திருவண்ணாமலை & விழுப்புரம் MOnews

திருவண்ணாமலை & விழுப்புரம் MOnews சமூக ஆர்வலர்கள் மூலம் அரசுக்கும் மக்

பகவான் ரமண மகரிஷிகளின் அன்னை அழகம்மை சமாதி தினம் மஹா பூஜையாக ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீ ரமணாச்ரமத்தில் அனுசரிக்கப்படுகின்றது. ...
23/05/2025

பகவான் ரமண மகரிஷிகளின் அன்னை அழகம்மை சமாதி தினம் மஹா பூஜையாக ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீ ரமணாச்ரமத்தில் அனுசரிக்கப்படுகின்றது. இவ்வாண்டு 21/5/2025 அன்று ஆச்ரமத்தில் அமைந்துள்ள மாத்ருபூதேஸ்வரர் ஆலயத்தில் மஹா பூஜை சிறப்பாக நடைபெற்றது.

மகனின் திருக்கரத்தால் முக்தியடையும் பேறுபெற்ற அழகம்மையையின் சமாதி ஆலயமான மாத்ருபூதேச்வரர் ஆலயம் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
*** *** ***
பகவான் ரமண மகரிஷிகள் தமது 16 வயதில் இல்லம் துறந்து போனது அவரது தாயார் அழகம்மைக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. தன்னோடு ஊருக்குத் திரும்பிவரும்படி மன்றாடினார். ரமண மகரிஷிகள் அன்னைக்கு பதிலை கீழ்க்கண்டவாறு பொதுப்படையாக எழுதிக் காண்பித்தார்:

“அவரவர் பிராரப்தப் பிரகாரம் அதற்கானவன் ஆங்காங்கிருந்தாட்டுவிப்பான். என்றும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது; நடப்பது என் தடை செய்யினும் நில்லாது. இதுவே திண்ணம். ஆகலின், மௌனமாயிருக்கை நன்று.”
சில வருடங்களுக்குப் பிறகு, அன்னை அழகம்மை, தம் இறுதிக் காலத்தில் மகனுடனேயே தங்க விழைந்தபோது அதற்கு மறுப்பேதும் கூறாமல் ஒப்புக் கொண்டார் பகவான்.

பகவான் ரமண மகரிஷிகள் உடல் நலிவுற்ற அன்னையின் அருகில் அமர்ந்து ஸ்ரீ பகவான் தமது வலக்கரத்தை அன்னையின் இதயத்திலும் இடது கையைச் சிரசிலும் பதித்த வண்ணம் தாயின் மனதை அமைதிப் படுத்தி, அன்னைக்கு முக்தியருளினார். ‘தாயார் காலமாகிவிட்டாரா’ என்று கேட்ட அன்பருக்கு ‘அன்னை அருணாசலத்தில் கலந்தாள்’ என்று அன்னை முக்தியடைந்ததை உறுதி செய்தார். அன்னை முக்தியடைந்த அந்நாள் (மே 19, 1922) வைகாசி கிருஷ்ணபக்ஷ நவமி.

அன்னையையின் உடலை மலையிலிருந்து கீழே கொணர்ந்து தற்போதுள்ள இடத்தில் அன்னையின் உடலை சமாதி வைத்தனர். பின்னர் ஒரு ஆலயத்தை நிர்மாணித்து, மாத்ருபூதேச்வரர் ஆலயம் என்ற பெயரில் நித்ய பூஜைகள் மற்றும் வேதகோஷங்களுடன் ஒரு மகத்தான ஆலயமாக இலங்கிக் கொண்டிருக்கின்றது. தற்போதைய ரமணாச்ரமமும் உருவானது. இந்நன்நாளில் அன்னை அழகம்மை மற்றும் அருணாசல ரமணரை வணங்கி அருள் பெறுவோம்.

https://youtube.com/shorts/oRYDOuztdYQ?si=PPvCtrlEODzcvLX-
29/09/2024

https://youtube.com/shorts/oRYDOuztdYQ?si=PPvCtrlEODzcvLX-

#மக்கள்_ஊடக_மையம்-------------------------------------மக்களுக்கு உதவி செய்பவர்களையும், அரசின் நலத்திட்டங்களை மக்கள் பெற்றிடவும் உதவு...

வட்டார கிராமப்புற வங்கிகளில் (RRB) அதிகாரிகள் மற்றும் அலுவலக உதவியாளர்கள் பணிக்கான அறிவிப்பு வெளியீடு.தமிழ்நாட்டிற்கான க...
07/06/2024

வட்டார கிராமப்புற வங்கிகளில் (RRB) அதிகாரிகள் மற்றும் அலுவலக உதவியாளர்கள் பணிக்கான அறிவிப்பு வெளியீடு.

தமிழ்நாட்டிற்கான காலிப்பணியிடங்கள்:
அதிகாரிகள் - 110
அலுவலக உதவியாளர் - 377

விண்ணப்பிக்க கடைசி தேதி: 27-06-24
கூடுதல் விவரங்களுக்கு: www.ibps.in

சென்னை போக்குவரத்து விதிகள்... குறித்த உங்கள் கருத்தை பகிரலாம்...  பங்கேற்க விரும்பும் சென்னைவாசிகள் தொடர்புகொள்ளவும்...
31/05/2024

சென்னை போக்குவரத்து விதிகள்... குறித்த உங்கள் கருத்தை பகிரலாம்... பங்கேற்க விரும்பும் சென்னைவாசிகள் தொடர்புகொள்ளவும்...

🟩🟪🟦🟧🟩🟪🟩அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் (OMCL) (தமிழக அரசு நிறுவனம்) செவிலியர்களுக்கு இலவச அயலக மொழிப்பயிற்சி வகுப்ப...
30/05/2024

🟩🟪🟦🟧🟩🟪🟩

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் (OMCL) (தமிழக அரசு நிறுவனம்) செவிலியர்களுக்கு இலவச அயலக மொழிப்பயிற்சி வகுப்பிற்கு விண்ணப்பிக்கலாம் -மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி, தகவல்

*அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமாக பொது மற்றும் மறுவாழ்வுத்துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் சார்பாக 11062 திறன் மற்றும் திறனற்ற தொழில்முறை பணியாளர்கள் ஆஸ்திரேலியா, பக்ரைன், கனடா, குவைத். ஓமன் சுல்தான் ஐக்கிய ।। எமிரேட்ஸ், சவுதியரேபியா, லிபியா போன்ற நாடுகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், 5500 ற்கும் மேற்பட்ட மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் சவதியரேபியாவின் சுகாதார அமைச்சகத்திலும் மற்றும் அதிக அளவிலான வீட்டு பணியாளர்களை பணியமர்த்தப்பட்டுள்ளனர். குவைத்திலும்*

*ஜப்பான், ஜெர்மன் மற்றும் U.K. போன்ற நாடுகளில் பணிபுரிய விரும்பும் செவிலியர்கள் அயல்மொழித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றிருக்க வேண்டும். எனவே, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தால் ஜப்பான் மற்றும் ஜெர்மன் மொழிகளுக்கான இலவச அயல் மொழிப்பயிற்சி வகுப்புகள் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட இலவச அயல் மொழிப்பயிற்சி வகுப்புகளில் சேர விருப்பம் உள்ள செவிலியர்கள் உடன் கீழ்கண்ட சமூக வலைதலங்களையோ அல்லது தொலைபேசி வழியாகவோ தொடர்பு கொண்டு தங்களின் பெயர்களை பதிவு செய்து கொள்ளவும்*.

*(Whatsapp Number) 6379179200*

*2) https://omcmanpower.tn.gov.in/*

*3) https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdVNgjofeyVZdUIZd8nrtX2bQ 9b1whPvgsYEooMzr-CuYfUXg/viewform*

*4) அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்கள். 044-22502267 22505886.*

*விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த அயல்நாட்டில் பணிபுரிய விருப்பம் உள்ள செவிலியர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சிபழனி தெரிவித்துள்ளார்*.

நீர் நிலையை பாதுகாத்திட.. அம்பத்தூர் அருகே சோழம்பேடு அரபாத் ஏரியில் ஆகாயத்தாமரை அகற்றும் பணியில்...!ஊடக பங்களிப்புமக்கள்...
28/05/2024

நீர் நிலையை பாதுகாத்திட.. அம்பத்தூர் அருகே சோழம்பேடு அரபாத் ஏரியில் ஆகாயத்தாமரை அகற்றும் பணியில்...!

ஊடக பங்களிப்பு
மக்கள் ஊடக மையம்
IBC Tamil

Address

Makkal Oodaga Maiyam
Tiruvannamalai

Website

Alerts

Be the first to know and let us send you an email when திருவண்ணாமலை & விழுப்புரம் MOnews posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to திருவண்ணாமலை & விழுப்புரம் MOnews:

Share

Category