15/01/2026
'க.நா.சு. நேர்காணல்கள்' நூலுக்கு ஒரு மதிப்புரை.
//தமிழ் இலக்கிய உலகின் தவிர்க்க முடியாத ஆளுமை க.நா.சு. மிகச் சிறந்த கவிஞர், சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர், விமர்சகர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்ட இலக்கியவாதி.
அவரது நாவல்கள் வாழ்வியலின் எதார்த்தத்துடன், எக்காலத்துக்கும் பொருந்தும் பொக்கிஷங்கள் என்பதில் சந்தேகமில்லை. அத்தகைய ஆளுமைமிக்க க.நா.சு.வின் நேர்காணல் தொகுக்கப்பட்டு நூலாக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுத் தேடல்களில் க.நா.சு.வின் நேர்காணல் கருத்துரைகள் தொகுக்கப்பட்டிருப்பதன் மூலம் அவரது செயல்களையும், இலக்கியச் சிறப்பையும் வெளிப்படுத்தியிருப்பதுடன், அவர் குறித்த தேவையற்ற விமர்சனக் கேள்விகளுக்கும் விடையளிப்பதாக இந்த நூல் உள்ளது சிறப்பு.
தனது விமர்சனம் பாரபட்சமின்றி கடுமையாக இருந்ததால், புதுமைப்பித்தன் போன்றவர்களுக்கும் இடதுசாரிகளுக்கும்கூட தான் எதிரானவன் என்ற தோற்றம் உருவாக்கப்பட்டது என்றும் அது குறித்து தான் கவலைப்படவில்லை என்றும் அவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
172 பக்கங்கள் கொண்ட இந்த நூலின் விலை ரூ.230.//
நன்றி: தினமணி (12-1-2026)
துரை. லட்சுமிபதி திரட்டிப் பதிப்பித்திருக்கும் இந்நூல் சென்னை புத்தகக் காட்சியில் கிடைக்கும்.
ஆதி பதிப்பகம் 122
விருட்சம் வெளியீடு 137
குலுங்கா நடையான் 200
வான்கோ புக்ஸ் 224
யாளி பதிப்பகம் 280
மின்னூல் வாங்க
https://amzn.to/4jo0ld5