Trichy TMMK MMK

Trichy TMMK MMK Media

03/07/2025

திருச்சி மாவட்டம் முன்னாள் மாவட்ட தலைவர் உதுமான் அலி அவர்களின் உரை.

Udhuman Ali

திருச்சி மாவட்ட IT WING ஆலோசனைக் கூட்டம்.மனிதநேய மக்கள் கட்சி தகவல் தொழில்நுட்ப அணி (IT WING) திருச்சி கிழக்கு மற்றும் ம...
23/06/2025

திருச்சி மாவட்ட IT WING ஆலோசனைக் கூட்டம்.

மனிதநேய மக்கள் கட்சி
தகவல் தொழில்நுட்ப அணி (IT WING) திருச்சி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டம் ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம் கிழக்கு மாவட்ட தலைவர் M.A.முகமது ராஜா மற்றும் மேற்கு மாவட்ட தலைவர் பைஸ் அஹமது MC ஆகியோர் ஆலோசனையின் அடிப்படையில் (22.06.25) அன்று இரவு 8.00 மணிக்கு பாலக்கரை அர்- ரையான் பள்ளிவாசலில் நடைபெற்றது.

IT WING மண்டல செயலாளர் முகமது கான் அவர்கள் தலைமை தாங்கினார்.
IT WING கிழக்கு மாவட்ட செயலாளர் திருச்சி ஜாவீத் வரவேற்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் IT WING மாநில துணை செயலாளர் நஜீர், தலைமை கழக பேச்சாளர் முகமது ரபீக்,மேற்கு மாவட்ட தலைவர் பைஸ் அஹமதுMC உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

ஜூலை 6 மதுரையில் நடைபெறக்கூடிய மாநாட்டின் நோக்கம் குறித்தும், மாநாட்டிற்கு மேற்கொள்ள வேண்டிய விளம்பர பணிகளை குறித்தும் ஆலோசிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இறுதியாக IT WING மேற்கு மாவட்ட செயலாளர் சதாம் உசேன் நன்றி உரை நிகழ்த்தினார்.

மேலும் இந்நிகழ்வில் திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் கலந்துகொண்டு கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.

பதிவு நாள் : 23.06.25

#மமகமாநாடு #மதுரைமாநாடு

திருச்சி கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்.தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்மனிதநேய மக்கள் கட்சி திருச்சி கிழக்கு மாவட்ட ஆல...
20/06/2025

திருச்சி கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்
மனிதநேய மக்கள் கட்சி திருச்சி கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் M.A.முகமது ராஜா அவர்கள் தலைமையில் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

தமுமுக மாவட்ட செயலாளர் A.இலியாஸ்,மமக மாவட்ட செயலாளர் A.அஷ்ரப் அலி மற்றும் மாவட்ட பொருளாளர் M.A.காஜா மொய்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தலைமை கழக பேச்சாளர் சகோதரர் கோவை சையது அவர்கள் கலந்து கொண்டு மாநாட்டின் நோக்கத்தை குறித்தும்,மாநாட்டின் வெற்றிக்கு மேற்கொள்ளும் பணிகள் குறித்தும் ஆலோசனை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

மேலும் இக்கூட்டத்தில் ஜூலை 6 அன்று மதுரையில் நடைபெற உள்ள இரட்டை கோரிக்கை மாநாடு சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டு மாநாட்டின் விளம்பரங்களை மேம்படுத்தவும் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் மாவட்ட துணை, அணி,பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டு ஒருமனதாக தீர்மானங்களை நிறைவேற்றினர்.

#மமகமாநாடு #மதுரைமாநாடு

பதிவு நாள்: 20.06.25

திருச்சியில் தமுமுக நடத்திய தலைமை தபால் நிலையம் முற்றுகை போராட்டம்!!!ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கும் வக்ஃப்  திருத்த சட...
06/05/2025

திருச்சியில் தமுமுக நடத்திய தலைமை தபால் நிலையம் முற்றுகை போராட்டம்!!!

ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கும் வக்ஃப் திருத்த சட்டத்தை எதிர்த்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக திருச்சியில் தலைமை தபால் நிலையம் முற்றுகை போராட்டம் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர், ப.அப்துல் சமது MLA, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாநில பொருளாளர் ஷபியுல்லாஹ்கான், தமுமுக துணைப் பொதுச் செயலாளர் சலிமுல்லாகான், மமக துணைப் பொதுச் செயலாளர் தஞ்சை பாதுஷா, மாநில செயலாளர் விழுப்புரம் முஸ்தாக் தீன், தலைமை பிரதிநிதி நூர்தீன் உள்ளிட்ட மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டனங்களை பதிவு செய்தனர்.

மேலும் இந்த கண்டன ஆர்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆண்கள் பெண்கள், என பலரும் பங்கேற்று தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்,

03/05/2025

#சட்டமன்றத்தில் உரிமைக்குரலாய் ஒலிக்கும்
மனிதநேய மக்கள் கட்சி…

கடந்த மாதம் மார்ச் 14 ந்தேதி தொடங்கி ஏப்ரல் 29 ந்தேதியோடு 36 நாட்கள் சட்டமன்றம் நடந்து முடிந்துள்ளது. மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் வைத்த கோரிக்கைகள், பேசிய விசயங்களை ரத்தின சுருக்கமாக தருகிறோம்.

தமிழக வரலாற்றில் முஸ்லீம் சமுதாயத்தின் உரிமைக்குரலாய் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கும் ஒரே கட்சி மனிதநேய மக்கள் கட்சி என்றால் அது மிகையல்ல,

சட்டமன்றத்தில் பேச வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சிறுபான்மை சமுதாயம் மட்டுமின்றி இதர ஒடுக்கப்பட்ட சமுதாயங்களின் கோரிக்கைகளையும், பிரச்சினைகளையும் தொடர்ந்து பேசி வருகின்றனர் மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள்.

சட்டமன்றத்தில் வைக்கப்பட்ட கோரிக்கைகளின் விபரம்:-

19/03/25
🔹சட்டபேரவையில் நெல்லை டவுன் ஜாகிர் ஹீசைன் படுகொலை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து மமக தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா MLA ,அவர்கள் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்ககோரியும் உரையாற்றினார்.

20/03/2025
🔹சிறுபான்மை மாணவர்களிற்கான கல்வி உதவி நிதியை கூடுதலாக ஒதுக்க வேண்டும்.அயல்நாடு சென்று ஆராய்ச்சி மாணவர்களிற்கு கல்வி உதவி வழங்க வேண்டும்.-பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா MLA,

🔹பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிகளில் மதிய உணவு இடைவேளை நேர மாற்றத்தால் ஜூம்ஆ தொழுகை யை நிறைவேற்றுவதில் சிக்கலை அகற்றும் வகையில் சரி செய்ய வேண்டும். -பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா MLA,

🔹பள்ளிவாசல் மற்றும் தேவலாயங்கள் கட்டுவது மற்றும் மராமத்து பணிகளிற்கு உள்ள சிக்கல்களை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா MLA,

🔹அதிமுக ஆட்சியில் வஃக்ப் சொத்துக்களை சர்கார் புறம்போக்கு வகையறாக்கள் என மாற்றியதை வருவாய் ஆவணங்களை ஆய்வு செய்து முறைப்படுத்த வேண்டும். -பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா MLA,

🔹சென்னை அண்ணாசலையில் உள்ள மதரஸே ஆஜம் பள்ளி வளாகத்தில் ITI யும்,பள்ளி மாணவர்கள் கட்டணமின்றி நவீன மைதானத்தை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். -பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா MLA,

🔹கவிக்கோ அப்துர் ரஹ்மான் படைப்புகளை நாட்டுடமை ஆக்க வேண்டும்,தெருவிற்கு அவர் பெயர் வைக்க வேண்டும்,கவிதா மண்டலம் உருவாக்க வேண்டும். -பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா MLA,

🔹வஞ்சக வஃக்ப் திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். -பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா MLA,

#25/03/2025
🔹சிறுபான்மை மற்றும் பட்டியலின மக்களை பாதிப்படைய செய்யும் தொகுதி வரையறையை நிறுத்த வேண்டும்.-பேரா.ஜவாஹிருல்லா.MLA.

#27/03/2025
🔹வஃக்ப் திருத்த சட்டம் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என பாஜக வானதி சீனிவாசனின் பேச்சுக்கு சட்டபேரவையில் பதிலடி கொடுத்தார் மமக தலைவர் பேரா.ஜவாஹிருல்லா.MLA

🔹என்னுடைய கோரிக்கை மட்டுமல்லாது ஒட்டு மொத்த சமூக நல்லிணக்கத்தை விரும்பக்கூடிய அனைவரின் கோரிக்கையை ஏற்று வக்ஃப் திருத்த சட்டத்திற்க்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தமிழ்நாட்டின் முதலமைச்சருக்கு நன்றியுடன் வாழ்த்துக்களை தெரிவித்தார் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர். எம் எச் ஜவாஹிருல்லா எம் எல்ஏ அவர்கள்.

#03/04/2025
🔸வக்ப் திருத்த சட்டத்தை தமிழ்நாட்டு அரசு ஏற்காது என்ற முடிவை முதல்வர் எடுக்க வேண்டும்-ப.அப்துல் சமது,MLA,

#22/04/2025
🔹நீண்டகாலமாக காலியாக உள்ள உதவி செயலாளர் AS1 பணியை நிரப்ப அரசு முன் வருமா என சட்டபேரவையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.ஜவாஹிருல்லா அவர்களின் கேள்விக்கு பதில் அளித்த
சிறுபான்மை நலத்துறை அமைச்சர் நாசர் அவர்கள் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை நலச் செயலாளர் அவர்களால் காலியாக உள்ள உதவி செயலாளர் AS1 பணியை நிரப்ப உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

🔹பள்ளிவாசல்கள்,மதரஸாக்கள்,
தர்காக்களுக்கு பட்டா வழங்க அரசு முன் வருமா சட்டபேரவையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.ஜவாஹிருல்லா அவர்களின் கேள்விக்கு மாண்புமிகு சிறுபான்மை நலத்துறை அமைச்சர் நாசர் அவர்கள் பள்ளிவாசல்கள்,மதரஸாக்கள்,
தர்காக்களுக்கு பட்டா வழங்க வருவாய்த்துறை செயலாளர் வாயிலாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பதிலளித்தார்

🔹பயன்படுத்தப்படாத வக்ஃப் நிலங்களில் நீண்ட கால குத்தகை அடிப்படையில் கல்வி, மருத்துவ கட்டமைப்புகள் இயங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமா சட்டபேரவையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.ஜவாஹிருல்லா அவர்களின் கேள்விக்கு பதிலளித்த மாண்புமிகு சிறுபான்மை நலத்துறை அமைச்சர் நாசர் அவர்கள் சமூக நலத்திட்டங்களை செயல்படுத்த வஃக்ப் நிலங்களை குத்தகைக்கு கேட்டு தனியாரிடமிருந்து மனுக்கள் வரும்பட்சத்தில் மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று அவரின் ஆலோசனைகளின்படி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

🔹 கவிக்கோ அப்துல் ரஹ்மான் மற்றும் மணவை முஸ்தபா ஆகியோறுக்கு அரசு விழா கொண்டாடப்படும் என அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி சொல்லி சட்டமன்றத்தில் பேச தொடங்கிய பேரா.ஜவாஹிருல்லா MLA அவர்கள் சென்னையில் இருப்பது போல் மதுரை,கோவை,திருச்சியில் வக்ஃப் தீர்ப்பாயம் அமைக்கபடுமா என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த சிறுபான்மை நலத்துறை அமைச்சர் நாசர் அவர்கள். மதுரையில் வஃக்ப் தீர்ப்பாயம் அமைய உள்ளதாகவும், மாண்புமிகு உறுப்பினரின் கோரிக்கையை பரிசீலித்து ஆய்வு மேற்கொண்டு கோவை மற்றும் திருச்சியில் தேவையிருப்பின் தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று வஃக்ப் தீர்ப்பாயம் அமைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

#28/04/2025
🔹பாஸ்போர்ட் பெறுவதற்கான விசாரணைக்கு காவலர்கள் வீட்டிற்கு வர வேண்டும் என்ற உத்தரவை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்- -பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா MLA

🔹எனது கோரிக்கையை ஏற்று வாழ்நாள் சிறைவாசிகளிற்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுவிப்பு செய்ததை போன்று பரோலில் உள்ள 22 சிறைவாசிகளையும் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் -பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா MLA,

🔹காவல்துறையில் உயரக்குறைவினால் காலியாக உள்ள முஸ்லிம் இடங்களை நிரப்பும் வகையில் பட்டியலின மக்களிற்கு உள்ள உயர அளவு சலுகையை பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் இளைஞர்களிற்கும் வகுக்க வேண்டும்- பேரா.ஜவாஹிருல்லா MLA

#29/04/2025
🔸திண்டுக்கலில் உள்ள திப்புசுல்தான மணிமண்டபத்தில் நூலகம் அமைக்க வேண்டும்.திப்புசுல்தான் ஹைதர்அலி வராலற்றை ஆவண படமாக எடுக்க வேண்டும்- ப.அப்துல் சமது MLA

🔸நீதியரசர் ராஜேந்திர சச்சார் அறிக்கை படி சிறுபான்மை மக்கள் அரசியல் பிரதிநிதித்துவம் பெறும் வகையில் தொகுதி மறு சீரமைப்பு நடத்த வேண்டும்
-ப.அப்துல் சமது,MLA,

🔸பன்னூலாசிரியர் MRM அப்துர் ரஹீம் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது பிறந்த ஊரான இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் அமைய உள்ள நூலகத்திற்கு அவரின் பெயரை சூட்ட வேண்டும் - -ப.அப்துல் சமது,MLA

🔸தொல்லியல்துறையின் கட்டுபாட்டிலுள்ள வேலூர் கோட்டையில் உள்ள பள்ளிவாசலில் தொழுகை நடத்த , முதல்வர் அவர்கள் அனுமதி பெற்று தர வேண்டும் -
ப.அப்துல்சமது,MLA,

🔸உலமாக்களிற்கு மாணிய விலையில் இரு சக்கர வாகனங்கள் வழங்கும் வயது வரம்பான 40 லிருந்து 35 வயதாக குறைக்க வேண்டும்-ப.அப்துல் சமது,MLA,

🔸தமிழ்நாட்டில் உள்ள உருது மேல்நிலைபள்ளி,உயர்நிலைபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் - ப.அப்துல் சமது,MLA,

🔸இஸ்லாமியர்களிற்கான 3.5℅ ஒதுக்கீடு எந்த அளவிற்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை ஆய்வறிக்கை வெளியிட வேண்டும். இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்தி தர வேண்டும்- ப.அப்துல் சமது,MLA

மேற்கண்ட கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


காட்டூர் கிளை சார்பாக தெருமுனை கூட்டம்.
03/05/2025

காட்டூர் கிளை சார்பாக தெருமுனை கூட்டம்.

திருவெறும்பூர் பகுதி ஆலோசனைக் கூட்டம் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு.தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் திருச்சி மண்டலம்...
03/05/2025

திருவெறும்பூர் பகுதி ஆலோசனைக் கூட்டம் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் திருச்சி மண்டலம் சார்பாக மே-6 திருச்சியில் நடைபெற உள்ள பேரணி மற்றும் முற்றுகை போராட்டத்திற்கான திருவெறும்பூர் பகுதி ஆலோசனைக் கூட்டம் பகுதி தலைவர் சாதிக் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் M.A.முகமது ராஜா,மாநில தலைமை கழக பேச்சாளர் J.முகமது ரபீக்,மாவட்ட துணை செயலாளர் காசிம்,MTS மாவட்ட செயலாளர் ஜாவித் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் முற்றுகை ஆர்ப்பாட்டம் சார்ந்து ஆலோசிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் இந்நிகழ்வில் தொண்டர் அணி மண்டல செயலாளர் உஸ்மான் உள்ளிட்ட மாவட்ட ,கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

#மே_6

திராவிட முன்னேற்றக் கழகம் திருச்சி(தெ) மாவட்டத்தின் சார்பாக மாண்புமிகு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழ...
29/03/2025

திராவிட முன்னேற்றக் கழகம் திருச்சி(தெ) மாவட்டத்தின் சார்பாக மாண்புமிகு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் திருவெறும்பூர் தொகுதியில் இப்தார் (நோன்பு திறக்கும்) விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளரும் ஹஜ் கமிட்டி தலைவருமான ப.அப்துல் சமத் எம்எல்ஏ, திருச்சி அரபிக் கல்லூரி முதல்வரும் ஜமாத்துல் உலமா மாநில துணைத் தலைவருமான ரூஹுல் ஹக் மௌலானா அவர்களும்,திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் முனைவர் இனிகோ இருதயராஜ் அவர்களும், கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் தமுமுக மாநில பொருளாளர் பொறியாளர் N.சபியுல்லா கான்,திருச்சி கிழக்கு மாவட்ட தலைவர் M.A.முகமது ராஜா, மேற்கு மாவட்ட தலைவர் பைஸ் அஹமது MC, கிழக்கு மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி, மேற்கு மாவட்ட செயலாளர் இப்ராஹிம் உள்ளிட்ட கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட நிர்வாகிகள்,கிளை கழக நிர்வாகிகள்,பகுதி,ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாவட்ட செயற்குழு..தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி திருச்சி கிழக்கு மாவட்டதின் மாவட்ட செ...
02/03/2025

கிழக்கு மாவட்ட செயற்குழு..

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி திருச்சி கிழக்கு மாவட்டதின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் M.A.முகமது ராஜா அவர்கள் தலைமையில் பாலக்கரை அர்- ரையான் பள்ளிவாசலில் மாலை 7.30 மணிக்கு நடைபெற்றது.

IPP மாநில துணை செயலாளர் J.முகமது ரபீக் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் தமுமுக மாவட்ட செயலாளர் A.இலியாஸ், மமக மாவட்ட செயலாளர் A.அஷ்ரப் அலி மற்றும் மாவட்ட பொருளாளர் M.A.காஜா மொய்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

மாநில செயற்குழுவில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் மாவட்ட கழக கிளைக் கழக நிர்வாகிகள் இடத்தில் எடுத்துக் கூறி அவ்விஷயங்களை திறன் பட செய்வது சம்பந்தமாக ஆலோசனை செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

மேலும் திருச்சி கிழக்கு மாவட்டம் சார்பாக ரமலான் ஒற்றப்படை இரவு மற்றும் கிளைகள் தோறும் பித்ரா வசூல் செய்து ஏழைகளுக்கு பித்ரா உணவுப்பொருட்கள் ஏற்பாடு செய்து கொடுப்பது என தீர்மானிக்கப்பட்டது

மேலும் இந்நிகழ்வில் மாவட்ட துணை, அணி,பகுதி மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


திருச்சி மாவட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மனிதநேய மக்கள் கட்சி திருச்சி மாவட்டம் சார்பாக வக்ப்பு திருத்த சட்ட மச...
27/02/2025

திருச்சி மாவட்டத்தில்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

மனிதநேய மக்கள் கட்சி திருச்சி மாவட்டம் சார்பாக வக்ப்பு திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி கிழக்கு மாவட்ட தலைவர் M.A.முகமது ராஜா தலைமையில் நடைபெற்றது.

மாநில பொருளாளர் N.சபியுல்லாகான்,

விசிக மாநில துணை பொதுச்செயலாளர் தோழர் வன்னி அரசு,

மாநில துணை பொதுச் செயலாளர் மைதின் சேட்கான்,

பாலக்கரை வட்டார ஜமாத்துல் உலமா தலைவர் மௌலவி சிராஜுதீன் மன்பஈ,

முஸ்லிம் மகளிர் பேரவை மாநில பொருளாளர் சகோதரி ஷான் ராணி ஆலிமா,

மேற்கு மாவட்ட தலைவர் பைஸ் அஹமது MC ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில் திருச்சி கிழக்கு மாவட்டம் IPP மாவட்ட செயலாளர் ஹபிபுல்லா அவர்கள் கிராத் ஓதி ஆரம்பிக்க திருச்சி மேற்கு மாவட்ட செயலாளர் இப்ராஹிம் வரவேற்புரை ஆற்றினார்.

இறுதியாக திருச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.

மேலும் இக்கூட்டத்தில் திருச்சி கிழக்கு மாவட்ட தமுமுக செயலாளர் இலியாஸ், மாவட்ட பொருளாளர் காஜா மொய்தீன், மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் சபீர் கான், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் நசீர் உட்பட திருச்சி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட துணை அணி பகுதி கிளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

 #தமுமுக_திருச்சி_கிழக்கு  #மாவட்ட_ஆலோசனை_கூட்டம்.தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் திருச்சி கிழக்கு மாவட்டதின் மாவட்ட ...
14/02/2025

#தமுமுக_திருச்சி_கிழக்கு #மாவட்ட_ஆலோசனை_கூட்டம்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் திருச்சி கிழக்கு மாவட்டதின் மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் M.A.முகமது ராஜா அவர்கள் அறிவுறுத்தலின் படி மாவட்ட செயலாளர் A.இலியாஸ் அவர்கள் தலைமையில் மாவட்ட பொருளாளர் M.A. காஜா மொய்தீன் முன்னிலையில் மாவட்ட தலைமை அலுவலகத்தில் (14.02.25) மாலை 07.30 மணிக்கு நடைபெற்றது.

இந்நிகழ்வில் இஸ்லாமிய பிரச்சார பேரவை சார்பாக ரமலான் மாதத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை பற்றி ஆலோசிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் இந்நிகழ்வில் மாவட்ட துணை,அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு ஒருமனதாக தீர்மானங்களை நிறைவேற்றனர்.

| | | | |TMMK MEDIA|

லால்குடி நகரம் சார்பாக ரமலானை வரவேற்று அரங்க கூட்டம். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் இஸ்லாமிய பிரச்சார பேரவை த...
12/02/2025

லால்குடி நகரம் சார்பாக ரமலானை வரவேற்று அரங்க கூட்டம்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் இஸ்லாமிய பிரச்சார பேரவை திருச்சி கிழக்கு மாவட்டம் லால்குடி நகரம் சார்பில் ரமலானை வரவேற்போம் என்ற தலைப்பில் மார்க்க அரங்க கூட்டம் மாவட்ட தலைவர் M.A. முஹம்மது ராஜா தலைமையில் லால்குடி பகுதியில் உள்ள தேவி மஹாலில் நடைபெற்றது.

தலைமை கழக பேச்சாளர் சகோதரர் கோவை சையது அவர்களும் IPP மாநில துணை செயலாளர் J.முகமது ரபீக் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில் குவைத் மண்டல தலைவர் N.M.A. ஜபருல்லாஹ் கான்,தமுமுக மாவட்ட செயலாளர் A. இலியாஸ்,மமக மாவட்ட செயலாளர் A.அஷ்ரப் அலி ,IPP மாவட்ட செயலாளர் ஹபிபுல்லா, மாவட்ட துணை செயலாளர் ரம்ஜான் அலி,லால்குடி பகுதி தலைவர் A.K.அப்துல் சுக்கூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் இந்நிகழ்வில் மாவட்ட துணை,அணி,நகரம் பகுதி,கிளை நிர்வாகிகள் உட்பட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

TMMK MEDIA

Address

Tiruchirappalli
620008

Alerts

Be the first to know and let us send you an email when Trichy TMMK MMK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category