19/11/2021
ஒன்றிய அரசு மக்களைப் பற்றியும், விவசாயிகளைப் பற்றியும் கவலைப்படாமல் கொண்டுவந்த மூன்று விவசாய சட்டங்களால் இதுவரை 600க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளார்கள். போராடிய விவசாயிகளை “காலிஸ்தானிகள்” என்றெல்லாம் வலதுசாரிகள் குற்றம் சுமத்திவந்தனர், விவசாயிகளின் போராட்டங்களுக்கு“டூல்கிட்” தயாரிக்க க்ரெட்டா தென்பெர்க்குக்கு உதவியதாக பெங்களூர் மாணவி திஷா ரவி ஆட்கடத்தல் செய்யப்பட்டார்.
இப்படி செய்தவர்கள் எல்லாம் இப்போது என்ன சொல்வார்கள்? உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களிடம் ஒன்றிய அரசு மன்னிப்புக் கோரவேண்டும், தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும். இது பஞ்சாப், உபி தேர்தல்களை மனதில் வைத்து எடுக்கப்பட்ட முடிவு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
பிரதமரின் இன்றைய நடவடிக்கை,
ஆனால் இன்று பிரதமரின் மொழிநடை, உடல் மொழி எல்லாவற்றையும் கவனிக்கவேண்டும், “எங்களால் கள நிலவரங்களை கணிக்க முடியவில்லை, எங்களால் விவசாயிகளை இந்த சட்டங்களை ஏற்றுக்கொள்ள வைக்க முடியவில்லை”, இப்படி எல்லாம் 56" மார்புடையவர் ஏன் பேசவேண்டும்.
இப்படிப் பேச வைத்தது விவசாயிகளின் வீரம் செறிந்த போராட்டம்தான்.
எளிய மக்கள்“உண்மை”என்கிற ஆயுத்த்தை ஏந்தி விட்டுக்கொடுக்காமல், அமைதி வழியல் போராடினால், எவ்வளவு பெரிய ஆணவம் பிடித்த அதிகாரத்தையும் இறங்கி வர வைக்க முடியும் என்று நிரூபித்துள்ளது விவசாயிகளின் போராட்டம்.
மேற்சொன்ன அனைத்தும் எடப்பாடிக்கும் பொருந்தும் இந்த சட்டங்களை வரிக்கு வரி, மோடிக்கு மறுபேச்சு பேசாமல் ஆதரித்தவர், அவரும் தமிழக விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
⚡