20/03/2026
உலகளவில் ஆதிக்க அரசியலும் அநீதியும் முடிவுக்கு வந்து நீதியும் மனிதநேயமும் வெல்ல வேண்டும்
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிடும் அறிக்கை
புனித ரமலான் மாதம் நிறைவடைந்த மறுதினம்
உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் ஈதுல் ஃபித்ர் எனும் ஈகை பெருநாள்
வாழ்த்துகளை இதயப்பூர்வமாக அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, தொழுகை, தர்மம், சகோதரத்துவம் மற்றும் தன்னடக்கம் போன்ற உயர்ந்த பண்புகளை வளர்த்துக் கொள்ளும் காலமாக ரமலான் மாதம் அமைந்திருந்தது. இந்த புனித மாதம் நமக்குக் கற்றுத்தந்த கருணை, பகிர்வு, பொறுமை, மனிதநேயம் போன்ற உயரிய பண்புகளை ஈகை திருநாளுடன் மட்டும் முடிவுறச் செய்யாமல், ஆண்டு முழுவதும் நமது வாழ்க்கையில் கடைப்பிடிப்பதே ரமலானின் உண்மையான செய்தியாகும்.
இந்நன்னாளில் உலகம் முழுவதும் நடைபெற்று வரும் போர்கள் மற்றும் மோதல்கள் முடிவுக்கு வந்து மனிதக்குலம் அமைதி மற்றும் சகோதரத்துவத்தின் பாதையில் முன்னேற வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கிறோம். குறிப்பாக மேற்காசியப் பகுதிகளில் நீடித்து வரும் பதற்றங்கள் முடிவுக்கு வந்து, அப்பகுதியில் நிலையான அமைதி நிலவ வேண்டும். உலகளவில் ஆதிக்க அரசியலும் அநீதியும் முடிவுக்கு வந்து நீதியும் மனிதநேயமும் வெல்ல வேண்டும் என்ற நம்பிக்கையையும் இந்த நாளில் வலியுறுத்துகிறேன்.
நமது இந்தியா பல மதங்கள், பல மொழிகள் மற்றும் பல பண்பாடுகள் இணைந்து வாழும் மகத்தான நாடாகும். இந்நாட்டில் சகோதரத்துவம், சமூக நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமை நிலைத்திருக்க வேண்டுமெனவும் இந்த ஈகை பெருநாளில் நாம் அனைவரும் பிரார்த்திப்போம்.
தமிழ்நாட்டில் மக்கள் நலன், சமூக நீதி மற்றும் சமூக நல்லிணக்கத்தை முன்னிறுத்தும் இன்றைய நிலை தொடர வேண்டும் என்ற மக்கள் விருப்பம் நிறைவேற இந்நாளில் மனமாரப் பிரார்த்திக்கிறேன்.
இந்த மகிழ்ச்சியான ஈகை பெருநாளில் அனைவருக்கும் அமைதி, வளம், ஆரோக்கியம் கிட்டவும் சகோதரத்துவத்துவம
தழைத்தோங்கவும் பிரார்த்தனை செய்கிறேன்.
இப்படிக்கு
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
சென்னை
17/03/2026