02/01/2024
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்🖤
தாம்பரத்துல இருந்து திருத்தணி, திருப்பதி, ஆந்திரா போறவங்க எல்லாம் கோயம்பேடு போய் இனி பஸ் ஏற முடியாது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துல இருந்து டைரக்ட் பஸ் விடுங்கனு சொல்றது எப்படி லாஜிக் இல்லாம இருக்குமோ அப்படித்தான் கோயம்பேடுல இருந்து மட்டும்தான் தென்மாவட்டங்களுக்கு போற பஸ் வரணும்னு சொல்றது. சென்னையில ஒரு சதுர கி.மீக்கு 30 ஆயிரம் மக்களுக்கு மேல இருக்காங்க. இதுல பெரும்பாலும் வெளியூர்ல இருந்து வந்து வேலை பார்க்கிறவங்கதான். பண்டிகை எதுவும் இல்லாம சாதாரண வெள்ளிக்கிழமை நாட்களிலேயே சாயங்காலம் கத்திப்பாராவுல இருந்து தாம்பரம் வர 1-1.5 மணிநேரம் ஆகும். தீபாவளி பொங்கல்ணா அவ்ளோதான் 3 குறைஞ்சது மணிநேரம் ஆகும். பெருங்களத்தூர் தாண்டவே விடிஞ்சுரும் மாதிரியான நகைச்சுவை எல்லாம் அப்ப ஈசியா கடந்து போவோம் ஆனா அவ்ளோ மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பாங்க. சென்னையில ஒரு இடத்துல இருந்து இன்னொரு இடத்துக்கு போறது எல்லாம் ஊர் பக்கம் இருக்கவங்களுக்கு ஒரு ஊர்ல இருந்து இன்னொரு ஊருக்கு போற மாதிரிதான். அவ்ளோ பெரிய சிட்டி. இந்த போக்குவரத்து நெரிசலை குறைக்கத்தான் இந்த புதிய பேருந்து நிலையம். சிட்டிக்குள்ள கட்ட முடியாதானு கேட்டா கட்ட முடியாது, ஏன்னா இவ்ளோ பெரிய இடம் சிட்டில இல்ல இருந்தாலும் நீர்நிலையாதான் இருக்கும். மறுபடியும் சிட்டிக்குள்ள ட்ராஃபிக் தான் ஆகும். அதை தவிர்க்க இப்படி புறநகர் பேருந்து நிலையம் தான் ஒரே தீர்வு. அந்த பேருந்து நிலையம் போறதுக்கு வசதிகளை அரசு ஏற்படுத்தி கொடுக்குதான்னு கேட்டா கண்டிப்பா ஆமா தான். 2 நிமிஷத்துக்கு ஒரு பஸ் தாம்பரத்துக்கு , 5 நிமிஷத்துக்கு ஒரு பஸ் கோயம்பேடுக்கு விட்ருக்காங்க. வண்டலூர் ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து 2கிலோமீட்டர்ல இருக்கு. கிளாம்பாக்கத்துலயே ரயில்நிலைய வேலை நடந்துட்டு இருக்கு விரைவில் முடிஞ்சு அங்க இருந்து பேருந்து நிலையத்துக்கு 900மீ நடைமேடை அமைக்கப்போறதா சொல்லிருக்காங்க. 2ம் கட்ட மெட்ரோ முடிஞ்சதும் கேளம்பாக்கம் வரைக்கும் விரிவு படுத்தம்படும்னு சொல்லிருக்காங்க. கண்டிப்பா இந்த திட்டத்துல சென்னை மாநகருக்குள்ள போக்குவரத்து நெரிசல் குறையும். கிளாம்பாக்கத்துல இருந்து பரனூர் டோல்கேட் வரைக்கும் 8வழிச்சாலைதான் அதனால ட்ராவல் டைம் கம்மி ஆகும். மக்களுக்கு சிரமமானு கேட்டா , இவ்ளோ நாள் வேளச்சேரி, சோழிங்கநல்லூர் மக்கள் ட்ராவல் பண்ணி கோயம்பேடு போய் பஸ் ஏறின மாதிரி கிண்டி , அண்ணாநகர் மக்கள் கேளம்பாக்கம் வந்து பஸ் ஏறனும். ஆனா கனெக்டட்டா தான் புதிய பேருந்து நிலையம் இருக்கு. எல்லாரையும் திருப்திபடுத்தற மாதிரி ஒரு போக்குவரத்து திட்டம்லாம் கண்டிப்பா சென்னையில பண்ண முடியாது அதுதான் எதார்த்தம். நெரிசலை குறைக்க என்ன பண்ணனுமோ அதைத்தான் பண்ணுவாங்க. மறுபடியும் சொல்றேன் இவங்க exaggerate பண்ற அளவுக்கு ஒன்னும் சென்னையில போக்குவரத்து வசதி கம்மியா இல்ல. எந்த ஏரியாவுல இருந்தும் லோக்கல் ட்ரெயின்ல 10 ரூபாய் கொடுத்து கிளாம்பாக்கம் வரைக்கும் வந்தறலாம். வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை தொடங்கிட்டா அந்த மக்களுக்கும் எளிதாயிரும். ரெண்டு மாசத்துக்கு ஒரு டைம் ஊருக்கு போறவங்களுக்கு இதெல்லாம் பெரிய பிரச்சனையா இருக்காது.
எல்லாரும் லோக்கல் ட்ரெயின்ல போக முடியுமா எல்லாரும் கேப் புக் பண்ணி போகமுடியுமா எல்லாரும் கார்ல போகமுடியுமானு கேட்டா , முடியாதுன்னு சொல்லி நகர்ந்து செல்வதே... Seemore 😒