News 32

News 32 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from News 32, Digital creator, Villupuram.
(3)

விழுப்புரம் செய்திகளை . உண்மையுடன் மனசாட்சியுடன் நேர்மையாகவும் செய்திகளை பதிவு செய்வது தான் எங்கள் குழுவில் கடமை .தங்கள் ஆதரவை தாருங்கள் .என்றும் உங்களது மனசாட்சிக்கு நம்பிக்கை உடன் இருப்போம் விழுப்புரம் மாவட்டத்தில் நடக்கும் நிகழ்வுகள் மனசாட்சியுடன் நேர்மையாக. களத்தில் இறங்கி உண்மை தண்மையுடன் வெளிபடையாக பயமின்றி பதிவு செய்வது தான் எங்கள் குழுவின் கடமை..நீங்கள் உங்களுடைய ஆதரவு தாருங்கள் News32 என்றும் உங்களுடன்

24/10/2025

விழுப்புரம் அருகே எல்லிச்சத்திரம் அணையில் வெள்ளப்பெருக்கு | தென்பெண்னை ஆற்றின் பருந்து பார்வை காட்சிகள் | Stunning Drone View

24/10/2025

ஆறு மாதத்தில் காணாமல் போன புதிய பாலம்!
பொதுமக்கள் அதிர்ச்சி

ஆறு மாதங்களுக்கு முன்தான் திறந்து வைக்கப்பட்ட புதிய பாலம் தற்போது முற்றிலும் சேதமடைந்து காணாமல் போனது. மழை பெய்தால் போதும் — பாலத்தின் நிலை சீரழிவதால் மக்கள் பயத்தில் அவ்வழி செல்வதற்கே தயங்கி வருகின்றனர்.

பொது நிதியில் கோடிக்கணக்கில் கட்டப்பட்ட பாலம் இவ்வளவு விரைவில் சேதமடைந்தது எப்படி? என்ற கேள்வி பொதுமக்களில் எழுந்துள்ளது.
அதிகாரிகள் இதை கவனிக்க வேண்டுமென்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#விழுப்புரம் #பாலம் #தமிழ்_செய்தி #விழுப்புரம்_மாவட்டம்

24/10/2025

மனிதநேயம் மிக்க காவலர்! உடைந்த காலுடன் நின்ற நாயை சாலைக் கடக்க உதவிய விழுப்புரம் காவலர் தீனதயாளன்

விழுப்புரம் நகரின் காந்தி சிலை அருகே சாலையில் உடைந்த காலுடன் துன்பப்பட்டு நின்றிருந்த ஒரு தெரு நாயை, விழுப்புரம் நகர காவல் நிலைய தலைமை காவலர் திரு. தீனதயாளன் அவர்கள் மனிதநேயத்துடன் பாதுகாப்பாக சாலையை கடக்க உதவிய காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக வைரலாகி வருகிறது.

#விழுப்புரம் #விழுப்புரம்_காவல்துறை

23/10/2025

திருவெண்ணைநல்லூர் போலீசாரின் அதிரடி – பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட ₹1.5 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்! மூவர் கைது

#விழுப்புரம் #விழுப்புரம்செய்தி

23/10/2025

விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் நீர் நாய் மீன் பிடித்து உட்கொண்ட அரிய காட்சி | Ellischathiram Anicut | Villupuram Flood”

23/10/2025

விழுப்புரம் அருகே மலட்டாறு பாலம் வெள்ளநீரில் மூழ்கியது ஆபத்தை உணராமல் மாணவர்கள் பயணம்/

#விழுப்புரம் #விழுப்புரம்போஸ்ட் #விழுப்புரம்செய்தி

23/10/2025

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் குளமாக மாறியது!

விழுப்புரத்தில் பெய்த கனமழையினால், புதிய பேருந்து நிலையம் முழுவதும் மழை நீரில் மூழ்கியது.
சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் அறிவித்த நிலையில், நேற்று காலை மற்றும் இரவு பெய்த கனமழையால் நிலையத்தின் உள்ளே முட்டியளவு நீர் தேங்கி, குளம் போல் காட்சியளித்தது.

#விழுப்புரம்

👉 எங்கள் பதிவுகள் முழுமையாக உங்களை வந்தடைய, எங்களை Follow செய்ய மறக்காதீர்கள்

23/10/2025

வீடூர் அணையில் தண்ணீர் திறப்பு – விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு அவசர எச்சரிக்கை!

ழுப்புரம் மாவட்டம் வீடூர் அணை 31 அடியை எட்டியதை அடுத்து, மணிக்கு அதிக அளவு கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் பாதுகாப்பு கருதி அணையிலிருந்து 9 மதகுகள் வழியாக 6000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

#வீடூர்அணை #விழுப்புரம்

21/10/2025

அனைவருக்கும் வணக்கம்..!

விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் கன மழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (22.10.2025) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.,இ.ஆ.ப., அவர்கள் அறிவிப்பு.

21/10/2025

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் — ஆலமரத்துகுப்பத்தில் துயரம்

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியத்தில் உள்ள கோண்டூர் பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட ஆலமரத்துகுப்பம் பகுதியில் இன்று காலை ஏற்பட்ட திடீர் கனமழை காரணமாக, ஆற்றுப்பகுதி முழுவதும் தண்ணீர் பெருக்கெடுத்து வழிகிறது.

இந்நிலையில், அந்தப் பகுதியில் வசித்த 50 வயது மதிக்கத்தக்க ஒருவரின் மரணம் நிகழ்ந்தது. இன்று மாலை, கழுத்தளவு தண்ணீரில் மிதந்து கொண்டே அவரது உடலை எடுத்துச் சென்று இறுதி சடங்கு நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அங்கு எடுக்கப்பட்ட வீடியோ அல்லது புகைப்படங்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை என்றாலும், ஆற்றுப்பகுதியில் தண்ணீர் இன்னும் பெருக்கெடுத்து வருகின்றது.

பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் உயிர் ஆபத்தான சூழ்நிலையில் தண்ணீரைக் கடந்து சென்று சடங்கை நடத்தும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர், வருவாய் துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மழையால் ஆற்றுப்பகுதியில் பெருக்கு நீடித்தால் மேலும் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.

விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!நாளை (22.10.2025) இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதன்படி,வி...
21/10/2025

விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

நாளை (22.10.2025) இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதன்படி,
விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுச்சேரி, நாகை உள்ளிட்ட பகுதிகளில்
மிக கனமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தற்போது ஆரஞ்சு எச்சரிக்கை (Orange Alert) அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,
சில மாவட்டங்களில் ரெட் அலர்ட் அறிவிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது.

மக்கள் கவனிக்க வேண்டியது:

தாழ்வான இடங்களில் குடியிருப்பவர்கள் முன்னெச்சரிக்கை எடுக்கவும்.

மின்சாரம் செல்லும் பகுதிகளில் நீரில் நடக்க வேண்டாம்.

தேவையில்லாமல் வெளியே செல்லாமல் பாதுகாப்பாக இருங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தொடர்ந்து கவனிக்கவும்.

🙏 அனைவரும் பாதுகாப்பாக இருக்கவும்.

மேல்மலையனூரில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் – மங்கள கௌரி அலங்காரத்தில் அங்காளம்மன் அருள்பாலிப்புவிழுப்புரம் மாவட்டம் மேல்மலையன...
21/10/2025

மேல்மலையனூரில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் – மங்கள கௌரி அலங்காரத்தில் அங்காளம்மன் அருள்பாலிப்பு

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் ஐப்பசி மாத அமாவாசை நாளையொட்டி நடைபெறும் பாரம்பரிய ஊஞ்சல் உற்சவத்தை முன்னிட்டு, உற்சவர் அருள்மிகு அங்காளம்மன் மங்கள கௌரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

கோயில் முழுவதும் பக்தி சூழ்நிலை நிலவ, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து மனமகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். கோயில் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் மற்றும் ஊர்வலங்கள் நடைபெற்று வருகின்றன.

Address

Villupuram

Alerts

Be the first to know and let us send you an email when News 32 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News 32:

Share