
16/08/2025
குவைத்தில் தமிழர் மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது..
குவைத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஜனாப். மஜீத் ஷேக் தாவூத் (வயது 59) கும்பகோணம் திருபுவனம் ஊரைச் சார்ந்தவர்.
நேற்று வெள்ளிக்கிழமை 15.08.2025 அன்று மாரடைப்பால் இயற்கை எய்தினார்.
*திமுக தளபதி பேரவை - குவைத்* மேட்டுப்பட்டி ராஜா முஹம்மது அவர்கள் மூலம் தகவல் கிடைத்ததன் பெயரில் உதவும் கரங்கள் குவைத் நிர்வாகிகள் உடனடியாக களமிறங்கி அனைத்து வேலைகளும் முடிக்கப்பட்டு அண்ணாரின் நல்லடக்கம் *16.08.2025* சனிக்கிழமை இன்று மாலை *06:30* மணிக்கு மஃக்ரிப் தொழுகைக்கு* பிறகு சுலைபிகாத் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது..
தகவல்
உதவும் கரங்கள் குவைத்
குவைத் தமிழ் சோசியல் மீடியா/ktsm