15/05/2026
ஒரு கவிதை வாசகனின் ஒப்புதல் வாக்குமூலம் - டோனி பிரஸ்லர்
டோனி கவிதையை விளங்கிக் கொள்வதில் உள்ள அழகை, சிடுக்கை, இடையூறை இக்கட்டுரையில் விரிவாகப் பேச முயன்றிருக்கிறார்.
கட்டுரையிலிருந்து...
கவிதை அனுபவப்பூர்வமானது. கவிதையின் போக்குகளை உற்றுநோக்கினால், ஒப்பிடும் அளவுமுறைகள், தினசரி வாழ்முறைகளோடு சம்பந்தப்படுகின்றன. உண்மையும் அதன் பிழையும் தனித்தனி உயிரிகள் போன்றவை. ஆதார இணைப்புகளாக நாம் கணக்கிடும்போது, பிழைகளின் அடிப்படைக் குணங்களே கவிதையின் வளர்ச்சியில் தேவைப்படுகின்றன. பிறக்கும்பொழுது குழந்தையின் மொழி குலைவானது. குலைவு சரிவரப் புரியாது. கவிதையின் பிறப்பு சிதிலங்களிலானது அன்று. சட்டென வெடிப்புறும் பிரமிப்பின் இடையே அதைச் சரிவரப் பரிமாறத் தெரியாத அழுத்தங்களால் உருவம் பெறுகிறது. வாழ்வெனச் சொல்லிக்கொடுக்கப்பட்ட கருத்தியல் மரபழுத்தம் தானாகவே நம்மிடமிருக்கிறது. மனித வளர்ச்சியிலும் பூவின் வளர்ச்சியிலும் படிநிலைகள் அறிவியல் பாற்பட்டதுபோல், கவிதையில் படிநிலைகளை இயற்கையாக வளரும் சூழல் உருவாக்கத் தொடர்ச்சியிலே சரிவர அளவிட்டுப் பார்க்க முடியும். உருவாகும் பல் வராத குழந்தையின் அழுகையோ சிரிப்போ மொழியின் விவரிப்பில் சீரற்றதாக இருக்கிறது. ஆனால் அம்மொழியே அதனுடைய கனவுகளின் ஆரம்ப விளைவுகளைக் கணிக்கப் பயன்படும். அவற்றைச் சரிவர வளராக் கவிதைகள் என்ற சமாதானத்தில் ஏற்றுக்கொள்ளலாம். கவிதையில் அசைவுகள் சுற்றியிருக்கும் சூழலைப் பொறுத்து மாறுகிறது. மொழியின் பழக்கம் அதன் சொல்நிலை, சொல்லப்படும் சூழலின் முன்னிலையைக் கண்டிப்பாகக் கொண்டிருக்கும். சந்தேகங்கள், எண்ணங்களின் உண்மையான காரணத்தைக் கண்டுவிட்டால், அதன் மொழி மயக்கும் யுக்தியைக் கண்டுபிடிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
கட்டுரையை முழுமையாக வாசிக்க: https://magazine.seermai.com/oru-kavithai-vasaganin-vaakkumoolam