MediaClickz

MediaClickz Exploring the exciting blend of cinema, entertainment, and health! Subscribe for fun and informative content!

Join us for doctor interviews, surprising facts, and insights on how movies impact public health.

மும்பை, பெங்களூரு போன்ற பெரு நகரங்கில் புது விதமான ட்ரெண்ட் பரவி வருகிறது. திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும், பெண்ணும் ஒரே...
12/08/2025

மும்பை, பெங்களூரு போன்ற பெரு நகரங்கில் புது விதமான ட்ரெண்ட் பரவி வருகிறது. திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும், பெண்ணும் ஒரே வீட்டில் புருஷன் பொண்டாட்டி போல சேர்ந்து வாழ்கின்றனர். ஆனால் இவர்கள் பெருநகரங்களில் வீட்டு வாடகை, செலவீனங்களை சமாளிக்க முடியவில்லை என்பதற்காகவே சேர்ந்து வாழ்வதாக கூறுகின்றனர்.

ஆறு மாத கர்ப்பத்துடன் ஆடி மாதத்தில் திருமணம்.நானும் ரங்கராஜ் அவர்களும் கடந்த சில ஆண்டுகளாகவே கணவன்-மனைவியாக எங்கள் வாழ்க...
31/07/2025

ஆறு மாத கர்ப்பத்துடன் ஆடி மாதத்தில் திருமணம்.

நானும் ரங்கராஜ் அவர்களும் கடந்த சில ஆண்டுகளாகவே கணவன்-மனைவியாக எங்கள் வாழ்க்கையை தொடங்கிவிட்டோம். எங்கள் அன்பின் அடையாளமாக இந்த ஆண்டு எங்களுக்குக் குழந்தை பிறக்கப் போகிறது - ஜாய் கிரிசில்டா பதிவு

Madhampatti Rangaraj got married for the second time. Congrats 🎉
28/07/2025

Madhampatti Rangaraj got married for the second time. Congrats 🎉

பரதேசி.. விஷால் என்னை ஏன் அப்படி அழைக்கிறார் என தெரியல - பிரபல நடிகை ரவினா ரவி. விஷால் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ...
26/07/2025

பரதேசி.. விஷால் என்னை ஏன் அப்படி அழைக்கிறார் என தெரியல - பிரபல நடிகை ரவினா ரவி.

விஷால் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருந்து வருகிறார். தொடர்ந்து பெரிய படங்களாக நடித்து வரும் அவர், கடைசியாக மார்க் ஆண்டனி படத்தில் நடித்து இருந்தார்.

இந்நிலையில் நடிகர் விஷால் பற்றி ஒரு பேட்டியில் நடிகை ரவீனா ரவி பேசி இருக்கிறார். 'விஷால் என்னை பரதேசி என்று தான் எப்போதும் அழைக்கிறார். அது ஏன் என கடவுள் சத்தியமாக எனக்கு தெரியவில்லை' என கூறி இருக்கிறார்.

விஷாலின் வீரமே வாகை சூடும் படத்தில் ரவீனா ஒரு ரோலில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது பழக்கம் ஏற்பட்டு இருவரும் நண்பர்கள் ஆகிவிட்டார்களாம்.

திருமணத்தை மீறிய உறவை தேர்வு செய்ய என்ன காரணம்..? உளவியல் பார்வையில் தெரிந்துகொள்ளுங்கள்..!இன்று நாட்டில் அன்றாடம் நடக்க...
11/07/2025

திருமணத்தை மீறிய உறவை தேர்வு செய்ய என்ன காரணம்..? உளவியல் பார்வையில் தெரிந்துகொள்ளுங்கள்..!

இன்று நாட்டில் அன்றாடம் நடக்கும் பல பிரச்சினைகளுக்கு பெரும்பாலும் காரணமாக இருப்பது திருமணத்திற்கு உறவு மீறிய தொடர்பே காரணம்.

ஒவ்வொரு பிணைப்பிற்கும் ஆத்மார்த்தமான நம்பிக்கையே அடித்தளம். ஆனால் இந்த தொடர்பு காரணமாக மனைவி பாதிக்கப்படுவது, கணவன் பாதிக்கப்படுவது, குறிப்பாக பிள்ளைகள் பாதிக்கப்படுவது அதிகமாகிறது.

கள்ளதொடர்பு விவகாரம் ஏதோ பெற்றோர் பார்த்து செய்து வைக்கும் திருமண பந்தங்களில் மட்டும் நடப்பதில்லை. உருகி உருகி காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் வாழ்விலும் இது நடப்பது தான் வேதனையிலும் வேதனை.

ஒருவர் திருமண பந்தத்திற்குள் தனது பார்ட்னருக்கு உண்மையாக இருக்க வேண்டும், ஆனால், மக்கள் ஏன் திருமணத்திற்குப் புறம்பான உறவுக்குள் நுழைகிறார்கள் என்பது பற்றி எப்போதாவது தான் விவாதிக்கப்படுகிறது.

இதன் பின்னணியில் உள்ள மூல காரணத்தை முதலில் அறிந்து கொள்வது அவசியம். ஒரு நபர் தனது வாழ்க்கை துணையை ஏமாற்ற ஏன் நினைகிறார் என்பதற்கான பொதுவான சில காரணங்களை பார்ப்போம்.

20 வயதிற்குள் திருமணம் செய்து கொண்டவர்கள் சில ஆண்டுகள் சென்ற பின் தங்களது இளவயது வாழ்க்கையை என்ஜாய் செய்யவில்லையோ என்று இளம்தலைமுறையினரை பார்த்து ஏங்குவார்கள்.

எப்படியாவது வாழ்க்கையை என்ஜாய் செய்ய விடும் என்ற எண்ணத்தில், குடும்பத்தை பற்றியும் யோசிக்காமல் திருமணத்திற்கு மீறிய பந்தத்தை நாடி டேட்டிங் செய்கிறார்கள். இது அவர்களுக்கு உற்சாகம் தருவதால் தவறு என்று நினைக்க மாட்டார்கள்.

தங்கள் துணை தவறான தொடர்பில் இருப்பதை கண்டறியும் சிலர் அவர்களை திருத்தியோ அல்லது அவர்களை விட்டு விலகியோ வாழ முயற்சிக்காமல் தங்கள் துணையை பழிவாங்குவதாக எண்ணி ஒரு புதிய உறவை நாடி செல்கிறார்கள். இதனால் குடும்பம் சீர்குலைகிறது.

சிலர் தங்களது திருமண வாழ்க்கையில் சிக்கல் ஏற்பட்டால் துணையுடனோ அல்லது பெரியவர்களிடமோ பேசி பிரச்சனையை தீர்க்க பார்ப்பத்தில்லை. மாறாக வெளியே ஆறுதல் தேடுகிறார்கள். இதனாலேயே பெரும்பாலான தவறான தொடர்புகள் ஏற்படுகிறது.

அதே சமயம் ஆண்கள், பெண்கள் என இரு தரப்பினருமே தங்களுக்கு வயதாகும் போது அல்லது உருவத்தில் சில மாற்றங்கள் ஏற்படும் போது தங்களுக்கு இன்னும் பிறரை கவர்ந்து இழுக்கும் வசீகரம் இருக்கிறது என்பதை நிரூபிக்கவும் இது போன்ற உறவில் ஈடுபடுகிறார்கள்.

ஒழுக்கக்கேடு மிக்க திருமணமானவர்களை பார்க்கும் சிலர் திருமணத்திற்கு புறம்பான உறவில் இருப்பது இந்த காலத்தில் சகஜமானது போல. அப்படி இல்லாவிட்டால் நம்மை ஒருமாதிரியாக பார்ப்பார்கள் என்று நினைக்கும் சிலர் பாதைமாறி சென்று துணைக்கு துரோகம் செய்கிறார்கள்.

முன்பெல்லாம் பெண்கள் மீது தான் இந்த குற்றசாட்டு வரும். ஆனால் பணத்தேவை அல்லது அதிகார தேவைக்காக திருமணத்திற்கு மீறிய உறவில் ஈடுபடுவது இருபாலருக்கும் பொதுவான ஒன்றாக மாறிவிட்டது.

நல்ல திரைப்படம்
19/06/2025

நல்ல திரைப்படம்

2 தாலி.. 2 கணவர்கள் ஒரே வீட்டில்.. ஒன்னா சாப்பிடுவாங்களாம், ஒன்னா தூங்குவாங்களாம்.. பூரிக்கும் மனைவிபொதுவாக, ஒரு கணவருக்...
11/06/2025

2 தாலி.. 2 கணவர்கள் ஒரே வீட்டில்.. ஒன்னா சாப்பிடுவாங்களாம், ஒன்னா தூங்குவாங்களாம்.. பூரிக்கும் மனைவி

பொதுவாக, ஒரு கணவருக்கு 2 மனைவிகள் இருப்பார்கள்.. ஒரு கணவருக்கு 2 பெண்களும் அடித்து கொள்வார்கள்.. அல்லது 2 மனைவிகளுமே ஒருவருக்கொருவர் சமரசம் செய்து கொண்டு, ஒரே வீட்டில் அனுசரித்து வாழ்வார்கள்.

அதேபோல, கணவருடன் வாழும் பெண், கருத்து வேறுபாடு காரணமாக பிரிய நேரிட்டால், முதல் கணவரை உதறித்தள்ளிவிட்டு 2வது திருமணம் செய்வார்கள். அல்லது கணவனுடன் வாழ்ந்துகொண்டே கள்ளக்காதலில் ஈடுபட்டு விடுவார்கள்.

ஆனால், உத்தர பிரதேச மாநிலத்தில் வித்தியாசமான சம்பவம் நடந்துள்ளது.. இங்குள்ள தியோரியா என்ற பகுதியில் வசித்து வருகிறார் அந்த இளம்பெண்.. இவரது வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது..

வீடியோவில் அவர் அலங்காரம் செய்து மணப்பெண் போல காட்சியளிக்கிறார். இந்த பெண் தன்னுடைய கழுத்தில் இரு தாலிகள் அணிந்துள்ளார். இரு ஆண்கள் தோள் மீது கை போட்டு போஸ் கொடுத்திருக்கிறார்..

அந்த இரண்டு ஆண்களும், பெண்ணின் கணவர்கள் ஆவர்.. அதுமட்டுமல்ல, அவர்கள் 2 பேருமே சகோதரர்கள் என்கிறார்கள். 2 கணவன்களுடன் என, மொத்தம் இவர்கள் மூவரும் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வருகிறார்களாம்.

இது பற்றி அந்தப்பெண் சொல்லும்போது, இது என்னுடைய 2 தாலிகள்.. என்னுடைய 2 கணவர்களுக்காகவும் இந்த தாலிகளை அணிந்துள்ளேன்.

நாங்கள் மூவரும் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்கிறோம். நாங்கள் எங்கே சென்றாலும் மூன்று பேருமே ஒன்றாகத்தான் செல்வோம். ஒன்றாக தான் சாப்பிடுவோம். 3 பேருமே ஒன்றாக சேர்ந்துதான் தூங்குவோம்.

என்னுடைய 2 கணவர்களுடனும் நேரத்தை திறம்பட நிர்வகிக்கிறேன்.. எங்களுக்குள் அன்பாகவும், ஒற்றுமையாகவும் இருக்கிறோம் என்று பூரித்து சொல்லி உள்ளார..

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி 1.7 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது... அத்துடன், சமூக வலைதளத்தில் இந்த வீடியோ வைரலாகி பேசும் பொருளாகவும் உருவெடுத்துள்ளது.

எனினும், ஒருசிலர் இந்த வீடியோவை பார்த்து, உண்மையிலேயே ஒரு பெண் 2 கணவன்களுடன் ஒரே வீட்டில் வாழ முடியாது.. இந்த பெண் தான் பிரபலமடைய வேண்டும் என்பதற்காகவே, இப்படி 2 ஆண்களுடன் சேர்ந்து வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

அதனால் பெண்ணின் கூற்றுகளில் உண்மைத்தன்மை இருப்பாக தெரியவில்லை என்றும் சந்தேகம் கிளப்பி கொண்டிருக்கிறார்கள்.

மாமியார்-மருமகன் திருமணம் கடந்த உறவு. வீடியோ படம் எடுத்த ஊர்மக்கள் செங்கல்பட்டை  சேர்ந்த இந்திரா. இவருக்கு வயது 40. இவரத...
03/06/2025

மாமியார்-மருமகன் திருமணம் கடந்த உறவு. வீடியோ படம் எடுத்த ஊர்மக்கள்

செங்கல்பட்டை சேர்ந்த இந்திரா. இவருக்கு வயது 40. இவரது கணவர் மணி. 5 ஆண்டுகளுக்குமுன்பே இறந்து விட்டார். 18 வயது மகள் இந்திராவுக்கு உள்ளார்.

அவரை குன்றத்தூரைச் சேர்ந்த கங்காதரன் என்ற 26 வயது வாலிபருக்கு திருமணம் செய்து வைத்தார் இந்திரா. கங்காதரன் டெய்லராக உள்ளார். அத்தோடு அவ்வப்போது ஆட்டோவும் ஓட்டி சம்பாதித்து வந்தார்.

கல்யாணத்திற்குப் பிறகு மனைவியிடம் காதலாக இருப்பதை விட்டு விட்டு, மாமியார் இந்திரா மீது கண்ணைத் திருப்பிய கங்காதரன்,அவருடன் தவறான உறவை ஏற்படுத்திக் கொண்டார்.

அடிக்கடி செங்கல்பட்டுக்கு வந்து மாமியாரை தனிமையில் சந்தித்து வந்தார். இதனால் அப்பகுதியினருக்கு சந்தேகம் வந்துள்ளது.

இதையடுத்து இந்திராவின் வீட்டு உரிமையாளர் அவரைக் கூப்பிட்டுக் கண்டித்துள்ளார். ஆனால் அதை இந்திரா கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து ஊர் மக்கள் ஒன்று கூடி இவர்களை என்ன செய்யலாம் என்று ஆலோசித்தனர்.

அப்போது இவர்கள் இருவரும் ஜாலியாக இருப்பதை வீடியோவில் பதிவு செய்து, ஊர் முழுக்கக் காட்டுவோம். அப்போதுதான் இவர்கள் திருந்துவார்கள் என அப்பகுதியினர் ஆலோசனை கூறினர்.

இதையடுத்து மறுமுறை கங்காதரனும், இந்திராவும் ஜாலியாக இருப்பதை ஜன்னல் வழியாக வீடியோவில் பதிவு செய்தனர். பின்னர் இந்திராவின் மகளுக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர். இதேபோல, கங்காதரனின் சகோதரர்களை வரவழைத்தனர்.

அவர்களிடம் இனிமேலும் இவர்களை குடி வைக்க முடியாது என்று கூறியுள்ளனர். இதுதொடர்பாக இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி பிரச்சினை பெரிதாகி விட்டது.

இசையமைப்பாளர் சிற்பி ❤️பெயருக்கு ஏற்றார் போல பல Hit பாடல்களை செதுக்கி இருப்பார் சிற்பி.அவர் இசையமைத்த காலத்தில் அவருக்கு...
15/05/2025

இசையமைப்பாளர் சிற்பி ❤️

பெயருக்கு ஏற்றார் போல பல Hit பாடல்களை செதுக்கி இருப்பார் சிற்பி.

அவர் இசையமைத்த காலத்தில் அவருக்கு இருந்த போட்டியைப் பார்த்தாலே மலைப்பாக இருக்கும். இளையராஜா, தேவா, ரஹ்மான், வித்யாசாகர், எஸ் ஏ ராஜ்குமார் என அனைவரும் சரிக்கு சமமாய் ஹிட் பாடல்களை கொடுத்துக் கொண்டிருந்த காலம்.

கடும் போட்டிக்கு மத்தியிலும் நிறைய ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறார்.

✅நாராயணன் என்பது இவர் பெயர் பின்னர் சினி வாழ்க்கையின் போது இவர் தன் பெயரை சிற்பியாக மாற்றிக்கொண்டார்.
✅இவருக்கு இப்போது வயது 62 .
✅50-க்கும் மேற்பட்ட தமிழ் மலையாள தெலுங்கு திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
✅1997 ஆம் வருடம் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது இவர் பெற்றுள்ளார்.

சிற்பியின் ஆரம்ப கால சினி வாழ்க்கை..

இயக்குனர் மனோபாலாவால் அறிமுகபடுத்தப்பட்டவர் சிற்பி.

முதல் படமான செண்பகத் தோட்டம், இரண்டாவது படமான "அன்னை வயல்" படங்கள் வந்த வேகத்தில் பெட்டிக்குள் போனதால், சிற்பிக்கும் பெரிய வரவேற்பு இல்லை.

First Combo - Best Combo ☑️

திரை உலகில் ஒரு நடிகரோ, ஒரு இசை அமைப்பாளரோ, பெரிய அளவில் வரவேற்பைப் பெற வேண்டுமானால், ஒரு சிறந்த இயக்குனரோடு கை கோர்த்தால் மட்டுமே முடியும். அப்படியான ஒரு வாய்ப்பு அவரை தேடி வந்தது.

இயக்குனர் விக்ரமனின் "கோகுலம்" படம் சிற்பிக்கு ஒரு புதிய வாசலை திறந்து விட்டது. கூடவே ஆர்.பி சௌத்ரி எனும் காட்பாதரின் அறிமுகமும் கிடைத்தது. படம் சூப்பர் ஹிட். அன்றைக்கு சினிமாவில் வாய்ப்பு தேடி வருபவர்களின் வேடந்தாங்கலாக சூப்பர் குட் பிலிம்ஸ் இருந்தது.

"செவ்வந்தி பூவெடுத்தேன்" பாடல் ஒலிக்காத இடமே இல்லை. புது ரோஜா பூத்திருக்கு, அந்த வானம் எந்தன் கையில், தெற்கே அடிக்குது காத்து என ஆல்பமே அதிரிபுரி ஹிட். "புது ரோஜா பூத்திருக்கு" என்னுடைய பர்சனல் பேவரைட்.

இந்த வெற்றிக் கூட்டணியின் அடுத்த படமான "நான் பேச நினைப்பதெல்லாம்" பாடல்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. "ஏலேலங்கிளியே" பாடல் யேசுதாஸ் குரலில் ஒன்று, மனோ, பி சுசீலா இணையில் ஒன்று. "பூங்குயில் ராகமே" சோகப்பாடல் வெர்ஷன் அந்நாளில் காதலில் தோற்றவர்களின் தேசிய கீதங்களுள் ஒன்று. "செந்தமிழில் புது சொல்லெடுத்து", பாடல் மனோவுக்கு. சிற்பி அவர்களுக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்த ஆல்பம் என்றால் மிகையே இல்லை.

First Blockbuster Hit ☑️

அதன் பிறகு மீண்டும் சூப்பர் குட் பிலிம்ஸ் மூலம் கிடைத்த வாய்ப்பு தான் "நாட்டாமை".

"கொட்ட பாக்கும் கொழுந்து வெத்தலையும்" பாடலின் ரீச் நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் படத்தின் மூலம் பட்டி தொட்டி அவர் பாடல் ஒலித்தாலும் அவருக்கு ஒரு வாய்ப்பு கூட கிடைக்கவில்லை என்பது சோகமான உண்மை.

பொதுவாகவே ஹிட் படக் கூட்டணியில் இருப்பவர்களுக்குத் தான் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் சிற்பி அவர்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

Mass combo - Sundar C + Sirpy ☑️

விக்ரமனுக்குப் பிறகு சிற்பிக்கு கிடைத்த இயக்குனர்களில் மிக முக்கியமானவர் சுந்தர் சி. இருவரும் இணைந்த படங்களில் பாடல்கள் சோடை போனதே இல்லை.

"உள்ளத்தை அள்ளித்தா" படத்தின் வெற்றி தான் அவருக்கு பல வாய்ப்புகளை பெற்றுத் தந்தது என்று சொல்லலாம். "அழகிய லைலா" பாடல் பம்பர் ஹிட்டானது.

பிறகு உள்ளத்தை அள்ளித்தா காம்போ அப்படியே இணைந்து கொடுத்த இன்னொரு படம் "மேட்டுக்குடி". ஒரு ஆல்பமாகவே அந்தப் படத்தின் பாடல்கள் மாபெரும் ஹிட் வகையறா. மனோ+சிற்பி கூட்டணி தான் அனைத்துப் பாடல்களும்.

அந்தப் படத்தில்,
✅" சரவணபவ எனும் திருமந்திரம்" பாடல் அட்டகாசமான முருகன் பக்திப் பாடல்.
✅"அன்புள்ள மன்னவனே" பாடல் சுவர்ணலதாவின் ட்ரேட்மார்க் பாடல்களில் ஒன்று.

அதே போல் இவர்கள் காம்போவில் வந்த இன்னொரு ஹிட் பாடல் கண்ணன் வருவான் படத்தில் இடம்பெற்ற
✅"வெண்ணிலவே வெண்ணிலவே" ✅ "காற்றுக்கு பூக்கள் சொந்தம்" இரண்டும் அட்டகாசமாக இருக்கும்.

சுந்தர் சி + சிற்பி காம்போவில் அந்த ஆல்பமே ஹிட் பாடல்கள் தான்.

மறக்க முடியாத ஆல்பம் ☑️

சில வருடங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக படத்திற்கு ஒன்று என ஹிட் பாடல்களை கொடுத்துக் கொண்டிருந்த போது தான், மீண்டும் சூப்பர் குட் பிலிம்ஸ் பேனரில் "வருசமெல்லாம் வசந்தம்" ஆல்பம் வந்தது.

அந்தப் படத்திற்கு விசிட்டிங் கார்டே சிற்பியின் இசையில் வந்த பாடல்கள் தான்.

✅"அடி அனார்கலி",
✅"எங்கே அந்த வெண்ணிலா",
✅" முதல் முதலாக" பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டடித்தன.

மிக மிக எளிமையான மெட்டமைப்பில் வெளிவந்த இந்த பாடல்கள் சிற்பிக்கு ஒரு கம்பேக் கொடுத்தது.

மறக்க முடியாத ஆல்பம் ☑️

பிறகு மீண்டும் விக்ரமன் கூட்டணியில் இணைந்த "உன்னை நினைத்து" படத்தின் பாடல்கள் அவருக்கு ஸ்டேட் அவார்டை பெற்றுத் தந்தது.

காதலை பாடல்களை கொண்டாடி தீர்த்ததில் இந்த படத்திற்கு பெரிய பங்கு உண்டு.

✅என்னை தாலாட்டும் சங்கீதம்,
✅யார் இந்த தேவதை ,
✅பொம்பளைங்க காதல தான் நம்பி விடாதே
✅ஹேப்பி நியூ இயர் வந்ததே என தமிழ் சினிமா மறக்க முடியாத ஒரு ஆல்பம் 💥💥💥🔥

இளையராஜா பீக்ல இருந்த சமயத்தில் ஹிட்டான எல்லா பாடல்களுக்கும் இளையராஜாதான் இசை என நினைத்தவர்கள் பலர்.

அப்படி எஸ்.ஏ.ராஜ்குமாரின் பாடல்கள் எல்லாம் ஹிட்டான சமயத்தில் இசையமைப்பாளர் சிற்பி இசையமைத்த பல பாடல்களை இன்று வரை எஸ்.ஏ.ராஜ்குமாரின் பாடல்கள் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எந்தப் படத்தில் வந்த பாடல் என்றே தெரியாமல் அனைவரும் ரசித்த பாடல்கள்.!

🎧 "மணி ரத்னம்" - "காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா"

🎧 “கேப்டன்” - " கன்னத்துல வை"

🎧 "சின்ன மேடம்” - " முத்து முத்து பெண்ணொருத்தி"

🎧"கங்கா கௌரி" - "காதல் சொல்ல வந்தேன்"

🎧 "பூச்சூடவா" - "காதல் காதல் காதல்" , “நீ இல்லை நிலவில்லை”- பலருக்கும் பேவரைட் பாடலாக இருக்கும்.

🎧"சுந்தர புருஷன்" - "சமஞ்சேன் உனக்குத்தான்" மற்றுமொரு டவுன்பஸ் ஹிட் பாடல்.

🎧 “மூவேந்தர்” - "குமுதம் போல் வந்த குமரியே", " நான் வானவில்லையே பார்த்தேன்" இரண்டும் சிற்பி+ ஹரிஹரன் காம்போவில் வந்த சூப்பர் ஹிட் பாடல்கள்.

🎧 “சுயம்வரம்” படத்தில் ஹரிஹரன் பாடிய "செக்கச் சிவந்தவளே" பாடல்.

🎧 “குங்குமப் பொட்டுக் கவுண்டர்” - "முதன் முதலா உன்னைப் பார்த்தேன்" , “பூவும் காற்றும் சேரும் போது”

🎧 “விண்ணுக்கும் மண்ணுக்கும்” - “உனக்கென உனக்கென பிறந்தேனே”

🎧 கோடம்பாக்கம் படத்தில் வந்த "ரகசியமானது காதல்" பாடல் சாட்டிலைட் சானல் காலத்தில் மிகப்பெரிய ஹிட் பாடல்.

மிக எளிமையான, கேட்டவுடன் பச்சக்கென்று மனதில் ஒட்டிக் கொள்ளும் மெட்டு தான் சிற்பியின் பாடல்களின் சிறப்பம்சம். பாமரனாலும் முணுமுணுக்க முடியும். அவ்வளவு எளிமையாக இருக்கும். அதனால் தான் காலம் கடந்தும் அவரது பாடல்கள் இன்னும் நினைவில் இருக்கிறது.

தொடர்ச்சியாக வெற்றிப் படங்கள் கொடுத்தாலும், பல ஹிட் பாடல்களைக் கொடுத்திருந்தாலும், பெரும்பாலும் சின்ன பட்ஜெட் படங்கள் மட்டுமே அவருக்கு கிடைத்தன.

ஆனாலும் கிடைத்த வாய்ப்புகளில் தனது திறமையை நிரூபிக்க தவறவில்லை. தேவா அவர்களுக்கு ரஜினி பட வாய்ப்பு கிடைத்ததைப் போல சிற்பி அவர்களுக்கும் ஒரு பூஸ்ட் கிடைத்திருந்தால், அவரும் தன் மேதைமையை நிரூபித்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

காலம் கடந்தாலும் மனதிற்கு இதமான நிறைவான பாடல்களை தந்தமைக்காக நன்றி சிற்பி சார்.!❤️👏

தமிழ் சினிமாவில் திறமை இருந்தும் நிலையான இடம் கிடைக்காமல் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் நல்ல நடிகன் சிபிராஜ் .. அ...
13/05/2025

தமிழ் சினிமாவில் திறமை இருந்தும் நிலையான இடம் கிடைக்காமல் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் நல்ல நடிகன் சிபிராஜ் .. அவரின் திரைப்பாதையை திரும்பி பார்ப்போம் 🎯

1. முடிவுறா முதல்
சிபி முதலில் நடிக்க இருந்த படம் 2003 ஆண்டு வெளியான மலையாள படமான நந்தனம் படத்தின் தமிழாக்கத்தில். மலையாள படத்தை இயக்கிய அதே இயக்குநர் ரெஞ்சித் தான் தமிழிலும் இயக்க இருந்தார்.. ஆனால் ஏனோ அந்த படம் அப்படியே நின்று போனது ..அதே படம் 2011 ஆண்டு தனுஷ் நடிப்பில் "சீடன்" என்னும் பெயரில் வெளியானது..

2. முதல் படம்
முதல் படமே பாதியில் நின்று போனாலும் மனம் தளராமல் சிபி நடித்த முதல் படம் ஸ்டூடன்ட் நம்பர் 1 (2003) . செல்வா இயக்கிய இந்தப்படம் பாக்ஸ் ஆபிஸ் தோல்வி.. குறிப்பாக இந்த ஸ்டூடன்ட் நம்பர் 1 படம் 2001 ஆண்டு ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய தெலுங்கு படமான ஸ்டூடன்ட் நம்பர் 1 படத்தின் ரீமேக் தான்..

3. தந்தை மகன் கூட்டணி
முதல் படமே தோல்வி அடைந்ததால் தனது மகனை ஜெயிக்க வைக்க தந்தையான சத்யராஜ் அவர்களே தொடர்ந்து 4 படங்கள் தனது மகனுடன் இணைந்து நடித்தார்... அந்த 4 படங்கள் "ஜோர் (2004)", "மண்ணின் மைந்தன் (2005)", "வெற்றிவேல் சக்திவேல் (2005)" மற்றும் "கோவை ப்ரதர்ஸ் (2006)".. என்ன தான் இந்த படங்கள் இப்போது தொலைக்காட்சிகளில் வரவேற்பை பெற்றாலும் படம் வெளியான நேரத்தில் பாக்ஸ் ஆபிஸ் தோல்வி அடைந்தது..

4. தேங்கிய படங்கள்.. தயாரிப்பாளர் அவதாரம்
2004-06 ஆண்டு காலகட்டத்தில் தனது அப்பாவுடன் இணைந்து நடிக்க இருந்த "பெருமாள் சாமி" "பட்டாசு" மற்றும் "மாமு" போன்ற படங்கள் அறிவிப்பு வந்த வேகத்திலேயே முடங்க தனது அப்பாவே தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து தயாரித்த படம் "லீ".. 2007 ஆண்டு வெளியான இந்த படமும் தோல்வி அடைந்தது..

5. நடிப்பில் இடைவெளி .. வில்லன் அவதாரம்
தொடர்ந்து அனைத்து படங்களும் தோல்வி அடைய மூன்று ஆண்டுகள் எந்தப் படமும் நடிக்காமல் இருந்த சிபி 2010 ஆண்டு இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் "நாணயம்" எனும் படத்தில் தனது தந்தை போல வில்லன் அவதாரம் எடுத்தார்.. படத்தில் அவரது நடிப்புக்கு அங்கீகாரம் கிடைத்தாலும் படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை..

6. நடிப்பு பயிற்சி
மிகவும் எதிர்பார்த்த "நாணயம்" படமும் தோல்வி அடைய 4 ஆண்டுகள் சினிமாவை விட்டு விலகி நடிப்பு பயிற்சிக்காக அமெரிக்கா சென்றார் சிபி..
7. முதல் வெற்றி
2014 ஆண்டு தனது முந்தைய பட இயக்குநரான சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் நடித்த படம் "நாய்கள் ஜாக்கிரதை" .. சத்யராஜ் தயாரித்த இந்த படம் சிபி-க்கு முதல் வெற்றியைப் பெற்று தந்தது.. இந்த படத்துக்கு முன் கிட்டத்தட்ட 200 கதைகள் கேட்டு இந்த படம் நடிக்க ஒப்புக் கொண்டு முதல் வெற்றி ருசித்தார்..

8. அடுத்தடுத்த படங்கள்
முதல் வெற்றியை தொடர்ந்து 2016 ஆண்டு ராம் பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் வில்லனாக நடித்த படம் "போக்கிரி ராஜா" .. அதுவும் ஒரு தோல்வி..‌அதை தொடர்ந்து அதே ஆண்டு தனது அப்பாவுடன் இணைந்து நடித்த படம் "ஜாக்சன் துரை" .. இந்த படம் வசூல் ரீதியாக வெற்றி படமாக அமைந்தது.. ஆனால் அடுத்த படமான "கட்டப்பாவை காணோம்" மீண்டும் தோல்வி.. அதை தொடர்ந்து மீண்டும் சத்யராஜ் தயாரிப்பில் பிரதீப் இயக்கத்தில் நடித்த படம் "சத்யா".. த்ரில்லர் படமாக வெளியான இந்த நல்ல ஒரு வெற்றியை கொடுத்தது..

9. நல்ல படங்கள்
சத்யா வெற்றியை தொடர்ந்து வால்டர் , ரங்கா , வட்டம் என‌ சில தோல்வி படங்கள் அமைந்தாலும் கபடதாரி மற்றும் மாயோன் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது...

10. கம்பேக் தந்த 10 மணி நேரம்
3 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சமீபத்தில் வெளியான படம் " 10 Hours" .. த்ரில்லர் படமாக உருவான இந்த படம் திரையரங்குகளில் ஒரளவு வரவேற்பை பெற்றது.. குறிப்பாக ஓடிடி தளத்தில் தரமான வரவேற்பை பெற்றது... கண்டிப்பாக அனைவரும் பாருங்கள்...

11. வரவுள்ள படங்கள் சிபி சத்யராஜ் நடிப்பில் அடுத்தடுத்து "ரேஞ்சர்" மற்றும் "ஜாக்சன் துரை 2" ஆகிய படங்கள் வெளியாக உள்ளது... அவை சிபி அவர்களுக்கு வெற்றி படமாக அமைய வாழ்த்துகள்...

உங்களுக்கு பிடித்த சிபி சத்யராஜ் நடித்த படம் எது என கமெண்ட் பண்ணுங்க...

நன்றி 🙏🏻

தமிழ் சினிமாவின் பன்முக கலைஞன் - இயக்குனர் விசு 💎✨தமிழ் திரையுலகில் இயக்குநர், நடிகர், கதாசிரியர், வசனகர்த்தா, தயாரிப்பா...
12/05/2025

தமிழ் சினிமாவின் பன்முக கலைஞன் - இயக்குனர் விசு 💎✨

தமிழ் திரையுலகில் இயக்குநர், நடிகர், கதாசிரியர், வசனகர்த்தா, தயாரிப்பாளர் என பல பரிமாணங்களில் முத்திரை பதித்தவர் தான் நம்ம விசு..

குறைந்த பட்ஜெட்டில் பிளாக்பஸ்டர் படங்கள் கொடுப்பதில் கைதேர்ந்தவர்.

தனது திரைப்பயணத்தை கே. பாலசந்தரிடம் உதவி இயக்குநராக தொடங்கினார்..

பட்டினப் பிரவேசம் (1977), தில்லு முல்லு (1981), நெற்றிக்கண் (1981) போன்ற படங்களுக்கு வசனம் மற்றும் கதை எழுதி அனைவரையும் கவனிக்க வைத்தார்..
இவரோட வசனங்கள் எளிமையும், கூர்மையும் கொண்டவையாக இருந்தன..

1986-ல் வெளியான "சம்சாரம் அது மின்சாரம்" விசுவின் மாஸ்டர் பீஸ் 💎👌🏻
குடும்ப உறவுகளின் சிக்கல்களை உணர்வுபூர்வமாகவும், நகைச்சுவையாகவும் சொன்ன இப்படம், பல இந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு, பிலிம்பேர் விருதையும் வென்றது

இப்படம் தமிழ் சினிமாவில் குடும்ப படங்களுக்கு ஒரு முன்மாதிரி என்பதில் ஐயமில்லை💯

இவரின் படங்கள் எப்போதும் குடும்ப உறவுகள், சமூக பிரச்சினைகளை மையமாகக் கொண்டவை..

மணல் கயிறு, திருமதி ஒரு வெகுமதி, புதிய சகாப்தம், டவுரி கல்யாணம் போன்ற படங்கள் குடும்பத்துடன் தியேட்டருக்கு வரவைத்தன..

"குடும்பத்துடன் தான் தனது படங்களை காண வேண்டும்" என்பது விசுவின் ட்ரேட்மார்க் டச்

இவர் இயக்கத்தில் வந்த சிதம்பர ரகசியம் ஒரு காமெடி கலந்த திரில்லர்..

வழக்கமான விசுவில் இருந்து விலகி, நகைச்சுவையும் திரில்லரும் கலந்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது..

எஸ்.வி.சேகரின் நகைச்சுவை நடிப்பு படத்தின் ஹைலைட். வயிறு குலுங்க சிரிக்க வைத்த படம்💎

தில்லு முல்லு படத்தில் “பைத்தியக்கார டாக்டர்” வேடத்தில் விசு நடித்து பேசிய வசனங்கள் இன்றும் மீம்ஸாக உலாவருகின்றன..

மன்னன், உழைப்பாளி, நல்லவனுக்கு நல்லவன், அருணாச்சலம் போன்ற படங்களில் ரஜினியுடன் நடித்து தனி இடம் பிடித்தார்.
“விசு மாதிரி பேசாதே” என்பது அப்போது ட்ரெண்ட்😅

விசுவின் படங்களில் “உமா” என்ற கேரக்டர் இல்லாமல் இருக்காது.. இது அவரது மனைவி உமாவை கௌரவிக்கும் விதமாக இவரின் படங்களில் பெண் கதாபாத்திரங்களுக்கு அந்த பெயர் வைப்பது வழக்கம்

விசுவின் படங்கள் இன்றைய தொலைக்காட்சி தொடர்களுக்கு முன்மாதிரி. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை எளிமையாகவும், உணர்வு பூர்வமாகவும் சொன்ன அவரது படைப்புகள் காலமெல்லாம் பேசப்படும் என்பதில் சந்தேகமில்லை 💯✨

விசு இயக்குன படங்கள்ல உங்களுக்கு பிடிச்ச படத்த கமெண்ட்ல சொல்லுங்க..

நன்றி 🙏🏻😊

எது உண்மையான சந்தோசம் - விஜய் ஆண்டனி
06/05/2025

எது உண்மையான சந்தோசம் - விஜய் ஆண்டனி

Address

Tamizhagam

Website

Alerts

Be the first to know and let us send you an email when MediaClickz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share