உறுமி URUMI TV

உறுமி URUMI TV வரலாறு, தொல்லியல், சுற்றுச்சூழல், சமூகம், அரசியல் சார்ந்து மண்ணின் குரல் எதிரொலிக்கும்..

குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா இந்த ஆண்டு (2024)  வரும் அக்...
16/09/2024

குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா
இந்த ஆண்டு (2024) வரும் அக்டோபர் 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். தினமும் மாலையில் சமய சொற்பொழிவு, திருமுறை இன்னிசை, பரதநாட்டியம், வில்லிசை, இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும்.

https://youtu.be/Eh9CUkAwMig?si=mfBRcAj299ZCtqyy

காளி, முருகன், குறவன், குறத்தி, குரங்கு, கரடி, அம்மன் உள்ளிட்ட வேடங்களை அணிவதற்காக பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து வருகின்றனர். இந்த திருவிழாவில் பக்தர்கள் காளி, அம்மன், சிவன், கிருஷ்ணா், முருகன், விநாயகர் போன்ற சாமி வேடங்கள் மற்றும் குறவன், குறத்தி, போலீஸ், குரங்கு, கரடி, சிங்கம், புலி போன்ற பல்வேறு வேடங்கள் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் ஞானமூர்த்தீ...

வாழை படத்தின் க்ளைமாக்ஸ்https://youtu.be/Ug-58ac10jM?si=Wju0dTOZzpvXlDCzலாரி விபத்தில் உதவிய முத்துசாமிபுரம், பேட்மாநகரம...
03/09/2024

வாழை படத்தின் க்ளைமாக்ஸ்
https://youtu.be/Ug-58ac10jM?si=Wju0dTOZzpvXlDCz
லாரி விபத்தில் உதவிய முத்துசாமிபுரம், பேட்மாநகரம் மக்கள்

🌾🌾🌾🌾🌾🌾🌾Vaazhai movie real story Documentary ...

"லாரி விபத்தைப் பார்த்தோம்" நேரில் பார்த்த சாட்சியாக..கண்ணீர் விட்ட காட்சிகள் https://youtu.be/madjl45Er7wவாழை படத்தில் ...
01/09/2024

"லாரி விபத்தைப் பார்த்தோம்"
நேரில் பார்த்த சாட்சியாக..
கண்ணீர் விட்ட காட்சிகள்
https://youtu.be/madjl45Er7w
வாழை படத்தில் நடித்த உள்ளூர் மக்கள் அனுபவம்

நேரடி சாட்சிகளும், ஆதார ஆவணங்களும்h...

   *நேரடி சாட்சிகளும், ஆதார ஆவணங்களும்*https://youtu.be/0C9quQuFx7I🌾🌾🌾🌾🌾🌾🌾*Vaazhai movie real story Documentary with Evi...
01/09/2024


*நேரடி சாட்சிகளும், ஆதார ஆவணங்களும்*

https://youtu.be/0C9quQuFx7I

🌾🌾🌾🌾🌾🌾🌾
*Vaazhai movie real story Documentary with Evidence*
🌾🌾🌾🌾🌾🌾🌾

புளியங்குளம், நாட்டார்குளம் கிராம நிலக்கிழார்களும், வேளாண் தொழிலாளர்களும்..

மீட்புப் பணியில் இருந்த பேட்மாநகரம், முத்துசாமிபுரம் பகுதி மக்கள்..

சட்டசபையில் எதிரொலித்த புளியங்குளம் வாழைத்தார் லாரி கவிழ்ந்த விபத்து..

விரைந்து சென்ற கலெக்டர், எஸ்.பி., தூத்துக்குடி துறைமுக சபை..

21-02-1999 முதல் 24-02-1999 வரை 19 பேர் பலியான விபத்தில் நடந்தது என்ன?
https://youtu.be/0C9quQuFx7I

வரலாற்றின் தரவுகளோடு
*வாழை படத்தின் உண்மைமுகம்*

💧💧💧💧💧💧💧

நேரடி சாட்சிகளும், ஆதார ஆவணங்களும்🌾🌾🌾🌾🌾🌾🌾Vaa...

21/06/2024

மாஞ்சோலை சூழல் சுற்றுலா எஸ்டேட் மக்களை வெளியேற்றவா? | Invisible struggles in Manjolai | UrumiTV


"மாஞ்சோலை" அதிக மழை பொழியும் இடமாக இருப்பதால் மழைச்சோலை என்றும் அழைக்கலாம்.
மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு விஸ்வநாத நாயக்கர் நிர்வாகத்தில் 72 பாளையங்கள் இருந்தன. அதில் ஒரு பகுதியை சிங்கம்பட்டி பாளையக்காரர் நிர்வகித்தார்.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மார்த்தாண்டவர்மாவுக்கும், எட்டு வீட்டுப் பிள்ளைமாருக்கும் ஏற்பட்ட சண்டையில் மார்த்தாண்ட வர்மாவுக்கு உதவி செய்ய சென்ற சிங்கம்பட்டி ஜமீனின் மகன் மரணமடைந்தார்.
அந்த உதவிக்காக மார்த்தாண்ட வர்மா இன்றைய தமிழ்நாடு கேரளா எல்லைப்பகுதியில் இருக்கும் வனப்பகுதியை சிங்கம்பட்டி ஜமீனுக்கு எழுதிக்கொடுத்தார். அந்தக் காடுகளை குச்சி ஒடிக்கப் பயன்படுத்திக்கொண்டனர்.
இந்நிலையில் சென்னை அண்ணாசாலை தற்போது DMS இருக்குமிடத்தில் Newington College செயல்பட்டு வந்தது. அதில் பாளையக்காரர்கள், ஜமீன்தாரர்களின் குழந்தைகள் படித்து வந்தனர். அதனால் அதனை Minor Bungalow என்றும் அழைப்பார்கள். அக்கல்லுரியின் முதல்வர் Clement De la Haye தனது மனைவியுடன் படுக்கையறையில் தூங்கிக் கொண்டிருக்கும் போது 15 October 1919 அன்று நள்ளிரவில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் 16 வயது சிங்கம்பட்டி ஜமீனும் , 18 வயது கடம்பூர் ஜமீனும் சிக்கிக் கொண்டனர். அந்த வழக்கு மும்பை நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கில் இருந்து விடுபட அதிகம் செலவானதால், மாஞ்சோலை காட்டுப்பகுதியை The Bombay Burmah Trading Corporation Limited நிறுவனத்திற்கு சிங்கம்பட்டி ஜமீன் 99 ஆண்டுகால குத்தகைக்கு கொடுத்தார் .
அப்பகுதியில் காடுகளை அழித்து தேயிலை, காபி, ஏலக்காய், மிளகு பயிரிட்டது பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனம்.
தற்போது மூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்கள் அமைந்துள்ள பகுதிக்கு (ஜமீன் சிங்கம்பட்டி கிராமம், பகுதி 2, சர்வே எண் 251) திருவிதாங்கூர் சமஸ்தானம் முதலே யாரிடமும் பட்டா கிடையாது.
1929 இல் போடப்பட்ட ஒப்பந்தப்படி 2028 வரை மாஞ்சோலை தேயிலைத் தோட்டப் பகுதிகளை தொடர்ந்து அனுபவித்துக் கொள்ளலாம்.
2028 வரை ஒப்பந்த காலம் இருந்தாலும் 2024ஆம் ஆண்டிலேயே தேயிலை உற்பத்தியை நிறுத்துகிறது பிபிடிசிஎல் நிர்வாகம். அவசர அவசரமாக விருப்ப ஓய்வு கொடுக்கிறது.
இரத்தம் உறிஞ்சும் அட்டைக்கடியிலும், கொட்டும் மழையிலுமாக போராட்டமே வாழ்க்கையாகிப்போன எஸ்டேட் மக்கள் இப்போது போராடுவதற்கும் தெம்பற்று தேம்பி நிற்கின்றனர்.
1998ஆம் ஆண்டு அன்றைய தென்காசி நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக்காக மாஞ்சோலை வந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி தேயிலைத் தோட்டத் தொழிலாளர் பிரச்சனைகளை கேட்டு சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தார். தமிழ் மாநிலக் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உடன் இணைந்து புதிய தமிழகம் கட்சி 23.07.1999 அன்று திருநெல்வேலியில் நடத்திய பேரணியில் காவல்துறையின் தடியடியால் தாமிரபரணி ஆற்று நீரில் மூழ்கடித்து 17 பேர் கொல்லப்பட்டனர்.
அதன் பின்னர் அடிப்படை ஊதியம் 33 ரூபாய், தினக்கூலி 53 ரூபாய் என்பது 150 ரூபாயாக உயர்த்தப்பட்டது.
2024 ஆம் ஆண்டு தற்போது மாஞ்சோலை தோட்டத்தொழிலாளர்களின் தினக்கூலி 453 ரூபாய் தான்.
1929இல் காடுகளாக இருந்த பகுதியை சீரமைத்து தேயிலைத் தோட்டங்களாக மாற்றியவர்கள் அன்றைய ஒருங்கிணைந்த நெல்லை ஜில்லா தொழிலாளர்கள். தேவேந்திரகுல வேளாளர், அருந்ததியர், ஆதி திராவிடர், நாடார், மறவர், வண்ணார், ஆசாரி, பிள்ளை, கேரளாவின் ஈழவர், பணிக்கர், மாப்பிள்ளை கிறிஸ்தவர், நாயர் என்று அனைத்து சாதி சார்ந்தும், இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர் என்று அனைத்து மதம் சார்ந்தும் தொழிலாளர்கள் நிறைந்த மாஞ்சோலை ஒரு சமத்துவப் பூங்காவாகவே திகழ்ந்தது.
இப்போது, அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், கோயில், சர்ச், மசூதி வழிபாட்டுத்தலங்கள், தபால் நிலையம், போக்குவரத்து வசதிகள், குடியிருப்புகள், முன்னோர்களின் நினைவிடங்கள் என்ன ஆகுமென்று தெரியவில்லை.
இடத்தைக் காலிசெய்ய சொல்லிவிட்டார்கள், நான்கைந்து தலைமுறைகளாக தேயிலைத் தோட்டத்தை மட்டுமே நம்பி வாழ்ந்தவர்களுக்கு வேறு வேலைகள் தெரியாது.
மலைப்பகுதியில் வாழ்ந்தவர்களுக்கு சமவெளிப் பகுதியின் தட்பவெப்ப நிலை ஒத்துக்கொள்ள வேண்டும்.
அதனால்தான், தொழிற்சங்க உரிமைகளை வழங்காத, தொழிலாளர் நல சட்டங்களை பின்பற்றாத பிபிடிசிஎல் தனியார் நிறுவனத்தோடு அரசே பேச்சுவார்த்தை நடத்தி நியாயமான உரிய ஓய்வூதிய பணபலன்களை அரசே பெற்றுத்தர வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு தேயிலைத் தோட்டத்தொழிலாளர்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.
வெளியேற விரும்புகிற தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் 10 லட்சம் பிபிடிசிஎல் நிறுவனம் ஓய்வுபலனாக வழங்க வேண்டும்.
விரும்பிய இடத்தில், கல்வி, தொழில், வேலை வாய்ப்பு வசதிகளோடு அரசே குடியிருப்பு வசதியை செய்து தர வேண்டும்.
மலைப்பகுதியை விட்டு வெளியேற விரும்பாத தொழிலாளர்கள் மேற்குத் தொடர்ச்சி மலையின் சூழலுக்கு உகந்த பயிர்களைப் பயிரிட்டு வாழ நினைத்தால் அவர்களை அனுமதித்து குடும்பத்திற்கு 5 ஏக்கர் நிலம் வழங்கவேண்டும்.
அரசு ஆணைப்படியும், நீதிமன்ற உத்தரவுப் படியும் மாஞ்சோலை மலைப்பகுதியின் சுற்றுச்சூழல் நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைக்கு மீட்கப்பட வேண்டும். அதற்கு தேவையான நிதியை ஒதுக்கி, திட்டம் வகுத்து, அங்கேயே வாழ நினைக்கும் தோட்டத் தொழிலாளர்களை வனத்துறையினருடன் தகுதிக்கேற்ப இணைத்து பூர்வகுடி மக்களின் பங்கேற்புடன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
தொழிலாளர் நலன் காத்து, மக்களுடன் இணைந்த மாஞ்சோலை பல்லுயிர் சூழல் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டுமென்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது. நிறைவேற்றுமா அரசு?

நன்றி - கப்பிகுளம் ஜெ.பிரபாகர் முகநூல் பதிவு
, TV, , Urumi channel, உறுமி டிவி, உருமி டிவி, உறுமி காட்சி ஊடகம்.

19/03/2024

போர்ப்பறை பயிற்சிப் பட்டறை | பகுத்தறிவு ஊட்டி பறை இசையைப் பரப்பும் சென்னை மையம் கலைக்குழு | UrumiTV

Infotech employees folk dance
Performance of paraiyattam (dance to the tune of drum beating), which is traditionally performed by tamil people.
32 ஆண்டு காலம் சட்டப் போராட்டம் நடத்தி வாச்சாத்தி வழக்கில் தீர்ப்பை பெற்ற களப்போராளிகள், வழக்கறிஞர்களுக்கு 2024 பிப். 4 ஞாயிறன்று சென்னை சைதாப்பேட்டையில் மையம் கலைக்குழு சார்பில் பாராட்டு மற்றும் அனுபவப் பகிர்வு நடைபெற்றது. ஜோன்னா கலா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் களப் போராளிகள் பெ.சண்முகம், டில்லிபாபு, வழக்கறிஞர்கள் ஜி.சம்கிராஜ், கே.சுப்புராம் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, திரைப்பட இயக்குநர் கவுதம்ராஜ், திரைப்பட பாடலாசிரியர் உமாதேவி ஆகியோர் உள்ளனர்.

மையம் கலைக்குழு - Maiyam Kalaikuzhu , சென்னை
தொடர்புக்கு.
[email protected]
9940053572
8667019717
, TV, , Urumi channel, உறுமி டிவி, உருமி டிவி, உறுமி காட்சி ஊடகம்.@ #

13/03/2024


புனித இஞ்ஞாசியார்,
கித்தேரியம்மாள்
மெட்டுப் போட்டுப் பாடும் மீனவர்களின் பஜனை
St. Ignatius Church – Inigo Nagar, Thoothukudi

, TV, , Urumi channel, உறுமி டிவி, உருமி டிவி, உறுமி காட்சி ஊடகம்.

வட ஸ்பெயின் நாட்டில் உள்ள லயோலாவில் 1491ஆம் ஆண்டு தனது பெற்றோரின் பதின்மூன்று குழந்தைகளில் கடைக்குட்டியாகப் பிறந்தவர் இனிகோ டி லயோலா. இனிகோவைப் பெற்ற தாயார், பிறந்த சில நாட்களிலே காலமாகிவிட்டதால் கொல்லர் ஒருவரது மனைவியால் வளர்க்கப்பட்டார். அரண்மனையில் கிட்டிய எடுபிடி ஊழியத்திற்குப் பின் பதினேழாவது வயதில் ஸ்பெயின் நாட்டு ராணுவத்தில் பணியாற்ற இணைந்தார். ஏதாவது சாதிக்க வேண்டும், பெரும் புகழ் ஈட்ட வேண்டும் என்னும் பேரார்வம் அவருக்குள் தகித்துக்கொண்டே இருந்தது.

இனிகோ யுத்த உத்திகளில் தேர்ந்து விளங்கினார். 1521ஆம் ஆண்டு, முப்பதாவது வயதில் ஸ்பெயினின் கோட்டை நகரான பம்பலோனாவை உரிமை கொண்டாடி பிரெஞ்சுப் படைகள் போரிட்டுத் தாக்க முற்பட்டன. படை பலம் போதாது என்பதால் ஸ்பானியத் தளபதி சரணடைய வேண்டும் எனத் தீர்மானத்தார். அப்போது இனிகோ மட்டும் ஸ்பெயினின் மானம் காக்கப் போரிட்டே தீர வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்து களம் கண்டார். போர்க்களத்தில் பீரங்கிக் குண்டுகள் தாக்கியதில் அவரது ஒரு காலில் எலும்பு முறிவும் மற்றொரு காலில் பலத்த காயமும் ஏற்பட்டது. காயம் பட்ட அவர் களத்திலே வீழ்ந்தார். ஸ்பெயினும் அப்போரில் வீழ்ந்தது. அவரது போர்த்திறம் கண்ட பிரெஞ்சுப் படையினர் அவரைச் சிறையில் வைப்பதற்குப் பதிலாக பம்பலோனா அரண்மனையில் வைத்து சிகிச்சை அளித்தனர்.

காயம் பட்ட அவரது கால்கள் முழுமையாய் குணம் அடையவில்லை. மீண்டும் அவரது கால்களை உடைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அதுவும் மயக்க மருந்து இல்லாமலேயே சிகிச்சை அளிக்கப்பட்டதால் கொடிய வலியால் அவதிப்பட்டார். அதனால் மரணம் அவரை நெருங்கிவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். ஜூன் 29ஆம் நாளில் புனிதர்களான ராயப்பர், சின்னப்பர் திருவிழாவன்று அதிசயிக்கதக்க வகையில் தனது ரணங்கள் குணமாகத் துவங்கியதை உணர்ந்தார். பூரண குணம் பெற்றார் என்றாலும் அவரது கால்களில் ஒன்று, மற்றதைவிட உயரம் குறைவாகவே ஆகிவிட்டது.

பம்பலோனா அரண்மனையில் தொடந்து ஓய்வில் இருந்தார். கதைகள் வாசிக்கும் பழக்கம் கொண்ட இனிகோ வாசிப்பதற்குப் புத்தகம் கேட்டார். அப்போது அவருக்கு தரப்பட்ட நூல்களில் ஒன்று லுடோல்ப் என்பார் எழுதிய கிறிஸ்துவின் வரலாறு என்னும் நூலாகும். அதைப் போலவே புனிதர்களின் வரலாறுகளையும் வாசித்தறிந்தார். வாழ்க்கை திசை மாறிற்று. கொதித்துக் கொந்தளித்துக்கொண்டிருந்த வாழ்க்கையில் குளிர் தென்றல் வீசுவதுபோல் உணர்ந்தார். இனிகோ மெல்ல மெல்ல மாறி இக்னேசியஸ் ஆனார் . தமிழில் புனிதர் இஞ்ஞாசியார் என்று அன்புடன் இவர் அழைக்கப்படுகிறார்.

சிலுவையில் அறையப்பட்ட இயேசு பெருமானுக்கு ஏற்பட்ட ஐந்து காயங்கள் போலவே தன்னிலும் காயங்கள் வர வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிப் பெற்றுகொண்ட அசிசியின் புனிதர் ஐந்து காய பிரான்சிஸ் போல இயேசு கிறிஸ்துவுக்காகத் தன்னையும் அர்பணித்துக்கொள்ளத் தீர்மானித்தார். 1522 மார்ச் 25 அன்று மோன்சரட் என்னும் இடத்தில் அமைந்துள்ள அன்னை மரியாளின் தேவாலயம் சென்று தான் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு வேண்டினார். தனது போர் வாள் மற்றும் ஆயுதங்களை அன்னையின் பீடத்திற்கு முன் துறந்தார். வெளியில் வந்து தனது விலையுயர்ந்த ஆடைகளை ஓர் ஏழைக்குத் தந்தார். முரட்டுத் துணிமணிகளை அணியத் துவங்கினார். இவ்வாண்டில் குழந்தை இயேசுவையும் அன்னை மரியாளையும் புனிதர் இஞ்ஞாசியார் காட்சியில் கண்டார்.

மோன்சரட்டிலிருந்து 30 மைல் தொலைவிலுள்ள பார்சிலோனா நோக்கித் தனது பயணத்தைத் தொடந்த புனிதர் இஞ்ஞாசியார் மான்ரிசா என்னும் நகருக்கு வெளியே ஒரு குகையில் தங்கினார். பத்து மாதங்களுக்கு மேல் அங்கே ஜபத்தில் ஒன்றியிருந்தார். ஒரு யாத்ரிகர் விடுதியிலும் பணிபுரிந்தார்.

33ஆம் வயதில் குருத்துவக் கல்வி பெறச் சென்றார். லத்தீன் மொழி தெரியாத காரணத்தால் அதைத் துவக்க நிலையில் இருந்தே கற்றார். 1538இல் குருத்துவப் பட்டம் பெற்று அவ்வாண்டின் கிறிஸ்துமஸ் அன்று காலையில் தனது முதல் திருப்பலியை நிறைவேற்றினார். 1540 செப்டம்பர் 27இல் அப்போதைய போப்பாண்டவர் மூன்றாம் சின்னப்பர் புனிதர் இஞ்ஞாசியாரின் இயேசு சபைக்கான முறைப்படியான அங்கீகாரத்தை வழங்கினார். ஆம்! ஒரு சிறு பொறி கத்தோலிக்கத் திருச்சபையின் மிகப் பெரிய குருத்துவப் பணித் தளமாகவும், உலகெங்கிலும் கல்வி மற்றும் அறப்பணியில் தங்களை அர்ப்பணித்துக்கொண்டிருக்கும் இயேசு சபை என்னும் துறவற அமைப்பு உருவாகவும் காரணமாயிற்று.

‘ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக்கொண்டாலும் தனது ஆன்மாவிற்குக் கேடு வருவித்துக்கொண்டால் அதனால் அவனுக்கு வரும் பயன் என்ன? ஒருவன் தன் ஆன்மாவிற்கு ஈடாக எதை கொடுப்பான்?' என்னும் கிறிஸ்து பெருமானின் பொன்மொழிதான் புனிதர் இஞ்ஞாசியாரின் வாழ்க்கை வழித்தடத்தில் இத்தகைய மகத்தான மாற்றத்திற்கு வித்திட்டது என்பது ஒரு செவிவழிச் செய்தி. 1556, ஜூலை 31 அன்று அவர் இறைவனடி சேர்ந்தார். 1609, ஜூலை 27இல் அருளாளர் என்றும், 1622 மார்ச் 12இல் புனிதர் பட்டமும் இஞ்ஞாசியாருக்கு வழங்கப்பட்டது.

தமிழ் நாடகத் தலைமை ஆசான்சங்கரதாஸ் சுவாமிகள் (1867 - 1922) *தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த சங்கரதாஸ் தாஸ் சுவா...
22/01/2024

தமிழ் நாடகத் தலைமை ஆசான்
சங்கரதாஸ் சுவாமிகள் (1867 - 1922)

*தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த சங்கரதாஸ் தாஸ் சுவாமிகள் அவர்களின் பெருமைகளை விளக்கும் கோவில்பட்டி பகுதியின் திரை நடிகர் முனைவர் சார்லி*

https://youtu.be/9quYFbewE0k?si=aeFP_VC5ogLIK1Mt

தமிழ் நாடகத் தலைமையாசிரியர் என அழைக்கப்படும் சுவாமிகள் சுமார் 40 நாடகங்களை எழுதியுள்ளார். அவற்றில் 18 நாடகங்களுக்கான பனுவல்களே கிடைத்துள்ளன.

Sankaradas Swamigalசங்கரதாஸ் சுவாமிகள்இருபதாம் நூற்றாண்டின் தமிழ் நாடக வரலாற்றின் புத்...

இனிய மாட்டுப்பொங்கல் உழவர் திருநாள்திருவள்ளுவர் நாள் நல்வாழ்த்துகள்..!திருவள்ளுவர் ஆண்டு 2055 தை 2https://youtu.be/pwnrM...
16/01/2024

இனிய மாட்டுப்பொங்கல் உழவர் திருநாள்
திருவள்ளுவர் நாள்
நல்வாழ்த்துகள்..!

திருவள்ளுவர் ஆண்டு 2055 தை 2

https://youtu.be/pwnrMDNMjiA?si=TPfM46P31BCBfS31

🌾🐂🌾🐂🌾🐂🌾🐂🌾

ஓடோடி.. பத்து ரூவா ரவிக்கை துணி..சென்னையில் பட்டையைக் கிளப்பிய ராம்நாட் மருங்கன் நையாண்டி மேளம....

இனிய மாட்டுப்பொங்கல் உழவர் திருநாள்திருவள்ளுவர் நாள் நல்வாழ்த்துகள்..!திருவள்ளுவர் ஆண்டு 2055 தை 2https://youtu.be/dddAz...
16/01/2024

இனிய மாட்டுப்பொங்கல் உழவர் திருநாள்
திருவள்ளுவர் நாள்
நல்வாழ்த்துகள்..!

திருவள்ளுவர் ஆண்டு 2055 தை 2

https://youtu.be/dddAzcZFPH0?si=ZwQ9s1PiV01rQbgz

🌾🐂🌾🐂🌾🐂🌾🐂🌾

அங்கே இடி முழங்குது.. சென்னையில் முழங்கிய ஆக்காட்டி ஆறுமுகம் குழு சாமியாட்டம் , TV, , Ur...

இனிய மாட்டுப்பொங்கல் உழவர் திருநாள்திருவள்ளுவர் நாள் நல்வாழ்த்துகள்..!திருவள்ளுவர் ஆண்டு 2055 தை 2https://youtu.be/kQArL...
16/01/2024

இனிய மாட்டுப்பொங்கல் உழவர் திருநாள்
திருவள்ளுவர் நாள்
நல்வாழ்த்துகள்..!

திருவள்ளுவர் ஆண்டு 2055 தை 2

https://youtu.be/kQArLMH-CS0?si=hECgzgJAMz2w5mxj

🌾🐂🌾🐂🌾🐂🌾🐂🌾

அங்கே இடி முழங்குது.. சென்னையில் முழங்கிய திருப்பத்தூர் தியாகராஜர் கலைக்குழு நையாண்டி மேளம் க...

28/12/2023

இளைப்பாருங்கள் கேப்டன்…

Address

Tamizhagam

Alerts

Be the first to know and let us send you an email when உறுமி URUMI TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to உறுமி URUMI TV:

Share

Category