Uthangarai Clique

Uthangarai Clique Uthangarai is a Taluk, Town Panchayat in Krishnagiri district in the Tamil Nadu state of India

05/09/2024

🤝🚀🎯 100% MSME கடன் மூலம் Education Academy அல்லது Games Center தொழில் தொடங்க ஆர்வமா??? 🚀🎯🤝
💸🤑💰 விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பம் மூலம் மாதந்தோறும் 5 லட்சம் வரை சம்பாதிக்கும் வாய்ப்பு 💸🤑💰
📞 Contact Us for more details:
+91 8300087771/2/3
🌐 Visit Our Website for more information:
www.learnova.in
📧[email protected]
Benefits :-
✅100% loan Options
✅Can avail 25to 35%of Subsidy
✅No Collateral
✅Dedicated Loan Manager
✅No Upfront Fees
✅3 Years or 5 Years repayment

Exciting Opportunity Alert!🚀 Join the Learnova VR & AR Academy franchise family today!🌟 Dive into the world of cutting-e...
22/09/2023

Exciting Opportunity Alert!

🚀 Join the Learnova VR & AR Academy franchise family today!

🌟 Dive into the world of cutting-edge technology education with our immersive VR & AR courses. Be a part of the future.

𝑭𝒐𝒓 𝑴𝒐𝒓𝒆 𝑫𝒆𝒕𝒂𝒊𝒍𝒔 𝑪𝒐𝒏𝒕𝒂𝒄𝒕 :
𝐏𝐡𝐨𝐧𝐞 : 083000 87772 | +919486386763
𝐌𝐚𝐢𝐥 : [email protected]
𝐖𝐞𝐛𝐬𝐢𝐭𝐞 : www.learnova.in

🌟 Calling all young adventurers to the Learnova VR & AR Academy! 🎮👦👧🎉 Introducing our exclusive "Junior Learnovators" pr...
26/07/2023

🌟 Calling all young adventurers to the Learnova VR & AR Academy! 🎮👦👧
🎉 Introducing our exclusive "Junior Learnovators" program, specially designed for bright minds aged 6 to 10! 🚀📚
🚀 Step into a world of immersive learning, where creativity knows no bounds and curiosity is the key! 🌈🤩 Our VR & AR Academy offers a fun-filled educational experience like never before.
🌐 From mind-boggling virtual adventures to interactive storytelling, our young learners will explore, create, and grow their tech skills with expert guidance. 👩‍🏫👨‍🏫
👉 Join our Junior Learnovators today and embark on a journey of endless possibilities in the realms of virtual reality and augmented reality! 🚀🔍
𝐖𝐞𝐛𝐬𝐢𝐭𝐞 : 𝐰𝐰𝐰.𝐥𝐞𝐚𝐫𝐧𝐨𝐯𝐚.𝐢𝐧
𝑭𝒐𝒓 𝑴𝒐𝒓𝒆 𝑫𝒆𝒕𝒂𝒊𝒍𝒔 𝑪𝒐𝒏𝒕𝒂𝒄𝒕 : 📱: +𝟗𝟏 𝟖𝟑𝟎𝟎𝟎𝟖𝟕𝟕𝟕𝟐 |+𝟗𝟏 𝟗𝟒𝟖𝟔𝟑𝟖𝟔𝟕𝟔𝟑 📧 𝑴𝒂𝒊𝒍 : 𝐚𝐬𝐤@𝐥𝐞𝐚𝐫𝐧𝐨𝐯𝐚.𝐢𝐧

ரூ.2-க்கு இட்லி, ரூ.3-க்கு தோசை: விவசாயிகள், கூலி தொழிலாளர்கள் பசியாற்றும் ஏ.புனவாசல் கிராமம்கடலாடி அருகே ஏ.புனவாசல் கிர...
07/09/2022

ரூ.2-க்கு இட்லி, ரூ.3-க்கு தோசை: விவசாயிகள், கூலி தொழிலாளர்கள் பசியாற்றும் ஏ.புனவாசல் கிராமம்

கடலாடி அருகே ஏ.புனவாசல் கிராமத்தில் ரூ.2-க்கு இட்லியும், ரூ.3-க்கு தோசையும் விற்பனை செய்யப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே ஏ.புனவாசல் கிராமத்தில் விவசாயிகளும், கூலித் தொழிலாளர்களும் அதிகமாக உள்ளனர். இவர்கள் விவசாயம், கரி மூட்டத் தொழில் செய்கின்றனர். இக்கிராமத்தில் 5-க்கும்மேற்பட்ட இட்லிக் கடைகள் உள்ளன. இக்கடைகளில் ஒரு இட்லி ரூ.2 முதல் ரூ.5-க்கும், தோசை ரூ.3-க்கும் சட்னி, சாம்பாருடன் விற்பனை செய்யப்படுகிறது.

காலையில் மட்டும் விற்பனை செய்யப்படும் இக்கடைகளில் விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் ஏராளமானோர் சாப்பிட்டுச் செல்கின்றனர். அதேபோல் கமுதி அருகே கோவிலாங்குளம் கிராமத்தில் தோசை ரூ.4 முதல் ரூ.5-க்கும்,ஊத்தப்பம் ரூ.3-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கு தேங்காய் சட்னி, காரச் சட்னி,சாம்பார் வழங்கப்படுகிறது. ஒருவர் ரூ.10 முதல் ரூ.25-க்குள் காலை உணவை நிறைவு செய்யலாம்.

சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இட்லி ரூ.10-க்கும், தோசை ரூ.40 முதல் ரூ.60-க்கும் விற்பனை செய்யும் நிலையில் ஏ.புனவாசல், கோவிலாங்குளம் கிராமங்களில் குறைந்த விலையில் இட்லி, தோசை விற்பனை செய்யப்படுவது வெளியூர் மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

அரிசி, பருப்பு, காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்தாலும் இப்பகுதியில் போட்டி போட்டுக்கொண்டு குறைந்த விலைக்கு இட்லி, தோசை விற்பனை செய்கின்றனர்.

அதேபோல் ஏ.புனவாசல், மாரியூர், எம்.கரிசல்குளம் உள்ளிட்ட கிராமங்களில் ரூ.1-க்கு ஒரு போண்டா அல்லது ஒரு வடை விற்கப்படுகிறது. இதுவே நகரங்களில் ரூ.5 முதல் ரூ.15 வரை விற்கப்படுகிறது.

ஏ.புனவாசலில் வீட்டின் அருகே உள்ள பெட்டிக் கடையில் இட்லிக் கடை நடத்தி வரும் முருகவள்ளி(38) என்ற பெண் கூறியதாவது:

கடந்த 15 ஆண்டுகளாக இட்லி வியாபாரம் செய்து வருகிறேன். ஏழை, எளிய மக்கள், விவசாயிகள் பயனடையும் வகையில் லாப நோக்கம் இன்றி ஒரு இட்லி ரூ.2.50-க்கு விற்பனை செய்கிறேன். காலையில் மட்டும் இந்த வியாபாரம் செய்கிறேன். வியாபாரம் முடிந்ததும் விவசாய வேலை அல்லது நூறு நாள் வேலைக்குச் சென்றுவிடுவேன்.

எந்த வியாபாரம் செய்தாலும் மனசாட்சிக்குப் பயந்து செயல்பட வேண்டும் என்ற நோக்கில் குறைந்த லாபத்தில் பால் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகிறேன் என்றார்.

இக்கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கூறும்போது, விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையிலும் கிராமத்தில் குறைந்த லாபத்தில் இக்கடைகள் இயங்கி வருவது எங்களுக்கு உதவியாக உள்ளது என்றனர்.








மாநகராட்சி, நகராட்சிகளில் காலியாக உள்ள பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப நடவடிக்கை - அமைச்சர் கே.என்.நேரு தகவல்திருந...
03/09/2022

மாநகராட்சி, நகராட்சிகளில் காலியாக உள்ள பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப நடவடிக்கை - அமைச்சர் கே.என்.நேரு தகவல்

திருநெல்வேலி: தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் காலியாக உள்ள பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசின் வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தடுத்தால், கடும் நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால், அவர்களது பதவி பறிக்கப்படும்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 13 கடற்கரை கிராமங்களுக்கு, ரூ.25 கோடி மதிப்பில் பொன்னன்குறிச்சி தனி குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம்முறையாக குடிநீர் கிடைக்கவில்லை என்று புகார்கள் வந்துள்ளன. இதனால், இதற்கு மாற்றுத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

திருநெல்வேலி மாநகராட்சிக்கான அரியநாயகபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஒரு மாதத்தில் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். திருநெல்வேலி மாநகராட்சியில் தொய்வு நிலையில் இருக்கும் பாதாள சாக்கடைத் திட்டத்தை மறு மதிப்பீடு செய்து, புதிய திட்டம்தயாரித்து ஒப்பந்தம் கோரப்படும்.

தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில்உள்ள காலி பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம்விரைவில் நிரப்பப்படும். சாதாரண பணியிடங்களை புற ஆதார அடிப்படையில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் ரூ.983 கோடியில்..

சென்னையில் ரூ.983 கோடியில் மழைநீர் வடிகால் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் மழைநீர் வடிகால் பணிகள்ரூ.84 கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அமைச்சர் நேரு கூறினார்.











திருச்சி மலைக்கோட்டையில் விநாயகருக்கு 75 கிலோ எடையில் பிரம்மாண்ட கொழுக்கட்டை படையல்திருச்சி: திருச்சி மலைக்கோட்டையில் ஸ்...
02/09/2022

திருச்சி மலைக்கோட்டையில் விநாயகருக்கு 75 கிலோ எடையில் பிரம்மாண்ட கொழுக்கட்டை படையல்

திருச்சி: திருச்சி மலைக்கோட்டையில் ஸ்ரீமட்டுவார் குழலம்மை உடனாய தாயுமானசுவாமி கோயில் உள்ளது. இங்கு விநாயகர், மலையின் மேல் உச்சிப்பிள்ளையாராகவும், மலையின் கீழ் மாணிக்க விநாயகராகவும் அமர்ந்து அருள்பாலித்து வருகிறார்.

இக்கோயிலில் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோயில் மடப்பள்ளியில் தலா 75 கிலோ எடை கொண்ட 2 கொழுக்கட்டைகள் தயாரிக்கப்பட்டன. இதில் ஒரு கொழுக்கட்டை மாணிக்க விநாயகருக்கு படையல் செய்யப்பட்டது.

மற்றொரு கொழுக்கட்டையை வெள்ளைத் துணியில் வைத்து மூங்கில் கம்பில் கட்டி படிகள் வழியாக சுமந்து சென்று மலைமேல் உள்ள உச்சிப்பிள்ளையாருக்கு படையல் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

முன்னதாக விநாயகர் சதுர்த்தியையொட்டி மாணிக்க விநாயகர் மற்றும் உச்சிப்பிள்ளையார் ஆகியோருக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். நிகழ்ச்சியில், கோயில் உதவி ஆணையர் ஆர்.ஹரிஹர சுப்பிரமணியன், கோயில் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.













தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு உயர் நீதிமன்றம் கடும் கட்டுப்பாடுமதுரை: தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை ஒ...
01/09/2022

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு உயர் நீதிமன்றம் கடும் கட்டுப்பாடு

மதுரை: தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டிய விநாயகர் சிலை பிரதிஷ்டை, ஊர்வலங்களுக்கு பல்வேறு நிபந்தனைகளையும் கட்டுப்பாட்டுகளையும் விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் புழுதிபட்டியை சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ‘புழுதிப்பட்டி சத்திரம் பீரான்பட்டி ஊராட்சியில் உள்ள அருள்மிகு பாலதண்டாயுதபானி திருக்கோயில் அருகே விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யவும், விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்வதற்கும் அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதேபோல் மதுரை, தேனி, விருதுநகர் மாவட்டங்களில் இருந்தும் விநாயகர் சிலை பிரதிஷ்டை மற்றும் ஊர்வலத்திற்கு அனுமதி கோரி ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை நீதிபதி கே.முரளிசங்கர் விசாரித்தார். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "விநாயகர் சிலை பிரதிஷ்டை, ஊர்வலங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. விநாயகர் ஊர்வலத்தின் செல்பவர்கள் யாரும் ஆபாசமாக நடனமாடவோ, பேசவோ கூடாது. எந்த ஒரு அரசியல் கட்சி , மதம், சமூகம், சாதியை குறிப்பிட்டு நடனம் அல்லது பாடல்கள் எதுவும் இசைக்க க்கூடாது. எந்த அரசியல் கட்சிக்கும் அல்லது மதத் தலைவருக்கும் ஆதரவாக ஃப்ளெக்ஸ் போர்டுகள் அமைக்கக் கூடாது.

மதம் அல்லது மத நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையில் ஊர்வலம் நடத்தக் கூடாது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் செல்பவர்கள் மதுபானம் உட்பட எந்த போதை பொருட்களையும் பயன்படுத்திருக்கக் கூடாது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அதற்கு விழா ஏற்பாட்டாளர்கள் தான் பொறுப்பாவார்கள். இந்த நிபந்தனைகள் மீறப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுத்து ஊர்வலத்தை நிறுத்த காவல்துறை அதிகாரிக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது” என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.











பதிவு தபால், பார்சலுக்கு ‘யுபிஐ’ மூலம் பணம் செலுத்தலாம்: அஞ்சல் துறையில் புதிய வசதி அறிமுகம்சென்னை: ஷாப்பிங் மால் முதல் ...
31/08/2022

பதிவு தபால், பார்சலுக்கு ‘யுபிஐ’ மூலம் பணம் செலுத்தலாம்: அஞ்சல் துறையில் புதிய வசதி அறிமுகம்

சென்னை: ஷாப்பிங் மால் முதல் தெருவோர தள்ளுவண்டி கடை வரை தற்போது ‘க்யூஆர் கோடு’ அட்டையை ஸ்கேன் செய்து, ஃபோன்பே, கூகுள்பே, பேடிஎம் போன்ற பணப் பரிவர்த்தனை செயலிகள் மூலம் பணம் செலுத்த முடிகிறது.

இந்தியாவில் உள்ள அனைத்து வகையான பணப் பரிவர்த்தனை முறைகளையும் ஒன்றிணைக்கும் நோக்கில் நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனம், ரிசர்வ் வங்கி, இந்திய வங்கிகள் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து முயற்சி மேற்கொண்டதன் விளைவாக கடந்த 2009-ம் ஆண்டு உருவானது ‘யுபிஐ’.

நேரடி பணப் பரிவர்த்தனைக்கு மாற்றாக, பாதுகாப்பான, மிக எளிமையான, அனைத்தையும் உள்ளடக்கிய பணப் பரிவர்த்தனை அமைப்புதான் யுபிஐ. இது நாட்டில் உள்ள பல்வேறு வங்கிகளை ஒருங்கிணைத்து, அவற்றுக்கு இடையிலான பரிவர்த்தனை நடைமுறையை எளிதாக்குகிறது. ஸ்மார்ட்போன் செயலி வழியாக ஒரு வங்கியில் இருந்து எந்தவங்கிகளுக்கு வேண்டுமானாலும் பணப் பரிவர்த்தனை மேற்கொள்வதை இது சாத்தியப்படுத்துகிறது.

கடந்த 2016 ஏப்ரல் மாதம் பொதுப் பயன்பாட்டுக்கு வந்த யுபிஐ மூலமாக, முதல் ஆண்டிலேயே ரூ.707 கோடி பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர், படிப்படியாக அதிகரித்து கடந்த ஆண்டு ரூ.73 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. 2016-ல் யுபிஐயின் கீழ் 35 வங்கிகள் இருந்தன. தற்போது 282 வங்கிகள் உள்ளன. யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் கிடையாது என்பதும் கூடுதல் சிறப்பம்சம்.

இந்நிலையில், யுபிஐ க்யூஆர் கோடு ஸ்கேன் செய்து கட்டணம் செலுத்தும் வசதியை அஞ்சல் துறை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் ஜி.நடராஜன் கூறியதாவது:

மத்திய அரசு டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், அனைத்து அரசு அலுவலகங்களிலும் மின்னணுசேவையை அறிமுகம் செய்து வருகிறது. மக்களுக்கு விரைவாகவும், எளிதாகவும் சேவைகள் கிடைப்பது மட்டுமின்றி, ஊழியர்களுக்கு பணிச் சுமையை குறைக்கும் நோக்கிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அந்த வகையில், அஞ்சல் துறையில் தற்போது மின்னணு முறையில் பணம் செலுத்துவதற்காக யுபிஐக்யூஆர் கோடு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை நகர அஞ்சல் மண்டலத்துக்கு உட்பட்ட 20 தலைமை அஞ்சல் நிலையங்கள், 545 துணை அஞ்சலகங்களிலும்இந்த சேவை கடந்த ஏப்ரலில் அறிமுகமானது.

முதல்கட்டமாக, உள்நாடு, வெளிநாடுகளுக்கு அனுப்பும் பதிவு தபால்கள், விரைவு தபால்கள், பார்சல்களுக்கு யுபிஐ க்யூஆர் கோடு மூலம் பணம் செலுத்தலாம்.

இதன்மூலமாக தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் கடந்த 19-ம்தேதி வரை 12,208 பரிவர்த்தனைகள், சென்னை நகர அஞ்சல் மண்டலத்தில் 5,341 பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கிளை அஞ்சலகங்களில் இது சோதனை கட்டத்தில் உள்ளது. சோதனை முடிந்ததும் விரைவில் அங்கும் அமல்படுத்தப்படும். சேமிப்பு கணக்கு, தொடர் வைப்புக் கணக்கு,மணியார்டர் உள்ளிட்ட மற்ற சேவைகளுக்கும் யுபிஐ மூலம் பணம்செலுத்தும் வசதி படிப்படியாக அறிமுகம் செய்யப்படும் என்றார்.











Address

Main Street
Uthangarai
635207

Alerts

Be the first to know and let us send you an email when Uthangarai Clique posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Uthangarai Clique:

Share