 
                                                                                                    02/09/2025
                                            முதன்முறையாக இரத்த தானம் வழங்கிய மலைவாழ் பழங்குடியின இளைஞர்கள் 
செப்-02: தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசரத் தேவைக்கு இரத்தம் தேவைப்பட்டது.தகவல் அறிந்த ம.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநர் ரஞ்சித்குமார், திண்டுக்கல் மாவட்டம்  கொடைக்கானல்  அருகே உள்ள வடகரைப்பாறை பழங்குடியின  கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு குருதிக்கொடை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.உடனேஇளைஞர்கள் முதன்முறையாக குருதிக்கொடை வழங்கினர்.மேலும் இளைஞர்களுக்கு மருத்துவர் பிரியா இரத்ததானம் குறித்த முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.                                        
 
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                         
   
   
   
   
     
   
   
  