
13/07/2025
அரிச்சந்திரா நாடகம் - வாழ்வில் ஆயிரம் கஷ்டங்கள் வந்தாலும் பொய்யே சொல்லாமல் வாழ்ந்த ஒரு மன்னனின் கதை இது.
56 தேசங்களை ஆண்ட மன்னன் பொய் சொல்லாத குற்றத்திற்காக நாடு, நகரை இழந்து, அரச பதவியை துறந்து, கடனுக்காக மனைவி மகனையும் விற்று, இறுதியில் தன்னையே ஒரு பிணம் எரிப்பவரிடம் (பஞ்சமர்) விற்று, அவருக்கு அடிமையாக வேலை செய்து,
செங்கோல் ஏந்தி ஆட்சி செய்த கையால் சுடுகோல் ஏந்தி சுடுகாட்டு பிணங்களை எரிக்கும் மன்னனின் கதை இது!