15/07/2026
அனைவருக்கும் வணக்கம்.
குளூனி சமூக சேவை மையம், செல்லியம்பட்டியில், தமிழ்நாடு அரசின் சிங்கப்பெண் அதிரடிப்படை குறித்த விழிப்புணர்வு முகாம் 12.07.2026 அன்று காலை 11.00 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர் திருமதி. சரசு அவர்கள் தலைமையிலான காவல்துறை குழுவினர் கலந்து கொண்டு, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, அவர்களுக்கான சட்ட உரிமைகள் மற்றும் அவசர உதவிகளைப் பெறும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு வழங்கினர்.
மேலும், குளூனி சமூக சேவை மையத்தின் இயக்குநர் அருட்சகோதரி எஃப்ரேம் அவர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்.
இம்முகாமில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் ஐந்து இடங்களைப் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். மதியம் 1.30 மணியளவில் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. இறுதியாக, அனைவருக்கும் நன்றி தெரிவித்து விழிப்புணர்வு முகாம் இனிதே நிறைவுற்றது.
#தினம்விஷன்
#காமராஜர்