Udumalai Times

Udumalai Times உடுமலை செய்திகள்..

16/09/2025

உடுமலையில் பட்டு விவசாயிகள் கஞ்சி காய்ச்சி போராட்டம்: அதிகாரிகள் அலட்சியம்:

#திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள சில்வர் மைன் சில்க்ஸ் பிராசசர்ஸ் என்ற தனியார் நிறுவனம் பட்டு விவசாயிகளிடம் பட்டுக்கூடு கொள்முதல் செய்தது.

#அந்த வகையில் திருப்பூர், கோவை, திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 81 விவசாயிகளுக்கு சுமார் ரூ.25 லட்சம் நிலுவை வைத்து உள்ளது அந்த நிறுவனம்.

#இதுகுறித்து அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் இதுவரை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பணம் கிடைக்கவில்லை.

#இந்நிலையில் உடுமலை அருகே மைவாடியில் உள்ள பட்டுவளர்ச்சித் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விவசாயிகள் கஞ்சி காய்ச்சி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

16/09/2025

#அவலம்...

#திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையத்திற்கு உள்ளேதான் தினமும் இந்த அவலம் நிகழ்ந்து வருகிறது.

#இங்குள்ள ஹோட்டல்களில் தினமும் வெளியேறும் கழிவுகள் சாவகாசமாக பேருந்து நிலையத்தி ற்குள் விடப்படுகின்றன.

#இதனால் கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
நகராட்சி அதிகாரிகளும் இதே வழியாகத்தான் தினமும் சென்று வருகின்றனர்.

#இந்தக் கழிவுகளால் பொதுமக்கள் முகம் சுளிக்கும் நிலைக்கு தள்ளப் பட்டு வருகின்றனர்.

#தீர்வு தான் என்ன?

15/09/2025

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்:

#மடத்துக்குளம் கோட்ட நெடுஞ் சாலைத்துறை அதிகாரிகளை கண்டித்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

#திருப்பூர் மாவட்ட மோட்டார் மற்றும் ஆட்டோ மொபைல்ஸ் லேபர் யூனியன் (சி ஐ டி யு) சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் கே.தண்டபாணி பேசினார்.

15/09/2025

முன்னாள் அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் மரியாதை:

#உடுமலை மத்திய பேருந்து நிலை யம் எதிரில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா அதிமுக சார்பில் இன்று கொண்டாடப்பட்டது.

#இதை ஒட்டி அண்ணா அவர்களின் திருவுருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சர் உடுமலை கே.ராதா கிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

15/09/2025

அண்ணா பிறந்தநாள் விழா - உறுதி மொழி ஏற்பு:

#முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 117 வது பிறந்த தினம் இன்று கொண்டாடப் பட்டது.

#இதை ஒட்டி திமுக நகரச் செய லாளர் சி.வேலுச்சாமி தலைமை யில் அண்ணா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நிர்வாகிகள் அப்போது உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

13/09/2025

#அதிகாரிகளே உங்களுக்கு மனசாட்சியே இல்லையா?

#உடுமலை வட்டம் குடிமங்கலம் ஒன்றியம் கொண்டம்பட்டி ஊராட்சியில் தான் இந்த கொடுமை நடந்து வருகிறது.

விவரம்:

#பொதுமக்களின் குடிநீர் உப யோகத்திற்காக வரும் திருமூர்த்தி மலை கூட்டு குடிநீர் குழாய் உடைந்து வீணாக உப்பாறு அணைக்கு வெள்ளம் போல் சென்று கொண்டி ருக்கிறது.

#இதைப்பற்றி ஊராட்சி நிர்வாகத்திடமும் குடிமங்கலம் ஒன்றிய நிர்வாகத்திடமும் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.

#இப்படி குடிநீர் அப்பட்டமாக வீணாவதை தடுத்து நிறுத்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

#என்ன_தீர்வு?

13/09/2025

#ஆக்சிடென்ட் ஜோனாக மாறும் உடுமலை மத்திய பேருந்து நிலையம் பகுதி:

12/09/2025

#நினைவேந்தல்...

#சீதாராம்_யெச்சூரி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பொதுச் செயலாளர், பொலிட் பீரோ உறுப்பினர்.

#மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றியவர்.

#இடதுசாரிகளில் மிகப்பெரிய ஆளுமையாக வலம் வந்த சீத்தாராம் யெச்சூரி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி உடுமலையில் இன்று நடைபெற்றது.

#இதை ஒட்டி சுமார் 50 க்கும் மேற்பட்டோர் உடல் தானம் மற்றும் கண் தானம் பதிவு செய்தனர்.

12/09/2025

மாணவ மாணவிகள் போராட்டம்:

#உடுமலையை அடுத்துள்ள பார்த்தசாரதிபுரத்தைச் சார்ந்த பள்ளி மாணவ மாணவியர் பள்ளி செல்வதற்கு சரியான நேரத்தில் பேருந்து வருவதில்லை எனவும் வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் பேருந்து வருவதில்லை எனக் கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

#தகவல் கிடைத்ததும் குமரலிங்கம் காவல்துறை ஆய்வாளர் பேச்சுவார்த்தை நடத்தி உறுதி எடுத்துக் கொண்டதின் பேரில் போராட்டத்தை கைவிட்டு மாணவ மாணவியர் கலைந்து சென்றனர். பின்னர் தனியார் பள்ளி பேருந்தில் மாணவ மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

11/09/2025

விவசாயிகளுக்கு திமுக அரசு எதுவுமே செய்யவில்லை:
- எடப்பாடி கே.பழனிச்சாமி

#மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்கிற பெயரில் பிரச்சார பயணம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி இன்று மாலை மடத்துக்குளத்தில் சிறப்புரை ஆற்றினர்.

#விவரம் காணொளியில்...

11/09/2025

மலர் தூவி மரியாதை:

#பிரச்சார பயணத்தின் ஒரு பகுதி யாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி உடுமலையில் தங்கி இருக்கிறார்.

#இந்நிலையில் சுதந்திரப் போராட்ட தியாகி இமானுவேல் சேகரன் 68 வது நினைவு தினத்தை ஒட்டி மலர்களால் அலங்கரித்து வைக்கப் பட்ட அவரது திருஉருவப் படத்திற்கு இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

11/09/2025

2026 ல் அதிமுக ஆட்சி உறுதி:
- எடப்பாடி பழனிச்சாமி:

#முன்னாள் முதல்வர், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் நேற்று இரவு உடுமலையில் நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில் சிறப்புரையாற்றினார்.

#அதில் 2026 சட்டப்பேரவை தேர்தலில் உறுதியாக அதிமுக ஆட்சி அமையும் என கூறினார்.

#விவரம் காணொளியில்...

Address

Udumalpet
642126

Alerts

Be the first to know and let us send you an email when Udumalai Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Udumalai Times:

Share