Tirunelveli Pasanga La

Tirunelveli Pasanga La Tirunelveli Pasanga la ... tirunelveli gethu pasanga

சாதி சொல்லி சாக அடிக்கல கருத்து பேசி கழுத்த அறுக்கல புரட்சி பேசி புலம்ப வைக்கல  கொடுக்குற காசுக்கு 2.30 மணி நேரம் மனசு வ...
15/01/2025

சாதி சொல்லி சாக அடிக்கல
கருத்து பேசி கழுத்த அறுக்கல
புரட்சி பேசி புலம்ப வைக்கல
கொடுக்குற காசுக்கு

2.30 மணி நேரம் மனசு விட்டு சிரிக்க வச்ச சுந்தர்.சி நிறையை படங்கள் தமிழ் சினிமாவுக்கு கொடுக்கனும். ரியல் பொங்கல் வின்னர் சுந்தர் சி 👌👌

அதிசயமான நாடுதான்.6 மாதம் இரவு, 6 மாதம் பகல்; இப்படி ஒரு நாடா? எங்கே உள்ளது தெரியுமா..?பொதுவாக அனைவருக்கும் விடியல் வந்த...
15/01/2025

அதிசயமான நாடுதான்.

6 மாதம் இரவு,
6 மாதம் பகல்;
இப்படி ஒரு நாடா?
எங்கே உள்ளது தெரியுமா..?

பொதுவாக
அனைவருக்கும் விடியல் வந்தால் நிச்சயம் இரவு வரும். '
மீண்டும் விடியும் என்பதுதான் தெரியும்.
ஆனால் இங்கு 6 மாதம் விடியல் மட்டுமே இருக்கும்.
அடுத்த 6 மாதம் இரவு மட்டுமே இருக்கும்.
இந்த நாடுதான் பூமியின் கடைசி நாடாகவும் உள்ளது.

இப்படி 6 மாதம் பகலாகவும்
6 மாதம் இரவாகவும் இருக்கும் நாடு நார்வேயில்
ஆர்டிக் பெருங்கடலில்
அமைந்துள்ள ஸ்வால்பார்ட் என்ற தீவு பற்றி தான்
நாம் இங்கு பார்க்க போகின்றோம்.

இங்கு பகல்,
இரவு 6 மாதங்கள் நீடிக்க அதன் அமைவிடம்தான் காரணமாக உள்ளது.

அதாவது
இது பூமியின் கடைசி நாடாக இருப்பதால்,
அது தனது அச்சில் சுழலும் வட துருவத்திற்கு அருகில்
இந்த நாடு அமைந்துள்ளது. எனவேதான்
இதன் இரவு 6 மாதமும், பகல் 6 மாதமும் நீடிக்கிறது.

6 மாத இரவின் போது
சூரியன் அடிவானத்திற்கு கீழ் மறைந்திருக்குமாம்.
அதற்கு போலார் நைட் என்று அழைக்கின்றனர்.
அந்த இரவை காண கண்கோடி வேண்டும் என்று
அனுபவித்தவர்கள் சொல்வார்கள்.

இதற்காகவே
இந்த இரவை அனுபவிக்க பலர் இங்கு செல்கின்றனர்.
இந்த இரவானது
அக்டோபர் பிற்பகுதியிலிருந்து பிப்ரவரி நடுப்பகுதி வரை நீடிக்கிறது.

ஏன்
அது வசீகரிக்கும் இரவு
என்று சொல்லப்படுகிறது தெரியுமா..? ஏனெனில்
சூரியன் வானின் அடிப்பகுதியில் ஒளிந்திருப்பதால்
ஸ்வால்பார்ட் பகுதி முழுவதும் சூரியனின் வெளிச்சம் பட்டும் படாமலும் தெரியும்.

இதனால்
வானம் நீலம் மற்றும் ஊதா நிறத்தில் காட்சியளிக்கும்.
அதன் பிரதிபளிப்பு
பளிங்கு கற்களைபோல் ஒளிரும் பனிக்கட்டிகள் மீது
காண்பதற்கே கண்கொள்ளா காட்சியாக அமைகிறது.
இதன் அழகை காணவே சுற்றுலா பயணிகள் பலர் இங்கு குவிகின்றனர்.

இங்கு
மற்றுமொரு அரிய நிகழ்வு .
என்னவெனில்
நடு இரவில் சூரியனை பார்க்கலாம். அதாவது
ஏப்ரல் நடுப்பகுதி முதல் ஆகஸ்ட் நடுப்பகுதி வரை
ஸ்வால்பார்ட் தீவில் கப்பலில் பயணம் செய்தால்
நள்ளிரவில் சூரியன் தெரியும். சூரியனுக்கு கீழ்
நீங்கள் பயணம் செய்வீர்கள்.

அதிலிருந்து வீசும் ஒளி பல வண்ணங்களை நம் மீது தூவிச் செல்லும்.
அந்த வண்ணங்கள் அந்த பகுதியை ரம்மியமான அழகால் கொள்ளைகொள்ளும். சொல்லும்போதே உங்களுக்கும் காண ஆசை வருகிறது.

இந்த நாட்டில்
பகல் ,
இரவு எப்படி இருந்தாலும் வாழ்க்கை தரம் ,
பொருளாதாரம் தங்குதடையின்றி நடந்துக்கொண்டிருக்கிறது.

அஜித் கார் ரேஸ்ல கலந்துக்க போறார்னு எல்லோருக்கும் தெரிஞ்ச அளவுக்கு அது என்ன ரேஸ், என்ன ரூல்ஸ்னு பல பேருக்கு தெரியல. எல்ல...
14/01/2025

அஜித் கார் ரேஸ்ல கலந்துக்க போறார்னு எல்லோருக்கும் தெரிஞ்ச அளவுக்கு அது என்ன ரேஸ், என்ன ரூல்ஸ்னு பல பேருக்கு தெரியல. எல்லோரும் அது எதோ வழக்கமா ஒரு சர்கியூட்குள்ள 10 லேப்போ 20 லேப்போ ஓட்டற ரேஸ்னு நினைச்சிட்டு இருக்காங்க

இந்த ரேஸ் ஒரு எண்டுரன்ஸ் (Endurance) பார்மட் ரேஸ். அதாவது 24 மணி நேர ரேஸ், இன்னிக்கு மத்தியானம் 1 மணிக்கு கார் எடுத்தா, அடுத்த நாள் மத்தியானம் 1 மணி வரைக்கும் ஒட்டனும். ஒரு டீம்ல 3ல இருந்து 5 டிரைவர் வரைக்கும் இருப்பாங்க, அவங்க மாத்தி மாத்தி ஒட்டணும், ஒரு டிரைவர் குறைந்தது 2 மணி நேரம் ஓட்டனும், 24 மணி நேரம் இருக்கேன்னு மெல்ல எல்லாம் ஓட்ட முடியாது, ஆவரேஜ் ஸ்பீட் அந்த டிராக்ல 240 கிலோ மீட்டர். இந்த ஸ்பீட்ல 24 மணி நேரம் ஒட்டறது சாதாரண விஷயம் இல்லை.

வெறும் டிரைவர் சமந்தபட்டது மட்டும் இல்லை இந்த ரேஸ், 24 மணி நேரம் ஓடற அளவுக்கு கார ரெடி பண்ணனும், அதுல மைலேஜ், டையர், மெக்கானிகல் ப்ராப்ளம் வராம பாத்துக்கணும், அதுக்கு ஒரு மெக்கானிக் டீம் இருக்கும். ஆவரேஜ் பிட் ஸ்டாப் டைம் 45ல இருந்து 55 செகண்ட், இதுலதான் பெட்ரோல் போடறது, டிரைவர் மாத்தறது எல்லாம் பண்ணனும் (அதுக்கு அஜித் பிராக்டிஸ் பண்ற வீடியோ கூட வந்திச்சு)
தொடர்ந்து பல மணி நேரம் குறைந்தது 240 கிலோமீட்டர் ஸ்பீட்ல ஓட்ட கடுமையான பயிற்சி தேவை, அப்படி தொடர்ந்து 6 மணி நேரம் ஓட்டி பயிற்சி எடுக்கும்போதுதான் அஜித் கார் ஆக்ஸிடென்ட் ஆச்சு.

எந்த டீம் 24 மணி நேரத்துல அதிக தூரம் ஓட்டி இருக்காங்களோ, அதாவது அதிகமான லாப், அவங்கதான் வின்னர்.

10 ஆம் தேதி துபாய் டைம் 1 மணிக்கு அஜித் சீரி பாய்ந்து இருக்கிறார், 11ஆம் தேதி 1மணியுடன் ரேஸ் முடியுது.

அஜித் டீம் 3வது இடத்தை பிடித்ததற்கு மனமார்ந்த வாழ்த்துகள்❤️❤️

பழநி, தமிழ்நாடு❤️
14/01/2025

பழநி, தமிழ்நாடு❤️

தென் மாவட்டங்களுக்குச் செல்லும் புதிய ரயில் பெட்டிகளில் வசதிகளைவிட வசதிக் குறைபாடுகளே அதிகம். 72 பேருக்கான ஸ்லீப்பர் கோச...
14/01/2025

தென் மாவட்டங்களுக்குச் செல்லும் புதிய ரயில் பெட்டிகளில் வசதிகளைவிட வசதிக் குறைபாடுகளே அதிகம். 72 பேருக்கான ஸ்லீப்பர் கோச் அதே பரப்பளவுக்குள் 80 பேருக்கானதாக நெருக்கடி நிறைந்ததாக மாற்றபட்டிருக்கிறது.

அப்பர் பெர்த், சைட் அப்பர் பர்த் மீது ஏறிப்படுக்க ஓரளவு ஜிம்னாஸ்டிக் தெரிந்திருக்க வேண்டும். மலைப்பாம்பினைப் போல உடலை பர்த்தில் திணிக்கும் திறமையும் வேண்டும்.

அப்பரிலோ, சைட் அப்பரிலோ அமர்ந்து வர வேண்டுமென்றால் கழுத்தைப் பக்கவாட்டில் 55 டிகிரிக்கு வளைத்தபடியே மணிக்கணக்கில் இருப்பதற்குப் பயிற்சி எடுத்திருக்க வேண்டும்.

முக்கியமாக பிளாட்பாரத்திலிருந்து பெட்டிக்குள் படியேறிச் செல்ல லாங் ஜம்ப் அல்லது ஹைஜம்ப் பயிற்சி எடுத்திருந்தால் இடைவெளிக்குள் விழாமல் ஊர் போய்ச் சேரலாம்.

வயதானோர் பலரும் ஏறுவதற்குத் தடுமாறி விழும் காட்சிகளையும் பார்க்க முடிகிறது.

உங்கள் பயணம் இனிதாகுக!

(சோக அப்டேட்: சக பயணி ஒருவர் அப்பர் பர்த் ஏறும்போது தடுமாறி விழுந்தார். இன்னொரு பயணி கைவசம் வாலினி வைத்திருந்தார். விழுந்தவரால் இனி அப்பருக்குச் செல்ல இயலாது.)

1990 ம் ஆண்டிற்கு முன்பு பிறந்தவர்கள் கட்டாயம் படிக்கவேண்டியவை சிரிப்போடு கண்ணீர் வரும்!!!1990 ம் ஆண்டிற்கு முன்னர் பிறந...
14/01/2025

1990 ம் ஆண்டிற்கு முன்பு பிறந்தவர்கள் கட்டாயம் படிக்கவேண்டியவை சிரிப்போடு கண்ணீர் வரும்!!!

1990 ம் ஆண்டிற்கு முன்னர் பிறந்தவர்களுக்கு மட்டும் இந்த அருமை புரியும்.

♥1990க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது…

♥காலை எழுந்ததும் பசும்பால் வாங்க அப்பா வரிசையில் நின்றிருந்தார்.

♥வாங்கி வந்த தண்ணீர் கலக்காத பாலில், அம்மா டீ போட்டு கொண்டு வந்தார். குடும்பத்துடன் அமர்ந்து டீ குடிப்பதை கூட அவரவர் முகத்தை பார்த்து ரசித்து குடித்தோம்.

♥ஆர்ப்பாட்டமே இல்லாமல் நாம் அனைவரும் தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு கூட நடந்தே சென்றோம்…

♥ஆசிரியரின் மீது மரியாதையும் பயமும் இருந்ததே தவிர ஒரு நாளும் ஆசிரியரை தரக்குறைவாகவோ, இழிவாகவோ ஒரு மாணவனும் நினைத்ததில்லை…

♥பள்ளி முடித்து வீட்டுக்கு வந்ததுமே, பையை தூக்கி போட்டுவிட்டு தெருவில் கும்பலாக விளையாடினோம்…

♥விளையாட்டில் கூட ஆங்கிலம் கலக்காத தமிழ் நம் அனைவர் நாவிலும் வீரியமாக தொற்றியிருந்தது…

♥மாலை 4 மணிக்கு மேல் நம் அக்கா தங்கைகளுக்கு அம்மா அழகாக சடை போட்டுவிட்டார்…

♥உதிரியாக வாங்கிய பூக்களை (மல்லி மற்றும் பிச்சிப்பூ) வாழை நாறால் சிறுசிறுக கட்டி, அதை அக்கா தங்கைக்கு அம்மாவே தன் கையால் குத்தி அழகு பார்த்தார்…

♥மாலையில் நம் தாத்தாவும் அப்பாவும் ஒன்றாக அமர்ந்து தூர்தர்ஷனில் செய்திகள் பார்த்தார்கள்…

♥வெள்ளிக்கிழமையன்று, குறைந்தபட்சம் 10பேராவது ஒன்றாக அமர்ந்து இரவு ஒளியும் ஒலியும் பார்த்தோம்…

♥அம்மாக்களுக்கு அன்று சீரியல் என்றாலே என்னவென்று பொருள் தெரியாமல், வீட்டு வாசலில் அமர்ந்து நம் விளையாடுவதை வேடிக்கை பார்த்தனர்…

♥ஊர வைத்த அரிசியை ஆட்டுக்கல்லில் போட்டு அம்மா இட்லிக்கு மாவை அரைத்தார்…

♥அதிகபட்ச அப்பாக்களுக்கு சிகரெட் மற்றும் குடிப்பழக்கம் இல்லாமல் இருந்தது…

♥ஞாயிற்றுகிழமை மதியம், தூர்தர்ஷன் மாநில மொழி திரைப்படத்தில் தமிழ் படம் வராதா என ஏங்கி இருக்கிறோம்…

♥ஞாயிறு மாலை டிவியில் திரைப்படம் பார்ப்பதால் தெருவில் ஈ காக்கைகள் கூட பார்க்க முடியாத சூழ்நிலை இருந்தது…

♥ஞாயிறு பார்த்த படத்தை பற்றிய விவாதம் திங்களன்று பள்ளி நண்பர்களிடத்தில் தொடர்ந்துகொண்டே இருந்தது…

♥உறவினர்கள் வீட்டிற்கு வந்தால் அவர்களுக்காக வாங்கிய குளிர்பானத்தில் நமக்கும் கொஞ்சம் தருவார்கள் என காத்து கொண்டிருந்தோம்…

♥தீபாவளி ரம்ஜான் என பண்டிகை காலங்களில் புதுத்துணி எடுக்க குடும்பத்துன் ஒன்றாக சேர்ந்து போனோம்… அம்மா அப்பா வாங்கி கொடுத்த துணியை மட்டுமே அணிந்து அழகு பார்த்தோம்…

♥ஒரு தெருவிற்கு இரண்டு பேர் காதலிப்பதே அபூர்வமாக இருந்தது… அன்றைய காதலர்கள் காதலில் தோற்றால் தற்கொலை செய்துகொண்டனர்…

♥பண்டிகை காலம் வந்தால் வாழ்த்து அட்டை (க்ரிட்டிங் கார்டு) வாங்க கடைகளில் அலை மோதினோம்…

♥10வது மற்றும் 12வது ரிசல்ட் பார்க்க தினத்தந்தி வாசலில் தவம் கிடந்தோம்…

♥யாராவது செல்போன் (சாதாரண 1100) வைத்திருந்தால் அதை ஆச்சரியமாக வாங்கி தொட்டு பார்த்தோம்…

♥நம் அக்காவும் தங்கையும் குதிரை வால் சடை போட்டு வீதிகளில் வலம் வந்தனர்…

♥பணக்கார வீட்டு இளம் பெண்கள் BSA SLR சைக்கிள் வைத்திருந்தார்கள்…

♥10ல் குறைந்தபட்ச 8 வீட்டில் உள்ள குழந்தைகளிடம் உண்டியல் பழக்கம் இருந்தது…

♥போன கரண்ட் திரும்ப வந்ததும் கை தட்டி ஆரவாரப்படுத்தினோம்…

♥வருடத்திற்கு ஒருமுறை குடும்பத்துடன் சினிமாவுக்கு போவதே பெரிய விஷயமாக இருந்தது…

♥வீட்டில் யாருக்காவது திருமணம் நடந்தால், கிடைக்காத எதோ ஒரு அபூர்வ பொருள் கிடைத்தது போல் மிகுந்த மகிழ்ச்சிடன் காணப்பட்டோம்…

♥ஊருக்கே ஒருவரோ இருவரோதான் வெளிநாட்டில் வேலை பார்ப்பவராக இருந்தார்…

♥10ல் 8 கன்னிப் பெண்களின் தார்மீக ஆடை தாவணியாக இருந்தது…

♥10ல் 8 ஆண்களிடத்தில் வேஷ்டி கட்டும் பழக்கம் இருந்தது…

♥பள்ளி விடுமுறை காலத்தை வெளியூரில் உள்ள தாத்தா, மாமா, சித்தப்பா, பெரியப்பா வீட்டிற்கு சென்று விழா போல கொண்டாடினோம்…
♥கிணற்றில் குளிக்கும் பழக்கம் இருந்தது…
பலருக்கு நீச்சல் தெரிந்திருந்தது…
அடிக்கடி காய்ச்சல், தலைவலி வந்தது கிடையாது…

♥பலசரக்கு கடைகளுக்கு போகும்போது மஞ்சள் பைகளையே உபயோகித்தோம்…

♥தரையில்தான் அதிகபட்சம் உறங்கினோம்… பாயை தவிர வேறொன்றை கண்டதில்லை…

♥12 மணி நேரம் உழைத்தாலும் உடலில் வியர்வை நாற்றம் வந்தது கிடையாது…

♥இவை அனைத்தையும் விட அப்பா அம்மா சொல்படி கேட்டு அனைவரும் நடந்தோம்…

♥உலகிலுள்ள அத்துனை வசதிகளும் அருகிலேயே இருந்தால் கூட, இன்று இவற்றில் ஒன்று கூட சாத்தியமில்லை… பழைய பொக்கிஷங்கள் ஒன்று கூட கிடைக்கப் போவதில்லை… அன்றைய வாழ்நாள்தான் சொர்க்கம்

தென்னிந்தியாவின் ராபின் ஹூட் என இங்கிலாந்து ஊடகங்களால் புகழப்பட்ட ,தென்னாட்டு சிங்கம்,வீர தமிழன்மாவீரன் வடலிவிளை செம்புல...
14/01/2025

தென்னிந்தியாவின் ராபின் ஹூட் என இங்கிலாந்து ஊடகங்களால் புகழப்பட்ட ,
தென்னாட்டு சிங்கம்,வீர தமிழன்
மாவீரன் வடலிவிளை செம்புலிங்கம் அவர்கள் பிறந்த மண்ணான திருநெல்வேலி மாவட்டம் வடலிவிளை கிராமத்தில் நடைபெரும் பொங்கல் விழாவில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் இளவட்டக்கல் தூக்கி தமிழர்களின் பாரம்பரிய வீரத்துக்கு வாழும் சான்றாக இன்றளவும் திகழ்கின்றனர்.🔥🔥🔥

நெல்லை தூத்துக்குடி மாவட்டத்துல இதுக்கு பேரு பேச்சுவழக்குல சருவ சட்டி .அதாவது கல்யாணம் ஆகி ஒரு பொண்ணு போகும்போது  புகுந்...
14/01/2025

நெல்லை தூத்துக்குடி மாவட்டத்துல இதுக்கு பேரு பேச்சுவழக்குல சருவ சட்டி .
அதாவது கல்யாணம் ஆகி ஒரு பொண்ணு போகும்போது புகுந்த வீட்ல வாசல் தெளிக்க(சாணிகரைச்சிதான்)இத சீதனமா கொண்டு வருவாங்க .

இதுல நான் கரைச்சதும் இல்ல தெளிச்சதும் இல்ல .ஏன்னா தூக்க முடியாத வெயிட் .பொங்கல் அப்போ மட்டும் கழுவி பரண்ல போட்ருவேன் .

இதுல சில்வர்லயும் இருக்கு .முன்னாடிலாம் வீட்ல வச்சித்தான் கல்யாணம் பண்ணுவாங்க அப்போ சோறு குழம்பு முக்கியமா அவியல் பரிமாற இத யூஸ் பண்ணுவாங்க ..

இதோட ஒரிஜினல் பெயர் தெரிஞ்சா சொல்லுங்க

இதுவா உங்க சிக்கனம்!நாற்பது ஐம்பது ரூபாய்க்கு பார்க்க வேண்டிய திரைப்படத்தை இருநூறு முன்னூறு ரூபாய் செலவு செய்து மல்டி பி...
14/01/2025

இதுவா உங்க சிக்கனம்!

நாற்பது ஐம்பது ரூபாய்க்கு பார்க்க வேண்டிய திரைப்படத்தை இருநூறு முன்னூறு ரூபாய் செலவு செய்து மல்டி பிளெக்ஸ்ல பார்க்கும் போது வராத சிக்கனம்!

இருபது முப்பது ரூபாய் கொடுத்து சாப்பிட வேண்டிய சாதாரண உணவை ! முன்னூறு நானூறு செலவு செய்து நட்சத்திர ஹோட்டலில் சாப்பிடும்போது வராத சிக்கனம்!

முன்னூறு ரூபாய் பேரும் உடுப்புகளை மூவாயிரம் கொடுத்து பெரிய ரீடெயில் ஷாப்பில் வாங்கும் போது வராத சிக்கனம்!

பத்து ரூபாய் பெருமானம் உள்ள காபியை! முன்னூறு ரூபாய் கொடுத்து காஃபி ஷாப்பில் குடிக்கும்போது வராத சிக்கனம்!

பக்கத்து தெருவில் பூ விற்கும் பாட்டியிடமும்!

வீட்டிடிற்கே வந்து காய்கறி கொடுக்கும் தத்தாவிடமும்!

ஐந்து ரூபாய் சேர்த்து கேட்கும் செருப்பு தைப்பவனிடமும் குறைத்து கேட்டு பெறுவதில் தான் சிலரது சிக்கனம் நிறைந்து இருக்கு!

இனிமேல் இதுபோன்ற வியாபாரிகளிடம் பேரம் பேச மாட்டேன் என்பவர்கள் ஒரு லைக் போடுங்க நன்றி

மூக்கில் விரல் வைக்கும் முப்பரிமாண ஓவியம் 👏👏
14/01/2025

மூக்கில் விரல் வைக்கும் முப்பரிமாண ஓவியம் 👏👏

 #பதிமுக_நீர்..... ⚜ ⚜ கேரளாவில் எந்த ரோட்டுக்கடையாக இருந்தாலும், மதிய உணவு ஓட்டல், நட்சத்திர ஓட்டல் என்று எங்கு போனாலும...
13/01/2025

#பதிமுக_நீர்..... ⚜ ⚜
கேரளாவில் எந்த ரோட்டுக்கடையாக இருந்தாலும், மதிய உணவு ஓட்டல், நட்சத்திர ஓட்டல் என்று எங்கு போனாலும் குடிப்பதற்கு ஒரு வாசனை வெந்நீரை கொடுக்கிறார்கள். வெளியூரிலிருந்து வந்து நாசுக்கு பார்க்கும் வாடிக்கையாளரைக் கூட நம்பிக்கையுடன் குடிக்க சொல்கிறார்கள். வாட்டர் பாட்டிலை நீட்டுவதில்லை .
சரி கடைகள்தான் என்றால் கோயில் அன்னதானத்திலும் இதுதான். வீடுகளிலும்..... எங்கும். எதிலும். 🥀🍂
கொஞ்சம் விசாரித்ததில் எவருக்கும் ஏன் செய்கிறோம் என்று தெரியவில்லை. அந்தளவு பல காலமாக நடைமுறையில் பழகிவிட்டது. குடிதண்ணீர் என்றாலே அவர்களுக்கு மூலிகை தண்ணீர்தான். பருவம் மாறும்போது தண்ணீரினால் நோய்வராமல் இருக்க என்று ஒரு ஒட்டல்காரர் சொன்னார்..
சரி என்று அவர்கள் என்னதான் போடுகிறார்கள் என்று தீர விசாரித்து அதையே மளிகை கடையில் கேட்டதில் கிடைத்தது இந்த 4 வித மூலிகை பொட்டலங்கள்.இதில் அப்படி என்ன இருக்கிறது ?
அ) பதிமுகம் பட்டை (அதுதான் சிவப்பு வண்ணத்தை கொடுக்கிறது). (சிறுநீரக தொல்லை நீங்கும்)
ஆ) சொர்க்க மரம் (சைமரூபா கிளாக்கா). கான்சர் வராதாம்.
இ) கங்களி இன்ன பிற மூலிகைகள்.🌱🍃
பழக்கத்தில் (ஜீரோ பாக்டீரியா) பன்னாட்டு கம்பெனியின் மினரல் வாட்டர் பாட்டிலை கேட்டாலும் அவர்கள் அதை நமக்கு விற்காமல் இதை இலவசமாக குடிக்க சொல்கிறார்கள். மெச்ச வேண்டும்.
எங்கேயோ பூமிக்கு பின்புறத்தில் இருக்கும் அமெரிக்காவை காப்பியடிக்கும் நமக்கு பக்கத்து ஊரில் இருக்கும் மலையாளத்தானை நல்ல விஷயத்துக்கு அட்டை காப்பி அடிப்பது தவறா ? அடிப்போம் ?
இந்த பொட்டலங்கள் ஒவ்வொன்றும் 25/- முதல் 60/- வரை விற்கிறது. 5 லிட்டர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் போட்டால் போதும்.
பொது நலன் கருதி வெளியீடு.. இயற்கையாகவே வாழப் பழகு இயற்கை உணவை உட்கொண்டு.

திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவில் யானை காந்திமதி வயது முதிர்வு மற்றும் உடல் நல குறைவால் இன்று காலை காலமானது. இதனை அ...
12/01/2025

திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவில் யானை காந்திமதி வயது முதிர்வு மற்றும் உடல் நல குறைவால் இன்று காலை காலமானது. இதனை அடுத்து யானையை பொதுமக்கள் அஞ்சலி.செலுத்துவதற்காக எடுத்து செல்லப்பட்டது 💔

நெல்லையப்பர் கோவில் யானை இன்று காலை மரணம்… அதன் வயசு சுமார் 55 என கூறப்படுகிறது..
12/01/2025

நெல்லையப்பர் கோவில் யானை இன்று காலை மரணம்… அதன் வயசு சுமார் 55 என கூறப்படுகிறது..

திருச்செந்தூர் கடலின் கடற்கரை அழகு
12/01/2025

திருச்செந்தூர் கடலின் கடற்கரை அழகு

இதுவா உங்க சிக்கனம்!நாற்பது ஐம்பது ரூபாய்க்கு பார்க்க வேண்டிய திரைப்படத்தை இருநூறு முன்னூறு ரூபாய் செலவு செய்து மல்டி பி...
11/01/2025

இதுவா உங்க சிக்கனம்!

நாற்பது ஐம்பது ரூபாய்க்கு பார்க்க வேண்டிய திரைப்படத்தை இருநூறு முன்னூறு ரூபாய் செலவு செய்து மல்டி பிளெக்ஸ்ல பார்க்கும் போது வராத சிக்கனம்!

இருபது முப்பது ரூபாய் கொடுத்து சாப்பிட வேண்டிய சாதாரண உணவை ! முன்னூறு நானூறு செலவு செய்து நட்சத்திர ஹோட்டலில் சாப்பிடும்போது வராத சிக்கனம்!

முன்னூறு ரூபாய் பேரும் உடுப்புகளை மூவாயிரம் கொடுத்து பெரிய ரீடெயில் ஷாப்பில் வாங்கும் போது வராத சிக்கனம்!

பத்து ரூபாய் பெருமானம் உள்ள காபியை! முன்னூறு ரூபாய் கொடுத்து காஃபி ஷாப்பில் குடிக்கும்போது வராத சிக்கனம்!

பக்கத்து தெருவில் பூ விற்கும் பாட்டியிடமும்!

வீட்டிடிற்கே வந்து காய்கறி கொடுக்கும் தத்தாவிடமும்!

ஐந்து ரூபாய் சேர்த்து கேட்கும் செருப்பு தைப்பவனிடமும் குறைத்து கேட்டு பெறுவதில் தான் சிலரது சிக்கனம் நிறைந்து இருக்கு!

இனிமேல் இதுபோன்ற வியாபாரிகளிடம் பேரம் பேச மாட்டேன் என்பவர்கள் ஒரு லைக் போடுங்க நன்றி.

மீண்டும் வெற்றிலை பாக்கு போடும் பழக்கத்தை ஆரம்பியுங்கள்  அனைவருக்கும் .சொல்லுங்கள் மலட்டுத்தன்மை அறவே இல்லை. கேன்சர் இல்...
11/01/2025

மீண்டும் வெற்றிலை பாக்கு போடும் பழக்கத்தை ஆரம்பியுங்கள் அனைவருக்கும் .சொல்லுங்கள்

மலட்டுத்தன்மை அறவே இல்லை. கேன்சர் இல்லை,
சர்க்கரை வியாதி இல்லை,
இதய நோய்கள் இல்லை .....
வெற்றிலை பாக்கு போடுவதை கெட்ட பழக்கமாகவும் சாராயம் குடிப்பதை சாதாரண பழக்கமாகவும் மா(ற்)றிய குடிகாரர்களின் கூடாரமாய் ஆண்மையிழந்து இயலாதவர்களாய்த் தமிழ்ச் சமூகத்தின் இன்றைய இளைஞர்கள்.

தமிழ்க் கலாச்சாரத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பது "தாம்பூலம்" எனப்படும் வெற்றிலை, பாக்கு. தமிழனின் பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள அனைத்து சடங்கு சம்பிரதாயங்களிலும் தவறாமல் இடம் பெரும் ஒரு பொருள் வெற்றிலை பாக்கு, வெறும் வெற்றிலை பாக்கு மட்டுமே மாற்றி ஒரு திருமணத்தையே நிச்சயம் செய்து விடுவான் தமிழன்.

வெற்றிலை பாக்கு போட்டு வளர்ந்த தாத்தா பாட்டி காலத்தில்
கேன்சர் இல்லை, சர்க்கரை வியாதி இல்லை, இதய நோய்கள் இல்லை
முக்கியமாக மலட்டுத்தன்மை அறவே இல்லை.

ஆக வெற்றிலை, பாக்கு என்பது பல நோய்களைத் தீர்க்கும் ஒரு அருமருந்து என்பது தமிழினத்துக்கு தெரிந்திருந்ததால் தான், அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறான் தமிழன்.

கலாச்சாரச் சீரழிவும், அன்னிய மோகமும் சேர்ந்து தாம்பூலத்தைக் கெட்ட பழக்கமாக சித்தரித்து நம் இனத்தை நோயாளிகளாய் அலைய விட்டிருக்கிறது.

வெற்றிலையின் மகத்துவத்தை தமிழனை மறக்கடிக்கச் செய்து தம்பதிகளை fertility Centre ( கருத்தரிப்பு மையம்)களை நோக்கி படையெடுக்க வைத்திருக்கிறது.

வாயில் கேன்சர் வந்திடும், பல்லு கரை போகவே போகாது, தவிர "டேய்.. இன்னும் பழைய ஆள் மாதிரி வெத்தலையை போட்டு கிட்டு..
எனச் சொல்லிச் சொல்லியே வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் நம்மிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைக்கப்பட்டு விட்டது.

வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு அதிலும் கல் சுண்ணாம்பு, முத்துச்சிப்பி சுண்ணாம்பு என வித்தியாசம் காட்டி அது மட்டுமா ஏலக்காய், கிராம்பு, சாதிக்காய், என வாசனைப் பொருட்கள் கலந்து வாயில் இட்டு சுவைத்து, முதலில் ஊறும் நீரும், இரண்டாவது ஊறும் நீரையும் துப்பிவிட வேண்டும் என்றும், மூன்றவதாய் ஊறும் நீரே அமிர்தம் என தாம்பூலம் இட்ட வழி முறைகள் சொன்ன சித்த மருத்துவம் இருந்த ஊரில், "ஆங்.. தாம்பூலமா அப்படின்னா?", எனக் கேட்கும் அடுத்த தலைமுறை வந்து விட்டது,

பெருகி வரும் ஆண் மலட்டுத் தன்மை குறிப்பாக விந்தணு உற்பத்தி மற்றும் அதன் Motility குறைதல் இவற்றுக்கு தாம்பூலம் மிக சிறந்த மருந்து.
வெற்றிலையில் உள்ள Hydroxy Chavicol எனும் Phenol Compound ஆனது ஆண்களின் Prostate-ஐ வலுப்படுத்துகிறது, மேலும் Prostate புற்று வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது,

விதைப்பையில் உற்பத்தியாகும் விந்தணுவிற்கு Prostate-ல் இருந்து சுரக்கும் நீரில் உள்ள Zinc மூலம் தான் உயிரே கிடைக்கிறது, அதாவது Motility உண்டாகிறது, IVF நிகழ்வில் விந்தின் Capacitation நிகழ்வும் முக்கியம், அந்த Capacitation நடக்க Prostate சுரப்பு ரொம்ப முக்கியம் , இதையெல்லாம் தெரிந்ததால் தானோ என்னவோ காதல் மனைவி ஊட்டி விடும் தாம்பூலத்தைச் சிலாகித்துப் பேசியிருக்கிறார்கள் போல,
மலச்சிக்கலா, தாம்பூலத்துடன் கொஞ்சம் அதிகம் பாக்கைச் சேர், வாய் நாற்றமா, லவங்கத்தைச் சேர், வீரியம் வேண்டுமா, சாதிக்காய் சேர் எனச் சொன்ன தமிழ்ச் சமூகம் இன்று Infertility center-களில் முடங்கி கிடக்கிறது.

அடுத்த தலைமுறைக்கு இனியாவது தாம்பூலத்தின் மகத்துவத்தை எடுத்துரைப்போம்...!!

கடல் மட்டத்திலிருந்து உயரத்தை அளவிடும் போது 8848.86 m  உயரமுடைய எவரெஸ்ட் மலை உலகின் மிக உயரமான மலையாக கருதப்படுகிறது. இர...
11/01/2025

கடல் மட்டத்திலிருந்து உயரத்தை அளவிடும் போது 8848.86 m உயரமுடைய எவரெஸ்ட் மலை உலகின் மிக உயரமான மலையாக கருதப்படுகிறது. இருப்பினும், உண்மையான பெரிய மலையாக ஹவாயில் உள்ள மௌனா கீ (Mauna kea) கடலின் அடிவாரத்தில் இருந்து அதன் உச்சி வரை, 10,210 மீட்டர் உயரத்தினை கொண்டது கிட்டத்தட்ட 1,400 மீட்டர் உயரத்தினால் எவரெஸ்ட்டை விட அதிக உயரமுடையது . மௌனா கீயின் (mauna kea) மேல் பகுதி மட்டுமே கடல் மட்டத்திலிருந்து 4,207 மீட்டர் உயரத்தில் நீரின் மேற்பரப்பிற்கு மேலே உள்ளது . எவரெஸ்ட் உலகின் மிக உயரமான மலையாக உள்ளது, ஆனால் மொத்த உயரத்தைக் கருத்தில் கொள்ளும்போது mauna kea மௌனா கீதான் உண்மையான மிக உயரமுடைய மலையாகும் - இது பசிபிக் பெருங்கடலில் மறைந்துள்ள மிகப்பெரிய மலையாகும்

வாழ்கை வாழ்வதற்கே...இட்லியை ஆசையுடன் பார்த்தோம் பண்டிகை நாட்களில் மட்டும்கறிக்கடை ஊருக்கு ஒன்று மட்டும் தான் இருந்ததுநண்...
09/01/2025

வாழ்கை வாழ்வதற்கே...

இட்லியை ஆசையுடன் பார்த்தோம் பண்டிகை நாட்களில் மட்டும்

கறிக்கடை ஊருக்கு ஒன்று மட்டும் தான் இருந்தது

நண்பர்களோடு எதையும் எதிர்பாராமல் தூய நட்பாய் பழகினோம்

ஒரு சினிமா பார்க்க ஒப்புதலுக்கு
ஒரு வாரம் தவம் கிடந்தோம்
அந்த காலம் தான் நன்றாக இருந்தது..

ஆரத்தி எடுக்க போட்டி போட்ட மதினிமார்கள் இருந்தார்கள்..

தாய்க்கு நிகராய் காவல் காத்த தாய் மாமன்கள் இருந்தார்கள்..

ஜரிகை குறைவான வேட்டி வாங்கி தந்ததற்காக சண்டை போட்ட பங்காளிகள் இருந்தார்கள்..

இழவு விழுந்த வீடுகளில் உறவினர் இடுகாடு வரை போனார்கள்..

அடுத்தடுத்து பெண்களுக்கு திருமணம் செய்தும்

மாறி மாறி பிள்ளைப் பேற்றிற்கு பெண்கள்

வந்தாலும் அம்மாக்கள் ஓய்வின்றி உழைத்தார்கள்

ஐந்தாறு பிள்ளைகள் இருந்தாலும் அப்பாவிற்கு மன அழுத்தங்கள் இல்லை..

ஒரே சோப்பை குடும்பம் முழுதும் உபயோகித்தும் தோல் நோய்கள் வரவில்லை..

கண்டதை உண்டாலும் செரித்தது.

தொலைக்காட்சி செய்திகளில் உண்மை இருந்தது..

பண்டிகை க்கு ஒரு மாதம் முன்பே ஆர்வமுடன் தயாரானோம்

உடுத்த புதுத்துணி கையில் தரும் போது ஆஸ்கார் விருது வாங்கும் கலைஞன் போல் உணர்ந்தோம்

ஃபேன் இல்லாமல் உறக்கம்.வந்தது..

எங்கோ ஏதோ ஒரு மூலையில் மருத்துவமனையும் ஹோட்டலும். இருந்தது..

வெயிலாலும் மழையாலும் பாதிப்பு இல்லை..

பிள்ளைப்பேறு செலவில்லாமல் சுகமாய் இருந்தது..

கல்வி கட்டணம் இல்லாமல் கிடைத்தது..

மாணவர்கள் ஆசிரியரிடம் அன்பாய் பணிவாய் இருந்தார்கள்..

ஆசிரியைகளிடம்.
எளிமை இருந்தது..

படுக்கையை எதிர்பாராமல் பாயில்
உறங்கினோம்

தாத்தா பாட்டி சொல்லும் கதை கேட்டுகொண்டே
அவர்கள் மடி மீது தான் நாம் உறங்கிய தருணம் கண்டோம்

பெரியப்பா சித்தப்பா உரிமையோடு அடித்தார்கள் நம் தப்பை சரி செய்ய

பெரிவர்களின் உடையைப் போட தயங்கியதில்லை..

அப்பா சொன்னால் அந்த வார்த்தை மறுக்காமல் ஏற்கப்பட்டது..

பெண் பார்க்க வந்தவனை பிடித்திருக்கிறது என்று சொல்ல வெட்கப்பட்டோம்...

காவிரிக் கரையில் பயமின்றி குளித்தோம் ஆற்று நீர் சுத்தமாய் இருந்தது..

பையில் இருக்கும் ஐந்து ரூபாய் க்கு அளவில்லா ஆனந்தம் கொண்டோம்

ஹோட்டலில் தாத்தா ஆசையோடு வாங்கி தரும் பூரி மசாலா க்கு எல்லையில்லாத மகிழ்ச்சி கண்டோம்

செல்போன் எதுவும் இல்லை
ஆனாலும் பேசிய நேரத்தில் வந்து சேர்ந்தனர் நண்பர்கள்

ஆசிரியர் மீது அசாத்திய மரியாதை இருந்தது

தாவணியில் தேவதைகளாக இளம் பெண்கள்..

காதுகளை ரணமாக்காத இனிய பாடல் இசை கேட்டோம்

ஒரே குச்சி ஐஸ் வாங்கி எந்த சங்கோஜமும் இல்லாமல் நண்பர்கள் ஆளொக்கொரு கடி கடித்து சுவைத்தோம்..

ஆண்கள் தான் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுத்தார்கள்..

மிகச்சிறிய வயதில் எல்லாம் பால் பேதங்கள் தோன்றவில்லை..

மொத்தத்தில் அப்போது வாழ்ந்தார்கள்.. இப்பொழுது வசிக்கிறோம் அவ்வளவே...

Address

Tirunelveli
Tirunelveli
627001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tirunelveli Pasanga La posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tirunelveli Pasanga La:

Share