை ஏற்றதற்கான காரணம் என்று ராமதாஸ் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும், ராமதாஸ் தனது இந்த முடிவுக்கு ஆதரவாக, 1,413 செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் 21 பொதுக்குழு உறுப்பினர்களின் கையொப்பங்கள் மற்றும் புகைப்படங்களையும் இணைத்து தேர்தல் ஆணையத்திற்கு சமர்ப்பித்துள்ளதாக ஒரு கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது.

ராமதாஸின் கூற்றுப்படி, அன்புமணி ராமதாஸின் தலைவர் பதவிக்காலம் மே 28 அன்று முடிவடைந்தது. அடுத்த நாளே, அதாவது மே 29 அன்று, “சம்பந்தப்பட்ட அதிகாரிகளால்” தான் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக ராமதாஸ் தேர்தல் ஆணையத்திற்குத் தெரிவித்துள்ளார். இந்த தலைமைப் போர் ஜூலை 8 (நேற்று) அன்றும் தொடர்ந்தது. ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவருமே தனித்தனியே கூட்டங்களை நடத்தி, ஒன்றுக்கொன்று முரணான தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர். இது கட்சியின் உள்ளே நிலவும் பிளவையும், மோதலையும் மேலும் ஆழப்படுத்தியுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் முடிவும், இந்தக் கட்சியின் எதிர்காலமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. பா.ம.க.வில் நடக்கும் இந்த அரசியல் களம், வரவிருக்கும் தேர்தல்களில் கட்சியின் நிலையை எப்படிப் பாதிக்கும் என்பது குறித்து கட்சி தொண்டர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி பெயரை அமித் ஷா தவிர்த்தது ஏன்? நயினார் நாகேந்திரன் கொடுத்த விளக்கம்!தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் 2...
28/06/2025

எடப்பாடி பழனிசாமி பெயரை அமித் ஷா தவிர்த்தது ஏன்? நயினார் நாகேந்திரன் கொடுத்த விளக்கம்!

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் 2026 நடைபெறும் இன்னும் 10 மாதங்களே எஞ்சியுள்ள நிலையில் இதற்காக அதிமுகவுடன் நீண்டு இழுப்பறி மற்றும் பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு பாஜக கூட்டணி அமைத்தது. மேலும் கூட்டணி தொடர்பாக கருத்துக்களையும் அல்லது சமூக வலைத்தளங்களில் பேசுவதையோ தவிர்க்க வேண்டும் என்று பாஜக நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் தலைமை அறிவுறுத்தி வந்தது. மேலும் அதிமுக பாஜக கூட்டணி குறித்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகிறது.மேலும் இந்த கூட்டணியை தக்க வைத்துக் கொள்ள பாஜக தொடர்ந்து அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்து சில தினங்களுக்கு முன்பு மதுரையில் முருகர் பக்தர்கள் மாநாட்டில் அறிஞர் அண்ணா மற்றும் பெரியார் குறித்த வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது. அந்த மாநாட்டில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கலந்து கொண்டிருந்தனர்.

அதிமுக - பாஜக கூட்டணி

அதற்கு எந்தவித எதிர்ப்போ அல்லது கண்டனமோ தெரிவிக்காதது அதிமுக கட்சித் தொண்டர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அதிமுக துணை தலைவர் செய்தியாளர்களை சந்தித்த அப்போது பேசிய அவர் அறிஞர் அண்ணாவையோ அல்லது பெரியாரையும் பற்றி பேசினால் அதிமுக முதல் ஆளாக வந்து குரல் கொடுக்கும் என்று தெரிவித்து இருந்தார்.

மேலும் அறிஞர் அண்ணா மற்றும் ஜெயலலிதாவை பற்றி பேசியதற்கு கடந்த முறை அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்ன முடிவு எடுத்தார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது என்று பாஜகவிற்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தார். இந்த சம்பவம் அதிமுக பாஜக கூட்டணியில் பிளவை ஏற்படுத்தும் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

எடப்பாடி பழனிசாமி பேரை தவிர்த்த அமித்ஷா

இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளிதழுக்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்று கேள்வி எழுப்பியதற்கு அதிமுக கட்சியில் இருப்பவர்கள் ஒருவர்தான் என்று எடப்பாடி பழனிசாமியின் பெயரை கூறாமல் தவிர்த்தது அதிமுக நிர்வாகிகளிடையே சர்ச்சை ஏற்படுத்தியது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியை கல் ஏற்க மாட்டார்கள். தமிழ்நாட்டில் ஒருபோதும் கூட்டணி ஆட்சி வராது என்று கூறிய அவர் எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர் என்று கூறியிருந்தார். இது தற்பொழுது கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலைகள் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கமளித்துள்ளார்.

நயினார் நாகேந்திரன் கொடுத்த விளக்கம்

இது குறித்து நெல்லை மாவட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.அபோது தமிழ்நாட்டில் அதிமுக பாஜக கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது. தொடர்ந்து இரு கட்சி தலைவர்களும் தீவிர அரசியல் பணியில் ஈடுபட்டு வருவதாக நயினார் நாகேந்திரன் கூறினார். தொடர்ந்து முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்று கூறாமல் மத்திய உள்துறை அமைச்சர் தவிர்த்தது குறித்த கேள்விக்கு,’’தமிழ்நாட்டில் வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி அமையும் என்று கூறினார்.

மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எடப்பாடி பழனிசாமியின் பெயரை ஏற்கனவே சொல்லிவிட்டார். முதல்வர் வேட்பாளர் பழனிசாமிதான் . கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இருவரும் பேசி முடிவெடுப்பார்கள் என்று கூறினார். மேலும் இந்த கூட்டணி குறித்து திமுகவிற்கு பயம் வந்துவிட்டது என்று கூறினார்.

அரசியல் சாசனத்தில் உள்ள ‘மதச்சார்பின்மை’ வார்த்தை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்: ஆர்எஸ்எஸ்அம்பேத்கர் வரைந்த இந்திய அரசி...
28/06/2025

அரசியல் சாசனத்தில் உள்ள ‘மதச்சார்பின்மை’ வார்த்தை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்: ஆர்எஸ்எஸ்

அம்பேத்கர் வரைந்த இந்திய அரசியல் சாசன முகவுரையில் இல்லாத ‘மதச்சார்பின்மை’ மற்றும் ‘சோசலிசம்’ ஆகியவை வார்த்தைகள் தொடருவது குறித்து மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் வலியுறுத்தியுள்ளது.

நாட்டில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டதன் 50-ம் ஆண்டை ஒட்டி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே, “1975-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி நாட்டின் பிரதமராக இருந்த இந்திரா காந்தி அவசரநிலைச் சட்டத்தை பிரகடனத்தினார். அவசரநிலையின் போது அப்போதைய காங்கிரஸ் அரசாங்கத்தால் மக்களுக்கு எதிராக எண்ணற்ற அநீதிகள் நிகழ்த்தப்பட்டன. 250 பத்திரிகையாளர்கள் உட்பட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

அந்தக் கால அரசாங்கம் 60 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வலுக்கட்டாயமாக கருத்தடை செய்தது. பல வழிகளில் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியது. காங்கிரஸ் கட்சி தனது ‘கொடூரமான செயலுக்காக’ தேசத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

நீதித்துறை சுதந்திரமும் குறைக்கப்பட்டது. அவசரநிலையின் போது இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் இரண்டு வார்த்தைகள் - அதாவது மதச்சார்பின்மை மற்றும் சோசலிசம் - ஆகியவை சேர்க்கப்பட்டன. இந்த இரண்டு வார்த்தைகளும் முன்பு முகவுரையில் இல்லை. முகவுரை தேசத்திற்கு நித்தியமானது. ஆனால் சித்தாந்தத்தின் அடிப்படையிலான சோசலிச கருத்துக்கள் இந்தியாவிற்கு நித்தியமா?

6 ஆண்டுகளாக ஒரு தேர்தலில் கூட போட்டியிடாத 345 அரசியல் கட்சிகள்.. தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை..!ஆறு ஆண்டுகளாக ஒரு தேர...
28/06/2025

6 ஆண்டுகளாக ஒரு தேர்தலில் கூட போட்டியிடாத 345 அரசியல் கட்சிகள்.. தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை..!

ஆறு ஆண்டுகளாக ஒரு தேர்தலில் கூட போட்டியிடாத, பதிவு செய்யப்பட்ட 345 அரசியல் கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்க இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் ஆறு ஆண்டுகளாக இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட 345 அரசியல் கட்சிகள் ஒரு தேர்தலில் கூட போட்டியிடவில்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும், இந்த கட்சிகளின் அலுவலகங்களும் பதிவு செய்யப்பட்ட முகவரிகளில் இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது. அது மட்டும் இன்றி, 2800க்கும் மேற்பட்ட அடிப்படை நிபந்தனைகளை கூட பூர்த்தி செய்ய இந்தக் கட்சிகள் தவறி உள்ளது.

இதனை அடுத்து, இந்த கட்சிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், 21 நாட்களுக்குள் பதில் இல்லை என்றால் அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து செய்யப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது.

அரசியல் கட்சி பதிவை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்காக தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுப்பதாகவும், அரசியல் செயல்முறையில் அதிக வெளிப்படைத்தன்மை கொண்டுவரப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்னும் சில நாட்களில் இந்த 345 கட்சிகளின் பெயரையும் தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தி.மு.க கூட்டணியில் பா.ம.க? ஸ்டாலின் தான் முடிவு எடுப்பார்: தைலாபுரத்தில் செல்வப்பெருந்தகை பேட்டிதி.மு.க கூட்டணியில் பா....
28/06/2025

தி.மு.க கூட்டணியில் பா.ம.க? ஸ்டாலின் தான் முடிவு எடுப்பார்: தைலாபுரத்தில் செல்வப்பெருந்தகை பேட்டி

தி.மு.க கூட்டணியில் பா.ம.க வருவது குறித்து ஸ்டாலின் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும், பா.ம.க-வில் நிலவும் பிரச்சனைக்கு பா.ஜ.க தான் காரணம் என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் பா.ம.க நிறுவனர் ராமதாசை தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வபெருந்தகை மற்றும் அக்கட்சியின் மாநிலதுணை தலைவர் விஜயன் நேரில் சந்தித்தனர். அரை மணி நேரம் நடைபெற்ற சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார் செல்வப்பெருந்தகை.

அப்போது அவர் கூறுகையில், "பொதுவாழ்க்கையில் 40 வருடமாக உள்ள ராமதாசை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன். அரசியலுக்காக சந்திக்கவில்லை. அரசியலுக்கு அப்பாற்பட்ட சந்திப்பு இது. கூட்டணியும் இல்லை, அரசியலுமில்லாத சந்திப்பு. ராம்தாஸ் - அன்புமணி ஆகிய இருவரையும் சமாதானம் செய்ய சந்திக்கவில்லை

தி.மு.க கூட்டணியில் பா.ம.க வருவது குறித்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் தான் முடிவு செய்ய வேண்டும். தி.மு.க கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும். பா.ம.க-வில் ஏற்படும் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என அன்புமணி புரிதலின்றி பேசுகிறார். தி.மு.க-வை அன்புமணி குற்றஞ்சாட்டுவது பா.ஜ.கவை சமாதானம் செய்ய கூறியிருப்பாரே தவிர, அவரது உள் மனது அப்படி சொல்லாது. அப்படி அவர் சொல்ல வேண்டிய என்ன தேவை இருக்கிறது. தி.மு.க பா.ம.க-வில் பிரச்சனை செய்ய என்ன தேவை இருக்கிறது.

தி.மு.க வளர்ச்சி பாதையில் செல்கிறது தமிழகத்தையும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்கிறார்கள், எல்லா துறையும் வெற்றி கரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. சமூகதிட்டங்கள் இந்தியாவிலையே இல்லாத அளவிற்கு தி.மு.க செயல்படுத்தி வருகிற நிலையில் பா.ம.க-வில் ஏன் தி.மு.க குழப்பம் ஏற்படுத்த வேண்டும். குழப்பம் ஏற்படுத்துகிற அரசியல் ஸ்டாலினுக்கு தெரியாது. பா.ம.க-வில் நடைபெறும் குழப்பத்திற்கு பா.ஜ.க-தான் காரணம். அவர்கள் எங்கெங்கு கூட்டணி வைக்கிறார்களோ அங்குகெல்லாம் அந்த கட்சியை உடைத்து விடுவார்கள், அடுத்தது அ.தி.மு.க-வை உடைத்துவிடுவார்கள். கூட்டணி என்று கூறிவிட்டு அ.தி.மு.க-வை உடைத்துவிடுவார்கள்.

அ.தி.மு.க-வின் தலைமை கர்த்தா அண்ணா, பெரியாரை கொச்சை படுத்தி படம் வெளியிடுவதற்கு பெயர் என்ன? காங்கிரஸ் கட்சி தலைவர்களான நேருவையோ, இந்திராவையோ கூட்டணியில் இருப்பவர்கள் கொச்சை படுத்தினால் நாங்கள் கூட்டணியில் இருப்போமே கண்டன அறிக்கை கொடுத்துவிட்டு வெளியேறி இருப்போம். எங்க தலைவர்களை, மூதாதையர்களை பலிகொடுத்துவிட்டு என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு? அண்ணாதுரையை அ.தி.மு.க-வினர் பலி கொடுத்துவிட்டார்கள். ஏன் இதுவரை காட்டமாக அறிக்கையை எடப்பாடி பழனிச்சாமி வழங்கவில்லை? என்ன தேவை? பா.ஜ.விடம் பயம் இருக்கிறது. அண்ணாதுரையை காட்டி கொடுத்துவிட்டு என்ன அரசியல் செய்ய வேண்டும் என்ற தேவை இருக்கிறது?

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அரசியலை கரைந்து குடித்தவர் மருத்துவர் ராமதாஸ். அவர யார் பக்கமும் சாய வேண்டிய அவசியமில்லை, கருணாநிதி ஒரு முன் உதாரணம். தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்பதற்கு முன்னுதாரணமாக ஸ்டாலின் உள்ளார். அதனால் அதனை ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். பா.ம.க தி.மு.க-வின் கூட்டணிக்கு வரவேண்டும் என ஸ்டாலின் தான் முடிவு செய்வார். அப்படி செய்தால் நாங்கள் என்ன செய்ய முடியும். காங்கிரசில் அவரவர் சொந்த கருத்தை கூறுவதை செய்தியாக எடுத்து கொள்ள வேண்டாம். அதிக தொகுதி கேட்பது அவரவது ஆசை கேட்கிறார்கள். அகில இந்திய தலைமை என்ன சொல்கிறதோ, அதனைத் தான் செய்ய முடியும்" என்றும் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

'என் மகனுக்கு பதவி வேணும்” துரைமுருகன் கண்டிஷன்- தீவிர அரசியலுக்கு முற்றுப்புள்ளி?துரைமுருகன் எந்த ஒரு அதிருப்தியும் இல்...
28/06/2025

'என் மகனுக்கு பதவி வேணும்” துரைமுருகன் கண்டிஷன்- தீவிர அரசியலுக்கு முற்றுப்புள்ளி?

துரைமுருகன் எந்த ஒரு அதிருப்தியும் இல்லாமல் பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் விரும்புகிறாராம்.

என்னுடைய மகன் கதிர் ஆனந்துக்கு பதவி கொடுத்தால், பொதுச்செயலாளர் பதவியை நானே ராஜினாமா செய்து கொள்கிறேன் என துரைமுருகன் கண்டிஷன் போட்டுள்ளதாக சொல்கின்றனர். அதே போல் வரும் தேர்தலில் சீட் வேண்டாம் என சொல்லி விட்டு தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்ளலாமா என்ற யோசனையிலும் துரைமுருகன் இருக்கிறாராம்.

துரைமுருகன் மீது அதிருப்தியா?

திமுக தலைமை கழகத்தில் பொதுச்செயலாளர் பதவி விரைவில் கைமாறவிருக்கிறது. துரைமுருகனிடம் இருக்கும் பொதுச்செயலாளர் பதவியை டி.ஆர்.பாலுவிடம் ஒப்படைப்பதற்கான முடிவை முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்துள்ளதாக தெரிகிறது. ஆனால் திமுகவின் மூத்த தலைவராகவும், அனுபவம் வாய்ந்தவராகவும் துரைமுருகன் இருப்பதால், எந்த ஒரு அதிருப்தியும் இல்லாமல் அவர் பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் விரும்புகிறாராம். துரைமுருகன் மீது அதிருப்தி எதுவும் கிடையாது, வயது மூப்பு காரணமாக அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போவதால்தான் பதவியை கைமாற்ற ஸ்டாலின் முடிவெடுத்துள்ளதாக அறிவாலய வட்டாரத்தில் பேச்சு இருக்கிறது.

ஆனால் பொதுச்செயலாளர் பதவியை வேறு ஒருவரிடம் ஒப்படைப்பதற்கு முட்டுக்கட்டையாக இருந்து வந்த துரைமுருகன், தற்போது ஒரு கண்டிஷனுடன் இறங்கி வந்துள்ளதாக சொல்கின்றனர். அதாவது வேலூர் எம்.பியும் தனது மகனுமான கதிர் ஆனந்துக்கு கட்சியிலோ, ஆட்சியிலோ முக்கிய பொறுப்பு ஒன்றை கொடுத்தால் பொதுச்செயலாளர் பதவியை நானே ராஜினாமா செய்து கொள்கிறேன் என பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்கின்றனர்.

இனி தனது மகனின் அரசியல் எதிர்காலம் முக்கியம் என்பதால் தனது மகனை கட்சி பார்த்து கொண்டால் எந்த அதிருப்தியும் இல்லாமல் தலைமை கழக மாற்றத்தை நடத்திக் கொள்ளலாம் என்ற முடிவில் துரைமுருகன் இருக்கிறாராம்.

தீவிர அரசியலுக்கு முழுக்கு

அதே போல் வரும் 2026 தேர்தலிலும் சீட் வேண்டாம் என்று துரைமுருகன் ஸ்டாலினும் சொல்லப் போவதாக பேச்சு இருக்கிறது. உடல்நலப் பிரச்னை காரணமாக அடிக்கடி மருத்துவமனை செல்வதால் துரைமுருகனுக்கு ஓய்வு தேவைப்படுவதாக சொல்கின்றனர். அதனால் மகனிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு வரும் தேர்தலில் இருந்து தீவிர அரசியலுக்கு முழுக்கு போட்டு விடலாம் என்ற யோசனையில் துரைமுருகன் இருப்பதாக நெருங்கிய வட்டாரத்தில் பேசப்படுகிறது.

ஆனால் தனது மகனின் அரசியல் எதிர்காலத்துக்கு கட்சியில் இருந்து என்ன தேவையோ அதை வாங்கிவிட்டுத்தான் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும் என்பதில் துரைமுருகன் கறாராக இருக்கிறாராம்.

இங்க நான் தான் கிங்கு.. தமிழகத்தின் கிங் மேக்கர் விஜய்.. அவர் கைகாட்டுபவர் தான் ஆட்சி அமைக்க முடியும்: மதிவாணன் கணிப்பு....
27/06/2025

இங்க நான் தான் கிங்கு.. தமிழகத்தின் கிங் மேக்கர் விஜய்.. அவர் கைகாட்டுபவர் தான் ஆட்சி அமைக்க முடியும்: மதிவாணன் கணிப்பு..

2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், திராவிட கட்சிகளுக்கு இணையாக விஜய்யின் தமிழக வெற்றி கழகம் இருக்கப் போகிறது என்றும், ஒன்று விஜய் ஆட்சி அமைப்பார் அல்லது யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை விஜய் முடிவு செய்வார் என்றும் பல அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், தற்போது யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த மதிவாணன் என்பவர் கூறியபோது, 2026 ஆம் ஆண்டு தேர்தலில் விஜய் தான் ‘கிங் மேக்கராக’ இருப்பார் என்றும், அவர் கைகாட்டுபவர்தான் ஆட்சி அமைக்க முடியும் என்றும், கண்டிப்பாக தேர்தல் முடிவுகள் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் தொங்கு சட்டசபை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி ஒருபுறம், தி.மு.க கூட்டணி ஒருபுறம் இருக்கும் நிலையில், விஜய் தனியாக ஒரு கூட்டணி அமைக்க இருக்கிறார் என்றும், அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வருவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், ராகுல் காந்தி – விஜய் சந்திப்பு விரைவில் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகம் அமைக்கும் கூட்டணியுடன் காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் வந்துவிட்டால், கண்டிப்பாக இந்த கூட்டணி வெற்றி பெறும் அல்லது தொங்கு சட்டசபை அமைக்கும் அளவுக்கு தேர்தல் முடிவுகள் இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தான், மதிவாணன் இது குறித்து கூறியபோது, “இளைய தலைமுறை ஓட்டுகள், முதல் முறையாக ஓட்டு போடுபவர்கள் மற்றும் இரண்டு கட்சிக்கும் ஓட்டு போட விருப்பம் இல்லாமல் ஓட்டே போடாமல் இருப்பவர்கள் தான் விஜய்க்கு இந்த முறை அதிகமாக வாக்குகள் கிடைக்கும். கண்டிப்பாக விஜய் ஒரு கிங்மேக்கராக இருப்பார்,” என்றும் தெரிவித்துள்ளார்.

பல விமர்சகர்கள் கூறியது போல், இந்தத் தேர்தலின் முடிவு தொங்கு சட்டசபையாகத்தான் இருக்கும் என்றும், அதனால் கண்டிப்பாக விஜய் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் கிங்மேக்கர் இடத்தில் இருப்பார் என்றும் கூறியுள்ளார். இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை என்றாலும், இதன் படி நடக்க அதிக வாய்ப்பு இருப்பதாகக் கமெண்ட்ஸ்களில் நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.

’’பழசை மறந்துட்டீங்களா?’’ ஈபிஎஸ் மீது அதிருப்தி!- சைலண்ட் மோடுக்குச் சென்ற ஜெயக்குமார்!பாஜக கூட்டணிதான் தோல்விக்குக் கார...
25/06/2025

’’பழசை மறந்துட்டீங்களா?’’ ஈபிஎஸ் மீது அதிருப்தி!- சைலண்ட் மோடுக்குச் சென்ற ஜெயக்குமார்!

பாஜக கூட்டணிதான் தோல்விக்குக் காரணம்

கடந்த 2021 தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியில் தேர்தலை சந்தித்து தோல்வி அடைந்தது. அதிமுகவின் தோல்விக்கு மிகப்பெரிய காரணமே பாஜக கூட்டணிதான் என விமர்சனங்கள் சூழ்ந்தது. பின்னர் அண்ணாமலையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த கூட்டணி முறிந்தது.

அப்போது ’’25 வருசம் ராயபுரத்துல முடிசூடா மன்னனா இருந்தேன், யாரால தோத்தேன், பிஜேபியாலதான் தோத்தேன்’’ என வெளிப்படையாக சொல்லியவர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டதையே ஜெயக்குமாரை வைத்துதான் அறிவித்தார் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்.

மீண்டும் கூட்டணி; அப்செட்டில் ஜெயக்குமார்

அதன்பிறகும் கட்சி சம்பந்தமான முக்கியமான விஷயங்களில் ஜெயக்குமார் மூலமாகவே தனது கருத்துகளை இபிஎஸ் சொல்லி வந்தார். பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என விடாப்பிடியாக இருந்த ஜெயக்குமார் தற்போது மீண்டும் கூட்டணி அமைந்துள்ளதால் அப்செட்டில் இருப்பதாக சொல்கின்றனர்.

அதுவும் இபிஎஸ் டெல்லி சென்று அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பது தொடர்பாக தன்னிடம் எந்த ஆலோசனையும் நடத்தவில்லையே என்ற கவலையும் ஜெயக்குமாருக்கு இருப்பதாக கூறப்படுகிறது. டெல்லியில் இருந்து திரும்பிய பிறகும் இபிஎஸ் தன்னை அழைத்து பேசுவார் என எதிர்பார்த்த ஜெயக்குமாருக்கு ஏமாற்றமே மிஞ்சியதாக அதிமுக வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. இக்கட்டான சூழ்நிலையில் இபிஎஸ் பக்கம் நின்றும், கட்சியில் தற்போது எனக்கான முக்கியத்துவம் குறைந்து வருகிறது என ஜெயக்குமார் தனக்கு நெருக்கமான வட்டாரத்தில் புலம்பி வருவதாக சொல்கின்றனர்.

தவிர்த்த ஜெயக்குமார்

சென்னையின் முகமாக இருக்கக் கூடிய ஜெயக்குமார் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் முதல் ஆளாக வந்து நிற்பார். ஆனால் அதிமுக பாஜக கூட்டணி பற்றி முக்கிய அறிவிப்பு வெளியாகும்போது அந்த பக்கமே வராமல் தவிர்த்தார். மேடையிலும், இபிஎஸ் வீட்டில் நடந்த விருந்திலும் கே.பி.முனுசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணியை மட்டுமே பார்க்க முடிந்தது. எஸ்.பி.வேலுமணியை வைத்து இபிஎஸ் ஜெயக்குமாரை அழைத்தும் வேறு ஏதோ காரணங்கள் சொல்லி ஜெயக்குமார் வராமல் தவிர்த்ததாக சொல்கின்றனர்.

நாளுக்கு நான்கு ப்ரஸ்மீட் கொடுத்து ஹெட்லைனில் இடம்பெறும் ஜெயக்குமார் தற்போது வெளியே தலைகாட்டாமல் சைலண்ட் மோடிற்கு சென்றுவிட்டார்.

கட்சி நலனுக்கு ஏற்புடையதல்ல

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், ஏற்கனவே அதிமுகவில் ஓபிஎஸ், தினகரன், சசிகலாவால் குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில், தற்போது ஜெயக்குமாரும் முரண்டு பிடித்து வருவது கட்சி நலனுக்கு ஏற்புடையதல்ல. எனவே ஜெயக்குமாரை சமாதானப்படுத்தி மீண்டும் பேக் டூ ஃபார்முக்கு எடப்பாடி கொண்டு வர வேண்டும் என்கின்றனர் ஜெயக்குமார் ஆதரவாளர்கள்.

பெரியார், அண்ணாவை சிறுமைப்படுத்தியது தவறு! பொங்கியெழுந்த அதிமுக! பரபரப்பு அறிக்கை!முருக பக்தர்கள் மாநாட்டில் தந்தை பெரிய...
24/06/2025

பெரியார், அண்ணாவை சிறுமைப்படுத்தியது தவறு! பொங்கியெழுந்த அதிமுக! பரபரப்பு அறிக்கை!

முருக பக்தர்கள் மாநாட்டில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்னாவை சிறுமைப்படுத்தியது தவறு என்று அதிமுக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி (ஐடி விங்) வெளியிட்ட அறிக்கையில், ''அவலமே உருவான ஒரு ஆட்சியை நடத்தும் ஸ்டாலினின் தி.மு.க., அதைப்பற்றி நாங்கள் நாள்தோறும் தெரிவிக்கும் மக்களின் குரலான விமர்சனங்ககளுக்கு பதில் சொல்ல வக்கில்லாமல், "Take Diversion" என்ற தனது வழக்கமான பாணியில், முருக பக்தர்கள் மாநாட்டை வைத்து. அ.இ.அ.தி.மு.க. மீது அவதூறான கருத்துகளை அள்ளித் தெளித்து, மக்களின் கவனத்தை திசைதிருப்பிவிடலாம் என எண்ணுகிறது.

திராவிடத்தை அழிக்க முடியாது

தி.மு.க.வின் அமைச்சர்கள் வரிசையாக செய்தியாளர் சந்திப்பு கொடுக்க, ஆர்.எஸ்.பாரதி பெயரில் வழக்கம் போலவே அறிக்கை வாந்தியையும் கக்கியுள்ளது தி.மு.க. "திராவிடத்தை அழிக்க முருகா வா" என்று ஒட்டப்பட்ட போஸ்டர்களால் திராவிடம் அழிந்து விடுமா? திராவிடம் என்ற கொள்கையைத் தான் யாராவது அழித்துவிட முடியுமா? திராவிடம் என்பது எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையிலான, ஏழை எளிய மக்கள் ஏற்றம் பெற வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாட்டை செலுத்திக் கொண்டிருக்கும் உயரிய கொள்கை நெறி!

திமுக தலைகுனிய வேண்டும்

மக்களுக்கான ஒரு கொள்கையை யாரால் வீழ்த்த முடியும்? தி.மு.க.வின் இந்த விஷமப் பிரச்சாரம், நம் திராவிடக் கொள்கையையே Insecure-ஆக காட்டக் கூடிய ஒரு மோசமான Narrative. இதை செய்வதற்கு தி.மு.க. வெட்கித் தலைகுனிய வேண்டும். அரசியல் செய்கிறோம் என்ற பெயரில் திராவிடத்தை வலுவற்ற கொள்கை போல கட்டமைக்க முயலும் தி.மு.க.வின் சதிச்செயல் கடும் கண்டனத்திற்குரியது. பெரியார், அண்ணாவின் வாழ்வியல் உரத்தில் தழைத்தோங்கி நிற்கும் கொள்கையை, ஒரு மாநாடு சிதைத்து விடுமா என்ன? இல்லை. அப்படி நடக்கத்தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் விட்டுவிடுமா?

எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தது ஏன்?

திராவிடக் கொள்கை எங்கள் குருதியில் கலந்த ஒன்று. "ஒன்றே குலம்: ஒருவனே தேவன்" என்ற பேரறிஞர் அண்ணாவின் நெறிப்படி வாழ்பவர்கள் நாங்கள். ஒவ்வொருவருடைய தனிப்பட்ட கடவுள் நம்பிக்கைக்கும் மதிப்பளிக்கக் கூடிய இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பதால்தான், கடவுள் பக்தியை பறைசாற்ற, அமைப்பு ரீதியாக நடத்தப்பட்ட மாநாட்டிற்கு கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஜனநாயக ரீதியாக வாழ்த்து தெரிவித்தார்.

உறுதிமொழிகளை ஏற்கவில்லை

எங்கள் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும், தனிப்பட்ட முறையில் முருக பக்தர்கள் என்ற அடிப்படையிலேயே அந்த மாநாட்டில் கலந்துகொண்டனரே தவிர எந்தவித அரசியல் நோக்கத்திலும் அல்ல. அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையோ, உறுதிமொழிகளையோ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த யாரும் ஏற்கவில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறோம்.

துளியும் ஏற்றுக்கொள்ள முடியாதது

அதே போல், அந்த மாநாட்டில், தந்தைப் பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் பற்றி வெளியிடப்பட்ட வீடியோ என்பது துளியும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தரப்பில் எங்கள் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். உண்மையில் அப்படிப்பட்ட வீடியோ வெளியிட்டதாக எங்கள் கவனத்திற்கு வரவோ, நாங்கள் யாரும் பார்க்கவோ இல்லை. மாநாடு முடித்து வந்த பிறகே இதுபற்றிய செய்திகள் வாயிலாகத்தான் நாங்களும் அறிந்து கொண்டோம்.

பெரியாரின் கோபம் கடவுள் மீது அல்ல‌

சாதியின் பெயரால் மக்கள் பிரிவுண்டு இருக்க, அந்த சாதிக்கு மூலமாக கடவுளை வைத்து சிலர் அரசியல் செய்ய, அந்த அரசியலை எதிர்க்கவே "கடவுள் மறுப்பு" கொள்கையை ஆயுதமாக ஏந்தினார் தந்தைப் பெரியார். பெரியாரின் கோபம் எப்போதும் கடவுள் மீது அல்ல; மாறாக, கடவுளின் பெயரைச் சொல்லி சிலரின் தவறான அரசியலால் ஏற்பட்ட கொடும் சாதிய பேதங்கள் மீது தான்!

திமுக பாடமெடுக்க அவசியமில்லை

"நான் பிள்ளையாரையும் உடைக்க மாட்டேன்; பிள்ளையாருக்கு தேங்காயும் உடைக்க மாட்டேன்" என அரசையும் மதத்தையும் தெளிவாக வேறுபடுத்தி, Secularist அரசியலை முன்னெடுத்தவர். நாங்கள் பெயரில் மட்டுமல்ல. எங்கள் நெஞ்சங்களிலும் தாங்கும் பேரறிஞர் அண்ணா. பெரியார், அண்ணா ஆகியோரின் கொள்கைப் பார்வையைத் தன்னகத்தே கொண்டு, வழுவாமல் இயங்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு, அவதூறும் ஆபாசமும் மட்டுமே கொள்கையாகக் கொண்ட தி.மு.க. பாடமெடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

எஸ்.பி. வேலுமணி விளக்கம்

அதேபோல், கழகத்தின் தலைமை நிலையச் செயலாளர், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தனது தொகுதிக்கு உட்பட்ட மிகவும் பழமைவாய்ந்த, மதிப்பிற்குரிய பேரூர் ஆதீனத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி அளிக்கப்பட்ட அழைப்பினை ஏற்று கலந்துகொண்டதாகவும், ஆர்.எஸ்.எஸ் விழாவில் கலந்துகொள்ளவில்லை எனவும் செய்தியாளர் சந்திப்பில் தெளிவுபடுத்திவிட்டார்.

தி.மு.க. துரோகத்தைப் பற்றி பேசுவதா?

பாரதிய ஜனதா கட்சியை மையமாகக் கொண்டு இன்றைக்கு இவ்வளவு பேசும் தி.மு.க. 1999-2004 வரை என்ன செய்து கொண்டிருந்தது? முரசொலி மாறனின் மத்திய மந்திரி பதவியை தக்க வைத்துக்கொள்ள பா.ஜ.க.வின் காலடிகளைத் தேடி சென்ற கொத்தடிமைகளான தி.மு.க.விற்கு அப்போது மட்டும் இனித்ததா? எந்த கட்சியை எதிர்த்து தங்கள் கட்சி அரசியலுக்கு வந்ததோ, அந்த காங்கிரஸ் கட்சியோடே கூட்டணி வைத்துக்கொண்டு, வரலாறு நெடுக தமிழர்களுக்கு துரோகம் இழைத்த தி.மு.க. துரோகத்தைப் பற்றி பேசுவதா? அ.இ.அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணி என்பது தமிழ்நாட்டின் வளர்ச்சியை கருத்திற்கொண்டு அமைக்கப்பட்ட கூட்டணி. அதில் மாற்றுக் கருத்தில்லை.

மக்கள் விரட்டி அடிப்பார்கள்

ஆனால், மிக உறுதியாக சொல்கிறோம்- எங்களுடைய கொள்கை நிலைப்பாடுகளை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்கின்ற இயக்கமல்ல அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்! தமிழ்நாட்டிற்கு ஒன்று என்றால், நம் மாநில மக்களுக்கு ஒன்று என்றால், கொண்ட கொள்கையாம் திராவிடத்திற்கு ஒன்று என்றால், ரத்தத்தில் கலந்துள்ள நம் தலைவர்களுக்கு ஒன்று என்றால், கொழுந்துவிட்டு பற்றி எரியும் தீ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டன்! தமிழ்நாட்டிற்கு உண்மையில் துரோகம் இழைத்துக் கொண்டிருப்பது தி.மு.க.தான் என்பதை மக்கள் அறிவார்கள். அதை 2026-ல் மக்கள் உங்களை விரட்டி அடிக்கும்போது புரியும்'' என்று கூறப்பட்டுள்ளது.

விஜய்யின் சினிமா எண்ட்ரி முதல் அரசியல் பயணம் வரை... தளபதி கடந்து வந்த பாதை!இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் - பாடகி ஷோபா தம்ப...
21/06/2025

விஜய்யின் சினிமா எண்ட்ரி முதல் அரசியல் பயணம் வரை... தளபதி கடந்து வந்த பாதை!

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் - பாடகி ஷோபா தம்பதிக்கு கடந்த 1974-ம் ஆண்டு ஜூன் மாதம் 22ந் தேதி பிறந்த நடிகர் விஜய். 1984-ம் ஆண்டு வெற்றி என்கிற திரைப்படத்தின் மூலம் தனது தமிழ் திரையுலக வாழ்க்கையின் முதல் அடியை 10 வயதில் எடுத்து வைத்தார். பின்னர் படிப்படியாக திரையுலகில் காலடியைப் பதித்த நடிகர் விஜய், தனது 18வது வயதில் நாளைய தீர்ப்பு திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் ஒரு இடத்தை தக்கவைத்தார். பின்னர் அடுத்தடுத்து ஒரு சில படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்தார். அவற்றில் பூவே உனக்காக, லவ் டுடே, காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும், குஷி ஆகிய முக்கிய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார் விஜய்.

கடந்த 1998-ம் ஆண்டு தமிழக அரசால் வழங்கப்படும் கலைமாமணி விருதை பெற்றார் விஜய். இதையடுத்து கடந்த 2004-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படம் 50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த முதல் தமிழ் படம் என்கிற பெருமையை பெற்றது. தொடர்ந்து அடுத்தடுத்து விஜய் நடித்த திருப்பாச்சி, போக்கிரி, சிவகாசி போன்ற படங்கள் அவருக்கு வெற்றியை தேடித்தந்தன. தொடர் வெற்றியின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், வணிக ரீதியாக வசூல் மன்னனாகவும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். இப்படி சிறு சிறு வெற்றிகளை தொடர்ந்து கடந்த 2010 முதல் 2020 வரை அவர் நடிப்பில் வெளியான துப்பாக்கி, கத்தி, மெர்சல், சர்க்கார் போன்ற படங்கள் பல்வேறு விமர்சனங்களை சந்தித்தாலும் பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வசூல் சாதனை படைத்தது.

விஜய்க்கு 275 கோடி சம்பளம்

பின்னர் அட்லீ இயக்கிய பிகில் படம் மூலம் 300 கோடி கிளப்பில் இணைந்த விஜய், அடுத்தடுத்து மாஸ்டர், வாரிசு, லியோ, கோட் என வெற்றிப்படங்களை கொடுத்தது மட்டுமின்றி தமிழ் சினிமா வரலாற்றிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் உருவெடுத்தார். இவர் தற்போது ஜனநாயகன் என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இது தான் விஜய்யின் கடைசி படமாகும். இப்படத்திற்காக நடிகர் விஜய்க்கு ரூ.275 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு இருக்கிறது. இப்படத்தை எச்.வினோத் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படம் வருகிற 2026-ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் விருந்தாக திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தொடர்ந்து பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்து வந்த நடிகர் விஜய்க்கு தனி ரசிகர் பட்டாளமே உருவாகின. இந்த ரசிகர் பட்டாளம் காலப்போக்கில் விஜய் மக்கள் இயக்கமாக மாறியது. இந்த மக்கள் இயக்கம் படிப்படியாக அரசியல் பக்கம் பயணிக்க தொடங்கியது. கடந்த 2009-ம் ஆண்டு தனது ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றிய விஜய், அதன்பின்னர் ஒரு கொடியினை அறிமுகம் செய்து வைத்தார். இதையடுத்து கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கினார் விஜய். அதோடு திரையுலகில் இருந்து ஓய்வு பெறுவதாகவும், அரசியலில் நுழையப்போவதாகவும் அறிவித்தார். 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தல் தான் தன்னுடைய டார்கெட் என்று ஓப்பனாக அறிவித்து தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

விஜய்யின் அரசியல் சம்பவங்கள்

அதுமட்டுமின்றி தமிழகத்தில் பொதுத்தேர்வில் சாதித்த மாணவ, மாணவிகளை நேரில் அழைத்து அவர்களுக்கு கல்வி விருது விழா ஒன்றை கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தி வருகிறார் விஜய். அவர்களுக்கு விருது மட்டுமின்றி கல்வி ஊக்கத் தொகையும் வழங்கி கெளரவித்து வருகிறார் விஜய். விஜய்யின் அரசியல் வருகைக்கு பின்னர் அவர் சந்தித்த விமர்சனங்கள் ஏராளம். விஜய் படத்தை பார்க்க வேண்டுமானால் கூட்டம் வரும், விஜய்யை அரசியல் தலைவராக ஏற்றுக்கொள்ள யாரும் வரமாட்டார்கள் என விமர்சித்தவர்கள் மூஞ்சில் கரியை பூசும் விதமாக இந்தியாவே வியந்து பார்க்கும் அளவுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை நடத்தி அரசியல் கட்சிகளை மிரள வைத்தார்.

பல்வேறு சமூக பிரச்சனைகளுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டு கண்டனம் தெரிவித்த வந்தார் விஜய். இதனால் அவர் ஒர்க் பிரம் ஹோம் அரசியல் செய்வதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் அதையெல்லாம் தவிடுபொடி ஆக்கும் விதமாக பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போராட்ட களத்திலேயே சந்தித்து அவர்களுக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்தார். அதுமட்டுமின்றி அவர் கோவைக்கு பூத் கமிட்டி மீட்டிங்கிற்காக சென்றபோது அங்கு விமான நிலையத்தில் விஜய்யை காண லட்சக்கணக்கான மக்கள் திரண்டதால் கோவையே ஸ்தம்பித்து போனது. இதன்பின்னர் மதுரைக்கு ஜனநாயகன் பட படப்பிடிப்பிற்காக விஜய் வந்தபோது அங்கிருந்து அவர் கொடைக்கானல் செல்லும் வழிநெடுக, அவரது ரசிகர்கள் நடத்திய ரோடு ஷோ பிரம்மிப்பை ஏற்படுத்தியது.

இந்த ஆண்டு ஒரு அரசியல் தலைவராக தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடும் விஜய், அடுத்த ஆண்டு தமிழக முதல்வராக தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதனால் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ பெருமளவில் வாய்ப்பு இருப்பதாக அரசியல் ஆலோசகர்கள் கூறுகின்றனர். விஜய்யின் முதல்வர் கனவு பழிக்குமா... 2026ம் ஆண்டு தேர்தலில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

"பேச்சு மட்டும் தான் சைலன்ட்டா இருக்கும், அடி சரவெடியா இருக்கும்”.. விஜய் - திருமாவளவன் டெல்லி பயணமா? காங்கிரஸ் தலைவர்கள...
20/06/2025

"பேச்சு மட்டும் தான் சைலன்ட்டா இருக்கும், அடி சரவெடியா இருக்கும்”.. விஜய் - திருமாவளவன் டெல்லி பயணமா? காங்கிரஸ் தலைவர்களுடன் சந்திப்பு?

கடந்த சில மாதங்களுக்கு முன் விஜய்யும், திருமாவளவன்னும் டெல்லி சென்றதாகவும், அங்கே காங்கிரஸ் தலைவர்களை விஜய்க்கு திருமாவளவன் அறிமுகம் செய்து வைத்ததாகவும், அதன் பின்னர் புதிய கூட்டணி குறித்து ரகசிய பேச்சுவார்த்தை நடந்ததாகவும், வலதுசாரி ஆதரவாளர் எம். குமார் சமீபத்தில் நடந்த தொலைக்காட்சி விவாதத்தில் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், கடந்த ஒரு ஆண்டாகவே மறைமுகமாகவும், நேரடியாகவும் கூட்டணியிலிருந்து வெளியேறும் மனநிலையை வெளிப்படுத்தி வருகிறார். தங்களுக்கு கூட்டணியில் உரிய மரியாதை இல்லை என்றும், கூட்டணி ஆட்சி குறித்து எந்தவிதமான சாதகமான பதிலும் இல்லை என்றும், அதுமட்டுமின்றி மிகவும் குறைவான தொகுதிகளே தங்கள் கட்சிக்கு ஒதுக்கப்படுவதாகவும் திருமாவளவன் தனது பேட்டிகளிலும், பொதுக்கூட்டங்களிலும் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த சூழலில், அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இருப்பதால் அந்த கூட்டணிக்குச் செல்ல முடியாத நிலையில், தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து ஒரு புதிய கூட்டணி அமைக்க திருமாவளவன் திட்டமிட்டு வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். அந்த அடிப்படையில்தான் விஜய்யை அழைத்துக்கொண்டு திருமாவளவன் டெல்லி சென்றதாகவும், அங்கு காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களைச் சந்தித்து புதிய கூட்டணி ஏற்படுத்துவது குறித்து ஆலோசனை செய்ததாகவும் எம். குமார் அந்த விவாதத்தில் தெரிவித்துள்ளார்.

அப்போது அதே விவாதத்தில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் இந்தத் தகவலை மறுத்தனர். இருப்பினும், எம். குமார் இந்தத் தகவலை தான் சில மாதங்களுக்கு முன்பே வெளியிட்டதாகவும், அதை யாரும் மறுக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்த விஜயதாரிணி, ராகுல் காந்தியை விஜய் சந்தித்ததாகவும், அப்போது ராகுல் காந்தியின் ஆலோசனையின் பேரில்தான் புதிய கட்சியை அவர் தொடங்கியதாகவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும்போது, தமிழக வெற்றிக்கழகம், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இணைந்து, அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வுக்கு மாற்றாக ஒரு புதிய கூட்டணியை உருவாக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோலி, ரோகித் இல்லாதது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கே அவமானம்.. இங்கிலாந்து வீரர் கருத்துஇந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீர...
08/06/2025

கோலி, ரோகித் இல்லாதது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கே அவமானம்.. இங்கிலாந்து வீரர் கருத்து

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருப்பது கிரிக்கெட்டுக்கே அவமானமான விஷயம் என்று இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் கிறிஸ் வொக்ஸ் தெரிவித்துள்ளார்.இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான இரு அணிகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் இங்கிலாந்து அணியில் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான கிறிஸ் வொக்ஸ், இந்திய தொடர் குறித்து தனது கருத்தை தெரிவித்திருக்கிறார். இது குறித்து பேசிய அவர், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா போன்ற ஒரு பலமான அணியை எதிர்கொள்வது மிகவும் நல்ல விஷயம். இந்த தொடர் நிச்சயம் கடும் சவால்கள் நிறைந்த தொடராக இருக்கும்.

விராட், ரோகித் சர்மா போன்ற வீரர்களுக்கு எதிராக நாங்கள் பல மறக்க முடியாத மோதல்களை களத்தில் வெளிப்படுத்தி இருக்கின்றோம். ஆனால் தற்போது அவர்கள் இல்லாதது நிச்சயம் கிரிக்கெட்டுக்கு ஒரு அவமானமான விஷயம். எனினும் இரண்டு ஸ்டார் வீரர்கள் இல்லாத நிலையிலும் இந்திய அணியின் பேட்டிங் திறமை அதிக அளவில் தான் இருக்கின்றது.

அணிக்கு வந்திருக்கும் புதிய வீரர்கள் நிச்சயம் நன்றாக விளையாடுவார்கள். அவர்களுடைய திறன் அதிக அளவு இருக்கிறது. இதில் பலரும் தங்களுடைய திறமையை ஏற்கனவே நிரூபித்து இருக்கிறார்கள். பயிற்சி ஆட்டத்தில் கேஎல் ராகுல் சிறப்பாக விளையாடி சதம் அடித்திருக்கின்றார். அதுவும் அந்த ஆடுகளத்தில் ஒரு நாள் முழுவதும் அவர் பேட்டிங் செய்திருக்கின்றார்.

இது போன்ற ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது கடினம். சில நேரம் நாம் மிகவும் களத்தில் அமைதியாக இருக்க வேண்டும். சில நேரம் அடித்து விளையாட வேண்டும். தற்போது காயத்திலிருந்து மீண்டு வந்து 20 ஓவர்கள் வீசிய கிறிஸ் வொக்ஸ், ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன் மற்றும் கருண் நாயர் ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தி 60 ரன்கள் விட்டுக் கொடுத்து இருக்கிறார். இந்த இந்தியா ஏ அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது தமக்கு திருப்தியை அளிப்பதாகவும் கிறிஸ் வொக்ஸ் கூறியுள்ளார்.

Address

Tamil Nadu

Alerts

Be the first to know and let us send you an email when News4 Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News4 Tamil:

Share