AK Legal Advisor

AK Legal Advisor We will do what we can
for those who have nothing.

26/08/2026

வேளாண்மைத் துறை மாதிரி மனு

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 6(1) இன் கீழ் மனு

*மனுதாரர்:*

*பெறுநர்:*

பொது தகவல் அலுவலர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மாவட்டம்.

பொருள்:
கீழ்க்கண்ட தகவல்கள் அனைத்தும் .
______ மாவட்டம், _______ தாலுகா, ______ வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம் சம்பந்தமாக கோரப்படுகிறது.

*மதிப்பிற்குரிய அலுவலர்அவர்களுக்கு,*

1. பணி நேரத்தில், அனைத்து அரசு அலுவலர்களும் அடையாள அட்டை அணிந்து பணிபுரிய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் பிறப்பித்த ஆணையை(W.P.NO 15640 of 2018) மதித்து மேற்படி அலுவலகத்தில் 01/01/2018 ஆம் தேதி முதல் 30/12/2020 ஆம் தேதி வரை பணியிலிருந்த ஊழியர்கள் அனைவரும் அணிந்துள்ள அடையாள அட்டையின் ஒளிநகல்கள்.

2. தங்களது அலுவலகத்தில் 1.1.2024 ஆம் ஆண்டு முதல் 31.12.2025 ஆண்டு வரை பிரதமந்திரியின் கிசான் மற்றும் இலவச சொட்டுநீர் பாசான வசதி திட்டத்தின் கீழ் பயனடைந்தவர்களின் பெயர்கள் மற்றும் விலாசம் உட்பட அவர்களுடைய பட்டா எண் மற்றும் புல எண் விபரம் அடங்கிய கோப்புகளின் ஒளி நகல்கள்.

3. மத்திய மாநில அரசுகளின் விவசாய மானிய திட்டங்களை பெற குறைந்தபட்ச தகுதிகள் என்னென்ன என்பது பற்றிய சுற்றறிக்கையின் ஒளி நகல்கள்.

4. 1/01/2024ம் ஆண்டு முதல் 31/12/2025 வரை உளுந்து, மக்காசோளம் மற்றும் உழவு மானியம் பெற்ற விவசாயிகள் பெயர்கள் அடங்கிய கோப்புகளின் ஒளி நகல்கள்.

5. ____ வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பணிபுரிந்து வருபவர்களின் பெயர், அவர்களின் பதவி விபரம். இந்த அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் பணியாளர்கள் ஒவ்வொருவரும் எத்தனை ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர் அதன் விபரம் அடங்கிய கோப்புகளின் ஒளி நகல்கள்.

6. விவசாய அலுவலர்கள் விவாசய இடங்களுக்கு சென்று ஆய்வு செய்த நாள், எந்தெந்த விவசாயிகளின் இடங்களுக்கு சென்று ஆய்வு செய்தனர் அதன் விபரம் அடங்கிய ஆவண கோப்புகளின் ஒளி நகல்கள்.

7. 01/ 01/2024 முதல் 31/12/2025 வரை விவசாய அலுவலர்கள் விவசாய இடங்களை ஆய்வு செய்வதற்கு சென்று வர ஆன செலவினங்களின் ரசீதுகளின் ஒளி நகல்கள்.

8. மேற்படி அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து அலுவலர்களின் பெயர், பதவியின் பெயர், அலுவலக அஞ்சலக முகவரி ஆகியவற்றை சட்டப்பிரிவு 4 (1)( b) க்கு கீழ்ப்படிந்து வழங்க வேண்டுகிறேன்.

9. மேற்கண்ட அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சிறு மற்றும் குறுவிவசாயிகளின் எண்ணிக்கை மற்றும் முழுமுகவரி கிராமம்வாரியாக விவரம் தர வேண்டுகிறேன்.

இப்படிக்கு

இடம்:

நாள்:

26/08/2026
26/08/2026

நிலத்தின் உரிமை தொடர்பான வழக்கில் அதிரடி; வருவாய்த்துறை ஆவணங்கள் மட்டுமே ஒருவரின் சொத்துரிமையை தீர்மானிக்காது: ஐகோர்ட் தீர்ப்பை ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்...

✅ வருவாய்த்துறை ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்யப்படுவதால் மட்டுமே ஒருவருக்கு நிலத்தின் முழுமையான சொத்துரிமை கிடைத்துவிடாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தீர்ப்பளித்துள்ளது.

✅ மத்திய பிரதேச மாநிலத்தில் நிலத்தின் உரிமை தொடர்பான வழக்கொன்றில், வருவாய்த்துறை ஆவணங்களின் பதிவை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அங்குள்ள உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

✅ நில உரிமை தொடர்பான வழக்குகளில், அரசுக்கு வரி செலுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் வருவாய்த்துறை பெயர் மாற்ற பதிவுகள் மட்டுமே ஒருவரது சொத்துரிமையை நிரூபிக்க போதுமானதா என்ற கேள்வி சட்டரீதியாக எழுப்பப்பட்டது.

👌 இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு, மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.

அப்போது நீதிபதிகள்,
✅ ‘வருவாய்த்துறை ஆவணங்களில் உள்ள பதிவு என்பது ஒரு சொத்தின் உரிமையை உருவாக்கவோ அல்லது பறிக்கவோ செய்யாது;

✔️ அது வரி வசூலிக்கும் நிர்வாக பணிகளுக்காக மட்டுமே செய்யப்படுகிறது என்பது சட்டத்தில் நிலைநாட்டப்பட்ட விதியாகும்.

✔️ வட்டாட்சியரின் உத்தரவு வருவாய் பதிவேட்டை (பட்டா, சிட்டா, அடங்கல், புலப்படம்) சீரமைக்கலாமே தவிர, ஒருவரது பெயரை நீக்கி மற்றொருவர் பெயரை பதிவிடுவதன் மூலம் சொத்துரிமையை விட்டுக் கொடுத்ததாகவோ அல்லது கைமாறியதாகவோ கருத முடியாது;

✔️ நிலத்தின் மூல உரிமையை தீர்மானிக்கும் முழு அதிகாரம் சிவில் நீதிமன்றங்களுக்கே உண்டு’ என்று தெரிவித்தனர்.

✅ மேலும், ‘மத்திய பிரதேச நில வருவாய் சட்டம் 1959ம் ஆண்டின் பிரிவு 117ன் கீழ் வருவாய்த்துறை பதிவுகளுக்கு வழங்கப்படும் அனுமானம் என்பது மற்ற ஆதாரங்களுடன் ஒப்பிட்டு மறுக்கப்படக்கூடிய சான்றேயன்றி, அதுவே உரிமையியல் உரிமைக்கான முழு சான்று ஆகாது.

✅ பிற ஆவண ஆதாரங்களுடன் இணைத்து பார்த்தே உரிமையை முடிவு செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்ட நீதிபதிகள், ‘வருவாய்த்துறை பதிவேட்டில் பெயர் சேர்க்கப்பட்ட தேதியை மட்டுமே கொண்டு ஒரு சொத்து வழக்கின் காலவரையறையை நிர்ணயிக்க முடியாது’
என்றும் தங்களது உத்தரவில் தெளிவுபடுத்தினர்.

ஜீவனாம்சத்தை மறுத்த பின் அதை வன்கொடுமை வழக்கு மூலம் பெற முடியுமா? உச்ச நீதிமன்றம் உத்தரவு?விவாகரத்து ஒப்பந்தத்தில் கைவிட...
25/08/2026

ஜீவனாம்சத்தை மறுத்த பின் அதை வன்கொடுமை வழக்கு மூலம் பெற முடியுமா? உச்ச நீதிமன்றம் உத்தரவு?

விவாகரத்து ஒப்பந்தத்தில் கைவிடப்பட்ட பணக் கோரிக்கையை, குடும்ப வன்முறைச் சட்ட நடவடிக்கைகளில் மீண்டும் செயல்படுத்த முடியாது: உச்ச நீதிமன்றம் சைமா அஞ்சும் 24 ஆகஸ்ட் 2026 மாலை 7:49 (8 நிமிட வாசிப்பு) இதை பகிரவும் இந்தக் கட்டுரையை கேளுங்கள் உச்ச நீதிமன்றம் திங்களன்று (24.08.2026), ஒரு மனைவியும் மகளும் கணவருக்கு எதிராகத் தொடங்கிய, குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம், 2005 (DV சட்டம்) இன் கீழ் உள்ள நடவடிக்கைகளை ரத்து செய்துள்ளது. இந்த நடவடிக்கைகளை ரத்து செய்தபோது, ​​குடும்ப நீதிமன்றத்தில் ஒரு சமரச ஒப்பந்தம் மற்றும் அதைத் தொடர்ந்த பிரமாணப் பத்திரம் மூலம், ஜீவனாம்சம் உட்பட அனைத்து பணக் கோரிக்கைகளையும் மனைவி தானாக முன்வந்து கைவிட்ட பிறகு, "அத்தகைய கோரிக்கைகளை அடுத்தடுத்த நடவடிக்கைகள் மூலம் மீண்டும் எழுப்ப அனுமதிக்க முடியாது" என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.




24/08/2026

தகுதியற்ற நபருக்கு வழங்கப்பட்ட
அரசு நில (ஒதுக்கீட்டை) ரத்து செய்து,
தகுதியானவர்களுக்கு ஒதுக்கீடு செய்யலாம்!” என சென்னை
உயர்நீதிமன்றம் என்ற வழக்கில்
WP.No.12833 of 2020 &
W.P.No.15312 of 2020 தீர்ப்பு

24/08/2026

1078 நாட்களாக...
#வண்டிப்பாதை_மூடப்பட்டுள்ளது ⬇

✅ 'மேலராஜகுலராமன்' கிராமம்
✅ எஸ்.திருவேங்கிடபுரம் சட்டிகிணறு
✅ NH 744 - SH 186 to குருநாதர் நகர்
✅ ராஜபாளையம் வட்டம்
✅ விருதுநகர் மாவட்டம்

🚨 பட்டா நிலத்தில் FMB-ல் குறியிடப்பட்ட பாதை அரசுப் பாதையாகும்; பொதுமக்கள் பயன்படுத்துவதை யாரும் தடுக்க முடியாது – சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!

பட்டா நிலத்திற்குள் FMB (Field Measurement Book)-ல் குறியிடப்பட்ட பாதை இருந்தால், அந்தப் பாதையை தனிப்பட்ட சொத்து என்று கூறி பொதுமக்கள் பயன்படுத்துவதை யாரும் தடுக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு வண்டிப்பாதையை (Cart Track) தனிப்பட்ட பாதை எனக் கூறி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. மனுதாரர்கள், அந்தப் பாதை பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வரும் பாதை என்றும், FMB, அடங்கல் உள்ளிட்ட வருவாய் பதிவுகளில் "நிலவியல் பாதை" என பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வாதிட்டனர்.

வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், FMB, Survey Plan, Adangal மற்றும் பிற வருவாய் பதிவுகள் அனைத்தையும் ஆய்வு செய்து, அந்தப் பாதை அரசுப் பதிவுகளில் குறியிடப்பட்ட பொதுப் பயன்பாட்டிற்குரிய பாதை என்பதால், அதை யாரும் தனிப்பட்ட சொத்தாக உரிமை கோர முடியாது என்று தெளிவுபடுத்தியது.

மேலும், Revenue Standing Order (RSO) 26(15)-ன் அடிப்படையில், பட்டா நிலத்தில் இருந்தாலும் FMB-ல் குறியிடப்பட்ட Plan Marked Pathway அரசுப் பாதையாகவே கருதப்பட வேண்டும் என்றும், பொதுமக்கள் பயன்படுத்தி வரும் அத்தகைய பாதையை வேலி அமைத்தோ, கேட் பொருத்தியோ அல்லது வேறு எந்த வகையிலும் மறிக்கவோ முடியாது என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

இந்த வழக்கில், எதிர்மனுதாரர்கள் 1997-ஆம் ஆண்டு ஏற்பட்டதாகக் கூறிய சமரசத்தின் அடிப்படையில் அந்தப் பாதை தனிப்பட்டது என வாதிட்டாலும், அதற்கான உரிய ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாததால் அந்த வாதம் ஏற்கப்படவில்லை.

இறுதியாக, சென்னை உயர்நீதிமன்றம் இரண்டாம் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து, மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்ததுடன், மனுதாரர்களுக்கும் பொதுமக்களுக்கும் அந்தப் பாதையை தொடர்ந்து பயன்படுத்த முழு உரிமை உண்டு என்று தீர்ப்பளித்தது.

⚖️ வழக்கு விவரங்கள்

நீதிமன்றம்: சென்னை உயர்நீதிமன்றம்
நீதிபதி: மாண்புமிகு நீதியரசர் P. ராஜமாணிக்கம்
வழக்கு எண்: S.A. No.1363 of 2005
தீர்ப்பு நாள்: 25.10.2019

24/08/2026

ஒருவர் வாங்கிய கடனுக்காக உறவினர்/ நண்பர் கொடுக்கும் காசோலையை வைத்து காசோலை மோசடி வழக்கு தாக்கல் செய்யலாம்

Case Title: Sunaina Chauhan vs State of Haryana
Case Number: CRR-1281-2025
CITATION: 2026 LLBiz HC (PNH) 17

ஒரு நபர் கடன் பெறும்போது பிணையமாக தனது நண்பரிடம் அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவரிடம் இருந்து காசோலையை கடன் கொடுக்கும் நபரிடம் கொடுத்தால், அதை வைத்து காசோலை மோசடி வழக்குத் தாக்கல் செய்யலாம்.

மேலும் கடன் பெறும்போது தன்னிடம் காசோலை இல்லையென்று சகயிரிட்டிற்காக நண்பர் அல்லது மற்றவரின் காசோலையைப் பெற்று காசோலை கொடுத்தவரிடம் கொடுத்தால் அந்த காசோலை கொடுத்தவருக்கு எதிராக காசோலை மோசடி வழக்கு தாக்கல் செய்யலாம்.

மேற்படி செக்யூரிட்டியாக கொடுக்கப்பட்ட காசோலையில் உள்ள கையொப்பம் காசோலைக்கு உடையவர் என்பதாலும் காசோலையில் உள்ள தொகைக்கு அவரே பொறுப்பாளர் என்பதால் காசோலையின் உரிமையாளர் தொகையை செலுத்த உத்தரவு.

24/08/2026

நீதிமன்றத் தீர்ப்பு – கடன் தொடர்பான வழக்கு

செக் படிவன்ஸ் வழக்குகளில் பணம் கொடுத்த நபர் வருமான வரி கணக்குக்கு தாக்கல் செய்யும்போது கடன் கொடுத்த பணத்தை கணக்கில் காண்பிக்கவில்லை என்பதை மட்டுமே எதிரி டிபென்ஸ் எடுக்க முடியாது என டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு.

Rajinder Singh Tokas Vs Akshay Kumar Rathi என்ற வழக்கில் வருமான வரி கணக்கில் கடன் கொடுத்த பணத்தை பற்றி தகவலில் இல்லை என டிபென்ஸ் செய்வது கடன் கொடுத்ததை இல்லையென மறுக்கும் விதமாக எடுத்துக்கொள்ள முடியாது என நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

Source of Income இல் சந்தேகம் உள்ளது என போதுமான டிபென்ஸ் எதிரி தரப்பில் வைத்தாலும், அதனை முழுவதுமாக நிரூபிக்க வேண்டிய சுமை எதிரி தரப்பிற்கே உண்டு.

மேலும் வெறுமனே Source of Income இல்லையென டிபென்ஸ் வைத்ததால் நீதிமன்றம் ஏற்காது, கடன் கொடுத்த நபருக்கு பணம் கொடுக்க வசதி இல்லையென்பதற்கான நேரடி அல்லது ஆவண சாட்சியம் கொண்டு டிபென்ஸ் செய்ய வேண்டும்.

24/08/2026

செக் பவுன்ஸ் வழக்கில் பணம் நேரடியாக கொடுத்ததை எவ்வாறு நிரூபிக்க வேண்டும்

வங்கி பரிவர்த்தனை மூலமாக பணம் கொடுக்காமல் நேரடியாக கையில் கொடுத்த பணத்தை எவ்வாறு நிரூபிக்க வேண்டும் என்றால், பழக்க வழக்கத்தில் குடும்ப செலவிற்காக கேட்டதால் பணம் கொடுத்தேன் என வழக்கு மனுவில் சொல்லியிருந்தால் அதனை அவரே நிரூபிக்க வேண்டும் என தான் நீதிமன்றம் முடிவுக்கு வருகிறது.

ஆனால் மாற்றுமுறை ஆவண சட்டத்தில் 188 பிரிவு 139ல் கொடுக்கப்பட்ட அனுமானத்தை எதிரி மறுக்க எந்தவிதமான ஆவண சாட்சியத்தையோ எதிரி தாக்கல் செய்ய வேண்டும். பணம் கொடுக்கப்பட்டதற்கு ஆவணங்கள் இல்லையென்பதை மட்டுமே வைத்து எதிரியை விடுதலை செய்ய கூடாது.

எதிரி ஏன் புகார்தாரருக்கு செக் கொடுத்தார் அதில் உள்ளது அவரது கையொப்பம் என்று எதிரி ஒப்புக் கொண்டால் பிரிவு 118 இன் கீழ் எதிரிக்கு எதிராக நீதிமன்றம் அனுமானம் கொண்டு குற்றப்பத்திரிகை கடனுக்கு தான் எதிரி செக் கொடுத்தார் என தீர்ப்பளிக்கலாம்.

புகார்தாரர் கொடுத்த பணத்திற்கு ஆதாரம் இல்லையென்றாலும் இதுபோன்று எதிரிக்கு தண்டனை அளிக்கப்படும். புகார்தாரரால் Financial Capacity உள்ளது என நிரூபிக்கப்படவில்லை என்பதை வைத்து எதிரியை விடுதலை செய்ய கூடாது.

✅ சீர்திருத்த பத்திரம் போடாமல் ஆவணத்தில் உள்ள புல எண்ணை பதிவேற்றம் செய்யாமல் புலத்தில் உள்ள சர்வே எண்ணை சர்வேயர் / இடைத்...
20/08/2026

✅ சீர்திருத்த பத்திரம் போடாமல் ஆவணத்தில் உள்ள புல எண்ணை பதிவேற்றம் செய்யாமல் புலத்தில் உள்ள சர்வே எண்ணை சர்வேயர் / இடைத்தரகர்கள் துணையுடன் பதிவேற்றம் செய்வது...

✅ ஆன்லைன் விண்ணப்பத்தில் ஆவண எண், சார்பதிவாளர் அலுவலகத்தின் பெயர், பத்திரப்பதிவு செய்த நாள் ஆகியவற்றை பதிவு செய்யாமலும், தவறாக / முறைகேடாக பதிவு செய்வது...

✅ ஆவணத்தில் உள்ளவரின் பெயரில் மனு செய்யாமல் அடுத்தவர் பெயரிலும் / இடைத்தரகர் பெயரிலும் மனுவை பதிவேற்றம் செய்வது...

✅ வாரிசு சான்றிதழ் விண்ணப்பிக்கும் போது தந்தை தாய் வயதை 150 , 170 என பதிவேற்றம் செய்வது...

✅ இப்படி பல தில்லாலங்கடி வேலையெல்லாம் யாரு செஞ்சு கொடுக்காங்களோ அந்த இசேவை மையத்தில்தான் இடைத்தரகர்கள் / சர்வேயர் துணையுடன் அமோகமாக வியாபாரம் நடக்கிறது...

✅ வெறும் வெள்ளை பேப்பரை மட்டும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்து பட்டாவுக்கு விண்ணப்பிக்கும் கூத்தும் நடக்கிறது...

Address

Villupuram
Villupuram

Alerts

Be the first to know and let us send you an email when AK Legal Advisor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share