02/10/2021
102 ஆம் ஆண்டில் விழுப்புரம் நகராட்சி...
01.10.1919 இல்
மூன்றாம் நிலை நகராட்சியாகத் தொடங்கப்பட்ட விழுப்புரம் நகராட்சி 1953 ல 2 ஆம் நிலை நகராட்சியாகவும் 1973 ல முதல் நிலை நகராட்சியாகவும் 1988 ல தேர்வு நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது.
தொடக்கத்தில் ஆஸ்பத்திரி ரோடு காமராஜர் சாலை சந்திப்பில் இயங்கிய நகராட்சி அலுவலகம் 1962 இல் இருந்து பண்டிட் ஜவஹர்லால் நேரு வீதியில் இயங்கி வருது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நகர மன்றம் 1922 ல அமைந்தது.
விழுப்புரம் நகர மன்றத்தின் முதல் தலைவராக நீதிக்கட்சியைச் சேர்ந்த திரு.என்.சுப்புராயப்பிள்ளை தேர்ந்தெடுக்கப்பட்டார். திரு.எம்.சண்முகம், திரு.எஸ்.சிதம்பர ஐயர்,திரு.என்.கோவிந்நராஜிலு திரு முகமது உஸ்மான் சாயபு, திரு.இ.கன்னைய நாயுடு ஆகியோர் விழுப்புரம் நகரமன்றத்தில் நீண்ட காலம் பணியாற்றியவர்கள்.
எம் எல் சி ஆகவும் தமிழக அமைச்சராகவும் இருந்த திரு. எஸ். ராகவானந்தம் அவரது மனைவி மங்கலம்மாள் ஆகியோரும் விழுப்புரம் நகரமன்றத்தில் உறுப்பினர்களாக இருந்திருக்காங்க.
10.01.1953 ல நடந்த நகரமன்றக் கூட்டத்துல மூத்த உறுப்பினர் கோவிந்தராஜிலு நாயுடு வடக்கே திருப்பதி மலையில் இருந்து தெற்கே கன்னியாகுமரி வரை தமிழ்நாட்டை ஒன்றாக்கி தனிநாடாக்க வேண்டும் என முழங்கியது குறிப்பிடத்தக்கது.
1941இல் ரவீந்திரநாத் தாகூர் மறைவின் போது மூத்த உறுப்பினர் முகமது உஸ்மான் சாயபு பகதூர் கொண்டு வந்த இரங்கல் தீர்மானம் விழுப்புரத்தின் இலக்கிய செழுமைக்கு உதாரணம் ஆகும்.
1964 69 காலகட்டத்தில் விழுப்புரம் நகரமன்றத் தலைவராக இருந்த டாக்டர் டி. தியாகராஜன் அவர்களோட பணி மகத்தானது ன்னு சொல்லாம்.
இவர் காலத்தில் தான் தென்பெண்ணை ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வரப்பட்டு வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீராக வழங்கப்பட்டது....
எழுத்தாளர்
விழுப்புரம் கோ.செங்குட்டுவன்
இதுபோன்ற தகவல்களுடன்... அப்புறம் விழுப்புரம் யூடியூப் சேனலில் இப்போது...
#அப்புறம்விழுப்புரம்
விழுப்புரம் நகராட்சி இன்று 102 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதுபற்றிய பதிவு. #விழுப்புரம்நகராட்சி #விழுப்ப....