நம்ம திருப்பத்தூர்/Namma Tirupattur

நம்ம திருப்பத்தூர்/Namma Tirupattur Get updates from our Thirupattur District

*BREAKING:* பத்திரமாக தரையிறங்கியது ஏர் இந்தியா விமானம்வானில் பல மணி நேரம் வட்டமடித்த ஏர் இந்தியா விமானம் திருச்சி விமான...
11/10/2024

*BREAKING:* பத்திரமாக தரையிறங்கியது ஏர் இந்தியா விமானம்

வானில் பல மணி நேரம் வட்டமடித்த ஏர் இந்தியா விமானம் திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது.

141 பயணிகளுடன் திருச்சி விமான நிலையத்தில் விமானம் பத்திரமாக தரையிறங்கியது.

03/10/2024
ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் பணியின் போது சாரம் சரிந்து விழுந்து விபத்து.ஒருவர் படுகாயம், 4 பேர் காயம்.திருப்பத்...
22/09/2024

ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் பணியின் போது சாரம் சரிந்து விழுந்து விபத்து.ஒருவர் படுகாயம், 4 பேர் காயம்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை கட்டுபடுத்த ஓ.ஏ.ஆர். திரையரங்கம் முதல் சான்றோர்குப்பம் வரை ரூபாய் 142 கோடி செலவில் மேம்பாலம் கட்டுமான பணி கடந்த 2 ஆண்டுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.

இப்பணியில் வட மாநிலத்தை சார்ந்த 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஷிப்ட் முறையில் இரவு பகலாக பணி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று இரவு பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில், மேம்பாலம் கட்டுமான பணிக்காக அமைத்துள்ள சாரம் திடீரென சுமார் 25 மீட்டர் அளவிற்கு சரிந்து விழுந்தது.

இந்த விபத்தில் பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி நரேஷ் என்பவர் படுகாயம் அடைந்தார்.4 பேர் காயம் அடைந்தனர். காயம் மற்றும் படுகாயம் அடைந்தவர்களை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நகர போலீஸார் சாரம் சரிந்து விழுந்த பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதை தொடர்ந்து போக்குவரத்து சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

விபத்து குறித்து நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேம்பாலம் பணிக்காக போடப்பட்ட சாரம் சரிந்து விழுந்ததால் பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 70 வயது முதியவர் கைது!
21/09/2024

13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 70 வயது முதியவர் கைது!

ஆம்பூர் அருகே நண்பனின் 2 ஆண் குழந்தைகளை  அழைத்துச்சென்று, கொலை செய்து கோவிலின் பின்புறம் வீசிச்சென்ற நபர் கைது ஆம்பூர் க...
20/09/2024

ஆம்பூர் அருகே நண்பனின் 2 ஆண் குழந்தைகளை அழைத்துச்சென்று, கொலை செய்து கோவிலின் பின்புறம் வீசிச்சென்ற நபர் கைது ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் விசாரணை

வறுமையை கல்வியால் வென்ற மாணவன்!
28/08/2024

வறுமையை கல்வியால் வென்ற மாணவன்!

ஆம்பூர் அருகே மலைச்சாலையில் மீண்டும் ஒற்றை யானை நடமாட்த்தால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம். திருப்பத்தூர் மாவட...
23/07/2024

ஆம்பூர் அருகே மலைச்சாலையில் மீண்டும் ஒற்றை யானை நடமாட்த்தால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி ஊராட்சிக்குட்பட்ட பனங்காட்டேரி மலைச்சாலையில் ஒற்றை யானை கடந்த இரண்டு நாட்களாக சாலையில் சுற்றித்திரிந்தும் அங்குள்ள விவசாய நிலங்களில் உள்ள மாமரம் மற்றும் வாழை செடிகளை சேதப்படுத்தி வருகிறது.
மேலும் ஆம்பூரில் இருந்து பனங்காட்டேரி செல்லும் மலைச்சாலையில் யானை வருவதைக் கண்டு வாகன ஓட்டிகள் சிலர் அச்சமடைந்து அவசர அவசரமாக திரும்பியுள்ளனர்.

மாலை சாலையில் யானை நடமாட்டம் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் ஆம்பூர் வனச்சரக அலுவலர் பாபு தலைமையிலான வனத்துறையினர் மலை சாலையில் சுற்றி திரிந்த ஒற்றை யானையை ஆலங்காயம் மற்றும் ஜமுனாமுத்தூர் காப்புக்காடு பகுதிக்கு பட்டாசு வெடித்து விரட்டியுள்ளனர்.

வாணியம்பாடி அருகே தனியார் உணவகத்தில் இட்லிக்கு கொடுத்த சட்னியில் பல்லி. டிபன் சாப்பிட்ட 4 குழந்தைகள் உட்பட 8 பேர் முன் எ...
12/07/2024

வாணியம்பாடி அருகே தனியார் உணவகத்தில் இட்லிக்கு கொடுத்த சட்னியில் பல்லி. டிபன் சாப்பிட்ட 4 குழந்தைகள் உட்பட 8 பேர் முன் எச்சரிக்கையாக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை.

வாணியம்பாடி, ஜூலை.12- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பத்தாப்பேட்டை பகுதியை சேர்ந்த சுப்பிரமணி(70).இவர் நேற்று உடல்நிலை குறைவால் மரணமடைந்தார்.

இவருடைய துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவருடைய உறவினர்கள் ஆம்பூரில் இருந்து வந்துள்ளனர்.

அப்போது பத்தாப்பேட்டை பகுதியை சுபாஷ் என்பவர் மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து சாலை ஓரத்தில் இருந்த உணவகத்தில் இருந்து இட்லி வாங்கி வந்துள்ளார். இதனை 4 குழந்தைகள் உட்பட 8 பேர் உட்கொண்டு இருந்த போது இட்லிக்கு கொடுத்த சட்னியில் பல்லி இறந்து கிடைப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக டிபன் சாப்பிட்ட 8 பேரும் முன் எச்சரிக்கையாக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கிராமிய போலீஸார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஆகியோர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆம்பூர் அருகே ஒற்றைக் காட்டி யானை நடமாட்டத்தால் காப்புக்காட்டை ஒட்டியுள்ள பொதுமக்கள், மலை மலைவாழ் மக்கள் இரவு நேரங்களில்...
25/06/2024

ஆம்பூர் அருகே ஒற்றைக் காட்டி யானை நடமாட்டத்தால் காப்புக்காட்டை ஒட்டியுள்ள பொதுமக்கள், மலை மலைவாழ் மக்கள் இரவு நேரங்களில் வெளியில் நடமாடும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

வாணியம்பாடி,ஜூன்.25- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வனச்சரகம், பனங்காட்டேரி மலை கிராமத்தை ஒட்டியுள்ள பகுதிகளின் வழியாக வயது முதிர்ந்த ஆண் யானை ஒன்று தனது வழக்கமான பாதையில் வந்து, நேற்றிரவு சாணாங்குப்பம் காப்புக்காடு, எட்டி குட்டை பகுதியில் தங்கியுள்ளது.

கடந்த 45 வருடங்களுக்கு மேலாக தனது வழக்கமான பாதைகளில் இந்த ஒற்றை தந்தம் உடைய ஆண் யானை வந்து செல்லுகிறது. ஆனால் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் எந்த செயல்களிலும் யானை ஈடுபட்டதில்லை.

கண்பார்வை சற்று குறைந்த நிலையிலும் தனக்கு தேவையான உணவுக்காக மட்டுமே காப்புக்காட்டை ஒட்டியுள்ள பகுதிகளில் நடமாடும். மற்ற நேரங்களில் அடர்ந்த வன பகுதிக்குள் இருக்கும்.

யானை நடமாட்டம் குறித்து வனத்துறையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதால் பொது மக்கள் அச்சமடைய வேண்டாம். எச்சரிக்கையுடன் இருந்தால் போதுமானது.

காப்புக்காட்டை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், மலை கிராமங்களில் உள்ள மலைவாழ் மக்கள் இரவு நேரங்களில் வெளியில் நடமாடும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

யானை நடமாட்டம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக 97862 54998 எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும் என்று ஆம்பூர் வனச்சரக அலுவலர் எம்.பாபு கேட்டுக் கொண்டுள்ளார்.

யானையின் படம் கூகுள் செயலி. நன்றி.

திருப்பத்தூரில்தனியார் பள்ளிக்குள் நுழைந்து முதியவரை தாக்கி, பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை 15 மணி நேர போராட்டத்தி...
15/06/2024

திருப்பத்தூரில்தனியார் பள்ளிக்குள் நுழைந்து முதியவரை தாக்கி, பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை 15 மணி நேர போராட்டத்திற்கு பின் பிடிபட்டது!

| |

14/06/2024

திருப்பத்தூர் அருகே சாரைப்பாம்பை சமைத்து சாப்பிட்ட இளைஞர் கைது - வனத்துறை அதிரடிதிருப்பத்தூர் அருகே உள்ள பெருமாபட்டு பகு...
12/06/2024

திருப்பத்தூர் அருகே சாரைப்பாம்பை சமைத்து சாப்பிட்ட இளைஞர் கைது - வனத்துறை அதிரடி
திருப்பத்தூர் அருகே உள்ள பெருமாபட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவர் சாரைப்பாம்பு ஒன்றை அடித்து கொன்றுள்ளார். அதோடு அந்த பாம்பின் தோலை உரித்து தண்ணீரில் அலசும் காட்சிகளை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ சமூக .வலைத்தளங்களில் வைரலாக பரவிய நிலையில் அவர் மீது வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அவரை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், சாரைப்பாம்பை சமைத்து சாப்பிட்டதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Address

Tirupattur
Tiruppattur
635601

Alerts

Be the first to know and let us send you an email when நம்ம திருப்பத்தூர்/Namma Tirupattur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category