Udumalai Times

Udumalai Times உடுமலை செய்திகள்..

24/07/2025

தமிழக கேரள எல்லையில் கனமழை:

# திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணைக்கு அதீத உள்வரத்து ஏற்பட்டுள்ளது.

# 90 அடி உயரமுள்ள இந்த அணை நிரம்பும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் பிரதான ஷட்டர்கள் வழியாக தற்போது 3450 கன அடி தண்ணீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது.

# இதனால் அமராவதி ஆற்றின் கரையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மஸ்டர் ரோல் ஊழல் - உடுமலையில் அதிர்ச்சி: # சென்னை மாநகராட்சியில் சுமார் 60 வருடங்களுக்கு முன்பு நடந்த மஸ்டர் ரோல் ஊழல் உ...
24/07/2025

மஸ்டர் ரோல் ஊழல் - உடுமலையில் அதிர்ச்சி:

# சென்னை மாநகராட்சியில் சுமார் 60 வருடங்களுக்கு முன்பு நடந்த மஸ்டர் ரோல் ஊழல் உலகப் புகழ் பெற்றதாகும். இதே போல திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியங்களில் உள்ள 72 ஊராட்சிகளிலும் மஸ்டர் ரோல் ஊழல்
அதாவது 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்து வருவதாக புகார்கள் இருந்து வருகிறது.

# போலியாக வருகை பதிவேடு தயாரிப்பது, அதன் பெயரில் தொழிலாளர்கள் வேலைக்கு வந்ததாக போலி அட்டை போட்டும் கையெழுத்துப்போட்டும் வங்கி மூலம் பணம் கையாடல் செய்வது என குற்றச்சாட்டுகள் நீண்டு வருகிறது.

# இதன் மூலம் ஊராட்சி செயலாளர்கள், ஒன்றிய அதிகாரிகள் மக்கள் வரிப் பணித்தை கொள்ளை அடித்து வருவது நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது.

# இந்நிலையில் உடுமலை வட்டம் குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள கொண்டம்பட்டி ஊராட்சியில் மாவட்ட அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்படி மஸ்டர் ரோல் ஊழலில் சிக்கிய அலுவலர்கள் ஊழல் செய்தது ரூ.1 லட்சத்து 22 ஆயிரம் எனவும் இதை தொடர்புடைய அலுவலர்கள் அரசிற்கு செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

# இதே போல உடுமலை மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியங்களில் உள்ள 72 ஊராட்சிகளிலும் தனி அலுவலர்கள் நியமனம் செய்து 100 நாள் வேலை திட்டத்தில் நடந்து வரும் ஊழல்களை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் கோரிக்கையாகும்.

உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலையில் ஆடி அமாவாசை விழா: # திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள சுற்றுலாதலமான திருமூர்...
24/07/2025

உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலையில் ஆடி அமாவாசை விழா:

# திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள சுற்றுலாதலமான திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூன்று தெய்வங்களும் ஒருங்கே அமைந்துள்ளதால் இக் கோவில் தமிழக அளவில் பிரசித்தி பெற்ற கோயிலாக விளங்கி வருகிறது.

# இந்நிலையில் ஆடி அமாவாசையை ஒட்டி பக்தர்கள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் அதிகாலை திருமூர்த்திமலைக்கு வரத் தொடங்கினர். குறிப்பாக ஆயிரக்கணக்கான மாட்டு வண்டிகளில் குடும்பத்துடன் வந்திருந்தனர்.

# உடுமலை, பொள்ளாச்சி, பல்லடம், திருப்பூர் ஆகிய ஊர்களில் இருந்து நூற்றுக்கணக்கான சுற்றுலா வாகனங்களிலும் பொது மக்கள், பக்தர்கள் திருமூர்த்திமலைக்கு வந்தி்ருந்தனர்.

# இந்த தினத்தை ஒட்டி அமணலிங்கேஸ்வரர் கோவிலில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் பாலாற்றில் புனித நீராடினர்.

# குறிப்பாக தங்களது மூதாதையர்களுக்கு தர்பணம் செய்து வழிபட்டனர். உடுமலையில் இருந்து திருமூர்த்திமலைக்கு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. திருமூர்த்திமலையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

# இதே போல கொழுமம் அமராவதி ஆற்றங்கரையோ த்திலும் ஆடி அமாவாசையை ஒட்டி முதாதையர்களுக்கு தர்பணம் கொடுக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கா னோர் கலந்து கொண்டனர்.

என்ன நடக்குது திமுக வில்? # தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடுமலை வருகை ரத்து செய்யப்பட்டது அனைவரும் அறிந்ததே. # முதல்வரின...
23/07/2025

என்ன நடக்குது திமுக வில்?

# தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடுமலை வருகை ரத்து செய்யப்பட்டது அனைவரும் அறிந்ததே.

# முதல்வரின் வருகையை ஒட்டி அவரை வரவேற்று உடுமலை தொகுதி முழுவதும் திமுக நிர்வாகிகளால் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.

# இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் சியாம் பிரசாத் ஏராளமான இடங்களில் பேனர்களை வைத்திருந்தார்.

# இந்நிலையில் அவர் வைத்த பேனர்களில் உள்ள அவரது முகம் மர்ம நபர்களால் சிதைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது.

# உடுமலை தொகுதி முழுவதும் ஏராளமான பேனர்கள் சேதப் படுத்தப்பட்டு இருப்பது திமுக நிர்வாகிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

# இது குறித்து சியாம் பிரசாத்திடம் கேட்டபோது:

# இந்தச் செயலை செய்தது யார் என தெரியவில்லை. உடுமலை தொகுதி முழுவதும் பேனர்களில் உள்ள எனது முகம் சேதப்படுத்தப்பட்டு இருப்பது குறித்து நான் தலைமைக்கு புகார் செய்திருக்கிறேன்.

# மேலும் ஆங்காங்கே உள்ள சிசிடிவி கேமராக்களை கொண்டு அந்த மர்ம நபர்கள் யார் என்பது விசாரிக்கப் பட்டு வருகிறது என்றார்.

# இந்த சம்பவம் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

செய்திக்கு அப்பால்:  # உடுமலை திமுக வில் நடக்கும் பணிப் போர் குறித்து இந்த வார ஜூனியர் விகடன் வார இதழில் வந்துள்ள செய்தி...
23/07/2025

செய்திக்கு அப்பால்:

# உடுமலை திமுக வில் நடக்கும் பணிப் போர் குறித்து இந்த வார ஜூனியர் விகடன் வார இதழில் வந்துள்ள செய்தி:

21/07/2025

தமிழக கேரளா எல்லையில் புலி நடமாட்டம்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

# திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள சின்னாறு வனப் பகுதியில் புலி ஒன்று சாலையின் நடுவே கம்பீரமாக இன்று (ஜூலை 21) நடந்து சென்றது.

# மூணாறு சென்று கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் செல்போனில் இந்த அற்புதமான, அரிய காட்சியை
பதிவு செய்தனர்.

# இந்த காணொளி தற்போது சமூக வலைத் தளங்களில் வைரல் ஆகி வருவது குறிப்பிடத் தக்கது.

ரத்து... # ஜூலை 22, 23 ஆகிய தேதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருப்பூர் மற்றும் உடுமலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து...
21/07/2025

ரத்து...

# ஜூலை 22, 23 ஆகிய தேதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருப்பூர் மற்றும் உடுமலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருந்தார்.

# இந் நிலையில் உடல்நிலை சரியில்லாததால் முதல்வர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

#இது குறித்து திமுக உயர்மட்ட நிர்வாகிகள் கூறியது:
முதல்வரின் திருப்பூர் உடுமலை வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்ள ஆலோசிக்கப்பட்டு வருகிறது

முதல்வர் மருத்துவமனையில் அனுமதி: # ஜூலை 22, 23 ம் தேதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடுமலையில் பல்வேறு நிகழ்ச்சி களில் கல...
21/07/2025

முதல்வர் மருத்துவமனையில் அனுமதி:

# ஜூலை 22, 23 ம் தேதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடுமலையில் பல்வேறு நிகழ்ச்சி களில் கலந்து கொள்ள இருந்த நிலையில் தற்போது முதல்வர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

# முதல்வர் 2 நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படு கிறது. இதனால் உடுமலையில் நடைபெற இருந்த நிகழ்ச்சிகளின் நிலை என்ன என்பது தெரிய வில்லை. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வர் ஜூலை 23 ல் உடுமலை வருகிறார்: இந்நிலையில்உடுமலை டைம்ஸ் சார்பில் அவரிடம் வைக்கப்படும் கோரிக்கைகள்:உடுமலை தொகுதி: ...
20/07/2025

முதல்வர் ஜூலை 23 ல் உடுமலை வருகிறார்: இந்நிலையில்
உடுமலை டைம்ஸ் சார்பில் அவரிடம் வைக்கப்படும் கோரிக்கைகள்:

உடுமலை தொகுதி:
# விவசாயிகளுக்கு தக்காளி உள்ளிட்ட காய் கறிகளை சேமித்து வைக்க ஒரு குளிர் சாதன கிடங்கு அமைக்க வேண்டும், உடுமலை நகரை ஒட்டி உள்ள பெரிய கோட்டையை இணைத்தைப் போல கணக்கம் பாளையம், போடிபட்டி ஊராட்சிகளையும் இணைத்து எல்லைகளை விரிவுபடுத்தி முதல் தர நகராட்சியாக உடுமலை நகராட்சியை மாற்ற வேண்டும்

# மேலும் வேலை வாய்ப்பை உருவாக்கும் நோக்கத்தில் நல்ல திட்டங்களை அறிவிக்க வேண்டும்.. மாணவ, மாணவிகள் பயன்பெறும் விதத்தில் ஒரு இலவச ஐஏஎஸ் பயிற்சி மையம் தொடங்க வேண்டும்.

# உடுமலையில் ஒரு பொறியியல் கல்லூரி கட்ட ஆவண செய்ய வேண்டும். நிர்வாக வசதிக்காக உடுமலை ஒன்றியத்தை இரண்டாக பிரிக்க வேண்டும்.
திருமூர்த்தி அணை, அமராவதி அணை பகுதிகளை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சித் துறையின் வரை படத்தில் இடம் பெறச் செய்து அந்த பகுதிகளை மேம்படுத்த வேண்டும்..

# விவசாயிகளுக்கு தக்காளி உள்ளிட்ட காய் கறிகளை சேமித்து வைக்க ஒரு குளிர் சாதன கிடங்கு அமைக்க வேண்டும். எஸ்.ஜே.சாதிக் பாட்சா பெயரில் ஒரு நினைவு மண்டபம் கட்ட அறிவிப்பு வெளியிட வேண்டும்.

மடத்துக்குளம் தொகுதி:

# கிருஷ்ணாபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை புணரமைக்க நிதி ஒதுக்கும் அறிவிப்பை வெளியிட வேண்டும். அமராவதி அணையில் இருந்து வீணாக வெளியேறும் தண்ணீரை சேமித்து வைக்க அப்பர் அமராவதி அணை ஒன்றை கட்ட வேண்டும் மற்றும் தடுப்பனைகள் கட்ட வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

# இந்த பகுதியில் நிரந்தரமாக ஒரு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும், பாரம்பரியம் மிக்க கோவில்களை புணரமைக்க நிதி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் இருந்து வருகின்றன.

# குறி்ப்பாக இந்த தொகுதிக்கு உட்பட்ட மலைவாழ் மக்கள் வாழும் செட்டில்மெண்டுகளில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்பதும், மலைவாழ்மக்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாக்குரிமை வழங்க வேண்டும் என்பதும் நீண்ட கால கோரிக்கைகளாக உள்ளன.

ADVT...
20/07/2025

ADVT...

20/07/2025

இராணுவப் பள்ளியில் கலை விழா:

# திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள அமராவதி நகர் ராணுவப் பள்ளியில் மாநில அளவிலான மென்திறன் மற்றும் கலை இலக்கியப் போட்டிகள் நடைபெற்றது.

# தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 310 மாணவ, மாணவியர் 11 விதமான போட்டி களில் பங்கேற்றனர்.

# நிறைவில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ், பதக்கங்கள் வழங்கப்பட்டன.

20/07/2025

நம் ஒப்பற்ற தலைவரை,முதல்வரை வரவேற்க விழா கோலம் பூண்டுள்ளது உடுமலை நகரம்:

# உடுமலை நகர திமுக செயலாளர் சி.வேலுச்சாமி விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

# உடுமலையில் நடைபெறும் அரசு விழாவில் நலத் திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்க வருகை தரும் திராவிட நாயகர் தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்­களை வரவேற்க நகரமே விழா கோலம் பூண்டுள்ளது.

# இதில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும் பேரூரையாற்ற உள்ள தமிழ்நாடு முதல்வரை வருக வருக என உடுமலை நகர திமுக சார்பில் வாஞ்சையுடன் வரவேற்கிறோம்.

# குறிப்பாக மத்திய பேரூந்து நிலையம் எதிரே நிறுவப்பட்டுள்ள புரட்­சி­யா­ளர் அம்­பேத்­கர் அவர்­க­ளின் திரு­வு­ரு­வச் சிலை­, பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் திருவுருச்சிலை, பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலை, முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளின் திரு­வு­ரு­வச் சிலை என போற்றுதலுக்குரிய நான்கு தலைவர்களின் சிலை­களையும் மாண்புமிகு முதல்வரின் திருக்கரங்களால் திறந்து வைக்க உள்ளார் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

# மேலும் புதிதாக கட்டப்பட்டுள்ள தளபதி மு.க.ஸ்டாலின் அறிவாலயம் உடுமலை நகர திமுக அலுவலகத்தை முதல்வர் திறந்து வைப்பது வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமையப் போகிறது.

# இதையொட்டி திராவிட நாயகர் முதல்வரை வரவேற்க உடுமலை நகரம் முழுவதும் வழியெங்கும் கொடி தோரணங்களால் அலங்கரி க்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இவ் விழாக்களுக்கு திரளாக வருகை தந்து சிறப்பிக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

Address

Udumalaippettai

Alerts

Be the first to know and let us send you an email when Udumalai Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Udumalai Times:

Share