Tamil Medical

Tamil Medical இயற்கை, வீட்டு மருத்துவம்

சத்தான உணவு என்பது உடல்நலத்தை பேணவும், மேம்படுத்தவும் உதவும் உணவு. இதில், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள...
14/07/2025

சத்தான உணவு என்பது உடல்நலத்தை பேணவும், மேம்படுத்தவும் உதவும் உணவு. இதில், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஆற்றல் போன்றவை அடங்கும். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், கொழுப்பு நீக்கப்பட்ட பால் பொருட்கள், மெலிந்த இறைச்சி, முட்டை, கடல் உணவுகள், மற்றும் கொட்டைகள் போன்றவற்றை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
சத்தான உணவின் முக்கிய கூறுகள்:
ஊட்டச்சத்துக்கள்:
புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுக்கள், மற்றும் நார்ச்சத்துக்கள்.
பழங்கள் மற்றும் காய்கறிகள்:
இது உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை வழங்குகிறது.
முழு தானியங்கள்:
நார்ச்சத்து மற்றும் ஆற்றல் மூலமாக செயல்படுகிறது.
கொழுப்பு நீக்கப்பட்ட பால் பொருட்கள்:
கால்சியம் மற்றும் புரதம் நிறைந்தவை.
மெலிந்த இறைச்சி:
இரும்பு மற்றும் புரதத்தின் நல்ல ஆதாரம்.
மீன்:
ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் புரதம் நிறைந்தவை.
கொட்டைகள்:
ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் புரதம் நிறைந்தது.
சத்தான உணவை தேர்ந்தெடுக்கும்போது கவனிக்க வேண்டியவை:
பல்வேறு உணவுகள்:
வெவ்வேறு உணவு குழுக்களில் இருந்து பொருட்களை சேர்த்துக்கொள்வதன் மூலம் அனைத்து ஊட்டச்சத்துக்களையும் பெறலாம்.
பழங்கள் மற்றும் காய்கறிகளின் அளவு:
ஒரு நாளைக்கு குறைந்தது 5 பகுதிகள் பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வது பரிந்துரைக்கப்படுகிறது.
போதுமான அளவு தண்ணீர்:
உடல் நீரேற்றமாக இருக்க போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம்.
சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பை கட்டுப்படுத்துதல்:
அதிகப்படியான சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு ஆகியவை உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
உதாரணங்கள்:
பழங்கள்:
ஆப்பிள், வாழைப்பழம், ஆரஞ்சு, திராட்சை, மாம்பழம்.
காய்கறிகள்:
கீரை, ப்ரோக்கோலி, கேரட், தக்காளி, வெங்காயம்.
முழு தானியங்கள்:
ஓட்ஸ், பிரவுன் அரிசி, முழு கோதுமை ரொட்டி.
பால் பொருட்கள்:
பால், தயிர், சீஸ்.
புரதம்:
கோழி, மீன், பருப்பு வகைகள், முட்டை, டோஃபு.
சத்தான உணவை தேர்ந்தெடுப்பதன் மூலம் உடல்நலத்தை மேம்படுத்தி, நோய்கள் வராமல் தடுக்கலாம்.

12/07/2025

சளி மற்றும் இருமலுக்கான பாட்டி வைத்தியங்கள்
ஏராளமானோர் இருமல், சளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கீழே பாட்டி வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை பின்பற்றி பலன் பெறுங்கள்.
இருமல், சளி போன்றவற்றால் கடுமையாக அவஸ்தைப்படுவார்கள். நீங்களும் இருமல், சளியால் அவஸ்தைப்படுபவராயின், அதற்கு கண்ட கண்ட மாத்திரைகளை எடுக்காமல், இயற்கை வழிகளின் மூலம் சரிசெய்ய முயலுங்கள்.

அதிலும் நம் பாட்டிமார்கள் பின்பற்றிய வைத்தியங்களைப் பின்பற்றினால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும். இங்கு சளி, இருமலுக்கான சில பாட்டி வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி, சளி, இருமலில் இருந்து விடுபடுங்கள்.

ஆரஞ்சு ஜூஸில் தேன் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து குடித்தால், சளி, இருமல், தொண்டை வலி போன்றவற்றில் இருந்து விடுபடலாம்.

கொய்யாப்பழத்தை மிளகுத் தூள் தொட்டு சாப்பிட, நுரையீரலில் உள்ள சளி வெளியேறி, இருமல் பிரச்சனையில் இருந்து தீர்வு கிடைக்கும்.

மாட்டுப் பாலை நன்கு கொதிக்க வைத்து, அதில் தேன் கலந்து குடிப்பதன் மூலமும் சளி, இருமல் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
வெங்காயத்தை தீயில் சுட்டு சாப்பிடுவதன் மூலம், இருமல் மற்றும் சளியில் இருந்து விடுதலை கிடைக்கும்.

வெற்றிலையை சாறு எடுத்து, தேன் கலந்து குடித்தாலும், இருமலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

இரவில் படுக்கும் முன் பாலில் மிளகுத் தூள் மற்றும் மஞ்சள் கலந்து குடித்தால், இருமல் வருவதைத் தடுக்கலாம்.

கற்பூரவள்ளி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரைக் குடிப்பதன் மூலமும் விரைவில் சளித் தொல்லை நீங்கும்

12/07/2025

நோய் வந்துவிட்டாலே உடனே மருத்துவரிடம் ஓடுவதை விட, வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே எளிதாக குணப்படுத்தலாம்.

1. நெஞ்சு சளி

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

2. தலைவலி

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

3. தொண்டை கரகரப்பு

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

4. தொடர் விக்கல்

நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

5. அஜீரணம்

ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.

சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.

6. வாயு தொல்லை

வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

7. வயிற்று வலி

வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

8. சரும நோய்

கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

9. மூக்கடைப்பு

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

10. கண் எரிச்சல், உடல் சூடு

வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

11. வயிற்றுக் கடுப்பு

வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

12. பற் கூச்சம்

புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.

13. வாய்ப் புண்

வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.

14. தலைவலி

பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.

15. வயிற்றுப் பொருமல்

வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

16. அஜீரணம்

ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.

ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.

17. இடுப்புவலி

சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

18. வியர்வை நாற்றம்

படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.

19. உடம்புவலி

சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

20. ஆறாத புண்

விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

21. கண் நோய்கள்

பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.

22. மலச்சிக்கல்

தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.

23. கபம்

வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.

24. நினைவாற்றல்

வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.

25. சீதபேதி

சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.

26. ஏப்பம்

அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.

27. பூச்சிக்கடிவலி

எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.

28. உடல் மெலிய

கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.

29. வயிற்றுப்புண்

பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

30. வயிற்றுப் போக்கு

கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

31. வேனல் கட்டி

வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.

32. வேர்க்குரு

தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.

33. உடல் தளர்ச்சி

முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.

34. நீர்ச்சுருக்கு/நீர்க்கடுப்பு

நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.

35. தாய்ப்பால் சுரக்க

அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

36. குழந்தை வெளுப்பாகப் பிறக்க

கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.

37. எரிச்சல் கொப்பளம்

நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

38. பித்த நோய்கள்

கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

39. கபக்கட்டு

நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.

40. நெற்றிப்புண்

நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.

41. மூக்கடைப்பு

இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.

42. ஞாபக சக்தி

வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

43. மாரடைப்பு

சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்

44. ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல்

வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.

45. கை சுளுக்கு

கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.

46. நீரிழிவு

அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்

47. மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய்

உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.

48. கக்குவான், இருமல் மலச்சிக்கல் உடல் பருமன்

புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்

49. உடல் வலுவலுப்பு

ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.

50. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் *சோம்பு மருத்துவ பயன்கள்:*

💥 சோம்பு தண்ணீர் உடலின் வளர்சிதை மாற்றத்தை சரிசெய்து, உடலில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்புகளைக் கட்டுப்படுத்தி உடல் எடையைக் குறைக்கும்.

💥 ஈரல் நோயைக் குணப்படுத்த சோம்பும் ஒரு மருந்தாகப் பயன்படுகிறது.

💥 வயிற்றை சுற்றியுள்ள தேவையற்ற சதைப் பகுதி கரையும். தொப்பை கரைந்து சரியான உடல் அமைப்பை தரும்.

💥 சோம்பு தண்ணீர் ரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி, ரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.

💥 சோம்பு தண்ணீர் குடித்து வந்தால், மூளை சுறுசுறுப்புடனும் புத்துணர்ச்சியுடனும் செயல்படும்.

💥 தூக்கத்தைச் சீராக்கும். சோம்பு தண்ணீர் மூளையில் பிட்யூட்டரி சுரப்பியால் சுரக்கப்படும் மெலடோனின் எனப்படும் நேச்சுரல் ஹார்மோனை சீராக உற்பத்தி செய்து, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற வழிவகுக்கும்.
🙏🙏🙏🙏🙏🙏🙏

*வாழ்க வளமுடன்!*
🙏🙏🙏🙏🙏🙏

👍👍👍
10/07/2025

👍👍👍

உண்மையாகவே கிரீன் டீ குடிப்பதால் உடல் எடை குறையுமா..? தினசரி சூடாக ஒரு கப் கிரீன் டீ குடித்தால் அது நமது உடலுக்கு புத்து...
10/07/2025

உண்மையாகவே கிரீன் டீ குடிப்பதால் உடல் எடை குறையுமா..? தினசரி சூடாக ஒரு கப் கிரீன் டீ குடித்தால் அது நமது உடலுக்கு புத்துணர்ச்சி தருவதாகவும், உடல் எடையை குறைத்து உடலை ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும் என்று பலரும் நம்புகின்றனர். ஆனால் உண்மையிலேயே கிரீன் டீ குடிப்பதால் நமது உடலுக்கு ஆரோக்கியம் உண்டாகுமா என்று கேட்டால் அது உண்மைதான். ஆனால் கிரீன் டீ குடிப்பதால் உடல் எடை குறையுமா என்று கேட்டால் கண்டிப்பாக கிடையாது என்று தான் கூற வேண்டும்.

நெய்்யில் இவ்வளவு நண்மை இருக்கா?? (ஆரோக்கியம்)
10/07/2025

நெய்்யில் இவ்வளவு நண்மை இருக்கா??
(ஆரோக்கியம்)

இதய நோய்கள் முழுமையாக குணமாகும் நம்புங்கள் நலமடையுங்கள் ......அஹம் பிரம்மாஸ்மி !!!ஓம் நமசிவாய !!!ஓம் ஸ்ரீ சற்குரு சதாசிவ...
10/07/2025

இதய நோய்கள் முழுமையாக குணமாகும் நம்புங்கள் நலமடையுங்கள் ......

அஹம் பிரம்மாஸ்மி !!!
ஓம் நமசிவாய !!!
ஓம் ஸ்ரீ சற்குரு சதாசிவ ப்ரமேந்திராள் போற்றி !!!

இதய நோயின் அறிகுறிகள் # #

கார்டியோவாஸ்குலர் நோய் (CVD) என்பது இதயம் அல்லது ரத்த நாளங்களை (நரம்புகள் மற்றும் தமனிகள்) பாதிக்கும் நோய்களின் ஒரு வகை ஆகும். உயர் ரத்த அழுத்தம், ஆரோக்கியமற்ற உணவு, அதிக கொழுப்பு, நீரிழிவு, காற்று மாசுபாடு, உடல் பருமன், புகையிலை பயன்பாடு, சிறுநீரக நோய், உடல் செயலற்ற தன்மை, ஆல்கஹால் போன்ற தீங்கு விளைவிக்கும் பயன்பாடு உள்ளிட்ட சமூக, பொருளாதார, நடத்தை மற்றும் சுற்றுச்சூழல் ஆபத்து காரணிகளின் கலவையால் இது ஏற்படலாம். மன அழுத்தம், குடும்ப வரலாறு, இனப் பின்னணி, பாலினம், வயது ஆகியவையும் ஒரு நபரின் இதய நோய் அபாயத்தை பாதிக்கலாம்.

இதயம் # #

மனித இதயம் ஒரு முஷ்டியின் அளவு மட்டுமே. ஆனால், அது உடலின் வலிமையான தசை. ஒவ்வொரு இதயத்துடிப்பிலும், இதயம் ரத்தத்தை பம்ப் செய்கிறது. உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை கொண்டு செல்கிறது.

இதயம் என்பது ஒரு தசை உறுப்பு. ரத்தம் மற்றும் ரத்த நாளங்களால் ஆனது. இது ரத்த ஓட்ட அமைப்பு வழியாக உடல் முழுவதும் ரத்தத்தைச் செலுத்துகிறது.

பம்ப் செய்யப்பட்ட ரத்தம், ரத்த நாளங்கள் வழியாக திசுக்கள் மற்றும் உறுப்புகளுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை எடுத்துச் செல்கிறது. அதே நேரத்தில் கார்பன் டை ஆக்சைடு போன்ற வளர்சிதை மாற்றக் கழிவுகளை வெளியே எடுத்துச் செல்கிறது.

மனித இதயம் ஒரு பெரிய முஷ்டியின் அளவு இருக்கும். இது நுரையீரலுக்கு இடையில், மார்பின் நடுவில், மையத்துக்குச் சற்று இடதுபுறமாக அமைந்திருக்கும்.

ஒவ்வொரு நாளும் இதயம் சுமார் 100,000 முறை துடிக்கிறது. 7,500 லிட்டர் ரத்தத்தை பம்ப் செய்கிறது.

இதய நோய் # #

கரோனரி இதய நோய், சில நேரங்களில் கரோனரி தமனி நோய் அல்லது இஸ்கிமிக் இதய நோய் என்று அழைக்கப்படுகிறது. இது இதய நோயின் மிகவும் பொதுவான வகையாகும். இது இதய தசைகளுக்கு ரத்தத்தை வழங்கும் குறுகலான கரோனரி தமனிகளால் ஏற்படும் இதய பிரச்சினைகளைக் குறிக்கிறது.

சிலருக்கு கரோனரி இதய நோயின் முதல் அறிகுறியே மாரடைப்பாக இருக்கலாம்.

மாரடைப்பு # #

மாரடைப்பு, அல்லது ஹார்ட் அட்டாக்… பொதுவாக ரத்த உறைவு, இதயத்துக்கு ரத்த ஓட்டத்தை துண்டிக்கும்போது ஏற்படுகிறது. ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இல்லாமல், இதய தசை இறக்கத் தொடங்குகிறது. உடனடியாக மருத்துவக் கவனிப்பு மற்றும் சிகிச்சையைப் பெற்றால் மாரடைப்பு ஆபத்தானது அல்ல. அது இதயத்துக்கு நீடித்த சேதத்தை ஏற்படுத்தும் என்பதால் கவனம் அவசியம்.

அறிகுறிகள் # #

இதய நோயின் அறிகுறிகள் பின்வருவனவற்றை உள்ளடக்கியிருக்கலாம்….

மார்பு வலி, மார்பு இறுக்கம், மார்பு அழுத்தம் மற்றும் மார்பு அசௌகரியம்
கால்கள் மற்றும்/அல்லது கைகளில் வலி, பலவினம் அல்லது உணர்வின்மை
கைகள், கழுத்து, தோள்பட்டை, தாடை மற்றும் முதுகில் வலி அல்லது அசௌகரியம்
மூச்சுத் திணறல்
உடற்பயிற்சி அல்லது ஏதேனும் ஒரு செயல்பாட்டின்போது எளிதில் சோர்வடைதல்
இதய தாளத்தில் மாற்றங்கள் ‘
மிக வேகமாக அல்லது மெதுவாக இதயத்துடிப்பு, பதற்றம் அல்லது மார்பில் படபடப்பு
மயக்கம், தலைச்சுற்றல் அல்லது மயக்கம்
பலவீனம் அல்லது சோர்வு
கைகள், கால்கள், கணுக்கால் அல்லது கால்களின் வீக்கம்
காய்ச்சல்
தோல் தடிப்புகள் அல்லது அசாதாரண புள்ளிகள்
உலர் அல்லது தொடர் இருமல்
ஆண்களுக்கான மாரடைப்பு அறிகுறிகள்
கடுமையான மார்பு வலி, இடது கை அல்லது தாடையில் வலி மற்றும் சுவாசிப்பதில் சிரமம்.
பெண்களுக்கான மாரடைப்பு அறிகுறிகள்
பெண்களுக்கும் மேற்சொன்ன சில அறிகுறிகள் இருக்கலாம். ஆனால், அவர்களின் வலி அதிகமாகி, தோள்பட்டை, கழுத்து, கைகள், வயிறு மற்றும் முதுகில் பரவுகிறது.
பெண்கள் அஜீரணம் போன்ற வலியையும் அனுபவிக்கலாம்.
வலி சீராக இல்லாமல் இருக்கலாம். வலி இல்லாமலும் இருக்கலாம். ஆனால், விவரிக்க முடியாத கவலை, குமட்டல், தலைச்சுற்றல், படபடப்பு மற்றும் குளிர் வியர்வை ஏற்படலாம்.
பெண்களுக்கு மாரடைப்பு வருவதற்கு முன் விவரிக்க முடியாத சோர்வு ஏற்படலாம்.
ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களுக்கு கடுமையான முதல் மாரடைப்பு ஏற்பட்டால், அது மிகவும் சிக்கலை உண்டாக்கும்.

எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

மார்பு வலி, மூச்சுத் திணறல் மற்றும்/அல்லது மயக்கம் ஏற்பட்டால், உடனடியாக அவசர மருத்துவ உதவியை நாடுங்கள். உங்களுக்கு மாரடைப்பு இருக்கலாம் என நீங்கள் நினைத்தால், அவசர உதவி எண்ணை உடனே அழைக்க வேண்டும்.

இதய நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் சிகிச்சையளிப்பது எளிது. உங்கள் இதய ஆரோக்கியத்தைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், உங்கள் இதய நோய் அபாயத்தைக் குறைக்க நீங்கள் எடுக்கக்கூடிய வழிமுறைகளைப் பற்றி உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள். குறிப்பாக… உங்களுக்கு இதய நோய்க்கான குடும்ப வரலாறு இருந்தால்!

மருத்துவர் உங்கள் மருத்துவ மற்றும் குடும்ப வரலாறு, உங்கள் ஆபத்து காரணிகளை ஆய்வு செய்து, உடல் பரிசோதனை செய்வார். தேவைப்படும்போது, அவர்கள் தங்கள் அறிதல்களை சோதனைகள் மற்றும் நடைமுறை முடிவுகளுடன் இணைத்து முடிவெடுப்பார்கள்.

இதய நோய்களைக் கண்டறியும் சில பொதுவான சோதனைகள்
பல்வேறு ஆய்வக சோதனைகள் மற்றும் இமேஜிங் ஆய்வுகள் மூலம் இதய நோய்கள் கண்டறியப்படுகின்றன.

ரத்த சோதனை, அழுத்த சோதனை, மார்பு எக்ஸ்ரே, எலக்ட்ரோ கார்டியோகிராம், எக்கோ கார்டியோகிராம், கணினிமயமாக்கப்பட்ட டோமோகிராபி (சிஜி) ஸ்கேன், காந்த அதிர்வு இமேஜிங் (எம்ஆர்ஐ) ஸ்கேன், எலக்ட்ரான்பீம் கம்ப்யூட்டட் டோமோகிராபி (CBET), கார்டியாக் வடிகுழாய் மற்றும் கரோனரி, ஆஞ்சியோகிராபி…

ஆபத்து காரணிகள் # #

இதய நோய்களுடன் தொடர்புடைய பல ஆபத்து காரணிகள் உள்ளன. குடும்ப வரலாறு போன்ற சில ஆபத்து காரணிகளை மாற்ற முடியாது, அதே நேரம் உயர் ரத்த அழுத்தம் போன்ற பிற ஆபத்து காரணிகளை வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் மாற்றியமைக்க முடியும்.

இதய நோயின் மிக முக்கியமான நடத்தை ஆபத்து காரணிகள் இவைதாம்…
ஆரோக்கியமற்ற உணவு, உடல் செயலற்ற தன்மை, புகையிலைப் பயன்பாடு மற்றும் ஆல்கஹால். இவை உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, அதிக கொழுப்பு, அதிக எடை மற்றும் உடல் பருமன் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும். இது ஒரு நபரின் இதய நோய்களை உருவாக்கும் அபாயத்தை மதிப்பிடுவதற்காக அளவிடப்படுகிறது.

உடற்பயிற்சி செய்வது போன்றவை ஆபத்து காரணிக்கு தீர்வு காண உதவும், ஆனால், இதய நோய் ஆபத்தைக் கணிசமாகக் குறைக்க, உங்கள் வாழ்க்கை முறையை ஒட்டுமொத்தமாகப் பார்ப்பது முக்கியம். நீங்கள் ஏற்கனவே இதய நோயோடு வாழ்ந்து கொண்டிருந்தாலும்கூட, ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பதன் மூலம் நீண்ட காலம் வாழலாம். அது மோசமடைவதற்கான வாய்ப்புகளை குறைக்கலாம்.

இதில் தனிப்பட்ட செயல்பாடுகள் ஒரு பங்கு என்றாலும், சுத்தமான காற்று, மலிவு விலையில் ஆரோக்கியமான உணவு, நன்கு திட்டமிடப்பட்ட ஆரோக்கிய வாழிடங்கள் உள்ளிட்ட நல்வாழ்க்கை வாழ மக்களுக்குத் தேவையானவற்றை உறுதி செய்வதில் அரசாங்கங்களும் கொள்கை வகுப்பாளர்களும் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். சுறுசுறுப்பான வாழ்க்கை முறையும் ஆரோக்கியமான செயல்பாடுகளும் மட்டுமின்றி, மலிவு விலையில் நல்ல சூழல்களை உருவாக்கும் சுகாதாரக் கொள்கைகளே, ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை பின்பற்றுவதற்கு மக்களைத் தூண்டும்.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, 80% மாரடைப்புகள் தடுக்கப்படக் கூடியவையே. இதய நோய் காரணமாக ஏற்படும் இறப்புகளில் பெரும்பாலானவை உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, உடல் பருமன் அல்லது நீரிழிவு போன்ற ஆபத்து காரணிகளால் துரிதப்படுத்தப்படுகின்றன. இது ஆரோக்கியமான உணவு, வழக்கமான உடற்பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்வதன் மூலம் பெரிய அளவில் தடுக்கப்படலாம் அல்லது கட்டுப்படுத்தப்படலாம். புகையிலையை நிறுத்துதல், ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அளவு மற்றும் ரத்த சர்க்கரை அளவைக் கண்காணிப்பது மிகவும் முக்கியம்.

ஆரோக்கியமான சமச்சீர் உணவை உண்ணுங்கள்
ஊட்டச்சத்துகள் நிறைந்த சமச்சீர் உணவை உட்கொள்வது ஆரோக்கியமான இதயத்தைப் பராமரிக்க முக்கியமானது. ஆரோக்கியமான உணவில் பலவகையான பழங்கள் மற்றும் காய்கறிகள், முழு தானியங்கள், நட்ஸ் மற்றும் நல்ல கொழுப்புகள், குறைவான சர்க்கரை மற்றும் உப்பு குறைவாக உள்ள உணவுகள் உட்பட பல்வேறு வகையான பதப்படுத்தப்படாத மற்றும் புதிய உணவுகள் இருக்க வேண்டும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகளில் எச்சரிக்கையாக இருங்கள். அவற்றில் பெரும்பாலும் அதிக அளவு உப்பு உள்ளது. மேலும் நிறைய தண்ணீர் குடிக்கவும்!

சித்த மருத்துவத்தில் இதற்கு முழுமையான தீர்வு உண்டு . பலரும் குணமடைந்து வாழ்ந்து வருகின்றனர் . ஆஞ்சியோகிராம் செய்தவர்கள் கூட குணமாகலாம் . நம்பியவர்கள் பலர் நலமோடு வாழ்கிறார்கள் . பெரும்பாலும் இதயப் பிரச்சினைகள் மட்டுமே உள்ளது எனில் 2 மாத்திரைகள் ( 2 மாதம் )காலை மட்டுமே தருகிறேன் அதிலேயே அவர்களின் இதய அடைப்புகள் குணமடைந்து நலமாகுகிறது .

ஒரு மாதத்திற்கான மருந்தின் விலை ரூபாய் 8000 மட்டுமே . விலையை பார்ப்பவர்களுக்கு மருந்தின் தரமும் அதன் குணமும் தெரியாது இதுவே எனது அனுபவத்தில் நான் கண்ட உண்மை .

மருந்தை உண்டு குணமடைந்து இறையருள் பெற்று வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் .

கொத்தமல்லி டீ உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு ஆச்சரியமாக பலன்களை தருவது மட்டுமல்லாமல், உங்கள் சருமத்தின் தரத்தையும் மேம்படு...
09/07/2025

கொத்தமல்லி டீ உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு ஆச்சரியமாக பலன்களை தருவது மட்டுமல்லாமல், உங்கள் சருமத்தின் தரத்தையும் மேம்படுத்துகிறது. கொத்தமல்லி இலைகள் நரம்புகளை ஊக்குவிக்கும் ஒரு நல்ல மருந்தாக செயல்படுகிறது. உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்க கொத்தமல்லி தேநீர் குடிப்பதை பழக்கமாக்கி கொள்ளுங்கள்.

தண்ணீர் அருந்துங்கள்...எழுந்த பிறகு உள் உறுப்புகளை செயல்படுத்த உதவும்... பயிற்சிக்குப் பிறகு இதயத் துடிப்பை இயல்பு நிலைக...
09/07/2025

தண்ணீர் அருந்துங்கள்...

எழுந்த பிறகு உள் உறுப்புகளை செயல்படுத்த உதவும்... பயிற்சிக்குப் பிறகு இதயத் துடிப்பை இயல்பு நிலைக்கு கொண்டு வர உதவும்... சாப்பாட்டுக்கு அரை மணி நேரம் முன் செரிமானத்திற்கு உதவும்... குளிக்கும் முன் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்... படுக்கைக்குச் செல்லும் முன் ஏதேனும் திரவ இழப்பு உடலிலிருந்தால் நிரப்ப உதவும்...

உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது சரியான செயல்பாட்டிற்கு உடலை ஹைட்ரேட் செய்து உதவும்... நீங்கள் சோர்வாக உணரும்போது உங்கள் சிஸ்டத்தை ரீசார்ஜ் செய்யும்... நீங்கள் சோர்வாக உணரும்போது உங்கள் சிஸ்டத்தை ரீசார்ஜ் செய்யும்...

மாங்காயில் உப்பு சேர்த்து சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?1.அதிகமான இரத்த அழுத்தம், எலக்ட்ரோலைட் அளவை பராமரிப்பு பிர...
09/07/2025

மாங்காயில் உப்பு சேர்த்து சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

1.அதிகமான இரத்த அழுத்தம், எலக்ட்ரோலைட் அளவை பராமரிப்பு பிரச்சினை இருப்பார்கள் இது போன்று மாம்பழம் சாப்பிடுவதால் நிறைய நன்மைகள் இருக்கின்றன. மேலும் மாம்பழத்தில் பொட்டாசியம் ஊட்டசத்துக்கள் அதிகம் இருக்கிறது.

2. நோய் எதிர்ப்பு சக்தி பிரச்சினை இருப்பவர்கள், இவ்வாறு செய்வதால், வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகிய சத்துக்கள் கிடைக்கிறது.

3. குடலிலுள்ள பாக்டீரியா தொற்றுகளும் இல்லாமல் சென்று விடுகிறது.

4. மாலைக்கண் மற்றும் பற்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு உப்பு மிளகாய் சேர்த்து மாம்பழத்தை எடுத்து கொள்வது சிறந்தது

5. கால்சியம், மற்றும் பொட்டாசியம் உடலில் குறையும் சரும பிரச்சினைகளும் இவ்வாறு எடுத்து கொள்வதால் சருமம் பளபளப்பாகும்.

எந்தெந்த காய்கறிகளில் என்னென்ன பயன்கள்
08/07/2025

எந்தெந்த காய்கறிகளில் என்னென்ன பயன்கள்

Address

Tamizhagam

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Medical posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category