15/02/2024
அகநி-க்கு தமிழக அரசின் இரண்டு பரிசுகள்...
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டத்தில் 2020-ஆம் ஆண்டிற்கான நாவல் பிரிவில் மு.ராஜேந்திரன், இஆப., எழுதிய ‘காலா பாணி’ மற்றும் மொழிபெயர்ப்பு (ஆறாவது பெண் - ) பிரிவில் எழுத்தாளர் சேது மலையாளத்தில் எழுதிய குறிஞ்சிவேலன் தமிழாக்கம் செய்த ‘ஆறாவது பெண்’ நூலுக்கும் என இரண்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
ரூ. 20 ஆயிரத்துக்கான காசோலையைத் தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் மு.சாமிநாதன், அவர்கள் அகநி வெளியீட்டின் பதிப்பாளர் கவிஞர் மு.முருகேஷிடம் வழங்கினார். விழாவில் தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் செய்தித்துறை அரசுச் செயலாளர் முனைவர் இல.சுப்பிரமணியன், இஆப, தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் ஒளவை அருள் ஆகியோர் கலந்துகொண்டனர்.