Kalam Puthithu

Kalam Puthithu கருத்துகளின் புதிய களம்.
தமிழ் எழுத்தும் சிந்தனையும் ஒன்றாகும் இடம்.

தொண்ணூறுகள் முதல் இலக்கியப் புலத்தில் அறிமுகமான அமைப்பு ‘களம் புதிது’. மாற்றுப் பண்பாடு, மற்றும் நவீன இலக்கியம் சார்ந்த உரையாடல்களுக்கு தமிழகமெங்கும் மேடை அமைத்துக் கொடுத்த அமைப்பு. இலக்கியம், மற்றும் நவீனக் கோட்பாடுகள் குறித்த இலக்கிய இதழாகவும் சில காலம் பரிணாமம் பெற்றிருந்தது. தமிழின் ஆகச்சிறந்த கவி ஆளுமைகளை அடையாளம் கண்டு ஆண்டுதோறும் ‘களம் புதிது கவிதை விருது’ வழங்கி பெருமைப் படுத்தும் இல

க்கியக் களமாகவும் இது செயல்படுகிறது. தமிழர் நலன் பொருட்டு இயங்கி வருகிற ஆளுமைகளுக்கு , ‘தமிழ்ப் பேராளுமை’ விருது வழங்கி கவனத்தை ஈர்த்த அமைப்பு. இலக்கியப் பரப்பில் தமிழின் பன்மைத்துவத்தைவளர்த்தெடுக்கவும் புதுமையான இலக்கிய முயற்சிகளை அங்கீகரிக்கவும், களம் புதிது பதிப்பகமாகவும் தனது இயக்கத்தைவிரிவுபடுத்துகிறது.

11/06/2026

 #கவிஞர்_கரிகாலன்”வையத் தலைமைகொள்!”
27/05/2026

#கவிஞர்_கரிகாலன்
”வையத் தலைமைகொள்!”

இ.எம்.எஸ் கலைவாணனின்வண்ணத்துப் பூச்சிகள் அருவருப்பானவை கவிதை நூல் வெளியீட்டு விழாநூல் அறிமமுக உரை கவிஞர் கரிகாலன்வாழ்த்த...
17/05/2026

இ.எம்.எஸ் கலைவாணனின்
வண்ணத்துப் பூச்சிகள் அருவருப்பானவை
கவிதை நூல் வெளியீட்டு விழா

நூல் அறிமமுக உரை
கவிஞர் கரிகாலன்

வாழ்த்துரை
செயற்பாட்டாளர் M.D கனகாம்பாள்
கவிஞர் நட சிவக்குமார்
எழுத்தாளர் களத்திரகோபன்
எழுத்தாளர் மலர்வதி
விமர்சகர் இஎம்எஸ் ஜீவலதா

நிகழ்வு ஏற்பாடு
தக்கலை இலக்கிய வட்டம்

#இஎம்எஸ்கலைவானன்
#களம்புதிது

இ.எம்.எஸ் கலைவாணனின்"வண்ணத்துப் பூச்சிகள் அருவருப்பானவை"கவிதை நூல் வெளியீட்டு விழாநிகழ்வு ஏற்பாடு:தக்கலை இலக்கிய வட்டம்1...
17/05/2026

இ.எம்.எஸ் கலைவாணனின்
"வண்ணத்துப் பூச்சிகள் அருவருப்பானவை"
கவிதை நூல் வெளியீட்டு விழா

நிகழ்வு ஏற்பாடு:
தக்கலை இலக்கிய வட்டம்
17.05.2026, ஞாயிறு மாலை 4.00
ஆயர் இல்ல வளாக அரங்கம்,
ராணித் தோட்டம் ரோடு,
நாகர்கோவில்

அனைவரும் வருக!

வாசிக்கும் தமிழகம்~என் பால்யத்தின் கோடை காலம் மறக்கவியலாதது. அப்போது எங்கள் வீட்டில் ஒரு டிவி கூட இல்லை. அப்பா ஆசிரியர்....
27/03/2026

வாசிக்கும் தமிழகம்

~

என் பால்யத்தின் கோடை காலம் மறக்கவியலாதது. அப்போது எங்கள் வீட்டில் ஒரு டிவி கூட இல்லை. அப்பா ஆசிரியர். படிக்கும் பழக்கம் உள்ளவர். குமுதம், விகடன், ராணிமுத்து, மாலைமதி, வாங்கி வருவார். இதனால் இயல்பாகவே படிக்கும் வழக்கம் தொற்றிக் கொண்டது.

கோடை விடுமுறைக்கு அம்மா பிறந்த ஊரான சேதியூர் போவோம். எங்கள் மாமன் மகன்கள், மகள்கள் அனைவரும் வாசிப்பவர்கள். வாண்டு மாமா, இரும்புக்கை மாயாவி இப்படி வகைதொகை இல்லாமல் படித்தோம்.

எங்கள் மாமன்களில் ஒருவர் பி.ஏ வரலாறு படித்தார். இன்னொருவர் தமிழ்ப் புலவர் படித்தார். கதைப் புத்தகங்கள் தீர்ந்தபோது இந்திய, உலக வரலாற்றுப் புத்தகங்களைப் படித்தேன். சங்க இலக்கியங்களைப் படித்தேன்.

மணிமுத்தா நதியைப்போல எங்கள் கற்பனை ஊற்றெடுத்த காலம். கதைகள் வளர்ந்த காலம். சுஜாதா, சாண்டில்யன், புலியூர் கேசிகன் போன்றோர் எங்கள் வெய்யிலை அழித்தார்கள். தாகத்துக்கு புத்தகங்களைப் பருகினோம்.

இன்றைய அதிவேக உலகில், ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள் மற்றும் சமூக ஊடகங்கள் அன்றாட வாழ்வில் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டன. மக்கள் சராசரியாக ஐந்து மணி நேரம் தங்கள் மொபைல் சாதனங்களில் செலவிடுவதாக சமீப ஆய்வொன்று தெரிவிக்கிறது.

அதீதப் பயன்பாடு பெரும்பாலும் மன அழுத்தம், தூக்கமின்மை மற்றும் பதட்டத்திற்கு வழிவகுக்கிறது. இப்போது Digital Detox அவசியமாகத் தேவைப்படுகிறது.

மன, உடல் ஆரோக்கியத்தின் சமநிலையை மீட்டெடுக்க, திரைகள் மற்றும் ஆன்லைன் செயல்பாடுகளிலிருந்து சிறிய இடைவேளை தேவைப்படுகிறது.

வரப்போகும் கோடையில் நமது கவனத்தையும் படைப்புத் திறனையும் மேம்படுத்த சில முயற்சிகள் மேற்கொள்ளலாம்.

அதற்கு நாம் அதிகம் புழங்கும் படுக்கையறை, உணவு மேசை போன்ற இடங்களில் திரைப் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும்.

மாறாக புத்தகங்கள் படிப்பதை அதிகமாக்க வேண்டும். இதற்கு இசைவாக ,களம் புதிது பதிப்பகம், தன் வெளியீடுகளை மே மாதம் முடியும்வரை 25% கழிவில் தருகிறது.

வாசிப்பில் அக்கறையுடையோர் பயனடைவீர்.

#கோடை_வாசிப்பு
#களம்_புதிது

ரமலான் சிறப்பு வெளியீடு~உலகெங்கும் வாழும் இசுலாமியப் பெருமக்களுக்கு ரமலான் வாழ்த்துகள்.  களம் புதிது பதிப்பகம் பெருநாளைக...
20/03/2026

ரமலான் சிறப்பு வெளியீடு
~
உலகெங்கும் வாழும் இசுலாமியப் பெருமக்களுக்கு ரமலான் வாழ்த்துகள்.

களம் புதிது பதிப்பகம் பெருநாளைக் கொண்டாடும் வகையில் இலங்கை தமிழ்க் கவிஞர் நோவா லைஸின் 'சிறிய புகைப்படத்தின் பின் குறிப்பு' கவிதை நூலைக் கொண்டு வந்துள்ளது.

இந்நூலை திரைப்பட இயக்குனர் மீரா கதிரவன் அவர்கள் வெளியிட கவிஞர் கரிகாலன் பெற்றுக் கொள்கிறார். அருகில் கவிஞர் பாரதி ஆர்.

#ரமலான் #களம்புதிது #நோவாலைஸ்

வாசிப்பீராக.. படைத்த இறைவனின் பெயரால், அவன் பேனாவைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். அவன்தான் மனிதன் அறியாதவற்றை எல்லாம் அவனு...
18/03/2026

வாசிப்பீராக..

படைத்த இறைவனின் பெயரால், அவன் பேனாவைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். அவன்தான் மனிதன் அறியாதவற்றை எல்லாம் அவனுக்குக் கற்றுக்கொடுத்தான்’.
(ஆதாரம்-: ஸூரதுல் அலக் 1-5)

28/02/2026

ராம் வசந்த்தின் “தேன்மொழி கவிதைகள்” குறித்து கவிஞர் கலியமூர்த்தி

களம் புதிது வெளியீடுகள்
26/02/2026

களம் புதிது வெளியீடுகள்

அஞ்சலி------------நல்லக்கண்ணு அவர்கள் இலட்சியவாதமும் நடைமுறையும் இணையப்பெற்ற ஒரு நெகிழ்வான இடதுசாரி தலைவராக விளங்கியவர்....
25/02/2026

அஞ்சலி
------------

நல்லக்கண்ணு அவர்கள் இலட்சியவாதமும் நடைமுறையும் இணையப்பெற்ற ஒரு நெகிழ்வான இடதுசாரி தலைவராக விளங்கியவர். தலைவர் என்பது நாம் அவருக்கு தரும் மரியாதை. மாறாக அவர் தன்னை ஒரு தோழராக மட்டுமே உணர்ந்தவர்.

#அஞ்சலி #தோழர்நல்லகண்ணு

Address

Virudhachalam
Vriddhachalam
606001

Alerts

Be the first to know and let us send you an email when Kalam Puthithu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category