Agni-தமிழ்

Agni-தமிழ் Facebook social media

14/08/2024

மயிலாடுதுறை காவல்துறை நடவடிக்கைகள் எடுக்குமா?
மயிலாடுதுறை மெய்கண்டார் தொழிற்பயிற்சி கல்லூரியில் நடக்கும் அத்துமீறல்!!

17/05/2024
மயிலாடுதுறை மாவட்டம் முடிகண்டநல்லூர் வக்கராமாரி சாலை பல வருடங்களாக சாலை பழுதடைந்துள்ளதை சரிசெய்யவேண்டி மாணவ, மாணவிகள் மா...
02/12/2023

மயிலாடுதுறை மாவட்டம் முடிகண்டநல்லூர் வக்கராமாரி சாலை பல வருடங்களாக சாலை பழுதடைந்துள்ளதை சரிசெய்யவேண்டி மாணவ, மாணவிகள் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தபால் அட்டை மூலம் கோரிக்கை விடுத்தனர்.

02/12/2023

மதுபான பாராக மாறிவரும் அவலம்

மயிலாடுதுறை மாவட்டம் திருச்சிற்றம்பலம் ஊராட்சி குமாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி

நீலகண்டேஸ்வரர் திருக்கோவில்.இறைவன் - திருநீலகண்டேஸ்வரர்இறைவி  -  அமிர்தவல்லி.ஊர் -  இலுப்பைபட்டுமாவட்டம் - மயிலாடுதுறை.த...
24/02/2023

நீலகண்டேஸ்வரர் திருக்கோவில்.

இறைவன் - திருநீலகண்டேஸ்வரர்
இறைவி - அமிர்தவல்லி.

ஊர் - இலுப்பைபட்டு
மாவட்டம் - மயிலாடுதுறை.

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 30 வது சிவத்தலமாகும்.

பொதுவாக சிவன் கோயில்களில் ஒரு மூலவர் மட்டுமே இருப்பார். அரிதாக சில தலங்களில் இரண்டு மூலவர்கள் இருப்பர். ஆனால், இங்கு ஐந்து சிவன் தனித்தனி சன்னதிகளில் இருக்கிறார்.
தர்மர் வழிபட்ட சிவன் நீலகண்டேஸ்வரர்,
அர்ஜுனன் வழிபட்ட சிவன் படிகரைநாதர்,
பீமனால் வழிபடப்பட்டவர் மகதீஸ்வரர்,
நகுலன் வழிபட்டவர் பரமேஸ்வரர்,
சகாதேவன் வழிபட்டவர் முத்துகிரீஸ்வரர் என்ற பெயர்களில் அருளுகின்றனர்.

மயிலாடுதுறையில் இருந்து 10 கி.மீ., தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. மணல்மேடு பேருந்து நிலையத்தில் இறங்கி சுமார் 1 கி.மீ., தூரம் சென்றால் இக் கோயிலை அடையலாம்.

ஆழ்ந்த இரங்கல் 😭
30/12/2022

ஆழ்ந்த இரங்கல் 😭

04/12/2022
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், 6.கடக்கம் சிவன்கோயில்6.Kadakkam sivan temple வைத்தீஸ்வரன்கோயில் – மணல்மேடு சால...
03/12/2022

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், 6.கடக்கம் சிவன்கோயில்
6.Kadakkam sivan temple

வைத்தீஸ்வரன்கோயில் – மணல்மேடு சாலையில் 12 கிமி சென்றால் திருவாளப்புத்தூர் இங்கிருந்து சிறிய சாலை வடக்கில் செல்கிறது அதில் ஒரு கிமி சென்றால் கடக்கம் கிராமம் உள்ளது. பல கடக்கம் உள்ளதால் இது 6.கடக்கம் எனப்படுகிறது. கடகம் பூசித்த இறைவன் என்பதால் இவ்வூர் கடக்கம் என ஆனது என சொல்கின்றனர், ஆயினும் பல இடங்களில் கடக்கம் எனும் ஊர்கள் உள்ளதால் அந்த விளக்கத்தை ஏற்க இயலாது.

இவ்வூரில் ஒரு சிவன்கோயிலும் ஒரு பெருமாள் கோயிலும் உள்ளன.

ஆங்கிலத்தில் Damaged - Dialapitated - Collapsed என மூன்று வார்த்தைகள் உள்ளன.
முதலாவதற்கு சேதமடைந்தது பழுதடைந்துள்ளது என பொருள்.
இரண்டாவதற்கு இடிந்துள்ளது, பாழடைந்துள்ளது என பொருள் மூன்றாவதற்கு முற்றிலும் சிதைவடைந்தது என பொருள்.

பெருமாள் கோயில் மூன்றாவது நிலையிலும், இந்த சிவன் கோயில் இரண்டாவது நிலையிலும் உள்ளது.
வாங்க எச்சரிக்கையுடன் உள்ளே செல்வோம்.....

நான்கு புறமும் மதில் சுவர்கள் இடிந்து கிடக்கின்றன. முகப்பில் இருந்த நுழைவாயிலும் அதின் மீது இருந்த ரிஷபவாகன காட்சி சுதை வளைவு இடிந்து தரையில் கிடக்கும் காட்சி. கிழக்கு நோக்கிய இறைவன் கருவறை அர்த்தமண்டபம் அதன் முன்னர் ஒரு மகாமண்டபம் உள்ளது, அதன் சுவர்கள் குறுகும் நெடுக்குமாக பிளந்து நிற்கின்றன. அதில் புறசுவற்றில் ஒரு சிறிய கல்வெட்டு 1938 ல் குஞ்சிதபாதம் பிள்ளை அவர்களால் குடமுழுக்கு செய்யப்பட்ட தகவலை சொல்கிறது. அதன் பின்னர் 84 ஆண்டுகாலம் உருண்டோடிவிட்டன.

இறைவன் –கைலாசநாதர் இறைவி கல்யாணசுந்தரி

கைலாசநாதர் என்றாலே பத்தாம் நூற்றாண்டு காலகட்டம் எனலாம், கல்யாண சக்தி கொண்ட அம்பிகை என்பதால் கல்யாண சுந்தரி.
இறைவியின் கருவறை தெற்கு நோக்கி அமைந்துள்ளது. அருகில் தெற்கு நோக்கி நடராஜருக்கும் கருவறை ஒன்றும் இருந்துள்ளது. இந்த நடராஜ மூர்த்தி தற்போது எங்குள்ளது என தெரியவில்லை . இந்த மகாமண்டப வாயில் அருகில் நந்தி பலிபீடம் உள்ளது. கருவறை வாயிலில் இருந்த ஒரு விநாயகரை சுவர் இடிவது போலிருந்ததால் சற்று நகர்த்தி வைத்துள்ளனர். இறைவனின் கருவறையும் அர்த்தமண்டபமும் கூரை மட்டம் வரை கருங்கல் கொண்டு கட்டப்பட்டுள்ளது. விமான பாகம் முற்றிலும் சேதமடைந்து விட்டது. தென்முகன் ஒரு சிறிய கோஷ்டத்தில் பெரிய கஷ்டத்தில் அமர்ந்துள்ளார். பிற கோஷ்ட மூர்த்திகள் ஏதும் இல்லை. சண்டேசர் சன்னதி பெரியதாக அமைந்துள்ளது மூர்த்தியும் உள்ளார்.

பிரகார சிற்றாலயங்கள் தென்மேற்கில் வரசித்தி விநாயகர் எனப்படும் கைலாச கணபதி உள்ளார். அடுத்து முகப்பு இடிந்துபோன வள்ளி தெய்வானை சமேத முருகன் சிற்றாலயம், அடுத்து வடமேற்கு மூலையில் சன்னதியே சற்று சாய்ந்த நிலையில் மகாலட்சுமி உள்ளார். அப்படியே வடகிழக்கு பகுதிக்கு வந்தால் நீண்ட பைரவர் மண்டபம் பாதி இடிந்து தொங்கிக்கொண்டுள்ளது அதில் பைரவர் சூரியன் நாகர் சனைச்சரன் நால்வர் சிலைகள் உள்ளன.
🥲
அவரவர் வினை வழியவர் வந்தன;
அவரவர் வினை வழியவர் வருபன;
எவர்ரெவர்க்கு உதவினாரே எவர்ரெவர்க்கு உதவிலரோ
அது அவர் நினைவது தமையுணர்வதுவே!

ஏதேது செய்தாலும்,
ஏதேது சிந்தித்தாலும்,
ஏதேது சொன்னாலும்,
மகாதேவா உன் செயலே!
என்று உன் அருளாலே உணர்ந்து,
உன் செயலே காண்கிறேன்!

#வாருங்கள்கிராமசிவாலயம்செல்வோம்

சீர்காழி அருகே கனமழையின் காரணமாக திருமுல்லைவாசல் - பழையார் செல்லக்கூடிய கடற்கரை சாலை பாதிப்பு
12/11/2022

சீர்காழி அருகே கனமழையின் காரணமாக திருமுல்லைவாசல் - பழையார் செல்லக்கூடிய கடற்கரை சாலை பாதிப்பு

16/10/2022

திபெத் நாட்டில் மேகம் தரையில் இறங்கியுள்ள அதிசயத்தை நீங்களும் கண்டு களியுங்கள்.....

பாரத பிரதமர் நரேந்திரமோடி இன்று திறந்து வைத்துள்ள மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் உள்ள உலக புகழ்பெற்ற மகாகாலேஸ்வர் ஆலய...
12/10/2022

பாரத பிரதமர் நரேந்திரமோடி
இன்று திறந்து வைத்துள்ள மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் உள்ள உலக புகழ்பெற்ற மகாகாலேஸ்வர் ஆலயத்தின் புனரமைக்கப்பட்ட வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள முருகன் சிலை...

தமிழக அரசே தமிழக அரசே எங்களுக்கு மணல்மேட்டுக்கு ஒயின் ஷாப் வேண்டும் அரசுக்கு கோரிக்கை வைக்கும் மணல்மேடு குடிமகன்
13/09/2022

தமிழக அரசே தமிழக அரசே எங்களுக்கு மணல்மேட்டுக்கு ஒயின் ஷாப் வேண்டும் அரசுக்கு கோரிக்கை வைக்கும் மணல்மேடு குடிமகன்

Address

Tirumangalam
625706

Alerts

Be the first to know and let us send you an email when Agni-தமிழ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share