24/09/2025
விழுப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் பரபரப்பு – அறங்காவலர் எனக்கூறி பெண்கள் மீது தாக்குதல்
விழுப்புரம் மாவட்டம் மருதூர் பகுதியில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
கோவிலில் கொலு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த சில பெண்மணி, சிறுவர்களுக்கு பிஸ்கட் மற்றும் நோட்டுப் புத்தகங்களை வழங்கியுள்ளார். இதனால் கோவில் அறங்காவலர் மற்றும் அவரது மனைவி ஆத்திரமடைந்து, "நீ யார் இங்கே வருவதற்கு?" எனக் கூறி அவரைத் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனுடன் தொடர்புடைய பெண்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் காட்சி வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பொதுமக்களின் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை தொடங்கியுள்ள நிலையில், கோவில் நிர்வாகத்தின் நடவடிக்கைகள் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. பெண்கள் பாதுகாப்பிற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என உள்ளூர்வாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
#விழுப்புரம் #பத்ரகாளியம்மன்கோவில் #அறங்காவலர் #பெண்கள்தாக்குதல் #கோவில்பரபரப்பு
TN32 Villupuram Facebook & YouTube பக்கம்
உங்கள் பகுதியில் நடக்கும் குறைகள், நிகழ்ச்சிகள், செய்திகள் எங்கள் பக்கத்தில் வெளியாக வேண்டுமா❓
அப்படியானால் இந்த நம்பருக்கு தொடர்பு கொள்ளுங்கள்:
📞 7010108806 | 9489796000 | 90801 71468
👉 எங்கள் பதிவுகள் முழுமையாக உங்களை வந்தடைய, Follow செய்ய மறக்காதீர்கள்