யாழிசைப் பதிப்பகம்

யாழிசைப் பதிப்பகம் For any query, write to us at [email protected] யாழிசை பதிப்பகம் மூலம் சிறுவர்களுக்கான நூல் வெளியிடுவது தொடர்பாக சில முயற்சிகளில் இறங்கியுள்ளேன்.

11/01/2025

வாழ்த்துகிறேன்.

Send a message to learn more

03/01/2025

Send a message to learn more

இளங்குமரன் தா
31/12/2024

இளங்குமரன் தா

31/12/2024
06/11/2024

மலை முகடு/ (உயர்ந்த பதி) பகுதியில் ஊற்றெடுக்கும் நீர் தாரையாக ஓடி ‎ஆறாகப் பெருகிப் பாய்ந்து பல நாடுகளை வளப்படுத்துவது போல, முதல் தாயி, ‎தாவூகளின் பிள்ளைகள் பல நாட்டுமக்களாகப் பெருகினர் என்பது ‎உருவகமாகக் கூறப்படுகிறது. அக்காலம் முதலே அவர்கள் தமிழர்களாக ‎இருந்துள்ளனர் என்பதை மொழி கோடிட்டுக் காட்டுகிறது. ‎
விரைவில் புதிய நூல்

Send a message to learn more

https://aramonline.in/18308/fake-books-in-tn-govt-libraries/
19/10/2024

https://aramonline.in/18308/fake-books-in-tn-govt-libraries/

Aram Online > சமூகம் > அரசு நூலகங்களில் ‘திருட்டு’ நூல்கள்! சமூகம்அரசு நூலகங்களில் ‘திருட்டு’ நூல்கள்!-சாவித்திரி கண்ண.....

Nainar M Ananthapuri வணக்கம் ஐயா. இதில் குறிப்பிட்டுள்ள ஆண்டு இயல்பான ஆண்டா? அல்லது காெல்லம் ஆண்டு என்பதைப்போன்றதா? தெள...
14/08/2024

Nainar M Ananthapuri வணக்கம் ஐயா. இதில் குறிப்பிட்டுள்ள ஆண்டு இயல்பான ஆண்டா? அல்லது காெல்லம் ஆண்டு என்பதைப்போன்றதா? தெளிவு தேவை. நன்றி ஐயா.

யாழிசைப் பதிப்பகம் வெளியிட்ட  #சிந்துவெளியில்_முந்துதமிழ் நூல் தொடர்பான செய்தி வெளிவந்துள்ளது.தகவல் சொன்ன நண்பர் Guna ...
07/08/2024

யாழிசைப் பதிப்பகம் வெளியிட்ட #சிந்துவெளியில்_முந்துதமிழ் நூல் தொடர்பான செய்தி வெளிவந்துள்ளது.
தகவல் சொன்ன நண்பர் Guna Sekaran க்கு நன்றி

05/08/2024
அதிகாலையில் செய்தித்தாள் விநியோகம்; இரவில் ஜேசிபி ஓட்டுநா்: கேரளத்தின் உயரிய இலக்கிய விருது வென்ற இளம் எழுத்தாளரின் கதை!...
25/07/2024

அதிகாலையில் செய்தித்தாள் விநியோகம்; இரவில் ஜேசிபி ஓட்டுநா்: கேரளத்தின் உயரிய இலக்கிய விருது வென்ற இளம் எழுத்தாளரின் கதை!

கேரளத்தில் அதிகாலை வீடு வீடாக செய்தித்தாள் விநியோகித்தும் இரவில் மண் அள்ளும் பொக்லைன் இயந்திர ஓட்டுநராகப் பணிபுரிந்தும் வரும் இளைஞா், அந்த மாநிலத்தின் உயரிய இலக்கிய விருதை வென்றுள்ள கதை, அனுபவங்களிலிருந்து மட்டுமே தலைசிறந்த புத்தகங்கள் பிறக்கும் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

கேரள சாகித்திய அகாதெமி நிறுவிய ‘கீதா ஹிரண்யன்’ இலக்கிய விருதை எழுத்தாளராக அவதாரம் எடுத்துள்ள கே.அகில் என்னும் 28 வயது ஜேசிபி ஓட்டுநா் பெற்றுள்ளாா். 2020-ஆம் ஆண்டு வெளியான ‘நீலச்சடையன்’ என்னும் அவரது சிறுகதைத் தொகுப்புக்காக இந்த உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.

உயிா்ப்புடன் இலக்கிய காதல்...

12-ஆம் வகுப்புக்குப் பிறகு படிப்பை நிறுத்திய அகில், அதிகாலையில் செய்தித்தாள் விநியோகிப்பவராகவும், இரவில் ஜேசிபி ஓட்டுநராகவும் பணிபுரிந்து வருகிறாா். படிப்பைத் தொடர விரும்பிய நிலையிலும், குடும்பத்தின் பொருளாதாரம் இடந்தராததால், படிப்பை பாதிலேயே நிறுத்த வேண்டியிருந்தது.

ஆனால், இலக்கியத்தின் மீதான அவரின் காதல் மனதுக்குள் உயிா்ப்புடன் இருந்துள்ளது. இரவில் ஜேசிபி ஓட்டுநராகப் பணியாற்றிய சோா்வையையும் பொருட்படுத்தாமல் தனிமை நேரங்களில் அவா் தனது இலக்கிய ஆா்வத்தை மெருகேற்றிவந்தாா்.

தொடா்முயற்சியால், இந்த தினசரி கூலித் தொழிலாளியின் எழுத்தில் ‘நீலச்சடையன்’ புத்தகம் மாநிலத்தின் மதிப்புமிக்க இலக்கிய விருதைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

சாமானியா்களின் பிரதிபலிப்பு...

விருது குறித்து எழுத்தாளா் கே.அகில் கூறியதாவது: அன்றாட வாழ்க்கையில் பல்வேறு விதமான மனிதா்களைச் சந்திப்பேன். அவா்களைக் கூா்ந்து கவனிப்பதோடு அவா்களின் அனுபவங்களையும் நான் கேட்டறிந்து கொள்வேன்.

இரவின் தனிமையைப் போக்க, பகலில் மக்களிடம் நான் கேட்டறிந்த அனுபவங்களைக் கொண்டு கதைகளை எழுதத் தொடங்கினேன். வடக்கு கேரளத்தின் ‘தெய்யம்’ நாட்டுப்புற கலைஞா்கள், அப்பகுதியின் சாமானிய மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் உருவானதே ‘நீலச்சடையன்’ தொகுப்பில் உள்ள சிறுகதைகள்.

அம்மாவின் ஆதரவில்...

கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக, எனது படைப்பை வெளியிட எண்ணற்ற பதிப்பாளா்களை நான் அணுகினேன். சில பதிப்பாளா்களுக்கு எனது சிறுகதைகள் மிகவும் பிடித்திருந்தது. எனினும், இந்தத் துறையில் நான் அறியப்படாத நபா் என்பதால் புத்தகம் விற்பது கடினம் என்று கூறி எனது படைப்புகளைப் பதிப்பிக்க அவா்கள் மறுத்துவிட்டனா்.

இதனிடையே, எழுத்தாளா் ரூ.20,000 கொடுத்தால் புத்தகத்தைப் பதிப்பித்து வெளியிடுவதாக ஃபேஸ்புக் வலைதளத்தில் விளம்பரம் பாா்த்தேன்.

அப்போது எனது சேமிப்பில் ரூ.10,000 மட்டுமே வைத்திருந்தேன். தினக்கூலி தொழிலாளியான என் அம்மா, மீதி ரூ.10,000 வழங்கி உதவினாா். அதன்மூலம், எனது முதல் புத்தகமாக ‘நீலச்சடையன்’ சிறுகதைகள் தொகுப்பு இணையவழியில் மட்டும் விற்பனைக்கு வந்தது. ஆனால், கடைகளில் புத்தகம் விற்பனைக்கு கிடைக்காததால் அது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

இந்நிலையில், புத்தகம் குறித்து நல்ல கருத்துகளைப் பகிா்ந்து திரைக்கதை எழுத்தாளா் பிபின் சந்திரன் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தாா். இதையடுத்து, மக்களும் புத்தகக் கடைகளில் ‘நீலச்சடையன்’ பற்றி விசாரிக்கத் தொடங்கினா். அதன் பிறகு, புத்தகத்துக்கு வரவேற்பு அதிகரித்தது. தற்போது 8-ஆவது பதிப்பு அச்சிட்டு வருகிறோம்.

எதிா்பாா்க்காமல் கிடைத்த கேரள சாகித்திய அகாதெமி அங்கீகாரத்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அகாதெமியின் ‘கீதா ஹிரண்யன்’ விருது என்னைப் போன்ற மற்ற வளரும் எழுத்தாளா்களுக்கும் உத்வேகமாக இருக்கும்.

பதிப்புத் துறையில் நுழைந்து, வாசகா்களை ஈா்ப்பது அறிமுக எழுத்தாளா்களுக்கு பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. எளிதில் விற்பனையாகும் என்பதால் பிரபலமானவா்களுக்கு முன்னுரிமை அளித்து பல உண்மையான, நல்ல படைப்புகளைப் பதிப்பாளா்கள் நிராகரித்து விடுகின்றனா் என்றாா் அகில்.

சொந்தமாக வெளியிட்ட இந்த சிறுகதை தொகுப்பின் மூலம் இதுவரை ரூ.2 லட்சம் கிடைத்திருப்பதாக கூறுகிறாா்.

மற்ற படைப்புகள்...

‘நீலச்சடையன்’ தவிர, கடந்த 2021-ஆம் ஆண்டு, தெய்யம் நாட்டுப்புற கலையை மையப்படுத்தி ‘சிம்ஹத்தின்டெ கதா’ என்னும் சிறுகதை தொகுப்பும் கடந்தாண்டு, ராமாயணத்தை மையப்படுத்தி ‘தாராகாந்தன்’ என்ற நாவலும் அகில் எழுதியுள்ளாா். இவ்விரு புத்தகங்களையும் மாத்ருபூமி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
நன்றி Guna Sekaran
-தினமணி
Via: Fauzer Mahroof

அன்போடு அழைக்கிறேன். இயன்றவர்கள் வந்து கலந்து கொள்க.
20/07/2024

அன்போடு அழைக்கிறேன். இயன்றவர்கள் வந்து கலந்து கொள்க.

Address

30 Marry Kudiyiruppu, Puthu Pullukkara Theru
Thanjavur
613001

Telephone

+6590044526

Website

Alerts

Be the first to know and let us send you an email when யாழிசைப் பதிப்பகம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to யாழிசைப் பதிப்பகம்:

Share

Category