23/11/2022
குவைத் சுகாதாரத்துறை மகப்பேறு மருத்துவமனைகளில் பிரசவக் கட்டணத்தை அதிகரிக்க பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன..
குவைத்தில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அரசு மருத்துவமனைகளில் சுகாதார காப்பீட்டு அமைப்பில் பதிவுசெய்யப்பட்ட வெளிநாட்டினருக்கான பிரசவக் கட்டணத்தை அதிகரிக்க சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சுகாதாரத்துறையால் இந்த கட்டண உயர்வுகள் மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், இந்த கட்டண உயர்வால் மகப்பேறு மருத்துவமனைகள் லேசான அழுத்தங்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும், குறிப்பாக ஒரு புதிய மகப்பேறு மருத்துவமனை தற்போது கட்டப்பட்டு வருவதால் கட்டணம் அதிகரிக்கக்கூடும் என்றும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆய்வு முடிந்து ஒப்புதல் அளிக்கப்பட்ட பிறகு கட்டணங்கள் 50 முதல் 75 சதவீதம் வரை அதிகரிக்கலாம். ஏற்றுக்கொள்வது, நிராகரிப்பது அல்லது ஒத்திவைப்பது பற்றிய இறுதி முடிவு அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் தெளிவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, சுகாதார காப்பீட்டு அமைப்பில் பதிவுசெய்யப்பட்ட குவைத் அல்லாத நோயாளிகளிடமிருந்து வசூலிக்கப்படும் கட்டணம், சாதாரண பிரசவத்திற்கு KD 100 தினார் மற்றும் அறுவைசிகிச்சை பிரசவத்திற்கு KD 150 தினார்.
சாதாரணமான பிரசவம் அல்லது சிசேரியன் பிரசவத்திற்கான கட்டணங்களில் அல்ட்ராசவுண்ட் பரிசோதனைகள், ஆய்வக சோதனைகள் மற்றும் மருந்துகள் ஆகியவை அடங்கும், ஆனால் இந்த தொகை மருத்துவமனையில் தங்குவதற்கு அல்ல. உதாரணமாக, ஒரு தனிப்பட்ட அறைக்கான கட்டணம் ஒரு நாளைக்கு 100 KD. "மருத்துவப் பணியாளர்கள் மற்றும் உபகரணங்களின் அடிப்படையில், சுகாதார சேவைகளில் அதிக செலவுகள் ஏற்படுகின்றன எனவும், அரசு மற்றும் தனியார் துறைகளுக்கு இடையே பிரசவம் பார்ப்பதற்கான கட்டணத்தில் பெரிய அளவில் இடைவெளி இருப்பதால் இந்தக் கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன" என்று ஆதாரங்கள் விளக்குகின்றன.
"அல்ட்ராசவுண்ட் பரிசோதனைகள், ஆய்வக சோதனைகள் மற்றும் மருந்துகளுக்கான கட்டணங்களில் இருந்து பிரசவ கட்டணங்களை தனித்தனியாக பிரிக்கவும், அத்துடன் ஒரு தனி அறையின் விலையை இரட்டிப்பாக்கவும் இந்த ஆய்வு கேட்டுக் கொண்டுள்ளது" என்று ஆதாரங்கள் மேலும் தெரிவித்தன.
சுகாதார அமைச்சின் மருத்துவமனைகளில் வருடந்தோறும் 20,000 பிரசவங்கள் குவைத்தில் உள்ள வெளிநாட்டவர்களிடம் இருந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் குவைத் பெண்களின் எண்ணிக்கை 8,000 ஐ தாண்டுவதில்லை, ஏனெனில் பெரும்பாலான குவைத்தியர்கள் தனியார் மருத்துவமனைகளில் பிரசவத்தை விரும்புகின்றனர்.
குவைத் தமிழ் சோசியல் மீடியா