
10/04/2025
அவர் வந்த பெருமையை இகழ்ந்து விடாதே போற்றித்திரு அகவல் 75-77
அருபரத்தொருவன் அவனியில் வந்து
குருபரன் ஆகி அருளிய பெருமையைச்
சிறுமை என்றிக ழாதே
அதாவது,
இந்தச் சைவ சித்தாந்தப் பாடல், இந்துக்கள் (இந்து தேச மக்கள்) அனைவரையும் இரங்கிக் கேட்டுக்கொள்வதாய் உள்ளது. என்ன வென்றால், பரலோகத்துக்குரியவரான கடவுள் ரூபமில்லாதவர் தான். ஆனாலும் அவர் கெட்டுப்போன மனிதருக்கு நித்தியஜீவனைக் கொடுத்து முக்திசேர்க்க, குருவாக, இவ்வுலகத்தில் வந்த பெருமையை அற்பமானதாய் எண்ணி, சிறுமையாய் இகழ்ந்து பேசிவிடாதே என்று வேண்டிக்கொள்கிறது.
உருவமில்லாத, அதாவது ஒருவராலும் காணக்கூடாத இறைவன் உலகில் வந்து பிறப்பாரோ என்ற சந்தேகத்தோடு அதைச் சிறுமைப்படுத்தி இகழ்ந்துவிட வேண்டாம் என்று கூறப்படுவதைப் பார்க்கிறோம். அதே நேரத்தில் அவர் அளிக்கும் மீட்பின் பெருமையை அறிந்துகொண்டு, அதை வாஞ்சையோடு பெற்றுக்கொள்வது எத்தனை பாக்கியம்!!
அவர் வந்த பெருமையை இகழ்ந்து விடாதே (போற்றித்திரு அகவல் 75-77)அருபரத்தொருவன் அவனியில் வந்துகுருபரன் ஆகி அருளிய பெ.....