News 32

News 32 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from News 32, Digital creator, Villupuram.
(4)

விழுப்புரம் செய்திகளை . உண்மையுடன் மனசாட்சியுடன் நேர்மையாகவும் செய்திகளை பதிவு செய்வது தான் எங்கள் குழுவில் கடமை .தங்கள் ஆதரவை தாருங்கள் .என்றும் உங்களது மனசாட்சிக்கு நம்பிக்கை உடன் இருப்போம் விழுப்புரம் மாவட்டத்தில் நடக்கும் நிகழ்வுகள் மனசாட்சியுடன் நேர்மையாக. களத்தில் இறங்கி உண்மை தண்மையுடன் வெளிபடையாக பயமின்றி பதிவு செய்வது தான் எங்கள் குழுவின் கடமை..நீங்கள் உங்களுடைய ஆதரவு தாருங்கள் News32 என்றும் உங்களுடன்

24/09/2025

விழுப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் பரபரப்பு – அறங்காவலர் எனக்கூறி பெண்கள் மீது தாக்குதல்

விழுப்புரம் மாவட்டம் மருதூர் பகுதியில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

கோவிலில் கொலு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த சில பெண்மணி, சிறுவர்களுக்கு பிஸ்கட் மற்றும் நோட்டுப் புத்தகங்களை வழங்கியுள்ளார். இதனால் கோவில் அறங்காவலர் மற்றும் அவரது மனைவி ஆத்திரமடைந்து, "நீ யார் இங்கே வருவதற்கு?" எனக் கூறி அவரைத் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனுடன் தொடர்புடைய பெண்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் காட்சி வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பொதுமக்களின் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை தொடங்கியுள்ள நிலையில், கோவில் நிர்வாகத்தின் நடவடிக்கைகள் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. பெண்கள் பாதுகாப்பிற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என உள்ளூர்வாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

#விழுப்புரம் #பத்ரகாளியம்மன்கோவில் #அறங்காவலர் #பெண்கள்தாக்குதல் #கோவில்பரபரப்பு

TN32 Villupuram Facebook & YouTube பக்கம்
உங்கள் பகுதியில் நடக்கும் குறைகள், நிகழ்ச்சிகள், செய்திகள் எங்கள் பக்கத்தில் வெளியாக வேண்டுமா❓
அப்படியானால் இந்த நம்பருக்கு தொடர்பு கொள்ளுங்கள்:
📞 7010108806 | 9489796000 | 90801 71468

👉 எங்கள் பதிவுகள் முழுமையாக உங்களை வந்தடைய, Follow செய்ய மறக்காதீர்கள்

📰 பில்லூரில் அதிமுக பேனர் கிழிப்பு – பதட்டம், பரபரப்பு!விழுப்புரம் அருகே பில்லூர் கிராமத்தில், முன்னாள் அமைச்சர் சி. சண்...
24/09/2025

📰 பில்லூரில் அதிமுக பேனர் கிழிப்பு – பதட்டம், பரபரப்பு!

விழுப்புரம் அருகே பில்லூர் கிராமத்தில், முன்னாள் அமைச்சர் சி. சண்முகம் எம்.பி. தலைமையில் இன்று நடைபெறவுள்ள தெருமுனை பிரச்சாரத்தை முன்னிட்டு, அதிமுகவினர் நேற்று இரவு பேனர்கள் வைத்திருந்தனர்.

ஆனால், அந்த பேனர்கள் மர்ம நபர்களால் நள்ளிரவில் கிழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கிராமத்தில் பதட்டமும் பரபரப்பும் நிலவுகிறது.

👉 ஹாஷ்டேக்கள்:
#விழுப்புரம் #பில்லூர் #அதிமுக #பேனர்_கிழிப்பு #போலீஸ்_விசாரணை #பரபரப்பு

24/09/2025

"விழுப்புரம் மாவட்டத்தில் போலீசாரின் சோதனை – கஞ்சா கடத்தல் கும்பல் சிக்கியது, 6 பேர் கைது"

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சரவணன் அவர்களின் உத்தரவின் பேரில், வெள்ளிமேடு பேட்டை காவல் நிலைய போலீசார் நேற்று இரவு பேருந்து நிறுத்தம் அருகே வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, போலீசாரிடம் குழப்பமான பதில்கள் அளித்தனர். உடனே போலீசார் அவசர சோதனை நடத்தியதில், வாகனத்தில் மறைத்து வைத்திருந்த 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் சந்தேக நபர்கள் காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதில்,

வந்தவாசி தாலுகா காட்டேரி கிராமத்தை சேர்ந்த கவியரசு,சரத் பாபு மகன் சதீஷ்,விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் ரகு உள்ளிட்டோர் அடங்கிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

போலீசார் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#விழுப்புரம் #போலீச்அதிரடி #கஞ்சாபறிமுதல் #6பேர்கைது #வெள்ளிமேடுபேட்டை

TN32 Villupuram Facebook & YouTube பக்கம்
உங்கள் பகுதியில் நடக்கும் குறைகள், நிகழ்ச்சிகள், செய்திகள் எங்கள் பக்கத்தில் வெளியாக வேண்டுமா❓
அப்படியானால் இந்த நம்பருக்கு தொடர்பு கொள்ளுங்கள்:
📞 7010108806 | 9489796000 | 90801 71468

👉 எங்கள் பதிவுகள் முழுமையாக உங்களை வந்தடைய, Follow செய்ய மறக்காதீர்கள் ✅

24/09/2025

"விழுப்புரம் அரசு பெண்கள் கல்லூரி சாலை – சேறும் பள்ளம் காரணமாக மாணவிகள், பெற்றோர் அவதி | சாலை சீரமைப்பு கோரிக்கை"

விழுப்புரம் நகரில் உள்ள எம்.ஜி.ஆர் அரசு பெண்கள் கலைக் கல்லூரி தினமும் ஆயிரக்கணக்கான மாணவிகள் கல்வி கற்க வருகை தரும் முக்கிய கல்வி நிலையமாகும். ஆனால், அந்தக் கல்லூரி செல்லும் சாலை கடந்த சில மாதங்களாக பராமரிப்பு இன்றி மோசமான நிலையில் உள்ளது.

மழை பெய்தவுடன் சாலை முழுவதும் சேறும், பள்ளமாகவும் தண்ணீர் தேங்கிய நிலையிலும் மாறி விடுகிறது. இதனால் சீருடை அணிந்த மாணவிகள் கல்லூரி செல்லும் போது சிரமப்பட்டு நடக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. பாதம் வழுக்கி விழும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.

அதேபோல், அருகிலுள்ள ராமகிருஷ்ணா பள்ளியில் படிக்கும் சிறுவர், சிறுமிகளை அழைத்துச் செல்லும் பெற்றோர்கள் இருசக்கர வாகனத்தில் செல்ல முடியாமல் தவறி விழும் நிலையும் ஏற்பட்டுள்ளது. குழந்தைகளை ஏந்திச் சென்ற சில பெற்றோர்கள் வழுக்கி விழுந்த சம்பவங்களும் நடந்துள்ளன.

பெண்கள் கல்லூரி மாணவிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் எதிர்கொள்ளும் இந்த சாலைப் பிரச்சினையை விழுப்புரம் நகர மன்றம் உடனடியாக கவனித்து தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெண்கள் கல்வி ஊக்குவிக்கும் பல திட்டங்களை அரசு அறிவித்துள்ள நிலையில், கல்லூரி செல்லும் சாலையே மோசமான நிலையில் இருப்பது வருத்தமளிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

விழுப்புரம் #அரசுபெண்கள்கல்லூரி #சாலைசீரமைப்பு #சேறும்_பள்ளம் #மாணவிகள் #பெற்றோர்அவதி #பெண்கள்கல்வி

TN32 Villupuram Facebook & YouTube பக்கம்

உங்கள் பகுதியில் நடக்கும் குறைகள், நிகழ்ச்சிகள், செய்திகள் எங்கள் பக்கத்தில் வெளியாக வேண்டுமா❓
அப்படியானால் இந்த நம்பருக்கு தொடர்பு கொள்ளுங்கள்:
📞 7010108806 | 9489796000 | 90801 71468

👉 எங்கள் பதிவுகள் முழுமையாக உங்களை வந்தடைய, Follow செய்ய மறக்காதீர்கள் ✅

23/09/2025

ஒப்பந்த தொழிலாளர்கள் நிரந்தரம் கோரி மின் ஊழியர்கள் மறியல் போராட்டம் – 235 பேர் கைது | விழுப்புரம் பரபரப்பு"

மின்வாரியத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதியின்படி அடையாளம் கண்டு உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும், உழைப்பு சுரண்டலை தொடர்ந்து செய்து தனியார் கம்பெனி மூலமாக ஆள் நிரப்ப திட்டமிடும் கொள்கை முடிவை கைவிட வேண்டும், மின்வாரியத்தில் காலியாக உள்ள 62 ஆயிரம் பணியிடங்களில் களப்பிரிவில் 35 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப ஒப்பந்த ஊழியர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழ்நாடு முழுவதும் மாநிலம் தழுவிய அளவில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு.) சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

#விழுப்புரம் #மின்வாரியம் #மின்ஊழியர்கள் #ஒப்பந்ததொழிலாளர்கள் #தொழிலாளர்_போராட்டம் #பணிநிரந்தரம்

TN32 Villupuram Facebook & YouTube பக்கம்

உங்கள் பகுதியில் நடக்கும் குறைகள், நிகழ்ச்சிகள், செய்திகள் எங்கள் பக்கத்தில் வெளியாக வேண்டுமா❓
அப்படியானால் இந்த நம்பருக்கு தொடர்பு கொள்ளுங்கள்:
📞 7010108806 | 9489796000 | 90801 71468

👉 எங்கள் பதிவுகள் முழுமையாக உங்களை வந்தடைய, Follow செய்ய மறக்காதீர்கள் ✅

23/09/2025

“5000 ஆண்டுகள் பழமையான பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவில் | நவராத்திரி யாகம் அதிசயம் |

5000 ஆண்டுகள் பழமையான தென் அகோபிலம் என போற்றப்படும் இத்தலத்தில், வருடந்தோறும் நடைபெறும் நவராத்திரி யாகம் பக்தர்களை ஆனந்தத்தில் ஆழ்த்துகிறது.

ரூணம் – ரோகம் – சத்ரு துன்பங்களை நீக்கும் அருள்மிகு நரசிம்மரை தரிசிக்க, தமிழகத்துடன் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் வந்து பங்கேற்றனர்.

மனதை ஒப்படைத்தால் குறைகள் நீங்கி, கல்வி – வாழ்வில் சிறப்பு பெறுவார்கள் என்ற நம்பிக்கையுடன் பக்தர்கள் விரதமிருந்து வழிபடுகின்றனர்.



TN32 Villupuram Facebook & YouTube பக்கம்

உங்கள் பகுதியில் நடக்கும் குறைகள், நிகழ்ச்சிகள், செய்திகள் எங்கள் பக்கத்தில் வெளியாக வேண்டுமா❓
அப்படியானால் இந்த நம்பருக்கு தொடர்பு கொள்ளுங்கள்:
📞 7010108806 | 9489796000 | 90801 71468

👉 எங்கள் பதிவுகள் முழுமையாக உங்களை வந்தடைய, Follow செய்ய மறக்காதீர்கள் ✅

விழுப்புரம் ரயில் நிலையம் முன்பு போக்குவரத்து தடுக்கும் பதாகை – புகார் மனுவிழுப்புரம்:விழுப்புரம் ரயில் நிலைய முகப்பில்,...
23/09/2025

விழுப்புரம் ரயில் நிலையம் முன்பு போக்குவரத்து தடுக்கும் பதாகை – புகார் மனு

விழுப்புரம்:
விழுப்புரம் ரயில் நிலைய முகப்பில், திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து பதாகை ஒன்று பாண்டி ரோட்டில் வைக்கப்பட்டிருந்தது.

அந்த பதாகை போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததாகக் கூறி, உடனடியாக அகற்ற வேண்டும் என மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

மாவட்ட துணை தலைவர் வடிவேல்பழனி, 28-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் தலைமையில் இருபதுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் சென்று இந்த மனுவை அளித்தனர்.

23/09/2025

பழைய பஸ் நிலையத்தில் மினி பஸ் ஊழியர்கள் இடையே வாக்குவாதம் – பரபரப்பு நிலை

விழுப்புரத்தில் மினி பஸ் இயக்கத்தில் பரபரப்பு! விழுப்புரம்: கடந்த ஜூன் மாதம் முதல் புதிய வழித்தடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், விழுப்புரம் பழைய பஸ் நிலையத்திலிருந்து ஜானகிபுரம், கண்டமானடி வழியாக அரசமங்கலம், புதிய பஸ் நிலையத்திலிருந்து பேரங்கியூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த காலை, பழைய பஸ் நிலையத்தில் மினி பஸ் ஊழியர்கள் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த விழுப்புரம் மேற்கு போலீசார் உடனடியாக சென்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். போலீசார் கூறியதாவது: “புதிய மினி பஸ்கள் இயங்குவதை பொதுமக்கள் வரவேற்கின்றனர். வழித்தட பிரச்சினைகள் இருந்தால், சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அதிகாரிகளிடம் பேசி தீர்வு காணவும். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால், டிரைவர்கள், கண்டக்டர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும்.” இதையடுத்து பழைய பஸ் நிலையத்தில் மினி பஸ்கள் வழக்கம்போல் இயங்கியது

#விழுப்புரம்
#மினிபஸ்_பரபரப்பு
#போக்குவரத்து
#பஸ்_நிலையம்
#போலீஸ்_எச்சரிக்கை
#தந்திTVசெய்தி
#தமிழ்நாடு_செய்திகள்
#விழுப்புரம்_செய்திகள்.

TN32 Villupuram Facebook,youtube பக்கம்
உங்கள் பகுதியில் நடக்கும் குறைகள், நிகழ்ச்சிகள், செய்திகள் எங்கள் பக்கத்தில் வெளியாக வேண்டுமா❓
அப்படியானால் இந்த நம்பருக்கு தொடர்பு கொள்ளுங்கள் 📞7010108806.9489796000. 90801 71468

👉 எங்கள் பதிவுகள் முழுமையாக உங்களை வந்தடைய, எங்களை Follow செய்ய மறக்காதீர்கள்

23/09/2025

"விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் போராட்டம் – பட்டா மாற்றம் கோரி முதியவர் கோஷம்!"

உடலில் பட்டை நாமம் தீட்டி, “சாகும் வரை போராட்டம்” என்ற பதாகையுடன் அமர்ந்த அவர், பட்டா மாற்றம் செய்து தர வேண்டும் என கோஷம் எழுப்பினார். அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தியபோது, அவர் கூறியதாவது: 👉 “எனக்கு சொந்தமான 13 செண்ட் மனையில் வீடு கட்டி வசித்து வந்தேன். சில ஆண்டுகளுக்கு முன்பு என் வீடு தீயில் எரிந்துவிட்டது. அதன்பின் அந்த இடம் காலியாக இருந்தது. பின்னர், கிராம நிர்வாக அலுவலர் அந்த இடத்தை சந்து என பதிவுசெய்துவிட்டார். இதை என் பெயரில் பட்டா மாற்றம் செய்ய பலமுறை விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்துக்கும், 7 கலெக்டர்களுக்கும் மனு கொடுத்தேன். முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் 20 முறை மனு அனுப்பியுள்ளேன். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நான் உயிருடன் இருக்கும் போது எனது பெயரில் பட்டா மாற்றம் செய்து தர வேண்டும்” எனக் கூறினார்.
#விழுப்புரம் #போராட்டம் #கலெக்டர்அலுவலகம் #பட்டாமாற்றம்

TN32 Villupuram Facebook,youtube பக்கம்
உங்கள் பகுதியில் நடக்கும் குறைகள், நிகழ்ச்சிகள், செய்திகள் எங்கள் பக்கத்தில் வெளியாக வேண்டுமா❓
அப்படியானால் இந்த நம்பருக்கு தொடர்பு கொள்ளுங்கள் 📞7010108806.9489796000. 90801 71468

👉 எங்கள் பதிவுகள் முழுமையாக உங்களை வந்தடைய, எங்களை Follow செய்ய மறக்காதீர்கள்

22/09/2025

விழுப்புரம் மாவட்டம், உலகப் பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் புரட்டாசி மஹாளய அமாவாசை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

அதிகாலை முதலே நடை திறக்கப்பட்டு, மூலவர் – உற்சவர் அங்காளம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
🔸 பின்னர் பட்டாடை அலங்காரம், வண்ண மலர்கள், சர்க்கரை பொங்கல், சுண்டல், பழங்கள் வைத்து நெய்வேத்தியம், தீபாராதனை நடைபெற்றது.
🔸 நீண்ட வரிசையில் காத்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மாலை, உற்சவர் அங்காளம்மன் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சல் மண்டபத்திற்கு கொண்டுவரப்பட்டு, பூசாரிகள் தாலாட்டு பாடி தீபாராதனை செய்து ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

📌 பக்தர்கள் பலர் விரதம் இருந்து கையில் தீபம் ஏந்தி, “ஓம் சக்தி அங்காளம்மா” எனக் கோஷமிட்டு தரிசனம் செய்தனர்.

👮‍♂️ கூட்ட நெரிசலை தவிர்க்க 600-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
🛑 கோவில் நிர்வாகம் சார்பில் குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

இந்த உற்சவத்தில் கோவில் உதவி ஆணையர் சக்திவேல், அறங்காவலர் குழுத் தலைவர் ஏழுமலை பூசாரி (சேட்டு) மற்றும் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

#விழுப்புரம் #மேல்மலையனூர் #அங்காளம்மன் #ஊஞ்சல்உற்சவம் #மஹாளயஅமாவாசை

TN32 Villupuram Facebook,youtube பக்கம்
உங்கள் பகுதியில் நடக்கும் குறைகள், நிகழ்ச்சிகள், செய்திகள் எங்கள் பக்கத்தில் வெளியாக வேண்டுமா❓
அப்படியானால் இந்த நம்பருக்கு தொடர்பு கொள்ளுங்கள் 📞7010108806.9489796000. 90801 71468

22/09/2025

விழுப்புரம் – அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களை முழுநேர அரசு ஊழியர்களாக மாற்ற வேண்டும்

விழுப்புரம் மாவட்ட தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், நேற்று மாலை விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகிலுள்ள நகராட்சி திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராமதிலகம் தலைமை தாங்கினார். செயலாளர் மலர்விழி முன்னிலை வகித்தார்.

சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் முத்துக்குமரன், பொருளாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் உரையாற்றி, கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

முக்கிய கோரிக்கைகள்:
அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களை முழுநேர அரசு ஊழியர்களாக மாற்ற வேண்டும்
மாத ஊதியம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும்
ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் + அகவிலைப்படி வழங்க வேண்டும்
✔️ அங்கன்வாடி ஊழியருக்கு ரூ.10 லட்சம், உதவியாளருக்கு ரூ.5 லட்சம் பணிக்கொடையாக வழங்க வேண்டும்

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் சுதா, நிர்வாகிகள் பிரேமா, தீபா, ஷர்மிளா, ஜோதி, ராதா, உஷா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

#விழுப்புரம் #அங்கன்வாடி #ஆர்ப்பாட்டம்

TN32 Villupuram Facebook,youtube பக்கம்
உங்கள் பகுதியில் நடக்கும் குறைகள், நிகழ்ச்சிகள், செய்திகள் எங்கள் பக்கத்தில் வெளியாக வேண்டுமா❓
அப்படியானால் இந்த நம்பருக்கு தொடர்பு கொள்ளுங்கள் 📞7010108806.9489796000. 90801 71468

👉 எங்கள் பதிவுகள் முழுமையாக உங்களை வந்தடைய, எங்களை Follow செய்ய மறக்காதீர்கள்

22/09/2025

விழுப்புரம் மாவட்டத்தில் யூரியா தட்டுப்பாடு – விவசாய சங்கம் வலியுறுத்தும் கோரிக்கை!"

#விழுப்புரம் #விவசாயம் #யூரியா #உரத்தட்டுப்பாடு #விவசாயிகள்கோரிக்கை

TN32 Villupuram பக்கம்
உங்கள் பகுதியில் நடக்கும் குறைகள், நிகழ்ச்சிகள், செய்திகள் எங்கள் பக்கத்தில் வெளியாக வேண்டுமா❓
அப்படியானால் இந்த நம்பருக்கு தொடர்பு கொள்ளுங்கள் 📞7010108806.9489796000. 90801 71468

👉 எங்கள் பதிவுகள் முழுமையாக உங்களை வந்தடைய, எங்களை Follow செய்ய மறக்காதீர்கள்

Address

Villupuram

Alerts

Be the first to know and let us send you an email when News 32 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News 32:

Share